Jump to content

வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை!

வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை!

வட கொரியா பியோங்யாங் பகுதியில் இருந்து நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

ஜப்பானின் என்.எச்.கே. தேசிய தொலைக்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்ட செய்தியில், வட கொரியாவிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்தாலும் ஜப்பான் கடலில் அது தரையிறங்கியதாகவும் கூறியுள்ளது.

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6:47 மணிக்கு வட கொரியாவில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக ஜப்பானிய கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இரண்டாவது அறிக்கையில், மற்றொரு வெளிப்படையான பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக கடலோர காவல்படை கூறியது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அலுவலகம், சமீபத்திய ஏவுகணை ஏவுதல் ஆய்வு செய்யப்பட்டு, மக்கள், விமானம் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பிற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாக ட்வீட் செய்துள்ளது.

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மாதம் வரை 30க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1302209

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மாதம் வரை 30க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போற போக்கை பார்த்தால் சிங்கன் தான் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டுவான் போல கிடக்கு....🤪

Quellen | nordkorea

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை காக்கும் நேட்டோ நோஞ்சான் நாடுகளில் விடும் விளையாட்டை வடகொரியாவில் விடுங்கள் பார்க்கலாம். ஆக்களை வைத்து அடித்தல் அல்லது கும்பலாய் போய் அடித்தல் ; இதில் எந்த வகையையோ அல்லது சாம்பாராகவோ நேட்டோ பயன்படுத்தலாம்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை!

 

எவ்வளவு காலம் தான் சோதனைகள் செய்வது?

ஒண்டு இரண்டை மற்றப் பக்கமாயும் விட்டுப் பாக்கிறது தானே.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, kalyani said:

உலகத்தை காக்கும் நேட்டோ நோஞ்சான் நாடுகளில் விடும் விளையாட்டை வடகொரியாவில் விடுங்கள் பார்க்கலாம். ஆக்களை வைத்து அடித்தல் அல்லது கும்பலாய் போய் அடித்தல் ; இதில் எந்த வகையையோ அல்லது சாம்பாராகவோ நேட்டோ பயன்படுத்தலாம்.😄

நேட்டோவின் அட்டூளியங்களை சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா மக்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

சும்மா பாதுகாப்பு படை என பீலா விட்டு ஐரோப்பிய மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

நேட்டோவின் அட்டூளியங்களை சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா மக்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

சும்மா பாதுகாப்பு படை என பீலா விட்டு ஐரோப்பிய மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

உண்மை தான்
டென்மார் நாட்டு வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் போல் கூ முட்டைக‌ளை இந்த உல‌கில் எங்கையும் பார்க்க‌ முடியாது தாத்தா

நான் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு இந்த‌ வெள்ளைய‌ளோட‌ இருந்து தான் வ‌ள‌ந்தேன் ,

நான் ப‌ல‌ டென்மார்க் வெள்ளைய‌ளிட‌ம் கேட்ட‌ ஒரு கேள்வி இது தான்

( ஜேர்ம‌ன் எங்க‌ளின் ந‌ட்பு நாடு ,

டென்மார்க்
பின்லாந்
சுவிட‌ன்
நோர்வே இவை நாங்கு நாடும் இஸ்க‌ன்ரினேவிய‌ன் )

என்ன‌  கோதாரிக்கு நேட்டோவில் சேர்ந்திங்க‌ள் என்றால் சில‌துக‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ முலுசுதுக‌ள்

சில‌ர் போன‌ நூற்றாண்டில் ஹிட்ல‌ர் செய்த‌ செய‌லுக்கு நேட்டோவில் சேர்ந்தோம் என்று சொல்லுதுக‌ள் 😂😄🤣 )

நான் சொன்னேன் இது ஹிட்ல‌ரின் உல‌க‌ம் இல்லை இது தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ உல‌கு  , நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி அவை எம‌க்கும் க‌ல் எறிய‌ போவ‌தில்லை என்று ,

நேட்டோ அமெரிக்க‌ன்ட‌ சுய‌ இன்ப‌த்துக்கு  உருவாக்க‌ப் ப‌ட்ட‌து தான் நேட்டோ , 

உல‌க‌ வ‌ரை ப‌ட‌த்தை எடுத்து கொண்டா டென்மார்க் மிக‌வும் சிறிய‌ நாடு , அதோடு அமைதியான‌ நாடு நேர்மையான‌ அர‌சாங்க‌ம் , டென்மார்க் நேட்டோவில் சேர்ந்த‌து முட்டாள் த‌ன‌ம்

  • Like 2
Link to comment
Share on other sites

ரஸ்யாவுக்கு பயந்து நேட்டோவில் சேர்ந்தார்கள் என்று வெளியில் சொன்னாலும் அமெரிக்காவுக்கு பயந்து தான் நேட்டோவில் சேர்ந்தார்கள். 
ஐரோப்பாவில் நேட்டோவில் உள்ள நாடுகள் தங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது என தெரிந்தும் தேழ் கொட்டிய திருடர்களாக உள்ளார்கள்.😂

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

ரஸ்யாவுக்கு பயந்து நேட்டோவில் சேர்ந்தார்கள் என்று வெளியில் சொன்னாலும் அமெரிக்காவுக்கு பயந்து தான் நேட்டோவில் சேர்ந்தார்கள். 
ஐரோப்பாவில் நேட்டோவில் உள்ள நாடுகள் தங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது என தெரிந்தும் தேழ் கொட்டிய திருடர்களாக உள்ளார்கள்.😂

நூறு வீதம் உண்மை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ரஸ்யாவுக்கு பயந்து நேட்டோவில் சேர்ந்தார்கள் என்று வெளியில் சொன்னாலும் அமெரிக்காவுக்கு பயந்து தான் நேட்டோவில் சேர்ந்தார்கள். 
ஐரோப்பாவில் நேட்டோவில் உள்ள நாடுகள் தங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது என தெரிந்தும் தேழ் கொட்டிய திருடர்களாக உள்ளார்கள்.😂

2 hours ago, தமிழ் சிறி said:

நூறு வீதம் உண்மை. 🤣

நீங்கள் இரண்டு பேரும் என்னதான் குத்தி முறிஞ்சாலும் நேட்டோ ரஷ்யாவிட்ட இருந்து சனத்த காப்பாற்ற மட்டும் தான் சண்டை பிடிக்கும்.....நாங்கள் சொன்னால் சொன்னதுதான் 🤣😂

 

19 hours ago, பையன்26 said:

டென்மார் நாட்டு வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் போல் கூ முட்டைக‌ளை இந்த உல‌கில் எங்கையும் பார்க்க‌ முடியாது தாத்தா

இந்த ஐரோப்பிய ஒன்றியமே கூழ் முட்டை தானே 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரவுடி தான் என்று இந்த வட கொரியன் குழந்தைச்சாமி, குளுசை கொடுத்துக்கொண்டு திரியிறார் போல தான் தெரியுது....😜

On 2/10/2022 at 02:47, ஈழப்பிரியன் said:

எவ்வளவு காலம் தான் சோதனைகள் செய்வது?

ஒண்டு இரண்டை மற்றப் பக்கமாயும் விட்டுப் பாக்கிறது தானே.

 

On 2/10/2022 at 00:00, குமாரசாமி said:

போற போக்கை பார்த்தால் சிங்கன் தான் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டுவான் போல கிடக்கு....🤪

Quellen | nordkorea

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியா 6-வது முறையாக ஏவுகணை சோதனை: நடுவழியில் ஏவுகணை விழுந்ததற்கு மன்னிப்பு கேட்ட தென் கொரியா

  • வெட்டீ டேன் & நாதன் வில்லியம்ஸ்
  • பிபிசி நியூஸ்
6 அக்டோபர் 2022, 03:16 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவுகணைகளை செலுத்தின.

பட மூலாதாரம்,SOUTH KOREAN MINISTRY OF DEFENCE VIA REUTERS

 

படக்குறிப்பு,

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவுகணைகளை செலுத்தின.

இரண்டு வாரங்களில் 6-வது முறையாக வியாழக்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொண்டது வட கொரியா. இந்த சோதனையின்போது 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன.

முன்னதாக, அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொண்ட ராணுவப் பயிற்சியின்போது ஏவப்பட்ட ஏவுகணை தோல்வியடைந்து நடு வழியில் கீழே விழுந்ததற்கு தென் கொரிய ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்த அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடியாகவே சமீபத்தில் தாங்கள் ஏவுகணை சோதனைகள் நடத்துவதாக புதன் கிழமை அறிவித்திருந்தது வட கொரியா.

தென் கொரியா மன்னிப்பு கேட்டது ஏன்?

தாங்கள் ஏவிய ஏவுகணை தென் கொரியாவின் கடலோர நகரான காங்க் நியூங் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதற்கு தென் கொரியா தனது மன்னிப்பை வெளியிட்டது.

 

வெடிசத்தம் போல கேட்டதாகவும், இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்ததாகவும் அந்த நகரின் மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், ராணுவமோ, எந்தவித உயிரிழப்பும் இல்லை என்று கூறியுள்ளது. சம்பவம் நடந்து ஏழு மணி நேரம் வரை அது குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியா கடந்த செவ்வாய்கிழமையன்று ஜப்பான் வான்வெளிக்கு மேலே ஏவுகணை ஒன்றை செலுத்தியதற்கு பதிலடியாக தென்கொரியா இந்த ஏவுகணையை ஏவியது.

2017ம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக வடகொரியா ஜப்பான் வான்வெளிக்கு மேலே ஏகவுகணை செலுத்தி உள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தன்னுடைய வலுவை வெளிப்படுத்த வட கொரியா ஏவுகணையை ஏவியது.

கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஜப்பான் கடற்பரப்பு என்று அழைக்கப்படக்கூடிய கிழக்கு கடற்பகுதியில் தென் கொரியாவும் அமெரிக்காவும் பல ஏவுகணைகளை செலுத்தியுள்ளன.

அமெரிக்காவுடன் இணைந்து ஏவுகணைகளை ஏவியது மட்டுமின்றி சில மணி நேரம் கழித்து, தனியாகவும் ஏவுகணைகளை தென்கொரிய ராணுவம் செலுத்தியது. அதில் ஒன்றுதான் ஏவிய தருணத்தில் சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கிவிட்டதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.

ஹுயுன்மூ-2 என்ற இந்த ஏவுகணை வெடிக்கவில்லை என்று தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து கவலைகள் எழுந்ததற்கு மன்னிப்புக் கோரியுள்ளது.

இது குறித்து பேசிய காங்க்நியூங் நகர மக்கள், பிரகாசமான ஒளியை பார்த்ததாகவும், புதன்கிழமையன்று ஒரு மணி அளவில், பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாகவும் கூறினர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பொதுமக்களில் பலர் வீடுகளில் இருட்டிலேயே முடங்கியிருந்தனர். அவர்களில் பலர் என்ன நடந்தது என்ற கவலையுடன் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். பிரகாசமான வெளிச்சத்துடன் தீ எரியும் காட்சியும், தூரத்தில் இருந்து புகை வரும் காட்சியும் புகைப்படங்களிலும், வீடியோ காட்சிகளிலும் காணப்பட்டன.

"இந்த வெடிச்சத்தத்தால் பீதி அடைந்தேன். என்னால் தூங்கமுடியவில்லை," என ஒரு பதிவர் கூறியதாக காங்க் வோன் ஐலிபோ செய்தி தளம் தெரிவித்துள்ளது. விமானம் ஏதும் விழுந்து விட்டதா என ஒருவர் கவலை தெரிவித்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

செவ்வாயன்று வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை, ஒரு வாரத்துக்குள்ளாக நடத்திய ஐந்தாவது சோதனை ஆகும். பெரும்பாலான வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள், வான்வெளியில் விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிக உயரத்தில் நடத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் விமானங்கள் மீது மோதுவதை தவிர்க்கவே இவ்வாறு அதிக உயரத்தில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

"ஆனால் ஜப்பான் வான்பரப்பில் ஏவுகணை சோதனையை நடத்துவது, நிஜத்தில் நிகழக்கூடிய ஆபத்துக்களுக்கான எதிர்வினைக்கு வட கொரியா தன்னை தயார்படுத்தி கொள்ள உதவும்" என ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் ஆய்வாளர் அகிட் பாண்டே தெரிவித்தார்.

செப்டம்பர் மாதத்தில் வட கொரியா தன்னை ஒரு அணு ஆயுத நாடாக சுயமாகவே அறிவித்துக் கொள்ளும் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அணு ஆயுத விலக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை சாத்தியத்தை வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன் நிராகரித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-63146838

Link to comment
Share on other sites

புட்டின் அணு ஆயுதம் பாவித்தால் நடக்கிறதே வேறை என்பவர்கள் கிம் ஜோங் வீட்டு  வாசல் வரைக்கும் வாணவேடிக்கை காட்டுகிறார். அதற்கு ஒரு பதிலும் இல்லை. 

விழுந்ததே தெரியாத அளவுக்கு ஒரு தொழில்நுட்பம் உள்ளதை இன்று தான் அறிய முடிந்தது.🙃

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.