Jump to content

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nochchi said:


ஒரு கைத்துப்பாக்கியோடு தொடங்கி விமானப்படை வரையான வளர்முகத்தை கண்ட நாட்டில் இப்படியொரு  ஐயமா?

ஆமாம் அதே நாட்டில் தான் தந்தை செல்வா. மிகக்கடுமையாக உழைத்தார். கண்டபலன் என்ன? அன்று தமிழரின் பலம் என்ன? இன்றைய பலம் என்ன  ? அன்று பல சந்தர்ப்பங்களில் ஆட்சி அமைக்க தமிழ் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது   இன்று தேவை இல்லை  எப்படி இருப்பினும் நீங்கள் எல்லாம் வரும் என்பதை விளங்கினால் நன்று. இயலாது விடில்  பிரச்சனையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 

நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள்.

அண்ணை பார்த்து மட்டுமல்ல அனுபவங்களையும் பெற்று உள்ளேன்  எங்கள் ஆயுதப் வழி போராட்டத்தலைவர் அந்த வழியை நம்பி உயிர் உள்ள வரை போராடி உள்ளார் நாங்கள் 100% ஆதரவு வழங்க இல்லை  அதைப் பற்றி கவலைப்படமால். கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்து போராடினார் நல்ல தலைவர் இல்லையா?   அவர் கற்று தந்தபாடம்  இனிமேல் இந்தமுறையில் போராடதீர்கள்  என்பது ஆகும்.  தந்தை செல்வாவும் அவ்வண்ணமே கொள்கையில் விட்டுகொடுப்பின்றி பதவிகள் சலுகைகள்........எதிர்பார்க்காமல் உயிர் பிரியும்” வரை போராடினார். அவர் கற்று தந்த பாடமும் இனி இவ்வழியில் போராடதீர்கள் என்பது தான்  நீங்கள் கேட்டது போல் சிறந்த தலைவர் தேவை தான்  அந்த தலைவர் வடக்கு கிழக்கு அரசியல் செய்யப்படாது மாறாக இலங்கை பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை பெற முயற்சிகள் செய்ய வேண்டும்  முழு இலங்கையிலும் அரசியல் செய்யவேண்டும்   மலையகம் உள்பட.  ....நாங்கள் இல்லாமல் இலங்கையில் எவராலும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலமையினை ஏற்படுத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் இதற்கு எங்கள் மக்கள் தொகை எண்ணிக்கை கூட வேண்டும்  ஒரு குழந்தை கூட பெறுவீர்களா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

அண்ணை பார்த்து மட்டுமல்ல அனுபவங்களையும் பெற்று உள்ளேன்  எங்கள் ஆயுதப் வழி போராட்டத்தலைவர் அந்த வழியை நம்பி உயிர் உள்ள வரை போராடி உள்ளார் நாங்கள் 100% ஆதரவு வழங்க இல்லை  அதைப் பற்றி கவலைப்படமால். கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்து போராடினார் நல்ல தலைவர் இல்லையா?   அவர் கற்று தந்தபாடம்  இனிமேல் இந்தமுறையில் போராடதீர்கள்  என்பது ஆகும்.  தந்தை செல்வாவும் அவ்வண்ணமே கொள்கையில் விட்டுகொடுப்பின்றி பதவிகள் சலுகைகள்........எதிர்பார்க்காமல் உயிர் பிரியும்” வரை போராடினார். அவர் கற்று தந்த பாடமும் இனி இவ்வழியில் போராடதீர்கள் என்பது தான்  நீங்கள் கேட்டது போல் சிறந்த தலைவர் தேவை தான்  அந்த தலைவர் வடக்கு கிழக்கு அரசியல் செய்யப்படாது மாறாக இலங்கை பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை பெற முயற்சிகள் செய்ய வேண்டும்  முழு இலங்கையிலும் அரசியல் செய்யவேண்டும்   மலையகம் உள்பட.  ....நாங்கள் இல்லாமல் இலங்கையில் எவராலும் அரசாங்கம் அமைக்க முடியாது என்ற நிலமையினை ஏற்படுத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் இதற்கு எங்கள் மக்கள் தொகை எண்ணிக்கை கூட வேண்டும்  ஒரு குழந்தை கூட பெறுவீர்களா?😂

கடந்த தேர்தலை தவிர்த்து ஓரளவிற்கு ஏனைய தேர்தல்களின் வெற்றியை தமிழ் வாக்குகளே தீர்மானித்தது.
அது மட்டுமல்லாமல் பெரும்பான்மை பலத்துடன்  பாராளுமன்றத்தில் தமிழ்கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளது.
எனவே தமிழ் மக்கள் தமிழர் கட்சிகளுக்கு  வாக்களித்து பலத்துடனேயே பாராளுமன்றம் அனுப்பினார்கள். பாராளுமன்றம் போன எமது தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்திற்கு சோரம் போனதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

அதனால் தான் சொல்கிறேன் ஈழத்தமிழினத்திற்கு அப்பளுக்கற்ற ஒரு அரசியல் தலைவன் வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை அக்கிரமங்களையும் செய்து விட்டு கனவானாய் சர்வதேசத்தை ஏமாற்றி தன் காரியங்களை பெற சிங்களத்தால் முடியுமென்றால், ஏன் நம்மால் முடியவில்லை? அன்று சிங்களத்துக்காக வக்காலத்து பேசி சிங்களத்தை ஜெயிக்க வைக்க தமிழனால் முடிந்ததென்றால், ஏன் தம் பிரச்சனையை தீர்க்க தமிழனால் முடியவில்லை? கலவரம் வெடிக்கும் என்று கூறி நமது வளங்களை அபகரிக்க முடியுமென்றால், ஏன் நம்மால் முடியவில்லை? காரணம் நமது தலைமைகள் காலத்தை வீணடித்து, பிரச்சனையை வளரவிட்டு, உள்நாட்டுக்குளே பேசித்தீர்ப்போம் என்று பேசுவதும், எழுதுவதும், கிழித்தெறிவதும், வெளிநடப்பு செய்வதும் என காலத்தை வீணடித்து, பிரச்சனையை அவனே கையாளுவதற்கு ஒத்தாசை வழங்கி, அவன் விருட்ஷமான பின் இளைய தலைமுறையை பலி கொடுத்து, கையறு நிலையில் கையை விரித்துகொண்டு நிக்கிறார்கள். பிரச்சனையை தீர்க்க முடியாது என்றால்  எதற்கு அரசியல்? பொய்யான வாக்குறுதிகள்,  தேர்தல்? விலக வேண்டியது தானே? தேர்தலை பகிஸ்கரித்து  சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியிருக்கலாமே? போர் முடியும் வரை இவர்கள் சர்வதேசத்துடன் பேசினார்களா? இன்றுவரை உண்மையாக நமது பிரச்னையை எடுத்துரைக்கிறார்களா? இனமே அழிந்து விட்டது, ஒரு நாட்டுக்குள் பிரிக்கப்படாத ஆட்சி முறை வேண்டும், அவனோடுதான் குடும்பம் நடத்துவோம் என்று அடம்பிடிக்கிறார்கள். எங்களை ஏற்க மறுக்கிறார்கள், உடைமைகளை பறிக்கிறார்கள், அழிக்கிறார்கள் இவர்களோடு நாம் எப்படி சேர்ந்து வாழ முடியும் என்று எங்காவது வாதாடியிருக்கிறார்களா? பணம், பதவி, புகழ் இவற்றை கடந்து சிந்திக்க முடியவில்லையே நம்மால்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.