Jump to content

யுக்ரேன் பதிலடித் தாக்குதல்: முக்கிய நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் பதிலடித் தாக்குதல்: முக்கிய நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா

  • ஹ்யூகோ பச்சேகா & ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு
  • பிபிசி நியூஸ், கீயவ்வில் இருந்து
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம்.

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம்.

தமது அண்டை நாடான யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த லைமன் நகரில் இருந்து பின் வாங்கியது.

ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் நகரத்தில் சுற்றி வளைக்கப்படுவார்கள் என்ற அச்சத்திற்கு இடையே இந்தப் பின்வாங்கல் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லைமன் நகரை யுக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றியிருப்பதன் மூலம், டோனியெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் உள்ள முக்கிய நிலப்பகுதிகளை அவர்கள் மீண்டும் கைப்பற்ற வழி ஏற்படும்.

லைமன் நகரிலிருந்து ரஷ்ய படைகள் அனைத்தும் வெளியேறிவிட்டதாக யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யா இந்தப் பின்வாங்கலை அறிவிப்பதற்கு முன்னதாக, கடந்த சனிக்கிழமை இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில் யுக்ரேனிய வீரர்கள் தங்கள் நாட்டின் தேசியக்கொடியை புறநகர் பகுதிகளில் அசைப்பதைப் பார்க்க முடிந்தது.

ரஷ்யாவால் தளவாட மையமாகப் பயன்படுத்தப்பட்ட லைமன் நகரை, மீண்டும் கைப்பற்றியிருப்பது யுக்ரேனியப் படைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இது மாதிரியான தோல்விகளை எதிர்கொள்ளும்போது ரஷ்யா குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என செச்சென் குடியரசின் தலைவரும் கடும்போக்கு மாஸ்கோ கூட்டாளியுமான ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்.

 

BBC map shows areas of Russian control in eastern Ukraine - as well as Ukrainian advances, including around Lyman in the Donetsk region

பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு யுக்ரேனிய பிராந்தியங்களில் ஒன்றான டோனியெட்ஸ்கில் லைமன் நகரம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் நாட்டோடு ரஷ்யா இணைத்தது. யுக்ரைனும், அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் இந்த நடவடிக்கையை சட்டவிரோத நில அபகரிப்பு என்று நிராகரித்துள்ளன.

இது குறித்து பிபிசியிடம் பேசிய யுக்ரேனின் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரிக் சாக், கடுமையான சண்டைக்குப் பிறகு லைமன் பகுதியைச் சுற்றிய சமீபத்திய வெற்றிகளை குறிப்பிடத்தக்க வெற்றி என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய வீரர்கள் சரணடைவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கும் யூரிக் சாக், ரஷ்ய ராணுவத் தலைமை அவர்களை நடத்துவதைவிட போர்க்கைதிகளாக சிறந்த முறையில் அவர்கள் நடத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

லைமன் பகுதியை சோவியத் காலப் பெயரான 'க்ராஸ்னி'எனக் குறிப்பிட்டு அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்த ரஷ்யா, அந்தப் பகுதியில் யுக்ரேனின் படை பலம் அதிகமாக இருப்பதையும் ஒப்புக்கொண்டது.

தற்போது போரில் யுக்ரேன் உத்வேகம் கொண்டிருப்பதாகக் கூறும் ராணுவ ஆய்வாளர்கள், எதிர்த்தாக்குதலுடன் முன்னோக்கிச் சென்று ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் மீட்டெடுக்க அவர்கள் உறுதியெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

"எங்கள் முழு நிலத்தையும் விடுவிப்பதற்கான முயற்சிகள், சர்வதேச சட்டத்தை யாரும் மீற முடியாது என்பதற்கு சான்றாக இருக்கும்" என யுக்ரேனின் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தார். யுக்ரேனின் கிழக்கு நகரமான லைமனில் இருந்து தன்னுடைய படைகளை ரஷ்யா திரும்பப்பெற்றிருப்பது, ரஷ்யாவிற்கான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-63111064

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.