Jump to content

மஹிந்தவின் புதிய ஆரம்பம்  "ஒன்றாக எழுவோம்" – பிரதமர் தினேஷும் பங்கேற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் புதிய ஆரம்பம் – பிரதமர் தினேஷும் பங்கேற்பு

மஹிந்தவின் புதிய ஆரம்பம்  "ஒன்றாக எழுவோம்" – பிரதமர் தினேஷும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1303594

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

ரணிலின் ஆட்டம் முடிவிற்கு வருகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

May be a cartoon

ரணிலின் ஆட்டம் முடிவிற்கு வருகின்றதா?

ரணிலின் ராசியே அதுதானே! தனது ஆட்சி முடிய முதல் பயங்கரவாத சட்டத்தில் கைதான பல்கலை மாணவர்களை விடுதலை செய்தால் ரணில் ஓரளவுக்கு மக்கள் மனதில் நிலைக்கலாம், இல்லையேல் எல்லோராலும் பழிசுமத்தப்படுவார். கோத்தா ஆடும் தாண்டவக் கூத்துக்கு இவரே பொறுப்பேற்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

ரணிலின் ராசியே அதுதானே! தனது ஆட்சி முடிய முதல் பயங்கரவாத சட்டத்தில் கைதான பல்கலை மாணவர்களை விடுதலை செய்தால் ரணில் ஓரளவுக்கு மக்கள் மனதில் நிலைக்கலாம், இல்லையேல் எல்லோராலும் பழிசுமத்தப்படுவார். கோத்தா ஆடும் தாண்டவக் கூத்துக்கு இவரே பொறுப்பேற்பார்.

பேசாமல்... காலி முகத்திடல் போராட்டக் காரர்களிடமே பொறுப்பை விட்டு இருக்கலாம்.
அவர்கள்... ஒரு புதிய மாற்றத்ததையும், 
இளைய தலைமுறை அரசியலையும் கொண்டு வந்திருப்பார்கள்.

ரணில் இடையில் வந்து தலையை கொடுத்து.... மகிந்த கோஷ்டியை காப்பாற்றி விட்டு,
தனக்கும் நிரந்தரம் இல்லாத சூழலை உருவாக்கி வைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ பக்சாக்கள் நரியாரை அரியணை ஏற்றி ஆர்பாட்டக்காரரை அடக்கி பாதையை செம்மையாக்கியபின் அமைதியின் தூதுவர்களாக அரசியலை பொறுப்பேற்க போகிறார்கள் போலுள்ளது! ஜனாதிபதி கனவோடு இருந்த  நரியார் பாவம் பலிகொடுக்கப்படுள்ளார்.  தமிழர்க்கு  செய்த நரித்தனமெல்லாம் திரும்பி அவரை விரட்டப்போகிறது. முதலில் மைத்திரி குத்தினார், இப்போ தினேஷ் குணவர்தனவும் முதுகிலே குத்த ஆயத்தமாகி விட்டார். நடக்கும் சமரில் யார் வெல்வார் என்று பொறுத்திருந்து பாப்போம். ரணில் வெட்கத்தோடு வெளியேறுவார், அவருக்கு கைகொடுக்க யாரும் முன்வரப்போவதில்லை. 

 பக்கசாக்கள் கையில் ஆட்சி போனால்; பலர் கைதாகலாம், காணாமற் போகலாம். பழி வேறோர் மேல் விழும். நரியார் வெளிநாட்டுக்கு தப்பியோடுவது அவருக்கு நல்லது. அவர் விரித்த வலை அவருக்கே எமனாக போகிறது. தோல்வியோடு சிவனே என்று அமைதியாக மிகுதிக்காலத்தை கழித்திருக்கலாம். ஆசையும், விதியும் யாரைத்தான் விட்டது?                       
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. சொறீலங்கா முழுமையாக அடகு வைக்கப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் - நரியோடு ஒப்பிட்டு இனி நரியை கேவலப்படுத்த வேண்டாம்..😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இருக்கும் வரை நீங்கள் எழும்புவியள்,எழுப்பிவியள்.....ஆனால் சிங்கள மக்களை வறுமையிலிருந்து எழுப்பமாட்டியள் இந்த ஜென்மத்தில்....

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.