Jump to content

பொலிஸாரின் துப்பாக்கி குறி தவறியதில் பஸ்ஸில் பயணித்த பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாரின் துப்பாக்கி குறி தவறியதில் பஸ்ஸில் பயணித்த பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன ?

By VISHNU

02 OCT, 2022 | 09:54 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கம்பஹா - தங்கோவிட்ட பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கொள்ளைக் கோஷ்டியொன்றினை இலக்கு வைத்து பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டின் போது, இலக்குத் தவறிய துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று காரணமாக பாதையில் பயணித்த இ.போ.ச. பயணிகள் பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

image_0cc82c97f5.jpeg

 காலி மாவட்டம், ஹப்புருகல -வன்னிகஹவத்தையைச் சேர்ந்த இரேஷா சியாமலி எனும் 29 வயது பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தின் போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுடன்  வேனில் தப்பிச் சென்றுள்ள கொள்ளையர்கள், வத்தளை - மாபோல வரை அதில் பயணித்துள்ளதுடன் மாபோலையில் வேனை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு கொள்ளையர்கள் மட்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

image_be58bff844.jpeg

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

இன்று (2) அதிகாலை நான்கு மணி அளவில்  தங்கோவிட்ட நகரில் உள்ள மதுபான நிலையத்தை உடைத்து மது போத்தல்கள் கொள்ளையிடப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தங்கோவிட்ட பொலிஸ் குழுவொன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது.  கொள்ளையர்களை கைது செய்ய பொலிசார் முயன்ற போது, 'நெருங்க வேண்டாம் ... சுட்டுவிடுவோம் ' என  கூறியவாறு கொள்ளையர்கள் சிறிய ரக வேன் ஒன்றில் தப்பியோட முயன்றதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

 இதனையடுத்து பொலிசார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். எனினும் கொள்ளையர்கள் தாங்கள் வந்த வேனில் தொடர்ந்தும் தப்பியோடவே, துரத்தி துரத்தி பொலிசார் சுட்டுள்ளனர்.

 இதன்போது, அனுராதபுரம் டிபோவுக்கு சொந்தமான இ.போ.ச. பயணிகள் பஸ் வண்டியொன்று, கலன் பிந்துனுவெவவில் இருந்து கொழும்பு நோக்கி அப்பகுதியூடாக பயணித்துள்ளது.

பொலிஸார் கொள்ளையர்களின் வேனை நோக்கி முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இலக்கு தவறி, குறித்த இ.போ.ச. பஸ் வண்டியின்  பின் ஆசணத்தில் வலது பக்க மூலையில் பயணித்த பெண்ணை  பதம்பார்த்துள்ளது.

குறித்த பெண் கலன் பிந்துனுவெவவில் இருந்து தனது கணவர் மற்றும் தாயாருடன் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளார்.

இந் நிலையில் காயமடைந்த குறித்த பெண்ணை உடனடியாக  வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸாரும், அங்கிருந்தோரும் நடவடிக்கை எடுத்துள்ள போதும், வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். அது குறித்த நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் கொள்ளையர்கள் கொழும்பு திசை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் கொள்ளையர்கள் பயணித்த சிறிய ரக வேன், மாபோலை பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால்  மீட்கப்பட்டது. குறித்த வேனில் இருந்து மது போத்தல்கலும் புதிய வாகன டயர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த வேன் கண்டி பகுதியில் வைத்து திருடப்பட்டுள்ள ஒன்று என பின்னர் தெரியவந்துள்ளது.

மாபோலை வரை பயணித்த கொள்ளைக் கோஷ்டி அங்கு வேனை கைவிட்ட பின்னர், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு கொள்ளையர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதனையடுத்து ராகம பொலிசார் அவ்விருவரையும் கைது செய்து பொலிஸ் காவலில் சிகிச்சையளித்து வருகின்றனர். 

அதன் பின்னர் அவர்களின் தகவல் பிரகாரமே ராகம பொலிசார் கொள்ளையர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய வேனையும், அவ்விருவரும் வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

மேலும் பல  கொள்ளையர்கள் தப்பிச்  சென்றுள்ள நிலையில், கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  ஜகத் ரோஹனவின் ஆலோசனைக்கு அமைய,  தங்கோவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் காமினி வீரவர்தன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

இதனைவிட, கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களுடன் இருந்த ஏனையவர்கள் அவர்களின் கைகளில் இருந்ததாக கூறப்படும் ஆயுதங்களை கைப்பற்றவும்  ராகம பொலிஸ்  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  புத்திக ராஜபக்ஷவின் தலைமையில்,  குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரிப்  பிரதான பொலிஸ் பரிசோதகர் அசேல பெராவின் கீழான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/136873

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.