Jump to content

ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன?

- சாவித்திரி கண்ணன்

 

british-government-1920x1080-1.jpg

என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர்  இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்!

இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘சிறுபான்மையினர் ஒருவரை இங்கிலாந்து பிரதமராக அங்கீகரித்துள்ளது..’என பல வகைப்பட்ட விமர்சனங்கள்! இவை யாவுமே ரிஷி சுனக் குறித்த தவறான பிம்பங்களைத் தான் கட்டமைக்கின்றன! இந்த அரைகுறை புரிதல்கள் மிக ஆபத்தானவை! யதார்த்தங்களை புறந்தள்ளியோ அல்லது சரியான புரிதல் இல்லாமலோ சொல்லப்படுபவை!

முதலாவதாக ரிஷி சுனக்கை தேர்தல் மூலமாக மக்கள் வாக்களித்து அங்கு பிரதமராக்கவில்லை.! தற்போது தேர்தல் நடந்திருந்தால் அவர் சார்ந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி மண்ணை கவ்வி இருக்கும்! அந்த அளவுக்கு அந்தக் கட்சியின் கடந்த இரண்டு பிரதமர்களான போரீஸ் ஜான்சனும், லிஸ்டிரஸும் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகிவிட்டனர்! ”நியாயப்படி பொது தேர்தலை சந்திப்போம்” என்ற தொழிலாளர் கட்சி விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து விட்டு, கன்சர்வேட்டிவ் கட்சி தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சித்தது!

SEI_117461471.jpg

ஆனால், மூன்று பேர் போட்டியிட முன்வந்தனர். அதில் 350 பேர் கொண்ட கட்சி எம்.பிக்களில் 140 எம்.பிக்களின் ஆதரவு பெற்ற வகையில் ரிஷி சுனக் பிரதமராகியுள்ளார். நன்றாக கவனித்தால், அவர் சார்ந்த கட்சிக்குள்ளேயே அவர் முழுமையான ஆதரவை பெறவில்லை! இருப்பதில் சற்று அதிகமான எம்பிக்கள் ரிஷி சுனக்கை ஆதரித்துள்ளனர். இந்த வகையில் சூழ்நிலைகள் எட்டாண்டுகள் மட்டுமே அரசியல் அனுபவம் கொண்ட ரிஷி சுனக்கிற்கு சாதகமாகிவிட்டபடியால் அவர் பிரதமராகிவிட்டார் – ஒரு விபத்தைப் போல! ஆகவே, ரிஷி சுனக் ‘தேர்தல் வழி இங்கிலாந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல’ என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, ‘அவர் இந்தியாவின் மருமகன்’ என்பது படுமுட்டாள்தனமான பார்வையாகும்! அவரது வம்சா வழிப்படி அவரின் தந்தை வழி தாத்தா அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்! அந்த குறிப்பிட்ட ஊர் தற்போது பாகிஸ்தானில் உள்ளது என்ற வகையில் பாகிஸ்தானுமே கூட ரிஷி சுனக்கை மரபு வழி உரிமை கொண்டாட வாய்ப்பாகிறதே!  அவர் இந்து என நாம் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது? ‘இங்கிலாந்தில் மதமாச்சரியங்களற்ற உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்குகிறது’ என்றல்லவா நம் புரிதல் இருக்க வேண்டும்.

Rishi-Sunak-family-1024x649-1.jpg தாய், தந்தை, மாமனார், மாமியார், மனைவி, குழந்தைகளுடன் ரிஷி சுனக்.

அவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது உண்மை தான்! ஆனால், அவர் மகளான அக்‌ஷிதா இங்கிலாந்தின் குடிமகளே அன்றி, இந்தியாவின் குடிமகள் அல்ல! கணவன், மனைவி இருவருமே இங்கிலாந்தின் குடிஉரிமை பெற்றவர்கள்! ஆகவே, ரிஷிசுனக்கை தேவையில்லாமல் நாம் உரிமை கொண்டாடுவது அவர் மீது பிரிட்டிஷ் மக்களுக்கு சந்தேகப் பார்வையை தோற்றுவித்து அவருக்கு சிக்கலைக் கூட ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால், அதை தவிர்த்து அவர் பிரதமராக தேர்வானதை அரசியல் பூர்வமாக அணுக வேண்டும். ஏனெனில், எப்படி அமெரிக்காவில் துணை குடிஅரசுத் தலைவராக கமலா ஹாரீஸ் தேர்வானதால் இந்தியாவிற்கோ, தமிழ் நாட்டிற்கோ கடுகளவும் நன்மை இல்லையோ, அதே தான் ரிஷி சுனக் விஷயத்திலும் என்பதே உண்மை! மற்றபடி சும்மா அவரவர் ஆசைக்கு ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியது தான்!

ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவருமே ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்! ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள்! அந்த வகையில் இந்தியர்களைக் காட்டிலும், ஆப்ரிக்காவும் அவரை உரிமை கொண்டாடலாமே! ஆக அவர் இந்தியரா? பாகிஸ்தானியரா? ஆப்ரிக்கரா? அல்லது இங்கிலாந்துக்காரா? என்றால், இன்றைய குளோபல் உலகத்தில் அவர் உலகளாவிய ஒரு கலப்பு மனிதன்! அவரது பெற்றோர்கள் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது 1960 ஆம் ஆண்டில்! 1980ஆம் ஆண்டு பிரிட்டனின் செளத்தாம்டனில் ரிஷி சூனக் பிறந்தார். ஆக, பிறந்து வளர்ந்து, செல்வாக்கு பெற்று உயர்ந்த இடம் தான் அவரது தாய்நாடு! இங்கிலாந்தின் குடிமகனாகிவிட்ட ஒருவரை இங்கிலாந்து நாட்டுக்காரராக பார்ப்பதும், புரிந்து கொள்வதுமே ஆரோக்கியமானது.

2372210250781621307_5942851.jpg இளவரசர் மூன்றாம் சார்லஸுடன் ரிஷிசுனக்

மற்றொரு உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அவர் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் வேட்பாளராக வரும் அளவுக்கு விரும்பப்படுவதற்கான காரணம், அவர் சிந்தனையில் ஒரு முழுமையான ஆங்கிலேயராக உருவாகிவிட்டார். அவரது இயல்பை உற்று நோக்கினால், அவர் இங்கிலாந்திற்கு அகதிகள் வருவதற்கு கடும் எதிர்ப்பு காட்டுகிறார்! – அவர் தாய்,தந்தையே அங்கு அகதிகளாக வந்தவர்கள் தான் என்பதை மறந்தவராக! பொருளாதாரத்தில் தாராளமயத்தை ஆதரிக்கிறார்! ”பிரிட்டன் அரசு இது வரை தன் குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதை வாபஸ் பெற்று, தனியாரிடம் மருத்துவத்தை முழுமையாகத் தர வேண்டும்” என்கிறார்! ‘தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க வேண்டும்’ என்கிறார். ‘தொழிற்சங்க உரிமைகளை முடக்க வேண்டும்’ என்கிறார்! கடுமையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கிறார்!

பெரிய நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவதை ஆதரிப்பவராக உள்ளார். சிறு தொழில்கள் மீது அக்கறை கொண்டவராகத் தெரியவில்லை! அதனால் தான் லிஸ்டிரஸ் 40 பில்லியன் டாலர்களை ( 3.25 லட்சம் கோடிகள்) பெரு நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தந்தது, ”நல்லெண்ண நடவடிக்கை தான்” எனச் சொன்னார். இந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவராக இருந்தும், ‘மாட்டிறைச்சி சாப்பிடுவது குற்றமல்ல’ என்ற லிபரல் சிந்தனை கொண்டவராக உள்ளார். இவையாவுமே ரிஷி சுனக் ஒரு அப்பட்டமான ஆதிக்க ஆங்கிலேய சிந்தனை கொண்டவர் மட்டுமல்ல, இந்திய வலதுசாரி சித்தாந்தத்திற்கு நெருக்கமானவராகவும் உள்ளார் என்பதை நாம் அறியலாம்! இது தான் உண்மையான முகம்! இங்கே பாஜக ஆதரவாளர்கள் ரிஷி சுனக்கை ஏன் கொண்டாடுகின்றனர் என்பதை நாம் இந்தப் பின்னணியில் இருந்து புரிந்து கொள்ளலாம்!

ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தது பெரிய விஷயமில்லை. இன்று இங்கிலாந்து இருக்கின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இவர் எப்படி மீட்டெடுக்கப் போகிறார் என்பதில் தான் இருக்கிறது அவரது வெற்றியே! ஏனென்றால், இங்கிலாந்து மக்கள் இந்தியர்களைப் போல அல்ல! புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள்! அதே சமயம் பொறுப்புக்கு வந்த தலைவரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பார்கள்! தவறு செய்தால், அது யாராக இருந்தாலும் கடுமையான விமர்சனங்களையும், எதிர்விளைவுகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்.

boris-johnson69-1585397137-1586700534.jp பதவி இழந்த முன்னாள் பிரதமர்கள் போரீஸ் ஜான்சன், லிஸ்டிரஸ்

போரீஸ் ஜான்சனுக்கு என்ன நேர்ந்தது? பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் சாதுரியமாக நைச்சியம் பேசிய போரீஸ் ஜான்சனின் முகத்திரையை கிழித்தார்கள்! ஜகத்தாளம் செய்து காண்பித்தும் மயங்காமல், பதவியில் இருந்து கீழே இறக்கினார்கள்! அடுத்து பிரதமராக வந்த லிஸ்டிரஸை 45 நாட்களில் நாடிப் பிடித்து பார்த்து, ”ம்கூம் நீ தேற மட்டாய்! வெளியேறி விடு” என்றார்கள்! அவர் பதவி விலகிய பிறகும் கூட, ”அவரது ராஜுனாமா ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட தகுதி பெறாது” என எழுதின பத்திரிகைகள்!

இங்கிலாந்தில் மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது! அங்குள்ள ஊடகங்களை ஊழல்மயப்படுத்த முடியாது, பாராளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேச முடியாது! பொய் பேசினாலே புறம் தள்ளிவிடுவார்கள் – அது எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும்! தவறு செய்தால் யாராயிருந்தாலும் தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள்! இந்தியாவில் 11 லட்சம் கோடிகள் கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு மோடி போல ஹாயாக எந்த பிரதமரும் பிரிட்டனில் நடமாடவே முடியாது! ரிஷு சுனக் முள் கிரீடத்தையே தற்போது அணிந்துள்ளார்! அதை மலர் கிரீடமாக மாற்றுவது அவர் செயல்பாட்டில் தான் உள்ளது! அதற்கு அவர் தகுதியானவர் தானா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும்!

சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

 

https://aramonline.in/11018/rishi-sunak-p-m-england-politics/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதலெல்லாம் விடுங்க.. நம்ம ஆளுங்கள அடிச்சிக்க முடியாது..👍

IMG-20221027-071440.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவித்திரி கண்ணன்,   

உங்கள் அப்பாவிடம் ஒரு அலுவலாக கதைக்க வரவேண்டும்.

உங்கள் வீட்டில் குதிர் எதாவது இருக்கிறதா என்று சொன்னால் நலம்.

நன்றி .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதலெல்லாம் விடுங்க.. நம்ம ஆளுங்கள அடிச்சிக்க முடியாது..👍

IMG-20221027-071440.jpg

அட... தமிழ்நாட்டிலிருந்து, ரிஷி சுனக்கிற்கு... 
போஸ்டர் அடிக்கவில்லையே என்று பார்த்தேன்.
அதுகும் வந்து விட்டது. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி சுனக்

jeyamohanOctober 28, 2022

rishi-sunak-0011-1666634822.jpgஅன்புள்ள ஜெ

ரிஷி சுனக் பிரிட்டிஷ் பிரதமராக ஆகியிருப்பது பற்றி நீங்கள் ஏதாவது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று பிரிட்டிஷார் சொல்லிவந்தனர் (சர்ச்சில் சொன்னார்) இன்று இந்திய வம்சாவளியினர் ஒருவர் பிரிட்டிஷ் பிரதமர் ஆகியிருப்பது முக்கியமான நிகழ்ச்சி அல்லவா?

ஆர்.ரமணி

***

அன்புள்ள ரமணி,

இந்திய வம்சாவளியினர் ஒருவர் ஓர் உயர்பதவிக்கு வரும்போது அல்லது பரிசுபெறும்போது இங்கே உருவாகும் பரவசம் என்னைக் கூச்சமடையச் செய்கிறது.

அதிலுள்ள உணர்வு உண்மையில் என்ன? இந்தியர்களுக்கு தங்கள் இனம் சார்ந்து இருக்கும் தாழ்வுணர்ச்சியே. அது வெள்ளையர் உருவாக்கியது. வரலாற்றில் நமக்கு நிகழ்ந்த வீழ்ச்சியால் அடையாளமிடப்பட்டது.

அதை அகத்தே நாமும் நம்புவதனால்தான் ஓர் இந்திய வம்சாவளியினர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வெற்றி அடையும்போது நாம் கொண்டாடுகிறோம். அது நம் வெற்றி என நினைக்கிறோம். ஏனென்றால் அது நம் தாழ்வுணர்ச்சியை கொஞ்சம் போக்குகிறது.

இந்த தாழ்வுணர்ச்சியால்தான் நாம் இங்குள்ள எந்த சாதனைகளையும் கண்டுகொள்வதில்லை. நம் சூழலின் அறிஞர்களை பொருட்படுத்துவதில்லை. எவரையும் அறியமுயல்வதுமில்லை. அரசியல்வாதிகள், கேளிக்கையாளர்களே நமக்கு முக்கியமானவர்கள். ஓர் அரசியல் கட்சியின் விசுவாசிகள்கூட அக்கட்சியின் சிந்தனைகளை உருவாக்கிய அறிஞர்களை பெயர்கூட அறியாதவர்களாக இருப்பார்கள். திகைப்பூட்டும் சூழல் இது.

அதேசமயம் எவருக்காவது ஓர் ஐரோப்பிய அங்கீகாரம் கிடைத்துவிட்டால் மிகையாகக் கொண்டாடுவோம். அறிஞர், ஆய்வாளர் என எவரையாவது கொஞ்சம் அறிமுகம் செய்துகொண்டாலே மிகையாக தூக்கி வைக்க ஆரம்பிப்போம். நம் பொதுவெளி ஆளுமைகளை எல்லாம் தெய்வங்களாகவே முன்வைப்போம்.

ஏனென்றால் உண்மையில் நம்மிலொருவர் அறிஞராக, ஆய்வாளராக எல்லாம் இருக்க முடியும் என்னும் நம்பிக்கையே அடிமனதில் நமக்கு இல்லை. அந்த அவநம்பிக்கையால்தான் நாம் அறிவுசார்ந்த அளவுகோல்களை மறுத்து மிகையாகக் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.

ரிஷி சுனக் அல்லது அதைப்போன்றவர்கள் இந்தியர்கள் அல்ல. இந்தியக் கல்விமுறையில் உருவானவர்கள் அல்ல. இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று சொல்ல ரிஷி சுனக்கையே ஏன் ஓர் ஐரோப்பியர் சுட்டிக்காட்ட கூடாது? இந்தியப் பல்கலையில் பயின்று எவரும் உயர்நிலையை அடையமுடியாது, இந்தியாவை ஆளவேண்டுமென்றால்கூட ஐரோப்பியப் பல்கலையில் பயிலவேண்டும் என அவர் சொல்லலாமே? ரிஷி சுனக்கை உருவாக்கியது பிரிட்டிஷ் கலாச்சாரமும் கல்வியும்தான் என வாதிடலாமே? அது எவ்வளவு இழிவு நமக்கு?

எனக்கு அந்த தாழ்வுணர்ச்சி இல்லை. ஆகவே நான் சுந்தர் பிச்சை, இந்திரா நூயி என்றெல்லாம் நடனம் ஆடுவதில்லை. மெய்யாகவே இந்தியப் பண்பாட்டுக்கும் அதனூடாக உலகப்பண்பாட்டுக்கும் கொடையளித்த இந்திய மேதைகளைப் பற்றி எழுதுகிறேன். அவர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல முயல்கிறேன். அவர்களே நம் பெருமிதம்.

ரிஷி சுனக் விஷயத்தில் என் ஆர்வம் ஒன்றே. பிரிட்டிஷ் பொருளியல் பற்றி படித்தேன். முழுக்கமுழுக்க தொழில்மயமாக்கப்பட்ட நாடு. தொழிலுற்பத்தி, ஏற்றுமதி, அதன் அன்னியச்செலவாணி வருகை வழியாக வாழ்கிறது. உணவுற்பத்தி மிகக்குறைவு. வேளாண்பொருட்களை இறக்குமதி செய்கிறது.

இந்த பொருளாதார ‘டெம்ப்ளேட்’ பிரிட்டனுக்கு பழைய தொழிற்புரட்சிகாலம் முதல் உருவானது. தொழிலுற்பத்திப் பொருட்களை விற்கும் ‘கட்டாயச் சந்தை’ ஆகவும் அதற்கான மூலப்பொருட்களை அளிக்கும் ‘கட்டாய வயல்’ ஆகவும் காலனிநாடுகளை பயன்படுத்தியது.

உலகப்போருக்குப் பின் காலனிகளை இழந்த பிரிட்டன் அமெரிக்க உதவியுடனும் பழைய தொழில்மயமாக்கலின் மிஞ்சிய வசதிகளுடனும் தாக்குப்பிடித்தது. அண்மைக்காலம் வரைக்கும்கூட காலனிகள் சிலவற்றை வைத்திருந்தது.

இன்று சீனாவின் தொழிலுற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஷ் தொழிலுற்பத்திப் பொருட்களை சந்தையில் இருந்து விரட்டுகின்றன. பிரிட்டன் அதன் ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் பத்திலொன்றைக்கூட தன் ஊழியர்களுக்கு அளிக்காத சீனாவின் ஏகாதிபத்தியப் பொருளியலுடன் பிரிட்டன் போரிடமுடியாது.

ஆகவே பிரிட்டனின் பொருளியல் தடுமாறுகிறது தொழிலதிபர்கள் சீனாவுடன் போட்டியிடவேண்டுமென்றால் வரிச்சலுகை வேண்டும் என்கிறார்கள். அதை அளித்தால் தொழிலாளர், அடித்தள மக்கள்மேல் வரிபோடவேண்டியிருக்கும். தொழில்கள் சோர்வுற்றால் தொழிலாளர் வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு பொருளியலை மேலும் வீழ்த்தும்.

பொதுவாக பொருளியல் வல்லுநர்கள் ‘திட்டமிட்டு’ பொருளியலை மேம்படுத்த முடியுமா என்றெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் உண்டு. பொருளியல் அறிந்தவர்கள் சொல்வதை எல்லாம் ஒரு சிட்டிகை உப்புடன் எடுத்துக்கொள்வதே என் வழக்கம். அந்த ஐயம் ஓர் எளிய பாமரனின் தரப்பு என்று கொள்க.

பிரிட்டனுக்கு ஒரே வழிதான். ஐரோப்பாவுக்கே ஒரே வழிதான். நுகர்பொருளுற்பத்தியில் சீனாவுடன் போட்டியிட முடியாது. உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கி மூன்றாமுலக நாடுகள் தலையில் கட்டுவது. அந்த லாபத்தில் பொருளியல்மீட்சி அடைவது. அதற்காக எதையும் செய்வார்கள். வரும்நாட்களில் அதுதான் நிகழும். அதை ரிஷி சுனக் செய்தாலென்ன, போரீஸ் ஜான்ஸன் செய்தாலென்ன?

ஜெ
 

 

https://www.jeyamohan.in/174505/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“”இந்தியர்களுக்குதங்கள் இனம் சார்ந்து இருக்கும் தாழ்வுணர்ச்சியே. அது வெள்ளையர் உருவாக்கியது. வரலாற்றில் நமக்கு நிகழ்ந்த வீழ்ச்சியால் அடையாளமிடப்பட்டது.

அதை அகத்தே நாமும் நம்புவதனால்தான் ஓர் இந்திய வம்சாவளியினர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வெற்றி அடையும்போது நாம் கொண்டாடுகிறோம். அது நம் வெற்றி என நினைக்கிறோம். ஏனென்றால் அது நம் தாழ்வுணர்ச்சியை கொஞ்சம் போக்குகிறது.“”

உத நான் கொஞ்சம் ஆபாசமாகச் சொன்னால் உடனே கந்தையர் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்து சண்டைக்கு நிற்பார். Hannah தீயணைப்புப் படைக்கு தகவலனுப்புவார். 

செயமோன் சொன்னால் போர்த்திக்கொண்டு ஒருக்களிச்சுப் படுத்திருப்பர். 

என்ன உலக மகா நடிப்புடா சாமியோவ்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 2 people, child, people standing and indoor
 
ரிஷி சுனாக்கின் தாத்தா இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலா பகுதியை பூர்விகமாக கொண்டவர். 1930க்களில் குஜ்ரன்வாலா நகரில் பெரிய கலவரம் மூண்டது.
குஜ்ரன்வாலாவில் வசதியாக வாழ்ந்த பலர் அந்த ஊரை விட்டு குடிபெயர்ந்தார்கள்.
 
அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் ரிஷியின் தாத்தா. ப்ரிட்டிஷ் ஆட்சியில் இருந்த கென்யாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே பிறந்தவர் தான் ரிஷியின் அப்பா.
பின்னாளில் கென்யாவுக்கு 1963ல் ப்ரிட்டன் சுதந்திரம் கொடுத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியர்களை ஏராளமாக குடியமர்த்தி இருந்தது ப்ரிட்டன்.
 
பர்மாவிலும் இதே போல் தான் நடந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சி நடந்த இடமெல்லாம் இந்திய மத்தியதர வர்க்கம் குடிபெயர்ந்து, வணிகர்களாகவும், குமாஸ்தாக்களாகவும் ப்ரிட்டிஷ் ஆட்சி நடைபெற வழிவகுத்தது.
ஆனால் பர்மாவில் இருந்து இந்திய்ர்கள் அடித்து விரட்டபட்ட அதுவே காரணமாக அமைந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சியின் அள்ளக்கைகளாக உள்ளூர் மக்கள் அவர்களை கருதினார்கள். அதே மாதிரி பிரச்சனை ஆப்பிரிக்காவிலும் முளைத்தது.
 
கிழக்கு ஆப்பிரிக்காவில் 250,000 இந்திய வம்சாவளியினர் ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன் இருந்தார்கள். "ப்ரிட்டிஷ் ஆசியர்கள்" என அழைக்கப்பட்டர்கள்.
அவர்கள் பிறந்த ஊர்கள் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாக பிரிந்து இருந்தன. அவர்களில் பலர் இந்தியாவை பார்த்ததே கிடையாது.
 
சுதந்திரத்துக்கு பின் அவர்களை கென்யா வெளியேற சொல்ல, அவர்கள் ப்ரிட்டனிடம் அடைக்கலம் கேட்க, ப்ரிட்டிஷ் அரசும் அவர்களை ப்ரிட்டனுக்கு அழைத்துக்கொண்டது.
அப்படி சென்றவர் தான் ரிஷியின் அப்பா. ப்ரிட்டனில் டாக்டராக பணியாற்றினார்.
டான்சானியாவில் இருந்து அகதியாக வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவ்ர் தான் ரிஷி சுனாக் பிறந்த ஆண்டு 1980
நல்ல வசதியான குடும்பம்.
 
ரிஷியும் நல்லா படிக்கும் மாணவன். ஸ்டான்போர்டுக்கு படிக்க செல்கையில் உடன் படிக்கும் அக்ஷதா மூர்த்தி எனும் பெண்ணுடன் காதலில் விழுந்தார். அவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்.
அக்ஷதா மூர்த்தியிடம் தனிப்பட்ட முறையில் இருந்த இன்போசிஸ் பங்குகள் மூலமே அவர் ப்ரிட்டிஷ் அரசியை விட அதிக பணக்காரியாக இருந்தார்.
 
அவரை மணந்தபின் ரிஷியின் வாழ்க்கை எங்கேயோ சென்றுவிட்டது. சுக்ரதிசை அடித்தது. நிதி நிறுவனங்களில் வேலை செய்துகொண்டு இருந்தவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அரசியலில் குதித்தார். எம்பி ஆனார், மந்திரி ஆனார், இப்போது பிரதமரும் ஆகிவிட்டார்.
இந்தியாவின் மருமகன்,
ஆனால் இந்தியர் அல்ல
ஆபிரிக்காவின் மகன்,
ஆனால் ஆபிரிக்கர் அல்ல
ப்ரிட்டிஷ் குடிமகன்,
ஆனால் அங்கே அவரை இந்தியர் என்கிறார்கள்.
பூர்விகம் பாகிஸ்தான்,
ஆனால் அங்கே அவரை பாகிஸ்தானியாக கருதுவதில்லை.
இனத்தால் பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. அதனால் பெரியதாக அங்கேயும் உற்சாகவெள்ளம் கரைபுரன்டு ஓடவில்லை.
ஆக உண்மையான க்ளோபல் சிட்டிசன் என ரிஷியை சொல்லலாம் 🙂
 
ப்ரிட்டன் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி இரண்டும் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சாதிப்பாரா ரிஷி? மார்கரெட் தாட்சர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சிலின் கட்சியையும், நாட்டையும் கரையேற்றுவாரா? பார்ப்போம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 2 people and text
 
வீர குல விச்சுவாகர்மாவின் நாயகனே...
வெள்ளையனுக்கு அதிபதியே...
இனிமே தமிழ் நாட்டில் எங்க சாதிகாரன் தான்டா ஆள்வார்.
 
😁 😂 🤣
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.