Jump to content

தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி

By VISHNU

25 SEP, 2022 | 11:25 AM
image

நேர்காணல்: ஆர்.ராம்

 “நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும் என்று அன்ரன் பாலசிங்கம் 2002இல் என்னை சந்தித்தபோது கூறினார்” 

 “ரஜீவ்-மேனன் பாடசாலையின் இராஜதந்திர அணுகுமுறை பின்னடைவுகளைச் சந்தித்துவிட்ட நிலையில் தொப்புள்கொடி உறவு என்ற விடயத்தினை இந்தியா தனது வெளிவிவகார மூலோபாயத்தினுள் உள்ளீர்க்க வேண்டும்” 

 

“தமிழ் பேசும் மக்கள் என்ற மாலையில் மூன்று மணிகளான தமிழர்கள், முஸ்லிம்கள், மலைய மக்கள் ஆகியவற்றை கோர்ப்பதற்காக எஞ்சிய காலத்தில் செயற்படவுள்ளேன்”

 

பௌத்த தேரர்களே பிரபாகரனை உருவாக்கினார்கள் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளும் அதேவேளை, தேரர்கள் அடாவடியாக ஆக்கிரமிப்புக்களைச் செய்வதானது, மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடாகவே உள்ளது என்பதை அரசாங்கமும், சிங்கள மக்களும் உணரவேண்டுமென கவிஞர், நடிகர், சமூக செயற்பாட்டார் என்று பன்முக ஆளுமையாளரான வ.ஐ.ச.ஜெயபாலன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

 

கேள்வி: சிறிய இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருக்கும் உங்களின் அவதானிப்பு என்னவாக உள்ளது?

பதில்: தமிழர்கள், முஸ்லிம்கள், மலைய மக்கள் எத்தனை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தாலும், இலங்கைத் தீவு என்கின்ற கப்பலில் தான் அனைவரும் இருக்கின்றார்கள். தற்போது பொருளாதார நெருக்கடி என்ற பாறையில் இந்தக் கப்பல் மோதிநிற்கிறது. 

இவ்வாறான தருணத்தில், ஒவ்வொரு இனக்குழுமங்களும் தமது போராட்டங்களை, கோரிக்கைகளை சரணாகதியாடையச் செய்யாது மோதிநிற்கும் கப்பலை காப்பாற்ற வேண்டிய பெரும்பணியொன்று உள்ளது. 

இந்தச் சூழலில் தத்தமது அபிலாஷைகளுக்காக போரடிக்கொண்டிருக்கும் தமிழ் பேசும் தரப்பினர் தமது போராட்டத்தினையும், மோதிநிற்கும் கப்பலை(இலங்கையை) காப்பாற்றுவது எவ்வாறு என்றே சிந்திக்க வேண்டியுள்ளது.

கேள்வி: தமிழ் பேசும் மூன்று இனக்குழுமங்களின் அபிலாஷைகளை தற்போது வரையில் பெரும்பான்மை ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடந்தகால கசப்பான விடயங்களை மறந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக கைகோர்ப்பது சாத்தியமாகுமா?

பதில்: தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் தங்கள் கோரிக்கைகளை, போராட்டங்களை கைவிட்டு சரணாகதியடைய வேண்டியதில்லை. ஆனால், இலங்கை என்ற ஒரே தீவில் தான் அனைத்து இனக்குழுமங்களும் வாழ்கின்றன. ஆகவே, பெரும்பான்மையினருக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது பெரும் போராட்டமாக மாறியுள்ள நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தினை சதகமாக பரிசீலிக்க வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி: பொருளாதார நெருக்கடிகள் தீவிரமாகிக்கொண்டிருக்கின்ற ஏககாலத்தில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையின் மனோநிலையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத நிலையில் எவ்வாறு தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பொருளாதார மீட்சிப் போராட்டத்தில் பங்கேற்க முடியும்?

பதில்: பெரும்பான்மை சிங்கள மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதாக இருந்தால் இலங்கை என்பது நான்கு இனங்கள் வாழும் கப்பல் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சிங்கள, பௌத்த சாயமிடுவதை தவிர்க்க வேண்டும். 

காலிமுகத்திடல் போராட்டங்களின்போது, வடக்கு,கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நிலங்களை திட்டமிட்டு ஆக்கிரமித்து அடாவடி செய்யும் பௌத்த தேரர்களை, படைகளை அச்செயற்பாட்டை நிறுத்துமாறு எந்தவொரு குரலும் வெளிப்பட்டிருக்கவில்லை. 

அதில் பங்கேற்ற முற்போக்குவாதிகள் மட்டுமே தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசினார்கள். ஏனையவர்கள் ‘நவீன தராளவாத சிங்கள பேரினவாதம்’ என்ற சித்தாந்திற்குட்பட்டே கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். 

அதாவது, ஜே.வி.பியும் தவறிழைத்தது. தமிழர்களின் போராட்ட இயக்கங்களும் தவறிழைத்தன. அதனால் அழிந்து போயின என்பதே அவர்களின் சிந்தனை வெளிப்பாடாக உள்ளது. இதுமிகவும் ஆபத்தான பேரினவாத சிந்தனையாகும். 

இதனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இலங்கையின் வரலாற்றில்; பண்டாரநாயக்க உள்ளிட்ட தலைவர்கள், தமிழ் பேசும் மக்களின் கண்ணீரிலும், செந்நீரிலும் தான் சிங்கள, பௌத்த பேரிவானத்தை அடியொற்றி அநீதியான ‘சமூக நீதியை’ கட்டியெழுப்பினார்கள். 

அவ்வாறான நிலையில், இனங்களுக்கு இடையில் நீதியான சமூக நீதி காணப்படாது சுபீட்சத்தினை நோக்கி எந்த முயற்சிகளை எடுத்தாலும் அது நிச்சயமாக வீழ்ச்சியடையுமே தவிர வெற்றியளிக்காது. இதனையே தற்போதைய பொருளாதார நெருக்கடியும் உணர்த்தியுள்ளது. 

அதுமட்டுமன்றி, இந்தப்பொருளாதார நெருக்கடியானது குறுங்காலத்தில் ஏற்பட்;டதொன்றல்ல. அவ்வாறு கருதுவதே ஒருவிதமான மனோவியாதிதான். இந்தப்பொருளாதார நெருக்கடி அநீதியான சமூக நீதிக் கட்டமைப்பினால் உருவானது. 

அதற்கு சேனநாயக்க முதல் கோட்டாபய வரையில் அனைவரும் காரணமாக இருக்கின்றனர். அதனை பெரும்பான்மை மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற ‘அரசியல், பொருளாதார முறைமையை’ கட்டியெழுப்பலாம்.    

கேள்வி: பௌத்த மதம் முன்னிலைப்படுத்தப்பட்டுக்கொண்டும், அதனை மையப்படுத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடருக்கின்ற நிலையிலும் ‘முறைமை மாற்றம்;’ சாத்தியமாகுமா?

பதில்: அசோக மன்னன் பௌத்தத்தை தழுவுவதற்கு முன்னதாக, சங்கமித்தை இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாகவே தமிழர்கள் பௌத்தத்தினை பின்பற்றிய வரலாறுகள் உள்ளன. சோழர்கள் பௌத்தர்களை விரட்டியபோது நெடுத்தீவில் முக்குவர்களின் படகுகளில் பௌத்தர்கள் தப்பிச் சென்ற வாய்வழி வரலாற்று பதிவுகள் உள்ளன. அவை ஆய்வுக்கும் உட்பட்டவை. 

அநுராதபுரத்தில் தமிழப் பள்ளி என்றும் திருமலையில் இராஜ ராஜ பெரும்பள்ளி என்றும் உள்ளன. அவை இரண்டும் தமிழ் பௌத்த விகாரைகள் என்பது நன்கு அறியப்பட்டதாகிறது. அதனை சிங்கள மக்களும் அறிந்திருப்பார்கள். ஆகவே தமிழ் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பது சிங்கள மக்களுக்கு தெரியாததொன்று அல்ல. 

அவ்வாறான நிலையில் வடக்கு,கிழக்கில் பௌத்த எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றபோது அவை தமிழ் பௌத்தர்களுக்கு உரியவை என்ற மனோநிலைமை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். துரதிஷ்டவசமாக அவர்கள் மனத்தில் பௌத்த எச்சங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புச் செய்யும் மனேநிலையே நீடிக்கின்றது. 

அதேநேரம், பௌத்த தேரர்களே பிரபாகரனை உருவாக்கினார்கள் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த தேரர்கள் அடாவடியாக ஆக்கிரமிப்புக்களைச் செய்வதானது, மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடாகவே உள்ளது என்பதை அரசாங்கமும், சிங்கள மக்களும் உணரவேண்டிய தருணமிதுவாகும். 

பௌத்த தேரர்கள் தமிழர்களின் மண்ணில் விசவித்துக்களை தூவுகின்றனர். ‘அரகலயவினருக்கு’ உண்மையான அறம் இருக்குமென்றால் இவ்வாறான பௌத்த தேரர்களை எதிர்க்க வேண்டும்.

கேள்வி: தமிழ், முஸ்லிம், மலைய தேசிய இனங்களின் அரசியல் பிரதிநிதிகளுடைய அணுகுமுறையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: வடக்கிலே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் அங்கு மலையக மக்களும் முஸ்லிம் மக்களும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ளார்கள். அவ்வாறான நிலையில் அந்த மக்களின் அபிலாஷைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ் மக்களிடத்தில் இன்னமும் தயக்கம் உள்ளது. 

அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் இன குழுமங்கள் மத்தியில் தயக்கங்கள் காணப்படுகிறன. இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். வட, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய தீர்வை கோருவதாக இருந்தால் முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு உரிய நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும். 

அதேபோன்று தேசிய நீரோட்டத்தில் மலையக மக்களுக்கான உரித்துக்களும் வழங்கப்பட வேண்டும். சாதாரண நாட்கூலி தொழிலாளிகள் 3000 முதல் 4000 ரூபா பெறுகின்றபொழுது ஆயிரம் ரூபாவைப் பெறமுயாது.

அடிமைத்தனத்துக்குள் பல தொழிலாளர்கள் இன்னும் சிக்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே மூவினங்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து முறையான திட்டமிடலுடன் அணுகுமுறைகளைச் செய்ய வேண்டும்.

கேள்வி: வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம்களிடையே பரஸ்பரம் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களும் வடுக்களாக இருக்கையில் கூட்டுச் செயற்பாடு சாத்தியமாகுமா? 

பதில்: வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது பிரபாகரன் எடுத்த தீர்மானமும், செயற்பாடும் தவறானது என்பதை நான் பாலகுமாரன் ஊடாகச் சுட்டிக்காட்டினேன். அதன்பின்னர் அந்தத் தவறை திருத்திக்கொள்ளும்படி அழுத்தங்களை வழங்க முடிந்தது.  அப்போது, முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் கவலையவைதாக பிரபாரகன் தெரிவித்தார் என்று எனக்கு பதில் வழங்கப்பட்டது. 

அச்சமயத்தில், கவலையடைவதை விடவும் அத்தவறை திருத்துவதற்கு முயற்சியுங்கள் என்று பதில் தகவல்களை அனுப்பினேன். அதேநேரம் 1985 ஆம் ஆண்டு வன்முறைச் சம்பவங்களின் போது மருதமுனையை அண்மித்த பகுதிகளைத் தவிர ஏனைய தமிழ்க் கிராமங்கள் சாம்பல் மேடுகளாக காட்சியளித்ததாக கூறப்பட்டது. அச்சமயத்தில் எனது தோழன் மறைந்த அஷ்ரப் தான் ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று பகிரங்கமாக கூறி அரசியலிலும் ஒதுங்கியிருந்தார். அவரது அந்தச் செயற்பாட்டை இன்றும் நான் மதிக்கின்றேன். 

கேள்வி: வடக்கு, கிழக்கு இணைவு சாத்தியமாகுமா?

பதில்: கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களை வடக்குடன் இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்துவதற்கு தமிழர்களுக்கு எந்த உரித்தும் கிடையாது. அதேபோன்று கிழக்கு மாகாண தமிழர்கள் வடக்குடன் இணையப் போகிறார்கள் என்றால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான எவ்விதமான அடிப்படை உரிமையும் கிழக்கு முஸ்லிம்களுக்கு கிடையாது. 

அதேநேரம், முஸ்லிம்கள் வடக்குடன் இணையாது பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்லதா என்பதை கிழக்கு மாகாண தமிழர்கள் சிந்திக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம்களும், தமிழர்களுடன் இணையாது சிங்களவர்களுடன் பேரம்பேசுவது சாதகமான நிலைமைகளை ஏற்படுத்துமா என்று சிந்திக்க வேண்டும். இதனடிப்படையில் இரு சமூகங்களினதும் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து மட்டத்தினரும் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளார்கள். 

அவ்விதமான நிலைமைகள் ஏற்படுமாகவிருந்தால் இரண்டு தீர்வுகளே உள்ளன. அதில் முதலாவது, முஸ்லிம்கள் நிலத்தொடர்பற்ற தனியலகொன்றை உருவாக்கி சிங்கள மக்களுடன் பேச்சுக்களை நடத்தி தமது பிரச்சினைகளே தீர்த்துக்கொள்ள முடியும். இரண்டாவது, தமிழ் மக்களும் நிலத்தொடர்பற்ற தனியலகொன்றை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரத்தை பெறுவதற்காக வடக்குடன் இணைந்து நகர்வதாக இருக்கும். இதில் எது சிறந்தது என்பதை அங்கு வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் களநிலைமைகளை உணர்ந்து தீர்மானிப்பதே சிறந்தது.  

கேள்வி: தமிழ் முஸ்லிம் உறவுகளை சீரமைப்பதில் உங்களது வகிபாகம் எவ்வாறு இருக்கப்போகின்றது?

பதில்: தமிழ் முஸ்லிம் மக்கள் இடையே மட்டுமல்ல அதனுள் மலையக மக்களையும் உள்ளீர்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்கள் என்பது ஒரு மாலையாகும். அந்த மாலையில் இருக்கும் மூன்று மணிகளே தமிழர்கள் முஸ்லிம்கள் மற்றும் மலையக மக்கள். 

இந்த மூன்று தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்படாத வரையில் இலக்குகளை அடைந்து கொள்வது மிகவும் கடினமான ஒரு பயணமாகவே இருக்கும். இது கடந்த கால வரலாற்றிருந்து கற்றுக்கொண்டிருக்கும் பாடமாகிறது. ஆகவே எனக்கென்று எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில் இந்த மூன்று மணிகளையும் ஒரு மாலையில் கோற்பதற்க அனைத்து பணிகளையும் எஞ்சிய காலத்தில் முன்னெடுப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

கேள்வி: இந்தியா மீது தமிழர்கள் அதீதமான நம்பிக்கையைக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை விடயத்தில் அதன் இராஜதந்திரம் தோல்வி கண்டுவிட்டதா?

பதில்:  இந்தியாவினுடைய இராஜதந்திரத்தில் ‘ரஜீவ்-மேனன் பாடசாலை’ பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. இந்தக் கசப்பான உண்மையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்விதமான நிலையில் இந்தியா முக்கியமானதொரு விடயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். 

மேற்கு வங்கத்திலிருந்து பங்களாதேசத்தின் தொப்புள் கொடியும் கூர்கலாந்திலிருந்து நேபாளத்தின் தொப்புள் கொடியும் தமிழகத்தில் இருந்து ஈழத் தமிழர, முஸ்லிம்கள், மலைய மக்களின் தொப்புள் கொடியும் உருவாகிறது என்பதை முதலில் மிக ஆழமாக உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன், இந்தியாவுக்கு தெற்காசிய பிராந்தியங்களுடன் காணப்படுவது தொப்புள்கொடி உறவு என்ற விடயம் இந்திய இராஜதந்திர மூலோபாயத்தில் ஒரு அங்கமாக மாறவேண்டும். இராஜதந்திர தரப்புக்கள் வெறுமனே சதுரங்க விளையாட்டாக தமது மூலோபாயத்தை தொடரக்கூடாது.

ரஜீவ் காந்தி முறைசாந்த இலங்கை அரசாங்கத் தரப்பினையும், முறைசாரா தமிழின விடுதலை ஆயுதப்போராட்டத் தரப்பினரையும் மேலதிக்க சிந்தனையுடன் கையாள முற்பட்டமை தவறாகும். 

இந்தியா மத்திய அரசாங்கமானது, ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் விடயத்தினை அவர்களின் தொப்புள் கொடியாக இருக்கும் தமிழக அரசாங்கத்துடன் இணைந்து கையாண்டிருந்தால் எவ்விதமான தவறுகளும் இடம்பெற்றிருக்காது. 

தற்போது தமிழர்கள் மேற்குலகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே நிலைமைகளை உணர்ந்து இந்திய மத்திய அரசு வெளிவிவகாரக் கொள்கை மாற்றத்தினைச் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவை தமிழர்கள் நண்பனாக கருதினாலும், பொய்களில் இருந்து இந்திய, தமிழர்கள் நட்புறவு கட்டியெழுப்பபட முடியாது. 

ஆகவே கடந்தகால தவறுகளை கடந்து புதிய உறவுகளை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை இலகுவாகச் செம்மைப்படுத்த முடியும். அதற்கு இந்தியா, முதலில் இந்திய அமைதிப்படைக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு பகிரங்கமான மன்னிப்புக்கோர வேண்டும். அதிலிருந்து மாற்றத்தை ஆரம்பிக்கலாம். 

கேள்வி: தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான, ‘இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான மீளப்பெற முடியாத அதிகாரப்பகிர்வை இந்தியா உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளும் என்று கருதுகின்றீர்களா?

பதில்: தமிழர்களின் கோட்பாட்டு ரீதியான கோரிக்கைகள் அரசியல் ரீதியாக மிகச்சரியானதே. இத்தகைய கோரிக்கைகளையே கொகோவாவிலும், தென்சூடானிலும், எரித்திரியாவிலும், கிழக்குத் திமோரிலும் முன்வைத்தார்கள். ஆனால் அக்கோட்பாடுகளை அடைவதற்கான பேச்சுவார்த்தைகளின்போது தமது இலக்குகளை அடைவதற்கான கோரிக்கைகள் செயற்படாது விட்டால் அதற்கான மாற்று வழிகள், அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான நிபந்தனைகள் ஆகியவற்றுடன் மேற்குலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதன் காரணமாகவே, பிற்காலத்தில் மேற்படி நாடுகள் தனிநாடுகளாக உருவாகியிருந்தன. 

ஆனால், தமிழர்களான நாங்கள் இரண்டாவது தெரிவொன்றைக் கொண்டிருக்கவில்லை. 2002ஆம் ஆண்டு அண்ணன் அன்ரன் பாலசிங்கத்தினைச் சந்தித்தபோது அவர் முக்கிய விடயமொன்றைக் கூறினார். “நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும். தற்போது, மேற்குலகத்திற்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தமளிக்க கூடிய வல்லமையும் உள்ளது. அதேநேரம், ரணிலுடன் இணக்கப்பாட்டிற்குச் செல்லக்கூடிய உறவுகளும் உள்ளது” என்று குறிப்பிட்டார். 

அவர், இந்த விடயத்தினை இரண்டாம், மூன்றாம் தரப்புக் கருத்தாக வன்னிக்கு(பிரபாகரனுக்கு) தெரிவிப்பேன் என்று நம்பியதால் அவர் என்னிடத்தில் அந்த விடயத்தினைப் பகிர்ந்திருக்கலாம். அதுமட்டுமன்றி, பாலா அண்ணாவும், ரணிலும் ஒஸ்லோவில் சந்தித்தபோது அச்சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரும் பங்கேற்றிருந்தார். 

அச்சமயத்தில், இடைக்கால தீர்வு ஒன்றைநோக்கி செல்வதற்காக இலங்கை அரசாங்கத்தரப்புடன் பாலா அண்ணாவும், கருணாவும் கையொப்பமிட்டு இணக்கப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டதாக தகவல்கள் உள்ளன.

கேள்வி: அன்ரன் பாலசிங்கம் உங்களுக்கு கூறிய விடயங்களை நீங்கள் வன்னிக்கு அனுப்பினீர்களா? குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து உங்களுக்கு பிரதிபலிப்புச் செய்யப்பட்டதா?

பதில்: நான் தனி நபர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அமைப்பு ரீதியான உறவுகள் இருந்தன. எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நிலைமைகள் காணப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் பாலா அண்ணாவின் கருத்துக்களை அனுப்பியிருந்தேன். 

அதுபற்றிய எனது நிலைப்பாட்டையும் அவர்களுக்கு தெரிவித்திருந்தேன். ஆயுத விடுதலை அமைப்புக்களுடன் பொதுவாக இருவழித்தொடர்புகள் பேணப்படுவதில்லை. அந்த வகையில் புலிகளுடன் நான் இருவழித்தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் எனது கருத்துக்களை அனுப்பி வைக்கப்படும்போது அதுபற்றி சில மட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு, கிழக்கில் உள்ள மலைய மக்கள், முஸ்லிம்களின் விடயங்களை உதாரணமாக கூறலாம். 

கேள்வி: இறுதியாக, தற்போதைய பூகோள, பிராந்திய சூழலில் தமிழ்பேசும் மக்களுக்கு இலங்கையில் விடிவுகாலம் ஏற்படுமென நம்பிக்கை வைக்க முடியுமா?

பதில்: தற்போதைய நிலையில், இலங்கையின் வடக்கு,கிழக்கு மலையகத்தை இந்தியா தனது பகுதியாகவும், மேற்கு உள்ளிட்ட கரையோரப் பகுதியை அமெரிக்கா தன்னுடைய பகுதியாகவும் கண்டி உள்ளிட்ட சில பகுதிகளை சீனா தனது பகுதியாகவும் கருதும் நிலைமைகள் தோன்றியுள்ளன. 

தமிழ் பேசும் சமூகத்தினரை புறமொதுக்கி நாட்டை விற்று சுபீட்சமாக இருக்க முடியும் என்ற சிங்கள மக்களினதும், அவர்களது தலைவர்களினதும் சித்தாந்தம் தோற்றுப்போய்விட்டது. அத்துடன் விற்பனை செய்வதற்கும் இலங்கையின் இனி எதுவும் கிடையாது. ஆகவே தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாத நிலைமை தோன்றியுள்ளது. ஆகவே, சிங்கள மக்கள் தமிழ் பேசும் மக்களை புறமொதுக்காது, அரவணைக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. அத்தருணத்தினை சிங்கள மக்கள் தவிர்ப்பார்களாக இருந்தால் இலங்கையில் பூகோளப்போட்டி வலுவடையும். மேற்படி நாடுகள் தமது படைகளை அந்தந்தப் பகுதிகளில் நிலைநிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nochchi said:

பௌத்த தேரர்களே பிரபாகரனை உருவாக்கினார்கள் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளும் அதேவேளை, தேரர்கள் அடாவடியாக ஆக்கிரமிப்புக்களைச் செய்வதானது, மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடாகவே உள்ளது என்பதை அரசாங்கமும், சிங்கள மக்களும் உணரவேண்டுமென கவிஞர், நடிகர், சமூக செயற்பாட்டார் என்று பன்முக ஆளுமையாளரான வ.ஐ.ச.ஜெயபாலன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.

இன்னொரு பிரபாகரன் என்றவுடன்  மீண்டுமொரு ஆயுத போராட்டம் என நினைக்காமல்......

தலைவர் பிரபாகரனை போல் ஸ்திரமான, கொள்கையில் உறுதியான, தமிழர்  தேசிய நிலைப்பாட்டினை உடையவராக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இன்னொரு பிரபாகரன் என்றவுடன்  மீண்டுமொரு ஆயுத போராட்டம் என நினைக்காமல்......

தலைவர் பிரபாகரனை போல் ஸ்திரமான, கொள்கையில் உறுதியான, தமிழர்  தேசிய நிலைப்பாட்டினை உடையவராக இருக்க வேண்டும்.

                                                    உண்மை,  தேசியத்தலைவரென்றவுடன் அவரது ஆயுதபோராட்டத்தை முதன்மைப்படுத்துவதிலிருந்தே ஊடகங்களாயினும், தமிழ் மக்களாயினும் எடுத்தாளுகிறார்கள்.  அவர் உண்ணாவிரதம் இருந்ததையோ, அசோகா விடுதியில் வைத்து அச்சுறுத்தப்பட்போதான அவரது எதிர்வினையையோ, பற்றுறுதியையோ எவரும் எடுத்தாள்வதில்லை. அவரது தொலைநோக்குச் சிந்தனைகளைக்கூட மேடைப்பேச்சுகளில் பெரியளவில் பேசுவதில்லை. யுத்துவெற்றிகளுக்கூடான அரசியல் நகர்வுகளை உரையாடல் வெளிக்குக் கொண்டுவருவதன் ஊடாகவே கருத்தியல் தளத்திலே தலைவரின் படைய மற்றும் அரசியல் பரிணாமங்களையும் அச்சமற்ற அவரது கொள்கை தவறாத பயணத்தையும் அடுத்த தலைமுறையைச் சென்றடைய வைக்க வேண்டும்.
நன்றி 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

                                                    உண்மை,  தேசியத்தலைவரென்றவுடன் அவரது ஆயுதபோராட்டத்தை முதன்மைப்படுத்துவதிலிருந்தே ஊடகங்களாயினும், தமிழ் மக்களாயினும் எடுத்தாளுகிறார்கள்.  அவர் உண்ணாவிரதம் இருந்ததையோ, அசோகா விடுதியில் வைத்து அச்சுறுத்தப்பட்போதான அவரது எதிர்வினையையோ, பற்றுறுதியையோ எவரும் எடுத்தாள்வதில்லை. அவரது தொலைநோக்குச் சிந்தனைகளைக்கூட மேடைப்பேச்சுகளில் பெரியளவில் பேசுவதில்லை. யுத்துவெற்றிகளுக்கூடான அரசியல் நகர்வுகளை உரையாடல் வெளிக்குக் கொண்டுவருவதன் ஊடாகவே கருத்தியல் தளத்திலே தலைவரின் படைய மற்றும் அரசியல் பரிணாமங்களையும் அச்சமற்ற அவரது கொள்கை தவறாத பயணத்தையும் அடுத்த தலைமுறையைச் சென்றடைய வைக்க வேண்டும்.
நன்றி 

இப்படியான கருத்துக்களும் அறிவுரைகளுமே இன்றைய சமுதாயத்திற்கு தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செவ்வியில் பாலா அண்ணாவும் முரளிதரனும் இணைந்து இடைக்கால தீர்வுக்காக கையொப்பம் இட்டார்கள் என்பது ஆதாரம் அற்ற உண்மைக்கு மாறான தகவல்☹️

மற்றும் படி நல்ல விடயங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.