Jump to content

பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு;பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள்


Recommended Posts

பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு;பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள்

 

-சி.எல்.சிசில்-

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

France-crisis-300x200.jpg
இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06 மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாகவும், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

10 சதவீத சம்பள உயர்வு கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட முடியாவிட்டால் அரசாங்கம் தலையிட்டு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/214897

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரிண்ட காரும் நிக்கிறமாதிரி இருக்கு!🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

விசுகரிண்ட காரும் நிக்கிறமாதிரி இருக்கு!🤣

பெற்றோல்  வாங்கி பதுக்கி வச்சிருப்பார்😛😛

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி தவறு

பெற்றோல் தட்டுப்பாடு இங்கில்லை

போராட்டம் காரணமாக நிலையங்கள் சில பூட்டப்பட்டுள்ளன 

இதுக்கும் உக்ரைன் சண்டைக்குமோ அல்லது சிறீலங்காவில் உள்ள சிக்கல்களுக்குமோ எந்த ஒருமைப்பாடும் கிடையாது. 😀

 

 

Edited by விசுகு
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

செய்தி தவறு

பெற்றோல் தட்டுப்பாடு இங்கில்லை

போராட்டம் காரணமாக நிலையங்கள் சில பூட்டப்பட்டுள்ளன 

இதுக்கும் உக்ரைன் சண்டைக்குமோ அல்லது சிறீலங்காவில் உள்ள சிக்கல்களுக்குமோ எந்த ஒருமைப்பாடும் கிடையாது. 😀

 

 

சிறிலங்காவில் இருந்து பார்த்தால் சிங்கத்துக்கு புரியும்🤗🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிறிலங்காவில் இருந்து பார்த்தால் சிங்கத்துக்கு புரியும்🤗🤗

இல்லை சகோ 

பிரான்ஸில் பஞ்சம் என்று முகநூலில் பகிடி விடுகிறார்கள் 😂

 

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.