Jump to content

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nochchi said:


ஒரு கைத்துப்பாக்கியோடு தொடங்கி விமானப்படை வரையான வளர்முகத்தை கண்ட நாட்டில் இப்படியொரு  ஐயமா?

ஆமாம் அதே நாட்டில் தான் தந்தை செல்வா. மிகக்கடுமையாக உழைத்தார். கண்டபலன் என்ன? அன்று தமிழரின் பலம் என்ன? இன்றைய பலம் என்ன  ? அன்று பல சந்தர்ப்பங்களில் ஆட்சி அமைக்க தமிழ் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது   இன்று தேவை இல்லை  எப்படி இருப்பினும் நீங்கள் எல்லாம் வரும் என்பதை விளங்கினால் நன்று. இயலாது விடில்  பிரச்சனையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 

நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள்.

அண்ணை பார்த்து மட்டுமல்ல அனுபவங்களையும் பெற்று உள்ளேன்  எங்கள் ஆயுதப் வழி போராட்டத்தலைவர் அந்த வழியை நம்பி உயிர் உள்ள வரை போராடி உள்ளார் நாங்கள் 100% ஆதரவு வழங்க இல்லை  அதைப் பற்றி கவலைப்படமால். கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்து போராடினார் நல்ல தலைவர் இல்லையா?   அவர் கற்று தந்தபாடம்  இனிமேல் இந்தமுறையில் போராடதீர்கள்  என்பது ஆகும்.  தந்தை செல்வாவும் அவ்வண்ணமே கொள்கையில் விட்டுகொடுப்பின்றி பதவிகள் சலுகைகள்........எதிர்பார்க்காமல் உயிர் பிரியும்” வரை போராடினார். அவர் கற்று தந்த பாடமும் இனி இவ்வழியில் போராடதீர்கள் என்பது தான்  நீங்கள் கேட்டது போல் சிறந்த தலைவர் தேவை தான்  அந்த தலைவர் வடக்கு கிழக்கு அரசியல் செய்யப்படாது மாறாக இலங்கை பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை பெற முயற்சிகள் செய்ய வேண்டும்  முழு இலங்கையிலும் அரசியல் செய்யவேண்டும்   மலையகம் உள்பட.  ....நாங்கள் இல்லாமல் இலங்கையில் எவராலும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலமையினை ஏற்படுத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் இதற்கு எங்கள் மக்கள் தொகை எண்ணிக்கை கூட வேண்டும்  ஒரு குழந்தை கூட பெறுவீர்களா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

அண்ணை பார்த்து மட்டுமல்ல அனுபவங்களையும் பெற்று உள்ளேன்  எங்கள் ஆயுதப் வழி போராட்டத்தலைவர் அந்த வழியை நம்பி உயிர் உள்ள வரை போராடி உள்ளார் நாங்கள் 100% ஆதரவு வழங்க இல்லை  அதைப் பற்றி கவலைப்படமால். கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்து போராடினார் நல்ல தலைவர் இல்லையா?   அவர் கற்று தந்தபாடம்  இனிமேல் இந்தமுறையில் போராடதீர்கள்  என்பது ஆகும்.  தந்தை செல்வாவும் அவ்வண்ணமே கொள்கையில் விட்டுகொடுப்பின்றி பதவிகள் சலுகைகள்........எதிர்பார்க்காமல் உயிர் பிரியும்” வரை போராடினார். அவர் கற்று தந்த பாடமும் இனி இவ்வழியில் போராடதீர்கள் என்பது தான்  நீங்கள் கேட்டது போல் சிறந்த தலைவர் தேவை தான்  அந்த தலைவர் வடக்கு கிழக்கு அரசியல் செய்யப்படாது மாறாக இலங்கை பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை பெற முயற்சிகள் செய்ய வேண்டும்  முழு இலங்கையிலும் அரசியல் செய்யவேண்டும்   மலையகம் உள்பட.  ....நாங்கள் இல்லாமல் இலங்கையில் எவராலும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலமையினை ஏற்படுத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் இதற்கு எங்கள் மக்கள் தொகை எண்ணிக்கை கூட வேண்டும்  ஒரு குழந்தை கூட பெறுவீர்களா?😂

கடந்த தேர்தலை தவிர்த்து ஓரளவிற்கு ஏனைய தேர்தல்களின் வெற்றியை தமிழ் வாக்குகளே தீர்மானித்தது.
அது மட்டுமல்லாமல் பெரும்பான்மை பலத்துடன்  பாராளுமன்றத்தில் தமிழ்கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளது.
எனவே தமிழ் மக்கள் தமிழர் கட்சிகளுக்கு  வாக்களித்து பலத்துடனேயே பாராளுமன்றம் அனுப்பினார்கள். பாராளுமன்றம் போன எமது தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்திற்கு சோரம் போனதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

அதனால் தான் சொல்கிறேன் ஈழத்தமிழினத்திற்கு அப்பளுக்கற்ற ஒரு அரசியல் தலைவன் வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை அக்கிரமங்களையும் செய்து விட்டு கனவானாய் சர்வதேசத்தை ஏமாற்றி தன் காரியங்களை பெற சிங்களத்தால் முடியுமென்றால், ஏன் நம்மால் முடியவில்லை? அன்று சிங்களத்துக்காக வக்காலத்து பேசி சிங்களத்தை ஜெயிக்க வைக்க தமிழனால் முடிந்ததென்றால், ஏன் தம் பிரச்சனையை தீர்க்க தமிழனால் முடியவில்லை? கலவரம் வெடிக்கும் என்று கூறி நமது வளங்களை அபகரிக்க முடியுமென்றால், ஏன் நம்மால் முடியவில்லை? காரணம் நமது தலைமைகள் காலத்தை வீணடித்து, பிரச்சனையை வளரவிட்டு, உள்நாட்டுக்குளே பேசித்தீர்ப்போம் என்று பேசுவதும், எழுதுவதும், கிழித்தெறிவதும், வெளிநடப்பு செய்வதும் என காலத்தை வீணடித்து, பிரச்சனையை அவனே கையாளுவதற்கு ஒத்தாசை வழங்கி, அவன் விருட்ஷமான பின் இளைய தலைமுறையை பலி கொடுத்து, கையறு நிலையில் கையை விரித்துகொண்டு நிக்கிறார்கள். பிரச்சனையை தீர்க்க முடியாது என்றால்  எதற்கு அரசியல்? பொய்யான வாக்குறுதிகள்,  தேர்தல்? விலக வேண்டியது தானே? தேர்தலை பகிஸ்கரித்து  சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியிருக்கலாமே? போர் முடியும் வரை இவர்கள் சர்வதேசத்துடன் பேசினார்களா? இன்றுவரை உண்மையாக நமது பிரச்னையை எடுத்துரைக்கிறார்களா? இனமே அழிந்து விட்டது, ஒரு நாட்டுக்குள் பிரிக்கப்படாத ஆட்சி முறை வேண்டும், அவனோடுதான் குடும்பம் நடத்துவோம் என்று அடம்பிடிக்கிறார்கள். எங்களை ஏற்க மறுக்கிறார்கள், உடைமைகளை பறிக்கிறார்கள், அழிக்கிறார்கள் இவர்களோடு நாம் எப்படி சேர்ந்து வாழ முடியும் என்று எங்காவது வாதாடியிருக்கிறார்களா? பணம், பதவி, புகழ் இவற்றை கடந்து சிந்திக்க முடியவில்லையே நம்மால்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.