Jump to content

இரண்டாவது தலைவர்- யோ.கர்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும்,  இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிருந்தாலும் இனி இஞ்சயிருந்தால் பிசகுவரும். நான் சுவிஸ் போகப்போறன். நான் அபுதாபி போகப்போறன் என்று கதைக்கிறவையள் ஒரு பக்கம்இ மாறி மாறி ரெலிபோன் நம்பருகள் பரிமாறுறவை ஒரு பக்கமென பெரிய சத்தமாக இருக்கிறது.

எங்கட ஆளின்ர கையில விடுதலைப் பத்திரத்தை இப்பதான் ஒரு ஆமிக்காரன் குடுத்திட்டுப் போறான். ஆள் பத்திரத்தை ஒன்றுக்கு மூன்றுதரம் விஸ்தாரமாக வாசிச்சார். மூன்று மொழியிலயும் விசயத்தை இரத்தினச் சுருக்கமாக எழுதியிருக்கினம். என்ன இரத்தினச் சுருக்கமாக எழுதியென்ன, விபரம் என்னவோ பரிசு கெட்ட விபரம் தான். இன்ன ஆள், இன்ன இன்ன இடத்தில இருந்து வந்து கடைசிச் சண்டையில சரணடைஞ்சு, இவ்வளவு காலம் வைச்சிருந்து புனர்வாழ்வு குடுத்திட்டு விடுறம் என்றதுதான்.

எங்கட ஆளுக்கு முன்னுக்கிருக்கிற ஆள் ஆரென்று பார்த்தால், அது கலாமோகன் மாஸ்ரர். மாஸ்ரர் தான் கனகாலமாக ஆளுக்கு பொறுப்பாக இருந்தவர். மாஸ்ரரிட்ட நல்ல பணிஸ்மன்ற்றெல்லாம் வாங்கியிருக்கிறார். இப்ப எல்லாத்தையும் நினைச்சுப் பார்க்க, வயிறு பத்தி எரியுது. என்னயிருந்தாலும் தன்ர கையில பத்திரம் கிடைக்க முதல் மாஸ்டருக்கு கிடைச்சிட்டுது.இதென்ன நீதி? மோட்டுச் சிங்களவன் என்ன இன்குவாரி பண்ணினவன்? இது பெரிய அநீதியென யோசித்தார். பிறகு, எல்லாம் எங்கட ஆக்கள்தானே. எப்பிடியெண்டாலும் வந்து சேரட்டும் என்றும், எங்கட ஆக்கள் இப்பிடி மாறி மாறித் தங்களுக்க அடிபட்டுத் தானே சுதந்திர தமிழீழம் இல்லாமல் போனது என்றும் யோசித்து விட்டு, மாஸ்ரரைத் தட்டிக் கதைக்க முடிவு செய்தார்.

இந்த காம்பில ஒன்றரை வருசமாக இரண்டு பேரும் இருக்கினம். ஆனால் , ஒரு வசனம் கதைச்சது கிடையாது. கண்டால் ஒரு சிரிப்பு. அவ்வளவுதான். கதைக்கிறதில மாஸ்ரருக்கு ஒரு பிரச்சனையுமிருக்கிற மாதிரித்தெரியவில்லை. எங்கட ஆள்த்தான் கதைக்காமல் திரிஞ்சார். இப்ப விருப்பப்பட்டு மாஸ்ரரின்ர முதுகை தட்டுறார்.

“எப்பிடி மாஸ்ரர்… வீட்ட போய் என்ன செய்யப் போறியள்?…”

மாஸ்ரர் ஒரு பக்கமாக திரும்பியிருந்து கொண்டு கதைக்கத் தொடங்கினார். சிங்களவன் ஆளும் நாட்டில் அடிமை வாழ்வு வாழ இஸ்டமில்லையெனவும், ஆனால் விதி தமிழர்களை பழிவாங்குகிறது எனவும், தான் ஏதாவது கப்பல் மூலம் கனடா அல்லது அவுஸ்ரேலியாவிற்கு போகவுள்ளதாகவும் கூறினார்.

 

மாஸ்ரரின்ர குணம் இன்னும் மாறயில்லை. மாஸ்ரர் முந்தி அரசியற்துறையில இருந்தவராம். நல்லாக் கதைப்பார். இயக்கத்தில ஞாயிற்றுக்கிழமையில கலைநிகழ்ச்சியள் வைப்பினம். இதில மாஸ்ரரின்ர தலைமையில பட்டிமன்றம் நடக்கும். தமிழீழப் பெண்கள் சாதனைப் பெண்களா ? இல்லையா?, தமிழீழத்தை அடையச் சிறந்தவழி அகிம்சைப் போராட்டமா ? ஆயுதப் போராட்டமா?, இந்தியா தமிழீழத்தின் நட்பு நாடா? எதிரிநாடா? போன்ற விசயங்கள் பட்டிமன்றத் தலைப்புக்களாக இருக்கும். எங்கட ஆளும் மாஸ்ரரின்ர பேச்சுக்கு கைதட்டின ஆள்த்தான்.  இரண்டு பேருக்குள்ளும் இந்தக் கதைகள் வளர்ந்து கொண்டிருக்க, ஒரு ஆமிக்காரன் வேகமாக ஓடிவந்து விசிலடிச்சான். எல்லோரையும் அமைதியாக இருக்குமாறு கத்தினான். இவனின்ர வேகத்தை பார்த்த மற்றைய ஆமிக்காரரும் ஓடியோடி எல்லோரையும் ஒழுங்கான வரிசையில் இருத்திச்சினம். ஒழுங்கில்லாமல் அப்பிடிஇப்பிடி இருக்கிற சிலருக்கு அடியும் விழுது.

ஆமிக்காரர் பரபரப்பாக இருக்கிறதைப் பார்க்க, ஆரோ பெரிய ஆள் வரப் போறார் என்பது விளங்குது. வழமையாக, ஆமிக்காரர் ஓடித்திரியிற வேகத்தை வைச்சு வரப்போற ஆளின்ர தரத்தை தீர்மானிக்கலாம். இந்த வேகம் சாதாரண வேகம் இல்லை. அசுர வேகம்.

ஆர் வரப்போயினம்? என்று எங்கட ஆள் மண்டையைப் போட்டுப் குழப்பிக் கொண்டிருக்குது. ராஜபக்ச குடும்பத்தில ஆரும் வரப்போயினமோ? கருணா அம்மான் வரப் போகிறாரோ? வேற வெளிநாட்டு தூதர் ஆரும் வரப்போயினமோ? என்று பலதையும் யோசிக்கிறார். ஒன்றும் பிடிபடயில்லை.

கொஞ்ச நேரத்தில விருந்தாளியள் வருகினம். வெள்ளையும் மண்ணிறமும் கலந்த சேட்டும். வெள்ளை ரவுசரும் போட்டு கூலிங்கிளாசோட ஒராள் வருகுது. அவர்தான் விருந்தாளியாக இருக்க வேணும். அவருக்குப் பக்கத்தில வலு பவ்வியமாக ஆமிக்காரர் வருகினம். ஆமிக்காரரென்றால்,சும்மா ஆமிக்காரரில்லை. வன்னிக் கட்டளைத் தளபதியாயிருக்கிற கமால் குணரட்ண ஏற்கனவே இந்தக் காம்பிற்கு வந்திருக்கிறார். அவரும் கூலிங்கிளாசுக்குப் பக்கத்தில பவ்வியமான சிரிப்போட வாறார். எல்லாம் பொடியளும், எங்கட ஆள் மாதிரியே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கினம்.

இதெல்லாம் சரி. இதுக்குப் பிறகு நடந்துதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக எல்லாப் பொடியளாலும் நோக்கப்பட்டது. நடக்கிறது உண்மையோ என்று கூட எங்கட ஆளுக்கு சந்தேகம் வந்திது. தமிழில,  வலு சுத்தத் தமிழில, நாங்களெல்லாம் கதைக்கிற தமிழில வந்தேறு குடிகளென்று சரத்பொன்சேகாவால் சொல்லப்பட்ட தமிழர்களின் தமிழில் அந்தாள் வணக்கம் சொல்லிச் சிரிச்சார். இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராகப் பொத்திப் பிடிச்சுக் கொண்டு கதைக்கத் தொடங்கினார். அவர் கதைச்சதை விடச் சிரிச்சது அதிகம். இடையில் ஒருமுறை கண்ணை வேறு துடைத்துக்கொண்டார். அவர் கதைத்ததின் சாரம் நானும் உங்கட ஆள்த்தான். எல்லோரும் ஒரே ஆக்கள்தான். தமிழர் சிங்களவரென்ற வித்தியாசமில்லை. யுத்தம் கொடூரமானது. எல்லோருமதைப் புரிந்துகொள்ள வேண்டும். இனி வன்முறையை நாடாதீர்கள். உங்களை உயிரோடு விடும் அரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருங்கள் என்பதுதான்.

 

அவர் நல்ல உற்சாகமான மனுசனாக இருக்க வேணும். இந்த நாளைச் சந்தோசமானதாக்க யாராவது ஒருவரைப் பாடச்சொன்னார். ஒருதரும் எழும்பயில்லை. இந்தப் பெரிய கூட்டத்தில ஒரு பட்டுக்காரன் இல்லையோ? முந்தி எவ்வளவு பாட்டை இயக்கம் விட்டது. இயக்கத்தின்ர மரியாதையைக் காப்பாற்ற ஒராளை எழும்பச் சொன்னார். முன் வரிசையிலயிருந்து ஒருவன் எழும்பினான். என்ன பாட்டு பாடப்போகிறான் எனக்கேட்டார்.

“புலி உறுமுது புலி உறுமுது”என்று முதல்வரியை எடுத்து விட்டான். அவரின்ர முகம் ஒரு மாதிரிப் போனது.பிறகு மெல்லிய சிரிப்புடன் சொன்னார் – “ஏனப்பு திரும்பத் திரும்ப அப்பிடிப் பாட்டுகள் பாடுறியள்… வேற நல்ல பைலாப்பாட்டு… ஆ… சிங்களத்தில இருக்குதே ‘என்டமல்லி’ பாட்டு… அது மாதிரி…” என்று. பாடுவதற்கு தயாரான பொடியனுக்கு அந்தப் பாட்டுத் தெரியாது. கடைசியில,அவரோட வந்த ஒரு ஆமிக்காரன் றப்பட்ட றப்பட்ட சொல்லி ‘என்ட மல்லி என்ட மல்லி’என்று பாட எல்லோரும் ஆடிஆடித் தாளம் போட்டு அந்த புரோகிராமை முடிச்சினம். அவரும் போயிற்றார்.

முன்னால இருந்த மாஸ்ரரை தட்டி, இது ஆரென எங்கட ஆள் கேட்டுது. மாஸ்ரர் ஒன்றும் சொல்லுறார் இல்லை. பேசாமல் இருந்தார். பிறகு, “அதைவிடு… உதுகளைப் பற்றி யோசிக்காமல் உருப்படியான காரியங்களைச் செய்..’| என்றார்.

எங்கட ஆளுக்கு வந்த கோபத்தில மாஸ்ரரின்ர முதுகில ஒரு மிதிமிதித்தால் என்ன என யோசித்தார். மாஸ்ரர்… இந்த உறண்டல் மனுசன் இப்பிடித்தான். அங்கயும் இப்பிடித்தான். இஞ்சயும்  இப்பிடித்தான். இன்னும் குணம் மாறவில்லை. இந்த இடத்தில மாஸ்ரர் இல்லாமல் வேறயாரும் இருந்திருக்க வேணும். எங்கட ஆள் ஒரு போடுபோட்டிருக்கும். தன்ர முதலாவது பொறுப்பாளரென்றதால பேசாமலிருக்கிறார்.

எங்கட ஆளின்ர குறூப் ரெயினிங் முடிச்சு முல்லைத்தீவில நிற்குது. மொத்தம் நூற்றியிருபது பேர். எல்லாரும் யாழ்ப்பாணத்துப் பக்கப் பொடியள். ஒருநாள் சூசையண்ணை வந்து கதைச்சு, கடற்புலிக்கு வர விருப்பமானவர்களை கையை உயர்த்தச் சொன்னார். அதில கையை உயர்த்தி கடற்புலிக்கு போனதுதான் எங்கடஆள். அங்க போனால், இவர்தான் உங்கட பொறுப்பாளரென்று ஒரு ஆளை அறிமுகப்படுத்துகினம். ஒருபெரிய சிரிப்போட மாஸ்ரர் வாறார். மாஸ்ரர் வலு கட்அன்ட்ரைட்டான மனுசன். விடியப்புறம் நாலரைக்கு எழும்பவேணும்.ஆறுமணிக்கு சத்தியப்பிரமாணம் எடுக்கவேணும். ரெயினிங்கில பம்மாத்து விடக்கூடாது. சென்ரியில நித்திரை கொள்ளக்கூடாது. கிழமைக்கு கிழமை குளோரோகுயின் குளிசை போடவேணும்.

கடலே தெரியாமல் வளர்ந்த எங்கட ஆள், மாஸ்ரரின்ர பொறுப்பிலதான் கடல் றெயினிங் எடுக்குது. பத்து கடல்மைல் நீந்தச் சொல்லுங்கோ. அல்லது முல்லைத்தீவு கடலில ஒரு வோட் குடுத்து தாய்லாந்தின்ர சிறீரச்சா துறைமுகத்தில ஏறச்சொல்லுங்கோ. எங்கட ஆளுக்கு எல்லாத்துக்கும் ஓம்தான். எல்லாம் மாஸ்ரரின்ர கண்காணிப்பில பழகினதுதான்.

உண்மையில,மாஸ்ரர் நல்லவரா? கெட்டவரா ? என்பது இன்றுவரை எங்கட ஆளுக்கு தெரியாது. நல்ல பொறுத்த பணிஸ்மன்றும் குடுப்பார். சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க போனால், ஒருவாய் தீத்தியும் விடுவார். எங்கட ஆளுக்கும் இரண்டும் நடந்ததுதான்.

எல்லாம் நல்லாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்பதான் எங்கட ஆளுக்கு ஒரு சந்தேகம் வருது. ஆரம்பத்தில இதைப் பற்றியெல்லாம் யோசிக்கயில்லை. போகப்போகத்தான் சந்தேகங்கள் வருது. கொஞ்சம் பிடிபடப் பிடிபட சந்தேகங்கள் வரும் தானே. இந்த சந்தேகத்தை ஒரு பொடியளாலயும் தீர்க்க முடியாமல் போயிற்றுது. உண்மையைச் சொன்னால், ஆள் இதைப்பற்றி கதைக்கத் தொடங்கினதுக்குப் பிறகுதான் கனபொடியள் இதைப் பற்றி யோசிக்கவே தொடங்கினவை. அந்த நேரம் சந்திக்கிற எல்லாப் பொடியளிடமும் கேட்டார் – “எங்கட இரண்டாவது தலைவர் யார்?…”

முந்தின காலமென்றால் மாத்தையா இருந்தார். எங்கட ஆள் அப்ப இயக்கத்தில இல்லை. ஆனால் மாத்தையாவில நல்ல விருப்பம். அவரின்ர மீசை, உடம்பு,உயரம் எல்லாமே கம்பீரமானவை. பிரபாகரனும் மாத்தையாவும் பக்கத்தில பக்கத்தில நிற்கும் படத்துடன் முந்தின காலத்து ஈழநாதப் பேப்பரின்ர கலண்டர் வரும். இந்தப் படத்துக்காகவே வீட்டில சண்டை பிடிச்சு பேப்பர் எடுக்க வைச்சிருக்கிறார். அந்த கலண்டர் கனகாலமாக வீட்டு சுவரிலயிருந்தது. பிறகு, தகப்பன்காரன் மாத்தையா இருக்கிற படத்தை மட்டும் கிழித்து எடுத்து விட்டார். பாதிக் கலண்டர்தான் சுவரிலயிருந்தது.

அந்த நேரம் இயக்கத்தில இருந்த ஆட்களின்ர வாயில தமிழீழத்துக்கு அடுத்தபடியாக உச்சரிக்கப்பட்ட வசனமென்றால் அது இந்திய றோவாகத்தானிருக்கும். அந்நிய ஊடுருவல் போன்ற வசனங்களெல்லாம் தாராளமாக பாவிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வல்லரசு புலனாய்வு அமைப்புகள் என்று றெயினிங் காம்பில கலைக்கோன் மாஸ்ரர் தொடர் வகுப்பெடுத்தவர். ஆனால், யாரும் மாத்தையாவின்ர பெயரை உச்சரிக்கினமில்லை. இயக்கத்திலும் சிலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர் என்ற தொனிப்பட வகுப்பு நடக்கும்.

எங்கட ஆள் மாத்தையாவைப் பற்றி சிலரோட கதைச்சும் பார்த்தார். மாத்தையா ஆர்?என்ன செய்தவர்? இப்ப எங்கே? இனி யார் இரண்டாவது தலைவர்? தலைவருக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் இரண்டாவது தலைவரை அறிஞ்சு வைக்கிறது நல்லதுதானே. பிறகு வீண் பிரச்சனையள் வராது என யோசித்தார். ஆனால் பொடியள் இது பற்றி கதைக்கினமில்லை. மெல்ல கழன்று விடுகினம். தேவையில்லாத கதை கதைச்சு வீண் பிரச்சனையில மாட்டாதை என்று அட்வைஸ் பண்ணின ஆட்களும் இருக்கத்தான் செய்யினம்.

பலதையும் யோசிச்சுப் பார்த்திட்டு, ஒரு நாள் நேரடியாக மாஸ்ரரிடமே போய்க் கேட்டார். வெளியில் எங்கேயோ போவதற்காக வாகனத்தில் ஏறி இருந்த மாஸ்ரர், விசயத்தை கேட்டதும் இறங்கினார். அடிக்கிறதுக்கு கை ஓங்கிப்போட்டுச் சொன்னார் “இயக்கத்தில அடிக்கக்கூடாதென்ற ஓடர் இல்லாமலிருந்திருக்க வேணும். உனக்கிப்ப என்ன நடந்திருக்குமென்று எனக்கே தெரியாது..” என அடிக்காமல் விட்டவர். ஆயிரம் தோப்புக்கரணம் போடச்சொல்லி பணிஸ்மன்ற் தந்தார். தோப்புக்கரணம் போடுவதை எண்ணுவதற்கும் ஒரு பொடியனை விட்டார். இதுக்குப் பிறகு எங்கட ஆள் மாஸ்ரரோட அவ்வளவாக முகம் குடுத்துக் கதைக்கிறதில்லை. ஏதும் அலுவலிருந்தால் மட்டும் அளவான கதையிருக்கும்.

கொஞ்ச நாளில எல்லாமே எங்கட ஆளுக்குப் பிடிபட்டிட்டுது. நாலு இடத்துக்குப் போய் நாற்பது பேருடன் பழகத் தொடங்க நெளிவு சுழிவுகள் விளங்கினமாதிரி, இரண்டாவது தலைவர் பிரச்சனையும் விளங்கியது. அதாவது முதல் மாத்தையா இருந்திருக்கிறார். அதுக்குப் பிறகு, வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இரண்டாவது தலைவர் மாதிரி கிட்டு மாமா தான் வெளிநாட்டில இருந்திருக்கிறார். அவர் தமிழீழத்திற்கு வந்து சேர்ந்திருந்தால் அவரை இரண்டாவது தலைவராக இயக்கம் அறிவிச்சிருக்குமாம். அதுவும் பிசகிவிட்டுது. அதுக்குப் பிறகு இப்ப, இரண்டாவது தலைவர் மாதிரி இரண்டு பேர் இருக்கினமாம். தமிழீழத்தில ஒராள். வெளிநாட்டில ஒராள். தமிழீழத்தில பொட்டம்மான். வெளிநாட்டில இருக்கிறவரை கன இயக்ககாரருக்கே தெரியாதாம். கொஞ்சம் வயசான  ஆள் வேறயாம். அனேகமாக அது அன்ரன் பாலசிங்கமாக இருக்கலாமென்று எங்கிட ஆள் யோசிச்சார். என்னயிருந்தாலும் பொட்டம்மான் தான் இதுக்கு சரியான ஆளென அபிப்பிராயப்பட்டார். இதையும் சிலரோட கதைச்சவர் தான்.

மாஸ்ரர் பணிஸ்மன்ற் குடுத்த சம்பவம் எங்கட ஆளுக்கு பிடிக்கயில்லை. என்னயிருந்தாலும் இந்தக் கேள்வியை ஒரு தேசத்துரோகக் குற்றம் மாதிரி மாஸ்ரர் பார்த்திருக்கக் கூடாது என யோசிச்சார். இதுக்குப் பிறகு மாஸ்ரருக்குக் கீழ் இருக்கப் பிடிக்கயில்லை. ஒருநாள் ஆற அமர இருந்து யோசித்து விட்டு, வலு கிளீனான ஒரு கடிதம் எழுதினார். எதிரிகளினால் முற்றுகைக்குள்ளாகி தேசம் இக்கட்டான நிலையிலிருக்கும் போது, என்னை மாதிரி செங்களம் புக ஆவல் கொண்ட வேங்கைகளை ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள். ஆணையிடுங்கள் தலைவா என்பதுதான் சாரம். கடிதம் சூசையண்ணைக்குப் போகுது.

அடுத்த கிழமை மெயின்காம்பிற்கு வரச்சொல்லி அறிவித்தல் வருது. ஆளுக்கு பதற்றமாகவுமிருக்குது. சந்தோசமாகவுமிருக்குது. சொன்ன வேலை செய்ய வேண்டுமென இயக்கத்தில சேர்ந்த நாளிலயிருந்து  சொல்லித்தாற விசயம். இதை விட்டிட்டு,வேற வேலை தா என எழுதியது பிடிக்காமல் போகுமோ என பலதையும் யோசித்துக்கொண்டு போனார். அங்க ஒரு பிரச்சனையுமில்லை. ஆள் விரும்பியது மாதிரியே வேறு வேலை கிடைக்குது. இவ்வளவு நாளும் தரையில கிடந்த ஆள், இனி வருசக்கணக்காகக் கடல் தானென ஆனது.

இயக்கத்தின்ர ஆயுதக் கப்பலொன்றில ஆளை ஏத்தினார்கள். உங்களில சிலருக்கு தெரிந்திருக்கும் இயக்கத்தினது ஆயுதப் பரிவர்த்தனை பற்றி. இப்ப லாவோசின்ர கறுப்புச் சந்தையில கொஞ்சச் சாமான் வாங்கப்படுகிறது என்று வையுங்கோ. அது ஒரு கிழமையிலயோ, ஒரு வருசத்திலயோ முல்லைத்தீவில இருக்கும்.  அங்க ஏற்றுவதற்கும் , இங்கே இறக்குவதற்குமிடையில் வேலையை மூன்று செக்சனாகப் பிரித்திருந்தார்கள். இதில இடையில சாமானை  வாங்கி இலங்கை எல்லை வரை கொண்டுவரும் இரண்டாவது செக்சன்காரர் வருசக் கணக்காக கடலிலயே இருப்பினம். அவையள் கரையை காணுறதென்பது எப்போதாவது வெகுஅரிதாகவேயிருக்கும். ஆள் இப்ப இந்த செக்சனோடதான்.

இந்த வாழ்க்கை ஆளுக்கு நல்லாப் பிடிச்சிருந்தது. என்ன, கரைக்குப் போகேலாது. நாலு பேரைச் சந்திக்க ஏலாது. மற்றும்படி எல்லாம் இயக்க வேலைதானே. ஒரு வருசமும் எட்டு மாதமும் கரையையே காணாமல் கடலுக்குள்ள ஓடித்திரிந்து கொண்டிருந்த கப்பலில ஆள் இருக்குது. எங்கட ஆளின்ர கப்பலில்தான் ஒரு முக்கியமான சாமான் தமிழீழத்திற்கு வந்தது. அந்த நேரம் சுப்பசொனிக், கிபீர் என அரசாங்கத்தின் ஜெட்விமானங்கள் இயக்கத்திற்கு பெரிய தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. இதுகளை விழுத்திற ஏவுகணை வாங்க இயக்கமும் நாயாய் பேயாய் அலைந்துதிரியுது. ஒரு இடமும் சரிவராமலிருந்தது. எங்கட ஆள் கப்பலுக்கு போன ராசியோ என்னவோ கடைசியில ஒரு இடத்தில மாட்டியது. அதுவும் உக்ரைனிடமிருந்து. அவையள் தாங்கள் செய்த வெப்பத்தை நாடிச் செல்லும் ஏவுகணையள் கொஞ்சத்தை வித்திட்டினம். இப்ப நீங்கள் யோசிப்பியள், உக்ரைனிட்டயிருந்து ஏவுகணை வாங்கிக்கொண்டு வந்தும் பொடியளால ஏன் கிபிரை விழுத்த முடியாமல் போனதெனக் கதையைக் கேளுங்கோ.

தாய்லாந்தின் சிறீரச்சா துறைமுகத்துக்குக் கிட்டவாக கப்பலை வைச்சிருந்த ஆட்களை, அவசரமாக உக்ரைன் வரச் சொல்லியாச்சுது. அது உக்ரைன் நேவியின்ர துறைமுகம். விசயம் வலு ரகசியமாக காதும் காதும் வைச்சது மாதிரி நடக்குது. கப்பலில இருக்கிற பொடியளுக்கு உக்ரைன்காரர் அன்று டின்னர் குடுத்திச்சினம். அவையளின்ர சாப்பாடு பொடியளுக்கும் பிடிச்சிருந்தது. இடைக்கிடை தங்களின்ர ஏவுகணையைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தினம். அன்றிரவு ஒரு பரிசோதனையும் செய்து காட்டிச்சினம். அந்த பரிசோதனையை பார்க்க வெளிநாட்டிலயிருக்கிற எங்கட பெரிய ஆட்கள் சிலரும் வந்திருந்தார்கள். வெள்ளை ரீசேட்டும், வெள்ளை ஜம்பரும் போட்டிருந்த நடுத்தர வயசுக்கார மனிதர். கறுப்பு உடுப்புடனிருந்த இளைஞன் மற்றும் இன்னும் சிலருமிருந்தனர். வெள்ளை ஜம்பரும், கறுப்பு உடுப்பும் தான் முக்கியமானவர்கள் போல. அவர்களுடன்தான் உக்ரைன்காரர் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கப்பலில வந்த பொடியளைக் கொஞ்சம் தள்ளி நிற்பாட்டி வைத்து விட்டார்கள். இதனால் இயக்க பெரியவர்களை சரியாகப் பார்க்க முடியாமல் போனது.

பரிசோதனை நடக்கிற இடத்துக்குப் பக்கத்தில ஒரு இடத்திலயிருந்து ஆட்லறி செல்லடிச்சினம். அது தானியங்கி ஏவுகணை. அதன் உணர் திறனுக்குட்பட்ட பகுதியில் வெப்பத்தை வெளியிட்டபடி ஏதும் போனால் தானாகவே புறப்பட்டு துரத்தும். உக்ரைன் ஆட்லறி செல்லையே நடுவானத்தில அந்த ஏவுகணை அழிச்சது.

பொடியளுக்கு நல்ல சந்தோசம். இனி சிங்களவனின்ர பிளேன் எல்லாம் சுக்குநூறாக உடையப்போகுதென்ற கதையைத்தான் எல்லோரும் கதைத்தார்கள். அன்று கப்பலில எங்கடஆள் பெரியகுரலெடுத்து “நந்தசேன மல்லி நீ வந்ததேனோ துள்ளி” என்ற பாட்டை பாடினார். பொடியளெல்லாரும் கைதட்டி ஆட்டம் போட்டினம். இந்தப் பயணம் தான் இப்படி பாட்டும் கூத்துமாக அமர்க்களப்பட்டது. சாமானை முல்லைத்தீவுக்குக் கிட்டவாக கைமாற்றிப்போட்டு, கிபிர் விழுந்திட்டுதாம் என்ற செய்திக்காக பொடியள் காத்திருந்தினம். கடைசிவரை அப்பிடியொரு செய்தியே வரவில்லை. பிறகுதான் தெரியும், பொடியளுக்கு ஏவுகணையை விற்ற கையோடையே அரசாங்கத்துக்கு விசயத்தை சொல்லி, ஏவுகணைக்கான எதிர்ப்பை அரசாங்கத்துக்கு விற்ற உக்ரைன் காரனின்ர பிஸ்னஸ்.

கொஞ்சக் காலத்துக்குப் பிறகு எங்கட ஆள் திரும்பவும் முல்லைத்தீவில தரையிறங்கினார். ஒரு மோட்டார் சைக்கிள் கொடுத்து ஒரு மாதம் லீவில விட்டினம். ஆள் வன்னி முழுவதும் ஓடித்திரிந்தார். அப்ப மாஸ்ரர் இடைக்கிடை முட்டுப்படுறவர் தான். ஆனால், இப்ப ஆள் பெரிய ஆள்த்தானே. முந்தித்தான் மாஸ்ரருக்குக் கீழே. இப்ப எங்கிட ஆள் நினைச்சுக் கொண்டிருக்குது,  தனக்கு மேல மூன்று பேர்தான் இருக்கினமென. முதலாவது தலைவர். அடுத்தது அந்த இரண்டாவது தலைவர் பிறகு, சூசையண்ணை. மாஸ்ரர் கணக்கிலேயே இல்லை. இடையிடையே எங்காவது எதிர்ப்பட்டால், கோர்ன் அடித்தபடி போவார். எங்காவது நேருக்குநேர் சந்தித்தால் இரண்டொரு கதை. அதுக்குப் பிறகு இப்போதுதான் கதைக்கிறார்கள்.

இவ்வளவு காலத்திற்கு பிறகு கதைக்கிறம். அப்ப கூட பார் இந்த உறண்டல் மனுசனை. தேவையில்லாத கதையை விடட்டாம். எது தேவையில்லாத கதையென எங்கட ஆள் தனக்குள்ளயே வெப்பியாரப்படத் தொடங்கினார்.

இப்ப மெல்ல மெல்ல ஆட்களை விடுதலை செய்யத் தொடங்குகிறார்கள். விடுதலையாகும் ஆளை நெருங்கிய உறவுக்காரர் ஒருவர் பொறுப்பெடுக்க வேண்டும். கொஞ்சக் கொஞ்ச ஆட்களாக கூப்பிட்டு வீட்டுக்காரர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லாப் பழகின ஆட்களை ஆமிக்காரரும் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சி பிரியாவிடை சொல்லுகினம்.

இப்ப எங்கட ஆளையும் இன்னும் கொஞ்சப் பேரையும் கூப்பிடுகினம். அதில தான் மாஸ்ரரும் வாறார். விபரங்களைப் பதிவு செய்து புகைப்படம் எடுத்து,கைரேகை பதிந்து ஆட்களை வெளியில் விட்டார்கள். வெளியில வாற எங்கட ஆளின்ர தகப்பன்காரன் நின்று கட்டிப்பிடிச்சு அழுகிறார். எங்கட ஆளும் கண்ணை மூடிக் கொண்டு நிக்குது. இந்த சென்டிமென்ற் எல்லாம் முடிய எங்கட ஆள் பஸ் ஏறப் போனார். அந்த நேரம் பின்னால ஆரோ கூப்பிடுகினம். திரும்பிப் பார்த்தால், மாஸ்ரர். மாஸ்ரர் கத்திச் சொன்னார்.

“நீ ரெண்டாவது தலைவர் ரெண்டாவது தலைவரென்று நச்சரிப்பியே… நாளைய உதயன் பேப்பரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளு”என.

அன்று வீட்டுக்கு வந்த எங்கட ஆளுக்கு பலத்த வரவேற்பு. சொந்தம் பந்தமெல்லாம் மாலைபோடாத குறையாக வரவேற்கினம். எல்லோருடனும் கதைத்துவிட்டு படுக்க நடுச்சாமம் கடந்துவிட்டது. ஆனாலும் அடுத்தநாள் நேரத்துக்கே எழும்பி சந்தியிலயிருக்கிற பேப்பர் கடைக்குப் போனார். ஒரு உதயன் வாங்கினார். அதில நேற்று நடந்த விசயமிருந்தது.

இன்னார் வந்து இன்ன இன்ன அட்வைஸ் பண்ணினாரென்ற விபரம் படத்துடன் வந்திருக்குது. அதை வாசித்த எங்கட ஆளுக்கு தலைவிறைச்சுது. நேற்று வந்தவர் கதைச்ச விசயத்தை போட்டு அவரின்ர பழைய படம் ஒன்றுதான் போட்டிருந்தினம். அது உக்ரைன் ஏவுகணை பரிசோதனைக்கு வந்த ஆள். அந்த ஆள்த்தானா நேற்று வந்த ஆள். எவ்வளவு மாறிவிட்டார்? அவர்தானா எங்கட இரண்டாவது தலைவர்? இது தெரிந்திருந்தால் அவருடன் கதைக்க முயன்றிருக்கலாமென யோசித்துக்கொண்டு கடைக்கு முன்னாலையே நிற்கிறார். “ச்சா… எவ்வளவு பெரிய பிழை விட்டிட்டன.”என தனக்குள்ளே சொல்லிக்கொண்டார். பிறகு, இந்தப் பிழைக்கு தான் மட்டும் பொறுப்பில்லைதானேயெனவும் யோசிக்கத் தலைப்பட்டார். ஏனெனில்,முன்னரெல்லாம் குமரன் பத்மநாபன் என்ற பெயர் பத்திரிகைகளில் வருவதில்லை.

அப்படி வந்தாலும் , யாழ்ப்பாணத்திலும் பிற இடங்களிலும் கூட்டம் வைத்து

யுத்தத்தின் அழிவுகளை நினைத்துக் கண்ணீர் விடுவது  மாதிரியான படங்களெதுவும் பிரசுரமாகியிருக்கவில்லைத்  தானே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 21/10/2022 at 13:06, nunavilan said:

இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் , நன்னி.

 

மறந்துவிட்டேன். இந்தாருங்கள். சேர்த்துவிடுங்கள்.

https://www.facebook.com/legacy/notes/210682605609698/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இரண்டாவது தலைவர்தான் இணைந்த வட-கிழக்கிற்கான தலைவரோ தெரியாது 🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

மறந்துவிட்டேன். இந்தாருங்கள். சேர்த்துவிடுங்கள்.

நல்ல கதை.இணைப்புக்கு நன்றி நன்னி.

3 hours ago, Kapithan said:

எங்கள் இரண்டாவது தலைவர்தான் இணைந்த வட-கிழக்கிற்கான தலைவரோ தெரியாது 🤨

ஓஓஓ

அப்ப சுமந்திரன் சாணக்கியன் இல்லியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல கதை.இணைப்புக்கு நன்றி நன்னி.

ஓஓஓ

அப்ப சுமந்திரன் சாணக்கியன் இல்லியோ?

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.