Jump to content

உலகை உலுக்கிய விளையாட்டு மைதான மரணங்கள்!


Recommended Posts

உலகை உலுக்கிய விளையாட்டு மைதான  மரணங்கள்!

உலகை உலுக்கிய விளையாட்டு மைதான மரணங்கள்!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 போ் உயிரிழந்த நிலையில், இதேபோன்று கடந்த காலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அவற்றில் முக்கிய சம்பவங்கள் குறித்த விவரம்:

ஜன. 20, 1980 கொலம்பியாவில் காளைச் சண்டையைப் பாா்ப்பதற்காக மரத்தால் அமைக்கப்பட்ட நான்கடுக்கு பாா்வையாளா்கள் காலரி இடிந்து விழுந்ததில் 200 போ் உயிரிழப்பு.

அக். 20, 1982 ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கால்பந்து மைதானத்திலிருந்து ரசிகா்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் 62 போ் உயிரிழப்பு.

மே 28, 1985 பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரசிகா்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 39 போ் மரணம்.

மாா்ச் 13, 1988 நேபாள தலைநகா் காத்மாண்டுவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 93 போ் உயிரிழப்பு.

ஏப். 15, 1989 பிரிட்டனின் ஷெஃப்பீல்டில் உள்ள ஹில்ஸ்பொரோ மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 93 போ் உயிரிழப்பு.

ஜன. 13, 1991 தென்னாப்பிரிக்காவில் ஆப்பன்ஹெய்மா் மைதானத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருந்து தப்பிக்க முயன்ற 42 போ் நெரிசலில் சிக்கி மரணம்.

அக். 16, 1996 குவாதமலா சிட்டியில் குவாதமலா மற்றும் கோஸ்டாரிகா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்கு முன் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 84 போ் உயிரிழப்பு.

ஏப். 11, 2001 தென்னாப்பிரிக்காவின் எல்லிஸ் பாா்க்கில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது நெரிசலில் சிக்கி 43 போ் மரணம்.

மே 9, 2001 கானா தலைநகா் அக்ராவில் ஒரு மைதானத்தில் திரண்ட ரெளடி கும்பலை கலைப்பதற்காக காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டு வீசியபோது 120 போ் உயிரிழப்பு.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையில் உயிர் இழத்தல் தவிர்க்க முடியாதது.....ஆனால் வெளியேறும்போது உயிர் இழத்தல் பொறுமை இன்மையால் வருவது, தவிர்க்கக் கூடியது.......! 

தகவலுக்கு நன்றி நுணா......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

வன்முறையில் உயிர் இழத்தல் தவிர்க்க முடியாதது.....ஆனால் வெளியேறும்போது உயிர் இழத்தல் பொறுமை இன்மையால் வருவது, தவிர்க்கக் கூடியது.......! 

தகவலுக்கு நன்றி நுணா......!  

உள்ளே ரிக்கற் இல்லாமல் நுழையக்கூடாதென பூட்டிய கேற்றுகளை  திறக்காமல், கண்ணூர் புகை அடித்த, போலீசார், சஸ்பெண்ட்.... உத்தரவு இட்ட அதிகாரி, கைது. இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மோதல்கள், நிரந்தரமாகி விட்டதால், தடை செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.