Jump to content

காலத்தை வீணாக்காதீர்கள் .காலம் பொன் போன்றது .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
 
இன்னொருவன்
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான்.
ஆனால்,5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...!
 
இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில்
அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன்
முன்பே கணித்து வைத்தவை.
 
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
 
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை
செய்து கொண்டிருக்கின்றாய்!
அவ்வளவே...!ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை
செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
 
நன்றி முக புத்தகம்.
 

 

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிலாமதி said:

 

விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
 
இன்னொருவன்
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான்.
ஆனால்,5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...!
 
இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில்
அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன்
முன்பே கணித்து வைத்தவை.
 
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
 
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை
செய்து கொண்டிருக்கின்றாய்!
அவ்வளவே...!ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை
செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
 
நன்றி முக புத்தகம்.
 

 

உண்மைதான். எமக்கு அப்பால்பட்ட சக்தி ஒன்று உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிலாமதி said:

நன்றி முக புத்தகம்.

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

ஒன்று சறுக்கினால் இன்னொன்றில் ஏறவேண்டியது தானே. 😀

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் தாயார் சொல்லுவா

எல்லோருக்கும் தலையில் எழுதி மயிரால் மூடிவிட்டிருக்கென்று.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

 

6 minutes ago, நிலாமதி said:

ஒன்று சறுக்கினால் இன்னொன்றில் ஏறவேண்டியது தானே. 😀

அக்கா,  இவ்வளவு வேகமாக… மற்றதில், ஏறுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 

அக்கா,  இவ்வளவு வேகமாக… மற்றதில், ஏறுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. 🤣

அது தான் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்ப சிக்கலை அவிழ்ப்பதிலும் பார்க்க , பிடடாகவே குழைத்து விடலாம்.😀
 ஒனறு தனிப்படட து மற்றது நட்ப்புகளுக்கானது நடப்புகளுக்கானதில் சில தவறுகள் ( என்னால் ) ஏற்பட்டுவிட்ட்து. அதைப்பேசாமல் கை விடடாச்சு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனது மனைவியின் தாயார் சொல்லுவா

எல்லோருக்கும் தலையில் எழுதி மயிரால் மூடிவிட்டிருக்கென்று.

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

மொட்டை விழ முதல் எழுதியாச்சு.  ......மொட்டை விழுந்தாலும்.  வெளியில் தெரியாது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லி இருக்கு........கருத்துக்களால் மறுக்கலாம் ஆனால் யதார்த்தம் இதுதான்......!  👍

நன்றி சகோதரி......!  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

உண்மையை சொல்லி இருக்கு........கருத்துக்களால் மறுக்கலாம் ஆனால் யதார்த்தம் இதுதான்......!  👍

நன்றி சகோதரி......!  

ஏதோ ஒரு ஒழுங்கில் சகலமும் நடைபெறுவதை நானும் உணர்ந்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

நீங்க என்னை சொல்லல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க என்னை சொல்லல்லையே?

உங்களுக்கு மொட்டை என்று எனக்குத் தெரியாது  பிரியன், நீங்கள் சொல்லும்வரை 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!

உண்மை
உன்னால் முடிந்ததை இன்றே செய்து விடு
அது உன் கடமை
என்னால் முடியவில்லை என்று நான் எப்போதும்
கவலைப் பட்டதில்லை
இப்போது எனது பிள்ளைகள் அதை நிறைவேற்றி உள்ளார்கள்
தலைவிதி என்பது எங்களையும் மீறிய ஒரு சக்தியால் நிர்ணயிக்கப்படுகின்றது அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:
ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை
செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
 

நல்லதொரு இணைப்பு.
பிறக்கும் போதே உன் தலைவிதி எழுதப்பட்டு விட்டதென முதியவர்கள் கூறுவார்கள்.
நாடு விட்டு நாடுகள் வந்து இப்படி வாழ்வோம் என கனவிலும் நினைத்திருப்போமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை வீணாக்காதீர்கள் காலம் பொன் போன்றது - நல்லதொரு அறிவுரை 👍

ஆனாலும் இலங்கை தமிழ் பிரதேசங்களில் குறிப்பிட்ட அளவு ஆட்களை  தேர்ந்து எடுத்து மேற்குலக நாடுகளுக்கு சென்று இன்பத்துடன் வாழ்வாயாக என்று அவர்கள் தலையில் தலைவிதி எழுதி அனுப்பி வைக்கும் உடான்ஸ் கடவுளின் சக்தியே மகத்தானது.

Link to comment
Share on other sites

எல்லாம் விதி என்றல் எதற்கு குத்தி முறிவான், பேசாமல் இருக்கலாம் அல்லவா ? போராட்டம் தோல்வி அடைந்து இத்தனை மக்கள் இறந்ததும் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டதென்றால் இறைவனின் கட்டளையை நிறைவேற்றி முடித்த சிங்களவருக்கு நாங்கள் நன்றியல்லவா சொல்ல வேண்டும் ?

ஒவ்வொரு நிகழ்வின் மாற்றத்துக்கும் ஒரு காரணி உண்டு. இயலாமையின் வெளிப்பாடுதான் விதி. ஒரு காரியம் நடக்கவேண்டி விரதம் இருந்து அது நடந்தால் இறையருள் ! நடக்காவிட்டால் விதி 😄

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமே முயற்சி செய்கின்றவர்கள் தான்.ஆனால் வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது ஏன்?

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

எல்லோருமே முயற்சி செய்கின்றவர்கள் தான்.ஆனால் வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது ஏன்?

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவில் உள்ள செய்தி அருமை. பதிவையும் யாழ் சொந்தங்களின் பின்னூட்டங்களையும் வாசித்தபின் பின்வருமாறு எழுதத் தோன்றுகிறது :

       "வாழ்வில் நமக்கு ஒப்பீட்டுக் கவலை அவசியமில்லை. நமது முயற்சிகளும் மனநிறைவுமே நமது ஆளுமையில் உள்ளவை"  என்பதுவே பதிவின் மையக் கருத்து. மற்றபடி "இறைவன் கணித்து வைத்தவை" என்பதும், "விதிக்கப்பட்டவை" என்பதும் அவரவரின் வேறுபட்ட வெளிப்பாடுகள்; நம்பிக்கை சார்ந்தும் இருக்கலாம். மேற்குறிப்பிட்ட பதிவில் நம்பிக்கை சார்ந்ததாகவே தோன்றுகிறது.

          நான் பொதுவாக இவற்றை சமூக மரபு சார்ந்த கவித்துவ வெளிப்பாடாகக் கொள்வதுண்டு. உதாரணமாக "அட கடவுளே !" மற்றும்  "அப்பணிக்குப் பிள்ளையார் சுழி போட்டாயிற்று" போன்ற மரபுச் சொல்லாடல்களை நான் பயன்படுத்துவதுண்டு. இத்தகைய பயன்பாட்டால் நான் இறை நம்பிக்கை உள்ளவன் என்று பொருளில்லை. ஒரு மொழி தரும் அழகியலை நான் இழக்கத் தயாரில்லை. அவ்வளவே.  

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

ஒரு பாடத்தை மூன்றாம் தரம் பரீட்சை எழுதுபவர்கள் எல்லாம் 100 மார்க் வாங்குகின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

உலகில் தமிழர்கள் மட்டும் அடிமைகளாக அலையவில்லையே?  ஆபிரிக்க நாட்டவர்களும் அடிமைகளாகத்தானே திரிகின்றார்கள். எல்லோருக்கும் ஆறறிவு மூளை தானே வேலை செய்கின்றது.அதெப்படி வெள்ளைக்காரன் மட்டும் உயர்ந்து காணப்படுகின்றான்?

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் அண்மையில் பார்த்த விடயம் இது. ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது?

இதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள். ஆபிரிக்காவில் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவு என நினைக்கின்றேன்.அதே போல் பிரான்ஸ்லிம் குறைவு தானே?
 

 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

உலகில் தமிழர்கள் மட்டும் அடிமைகளாக அலையவில்லையே?  ஆபிரிக்க நாட்டவர்களும் அடிமைகளாகத்தானே திரிகின்றார்கள். எல்லோருக்கும் ஆறறிவு மூளை தானே வேலை செய்கின்றது.அதெப்படி வெள்ளைக்காரன் மட்டும் உயர்ந்து காணப்படுகின்றான்?

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 

உங்கள் கருத்துப்படி வெள்ளைக்காரனுக்கு மட்டும்தான் நல்லது நடக்க வேண்டும் என்பதை விதி மூலம் கடவுள் தீர்மானித்துள்ளார்.
சரிதனே?

மேற்கு நாடுகள் மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த பெரும்பாலான நாடுகள் கடவுளை ஒதுக்கத் தொடங்குகின்றன (அல்லது கடவுளை ஒதுக்குவதால் முன்னேறுகின்றனவா?) இது எனது கருத்து அல்ல, தரவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, இணையவன் said:

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

காரணம் இலகுவானது எமக்கு  ஊட்டப்பட்ட கல்வி முறை பிழையானது 

Never confuse education with intelligence, you can have a PhD and still be an idiot.”

― Richard P. Feynman

ஒருவர் முனைவர் பட்டம் பெற்றாலே காணும் நம்மவர் கேட்டு கேள்வியின்றி அவரின் சொற்களை கேட்டு கொள்வது நாலு எழுத்தும் ஆங்கிலமும் தெரிந்தால் எடிகேட்பமிலி என்று துக்கிவைத்து கொண்டாடுவது எமது போராட்டம் தோற்பதுக்கு மிக முக்கிய காரணமே எமது சமூகத்தில் இந்த படித்த முட்டாள்கள் தான் .

3 minutes ago, பெருமாள் said:

Never confuse education with intelligence, you can have a PhD and still be an idiot

கல்வியை புத்திசாலித்தனத்துடன் ஒருபோதும் குழப்ப வேண்டாம், நீங்கள் பிஎச்டி படித்து முடித்த பின்  இன்னும் நீங்கள்  முட்டாள்களாக இருக்கலாம். புத்திசாலித்தனம் வேறு கல்வி வேறு.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.