Jump to content

பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவது பூமியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவது பூமியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பட்டாம்பூச்சி எண்ணிக்கை

பட மூலாதாரம்,PRESS EYE

பட்டாம்பூச்சிகளை பொறுத்தவரை, அவை பார்ப்பதற்கு அழகாக இருப்பதையும் தாண்டி அவற்றால் சூழலுக்கு நன்மைகள் பல விளைகின்றன. அத்தகைய நன்மைகளைப் பயக்கும் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இது பூமியின் சுற்றுச்சூழலில் என்ன விளைவை ஏற்படுத்தும்?

பட்டாம்பூச்சி, தேனீ, குளவி போன்ற மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் எண்ணிக்கையில் குறைவது உணவு உற்பத்தியை பாதிக்குமா?

இன்றைய சூழலில், பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை "கவலைக்குரிய வகையில் குறைவாக உள்ளதாகவும்" தொடர்ந்து குறைந்து வருவதாகவும் பிரிட்டனிலுள்ள சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதுவே, தமிழ்நாட்டில் மாநிலம் முழுமைக்குமாக பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு பெரியளவில் நடத்தப்படுவதில்லை. மாவட்டவாரியாக சூழலியல் அமைப்புகள் வனத்துறையோடு இணைந்து ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்கின்றன.

 

ஆனால், "இதைவிட இன்னும் விரிவான, பரவலான கணக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவை உள்ளது" என்று கூறுகிறார் பட்டாம்பூச்சிகள் ஆராய்ச்சியாளர் பாவேந்தன்.

 

பட்டாம்பூச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பூச்சிக்கொல்லிகளால் குறையும் பட்டாம்பூச்சிகள்

"இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி பார்க்கும்போது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டதாகச் சொல்லும் அளவுக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை. ஆனால், நகர்ப்புறங்களிலும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்ற மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களிலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிகிறது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை, அவை ஏற்கெனவே "பாதுகாக்கப்பட்டு வருவதால்" அங்கு பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையில் பெரிய தாக்கம் தெரியவில்லை. ஆனால், "மனிதத் தலையீடுகள் அதிகமுள்ள, குறிப்பாக நகர்ப்புற சுற்றுச்சூழலில் அவற்றுக்குத் தேவையான தாவரங்களை தங்களுக்கே தெரியாமல் மனிதர்கள் அகற்றிவிடுகிறார்கள்," என்றார்.

அத்துடன், "பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் வேளாண் நிலங்களில் அந்த வேதிமங்களின் விளைவாக அவற்றின் எண்ணிக்கை குறைகிறது."

மேற்குத்தொடர்ச்சி மலையில் 340க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள், "சுமார் 320 வகைகள் தமிழகத்தில் காணப்படுவது பதிவாகியுள்ளது," என்கிறார் பாவேந்தன். அடர்த்தியான காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகளில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை ஆரோக்கியமாக உள்ளது.

ஆனால், அதே நிலை கிராமப்புறங்களிலோ நகர்ப்புறங்களிலேயோ இல்லை. ஒரு கிராமம் மலைப்பகுதியிலோ அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியிலேயோ இருந்தாலும்கூட, அங்கு பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது," என்று கூறினார்.

 

பட்டாம்பூச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாறுபடும் வலசை

பட்டாம்பூச்சிகளின் வலசை மழைப்பொழிவைப் பொறுத்து மாறுபடும் என்கிறார் பாவேந்தன். தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, இந்திய பட்டாம்பூச்சி வலசைப்பாதை (Butterfly migration India) என்ற பெயரில் குழுவாக இதுகுறித்த தரவுகளை, கடந்த ஆறு ஆண்டுகளாகச் சேகரித்து வருகின்றன.

"வலசை என்பது பட்டாம்பூச்சிகளின் பெருக்கத்தைப் பொறுத்து மாறுபடும். அவற்றின் இனப்பெருக்கம், அவை இருக்கும் இடத்தில் நல்ல சூழல் மற்றும் உணவுக்கான தாவரங்கள் கிடைக்கும்போது நன்றாக நடக்கும். மழைப்பொழிவு இல்லையென்றால், தாவரங்கள் செழுமையாக இருக்காது, உணவு கிடைக்காது அது இடப்பெயர்வையும் பாதிக்கும். வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது கிழக்குத் தொடர்ச்சி மலையில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். அப்போது அங்கிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைக்கு இடம் பெயரும். ஆகவே, மழைப்பொழிவுக்கும் பட்டாம்பூச்சிகளின் வலசைக்கும் தொடர்புண்டு," என்றார்.

"பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவும் வலசை நடைபெறும். பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி அதிகமாக நடப்பதற்கும் பருவமழைக்கும் தொடர்புள்ளது. வலசை சரியாக நடைபெறாத ஆண்டுகளும் பதிவாகியுள்ளன, சில நேரங்களில் வலசையே நடைபெறாத நாட்களும் உள்ளன. மழைப்பொழிவு நன்றாக இருந்தால், அவற்றின் இனப்பெருக்கமும் ஆரோக்கியமாக நடந்து, இடப்பெயர்ச்சியும் நிகழும். இல்லையென்றால், பெரிதாக இருக்காது. 2016ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனது. அந்த ஆண்டில் வலசையும் நடைபெறவில்லை.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அமெரிக்காவில் புகழ்பெற்ற மொனார்க் பட்டாம்பூச்சிகளின் வலசை கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துகொண்டே வருவது பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தான் சில முன்னேற்றங்கள் தெரிகின்றன. ஆனால், தென்னிந்தியாவை பொறுத்தவரை பட்டாம்பூச்சிகளின் வலசை குறித்த ஆய்வுகள் ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கின்றன. ஆகவே, இதில் இன்னும் பல விஷயங்களை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது

பட்டாம்பூச்சிகளின் வலசை மற்றும் எண்ணிக்கையைப் பகுப்பாய்வு செய்ய பெரியளவிலான கணக்கெடுப்பு அவசியம். அப்போது தான் அதைத் தெளிவாகச் சொல்ல முடியும்," என்கிறார் பாவேந்தன்.

2020ஆம் ஆண்டில், இமயமலை பகுதியில் வாழும் பட்டாம்பூச்சிகளும் அந்துப்பூச்சிகளும் வெப்பநிலை உயர்வு காரணமாக மலையில் சராசரியாகப் பார்க்கும் பகுதியிலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் காணப்பட்டதாக 'ஸூவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா' மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது. அந்தக் கணக்கெடுப்பில் 49 வகை அந்துப்பூச்சிகளும் 17 வகையான பட்டாம்பூச்சிகளும் இதுவரை அவை காணப்படாத உயரத்தில் பதிவு செய்யப்பட்டன. சில அந்துப்பூச்சிகள், 2,000 மீட்டருக்கும் மேலான உயரத்தில் பதிவு செய்யப்பட்டன. இதற்கு காலநிலை நெருக்கடியால் உயரும் வெப்பநிலை ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது..

 

பட்டாம்பூச்சி எண்ணிக்கை

பட மூலாதாரம்,PA MEDIA

பிரிட்டனின் பிக் பட்டர்ஃப்ளை கவுன்ட்

பிரிட்டனில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு முயற்சி தொடங்கப்பட்டு, இதுவரையிலான 13 ஆண்டுகளில் இந்த ஆண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பட்டாம்பூச்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டின் வெப்பமான கோடையில் தெளிவான புள்ளிவிவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் பல்வேறு வகை பட்டாம்பூச்சிகளைப் பார்க்க முடியாதது கவலையளிப்பதாகவும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த தன்னார்வ நிறுவனமான பட்டர்ஃப்ளை கன்சர்வேஷன் கூறியுள்ளது.

பிரிட்டனின் மிகப்பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றான பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சுமார் 100,000 பட்டாம்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டன.

 

Banner

மக்கள் அறிவியல் என்றால் என்ன?

உயிரினங்கள் கணக்கெடுப்பு, வாழ்விட தரவு சேகரிப்பு போன்ற அறிவியல் செயல்பாடுகளில் பொதுமக்களை ஈடுபடுத்துவதே மக்கள் அறிவியல். பறவைகள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், தாவரங்கள், ஊர்வனங்கள் என்று பல்வேறு உயிரினங்களைப் பற்றிய தகவல்களை, அவற்றைப் பார்க்கும் பொதுமக்கள் அதற்கென இருக்கும் தளங்களின் வழியே பதிவு செய்வார்கள்.

மக்கள் அப்படிப் பதிவேற்றும் தரவுகளைத் தொகுத்து, பகுப்பாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் அறிவியல் முடிவுகளை ஆய்வாளர்கள் வெளியிடுவார்கள். இந்தத் தகவல்கள் பல்வேறு அறிவியல் செயல்பாடுகளில் அறிவியலாளர்களால் பயன்படுத்தப்படும். இது மட்டுமின்றி, பொதுமக்கள் தாமாக முன்வந்து அறிவியல் ஆய்வுகளுக்கு உதவுவது, முடிவுகளைப் பகுப்பாய்வு செய்வது, சிக்கல்களைத் தீர்க்க உதவுவது போன்ற செயல்பாடுகளும் மக்கள் அறிவியலில் அடங்கும்.

 

Banner

இந்த அமைப்பின் அறிவியல் தலைவர் டாக்டர் ரிச்சர்ட் ஃபாக்ஸ், பட்டாம்பூச்சிகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

"அவை செழித்து வளர்வதற்கான வாழ்விடங்கள் இல்லாவிட்டால் இன்னும் அதிகமான பட்டாம்பூச்சிகள் இல்லாமல் போகும்," என்று அவர் கூறினார்.

பிக் பட்டர்ஃப்ளை கவுன்ட் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு, ஜோனா லம்லே மற்றும் சர் டேவிட் அட்டன்பரோ போன்ற பிரபலமானவர்களால் ஆதரிக்கப்படுகிறது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மூன்று வார காலத்திற்கு தோட்டங்கள், பூங்காக்கள், கிராமப்புறங்களில் தாங்கள் பார்த்த பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வகைகளைப் பதிவு செய்யுமாறும் பிரிட்டன் முழுவதுமுள்ள மக்களை பிக் பட்டர்ஃப்ளை கவுன்ட் கேட்டுக்கொள்கிறது.

 

பட்டாம்பூச்சி எண்ணிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுற்றுச்சூழல் மாற்றங்களால் பட்டாம்பூச்சிகளும் (Butterflies) அந்துப்பூச்சிகளும் (Moths) எப்படி பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய தகவல்களைச் சேகரிக்க இந்த முடிவுகள் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றன.

பட்டாம்பூச்சிகளின் உணவு, இனப்பெருக்கம், உறைவிடம் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள அனுமதிக்கும் வகையிலான வாழ்விடங்களை உருவாக்க பிரிட்டன் மக்கள் தங்கள் தோட்டங்களில் ஹோலி என்ற புதர்ச்செடி, பூக்கும் ஐவி செடி, எல்ம்ஸ், நெட்டில்ஸ் போன்ற தாவரங்களை வளர்க்க பரிந்துரைக்கின்றனர்.

ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், 2000ஆம் ஆண்டுக்கு முன்பாக ஸ்காட்லாந்தில் எப்போதாவது மட்டுமே பதிவு செய்யப்பட்ட ஹோலி ப்ளூ என்ற பட்டாம்பூச்சி வகை உட்பட சில குறிப்பிடத்தக்க வெற்றிக் கதைகளும் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ஹோலி ப்ளூ 120% அதிகரித்து ஸ்காட்லாந்து நிலப்பகுதியில் பரவியுள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பம் மிகுந்த கோடையாக இருந்தது, காமன் ப்ளூ, கேட் கீப்பர் போன்ற வகைகள் முறையே 158%, 58% அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

ராயல் என்டமாலஜிக்கல் சொசைட்டி என்ற பூச்சியியல் அமைப்பின் தலைமையிலான ஒரு பாதுகாப்பு திட்டத்தின் விளைவாக உயிரினங்களை எப்படி அழிவிலிருந்து காப்பாற்றுவது என்பதை இந்த வெற்றி காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

பட்டாம்பூச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்டாம்பூச்சிகளின் சூழலியல் சேவைகள்

"மகரந்த சேர்க்கையை நம்பியிருக்கும் தாவர வகைகளுக்கு பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், குளவிகள் போன்றவற்றின் இருப்பு மிகவும் முக்கியம். அவை குறையும்போது அவற்றுடைய மகரந்தச் சேர்க்கையை நம்பியிருக்கும் உணவு உற்பத்தியையும் அது பாதிக்கும்," என்கிறார் பாவேந்தன்.

பட்டாம்பூச்சிகளை சூழலியல் அளவுகோலாக ஆய்வாளர்கள் கருத்தில் கொள்கின்றனர். ஒரு சூழலியல் அமைப்பில் அவை காணப்படவே இல்லையென்றால் அங்கு நிச்சயம் ஏதோ பிரச்னை உள்ளதாகக் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் முன்பு அதிகமாகக் காணப்பட்ட பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துகொண்டே வரும்போது, அங்கு சூழலியல்ரீதியாக வாழ்விடச் சிதைவு நிகழ்வதற்கான குறியீடாக அந்த எண்ணிக்கைக் குறைவு கருதப்படுகிறது.

அவை மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்வதன் மூலம், பழங்கள், காய்கறிகள், பூக்கள் என்று பல்வேறு வகையான தாவரங்களின் உற்பத்தியிலும் பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான தாவரங்கள், இனப்பெருக்கத்திற்காக பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் குளவிகளையே சார்ந்துள்ளன.

தாவரங்களின் விதைப் பரவலில் மட்டுமின்றி, உணவுச் சங்கிலியிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதன்மையான பங்கு என்றுகூடக் குறிப்பிடலாம். பல்லிகள், பறவைகள், சிலந்திகள், தவளைகள் போன்ற உயிரினங்களின் உணவில் ஒரு பங்காக உள்ளன. அதுவும் பட்டாம்பூச்சியின் நன்கு வளர்ந்த வடிவத்தை மட்டுமின்றி, புழு வடிவமாக இருக்கும்போது, கூட்டுப்புழுவாக மாறும்போது, அதிலிருந்து பட்டாம்பூச்சியாக மாறியபிறகும் என அவற்றின் வாழ்விலுள்ள அனைத்து கட்டங்களிலும் உணவாகச் செயல்படுகின்றன.

பட்டாம்பூச்சிகள் வாழ்விடம் மற்றும் காலநிலை நெருக்கடிக்கு மிகுந்த உணர்திறன் கொண்டவை என்பதால், வாழ்விடங்கள் இழப்பு, சிதைவு உள்ளிட்ட காலநிலை நெருக்கடியின் பரந்த விளைவுகளை அவதானிப்பதற்கான ஓர் அளவுகோலாகவும் பட்டாம்பூச்சிகள் பயன்படுகின்றன.

https://www.bbc.com/tamil/science-63194948

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.