Jump to content

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம் - கோழிகள் மூலம் உலகிற்கு தெரியவந்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம் - கோழிகள் மூலம் உலகிற்கு தெரியவந்தது எப்படி?

8 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியாக நான் நடந்தபோது வேகமாக வீசிய காற்றால் புழுதிப் பறந்தது. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலைச்சரிவுகள் அந்த நிலப்பரப்பை ஆழமான சிவப்பு பள்ளத்தாக்குகளுடன் வண்ணமயமாக்கின.

மேலும், தூரத்தில் புகைக்கூடு போன்ற பாறை வடிவங்கள் தெரிந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கொந்தளிப்பான எரிமலைச் சூழல் இயற்கையாகவே இந்தக் கோபுரங்களை உருவாக்கியுள்ளது. மத்திய துருக்கியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு சுற்றுப்பயணமும் அதனூடே வெப்பக்காற்று பலூன் சவாரியில் ஈடுபடவும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

ஆனால், கப்படோசியாவின் இடிந்து விழும் மேற்பரப்பிற்கு கீழே, 20,000 மக்களின் வாழ்விட ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு நிலத்தடி நகரம் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்தது.

இன்று டெரிங்குயு என அழைக்கப்படும் பழங்கால நகரமான எலெங்குபு, பூமியின் மேற்பரப்பிலிருந்து 85 மீட்டருக்கு மேலான ஆழத்தில் 18 நிலைகளில் குகைப்பாதைகளை சூழ்ந்திருந்தது. உலகிலேயே மிகப்பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இந்த நிலத்தடி நகரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. கிரேக்க-துருக்கியப் போரின்போது அடைந்த தோல்வியை அடுத்து, 1920களில் இந்த நகரம் கப்படோசியன் கிரேக்கர்களால் கைவிடப்பட்டது. அதன் குகை போன்ற அறைகள் நூற்றுக்கணக்கான மைல்கள் நீளத்தில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல், இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் தனித்தனி நிலத்தடி நகரங்களும் இந்தக் குகைப் பாதைகளுடன் இணைக்கப்பட்டு, பூமிக்கடியில் பெரிய வலையமைப்பை உருவாக்கிருக்கலாம் என தோன்றுகிறது.

 

எனது பயண வழிகாட்டியான சுலேமானின் கூற்றுப்படி, டெரிங்குயு 1963 ஆம் ஆண்டில் உள்ளூர்வாசி ஒருவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தன்னுடைய வீட்டை புதுப்பித்தபோது, அவருடைய கோழிகள் தொடர்ந்து காணாமல் போயின. புதுப்பிக்க தோண்டப்பட்ட குழிக்குள் நுழையும் கோழிகள், பின்னர் காணாமல் போய்விடும். இது தொடர்ந்து நடைபெறவே, அந்த இடத்தை அவர் தோண்டியபோது ஓர் இருளடைந்த பாதையைக் கண்டுபிடித்தார்.

டெரிங்குயுவின் இந்த நிலத்தடி நகரத்திற்கு செல்லும் 600 நுழைவுவாயில்கள் தனியார் வீடுகளுக்குள் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு வழிகோலிய, முதல் முயற்சி இதுதான்.

உடனடியாக தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், நிலத்தடி குடியிருப்பு, உலர் உணவு சேமிப்பு, கால்நடை தொழுவங்கள், பள்ளிகள், வைன் ஆலைகள் மற்றும் ஒரு தேவாலயம் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பு வெளிப்பட்டது. ஒரு முழு நாகரிகமும் பாதுகாப்பாக நிலத்தடியில் அங்கு புதைந்திருந்தது. அதன் பிறகு, ஆயிரக்கணக்கான துருக்கிய சுற்றுலாப்பயணிகள் அந்த இடத்திற்கு வருகை தர ஆரம்பித்தனர். பின், 1985ஆம் ஆண்டு யுனஸ்கோவின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் டெரிங்குயு இணைக்கப்பட்டது.

 

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நகரம் எப்போது உருவானது என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், கி.பி. 370இல் எழுதப்பட்ட செனோபோனின் அனபாசிஸ் புத்தகத்தில் டெரிங்குயு பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்தப் புத்தகத்தில், கப்படோசியா பகுதியில் அல்லது அதற்கு அருகில் இருந்த அனடோலியன் மக்கள், அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட குன்று ஓர குகைக் குடியிருப்புகளைவிட, நிலத்தடியில் தோண்டப்பட்ட வீடுகளில் வசித்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மண்ணில் நீர் பற்றாக்குறை காரணமாக தனிசிறப்பான நிலத்தடி கட்டுமானம், இளகிய மற்றும் எளிதில் வடிவமைக்கும் தன்மை கொண்ட பாறைகள் இந்தப் பகுதியில் அமைந்திருப்பதால் கப்படோசியா இந்த வகையான நிலத்தடி கட்டுமானத்திற்கு மிகவும் பொருத்தமானது என்கிறார் புளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழக பழங்கால ஆய்வுகளின் இணைப் பேராசிரியரான ஆண்ட்ரியா டி ஜியோர்ஜி.

இந்தப்பகுதியின் நில அமைப்பு, தோண்டுவதற்கு உகந்தது என்றும் மண்வெட்டி மற்றும் பிகாக்ஸ் உதவியுடனே இந்தப் பாறைகளைத் தோண்ட முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், டெரிங்குயுவின் நிலத்தடி நகரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. நிலத்தடி குகைகளின் பரந்த வலையமைப்பிற்கான அடித்தளத்தை ஹிட்டியர்களது வரலாற்றில் பார்க்க முடிகிறது, "கிமு 1200இல் ஃபிரிஜியர்களின் தாக்குதலுக்கு ஆளானபோது அவர்கள் பாறையில் முதல் சில நிலைகளை தோண்டியிருக்கலாம்" என்கிறார் மத்தியதரைக் கடல் நிபுணர் ஏ பெர்டினி. குகை குடியிருப்புகள், பிராந்திய குகை கட்டடக்கலை பற்றிய அவரது கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ஹிட்டியர்களின் கலைப்பொருட்கள் டெரிங்குயுவின் உள்ளே காணப்பட்டன.

இருப்பினும், நகரத்தின் பெரும்பகுதி ஃபிரிஜியன்களால் கட்டப்பட்டிருக்கலாம். "பிரிஜியர்கள் அனடோலியாவின் மிக முக்கியமான ஆரம்பகால பேரரசுகளில் ஒன்று" என்கிறார் டி ஜியோர்ஜி.

பிரிஜியர்கள் கி.மு.வின் ஆயிரம் ஆண்டுகால இறுதியில் மேற்கு அனடோலியா முழுவதும் பரவியிருந்தனர். பாறை அமைப்புகளை நினைவுச் சின்னமாக்குதல் மற்றும் பாறை வெட்டு முகப்புகளை உருவாக்குவதற்கான திறமை அவர்களிடம் இருந்தது என்றும் டி ஜியோர்ஜி கூறுகிறார்.

 

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெரிங்குயு முதலில் பொருட்களை சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தற்காலிக புகலிடமாகவே அவை இருந்தன. கப்படோசியா பல நூற்றாண்டுகளாகப் பேரரசுகளின் தொடர் படையெடுப்பை எதிர்கொண்டது.

7ஆம் நூற்றாண்டு இஸ்லாமியத் தாக்குதல்களின் போது இந்தக் குடியிருப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. ஃபிரிஜியன்கள், பெர்சியர்கள், செல்ஜுக்குகள் மற்றும் பலர் இப்பகுதியில் வசித்து வந்தனர். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் நிலத்தடி நகரம் விரிவடைந்தது. பைசண்டைன் சகாப்தத்தில் டெரிங்குயுவின் மக்கள் தொகை அதன் உச்சத்தை எட்டி, கிட்டத்தட்ட 20,000 குடியிருப்பாளர்கள் நிலத்தடியில் வாழ்ந்தனர்.

இன்று, வெறும் 60 துருக்கிய லிராவுக்கு நிலத்தடி வாழ்க்கையின் கொடூரமான யதார்த்தத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். கருகிப்போன கறை படிந்த சுவர்கள் கொண்ட அந்தக் குகைக்குள் நான் இறங்கியதும், எனக்குள் அச்சம் ஏற்பட்டது. இருப்பினும், டெரின்குயு மீது படையெடுத்த பல்வேறு பேரரசுகளின் புத்திக் கூர்மை வெளிப்படையாகத் தெரிந்தது. படையெடுப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே குறுகலாக உருவாக்கப்பட்டிருந்த நடைபாதைகளால் பார்வையாளர்கள் குனிந்து செல்ல வேண்டியிருந்தது.

அரை டன் வட்ட வடிவ கற்பாறைகள் ஒவ்வொரு 18 நிலைகளுக்கும் இடையில் கதவுகளைத் தடுத்து, உள்ளே இருந்து மட்டுமே நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தன. கதவுகளின் மையத்தில் படையெடுப்பாளர்களைக் குறிவைத்து ஈட்டி எறிவதற்கான சிறிய துளைகள் இருந்தன.

"நிலத்தடி வாழ்க்கை ஒருவேளை மிகவும் கடினமாக இருந்திருக்கலாம்" என்கிறார் என் பயண வழிகாட்டி சுலேமான்.

இங்கு வசித்தவர்கள் சீல் செய்யப்பட்ட களிமண் ஜாடிகளில் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, டார்ச்லைட் மூலம் வாழ்ந்தனர். இறந்த உடல்களை ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அப்புறப்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.

இந்த நகரத்தின் ஒவ்வொரு மட்டமும் குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளில் இருந்து வெளிப்படும் வாசனை மற்றும் நச்சு வாயுக்களைக் குறைக்க மேற்பரப்புக்கு அருகிலேயே அவற்றுக்கான தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது.

நகரின் உள்அடுக்குகளில் குடியிருப்புகள், பாதாள அறைகள், பள்ளிகள் மற்றும் சந்திப்பு இடங்கள் இருந்தன. இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய பைசண்டைன் மிஷனரி பள்ளி, அதன் தனித்துவமான பீப்பாய்-வால்ட் கூரைகளால் அடையாளம் காணக்கூடியது. ஓயின் தயாரித்ததற்கான ஆதாரங்கள் பாதாள அறைகளில் இருந்தன. இந்தச் சிறப்பு அறைகள், டெரிங்குயுவில் வசிப்பவர்கள் மேற்பரப்பிற்கு அடியில் பல மாதங்கள் செலவழிக்கத் தயாராக இருந்ததைக் காட்டுகிறது.

 

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கு அமைந்துள்ள ஒரு சிக்கலான காற்றோட்ட அமைப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட கிணறு கவனம் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. இது முழு நகரத்திற்கும் சுத்தமான காற்று மற்றும் சுத்தமான தண்ணீரை வழங்கியிருக்கும். உண்மையில், டெரிங்குயுவின் ஆரம்பக்கால கட்டுமானம் இந்த இரு அத்தியாவசிய கூறுகளை மையமாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது. அந்தக் கிணறு கீழே இருந்து எளிதாக துண்டிக்க கூடிய வகையில் 55 மீட்டருக்கும் கீழே தோண்டப்பட்டிருந்தது.

டெரிங்குயுவின் கட்டுமானம் உண்மையில் புத்திசாலித்தனமாக இருந்தபோதிலும், இது கப்படோசியாவில் உள்ள ஒரே நிலத்தடி நகரம் அல்ல. 445 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அனடோலியன் சமவெளிக்கு அடியில் அமைந்துள்ள 200 நிலத்தடி நகரங்களில் பெரியது மட்டுமே. 40க்கும் மேற்பட்ட சிறிய நகரங்கள் இதைவிட மூன்று மடங்கு ஆழமான நிலத்தடியில் அமைந்துள்ளன. அவற்றில் சில டெரிங்குயுவுடன் குகை வழிப்பாதை மூலமாக இணைந்துள்ளன.

மேற்பரப்புக்கு உடனடியாகத் திரும்புவதற்கான அவசரகால தப்பிக்கும் வழிகள் இந்த நகரங்கள் அனைத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. கப்படோசியாவின் நிலத்தடி ரகசியங்கள் இன்னும் முழுமையாகத் தோண்டப்படவில்லை. 2014ஆம் ஆண்டில், நெவ்செஹிர் பகுதிக்கு அடியில் ஒரு புதிய பெரிய நிலத்தடி நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெரிங்குயுவின் வரலாறு, 1923இல் கப்படோசியன் கிரேக்கர்கள் வெளியேறியபோது முடிவுக்கு வந்தது. நகரம் உருவாக்கப்பட்டு 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு, டெரிங்குயு கடைசியாக கைவிடப்பட்டது. டெரிங்குயு அதே இடத்தில் இருந்தாலும், சில கோழிகள் இந்த நிலத்தடி நகரத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வரை அதன் இருப்பு நவீன உலகத்திற்கு மறந்துவிட்டது.

https://www.bbc.com/tamil/global-63067146

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.