Jump to content

ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!

ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!

ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 07:29 மணிக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வெளியான எச்சரிக்கையில், ஹொக்கைடோ தீவில் உள்ள மக்களுக்கு விமானம் மற்றும் ரயில் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

வடகிழக்கு ஹொக்கைடோ மற்றும் அமோரி பகுதிகளில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

ஜப்பானில் இருந்து சுமார் 3,000 கிமீ (1,860 மைல்) தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழுந்ததாகவும், இது தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய கடலோரக் காவல்படை மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களால் கண்டறியப்பட்ட ஏவுகணை, 4,500 முதல் 4,600 கிமீ (2,800-2,850 மைல்கள்) வரை அதிகபட்சமாக 1,000 கிமீ (620 மைல்கள்) உயரத்திற்கு பறந்ததாக தெரிவித்தனர்.

சீனாவுடனான எல்லைக்கு அருகே நாட்டின் வடபகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆயுதம், பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு சுமார் 22 நிமிடங்கள் வானில் பறந்தது.

ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்த நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்து, ஏவுதலை வன்முறை நடத்தை என்று விபரித்தார். மேலும் ஜப்பானிய அரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

எந்தவொரு முன் எச்சரிக்கையும் ஆலோசனையும் இன்றி மற்ற நாடுகளை நோக்கி ஏவுகணைகளை பறக்கவிடுவது சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது.

கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் மீது வடகொரியா ஏவுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1302725

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!

ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஏன் அமெரிக்கா சும்மா பார்த்துக்கொண்டிருக்கு? நேட்டோவை விட்டு வட கொரியாவுக்கு அடிக்கலாம் தானே?
அமெரிக்கா உலகத்திலை நடக்கிற எல்லாத்தையும் சற்றலைட் மூலமாக கவனிச்சுக்கொண்டிருக்கும் எண்டு சொல்லுறாங்கள். அப்ப இதையும் பாத்திருக்கும் தானே?
ஏன் எதிர்ப்பு ஆயுதம் ஏவி கொரியா விட்டதை திருப்பி அடிக்கேல்லை????

என்ன நான் சொல்லுறது கேக்குதோ? 😀

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்யமாட்டார்கள்....... ஜப்பானுக்கும் ஆயுதபூசை (வியாபாரம்) செய்ய கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிட மாட்டார்கள் .........!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" ஜப்பானின் ஆழுகைக்கு உட்பட்ட பகுதியின் மேலாக ஏவுகணை ஏவப்பட்டது. ஜப்பானின் மீது அல்ல. 

"A short while ago, North Korea launched a ballistic missile that flew over Japan and is believed to have landed in the Pacific Ocean,”Prime Minister Fumio Kashida’s office said in a statement, adding “This is an outrageous act following the recent repeated ballistic missile launches, and I strongly condemn it.”

😏

Edited by Kapithan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.