Jump to content

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பங்கிட்டு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத் தொகையும் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது.

சீனத் தூதரகத்தின் இந்த நிதியுதவியின் கீழ் மாணவர்களுக்கான மாதந்த உதவிப்பணம் உட்பட பல நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழக நலச்சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1302473

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வர்ரே வா 🤣

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

இபோதுள்ள இரட்டை வேட  தமிழ்த் தலைமை வருகின்ற தேர்தலுடன் காணாமல் போய்விடும்.
ஆனால்... மிக அவசரமாக, புதிய  ஒரு மாற்றுத் தலைமை  உருவாகுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவியை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் சிங்கள பகுதிகளுக்கு கொடுத்து விடுவார்கள்.....நாங்கள் பெற்றுக் கொள்வது நல்ல செயல் அதுவும் நேரடியாக பெறுவது மிகவும் சிறப்பு  பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

இபோதுள்ள இரட்டை வேட  தமிழ்த் தலைமை வருகின்ற தேர்தலுடன் காணாமல் போய்விடும்.
ஆனால்... மிக அவசரமாக, புதிய  ஒரு மாற்றுத் தலைமை  உருவாகுதல் வேண்டும்.

அப்படியானதொரு சூழலே தென்படுகிறது. இதனால் டக்ளஸ் - கருணா- பிள்ளையான் போன்ற சக்திகள் முன்னோக்கித் தள்ளுப்படக்கூடும். இதனை மக்கள்(சிவில்) குமுகாய அமைப்புகள் சரியாகக் கையாள வேண்டும். மணிவண்ணன் போன்றோர்மீதும் அண்மையில் நடைபெற்ற தியாக தீபத்தின் வணக்க நிகழ்வுக் குளறுபடிகளால் நம்பிக்கை போய்விட்டது. இனத்துக்காக உண்மையாக முன்வரும் இளையோரை ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரசபடைகள் விட்டுவைக்குமா என்பதும் கவனத்திற்குரியது. அப்படித் துணிவோடு இறங்குவதாயின் மில்லரைப்போல முடிவெடுத்தே, அதாவது சாவைச் சந்திக்கத்தயாராக இறங்கவேண்டும். எமதினத்திலே அரசியல் தெளிவும் உறுதியும் உடையதொரு தலைமையின் அவசியம் குறித்த உரையாடல்களை இப்போதிருந்தாவது(நான் இதனை வேறொரு திரியிலும் சுட்டியிருந்தேன்) தொடங்கவேண்டும். யார் தொடங்குவது என்பதே பெரியதொரு வினா? கஜன் சக கஜன் போன்றோர் இன்றுவரை குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் நிலையிலேதான் இருக்கிறார்கள். இந்தியாவைப் பகைக்கக் கூடாதென்பதற்காக, இந்தியாவால் கையாளப்படமுடியாமல் மட்டும் இருப்பதுதான் விடியலுக்கான செயற்பாடாக நினைக்கிறார்கள் போல் உள்ளது. 
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

பல்கலைக்கழகத்தில் சீன கற்கைநெறி ஒன்றையும், சீனாவின் முன்ணணி பல்கலைக்கழகங்களின் புலமைப்பரிசில் திட்டத்தையும் கொண்டுவந்தால் நன்று. 

25 minutes ago, nochchi said:

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

சரியான கேள்வி. 

இப்படியான சிந்தனைகளைக் கிளறிவிடுவதுதான் இந்த உதவிகளின் நோக்கமாக இருக்குமோ ? 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

சீனாவோடு தமிழர்கள் தொடர்புகளைப் பேணுதல் நல்லது. இது சிங்களத்தைப் போலவே இந்தியாவை எதிர்க்கும் நோக்கம் அல்ல. இந்தியா, காந்தி ஜெயந்தி போன்ற தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையைக் குறைக்கலாம்.

ஒரு வேளை (🤪) இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர முன்வந்தால் அதனை சீனா சிங்களத்தோடு சேர்ந்து நின்று எதிர்க்கும்.

 

இதேவேளை சீனா எமக்கான தீர்வினை வழங்க முன்வந்தால் அதனை இலங்கை இந்தியாவோடு சேர்ந்து நின்று முறியடிக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அப்படியானதொரு சூழலே தென்படுகிறது. இதனால் டக்ளஸ் - கருணா- பிள்ளையான் போன்ற சக்திகள் முன்னோக்கித் தள்ளுப்படக்கூடும். இதனை மக்கள்(சிவில்) குமுகாய அமைப்புகள் சரியாகக் கையாள வேண்டும். மணிவண்ணன் போன்றோர்மீதும் அண்மையில் நடைபெற்ற தியாக தீபத்தின் வணக்க நிகழ்வுக் குளறுபடிகளால் நம்பிக்கை போய்விட்டது. இனத்துக்காக உண்மையாக முன்வரும் இளையோரை ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரசபடைகள் விட்டுவைக்குமா என்பதும் கவனத்திற்குரியது. அப்படித் துணிவோடு இறங்குவதாயின் மில்லரைப்போல முடிவெடுத்தே, அதாவது சாவைச் சந்திக்கத்தயாராக இறங்கவேண்டும். எமதினத்திலே அரசியல் தெளிவும் உறுதியும் உடையதொரு தலைமையின் அவசியம் குறித்த உரையாடல்களை இப்போதிருந்தாவது(நான் இதனை வேறொரு திரியிலும் சுட்டியிருந்தேன்) தொடங்கவேண்டும். யார் தொடங்குவது என்பதே பெரியதொரு வினா? கஜன் சக கஜன் போன்றோர் இன்றுவரை குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் நிலையிலேதான் இருக்கிறார்கள். இந்தியாவைப் பகைக்கக் கூடாதென்பதற்காக, இந்தியாவால் கையாளப்படமுடியாமல் மட்டும் இருப்பதுதான் விடியலுக்கான செயற்பாடாக நினைக்கிறார்கள் போல் உள்ளது. 
நன்றி

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா சீன தூதுவர் அவர்களே.

யாழ் இந்துக் கல்லூரியில் மாண்டரின் மொழி படிக்க உதவ முடியுமா? 🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

இங்கு ஆயுதத்தைத் தூக்குங்கள் என்று யாரையும் கோரவில்லை. ஆனால், மக்கள் தொடர்ந்து போராடவேண்டிய நிலையிலேயே ஈழத்தீவிலே தமிழ்பேசும் மக்களை சிங்களமும் உலகும் வைத்திருக்கிறது. நாங்கள் எதிர்பார்ப்பது சுயநலமற்ற இனச்சுயநலத்தோடு சிந்திக்கும் திடசங்கற்பமுள்ள தலைமையே இன்றைய தேவை. அதனையே பலர் சுட்டுகின்றார்கள். போராட்டமென்றவுடன் ஏ.கே.47ஐ நினைக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் உலகிலே இன்றும் விடுதலைக்காக அவைகளே பேசுகின்றன. அதனைப் பார்த்து கையறு நிலையில் நிற்கிறது புலிகளுக்கு வகுப்பெடுத்த மேற்குலகு என்பது வேறுகதை. 


நீங்கள் சொல்வதுபோல் சனத்தொகை பெருக்கமென்ற மூலோபாயம் கடந்த பத்தாண்டுகளாகப் பேசப்படும் விடயம். பொருண்மியச்சுமையால் நெரிபடும் ஒரு பிள்ளையுள்ள குடும்பத்தை காணும் தம்பதிகள் உறையோடுதான் கட்டிலுக்குப் போகிறார்கள். உறைவேண்ட வழியற்றவனோ கொஞ்சம் தள்ளிப்படப்பா என்ற நிலை. பொருண்மியத் தேடலுக்கான நிலை களைப்பு சோர்வு என்பன தம்பதியரிடையேயான கூடல்களையே ஊடலாக்கி ஊடுருவியுள்ள நுகர்வுப் பொருணமியச் சூழல் என்பனவும் இனவிருத்திக்குத் தடையான கரணியங்கள் ஆகும். எனவே பொருண்மிய வளப்பெருக்கமற்று மகிழ்வான வாழ்வுச் சூழலற்ற ஒரு நாடாக ஈழம் இருக்கும்வரை சாத்தியமா என்று சிந்திக்க வேண்டும். அதேவேளை இனவிருத்திக்கான பரப்புரையையும் வேலைத்திட்டத்தையும் புலத்திலிருந்து உங்களைபபோன்ற சிந்தனையாளர்கள் முன்னெடுத்தால் புலத்தமிழர் கரம்கொடுப்பார் என்பதில் ஐயமில்லை. 
நன்றி

1 hour ago, இணையவன் said:

சீனாவோடு தமிழர்கள் தொடர்புகளைப் பேணுதல் நல்லது. இது சிங்களத்தைப் போலவே இந்தியாவை எதிர்க்கும் நோக்கம் அல்ல. இந்தியா, காந்தி ஜெயந்தி போன்ற தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையைக் குறைக்கலாம்.

ஒரு வேளை (🤪) இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர முன்வந்தால் அதனை சீனா சிங்களத்தோடு சேர்ந்து நின்று எதிர்க்கும்.

 

இதேவேளை சீனா எமக்கான தீர்வினை வழங்க முன்வந்தால் அதனை இலங்கை இந்தியாவோடு சேர்ந்து நின்று முறியடிக்கும்.

உண்மைதான்,

நாம் எதிர்க்கத்தேவையில். ஏன் சிங்களத்தைபோன்றதொரு அரசியல் பொறிமுறையை வகுத்துப் பிரித்து நாடுகளுக்கும் நிலைமைகளுக்கும் ஏற்றவாறு செயற்படுத்தக்கூடாது. சிங்களத்தின் இராயதந்திரத்தினைப்பாருங்கள் வரலாற்றுக் காலத்திலேயே சோழரை எதிர்க்க பாண்டியரோடு(தென்னிந்தியரோடு) கரம்கோர்க்கவில்லையா?  

Edited by nochchi
திருத்தம்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

திலீபன் அண்ணாவின் மண்ணில் காந்திக்கு மிதிவண்டிப் பயணம் செய்யும் மறதிச்செம்மல்களை நினைக்க வேதனையாக உள்ளது. இதை நினைக்க கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. 

 

ஒருவன் நிலாக்காட்டி பழஞ்சோறூட்ட நினைக்கிறான்!
இன்னொருவன் நிலாவிற்குப் போக வழிகாட்டுகிறான்!

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

ஐயா, 

அனக்கு நான்கு பிள்ளைகள். என்னுடைய நண்பர்கள் பலரை கிண்டலடித்து ஆகக் குறைந்தது 3 பிள்ளைகளாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.  

இதுதான்  என்னால் செய்யக்கூடியது, இப்போதைக்கு..... 😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பின் அடுத்த கட்டமாக

சீனதூதுவரை  சந்தித்து நன்றி சொல்வதுடன் 

முடிந்தால்  சீனா  சென்று சீன அரசுடன்  பேசத்தொடங்கவேண்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

இருக்கலாம், அண்மையில் சீனத்தூதுவரின் அறிக்கைக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சீனத் தூதுவருக்கு நமது நிலைமைகளை விளக்கி, இப்படியான அறிக்கைகளை எதிர்காலத்தில் தவிர்க்கச் செய்யலாம். ஆனா அவர்கள் ஒன்றும் தெரியாமல் செய்யவில்லை. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுகிறார்கள். இதை வெட்டியாடும் திறமை நாங்கள் ராஜ தந்திரிகள் என்று அலட்டிக்கொண்டு திரியும் நம்ம தலைமைகளுக்கு உண்டா? நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. சிறிதாயிருக்கும் போதே தீர்க்க முடியாதவர்கள் இனிமேல் மூடிக்கொண்டு படுக்க வேண்டியதுதான். நாங்கள் இனிமேல் சிங்களத்தோடு மட்டுமல்ல அவன் அழைத்து வைத்து கடன் வாங்கிய நாடுகளோடும் போராட வேண்டியுள்ளது. போராட்டம் என்றவுடன் ஆயுதத்தை யாரும் நினைக்க வேணாம், அதற்கு துணிவுள்ளவன் யாரும் வரப்போவதில்லை, வந்தாலும் சாதிக்க முடியாது. பேசத் துணிவுள்ளவன் வரவேண்டும்! தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் அதற்கு அனுமதிக்கப்போவதுமில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கு பின்னாலேயே அலைந்து, அவர்களை ஓரங்கட்டி, நாறடித்து, பயமுறுத்தி, அரசாங்கத்தால் அச்சுறுத்தி, இனவாதிகளை கிளப்பி வெளியேற்றிவிடுவார்கள். சிங்களவரை விட இந்த தமிழ் தேசியத்தை வைத்து வயிறு வளப்பவர்களை சமாளிப்பதே  மிகப்பெரிய சவால்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2022 at 15:16, nochchi said:

நாங்கள் எதிர்பார்ப்பது சுயநலமற்ற இனச்சுயநலத்தோடு சிந்திக்கும் திடசங்கற்பமுள்ள தலைமையே இன்றைய தேவை.

இலங்கை தமிழ் மக்களுக்கு தந்தை செல்வா  சிறந்த தலைவராக இருந்தார்  அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் பண்டா- செலவா ஓப்பந்தம்,டல்லி -செல்வா ஓப்பந்தம். நடைமுறைபடுததப்படவில்லை யாரில் பிழை உண்டு” செலவாவில் இல்லையே   சிங்கள தலைவர்களில் தான் பிழையுண்டு.....பண்டா.     ,டல்லியை. விட  கடும் போக்கான சிங்கள தலைவர்களே இன்று இருக்கிறார்கள் எதிர்காலத்திலும் இருப்பார்கள் ஆகவே இன்று தந்தை செல்வா இருந்தாலும் அல்லது நீங்கள் விரும்புவது போன்ற தமிழ் தலைவர் இருந்தாலும் நான் உறுதியாக சொல்லுகிறேன் தீர்வு பெற்று தரமாட்டார்கள் தரமுடியாது காரணம் சிங்களவன்  ஒருபோதும் தரமாட்டான்  எனவே… தமிழர்களின் தலைவராக சம்பந்தனோ சுமந்திரனோ மாவையோ. ..அல்லது எவரும் இருக்கலாம் இது எனது தனிப்பட்ட உறுதியான கருத்துகள் 😀 இன்றைய நிலையில் இலங்கையில் ஒரு அரச தலைவர் தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட சிங்கள தலைவர் தேவ....அதேபோல இந்தியா அரச தலைவரும் தமிழ்நாடு அரச தலைவரும் அமைய வேண்டும் அல்லது நாங்கள் உருவாக்கவேண்டும் [ இது மிகவும் கடினம் ] எங்கள் தமிழ் தலைவர்கள் எப்படி இருந்தாலும் இவர்களால் தீர்வு பெற்று தரமுடியும்  🤣மேலும் ஆயுதப் போராட்டத்திலும். நாங்கள் மிக சிறந்த தலைவரை கொண்டிருந்தோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

அண்ணை இலங்கை வாழ் இந்தியா தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்நது உள்ளது” அதேபோல இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது  ஆனால் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைத்து உள்ளது இப்படியாக அழிந்துபோகும் இனத்துக்கு ஏன் சுயாட்சி அல்லது தீர்வு  ?.     பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்டுவதற்கு என்ன வழி உண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

அண்ணை இலங்கை வாழ் இந்தியா தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்நது உள்ளது” அதேபோல இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது  ஆனால் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைத்து உள்ளது இப்படியாக அழிந்துபோகும் இனத்துக்கு ஏன் சுயாட்சி அல்லது தீர்வு  ?.     பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்டுவதற்கு என்ன வழி உண்டு?

சம்சும் கொம்பனியை கூண்டோடை நாடு கடத்துவது

  • Haha 2
Link to comment
Share on other sites

1 hour ago, Kandiah57 said:

அண்ணை இலங்கை வாழ் இந்தியா தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்நது உள்ளது” அதேபோல இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது  ஆனால் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைத்து உள்ளது இப்படியாக அழிந்துபோகும் இனத்துக்கு ஏன் சுயாட்சி அல்லது தீர்வு  ?.     பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்டுவதற்கு என்ன வழி உண்டு?

வடமாகாணத்தில்  ஒரு உறுப்பினர் அதிகம் என வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

இலங்கை தமிழ் மக்களுக்கு தந்தை செல்வா  சிறந்த தலைவராக இருந்தார்

 

6 hours ago, Kandiah57 said:

ஆயுதப் போராட்டத்திலும். நாங்கள் மிக சிறந்த தலைவரை கொண்டிருந்தோம் 

நன்று, இந்த இருவரைத்தவிர யாராவது ஒருவராவது இப்படிச் சிந்தித்தார்களா? இல்லையே. தந்தை செல்வா அவர்களின் அறவழிப்போர் தோற்றபோது வரலாற்றின் தன்னியல்பாக ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. அது கணிசமான வெற்றியைத் தொட்டு நின்றபோது இந்திய-மேற்குக் கூட்டணியின் நாசகார நிலைப்பாடு கரணியமாக வீழ்த்தப்பட்டதோடு, தமிழினம் சற்றேனும் மிதந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா, அது சூனியக்காரியின் தலைமை முதல் மோடி வரை இன அழிப்புககான உதவி தொடர்கிறது. சீனாவும் உதவிவருகிறது. இதிலே சீனா தமிழர்களை நோக்கி அசைவதொன்றும் சாதாரணமல்ல. ஒருவேளை கொழும்பு மேற்கோடு இறுக்கமாகக் கைகோர்த்தால் அதனை ஈடுகட்ட அவர்களுக்கும் ஆட்கள் தேவை. அதனால்தான் இறால் போடுகிறார்கள். தமிழ் மீன்கள் தந்திரமாக இறாலை மட்டும் கௌவுவதா இல்லை தூண்டிலில் மாட்டுவதா என்பதை நெறிப்படுத்த ஒரு சாதுரியம் மிக்க தலைமை தேவை. அதனையே தமிழினம் எதிர்பார்க்கிறது. மேற்குடனான கரம்கோர்ப்பென்பது இந்தியாவுக்கு அது சாதகமே. ஆனால், அப்படியொரு இறுக்கம் (யே.ஆர். காலத்பை;போல்) ஏற்படுமாயின் மேற்குத் தமிழரது பிரச்சினையை உறைநிலைக்கு தள்ளிவிடுவதோடு, இந்தியாவுக்கும் அல்லவா கொடுத்துவிடும். இவற்றுக்கால் சுழித்தோடும் சட்டநுணுக்கம் மற்றும் புவிசார் அரசியல் தெளிவுடன் சிந்திக்கும் தலைமையால் மட்டுமே சரியான திசைகாட்ட முடியும். 
நன்றி 
 

On 3/10/2022 at 23:39, குமாரசாமி said:

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

நன்றி 

சிந்தனைக்குரியது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நன்று, இந்த இருவரைத்தவிர யாராவது ஒருவராவது இப்படிச் சிந்தித்தார்களா? இல்லையே. தந்தை செல்வா அவர்களின் அறவழிப்போர் தோற்றபோது வரலாற்றின் தன்னியல்பாக ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. அது கணிசமான வெற்றியைத் தொட்டு நின்றபோது இந்திய-மேற்குக் கூட்டணியின் நாசகார நிலைப்பாடு கரணியமாக வீழ்த்தப்பட்டதோடு, தமிழினம் சற்றேனும் மிதந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா, அது சூனியக்காரியின் தலைமை முதல் மோடி வரை இன அழிப்புககான உதவி தொடர்கிறது. சீனாவும் உதவிவருகிறது. இதிலே சீனா தமிழர்களை நோக்கி அசைவதொன்றும் சாதாரணமல்ல. ஒருவேளை கொழும்பு மேற்கோடு இறுக்கமாகக் கைகோர்த்தால் அதனை ஈடுகட்ட அவர்களுக்கும் ஆட்கள் தேவை. அதனால்தான் இறால் போடுகிறார்கள். தமிழ் மீன்கள் தந்திரமாக இறாலை மட்டும் கௌவுவதா இல்லை தூண்டிலில் மாட்டுவதா என்பதை நெறிப்படுத்த ஒரு சாதுரியம் மிக்க தலைமை தேவை. அதனையே தமிழினம் எதிர்பார்க்கிறது. மேற்குடனான கரம்கோர்ப்பென்பது இந்தியாவுக்கு அது சாதகமே. ஆனால், அப்படியொரு இறுக்கம் (யே.ஆர். காலத்பை;போல்) ஏற்படுமாயின் மேற்குத் தமிழரது பிரச்சினையை உறைநிலைக்கு தள்ளிவிடுவதோடு, இந்தியாவுக்கும் அல்லவா கொடுத்துவிடும். இவற்றுக்கால் சுழித்தோடும் சட்டநுணுக்கம் மற்றும் புவிசார் அரசியல் தெளிவுடன் சிந்திக்கும் தலைமையால் மட்டுமே சரியான திசைகாட்ட முடியும். 
நன்றி 

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழினத்திற்கு அவசியம் தேவையானது சிறந்த தலைமை மட்டுமே. வேறெதுவும் தேவையில்லை.

சிறந்த தலைமையும் ஆளுமையும் இருந்தால் மற்றதெல்லாம் தானாக வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சிறந்த தலைமையும் ஆளுமையும் இருந்தால் மற்றதெல்லாம் தானாக வரும்.

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 


ஒரு கைத்துப்பாக்கியோடு தொடங்கி விமானப்படை வரையான வளர்முகத்தை கண்ட நாட்டில் இப்படியொரு  ஐயமா?

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.