Jump to content

இந்தியாவில் ஓராண்டில் 14 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொலை – அதிர்ச்சியளிக்கும் குளோபல் விட்னஸ் அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஓராண்டில் 14 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொலை – அதிர்ச்சியளிக்கும் குளோபல் விட்னஸ் அறிக்கை

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒவ்வொரு வாரமும் உலகளவில் மூன்று பேராவது தங்களுடைய நிலத்தை, சுற்றுச்சூழலை, வெளிப்புற சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப் போராடியதற்காகக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று நான் சொல்லலாம்.

இது பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது, கடந்த ஓராண்டில் மட்டுமே 200 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் நான் சொல்லலாம்.

ஆனால், இந்த எண்கள் எல்லாம், உயிரிழந்தவர்களின் பெயர்களை நீங்கள் கேட்கும் வரை உண்மையாகாது. இப்படி கொலை செய்யப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தால், சமூகத்தால் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களுடைய சொந்த நிலத்திற்காக மட்டுமின்றி, பூமியின் ஆரோக்கியத்திற்காகப் போராடியவர்கள்."

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று வெளியான 2021ஆம் ஆண்டுக்கான குளோபல் விட்னஸ் எனும் பன்னாட்டு அரசு சாரா அமைப்பின் அறிக்கையின் முன்னுரையில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் வந்தனா சிவா இப்படி குறிப்பிட்டுள்ளார்.

 
 

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகளவில், 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவதைப் பதிவு செய்து, குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அதன்வரிசையில், 2021ஆம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் குறித்த அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கைப்படி, உலகளவில் கடந்த ஓராண்டில் 200 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஓராண்டில் 14 சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் 1,733 சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 79 பேர் நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குச் செயல்பட்டதற்காக பலியாகியுள்ளனர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

"அரசால் அரங்கேற்றப்பட்ட கொலை"

2021ஆம் ஆண்டு மே 17 அன்று சட்டீஸ்கரில் பழங்குடிகள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொவாசி வாகா, உர்சா பீமா, உய்கா பண்டு ஆகிய பழங்குடியின செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டனர். கர்நாடாகவில் ஜூலை 15ஆம் தேதி விஜயநகர மாவட்டத்தில் டி ஸ்ரீதர் என்ற ஆர்டிஐ ஆர்வலரும் ஜூலை 18ஆம் தேதி, வெங்கடேஷ் என்ற ஆர்டிஐ ஆர்வலரும் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காகக் குரல் எழுப்பிய பழங்குடியின செயற்பாட்டாளரான பாதிரியார் ஸ்டேன் சுவாமி, 2020 அக்டோபர் மாதம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் 8 மாதங்கள் வைக்கப்பட்டார். ஸ்டேன் சுவாமி 83 வயதில் கைது செய்யப்பட்டபோது பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சிறைவாசத்தால் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

 

ஸ்டான் சுவாமி

பட மூலாதாரம்,RAVI PRAKASH

 

படக்குறிப்பு,

பாதிரியார் ஸ்டான் சுவாமி முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காகச் செயல்பட்டார்

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டி தேசிய புலனாய்வு அமைப்பு அவரை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது. எட்டு மாதங்களுக்கு அவர் மும்பை சிறையில் இருந்தார். அவருடைய உடல்நிலை காரணமாக அவருக்குத் தேவையாக இருந்த அடிப்படை வசதிகளை மறுத்ததற்காக சிறை அதிகாரிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

அவருடைய கடைசி ஜாமீன் மனு விசாரணையின்போது நீதிபதிகளிடம், "இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும், விரைவில் இறந்தும்கூடப் போகலாம்," என்று ஸ்டேன் சுவாமி தெரிவித்திருந்தார்.

ஒன்பது மாதம் சிறைவாசத்தில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து 2021, ஜூலை மாதம் உயிரிழந்தார். அவருடைய மரணம் அரசால் அரங்கேற்றப்பட்ட கொலை என்கிறார் மனித உரிமை ஆர்வலரும் பழங்குடியின செயற்பாட்டாளருமான சேவியர் டையாஸ்.

"ஸ்டேன் சுவாமி, நவீன காலனியாக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிவாசி நிலங்களைக் கொள்ளையடிப்பது, காடழிப்பு ஆகியவற்றில் ஜார்கண்ட் மக்களின் எதிர்ப்புக்கான அடையாளமாகத் திகழ்ந்தார். அதனாலேயே இந்த நிறுவனமயப்பட்ட அமைப்பு அவரைக் கொலை செய்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு 83 வயது, மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். மோசமான உடல்நிலையோடு இருந்த அவரை சிறையில் அடைத்தது, அவருடைய நிலைமையை மேலும் மோசமாக்கியது. அதோடு, அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியான பிறகும் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது தான் அவரைக் கொன்ற தோட்டா," என்கிறார் சேவியர் டையாஸ்.

 

ஸ்டான் சுவாமி

பட மூலாதாரம்,PTI

 

படக்குறிப்பு,

ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்ட நடந்த போராட்டம்

குளோபல் விட்னஸ் அமைப்பு, கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 4 பேர் என்ற விகிதத்தில் 200 நிலம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் உலகளவில் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.

மேலும், "வன்முறை, மிரட்டல், அவதூறு பிரசாரங்கள், செயல்பாடுகளைக் குற்றமாகச் சித்தரித்தல் ஆகியவற்றின் மூலம், அரசு, வணிக நிறுவனங்கள் மற்றும் பிற அரசு சாரா நிறுவனங்களால் குறிவைக்கப்படும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான பரந்த அளவிலான அச்சுறுத்தல்களின் பின்னணியில் இந்தக் கொடிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் நடக்கிறது," என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

குறிவைக்கப்படும் பழங்குடிகளும் விவசாயிகளும்

2021ஆம் ஆண்டில், பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களின் விகிதம் அதிகமாக உள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக மக்கள்தொகையில் 5% மட்டுமே இருந்தாலும், பழங்குடியினரைக் குறி வைத்து நடந்த தாக்குதல்களின் அளவு, மொத்த தாக்குதல்களில் 39 சதவீதம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, மெக்சிகோ, கொலம்பியா, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பெருமளவில் பழங்குடி செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டில் பலியான செயற்பாட்டாளர்களில் 10 பேரில் ஒருவர் பெண் என்றும் அவர்களில் மூன்றில் இருவர் பழங்குடி செயற்பாட்டாளராகள் என்றும் அறிக்கை கூறுகிறது. அதோடு, மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாகச் செயல்படும் பெண் செயற்பாட்டாளர்களைக் கட்டுபடுத்தவும் அவர்களுடைய குரலை ஒடுக்கவும் பெண்ணின வெறுப்பு, பாரபட்சமான பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

 

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம்,GLOBAL WITNESS

 

படக்குறிப்பு,

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டதாக குளோபல் விட்னஸ் அறிக்கை கூறுகிறது

அதோடு, 2021இல் கொல்லப்பட்டவர்களில் 50 பேர் சிறு-குறு விவிசாயிகள் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. "நிலம் சார்ந்த ஒப்பந்தங்கள் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதால், தொழில்முறை வேளாண்மைக்கான இடைவிடாத தனியார்மயமாக்கல் எப்படி சிறு-குறு விவசாயிகளை அதிகளவில் ஆபத்தில் தள்ளுகிறது என்பதை இந்தக் கொலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெரிய அளவிலான தோட்டங்கள், ஏற்றுமதி சார்ந்த வேளாண்மை உற்பத்தி ஆகியவற்றால் உலகின் பெரும்பாலான கிராமப்புற ஏழைகள் இன்னமும் நம்பியிருக்கும் சிறிய அளவிலான குடும்ப வேளாண்மை அச்சுறுத்தப்படுகிறது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நில சமத்துவமின்மை

நிலம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் ஆகியவற்றை ஏற்படுத்துபவர்கள் மிகவும் பல வகையானவர்கள் மற்றும் சிக்கலானவர்கள். ஆனால், தாக்குதல்கள் அதிகமுள்ள நாடுகளுக்குச் சில பொதுவான தன்மைகள் உள்ளதாக குளோபல் விட்னஸ் அறிக்கை கூறுகிறது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அறிக்கையின்படி, நிலத்தின் கட்டுப்பாடு மற்றும் பயன்பாடு தொடர்பான மோதல்கள் தான், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் பிரதான பிரச்னையாக உள்ளது. செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள், கொலைகள் மற்றும் அடக்குமுறைகளில் பெரும்பாலானவை நிலத்திலிருந்து இயற்கை வளங்களைச் சுரண்டுவதோடு தொடர்புடையது. நில உடைமைகளில் உள்ள அதீத சமத்துவமின்மையால் எதிர்ப்பும் அந்த எதிர்ப்பால் ஏற்படும் மோதலும் அதிகரிக்கிறது. இது சமூக, பொருளாதார சமத்துவமின்மைக்கான முக்கிய இயக்கிகளில் ஒன்றாக உள்ளது.

மேலும், அதிகாரம் மற்றும் ஜனநாயக நெருக்கடிகள், காலநிலை மற்றும் பல்லுயிர் நெருக்கடிகள் உட்பட பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு அரசியல் முடிவுகள், சந்தை சக்திகளுடைய கவலையின் விளைவாக ஏற்படும் நில சமத்துவமின்மை மையப் பிரச்னையாக இருப்பதாகக் கூறுகிறது குளோபல் விட்னஸ்.

குளோபல் விட்னஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், "உலகெங்கிலும் வாழும் பழங்குடி மக்கள், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் காலநிலை நெருக்கடி மற்றும் பல்லுயிர் இழப்புக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள், மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு மீது கவனம் செலுத்துவதைவிட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அடக்குமுறை அரசுகள் மற்றும் நிறுவனங்களால் தொடர்ச்சியான வன்முறைக்கு உள்ளாவது, தங்கள் செயல்பாடுகள் குற்றமயமாக்கப்படுவது, துன்புறுத்தலுக்கு ஆளாவது போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.

 

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம்,GLOBAL WITNESS

 

படக்குறிப்பு,

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 79 சமூக சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் கூறுகிறது

உலகளவில் ஜனநாயகம் அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகி வருவதோடு, காலநிலை மற்றும் பல்லுயிர் நெருக்கடிகள் மோசமடைந்து வருவதால், இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் செயற்பாட்டாளர்களின் முக்கியப் பங்கை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைப் பாதுகாப்பதற்கும் குறைப்பதற்கும் உலகளாவிய முயற்சிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

"பாதுகாப்பு என்பதே இல்லை"

இந்தியாவில் சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் தமிழகக் கடலோர மீனவர்களின் நில உரிமைக்காகச் செயல்பட்டு வரும் சரவணன்.

"ஒரு விதிமீறல் குறித்து எதிர்த்துக் குரல் கொடுப்பது, சட்டப்படி முன்னெடுத்துச் செல்வது போன்றவற்றை ஒருவர் செய்யும்போது, அது அரசு சார்ந்ததாக இருக்கையில் வேறு கதை. அதுவே, ஒரு தனியார் நிறுவனமோ அல்லது செல்வாக்கு மிக்க நபரோ சம்பந்தப்படிருந்தால், அவர்கள் மூலமாக மிரட்டல் வரும். ஆரம்பத்தில் பணம் கொடுத்து சரிகட்டப் பார்ப்பார்கள். நேர்மையானவராக இருந்தால் மிரட்டல், அதைத் தொடர்ந்து தாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்வார்கள்.

ஒருவேளை இவை எதற்குமே பின்வாங்காமல், தொடர்ந்து நேர்மையாகக் குரல் கொடுக்கும்போது, அவர்கள் கையில் எடுத்திருக்கும் பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து கொலையும்கூடச் செய்கிறார்கள். இத்தகைய தாக்குதல்கள் இயல்பாக நடந்து வருகின்றன. ஆனால், காவல்துறை தரப்பில் இதுபோன்ற மிரட்டல்களோ அச்சுறுத்தல்களோ வரும்போது அதுகுறித்து அளிக்கும் புகாரை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை," என்கிறார் சரவணன்.

 

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம்,GLOBAL WITNESS

அதுமட்டுமின்றி, அரசு அதிகாரிகளே சில நேரங்களில் புகார் கொடுத்தவரின் விவரங்களை யார் மீது புகார் கொடுக்கப்பட்டதோ அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள் என்றும் கூறுகிறார் சரவணன்.

கடந்த ஆண்டில் 2020ஆம் ஆண்டுக்கான குளோபல் விட்னஸ் அறிக்கை வெளியானபோது, அந்த அமைப்பின் மூத்த பிரசாரகராக இருந்த க்ரிஸ் மேடென், "நம் நிலத்தைப் பாதுகாக்கப் போராடுவோருக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில், செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். பெருநிறுவனங்கள், லாபத்தைவிட பூமிக்கும் மக்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவை இரண்டும் நடக்காத வரை, காலநிலை நெருக்கடியோ படுகொலைகளோ குறையப்போவதில்லை.

நிலத்திற்காக, அதிலுள்ள வளங்களைப் பாதுகாப்பதற்காகப் போராடும் மக்கள் எவ்வளவு அழுத்தங்களையும் அபாயங்களையும் எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு இந்த அறிக்கை ஓர் அடையாளமாக நிற்கிறது," என்று பிபிசியிடம் கூறியிருந்தார். அவர் கடந்த ஆண்டு கூறியதைப் போலவே, இப்போது வெளியாகியுள்ள 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் கூட அத்தகைய அச்சுறுத்தல்களுக்கான மற்றுமோர் அடையாளமாகவே தோற்றமளிக்கிறது.

https://www.bbc.com/tamil/india-63100324

  • Like 1
Link to comment
Share on other sites

இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்வது வெட்கக்கேடானது.

எமது மக்கள் கொல்லப்பட்ட போது பி பி சி எமக்கு எதிராக எழுதியவர்கள் இப்போ குத்தி முறிவது ஏன் என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்வது வெட்கக்கேடானது.

எமது மக்கள் கொல்லப்பட்ட போது பி பி சி எமக்கு எதிராக எழுதியவர்கள் இப்போ குத்தி முறிவது ஏன் என தெரியவில்லை.

ஊடக தர்மத்தில் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது அப்படித்தானே?

🤣

Link to comment
Share on other sites

15 minutes ago, Kapithan said:

ஊடக தர்மத்தில் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது அப்படித்தானே?

🤣

பிபிசியை கும்பிடும் பலர் இங்குள்ளார்கள்.🙃

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.