Jump to content

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச

Sri Lanka ArmySri Lankan TamilsWimal WeerawansaUniversity of JaffnaSri Lankan political crisis
2 மணி நேரம் முன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12 நாட்கள் திலீபனை பகிரங்கமாக கொண்டாடியமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

இராணுவத்தை சாடல்

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களை கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களை கோபமடைய செய்யும்.

 

தமிழ் மக்களாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் சமூக ஊடகங்களிலும் திலீபன் கொண்டாடப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

திலீபனின் நினைவேந்தல்கள் பகிரங்கமாக நடத்தப்படும் போது இராணுவ பொலிஸார் ஏன் மௌமான இருந்தனர்.”என கூறியுள்ளார்.

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

 

யாழ்.குடாநாட்டை இந்திய அமைதிப்படை ஆக்கிரமித்திருந்த நிலையில், 987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து, திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து முப்பத்தைந்து வருடங்களாகின்றன.

அரச படையினரால் பல தடவைகள் தகர்க்கப்பட்ட நல்லூரில் உள்ள திலீபன் நினைவுத் தூபிக்கு அருகாமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மாவீரரின் பெற்றோர்களின் பங்களிப்புடன் நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நினைவுத்தூபிக்கு முன்பாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இம்முறை முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாண குடாநாட்டைச் சுற்றி வாகன பேரணி ஒன்றையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

 

பிரதமரின் கருத்து

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

திலீபன் நினைவேந்தல் ஆரம்பமாகியிருந்த நிலையில், யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொரு நபரையும் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த இனத்தவர்களுக்கு நினைவு கூறுவதில் எவ்வித தடையும் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் ரீதியாகவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தியும், இன வேறுபாடுகளை தூண்டி ஒரு சார்புடையதாகவும் இருக்கக் கூடாது எனக் கூறிய பிரதமர், அவ்வாறு மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

 

நினைவேந்தலுக்கான தடைகள்

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

கடந்த சில ஆண்டுகளாக, தமிழர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற போதிலும், அரசு பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியே வருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் பொத்துவிலில் இருந்து நல்லூருக்கு சென்ற வாகன ஊர்வலத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக அப்பகுதி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன தொடரணியை இடைமறித்த பொலிஸார், திலீபனின் உருவம் பொறிக்கப்பட்ட வாகனங்களில் பயணித்த அனைவரின் பெயர்களையும் ஊர்களையும் பதிவு செய்துள்ளனர்.

விமல் வீரவன்ச

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

இந்நிலையில் விமல் வீரவன்ச, திலீபனை நினைவு கூறுவோரை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால் இவர் வடக்கில் இந்திய அமைதி காக்கும் படையினர் வடக்கை ஆக்கிரமித்திருந்த போது அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் பிரிவின் வீரராவார்.

பின்னர், அந்த முன்னணியில் இருந்து பிரிந்து ராஜபக்ச ஆதரவாளராக ஆட்சிக்கு வந்த வீரவன்ச, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சில நாட்களில் அதனை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச - தமிழ்வின் (tamilwin.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனோடை விடையம்..இன உணர்வுடன் சம்பந்தப்பட்டது..நீங்க நெடுகச் சொல்வதுதானே. விட்டுடுங்க,,,,..உங்கடை வீட்டு விசயத்தை மறந்து கதைக்கிறீங்க...உங்க மனைவியுடன் தொடர்பில் இருந்த சின்னப் பொடியனை அடிச்சுச் சாவடித்துவிட்டு...  ஏதோஎல்லாம் நாடகமடித்து..கேசைமுடித்து இப்ப வெளியில் இருந்து சண்டித்தனம் கதைப்பப்து..என்ன நியாயம்...மனிசியுடன் நேரில் கதைக்க பயந்து ..அவரையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு...இப்ப வெளியில் இருந்து பெண்களுடன் கொட்டமடிப்பதை ..ஆமியும் பார்த்துக்கொண்டுதானே இருக்குது...அதைவிட உங்கட ஆபீசு சோதனையிட ..கைப்பற்றிய ஆணுறையும் ..மாத்திரைகளையும் உங்கடை ஆமிதானே பிடித்தது...அப்பவும் உங்கடைஆமி பேசாமல்தானே இருந்தது...இப்ப  ஏன் ஆமியை உசுப்பிறியள்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

“நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களை கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களை கோபமடைய செய்யும்.

தமிழர் கழித்தாலும் சிங்களமக்களுக்கு கோபம் வருமென்று தெரியும், ஆனால் எங்கட கோயிலை இடித்து விகாரை காட்டினாலும் தமிழருக்கு கோபம் வரக்கூடாது அதுக்கும் சிங்களமக்கள் கோபமடைவர் என்று சொல்வதுதான் கொஞ்சம் கேள்விக்குரியது. இருப்பவர் இருந்திருந்தால் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருந்திருப்பீர்கள், நிலைமை இறங்கி வந்ததால் குதிக்கிறீர்கள். இன்னும் பாதாளத்திற்கு நாடு போகப்போகுது. இந்தியன் தன்னாட்டு குடிமகனுக்கு இங்கு விழா எடுக்கிறான் அதற்கு தடையில்லை, இந்த நாட்டின் குடிமக்கள் தங்கள் இறந்த உறவுகளை நினைத்து உருகினால் உங்கள் குற்ற நெஞ்சு குறுகுறுக்கத்தான் செய்யும். இதுகளுக்கு ஒருவிதமான பைத்தியம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, alvayan said:

திலீபனோடை விடையம்..இன உணர்வுடன் சம்பந்தப்பட்டது..நீங்க நெடுகச் சொல்வதுதானே. விட்டுடுங்க,,,,..உங்கடை வீட்டு விசயத்தை மறந்து கதைக்கிறீங்க...உங்க மனைவியுடன் தொடர்பில் இருந்த சின்னப் பொடியனை அடிச்சுச் சாவடித்துவிட்டு...  ஏதோஎல்லாம் நாடகமடித்து..கேசைமுடித்து இப்ப வெளியில் இருந்து சண்டித்தனம் கதைப்பப்து..என்ன நியாயம்...மனிசியுடன் நேரில் கதைக்க பயந்து ..அவரையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு...இப்ப வெளியில் இருந்து பெண்களுடன் கொட்டமடிப்பதை ..ஆமியும் பார்த்துக்கொண்டுதானே இருக்குது...அதைவிட உங்கட ஆபீசு சோதனையிட ..கைப்பற்றிய ஆணுறையும் ..மாத்திரைகளையும் உங்கடை ஆமிதானே பிடித்தது...அப்பவும் உங்கடைஆமி பேசாமல்தானே இருந்தது...இப்ப  ஏன் ஆமியை உசுப்பிறியள்...

தங்களின் ஊழல்களையும், கேவலங்களையும் மறைத்து தம்மை நாட்டுப்பற்றாளர்களாக காட்டுவதற்கு அரசியலும், இந்தஊளையிடலும் தேவைப்படுகிறது இவர்களுக்கு. இந்தநாட்டின் குடிமக்களோடு உரிமைகளை பகிர்ந்து வாழ விரும்பாமல், அந்நிய நாடுகளை அழைத்து, அவர்கள் தங்கள் மொழியையும், கலாச்சார நிகழ்வுகளையும்,  நினைவேந்தல்களையும்  கொண்டாடுகிறார்கள், தங்கள் மொழியில் பெயர்பலகைகளை நடுகிறார்கள், கட்டிடங்களை கட்டுகிறார்கள், தொழில் நிறுவனங்களை நிறுவுகிறார்கள் அதை கேட்க தடுக்க துப்பில்லை, தமிழன் என்ன செய்கிறான்? எப்போ தும்முகிறான்? எங்கே கழிக்கிறான் என்று திரியுங்கோ, துப்புக்கெட்டதுகள்! இதுகளின்ர முட்டாள்தனத்தை வெளிநாடுகள் தமக்கு சாதகமாய் பயன்படுத்தி, தமக்கு வேண்டிய நன்மைகளை சுலபமாய் அடைகிறார்கள். அது சிங்கள மக்களுக்கு தெரிவதில்லை, தெரியப்படுத்துவதுமில்லை, அவர்களுக்கு அதையிட்டு கோபமுமில்லை. அவர்களின் கோபமெல்லாம் தமிழர்மேலே. அவ்வளவு பொறாமை தமிழனின் முன்னேற்றத்தில், திட்டமிட்டு அழித்துக்கொண்டும், பிடுங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். இன்னும் பசி தீரவில்லை அவர்களுக்கு! அடைகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அடிக்கடி தான் எங்க இருந்து வந்தன் என்றதை மறக்கும் வியாதியுள்ளது.

இவரை உருவாக்கிய ஜே வி பி.. இவர் அதில் அங்கத்தவராக இருந்த போது சொந்த இன மக்களின் இராணுவத்தையே அரச கூலிகளாகக் காட்டிக் கொன்றவர்.  இவர் எல்லாம் ஒரு பேரினவாதச் சிந்தனையோட்டத்தில் இருந்த போர்வெறி கொண்ட வேறொரு இனத்தின் அரசாங்கத்திடம் இருந்து தன் சொந்த இனத்தைக் காப்பாற்ற போராடிய திலீபனைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்குது.

ஆனால் ஒன்று இவர்கள் இப்படிக் கத்தும் போதுதான் தமிழர்கள் சிலருக்கு தங்கள் நிலை தெரிய வரும். அதனாலாவது ஒற்றுமைப்பட்டால் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

இவர்கள் இப்படிக் கத்தும் போதுதான் தமிழர்கள் சிலருக்கு தங்கள் நிலை தெரிய வரும். அதனாலாவது ஒற்றுமைப்பட்டால் நல்லது. 

அற நனைஞ்சாருக்கு கூதலுமில்லை காய்ச்சலுமில்லை!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.