Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித காட்சிச் சாலை!


Recommended Posts

மனித காட்சிச் சாலை!

******************

சனி,ஞாயிறு நாட்களில்

அந்த..

மிருகக் காட்சிச் சாலை

பரபரப்பாகவே விடியும்.

காரணம் பார்வையிடும்

மக்கள் வெள்ளம் 

அலைமோதுமென்பதால்.

 

யானைகளின் -சாகச

 விளையாட்டுக்கள்

குரங்கு ககளின்

தாவல்கள்

சிங்கத்தின் வீர நடை

சிறுத்தையின் ஓட்டம்

கரடி புலி சிவிங்கி 

காண்டா மிருகமென..

ஒவ்வொன்றும் ஒவ்வொரு

விதமான வீர

செயல்களைக்காட்டி

மக்களை மகிழ்வித்து

வருவது வளக்கம்.

 

அதனால் அவர்களுக்கும்

நல்ல உணவு கிடைத்தது

காட்டை மறக்கடித்து

கம்பிக்கூடுகளில் -தம்

வாழ்வை மறந்து

வாழ்ந்தன அங்கு.

 

இப்போது எல்லாம் 

சனி,ஞாயிறு களில்..

மக்களைக் காணாமல்

மிருகங்களெல்லாம்

உற்சாகமிளந்து 

ஓய்ந்து கிடக்கிடந்தன

உணவுமில்லாமல்.

 

இதை பொறுக்கமுடியாத

 சிங்கமொன்று..

வெறிச்சோடிக் கிடந்த

மிருகக்காட்சி சாலையின்

வேலியை கிளித்து

வெளியில் புறப்பட்டது.

 

அது..

ஊருக்குள் புகுந்து

ஊர்ப்புதினங்களை

 திரட்டியவாறு

திரும்பவும்

கூட்டுக்குள் வந்து

குதித்தது.மகிழ்சியில் 

 

குஷியாயிருக்கும் 

சிங்கத்திடம்

குசலம் விசாரித்தன  

மற்றைய மிருகங்கள்.

 

சிங்கம் சிரித்தபடியே 

சொன்னது..

எனி எமக்கு இங்கு 

வேலையில்லை

நமக்கு சுதந்திரம் 

கிடைத்துவிட்டது.

 

புரியும்படியாக 

சொல்லென்று

புன்னகைத்தன மற்றைய 

மிருகங்கள். 

 

சில மனிதர்களை 

அடைத்துவைத்து

அவர்களின் சேட்டைகளை

மனிதர்களே பார்த்து

மகிழ்வதும்,ஏசுவதுமாக

 

காலத்தை வீணடிக்கும்-அந்த

கலிகாலம் வந்துவிட்டதென்று

கர்சித்து சொன்னது சிங்கம்.

 

மிருகங்களோ மகிழ்சியில்

வேலியில்லுள்ள 

கமராக்களையும் 

கம்பிகளையும் 

உடைத்துக்கொண்டு 

காட்டுக்குள் பாய்வதற்கு

வீறுநடையோடு

வெளிக்கிட்டன.

 

காவல் இருந்தவர்களோ

கைபேசியில் பஜை ரிவி 

பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.