Jump to content

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

29.10.2020

முதலாம் இணைப்பு        

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | 15 Year Old Girl And A Boy Arrested Family

யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 21 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த இளைஞன் தனது காதலியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார்.

 

மருத்துவ பரிசோதனைக்கு சிறுமி

 

 

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | 15 Year Old Girl And A Boy Arrested Family

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விடயம் அச்சுவேலி காவல்துறையினரால் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சிறுமியையும் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி காவல் நிலையத்தில் பாரப்படுத்தவுள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

https://ibctamil.com/article/15-year-old-girl-and-a-boy-arrested-family-1667034973?itm_source=parsely-top

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கஸ்டமா கிடக்கு அங்கால கனடா பெண்மணி என்று அடுத்த செய்தி வந்திருக்கு சத்தம் போடாமல் இருப்பம்

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

செய்திகளை பார்க்க மண்டை விறைக்குது. 😡

தமிழினம் எல்லாவிதத்திலும் மறைகழண்ட நிலைக்குச் சென்றுவிட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nochchi said:

தமிழினம் எல்லாவிதத்திலும் மறைகழண்ட நிலைக்குச் சென்றுவிட்டதா?

சிங்களம் செய்த வேலை அது அவர்களுக்கே திருப்பி அடிக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த ஒரு சமூக சேவகியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சாதாரணமாக சொன்னது. தற்போது பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு ஆண் நண்பர் இல்லை என்றால் அது ஒரு குறைபாடாக கேலிக்குள்ளாவதாக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த ஒரு சமூக சேவகியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சாதாரணமாக சொன்னது. தற்போது பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு ஆண் நண்பர் இல்லை என்றால் அது ஒரு குறைபாடாக கேலிக்குள்ளாவதாக. 

விசுகு எமது காலத்தில் ரியூசனுக்கு போகவில்ஐல என்றால் கேலி பண்ணுவார்கள்.

காலத்துக்கு காலம் ஒவ்வொரு பிரச்சனை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த ஒரு சமூக சேவகியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சாதாரணமாக சொன்னது. தற்போது பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு ஆண் நண்பர் இல்லை என்றால் அது ஒரு குறைபாடாக கேலிக்குள்ளாவதாக. 

புலம் பெயர்ஸ்  ரமில்ஸ் மத்தியில் இந்த நிலவரம் எப்புடி நோக்கப்படுகிறது..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படி, படி எண்டு சொன்னதை விட பிடி,  பிடி எண்டு சொல்லாம விட்டிட்டேனே என்று புலம்பெயர்ஸ் மம்ஸ் சில பேர் சொல்லி கேட்டிருக்கிறேன் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்த நேரம் பருத்தித்துறை சந்தையில் நூறு ரூபாய் நோட்டோன்றை குடுத்து கோவாவோ, கரட்டோ, கத்திரியோ ஞாபகமமில்லை, வாங்கிவிட்டு மிச்சத்திற்கு காவல் நிண்ட நேரம் நிண்ட நேரம், அந்த பெண்மணி ஏன் நிக்கிறாய் எண்டு கேக்க , நான் மிச்சத்திற்கு எண்டு பதில் சொல்ல,  அம்மணி உதட்டோரத்து புன்முறுவலுடன் நீங்கள் ரெண்டு ரூவா தரவேணும் இரண்டெண்டபடியால் கேக்கேல்லை என்று சொல்ல, அசடை துடைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ண வேண்டியதாயிற்று .

புலம் பெயர்சிற்கு ஊர் நேரம் அப்பிடியே உறைஞ்சு போச்சு.

இருக்கிற இடத்து நேரம் டபிள் ஸ்பீடில ஓடுது கச்சியேகம்பனே ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

சிங்களம் செய்த வேலை அது அவர்களுக்கே திருப்பி அடிக்கும் .

நாய்க்கு கல்லால எங்க அடிச்சாலும் அது காலைத் தான் தூக்கிக் கொண்டு ஓடும் ??

  • Like 2
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

புலம் பெயர்ஸ்  ரமில்ஸ் மத்தியில் இந்த நிலவரம் எப்புடி நோக்கப்படுகிறது..??

உங்கள் கேள்வி சரியானதே 

புலம்பெயர் தமிழர்கள் வாழும் கலாச்சாரம் மற்றும் சட்டப்படி அவை ஏற்படையவை. 15 வயது வந்தும் தனது மகள் அந்த உணர்வு இல்லாமல் இருப்பதாக என்னுடைய முதலாளி என்னிடம் கவலைப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில் நான் அவரை இவரெல்லாம் ஒரு தகப்பனா என்று பார்க்கும் அளவுக்கு தான் நான் வளர்ந்திருந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

சிங்களம் செய்த வேலை அது அவர்களுக்கே திருப்பி அடிக்கும் .

இதில் சிங்களம் செய்வதற்கு என்ன இருக்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இதில் சிங்களம் செய்வதற்கு என்ன இருக்கிறது? 

யுத்தம் முடிந்தபின்னரும் வடகிழக்கில் இராணுவம் இராணுவ உளவுபிரிவு  குந்தியிருந்து கொண்டு  தமிழ் மக்களிடையே கலாச்சாரா சீரழிவு. போதைவஸ்த்து பாவனை ஊக்குவிப்பு  தராள மது பாவனை வன்முறை குழுக்களை   இவை எல்லாம் மறைமுகமாக வளர்த்து விடுவது உங்களுக்கு தெரியாதாக்கும்.😆 

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

யுத்தம் முடிந்தபின்னரும் வடகிழக்கில் இராணுவம் இராணுவ உளவுபிரிவு  குந்தியிருந்து கொண்டு  தமிழ் மக்களிடையே கலாச்சாரா சீரழிவு. போதைவஸ்த்து பாவனை ஊக்குவிப்பு  தராள மது பாவனை வன்முறை குழுக்களை   இவை எல்லாம் மறைமுகமாக வளர்த்து விடுவது உங்களுக்கு தெரியாதாக்கும்.😆 

வடக்கு கிழக்கு பிரான்சில் இல்லையே பெருமாள். 

இளவயதினரின்/கட்டிளம் பருவத்தினரின் பாலியல் உந்தல் தொடர்பான விடயங்களுக்கெல்லாம் அனாவசியமாக மூன்றாம் தரப்பினை உள்ளிழுத்தல்  எங்கள் புரிதலில் தவறுஇருப்பதாகக் காட்டும். 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வடக்கு கிழக்கு பிரான்சில் இல்லையே பெருமாள். 

இளவயதினரின்/கட்டிளம் பருவத்தினரின் பாலியல் உந்தல் தொடர்பான விடயங்களுக்கெல்லாம் அனாவசியமாக மூன்றாம் தரப்பினை உள்ளிழுத்தல்  எங்கள் புரிதலில் தவறுஇருப்பதாகக் காட்டும். 

முன்றாம் தரப்பு அது இது என்று மாட்ட கட்டி போடுங்க என்றால் நிங்கள் கயிறு பிழை கொட்டில் பிழை என்று தொங்கிக்கொண்டு இருப்பது வழமையானது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முன்றாம் தரப்பு அது இது என்று மாட்ட கட்டி போடுங்க என்றால் நிங்கள் கயிறு பிழை கொட்டில் பிழை என்று தொங்கிக்கொண்டு இருப்பது வழமையானது .

பெருமாள், 

கொஞ்சம் நோகாமல் எழுதினால் ......☹️

விபு காலத்தில் இளவயதினர் ஓடிக் கல்யாணம் கட்டவில்லையா? உங்கள் ஊரில் ஒருவருமே பெண்டிலைக் கூட்டிக்கொண்டு ஓடவில்லையா? 

எதற்கெடுத்தாலும் சப்பைக்கட்டு கட்டாதேயுங்கோ. வெளிநாடுகளில் living together என்பதெல்லாம் சர்வ சாதாரணம். இலங்கையில் மாத்திரம் எல்லோரும் மடக்கிக் கட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்களோ பழஞ்சீலை கிழிஞ்சமாதிரி எதற்கெடுத்தாலும் புறுபுறுத்துக்கொண்டு

கொஞ்சம் ஆற அமர இருந்து யோசியுங்கோ. புண்ணியமாப் போகும். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சாமானியன் said:

படி, படி எண்டு சொன்னதை விட பிடி,  பிடி எண்டு சொல்லாம விட்டிட்டேனே என்று புலம்பெயர்ஸ் மம்ஸ் சில பேர் சொல்லி கேட்டிருக்கிறேன் ...

புலம் பெயர்சிற்கு ஊர் நேரம் அப்பிடியே உறைஞ்சு போச்சு.

இருக்கிற இடத்து நேரம் டபிள் ஸ்பீடில ஓடுது கச்சியேகம்பனே ....

வெளிநாடுகளில் உள்ள உண்மை நிலைமையை தெரிவித்து இருக்கிறீர்கள்.

17 hours ago, சாமானியன் said:

படி, படி எண்டு சொன்னதை விட பிடி,  பிடி எண்டு


அது சிங்கலவரோ தெலுங்கரோ அல்லது வெள்ளையரோ பூரண சம்மதம் என்கின்ற நிலை தான் வெளிநாட்டில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில ஒரு உக்ரைன் காரி கூடச் சிக்கவில்லையா...?! ஈழத்தில் போய் ஏன் இந்த அசிங்கங்களை அரங்கேற்றி அசிங்கப்படுகினமோ..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2022 at 10:26, nedukkalapoovan said:

பிரான்சில ஒரு உக்ரைன் காரி கூடச் சிக்கவில்லையா...?! ஈழத்தில் போய் ஏன் இந்த அசிங்கங்களை அரங்கேற்றி அசிங்கப்படுகினமோ..?!

பிரான்சில் இருக்கக்ககூடிய ஒரு உக்ரைன்காரிக்கு இந்த அசிங்கம் என்று நீங்கள் சொல்லுவதை அரங்கேற்றுவதில் உங்களுக்கு ஒரு வித மான ஆட்சேபனையும் இல்லை போல தெரிகிறது.😡

நல்லா இருங்க ஸார் ...💚

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.