Jump to content

#இரக்கமற்ற_இரும்பு_மனிதன்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சனத் ஜெயசூர்யவின் பிறந்த நாளையொட்டி பல கட்டுரைகளைப் படித்தேன். அதில் ரொம்பவும் பிடித்திருந்தது விகடனின் இந்தக் கட்டுரை. மீண்டுமொரு முறை அந்தக் காலத்துக்கே சென்றதான உணர்வு. வாசித்துப் பாருங்கள் சனத்தின் இரக்கமில்லா தன்மைகளை…
சின்ன வயதில் இருந்தே செகண்ட் ஹேண்ட் Pad, ஹெல்மெட்களை அணிந்து விளையாடியவர் என்பதால் தனக்கு செட் ஆகாத பேட்களையும், ஹெல்மெட்டையும் ஒவ்வொரு பந்தையும் அடிக்கும் முன் அட்ஜஸ்ட் செய்வது ஜெயசூர்யாவின் வழக்கமாகியிருக்கிறது.
மார்ச் 2, 1996... அது ஒரு சனிக்கிழமை. உலகக்கோப்பையில் இந்தியா விளையாடிய நான்காவது போட்டி. இதற்கு முன்பான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்திருந்தது. ''இலங்கையை ஜெயிக்கிறதெல்லாம் இந்தியாவுக்கு சப்ப மேட்டர். அவங்கலாம் ஒரு டீமே இல்ல. ஈஸியா ஜெயிச்சுடும்'' என என் பக்கத்துவீட்டு நண்பனின் அப்பா வெள்ளிக்கிழமையே வெற்றியைக் கணித்து, சனிக்கிழமை மதியத்துக்கு பைலட் தியேட்டரில் எல்லோருக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்துவிட்டார்.
பனி மூட்டத்துக்கு இடையே டெல்லியில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியதாக நினைவு. கென்யாவுக்கு எதிராக சென்சுரி அடித்த சச்சின் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 70 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். அதனால் இலங்கைக்கு எதிராக ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால் சூப்பராக இருக்குமே என எதிர்பார்த்து டிவி முன் உட்கார்ந்த சச்சின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருந்தது. பிரமாதமான இன்னிங்ஸ் ஆடினார் சச்சின். ஒரு ஷாட்கூட மிஸ் டைமிங் ஷாட் கிடையாது. அவரும், அசாருதினும் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டார்கள்.
சச்சின் சென்சுரி மட்டுமல்ல அப்போதைய அதிகபட்ச ஸ்கோராக 137 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் ரன் அவுட்தான் ஆனாரே தவிர இலங்கையின் பெளலர்கள் யாரும் அவர் விக்கெட்டை எடுக்கவில்லை. இந்தியா 50 ஓவர்களில் 271 ரன் சேர்த்தது. அப்போதைய காலகட்டத்தில் 250 ரன்களுக்கு மேல் அடித்தாலே வெற்றிபெற்றுவிடலாம் என்பதால் இந்தியாவின் வெற்றி ஓரளவுக்கு உறுதியானதுபோல இருந்தது. இடையில் மழைவேறு வந்ததால் இலங்கையின் இன்னிங்ஸ் தொடங்க கொஞ்சம் தாமதமாக, படத்துக்குக் கிளம்பும் வேலைகளில் இறங்கினோம். தியேட்டருக்கு பஸ் பிடிக்க சிலமணித்துளிகள் இருந்தபோது இலங்கையின் இன்னிங்ஸ் ஆரம்பித்தது. சனத் ஜெயசூர்யாவும், விக்கெட் கீப்பர் ரோமேஷ் கலுவித்தரானாவும் ஓப்பனிங் இறங்கினார்கள். மனோஜ் பிரபாகர் பெளலிங். 'இலங்கை வீரர்கள் இப்படியெல்லாமா ஆடுவார்கள்' என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள்.
அப்போதெல்லாம் முதல் ஓவரில் பவுண்டரிகள் அடிப்பது என்பது பேரதிசயம். முதல் ஓவர்களில் எல்லாம் கமன்டேட்டர்கள் பொதுவாக 'வெல் லெஃப்ட்' என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதுவும் முதல் 10 ஓவர்கள் எல்லாம் ஆமை வேகத்தில்தான் நகரும். 10 ஓவரில் 40 ரன் வந்தாலே பெரிய விஷயம்தான். ஆனால், அன்று இலங்கையின் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே பவுண்டரிகள் பறந்தன. மனோஜ் பிரபாகரின் முதல் ஓவரில் மட்டும் 11 ரன்கள். அடுத்த ஶ்ரீநாத் ஓவரில் 9 ரன்கள். மூன்றாவது ஓவர் மீண்டும் மனோஜ் பிரபாகர். இந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் அடித்தார் ஜெயசூர்யா. 3-வது ஓவரிலேயே இலங்கையின் ஸ்கோர் 42. ஒருபக்கம் ஜெயசூர்யா அடிக்க, இன்னொரு பக்கம் கலுவித்தரனாவும் பவுண்டரிகள் அடித்துக்கொண்டிருந்தார். நான்காவது ஓவரிலேயே 50 ரன்களைத் தொட்டுவிட்டார்கள். பேரதிர்ச்சியாக இருந்தது. ஆனால், நல்லவேலையாக 5-வது ஓவரில், வெங்கடேஷ் பிரசாத்தின் பெளலிங்கில் கலுவித்தரானா 26 ரன்களில் அவுட் ஆக, நாங்கள் கிளம்பி படத்துக்குப்போனோம். இந்தியா வெற்றிபெற்றதா, இல்லை தோல்வியடைந்ததா எனத் தெரியாது. படம் முடிந்து வெளியே வந்ததும் எதிரில் வந்த பலரிடமும் ''மேட்ச் எனனாச்சு'' எனக்கேட்க, ஒரே ஒரு அண்ணன் மட்டும் தோளில் தட்டி, ''இந்தியா தோத்துடுச்சுப்பா... மேட்ச்லாம் பார்க்குறதைவிட்டுட்டு நல்லா படிங்க'' என அட்வைஸ் செய்துவிட்டுப் போனார்.
அடுத்தநாள் ஹைலைட்ஸில்தான் ஜெயசூர்யாவின் மிரட்டல் இன்னிங்ஸைப் பார்க்கமுடிந்தது. முதல் 2 ஓவர்களில் ஜெயசூர்யா வெளுத்ததால் அடுத்த ஸ்பெல்லில் வேகப்பந்து வீச்சாளரான மனோஜ் பிரபாகர் ஆஃப் ஸ்பின் எல்லாம் போட்ட விநோதங்கள் நடந்திருக்கின்றன. 2 சிக்ஸர், 9 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் அடித்திருக்கிறார் ஜெயசூர்யா. இந்தியாவுக்கு எதிரான ஜெயசூர்யாவின் முதல் தாக்குதல் அதுதான்... சனத் ஜெயசூர்யா என்கிற பெயர் ஆழ்மனதில் பதிந்தது. மனோஜ் பிரபாகரின் கரியர் அன்றோடு முடிந்தது.
இடது கை பேட்ஸ்மேனான ஜெயசூர்யா இலங்கையின் மாத்தாறை எனும் பகுதியைச் சேர்ந்தவர். கொழும்புவில் இருந்து 160 கிமீட்டர் தூரத்தில் இருக்கும் நகரம் இது. சென்னைக்கும் பாண்டிச்சேரிக்குமான பயண தூரம். கிரிக்கெட் பயிற்சிகள் எடுப்பதற்காக தினமும் அதிகாலையில் எழுந்து 3-4 மணி நேரம் பயணம் செய்து கொழும்புவில் வந்து பயிற்சிகள் எடுத்துவிட்டு மீண்டும் மாலையில் கிளம்பி நள்ளிரவில் வீடு போய் சேர்வது என ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக மாற வெறியாக உழைத்திருக்கிறார் ஜெயசூர்யா. கொழும்பு அணிக்கான ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டங்கள் 1988-ல் நடந்த முதல் யூத் கிரிக்கெட் உலகக்கோப்பையில் விளையாட அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துப்போனது. பிரையன் லாரா, நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்ட்டன், இன்சமாம் உல் ஹக் என 90'ஸில் மிகப்பெரிய கிரிக்கெட்டர்களாக உருவெடுத்தப் பலரும் கலந்துகொண்ட ஜூனியர் உலகக்கோப்பை தொடர் அது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜெயசூர்யாவுக்கு அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பணஉதவி செய்து பேட், Pad, ஹெல்மெட் என முதல்முறையாக புது கிரிக்கெட் கிட் வாங்கிக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆமாம், முதன்முதலாக ஜெயசூர்யா தன் சைஸுக்கு ஏற்ற Pad, ஹெல்மெட்களை அப்போதுதான் வாங்கியிருக்கிறார். சின்ன வயதில் இருந்தே செகண்ட் ஹேண்ட் Pad, ஹெல்மெட்களை அணிந்து விளையாடியவர் என்பதால் தனக்கு செட் ஆகாத பேட்களையும், ஹெல்மெட்டையும் ஒவ்வொரு பந்தையும் அடிக்கும் முன் அட்ஜஸ்ட் செய்வது ஜெயசூர்யாவின் வழக்கமாகியிருக்கிறது. அந்தப் பழக்கம்தான் சர்வதேச கிரிக்கெட்டாராகி ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்கள் அடித்தப்பிறகும் மாறவில்லை. அதேப்போல் ஒவ்வொரு பவுண்டரியும், சிக்ஸரும் அடித்ததும் பிட்ச்சுக்கு நடுவில் வந்து பேட்டை நான்கைந்து முறை தட்டிவிட்டுப்போவார் ஜெயசூர்யா. பெளலர் பெளலிங் போட ஓடிவந்துகொண்டிருக்கும்போது ஜெயசூர்யாவின் பேட் டப்பு, டப்பு, டப்பு என மூன்று முறை தட்டும் சத்தமே கிலி கிளப்பும்.
விவியன் ரிச்சர்ஸுக்குப்பிறகு அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இல்லை என்ற குறையைத் தீர்த்தவர் சனத் ஜெயசூர்யா. இப்போதைய பேட்டிங் பவர்ப்ளே கான்செப்ட்கள் 90-களில் இல்லை. முதல் 15 ஓவர்களுக்கு அவுட்ஃபீல்டில் மூன்று ஃபீல்டர்கள் மட்டுமே நிற்கமுடியும் என்பது அப்போதைய ஃபீல்டிங் ரெஸ்ட்ரிக்‌ஷன். இதை சரியாகப் பயன்படுத்தி வெற்றிபெற ஆரம்பித்த முதல் டீம் இலங்கைதான்.
பின்ச் ஹிட்டிங் எனச் சொல்வார்கள். டாப் ஆர்டரில் விக்கெட்டுகள் சரியும்போது 5வது அல்லது 6-வது டவுனில் வரக்கூடிய பேட்ஸ்மேனை 1 டவுன் அல்லது 2 டவுனில் இறக்கி அதிரடி ஆட்டம் ஆடவைப்பார்கள். அதுதான் பின்ச் ஹிட்டிங் என்பதற்கான அர்த்தமாக 1996 வரை இருந்தது. ஆனால், இலங்கையோ ஓப்பனர்களே பின்ச் ஹிட்டர்கள்தான் என்கிற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது.
1996 உலகக்கோப்பைக்கு முன்புவரை சதங்கள் கூட ஜெயசூர்யா அடித்திருக்கிறார். ஆனால், அதுவரை அவரை பெளலிங் ஆல் ரவுண்டராகத்தான் எல்லோரும் பார்ப்பார்கள். ஐந்தாவது அல்லது 6-வது டவுன் பேட்ஸ்மேனாகத்தான் வருவார். ஆனால், திடீரென இலங்கை கேப்டன் ரணதுங்கா, ஜெயசூர்யாவை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறக்க ஆரம்பித்தார். ஜெயசூர்யா மட்டுமல்ல கூடவே இன்னொரு பின்ச் ஹிட்டரான விக்கெட் கீப்பர் ரோமேஷ் கலுவித்தரானாவும் இறக்கிவிட்டார். இந்தக் கூட்டணிதான் 1996 உலகக்கோப்பையை இலங்கை கைப்பற்றியதற்கான அடித்தளம். இலங்கையின் எழுச்சிக்கு அடிநாதம்.
ஜெயசூர்யா - கலுவித்தரானாவின் டார்கெட்டே இலங்கையின் ஸ்கோரை முதல் 15 ஓவர்களில் 100 ரன்களுக்கு கொண்டுவந்துவிடவேண்டும் என்பதுதான். 15 ஓவர்களுக்கு ரன்ரேட்டை 6-க்கு மேல் கொண்டுவந்துவிட்டால் அதன்பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்ரேட்டை கொஞ்சம் இறக்கினாலும் 40 ஓவர்களுக்கு மேல் மீண்டும் அதிரடி ஆட்டம் ஆடிக்கொள்ளலாம் என்பது இலங்கையின் பிளான். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்காட்டியவர் ஜெயசூர்யா.
1996 உலகக்கோப்பை முடிந்த அடுத்த இரண்டு வாரங்களிலேயே சிங்கப்பூரில் சிங்கர் கப் போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக உலக சாதனைப்படைத்தார் ஜெயசூர்யா. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அமீர் சோஹைல் இலங்கையிடம் பேட்டிங்கைக் கொடுத்தார். வழக்கம்போல, ஜெயசூர்யாவும், கலுவித்தரனாவும் பாகிஸ்தான் பெளலிங்கை விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தார்கள். 10 பந்துகளில் 24 ரன்கள் அடித்து கலுவித்தரானா அவுட் ஆனாலும், ஜெயசூர்யாவைத் தடுக்கமுடியவில்லை. இதனால் அமீர் சோஹைல் 8வது ஓவரிலேயே ஆஃப் ஸ்பின்னரான சக்லைன் முஷ்தாக்கை இறக்கினார். இது பெரிதாகப் பயனளிக்காதபோது கேப்டனான தானே களத்தில் இறங்குவது என முடிவெடுத்தார். ஆனால், அவர் வீசிய முதல் ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்களை ஜெயசூர்யா அடித்தும் சோஹைல் அடங்கவில்லை. மீண்டும் பெளலிங் போடவந்தார்.
ஆட்டத்தின் 14வது ஓவர் அது. முதல் பந்தில் நோ பாலில் பவுண்டரி அடிக்க, அடுத்த 4 பந்துகளையும் சிக்ஸராக்கினார் ஜெயசூர்யா. அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள். அதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் காணாத காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. 16-வது ஓவரிலேயே ஜெயசூர்யா சதம் அடித்துவிட்டார். 48 பந்துகளில் சதம். மிகக்குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட முதல் சதம். அதுவரை நியூஸிலாந்துக்கு எதிராக 62 பந்துகளில் அசாருதின் அடித்த சதம்தான் மிகக்குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்டது. 11 பவுண்டரி, 11 சிக்ஸர் என 65 பந்துகளில் 134 ரன்கள் அடித்து அன்று மட்டுமே பல சாதனைகளை உடைத்தார் ஜெயசூர்யா. இந்த இன்னிங்ஸோடு ஜெயசூர்யாவின் வெறி அடங்கவில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடியது இலங்கை. பாகிஸ்தான் 215 ரன்கள் அடிக்க, இந்த டார்கெட்டை 20 ஓவர்களிலேயே முடித்துவிடுவாரோ என எண்ணவைத்தது ஜெயசூர்யாவின் ஆட்டம். மீண்டும் உலக சாதனை. இந்த முறை 17 பந்துகளில் 50 ரன்கள். ஆனால், 28 பந்துகளில் ஜெயசூர்யா 76 ரன்கள் அடித்தும் இந்தப் போட்டியில் இலங்கை தோற்றது. இந்தத் தொடருக்குப்பிறகுதான் ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் வைத்திருக்கிறார் என்கிற வதந்தி இந்தியா முழுக்கப் பரவத்தொடங்கியது.
இந்தத் தொடர் முடிந்த சில மாதங்கள் கழித்து இலங்கையில் மீண்டும் சிங்கர் கோப்பை நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இலங்கையோடு மோதின. இந்தியாவுக்கு முதல் மேட்ச்சே இலங்கையோடு. சச்சின் டெண்டுல்கர் சென்சுரி அடித்தும் 50 ஓவர்களில் 226 ரன்கள்தான் அடித்தது. இந்த ஸ்கோரை இந்தியா டிஃபெண்ட் செய்யும் என்று எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் 90'ஸ் ரசிகன் டிவி முன்னால் உட்கார்ந்திருப்பான். ஆனால், அவன் பயம் எல்லாம் ஜெயசூர்யா இன்றும் ஏதாவது உலக சாதனைப்படைத்துவிடக்கூடாது என்பதுதான். ஜெயசூர்யா புதிதாக எந்த சாதனையும் படைக்கவில்லையே தவிர வேதனைகள் தொடர்ந்தன. இந்தியாவின் ஸ்கோரை ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஜெயசூர்யாவும், கலுவித்தரானேவும் மட்டுமே முடித்துவிடுவார்களோ என்கிற அளவுக்கு ஆட்டம்போனது. டெண்டுல்கர் வந்துதான் முதல் விக்கெட்டை எடுக்கவேண்டியிருந்தது. அப்போது இலங்கையின் ஸ்கோர் 129. ஒரே விக்கெட்டை மட்டுமே இழந்து 45-வது ஓவரில் மேட்ச்சை முடித்தது இலங்கை.
ஜெயசூர்யா இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் சென்சுரியை அடித்தார். 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 128 பந்துகளில் 120 ரன்கள் அடித்திருந்தார் ஜெயசூர்யா.
கேப்டன் சச்சினை துன்புறுத்துவதற்காகவே நடந்த தொடர் 1997 இன்டிபென்டன்ஸ் கோப்பை. இந்திய சுதந்திரத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாட நடந்த இந்தத் தொடரில்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் துயரத்தைப் பரிசளித்தனர் ஜெயசூர்யாவும், அன்வரும். சச்சினின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது அந்த பகலிரவுப் போட்டி. கங்குலி, சச்சின் என இருவருமே முதல் இரண்டு ஓவர்களிலேயே வெளியேறிவிட டிராவிட், அஜய் ஜடேஜா, ராபின் சிங் ஆகியோரின் அரை சதத்தால் எப்போதும்போல இலங்கைக்கு 226 ரன் டார்கெட்டைக் கொடுத்தது இந்தியா. வெங்கடேஷ் பிரசாத்தின் முதல் ஓவரில் 8 ரன்கள்தான் அடித்தார் ஜெயசூர்யா. இந்தியர்கள் மகிழ்ச்சி. இரண்டாவது ஓவரில் கலுவித்தரான டக் அவுட். இந்தியர்கள் மிக்க மகிழ்ச்சி. ஆனால், இரண்டாவது ஓவரோடு மகிழ்ச்சிகள் முடிந்தன.
ஒருபக்கம் இலங்கையின் விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தாலும் இன்னொருபக்கம் ஒரு ஓவருக்கு ஒன்றிரண்டு பவுண்டரிகள் என அடித்துக்கொண்டேயிருந்தார் ஜெயசூர்யா. பந்தைப்போடுவதற்கு முன்பாக டப்பு, டப்பு, டப்பு என ஜெயசூர்யா பேட்டால் பிட்ச்சை தட்டிய சத்தமே ரசிகர்களுக்கு மாரடைப்பை வரவைத்தது. சரியான லைன் அண்ட் லென்த்தில், சரியான பவுன்சில் பந்துவீசினால் எந்தப் பிரச்னையும் இல்லை. அடிக்காமல் அடக்கிவாசிப்பார். ஆனால், ஆஃப் சைடில் பந்து விலகி வந்தாலோ, லெக் சைடில் கொஞ்சம் தள்ளிப்போட்டோலோ, யார்க்கர் போடுகிறேன் என ஃபுல் லென்த்தில் போட்டாலோ பந்து பவுண்டரி லைனுக்குப் பறந்துவிடும். அன்று அவர் அதிரடி ஆட்டம் எல்லாம் ஆடவில்லை. மிகச்சரியாக ஒவ்வொரு ஓவரில் வீசப்படும் லூஸ் பாலுக்காக காத்திருந்து, காத்திருந்து அடித்தார். 85 பந்துகளில் சென்சுரி அடித்தவர் 120 பந்துகளில் 151 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று 42-வது ஓவரிலேயே மேட்ச்சை முடித்துவிட்டார்.
மும்பையோடு சச்சினையும், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை ஜெயசூர்யா. இன்டிபென்டன்ஸ் கோப்பை முடிந்ததுமே இலங்கையில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடப்போனது இந்திய அணி. சச்சினின் கரியரில் இன்பம், துன்பம் என இரண்டுமே அங்கே நடந்தது. கொழும்புவில் முதல் டெஸ்ட். சித்து 111 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் 143 ரன்கள், அசாருதினும் சதம் என மூன்று பேர் சதம் அடிக்க இந்தியாவின் ஸ்கோர் 537. இரண்டாவது நாளின் மாலையில், இலங்கையை வீழ்த்திவீசிவிடும் முனைப்புடன் டிக்ளேர் செய்தார் சச்சின். ஜெயசூர்யாவும் அட்டப்பட்டுவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். இந்திய ஸ்பின்னர் நிக்கில் குல்கர்னிக்கு அதுதான் முதல் போட்டி. முதல் சர்வதேசப்போட்டியின் முதல் பந்திலேயே அட்டப்பட்டுவின் விக்கெட்டை எடுத்து அசத்தினார் குல்கர்னி. ஆனால், அதன்பிறகு நடந்தது குல்கர்னிக்கு மட்டுமல்ல, கும்ப்ளே, சவுஹான், குருவில்லா, பிரசாத் என யாருக்குமே வாழ்க்கைக்கும் மறக்காது. அட்டப்பட்டு 26 ரன்களுக்கு அவுட் ஆகிவிட ரோஷன் மஹானமா ஜெயசூர்யாவோடு சேர்ந்தார். அந்த கணத்தில் இருந்தே இந்திய அணியின் கெட்ட நேரம் தொடங்கியது.
இந்த இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த எந்த பிளானும் இந்திய கேப்டன் சச்சினிடமும் இல்லை, பெளலர்களிடமும் இல்லை. மூன்றாவது நாள், நான்காவது நாள் என இரண்டு நாள்கள் முழுக்கவும் விக்கெட்டே விழவில்லை. ஜெயசூர்யா ட்ரிப்பிள் சென்சுரி அடித்தார். ரோஷன் மஹானாமா டபுள் சென்சுரி அடித்தார். இந்தியாவுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக 340 ரன்களைப் பதிவு செய்தார் ஜெயசூர்யா. இன்றுவரை இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ரன்கள் இதுதான். மஹானமா 225 ரன்கள் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 576 ரன்கள் அடித்தார். இந்திய பெளலர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. ஜெயசூர்யாவை நினைத்தாலே கதி கலங்க ஆரம்பித்தது.
அடுத்த டெஸ்ட்டிலும் ஜெயசூர்யா இந்திய பெளலர்களை நிம்மதியாகவிடவில்லை. இலங்கை முதல் இன்னின்ஸில் 332 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சச்சின் 139, கங்குலி 147 ரன்கள் என மொத்தமாக 375 ரன்கள் அடித்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் வேட்டையை ஆரம்பித்தார் ஜெயசூர்யா. இந்தமுறை அதிரடி ஆட்டம். வெங்கடேஷ் பிரசாத்தும், அபய் குருவில்லாவும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள். ஆனால், இவர்களை எந்த அளவுக்கு ஜெயசூர்யா சீரியஸாக எடுத்துக்கொண்டார் என்பதற்கு அவர் இவர்களின் பந்துகளை ஹெல்மெட் இல்லாமல் எதிர்கொண்டதே சாட்சி. 226 பந்துகளில் 199 ரன்கள் அடித்து அவுட் ஆனார் ஜெயசூர்யா. டபுள் சென்சுரி ஜஸ்ட் மிஸ். இந்தத் தொடர் முழுக்கவே இலங்கையின் எண்ணம் இந்தியாவை வீழ்த்தவேண்டும் என்பதல்ல. டார்ச்சர் செய்யவேண்டும் என்பதுதான். இரண்டு டெஸ்ட்களிலுமே அவர்கள் வெற்றிக்காக விளையாடவேயில்லை. துன்புறத்த மட்டுமே செய்தார்கள்.
இதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தியாவுக்கு எதிராக ஜெயசூர்யா பெரிய இன்னிங்ஸ்கள் ஆடாதது கொஞ்சம் ஆறுதல். 1999 உலகக்கோப்பையில் ஜெயசூர்யா ஃபார்மில் இல்லாததால் இலங்கையைப் போட்டு பந்தாடியது இந்தியா. ஆனால், 2000-ல் மீண்டும் இந்தியாவைப் போட்டு புரட்டியெடுத்தார் ஜெயசூர்யா. டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக 340 ரன்கள் என்றால், ஒருநாள் போட்டியில் இந்த 189 ரன் இன்னிங்ஸை எப்போதும் மறக்கமுடியாது. ஷார்ஜாவில் 2000-ம் ஆண்டு அக்டோபரில் இந்தப் போட்டி நடந்தது. இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இந்தத் தொடரில் விளையாடின. இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. இலங்கை முதல் பேட்டிங். ஜெயசூர்யாவைத்தவிர இலங்கையின் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ரஸல் அர்னால்ட் மட்டுமே 52 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியான டாப் ஸ்கோர் இந்தியா கொடுத்த 22 ரன் எக்ஸ்ட்ராக்கள்தான்.
ஓப்பனிங் இறங்கிய ஜெயசூர்யாவின் அடிகள் அனைத்தும் மரண அடிகளாக விழுந்ததது. முதல்முறையாக ஜெயசூர்யாவின் தாக்குதலை அப்போதுதான் ஜாகீர் கான் சந்தித்தார். வெங்கடேஷ் பிரசாத் தன்னுடைய 7 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்தார். டெண்டுல்கர் மட்டுமே அன்று எக்கனாமிக்கல் பெளலர். டெண்டுல்கரை பாவம் பார்த்துவிட்டாரா, இல்லை ஜெயசூர்யா அடிக்கமுடியாத அளவுக்கு சச்சின் சிறப்பாகப் பந்துவீசினாரா எனத் தெரியவில்லை. 10 ஓவர்களில் வெறும் 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சச்சின். ஆனால், ஜெயசூர்யாவை ஒன்றுமே செய்யமுடியவில்லை. 161 பந்துகளில் 189 ரன்கள் அடித்து 49-வது ஓவரில்தான் அவுட் ஆனார். அவர் அவுட் ஆகும்போது 11 பந்துகள் மிச்சம் இருந்தன. கங்குலி மட்டும் அன்று அவரது விக்கெட்டை எடுக்கவில்லையென்றால் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் டபுள் சென்சுரி ஜெயசூர்யா வசமாகியிருக்கும்.
ஜெயசூர்யாவின் பேட்டிங்கைவிட அன்று மிகப்பெரிய துன்பியல் சம்பவமும் நடந்தது. இந்தியா 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி வரலாற்று சாதனைப்படைத்தது. ராபின் சிங் மட்டுமே டபுள் டிஜிட்டைத் தொட்டவர். டாப் ஸ்கோரரான ராபின் சிங் அடித்தது 11 ரன்கள். கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் சிங் என எல்லோருமே சிங்கிள் டிஜிட்டில் அவுட். அவமானகரமானத் தோல்வியைச் சந்தித்தது இந்தியா.
ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 28 சதங்கள் அடித்திருக்கிறார் ஜெயசூர்யா. அதில் 7 சதங்கள் இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவைதான். கிட்டத்தட்ட 40 வயதை நிறைவு செய்யும் நேரத்திலும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து மிக அதிக வயதில் சதம் அடித்தவர் என்கிற சாதனையும் படைத்தார். பெளலிங்கிலும் பல முக்கியமான விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் ஜெயசூர்யா. இவரது பெளலிஙகில் ஸ்பின் இருக்காது. ஆனால், வேக வேரியேஷன்கள் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்.
இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்லாமல் உலகின் அத்தனை கிரிக்கெட் அணிகளுக்கு எதிராகவும் அதிரடி இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார் ஜெயசூர்யா. 2006-ல் இங்கிலாந்தின் லீட்ஸில் நடந்த ஒருநாள் போட்டி இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானப் போட்டி. இங்கிலாந்து 50 ஓவர்களில் 321 ரன்கள் அடிக்க, சேஸ் செய்ய ஆரம்பித்தது இலங்கை. உபுல் தரங்காவோடு சேர்ந்து ஆடினார் ஜெயசூர்யா. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மட்டும் 286 ரன்கள். 1998-ல் இலங்கைக்கு எதிராக சச்சினும் - கங்குலியும் இணைந்து ஓப்பனிங் விக்கெட்டுக்கு 252 ரன்கள் அடித்திருந்ததுதான் அதுவரையிலான சாதனை. ஆனால், இதை ஜெயசூர்யா- தரங்கா ஜோடி முறியடித்தது. தரங்கா 102 பந்துகளில் 109 ரன்கள் அடிக்க, ஜெயசூர்யா 99 பந்துகளில் 152 ரன்கள் அடித்தார். 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்தவர் 72 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். அடுத்த 50 ரன்களை வெறும் 23 பந்துகளில் ஜெயசூர்யா அடிக்க, 321 ரன் டார்கெட்டை 38-வது ஓவரிலேயே முடித்துவிட்டது இலங்கை.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது ஐபிஎல் தொடரிலும் அதகளம் செய்திருக்கிறார் ஜெயசூர்யா. முதல் ஐபிஎல் தொடரான 2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்சுரி அடித்திருக்கிறார். சென்னையின் ஸ்கோரான 156 ரன்களை வெறும் 83 பந்துகளில் அடித்து முடித்தது மும்பை. அடித்தவர் ஜெயசூர்யா. 25 பந்துகளில் 50 ரன்கள் அடித்தவர், 45 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். ஜெயசூர்யா 114 ரன்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து மும்பையை வெற்றிபெறவைத்தார். வாழ்க்கையில் முதல்முறையாக ஜெயசூர்யாவின் இன்னிங்ஸுக்கு அன்று கைதட்டினார் சச்சின். அன்று மட்டும் ஜெயசூர்யா அடித்தது 11 சிக்ஸர்கள். ஜெயசூர்யாவின் இன்னிங்ஸை வெறுமனே வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார் தோனி.
ஜெயசூர்யா அளவுக்கு இந்திய ரசிகர்களுக்கு மன அழுத்தம் வரவைத்த பேட்ஸ்மேன் உலகில் யாரும் இல்லை. இந்திய பெளலர்களை அவர் துச்சமென மதித்து, ஹெல்மெட்கூட போடாமல் அடித்து வெளுத்ததுதான் இன்றுவரை ஆறாத ரணமாகவே இருக்கிறது. ஆமா, உண்மையிலேயே பேட்ல ஸ்பிரிங் வெச்சிருந்திருப்பாரோ???

எத்தனை திறைமை சாலியா இருந்தாலும்  இனவாதம் இரத்தத்தில் உறி இரக்கிறது என்பதற்கு கனடாவில் தமிழர்களை நோக்கி நடுவிரலைக் காண்பித்ததெ சாட்சி. இலங்கையை விட தமிழர்களை அதிகம் வெறுக்கும் இந்தியாவுக்கு  இவர் கொடுத்த அடிதான்  தன்பத்திலும்  ஒரு இன்பம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி புலவர்.

ஜெயசூர்யாவைப் பற்றி நிறைய அறிய முடிந்தது.

4 hours ago, புலவர் said:

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.