Jump to content

கோடிக்கணக்கான பண மோசடி : திலினியை 4 இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை : 1000 கோடியை தாண்டுமாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலினி விவகாரம் - ஜீவன்குமாரதுங்கவிடம் விசாரணை

By RAJEEBAN

08 NOV, 2022 | 04:33 PM
image

திலினி பிரியமாலி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்க அவரது மனைவி  ,நடிகை சங்கீதா வீரரட்ண ஆகியோரை சிஐடியினர் விசாரணை செய்துள்ளனர்.

ஜீவன்குமாரதுங்கவையும் அவரது மனைவியையும் சனிக்கிழமை  சிஐடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது சங்கீத வீரரட்ணவிடமிருந்து  திங்கட்கிழமை வாக்குமூலத்தை பெற்றுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

thilini__1_.jpg

சிஐடியினர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகள்  ஜீவன்குமாரதுங்க இயக்கிய படத்திற்கு ( ஜீவா) பிரியமாலி பணம் வழங்கியமை உட்பட பல விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோசடி மூலம் பெற்ற பணத்தை சினிமாவில் திலினி செலவிட்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/139474

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலியின் 4 வங்கிக் கணக்குகள் தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

By DIGITAL DESK 2

11 NOV, 2022 | 11:41 AM
image

 

திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலிக்குச் சொந்தமான நான்கு தனியார் வங்கிக் கணக்குகள் தொடர்பான விரிவான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலினி கமகே தனியார் வங்கிகளின் முகாமையாளர்களுக்கு வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார். 

 

Alleged massive financial fraud Thico Group owner Thilini Priyamali  remanded - Front Page | Daily Mirror

மொரட்டுவையில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து நான்கு கோடி ரூபா பணம்  மோசடி செய்யப்பட்ட   சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம்  முன்வைத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டே  நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரான  திலினி பிரியமாலி, முறைப்பாட்டாளரான வர்த்தகருக்கு  டொலர்களை தருவதாகக் கூறி  குறித்த தொகையை பெற்றுக் கொண்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில்  அறிக்கை செய்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/139713

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலி விவகாரம்: ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம்!

By VISHNU

13 NOV, 2022 | 10:52 AM
image

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் பாரிய நிதி மோசடி தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் 12 ஆம் திகதி சனிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

ஞானசார தேரரிடம்   குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை  பதிவு செய்துள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த  விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது  ஞானசார தேரர் தொடர்பான உரையாடல்கள் பதிவாகியுள்ளதால், அவர் அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/139857

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலி உட்படலானோருக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

By T. SARANYA

16 NOV, 2022 | 04:41 PM
image

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி  பிரியமாலி, அவரது  கணவர் எனக் கூறப்படும்  இசுரு பண்டார, கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, பொரளை சிறிசுமண தேரர் உள்ளிட்ட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே  நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/140256

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலி மீது பாலியல் துன்புறுத்தல் : உண்மைகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

By T. SARANYA

08 DEC, 2022 | 04:00 PM
image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி பாலியல் துன்புறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டமை தொடர்பில் உண்மைகளை ஆராய்ந்து வருவதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்  விஜேதாச ராஜபக்க்ஷ  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திலினி பிரியமாலி  சிறை வைக்கப்பட்டுள்ள பெண்கள் அறைக்கு அருகில் சிறைக்காவலர்களின் எண்ணிகை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

மேலும், திலினி பிரியமாலியின் சிறை அறைக்குள் சிறைச்சாலை  வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி உள்ளதாக சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/142550

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜானகிக்கு பிணை : திலினிக்கு விளக்கமறியல்!

By DIGITAL DESK 2

13 DEC, 2022 | 03:20 PM
image

 

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிச.13) உத்தரவிட்டுள்ளது.

திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா 50,000 ரூபா மற்றும் 3,5,000,00 ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 14 பிணைப் பத்திரங்களின் கீழ் அவரை விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன், ஒரு வழக்கில் பிணை வழங்க  மறுக்கப்பட்டதனையடுத்து பிரியமாலியை வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டது. 

இதேவேளை,  இதே சம்பவம்  தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளுக்காக தலா ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் அவரை விடுதலை செய்ய நீதி உத்தரவிட்டது.

https://www.virakesari.lk/article/143015

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலியை பிணையில் விடுவித்தது கோட்டை நீதிமன்றம்!

By DIGITAL DESK 5

16 DEC, 2022 | 11:59 AM
image

பாரிய பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை 50,000  ரூபா ரொக்கம் மற்றும் 10  இலட்சம் ரூபா பெறுமதியான  இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (16) உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நிபந்தனை விதித்தார்.

வெளிநாட்டு பயணத்தடை தொடர்பான உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/143266

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : வீடு திரும்பினார் திலினி பிரியமாலி

By DIGITAL DESK 2

27 DEC, 2022 | 08:42 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில்  அவரை கடந்த 16ஆம் திகதி  விடுவித்த கோட்டை நீதிவான் திலின கமகே, அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்தும் உத்தரவிட்டார்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந் நிலையில், செவ்வாய்கிழமை (டிச.  27)  பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட திலினி  பிரியமாலி,  விளக்கமறியலில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கோட்டை நீதிமன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று அழைத்து வரப்பட்ட திலினி பிரியமாலினி, கையெழுத்திட்டதன் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்து செல்லப்ப்ட்டிருந்தார். அவர் சிறையில் தொலைபேசி பயன்படுத்திய  விவகார விசாரணை நடப்பதால் இவ்வாறு அவர் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் பின்னர் அவர் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி, அனைத்து வழக்குகளிலும் பிணையில் இருப்பதால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலை  ஊடகப் பேச்சாளரும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

'அனைத்து வழக்குகள் தொடர்பிலும் அவருக்கு  பிணையில்  செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடக்கும் நிலையில் அது தொடர்பில் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டார்' என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன  ஏகநாயக்க குறிப்பிட்டார்.

முன்னதாக இதே மோசடி விவகாரத்தை மையபப்டுத்தி  7 வழக்குகளில் கோட்டை நீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி பிணையளித்தது.

எனினும் ஒரு வழக்கில் அவருக்கு பிணையளிக்க மறுத்த நீதிவான் திலின கமகே, அவரை  அவ்வழக்கு தொடர்பில்  கடந்த  16ஆம் திகதி பிணையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/144277

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி, அனைத்து வழக்குகளிலும் பிணையில் இருப்பதால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலை  ஊடகப் பேச்சாளரும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இனி என்ன... சுருட்டிய ஆயிரம் கோடி ரூபாயும், அவ்வளவு தான்.
இவருக்குப் பின் அரசியல்வாதிகள், பிக்குகள் இருக்கும் போது,
அவர் இனி சுதந்திர பறவை. 
இதுதான்... நம் நாட்டு சட்டம். 

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் திலினி பிரியமாலியை மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2023 | 11:43 AM
image
 

வாகனம் ஒன்றை  வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள    திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  ஆதித்ய பட்ட பெந்தி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது  குற்றம்சாட்டப்பட்டுள்ள  திலினி பிரியமாலி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுகயீனம் காரணமாக திலினி பிரியமாலி  கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து , வழக்கை ஆகஸ்ட் 11ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/156943

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மோசடி வழக்கிலிருந்து திலினி பிரியமாலியை விடுதலை செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

12 DEC, 2023 | 01:22 PM
image

வெற்றுக் கணக்கில் காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக் கொண்ட மோசடி வழக்கிலிருந்து திலினி பிரியமாலியை விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெத்தபண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

2010 ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 8 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக்கொண்டு பணமில்லாத கணக்கிலிருந்து பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

https://www.virakesari.lk/article/171528

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றுக் கணக்கில் காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக் கொண்ட மோசடி வழக்கிலிருந்து திலினி பிரியமாலியை விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2022 at 14:47, ஏராளன் said:

ஆசீர்வாத பூஜைக்காக மந்திரவாதிக்கு 80 மில்லியன் வழங்கிய திலினி, ஜானகி!

By T. SARANYA

07 NOV, 2022 | 12:12 PM
image

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி மற்றும் கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் 80 மில்லியன் ரூபாவை  தமக்கான ஆசீர்வாத  பூஜை க்காக,  மந்திரவாதி ஒருவருக்கு   வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு மேலதிக நீதிவான்  ஷிலானி பெரேரா முன்னிலையில் அறிக்கையாச் சமர்ப்பித்துள்ளது.

மேலும்,  முறைப்பாடு  செய்தவர்களிடமிருந்து திலினி பிரியமாலி பெற்ற பணம், கிறிஸ் குழும அலுவலகத்தில் வைத்து  ஜானகி சிறிவர்தனவுக்கு வழங்கப்பட்டமை குறித்த உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139333

எத்தனை விசாரணைகள் வந்தாலும் ஒன்றும்நடக்கப்போவதில்லை. பொதுவாக சொல்வதென்றால் அரசியல்வாதிகள், உயர் மடடத்தில் உள்ள எல்லோருமே ஊழல்வாதிகள்தான்.

அவர்கள் கொள்ளையடித்தார்கள் என்று நிரூபித்தாலும்கூட அங்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை. சிறைக்கு சென்றாலும் ஜனாதிபதி மன்னிப்பு கொடுத்து விடுவார்.

இலங்கைவங்குரோத்து அடைய இவர்கள்தான் காரணம் என்று உச்ச நீதிமன்றமே சொன்னாலும் அவர்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்யும் நாடும் இதுதான்.

உச்ச நீதி மன்றத்தை  மதிக்காத , சடடத்தை மதிக்காத நாடும் இதுதான். அதாவது இந்த விசாரணையின் முடிவு பூச்சியம்தான்.  

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.