Jump to content

இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
46 நிமிடங்களுக்கு முன்னர்
 

மாத்திரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலியல் ஊக்க மருந்துகளைப் பாவிப்பதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.

"பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது" எனக் கூறும் அவர், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

"மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவது, தரமற்ற மருந்துகளின் பயன்பாடு மற்றும் தவறான அளவுகளில் மருந்துகளைப் பயன்படுத்துகின்றமை இந்த உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன" எனவும் அவர் குறிப்பிட்டார்.

20 தொடக்கம் 25 வயதுகளுக்கு இடைப்பட்டோரும், 40 தொடக்கம் 45 வயதுகளுக்கு இடைப்பட்டோருமே, இந்த நிலைமையை அதிகமாக எதிர்கொள்வதாகவும் இரேஷா ஷோனி கூறினார்.

 

பல இளைஞர்கள் இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்துகளை பரிசோதனைக்காக அருந்தியுள்ளனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்துகளைப் பயன்படுத்துவதனால், மாதமொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மரணங்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது அதிக எண்ணிக்கை என்றும், இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவிக்கின்றார்.

தவறான தகவல்களைப் பரப்பும் ஆபாசப் படங்கள், பாலியல் விளம்பரங்கள்

இது தொடர்பில் மனநல மருத்துவர் யூ.எல். சரப்டீனிடம், பிபிசி தமிழ் பேசிய போது, பாலியல் தொடர்பான அறிவு சமூகத்தில் குறைவாகக் காணப்படுகின்றமை பாரியதொரு பிரச்னையாக உள்ளது என்கிறார். இதன் காரணமாகவே, பாலியல் உணர்வைத் தூண்டும் மருந்துகளை சிலர் தான்தோன்றித்தனமாக பெற்றுப் பயன்படுத்துவதாவும் கூறுகிறார்.

குறிப்பாக பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்றவர்கள் மத்தியில், தெளிவான அறிவின்மை காணப்படுகின்றமை பிரச்னையாக உள்ளது என்றும், இதனாலேயே பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்துகளை இவர்கள் நாடுகின்றனர் எனவும் அவர் விவரித்தார்.

"ஆபாசப் படங்கள் (Pornography) இலகுவில் இப்போது கிடைப்பதால் அதனை கணிசமானோர் பார்க்கின்றனர். இதன்போது நீண்ட ஆண்குறிகள், அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுதல் தொடர்பில் தவறான தகவல்கள் பரவுகின்றன. நீளமான ஆண்குறிகளைக் கொண்டவர்கள்தான் பாலியல் நடத்தையின் போது, பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பது தவறான நம்பிக்கை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீண்ட நேரம் உடலுறவுகொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் தவறான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் மனநில மருத்துவர் சரப்டீன் சுட்டிக்காட்டினார்.

"இவ்வாறான விளம்பரங்களைக் காண்பவர்களில் சிலர், ஆண்குறி விறைப்படைவதற்கான மருந்துகளை நாடுகின்றனர்".

 

ஆபாசப் படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சில ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படையும் தன்மை குறைவாக இருக்கும். அதற்கு நோய்தான் காரணமாக இருக்கும் எனக் கூற முடியாது. சிலவேளைகளில் பய உணர்வு உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளும் இருக்கக் கூடும்" என அவர் விளக்கமளித்தார்.

ஆண்குறி விறைப்படைவதற்கு நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களின் செயற்பாடுகள் சீராக இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடும் அவர்; "இவற்றில் பிரச்னைகள் உள்ளபோது ஆண்குறி விறைப்படைவதில் கோளாறு ஏற்படலாம்" என்கிறார்.

"எனவே, ஆண்குறி விறைப்புத் தன்மையில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவ உதவியை நாடவேண்டும். அதன்போது குறித்த நபர் தொடர்பில் மருத்துவ பரிசோதகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் மருந்துகள் தேவைப்படும் என்றால் மட்டுமே மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்".

"சில ஆண்களுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறுவதுண்டு. அவர்களுக்கும் நீண்ட நீரம் விறைப்படையும் தன்மையைப் பேண முடியாத நிலை காணப்படும். இவ்வாறானவர்கள்தான் பார்மசிகளில் தான்தோன்றித்தனமாக மருந்துகளை வாங்கிப் பாவிக்கின்றனர் என டொக்டர் சரப்டீன் குறிப்பிட்டார்.

 

மாத்திரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவர்கள் தவிர பாலியல் பிரச்னைகள் எதுவுமற்ற சிலர், பாலியல் நடத்தையில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பார்மசிகளில் மருந்துகளைப் பெற்றுப் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் கூறுகின்றார்.

"இவ்வாறானவர்கள் ஒரு விடயத்தைத் தெரிந்து கொள்தல் வேண்டும். பாலியல் நடத்தையில் உச்ச நிலையை அடைவதற்கு ஒப்பீட்டு ரீதியில் பெண்களுக்கு அதிக நேரம் எடுக்கும். ஆண்களுக்கு குறைவான நேரமே எடுக்கும். இது தொடர்பான கல்வி சார் அறிவு ஆண்களுக்கு இருக்குமானால், பாலியல் நடத்தையின் போது, உச்ச நிலையை ஒரே நேரத்தில் இருவரும் அடைந்து கொள்ள முடியும்" என்கிறார் மனநல மருத்துவர் சரப்டீன்.

"ஆண்களுக்கு விந்து வெளியேறிய பின்னர் அல்லது உச்ச நிலையை அடைந்த பின்னர், அவர்கள் மீண்டும் உடலுறவுக்குத் தயாராகுவதற்கு ஒப்பீட்டு ரீதியில் பெண்களை விடவும் அதிக நேரம் எடுக்கும். ஆனால் பெண்கள் இரண்டு, மூன்று முறைகள் தொடர்ச்சியாக உச்ச நிலையினை அடைவதுண்டு".

"பாலியல் நடத்தையின் போது உச்ச நிலையை அடைவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம், ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும். உச்ச நிலையை அடைவதற்கு குறைவான நேரத்தை எடுத்துக் கொள்வோர், தாம் குறைபாடுள்ளவர்கள் என நினைத்துக் கொள்வதுண்டு".

"இவ்வாறானவர்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெறாமலும், பிரச்னைகள் அடையாளங் காணப்படாத நிலையிலும் பார்மசிகளில் இதற்காக மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் கூறினார்.

"பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்துகள் - இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, இரத்தம் செல்லும் அளவை அதிகரிக்கிறது. இதனால் ஆண்குறிகளில் ரத்தம் தேக்கமடையும். அதனாலேயே ஆண்குறி விறைப்படைகிறது".

"இவ்வாறான மருந்துகளைப் பாவிப்பவர்களுக்கு ஏற்கனவே மாரடைப்பு வரக்கூடிய சாத்தியங்கள் இருக்குமானால், இந்த மருந்துப் பாவனை - மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும். இந்நிலைமை மரணத்தை ஏற்படுத்தும் நிலையினையும் உருவாக்கி விடும்" எனவும் அவர் எச்சரித்தார்.

மருத்துவ ஆலோசனையின்றி இவ்வாறான மருந்துகளைப் பாவிப்போர், அவ்வாறான மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை அல்லது வேறு அறிகுறிகளை உதாசீனம் செய்து விடுவதாகவும் மனநல மருத்துவர் சரப்டீன் சுட்டிக்காட்டினார்.

 

மனநல மருத்துவர் சரப்டீன்

 

படக்குறிப்பு,

மனநல மருத்துவர் சரப்டீன்

உளவியல் காரணங்கள்

இதேவேளை, பாலியல் நடத்தையின் போது சிக்கல்களை எதிர்கொள்வதற்கு உளவியல் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

"ஆண்குறி விறைப்படையாமைக்கு உளவியல் பிரச்னைகளும் காரணமாக இருப்பதுண்டு. பயம், தமது செயற்பாடுகளை ஊன்றிக் கவனிக்கும் தன்மை உள்ளிட்ட விடயங்கள் - உளவியல் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவதுண்டு. விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதிலும் உளவியல் ரீதியாக பிரச்னைகள் ஏற்படுவதுண்டு" எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, பாலியல் நடத்தையில் சிக்கல் உள்ளமைக்கு - உடல் சார்ந்த பிரச்சினைகளா? அல்லது உளவியல் பிரச்னைகளா காரணம் என்பதை அறிந்து கொள்ளாமலேயே, கணிசமானோர் தன்னிச்சையாக பார்மசிகளில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்கின்றனர் எனக் குறிப்பிடும் சரப்டீன்; "இது மிகவும் ஆபத்தானது" என எச்சரிக்கின்றார்.

இவ்வாறான மருந்துகள் ஆரம்பத்தில் பாலியல் நடத்தையில் வீரியத்தை அதிகரித்தாலும், அவற்றின் பக்க விளைவுகள் காலப்போக்கில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் எனவும் மனநல மருத்துவர் சரப்டீன் தெரிவிக்கின்றார்.

மருத்துவர்களிடம் செல்வதற்கு வெட்கம்

பாலியல் உணர்வைத் தூண்டும் மருந்து விற்பனை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில தனியார் பார்மசி விற்பனையாளர்களிடம் பிபிசி தமிழ் சில தகவல்களை கோரிய போது, தமது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது எனும் உறுதிமொழியைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் பேசினார்கள்.

பாலியல் உணர்வைத் தூண்டும் மருந்துகளை தம்மிடம் பெற்றுச் செல்வோரில் மிக அதிளவானோர், மருத்துவர்களிடம் செல்வதில்லை என்றும், "மருந்துச் சீட்டு இன்றி வருவோர், தமது பிரச்சினைகளை எம்மிடம் கூறும்போது அதற்கான குளிசைகளை நாங்கள் வழங்குவோம்" எனவும் பிபிசியிடம் பேசிய தனியார் பார்மசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று வகையான 'பொதுப் பெயர்'களைக் கொண்ட, 15 - 20 வகையான வர்த்தகப் பெயர்களுடைய, பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மாத்திரைகள் தமது பார்மசியில் உள்ளதாக பிபிசியிடம் பேசிய விற்பனையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

பார்மசி விற்பனையாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த மாத்திரைகள் 100 ரூபா தொடக்கம் 283 ரூபா (இலங்கைப் பெறுமதியில்) விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தம்மிடம் இவ்வாறான மாத்திரைகளைக் கொள்வனவு செய்வோரில் அதிகமானோர் 45 வயது தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்டோர் என, அந்த விற்பனையாளர் கூறினர்.

மருத்துவரின் பரிந்துரையின்றி இவ்வாறான மாத்திரைகளை சுயமாகக் கொள்வனவு செய்து அவற்றினைப் பயன்படுத்தியவர்களில் சிலர், தமக்கு அந்த மாத்திரைகள் பயனளிக்கவில்லை என்றும், அவற்றினைப் பாவித்த பின்னர் தலைவலி போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும் தம்மிடம் கூறியதாக, பிபிசியுடன் பேசிய தனியார் பார்மசி விற்பனையாளர்கள் மேலும் கூறினர்.

மருத்துவர்களிடம் சென்று தமது பிரச்னைகளைக் கூறுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான், பார்மசிகளில் இவ்வாறான மருந்துகளை இவர்கள் கொள்வனவு செய்கின்றனர் எனவும் பிபிசி தமிழுடன் பேசிய பார்மசி விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-63477145

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.