Jump to content

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு.

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், பொருளாதார மீட்சி, பசுமையான அபிவிருத்திகள் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1304606

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு.

மூன்றையும் ஒரு வண்டிலிலை பூட்டி விடலாம்.....😁
வாய் விண்ணர்கள்.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எங்கட தலீவரும் சொல்ஹெய்மும் தங்களின் பழைய தில்லு முல்லுகளை அசை போடுகினம்  என்று நினைத்தேன், இவர்களா? இது புதிய முள்ளுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, satan said:

எங்கட தலீவரும் சொல்ஹெய்மும் தங்களின் பழைய தில்லு முல்லுகளை அசை போடுகினம்  என்று நினைத்தேன், இவர்களா? இது புதிய முள்ளுகள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கே .... எரிக் வாற  விடயமும் தெரியாது,
கூட்டமைப்பில் யார், அவரை சந்திக்கப் போகின்றார்கள் என்றும் தெரியாது.
எல்லாவற்றையும் சுமந்திரன், சாணக்கியன் கோஷ்டி  
மூடு மந்திரமாகவே  வைத்திருந்திருக்கின்றது.

அவர்கள் இருவரும் தான்... இப்போ த.தே. கூ.  போலுள்ளது.
இதுதான்...  அவர்களின் கூட்டமைப்பு தர்மம்.

 

//இதேவேளை இலங்கை வரும் எரிக் சொல்ஹெய்ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவரை கொழும்பில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிக் சொல்ஹெய்மின் நிகழ்ச்சி நிரலை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இலங்கை வருவதற்கு முன்னரே இலங்கையின் அரச தரப்பு, எதிர்த்தரப்பு மற்றும் நாடாளுமன்றததை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாக நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தொடர்பில் எந்தவித தகவலும் வெளியாகாத நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட உறுப்பினரிடம் இவை தொடர்பில் வினவிய போது, தமக்கு இது தொடர்பில் எவ்வித தகவலும் தெரியாது என்பதுடன், எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வரும் விடயமும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியிலும் இதே நிலைப்பாடே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.//

 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிப் பேச்சு வார்த்தை என்ற போர்வையில் 2009 தமிழினப் படு கொலைகளுக்கு காரணமான சொல்கைமுடன் சந்தித்தித்து என்ன பயன்? சொல்கைம் அமெரிக்காவின் அமைதிமுகம். உண்மயில் தமிழர்களின் பிர்சினை கௌரவமாகத் தீர்க்கப்பட்டால்  சொல்கைமுக்கு தமிழர் தாயகத்தில் சிலை வைக்க வேண்டும்  பல தமிழ்மக்களின் விரும்பியிருந்தார்கள். எல்லோரையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்த சொல்கைமுடன் என்ன சந்திப்பு வேண்டியிருக்குஃ பலம் உள்ளபோது அடிக்கடி சந்திக்க வந்தவர் பலமிழக்க வைக்கப்பட்டபின் 13 வருடங்களுக்கு ப் பிறகுதானே வந்திருக்கிறார்.. அவருடன் என்ன சந்திப்பு வேண்டியிருக்கு தமிழர்தரப்புக்கு. ஒருவேளை புலம் பெயர்ந்த தமிழர்களை வைத்து சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ரணில் சொல்கைம் என்ற இரண்டு நரிகளும் திட்டம் போடுகிறார்கள். அதற்கு ரணிலின் முன்னால் கூட்டாளிகளும் ஒத்துழைக்கிறார்கள்.. அதுசரி

கள்ளனைக் கள்ளனே காமுறுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு
எரிக் சமாதான பேச்சு வார்த்தைகளின் போது படத்தில் உள்ள இரண்டு குள்ள நரிகளும் பொந்துக்குள் இருந்தவை தற்போது முக்கியஸ்தர்கள்ஆம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்கைம் பெட்டி ஒன்றும் கொண்டு வரல்லியா... இரண்டுபேர் வெறும் கையோடை நிக்கினம் ..சிரிப்பையும் காணவில்லை....பேரம் படியவில்லையோ..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

மூன்றையும் ஒரு வண்டிலிலை பூட்டி விடலாம்.....😁
வாய் விண்ணர்கள்.

அப்படி சொல்ல கூடாது எங்க சுமந்து வலு கெட்டிக்காரர் 

சாணக்கியர் இவர பார்த்து பழகி வருகிறார்😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட ஆக்கள் எப்பயிருந்து காலநிலை மாற்றங்கள் பற்றி கவனமெடுக்கத் தொடங்கினவை ?? 🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில எல்லாம் நிறைவாக இருக்கு வேறு செய்வதற்கு ஒன்றுமில்லை கால நிலை மாற்றம் பற்றி ஆராய்ந்து உதவப்போகினம். இருக்கிற காலநிலையையம் கெடுக்கப்போகுதுகள் ஒன்று சேர்ந்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people sitting and indoor

மழை
ஜன்னலோர இருக்கை
சுடச் சுடத் தேநீர்
இளையராஜா இசை
கடலை வடை மிஸ்ஸிங்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு இதுதான் ஆரம்பம்! போகபோகத்தெரியும் இந்த சந்திப்பின் பின்னாலுள்ள ரகசியம், இனத்தை வைத்து சூதாடுவதே கூட்டமைப்பின் தொழில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, people sitting and indoor

மழை
ஜன்னலோர இருக்கை
சுடச் சுடத் தேநீர்
இளையராஜா இசை
கடலை வடை மிஸ்ஸிங்.

அங்கை பாருங்கோ..செருப்பை கழட்டிவிட்டு..பவ்வியமாக பேரம் பேசுவடுகுது..பாதி சிங்கள சம்பத்திக்கும் கொடுக்க வேணுமில்லே😆

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.