Jump to content

ராஜபக்‌ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

ராஜபக்‌ஷர்களின் பலமும் அவர்களின் குடும்பம்தான்; பலவீனமும் அவர்களின் குடும்பம்தான். ஒரு காலத்தில் அவர்களைப் பொறுத்தமட்டில் அதன் பலம், பலவீனத்தை விஞ்சி நின்றது.

ஆனால், காலம் செல்லச் செல்ல, குறிப்பாக 2012இன் பின்னர் பலவீனம், பலத்தை விஞ்சி நிற்கிறது என்று சொன்னால் அது பொய்யல்ல. ஆனால் ‘ராஜபக்‌ஷ’ என்ற பெயருக்கு, குறிப்பாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியிடம் இன்னும் செல்வாக்கு இருக்கிறது. 

2018இல், 52-நாள் அரசியலமைப்பு விரோத சதி, ராஜபக்‌ஷர்களின், குறிப்பாக  மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயர் சிதைந்து போனாலும், அது ராஜபக்‌ஷ ஆதரவுத்தளத்தை முற்றாக தகர்த்துவிடவில்லை. வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள், 52-நாள் சதியிலிருந்து நாடு காப்பாற்றப்பட்டதைத்தான் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரானதும், தமக்கு எதிரானதுமான சதியாகப் பார்த்தார்கள். ஆனால், இந்த வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவு வாக்கு வங்கி, ஜனாதிபதித் தேர்தலுக்கு உதவாது. 

2009 யுத்த நிறைவுடன், ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதத்தின் ஒப்புயர்விலாத் தலைவனாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் நிலை, 2015இன் பின்னர் கூட தகரவில்லை. ஆனால், 2018இல் 52-நாள் அரசியலமைப்பு விரோத சதி, மஹிந்தவின் ஆதரவாளர் அல்லாத, ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதிகளுக்கு இன்னொரு தலைமைக்கான அவசியத்தையும் வெற்றிடத்தையும் உணர்த்தியது.

ஆனால், அது ராஜபக்‌ஷ அல்லாத ஒருவராக இருந்தால், வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் எனும் வாக்கு வங்கியின் ஆதரவு கிடைக்காது. அது ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத வாக்கு வங்கியை உடைப்பதாக அமையும். மேலும், ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியிலும், ஊசலாடும் வாக்குகள் நிறையவே உண்டு, அவற்றையும் கையப்படுத்தினால்தான் பெரியதொரு வெற்றியை அடையலாம் என்பது அவர்களின் சிந்தனையாக இருந்திருக்க வேண்டும்.

image_24fd108e07.jpg

இந்த இடத்தில்தான், அந்த வெற்றிடத்தை நிரப்ப கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற அரசியல் முன்னனுபவம் அற்ற, ஹிட்லரைப் போன்ற பெரும் சர்வாதிகாரியென்ற பிம்பம் கட்டியெழுப்பப்பட்ட நபரை, இந்த மஹிந்த ராஜபக்‌ஷ அல்லாத குழுவும், ஊடக வணிக வியாபாரிகளும் ஆயுத வணிகர்களும், அவர்களின் ஆதரவில் இயங்கிய படித்துப்பட்டம் பெற்ற தொழில் நிபுணர்களான ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதிகளைக் கொண்ட ‘வியத்மக’ என்ற அமைப்பும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடுத்த தலைமைப் பதவிக்கு முன்னிறுத்தத் தொடங்கின. 

52-நாள் அரசியலமைப்பு விரோத சதி தோற்கடிக்கப்பட்ட பின்னர், மஹிந்த மீண்டும் பழையபடி அமைதியாகினார். மஹிந்தவின் அமைதியை மேற்சொன்ன குழு, தமது நிகழ்ச்சிநிரலை முற்கொண்டு செல்லப் பயன்படுத்தியது.

 கோட்டாபயவை ஜனாதிபதியாக்க மஹிந்தமுனைந்தார் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, பெரும் களிப்பேதுமில்லாத முகத்துடன், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் வரை, கோட்டா பற்றியோ, கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக்குவது பற்றியோ மஹிந்த எதுவித முன்னெடுப்புகளையும் செய்யவில்லை.

மஹிந்தவிடம் வேறு திட்டங்கள் இருந்திருக்கலாம். மேற்சொன்ன குழுவின் அழுத்தத்தின்பேரில் கோட்டாவை ஜனாதிபதியாக்குவது என்பது, மஹிந்தவைப் பொறுத்தவரையில் குடும்பம், மற்றும் கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கை தானே குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். 
மேலும் கோட்டாவுக்கு அரசியல் அனுபவம் கிடையாது. தலைமைத்துவப் பண்பு சுத்தமாகக் கிடையாது. ஆனால், ‘நான்’ என்ற அகம்பாவமும் முட்டாள்தனமான முடிவை எடுத்தபின், அதன் பாதிப்புகளைப் பார்த்தபின் கூட, ‘நான்’ என்ற மமதையின் விளைவால் அதனை மாற்றிக்கொள்ளாத ஆபத்தான் குணமெல்லாம் கோட்டாவுக்கு இருக்கிறது என்பதை கோட்டா ஜனாதிபதியாகிய பின்னர்தான் மக்கள் தெரிந்துகொண்டார்கள். அது கோட்டாவின் அண்ணாவான மஹிந்தவிற்கு முதலே தெரிந்திருக்கலாம்.

அதனால் ஜனவரி முதல் ஏப்ரல் 2019 வரை மஹிந்த அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கழுவும் நீரில் நழுவும் மீனாகத்தான் இருந்தார். ஆனால்,‘வியத்கம’ குழுவினர், கோட்டாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னிறுத்தும் கைங்கரியத்தை ஊடகங்கள் வாயிலாகவும், கூட்டங்கள் மூலமும் நடத்திக்கொண்டுதான் இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில்தான், இலங்கையர்கள் மட்டுமல்லாது முழு உலகமுமே அதிர்ந்துபோன உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கையை ஆட்டிப்போட்டன.

தென்இலங்கையர்களுக்கு இது யுத்த கால ஞாபங்களை ஏறத்தாழ 10 வருடங்களின் பின்னர் மீட்டுக்காட்டியது. இதனால் கதிகலங்கிப்போன சிங்கள-பௌத்த வாக்கு வங்கி, ‘ஹிட்லரை’ப் போன்ற ராஜபக்‌ஷதான் தமக்குச் சரியான தலைமையென்று எண்ணத் தொடங்கியது. அந்த எண்ணத்தை உடனடியாக அறுவடை செய்யும் வகையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பு சந்தர்ப்பம் சார்ந்தது. மஹிந்தவுக்கு கோட்டா ஜனாதிபதியாவதில் முழு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அன்று இருந்த ஒரே பலமான வழி அதுதான். ஆகவே அந்த சமரசத்தை மஹிந்த, பசில், நாமல் என அனைத்து ராஜபக்‌ஷர்களும் ஏற்றிருக்கலாம். அந்த முடிவின் பிரதிபலன் இரண்டு வருடங்களில் கிடைத்தபோது, முதல் அடிகளை வாங்கியவர்களும் பசிலும் நாமலும் மஹிந்தவும்தான்.

ராஜபக்‌ஷர்கள் மீது கொலைகாரர்கள்; மக்கள் பணத்தை சுரண்டியவர்கள்; இன அழிப்பாளர்கள் என்று ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஆனால் ராஜபக்‌ஷர“கள் செயல் வீரர்கள்; எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதுதான் அவர்களது ஆதரவாளர்களுக்கு இருந்த ஒரே பலமான பதில் பேச்சு.

அதுவும் பொய்! ராஜபக்‌ஷர்கள் மிகப் பெரிய ‘ஃபெய்லியர்’ என்பதை தனது அடி முட்டாள்தனமான முடிவுகளாலும், மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்த நாடுவிட்டுத் தப்பித்து ஓடிய தனது நடவடிக்கையாலும் கோட்டாபய நிரூபித்துவிட்டார். இன்று ராஜபக்‌ஷர்கள் மீண்டும், கீழானதொரு நிலையில் நின்று கொண்டு அடுத்தது என்ன செய்வது என்று சதியாலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களின் பலம் ஒன்றுதான். அது இனவாதம். ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதம்தான் ராஜபக்‌ஷர்களின் அரசியல் மூலதனம். ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தௌிவு சிங்கள-பௌத்த வாக்கு வங்கியின் ஒரு சிறிதளவினருக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது.

மேலும், ராஜபக்‌ஷர்களால் வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பு முடியும் என்று பெரும்பான்மை வாக்கு வங்கி, இன்றைய பொழுதில் நம்பவில்லை. இதைவிடவும், ராஜபக்‌ஷர்களோடு கூட இருந்தவர்கள் பலரும், கவிழும் கப்பலாக ராஜபக்‌ஷர்களை கருதி, அதிலிருந்து பாய்ந்து, தனி வழிப் பயணத்தை தொடங்கிவிட்டார்கள்; இன்னும் பலரும் அந்த வழியில் தொடர்வார்கள் என்பது யதார்த்தம். 

ஆகவே, மீண்டும் தனித்த ராஜபக்‌ஷ ஆட்சியென்பது குறுங்காலத்தில் சாத்தியமில்லை என்பது ராஜபக்‌ஷர்ளுக்குத் தெரியும். ஆகவே ராஜபக்‌ஷர்கள் குறுங்காலத்தைவிட, நீண்டகாலத்தைப் பற்றி யோசிப்பதுதான் அவர்களுக்கு உசிதமானது.

ஆனால், இயற்கை மஹிந்தவுக்கும் சமலுக்கும் அவ்வளவு காலத்தை வழங்குமா என்பது முதல் கேள்வி. மஹிந்த உள்ளவரைதான் நாமலுக்கான இன்றைய இடம்; மஹிந்தவுக்குப் பிறகு, ராஜபக்‌ஷர்களே நாமலுக்கு இன்று அவர்கள் வழங்கியுள்ள இடத்தை வழங்குவார்களா என்பது கேள்விக்குறி.இதே நிலைதான் மஹிந்தவின் மற்றைய இரண்டு புதல்வர்களுக்கும்.

சசீந்திர ராஜபக்‌ஷ இதுவரை காலமும் அமைதியாக தன்னுடைய அரசியலை தனிவழியில் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒருவேளை காலம் அரசியலின் முன்னணிக்கு அழைத்து வரக்கூடும். ஆனால், இவர்கள் எல்லாரையும் விட, அரசியல் ஆசையோடும், கனவோடும் இருப்பது பசில்தான்.

ஆனால், பசிலின் ஜனாதிபதி கனவு என்பது சாத்தியமற்றது என்பது பசிலுக்குப் புரியவில்லை. கோட்டாவைக் கொண்டு வந்தே சூடுகண்ட மக்கள், பசிலை நினைத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள் என்பது யூகிக்கக் கூடியதே!

இந்த இடத்தில், கோட்டாவை மீண்டும் கொண்டு வர, அவரை முதலில் கொண்டு வந்த அதே கூட்டம் முயல்வதாகவும் செவிவழிச்செய்திகள் சொல்கின்றன. ஆனால் அதற்கான வாய்ப்புகளும் அரிதே.

ராஜபக்‌ஷர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விக்கு, ஒரு பதிலை உறுதியாகச் சொல்லலாம். அவர்கள்,  ‘மீண்டும் தாம் எப்படி அதிகாரத்துக்கு வருவது என்பதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்’.

ஆனால், தற்போது ராஜபக்‌ஷர்கள் முன்னர் இருந்தளவுக்கு ஒற்றுமையாக இல்லை. அவர்களது பலம், அவர்களிடம் இல்லை. அதுவும் நல்லதுதான்.  
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்கள்-என்ன-செய்யப்-போகிறார்கள்/91-306720

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.