Jump to content

உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

ஐ நாவும் அனைத்து சமாதான இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு பின் இனி வேண்டாம் யுத்தம் உலகில் என்று தானே ஆரம்பித்தார்கள். அதன் பின் எத்தனை யுத்தம் உலகில் நடந்தன, நடக்கின்றன, எத்தனை மனிதர் இது வரை இறந்தனர், எத்தனை குழந்தைகள் வாழ்வை இழந்தனர், எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டன. எத்தனை ஆக்கிரமிப்பு யுத்தங்கழும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களும் உலகில் நடந்தன. 

இன்று ருசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக இதை தீர்க்க முடியாமல் அவர் அவர் பூகோள அரசியல் நலன் சார்ந்து பெரும் ஆயத மோதலாக வெடித்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பின் ஐரோப்பாவுக்கு பெரும் சவால் மிக்கதாகவும் அவர்கள் பொருளாதாராத்தையே அசைக்க கூடியதோர் யுத்தமாக மாறி இருக்கிறது. ரோமானிய பேரரசின் தத்துஞானி சீசரோ(Cicero) கூறியதுபோல் யுத்த காலங்களில் சட்டமும் ஒழுங்கும் அமைதியாகவே இருந்து விடுகின்றன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின் இன்று ஐரோப்பா பெரும் யுத்தம் ஒன்றை எதிர் நோக்கியுள்ளது. இன்று நாம் புதிய ஒரு பனிப் போரையும் அரசியல் பொருளாதார சித்தாந்த ரீதியாகவும் அத்தோடு ஏழை பணக்கார நாடுகளாகவும் முகாம்களாக பிரிக்கப்பட்ட உலகையும் இன்னும் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி உலகம் பயணிப்பதையும் பார்க்கிறோம்.

Harvard University அரசியல் பேராசிரியர் Joseph nye என்ற சர்வதேச அரசியல் ஆய்வாளர் சொல்லுவது போல் உலகம் இன்று பல முகாம்களாக பிரிக்கப்பட்டு ஆயத அதிகார அரசியல் பொருளாதாரப் போட்டியாக மாறி இருக்கின்றது. இந்தப் போட்டி நிலைமையும் யுத்த நிலைமையையும் தணிக்க வேண்டுமானால் கடினமான ஒரு பாதையை (Hard power) தெரியாமல் ஒரு மென் வலு சக்தி (Soft power) ஊடக உலக மோதல்களை தணிக்க முடியும் என தான் எழுதிய (Soft power) என்னும் நூலில் விபரமாக முன் வைக்கிறார்.

ஏழை நாடுகளின் குழந்தைகள் இறந்தால் எவரும் கேட்பதற்கு இல்லை ஆனால் அதிகாரமும் பணமும் உள்ள நாடுகளின் குழந்தைகள் இறந்தால் அனைவரும் கேட்கிறார்கள். யுத்தற்திற்காகவும்  ஆயுதம் செய்வதும் விற்பதுமாகவும் எத்தனை கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.ஆனால் இன்று உலகில் எத்தனை வறிய நாடுகள் இருக்கின்றன. எத்தனை குழந்தைகள் இன்று உலகில் உணவு இல்லாமலும் ஒரு வேளை உணவு கிடைக்காமலும் இறந்து போகிறார்கள். எல்லோருக்கும் எல்லாமே சமத்துவமாய் கிடைப்பதில்லை இன்னும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாக அதிகார வர்க்கத்தின் நலனோடு உருளுதே உலகம். ஐ நா வாக இருந்தால் என்ன ஆயிரம் சமாதானம் பேசும் ஸ்தாபனங்களாக இருந்தால் என்ன எல்லாமே அதிகாரமுள்ள பணபலமும் ஆயுத பலமும் கொண்ட நாடுகளில் நிகழ்ச்சி நிரலிலேயே செயல்படுகின்றன. 

புவிசார் அரசியல் என்பது இன்று பெரும் போட்டி அரசியல் களமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரமும் கூட இன்று ஓர் சவால் மிகுந்ததாகவே காணப்படுகிறது. பெரும் தனி நலன் சார்ந்து அரசியல் பொருளாதர ரீதியாக உலகம் பல முகாம்களாக பிரிக்கப் பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தற்திற்காக பெரும் கோடி பணத்தை செலவு செய்கிறார்கள் இதனால் பொருளாதார ரீதியாக பணவீக்கம் கூடி உலக மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமக்கிறார்கள். ஏழை நாடுகள் மேலும் வறுமைக்கோட்டுக்குள் கீழ் தள்ளப்பட்டுள்ளன. பல கோடி ஏழை மக்கள் இன்று ஒரு வேளை உணவுக்கே திண்றாடும் நிலை தோன்றியுள்ளது. கொரோனா வருகைக்கு பின் ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவின் பின் இன்றும் நிலைமை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகார நலனும் அரசியல் பொருளாதார சுயநலனும் ஆயுத விற்பனையும் தொடரும் வரையில் உலக அமைதி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. ஐ நா கூட அவர்களின் கைப் பொம்மை ஆகிவிட்டது. எல்லாமே சும்மா பேச்சுக்கு தான் மனித உரிமையும் ஜனநாயகமும் என்றாகிப் போய் விட்டது. எங்குதான் இருக்கிறது அறமும் தர்மமும். சரித்திரங்களில் இருந்து மனிதர் பாடத்தை கற்க வேண்டும் இரண்டாம் உலகப் போரில் இருந்து பாடத்தை அனுபவத்தை உலகம் இன்னும் படிக்கவில்லையானால் இன்னும் இருண்ட யுகமாகவே உலகம் இருக்கும். உலக சமாதானம் என்பது வெறும் பேச்சாகத் தான் இருக்க முடியுமே தவிர இது சாத்தியமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. யுத்தத்தை ஆரம்பிப்பதும் கடினம் இதை முடிவுக்கு கொண்டு வருவதும் கடினம்.

In times of war, the law falls silent”
-Cicero

பா .உதயன் ✍️


 

 

 

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2022 at 18:53, uthayakumar said:

உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

அருமையான ஆய்வுக்கட்டுரை.👍 

இந்த யுத்தம் உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா என்ற தொனியில் நடக்கின்றது.


நியாயம் என்பது எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். இது மேற்குலக நாடுகளிடம் அறவே இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2022 at 00:43, குமாரசாமி said:

அருமையான ஆய்வுக்கட்டுரை.👍 

இந்த யுத்தம் உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா என்ற தொனியில் நடக்கின்றது.


நியாயம் என்பது எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். இது மேற்குலக நாடுகளிடம் அறவே இல்லை.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் 🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2022 at 18:53, uthayakumar said:


 உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்

ஐ நாவும் அனைத்து சமாதான இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு பின் இனி வேண்டாம் யுத்தம் உலகில் என்று தானே ஆரம்பித்தார்கள். அதன் பின் எத்தனை யுத்தம் உலகில் நடந்தன, நடக்கின்றன, எத்தனை மனிதர் இது வரை இறந்தனர், எத்தனை குழந்தைகள் வாழ்வை இழந்தனர், எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டன. எத்தனை ஆக்கிரமிப்பு யுத்தங்கழும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களும் உலகில் நடந்தன. 

இன்று ருசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக இதை தீர்க்க முடியாமல் அவர் அவர் பூகோள அரசியல் நலன் சார்ந்து பெரும் ஆயத மோதலாக வெடித்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பின் ஐரோப்பாவுக்கு பெரும் சவால் மிக்கதாகவும் அவர்கள் பொருளாதாராத்தையே அசைக்க கூடியதோர் யுத்தமாக மாறி இருக்கிறது. ரோமானிய பேரரசின் தத்துஞானி சீசரோ(Cicero) கூறியதுபோல் யுத்த காலங்களில் சட்டமும் ஒழுங்கும் அமைதியாகவே இருந்து விடுகின்றன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின் இன்று ஐரோப்பா பெரும் யுத்தம் ஒன்றை எதிர் நோக்கியுள்ளது. இன்று நாம் புதிய ஒரு பனிப் போரையும் அரசியல் பொருளாதார சித்தாந்த ரீதியாகவும் அத்தோடு ஏழை பணக்கார நாடுகளாகவும் முகாம்களாக பிரிக்கப்பட்ட உலகையும் இன்னும் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி உலகம் பயணிப்பதையும் பார்க்கிறோம்.

Harvard University அரசியல் பேராசிரியர் Joseph nye என்ற சர்வதேச அரசியல் ஆய்வாளர் சொல்லுவது போல் உலகம் இன்று பல முகாம்களாக பிரிக்கப்பட்டு ஆயத அதிகார அரசியல் பொருளாதாரப் போட்டியாக மாறி இருக்கின்றது. இந்தப் போட்டி நிலைமையும் யுத்த நிலைமையையும் தணிக்க வேண்டுமானால் கடினமான ஒரு பாதையை (Hard power) தெரியாமல் ஒரு மென் வலு சக்தி (Soft power) ஊடக உலக மோதல்களை தணிக்க முடியும் என தான் எழுதிய (Soft power) என்னும் நூலில் விபரமாக முன் வைக்கிறார்.

ஏழை நாடுகளின் குழந்தைகள் இறந்தால் எவரும் கேட்பதற்கு இல்லை ஆனால் அதிகாரமும் பணமும் உள்ள நாடுகளின் குழந்தைகள் இறந்தால் அனைவரும் கேட்கிறார்கள். யுத்தற்திற்காகவும்  ஆயுதம் செய்வதும் விற்பதுமாகவும் எத்தனை கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.ஆனால் இன்று உலகில் எத்தனை வறிய நாடுகள் இருக்கின்றன. எத்தனை குழந்தைகள் இன்று உலகில் உணவு இல்லாமலும் ஒரு வேளை உணவு கிடைக்காமலும் இறந்து போகிறார்கள். எல்லோருக்கும் எல்லாமே சமத்துவமாய் கிடைப்பதில்லை இன்னும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாக அதிகார வர்க்கத்தின் நலனோடு உருளுதே உலகம். ஐ நா வாக இருந்தால் என்ன ஆயிரம் சமாதானம் பேசும் ஸ்தாபனங்களாக இருந்தால் என்ன எல்லாமே அதிகாரமுள்ள பணபலமும் ஆயுத பலமும் கொண்ட நாடுகளில் நிகழ்ச்சி நிரலிலேயே செயல்படுகின்றன. 

புவிசார் அரசியல் என்பது இன்று பெரும் போட்டி அரசியல் களமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரமும் கூட இன்று ஓர் சவால் மிகுந்ததாகவே காணப்படுகிறது. பெரும் தனி நலன் சார்ந்து அரசியல் பொருளாதர ரீதியாக உலகம் பல முகாம்களாக பிரிக்கப் பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தற்திற்காக பெரும் கோடி பணத்தை செலவு செய்கிறார்கள் இதனால் பொருளாதார ரீதியாக பணவீக்கம் கூடி உலக மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமக்கிறார்கள். ஏழை நாடுகள் மேலும் வறுமைக்கோட்டுக்குள் கீழ் தள்ளப்பட்டுள்ளன. பல கோடி ஏழை மக்கள் இன்று ஒரு வேளை உணவுக்கே திண்றாடும் நிலை தோன்றியுள்ளது. கொரோனா வருகைக்கு பின் ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவின் பின் இன்றும் நிலைமை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகார நலனும் அரசியல் பொருளாதார சுயநலனும் ஆயுத விற்பனையும் தொடரும் வரையில் உலக அமைதி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. ஐ நா கூட அவர்களின் கைப் பொம்மை ஆகிவிட்டது. எல்லாமே சும்மா பேச்சுக்கு தான் மனித உரிமையும் ஜனநாயகமும் என்றாகிப் போய் விட்டது. எங்குதான் இருக்கிறது அறமும் தர்மமும். சரித்திரங்களில் இருந்து மனிதர் பாடத்தை கற்க வேண்டும் இரண்டாம் உலகப் போரில் இருந்து பாடத்தை அனுபவத்தை உலகம் இன்னும் படிக்கவில்லையானால் இன்னும் இருண்ட யுகமாகவே உலகம் இருக்கும். உலக சமாதானம் என்பது வெறும் பேச்சாகத் தான் இருக்க முடியுமே தவிர இது சாத்தியமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. யுத்தத்தை ஆரம்பிப்பதும் கடினம் இதை முடிவுக்கு கொண்டு வருவதும் கடினம்.

In times of war, the law falls silent”
-Cicero

பா .உதயன் ✍️

ஐ.நா. என்ற அமைப்பே... கேலிக்  கூத்தாகி விட்டது. 
எமது முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டிருந்த போது...
அதனை நேரடி நிகழ்வாக... ஐ.நா. தனது செய்மதி மூலம் கண்காணித்துக் கொண்டிருந்ததை...
"நியூயோர்க் ரைம்ஸ்" பத்திரிகை  அம்பலப் படுத்தியது.
அப்படி இருந்தும்... இன்னும், 13 வருடமாக.. 
போர்க் குற்றங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்களாம், 

பாதிக்கப் பட்ட இனத்துக்கு... 
இவர்களால் நீதியை  பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால்... 
இந்த அமைப்பு தேவையற்றது.

கட்டுரைக்கு நன்றி உதயன்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
    • 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,  வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.