Jump to content

அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் — கருணாகரன் — 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள்

அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் 

— கருணாகரன் — 

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தெருவில் இருந்த முத்துமாரி, ஒரே நாளில் ராஜராஜேஸ்வரியாகிவிட்டார்.  ராஜராஜேஸ்வரியாகியதோடு சினிமாவில் நடப்பதைப்போல எல்லாமே மாறிவிட்டன. புனருத்தாரணம் அமர்க்களமாகியது. 

இருப்பிட வசதி கூடியது. பொங்கலும் படையலும் பொலியத் தொடங்கின. காலை, மதியம், மாலையும் என முக்காலப் பூசையும் பாராயணமும் நடக்கிறது. ஆட்கள் கூடுகிறார்கள். ஆடலும் பாடலுமென ஒரே கொண்டாட்டமாகியது சூழல். போதாக்குறைக்கு அந்த நாள், இந்த நாள் என்று விசேட பூசைகளும் ஆராதனைகளும். 

முத்துமாரியாக இருந்தபோது, ஐம்பது ஆண்டுகளாக ஒரு சின்னஞ்சிறிய கொட்டகையில்தான் இருக்க வேண்டியிருந்தது. தினம் ஒரு வேளை மட்டுமே ஒரு பூசை. எப்போதாவது ஒரு விசேசம் நடக்கும். அதுவும் சொல்லக் கூடிய அளவுக்குக் கொண்டாட்டமாக இருக்காது. அவரவராகவே வந்து, பொங்கிப் படைத்து, உண்டு, முடித்துச் செல்வார்கள். சிறிய வேண்டுதல்கள், பெரிய உருக்கம். ஆனாலும் ஒரு நெருக்கம் இருந்தது. 

இப்பொழுது ராஜராஜேஸ்வரியோ, மிக விசாலமான இருப்பிடத்தில் சகல ஐஸ்வரியங்களோடும் அமர்ந்திருக்கிறார். 

இதைச் சரியாகச் சொல்ல வேண்டும். முத்துமாரி ராஜராஜேஸ்வரி ஆகினார் என்பதை விட ராஜராஜேஸ்வரி ஆக்கப்பட்டார் என்று சொல்வதே சரியாகும். அதைப்போலவே, ராஜராஜேஸ்வரி சகல ஐஸ்வரியங்களோடும் அமரவில்லை. அமர்த்தப்பட்டிருக்கிறார். எல்லாமே மிகக் கச்சிதமாகச் செய்யப்பட்டுள்ளன. 

இது எப்படி நடந்தது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடும். அது தொழில் ரகசியம். வேறொன்றுமில்லை, சனங்களுடைய அறிவின்மையைப் பயன்படுத்தி ஒரு சாரார் இதைச் செய்திருக்கிறார்கள். சரியாகச் சொன்னால், சனங்களின் மூடத்தனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

சினிமாவில் விஜயலட்சுமி, ஸ்மிதாவாக்கப்பட்ட பிறகு புகழும் வாய்ப்பும் கூடியதைப்போல அல்லது அனு என்பவர் திரிஷா என்றாக்கப்பட்டதுக்குப் பிறகு புகழும் வசதியும் அதிகரித்த மாதிரி அல்லது மரியா என்ற பெண் நயன்தாரா எனவாக்கப்பட்டதற்குப் பின் பெருமைகளும் சிறப்பும் கூடியதைப்போல முத்துமாரியும் ராஜராஜேஸ்வரியாக்கப்பட்ட பிறகு கொடி பறக்கத் தொடங்கியது. 

ஆமாம் எல்லாமே தொழிலுக்காகத்தான். 

கோயில் பராமரிப்பையும் பூசைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்காக பிராமணர்களால் செய்யப்பட்ட தந்திரம் இது. உண்மையில் இது ஒரு அடையாள அழிப்பாகும். சிறு தெய்வ வழிபாட்டை அழித்துப் பெருந்தெய்வப் பண்பாட்டுக்குள் மக்களைத் தள்ளுவதாகும். இதைப்பற்றிய ஒரு கதையை த.கலாமணி “வெளிச்சம்” இதழில் “வல்லமை தாராயோ!” என்ற தலைப்பில் 25 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார். அண்ணமார் தெய்வத்தை பிள்ளையாராக மாற்றப்படுவதே அந்தக் கதையாகும். இதேபோல ஜெயமோகனும் ஒரு கதையை எழுதியிருக்கிறார், “மாடன் மோட்சம்” என்ற தலைப்பில். மாடன் என்ற சிறுதெய்வம், பெருந்தெய்வமாக்கப்படுவதன் அரசியலை மிகுந்த அங்கதத்துடன் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். எல்லாமே அரசியல்தான். பொருளாதார நலனுக்கான அரசியல். 

நாம் இன அழிப்பைப் பற்றி, அடையாள அழிப்பைப்பற்றி, பண்பாட்டு அழிப்பைப்பற்றிப் பேசுகிறோம். அப்படியான அழிப்புகள் பல தரப்பாலும் பல வழிகளிலும் நடக்கின்றன. இந்த அழிப்பில் தனியே அரசாங்கம்தான் ஈடுபடுகிறது என்றில்லை. அல்லது சிங்களத் தரப்புத்தான் செய்கிறது என்று சொல்ல முடியாது. இதை இந்த மாதிரி சாதியாதிக்கச்சக்திகளும் செய்கின்றன. சில அடையாள அழிப்புகள் இனத்தில் பேரால் நடக்கிறது. சில மொழியின் பேரால். இது மதத்தின் பேரால். 

இங்கே நடப்பது மதத்தின் பேரால் நிகழ்கிறது –நிகழ்த்தப்படுகிறது. 

சனங்களுக்கு ஆகம விதிகள் தெரியாது. லேசில் தத்துவம் புரியாது. எல்லோருக்கும் உபநிடதங்களில் பயிற்சியோ அறிவோ இல்லை. இந்து நாகரீகத்தை அல்லது இந்து சமயத்தை  ஒரு பாடமாக பல்கலைக்கழகங்களில் ஆண்டு தோறும் படித்துப் பலர் வெளியேறுகிறார்கள். இந்தத் துறையில் படித்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலர் உள்ளனர். இதை விட சமய அறிஞர்களாக, பெரியோர்களாகப் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இருந்தாலும் எவரும் இந்த அடையாள அழிப்பைப் பற்றிப் பேசுவதுமில்லை. இதைக் கண்டிப்பதுமில்லை. 

“ஐயரை எப்படிக் கேள்வி கேட்கலாம்?” என்பதே எல்லோருடைய தயக்கமுமாகும். ஐயர் ஒன்றும் கடவுளல்ல. “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவனைப் பார்த்து நக்கீரன் கேள்வி கேட்டதாகப் படித்திருக்கிறோம். “நாமார்க்கும் குடியல்லோம். நமனையும் அஞ்சோம்” என்ற திருநாவுக்கரசர் சொன்னதாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், நாம் மட்டும் நமக்குத் தெரிந்த அநீதிக்கே –அடையாள அழிப்புக்கே குரல் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறோம். ஒரு தெய்வத்தின் அடையாளத்தை மறைத்து, அழித்து இன்னொரு தெய்வமாக்கப்படுவதைப்பற்றிக் கேள்வி கேட்கத் தயங்குகிறோம். 

இது ஏன்? 

எங்களுடைய தெருவில் மட்டும் முத்துமாரி அம்மன் என்ற சிறு தெய்வம் அழிக்கப்படவில்லை. வற்றாப்பளையில், மாத்தளையில், புளியம்பொக்கணையில், புதூரில், இயக்கச்சியில்…. எனப் பல இடங்களிலும் இத்தகைய அடையாள அழிப்புகள் நடந்துள்ளன. இன்னும் பல இடங்களில் தொடர்ந்தும் நடக்கின்றன. 

தெய்வத்தையே மாற்றி விடுகிறார்கள் என்றால் அவர்கள் எப்படியான பேர்வழிகளாக இருப்பர்? 

வரலாற்றில் இப்படிப் பல அடையாள அழிப்புகள் நடந்துள்ளன. வட இந்தியாவில் ராமர் கோயிலை அழித்து பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நல்லூரில் மசூதியை உடைத்தே கந்தசாமி கோயில் கட்டப்பட்டதாகச் சொல்வோருண்டு. கந்தசாமி கோயில் இருந்த இடத்தில் –முத்திரைச் சந்தையில் –கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டுள்ளது என்ற தகவல்களும் உள்ளது. சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் இப்பொழுது பௌத்த விஹாரைகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 

இதெல்லாம் வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளின் விளைவுகள். ஆனால், நம்முடைய சூழலில் சத்தமில்லாமல் நடக்கிற –நடத்தப்படுகிற அடையாள அழிப்புக்கு என்ன பெயர்?இதுவும் அரசியல்தான். 

சிறுதெய்வ வழிபாட்டை அழித்து விட்டால், அந்த வழிபாட்டை மேற்கொண்ட சமூகத்தின் பண்பாட்டு வேரைச் சிதைத்து விடலாம். சிறுதெய்வ வழிபாடு என்பது ஏறக்குறைய சுதந்திரமானது. மக்கள் நேரடியாகவே தாங்கள் வழிபடுகின்ற கடவுளுடன் –தெய்வத்துடன் தொடர்புறுவர். அவர்களே அந்தத் தெய்வத்துக்கு பூசை செய்வர். அவர்களே அதைப் பராமரிப்பர். அவர்களே பொங்கிப் படைப்பர். அங்கே இடைத்தரகருக்கு இடமேயில்லை. இடைத்தரகருக்கு எதையும் தட்சிணையாகக் கொடுக்க வேண்டியதுமில்லை.  தாங்கள் வெளியே நின்று விதிக்கப்படும் கட்டளைகளுக்குப் பணிய வேண்டியதுமில்லை. 

சிறு தெய்வ வழிபாடென்பது,வழிபடும் பக்தருக்கும் கடவுளுக்கும் இடையில் தொடரும் மிக நெருக்கமான உறவை அடிப்படையாகக் கொண்டது. உலகத்திலுள்ள பெரும்பாலான மக்களின், மனநிலை, வாழ்க்கை. பொருளாதாரம், அரசியல் என்பற்றை ஆட்டிப் படைக்கும் இந்தப் ‘பெரு தெய்வ வழிபாடுகள்’ சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து மருவியது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதைத்தான் கண்ணுக்குத் தெரியாத அரசியல் (Invisible Politics) என்கிறோம். 

தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறு தெய்வவழிபாடு என்பது, சிறு தெய்வங்களை வணங்கும் மக்கள், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பாடுகிறார்கள். தெரிந்த கலைத்துவத்தை  ஆடலாகவும் பாடலாகவும் சமர்ப்பிக்கிறார்கள். தாங்கள் உண்ணும் உணவை, உபயமாகக் கொடுக்கிறார்கள். தங்கள் பிரச்சினையைச் சொல்லி ‘குற்றத்தையும்’ சிலவேளைகளில், ‘தண்டனையையும்’ ஒப்புக் கொள்கிறார்கள். இந்தச் சடங்கு, உரு ஆடுதல், கட்டுச் சொல்லுதல்’ போன்றவையாகப் பரிணமிக்கும்.

இந்திய, இலங்கைத் தமிழர்களிடையே உள்ள சிறு தெய்வ வழிபாடுகள், குல தெய்வ வழிபாடுகள், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு, காவற் தெய்வ வழிபாடு, எல்லைகத் தெய்வ வழிபாடுகள் என்று பல விதத்தில் அழைக்கப் படுகின்றன.   

தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், தனித்துவமானவை. இயற்கையின் தத்துவங்களைப் பிரதிபலிப்பவை. மனிதத்தின் மாண்புகளைப் போற்றுபவை. முன்னோர்களுடைய வழிபாட்டின் நீட்சியாகவிருப்பவை, தனது சமூகத்தின் பூர்வீகத்தின் புனிதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தத் தெய்வங்கள் ஒருகாலத்தில் அந்தக் கிராமத்து மக்களின் முன்னோராகும். தங்களுக்கு நன்மை செய்த தலைவனை வணங்கிய, தங்களுக்காகப் போராடி உயிர் நீத்த வீரர்களை வழிபட்ட, பெண்களுக்காகப் போராடிய பெண்களைத் தெய்வமாக்கிய தமிழரின் அடிவேர்களாகும். இவர்கள் கற்பனையல்ல. கட்டுக்கதைகள் அல்ல. இதிகாசத் திரிபுகள் அல்ல. இந்த வழிபாட்டு முறை அறம் சார்ந்த பாரம்பரியத்தைக் கொண்டது. சிறு தெய்வ வழிபாடு, தென் இந்தியாவுக்கு, ஜைனம், பௌத்தம், பிராமணியம் உள்ளிட முதலே கி.மு. 8ம், 4ம், 4ம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரந்திருந்த வழிபாட்டு முறையாகும். 

இதைப்பற்றிய விரிவாக ஆய்வுகள் பலவும் நடத்தப்பட்டுள்ளன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. “ஆரிய உள்ளீடு தமிழகத்தில் வந்ததால் சிறு தெய்வங்கள் ‘தீண்டத்தகாத’ கடவுளர்கள் ஆயின. அத்துடன் சில சிறு தெய்வ வழிபாட்டுத் தெய்வங்கள் பெரு தெய்வங்களாக உருமாற்றம் செய்யப்பட்டன. பல்லாயிரம் ஆண்டுகள் பெயரும் புகமும் பெற்று வாழ்ந்த நாகரீகத்தையுடைய தமிழ் இனம், ஆரியரின் வருகையால் பெருமாற்றங்களைக் கண்டது. தமிழர்கள் அவர்கள் செய்யும் தொழில் முறையில் சாதி முறையில் பிரிக்கப்பட்டார்கள். பெரிய சாதிக்கடவுளர்கள் புதிதாக உருவாக்கப்பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவிருந்தார்கள். வழிபாட்டு முறைகள் பிராமணயத்தின் முறையில் நகர்த்தப்பட்டன. அர்ச்சனை, விசேட பூஜைகள் என்று புதிய ‘வழிபாட்டு’ முறைகள். உருவெடுத்தது” என்கிறார் இது தொடர்பாக ஆய்வு செய்த ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இது பன்மைத்துவத்தை நிராகரிக்கும் செயலாகும். மக்களின் உரிமை மீறல்களில் இதுவும் ஒன்றாகும். 

மக்களுடைய வழிபாடுகள் பல வகையாக உள்ளன என்பதை நாம் அறிய வேண்டும். சமூக அடுக்குகள் எப்படிப் பல வகையாக இருந்தனவோ அதற்கமைய வழிபாடுகள் இருந்ததும் உண்டு. வீட்டுத் தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு எனப் பல வகைப்படுகின்றன. இன்று எல்லாவற்றையும் மெல்ல மெல்ல உட்கொண்டு பெருந்தெய்வ வழிபாடு வளர்கிறது. இல்லையில்லை. வளர்க்கப்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் சாதாரணமானதல்ல. அது நம்மைப் பலியெடுப்பது. இப்பொழுது அதற்கு நம்மை நாமே பலியிடுகிறோம். 
 

 

https://arangamnews.com/?p=8243

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது "மெல்லெனக் கொள்ளும் விஷம்" என்று........!  🤔

நன்றி கிருபன்.......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் மிகவும் முக்கியமான விடயம் ஒன்றைத் தவிர்த்துவிட்டார். 

சிறு தெய்வ வழிபாடு / குல தெய்வ வழிபாட்டுமுறை என்பது சாதி/தொழில் அடிப்படையிலானது. ஒவ்வொரு சாதியினரும்/தொழில் வகுப்பினரும் தங்களுக்கென்று பிரத்தியோகமான தெய்வங்களையும் அதற்கென பிரத்தியோகமான வழிபாட்டு முறைகளையும் கொண்டது. 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தடியிலை சூலாயுதம் வைச்சு நாங்களே விளக்கேற்றி கும்பிட்ட காலம் போய்.......இப்ப கட்டிடம் கட்டி....கோபுரம் கட்டி ஐயர் வைச்சு பூசை செய்து கும்புடீனமாம்.இதெல்லாம் பெருமையாம்....

ஏன் நீங்களே விளக்கு வைச்சு பூசை செய்யலாமே எண்டு கேட்டால்.......தங்களுக்கு நேரமில்லையாம்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே இருக்கின்ற கடவுள்மார்கள் போதாது என்று கட்டுரையாளருக்கு சிறு தெய்வ வழிபாடும் தேவைபடுகின்றதோ?
சிறு தெய்வ வழிபாடும் முறை என்றால் கோயிலில் இறைச்சி கடையும் நடத்தலாமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அங்கே இருக்கின்ற கடவுள்மார்கள் போதாது என்று கட்டுரையாளருக்கு சிறு தெய்வ வழிபாடும் தேவைபடுகின்றதோ?
சிறு தெய்வ வழிபாடும் முறை என்றால் கோயிலில் இறைச்சி கடையும் நடத்தலாமோ

நீங்கள் விளங்க நினைத்தால் மட்டும் போதாது . விளங்கிக்கொள்ளவும் வேண்டும். இல்லையென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானதல்ல. பேசாமல் ஒதுங்கிப் போங்கள்.

பலிகொடுத்து வழிபடுதல்  என்பது மனித வரலாற்றுக் காலந்தொட்டு உள்ளது. காலத்துக்கேற்றவாறு வழிபாட்டு முறைகள் மாற்றமடைந்துகொண்டு வருவது இயற்கை. அதற்காக இன்னொருவருடைய பாரம்பரிய வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்த உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயில் மண்ணு  என்று உங்களைப்போன்ற அறியாதவர்களுக்குத்தான் கூறப்பட்டுள்ளது.

😡

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது காலா காலமாக நடக்கும் பிரச்சனை..இதில் தொடர்ச்சியாக வென்று வருபவர்கள் ஐயர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

இது காலா காலமாக நடக்கும் பிரச்சனை..இதில் தொடர்ச்சியாக வென்று வருபவர்கள் ஐயர்கள்..

இதில் யார் வென்றாலும் மக்கள் தொடர்ந்து மூடநம்பிக்கையில் வைத்திருக்கபடுவார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இதில் யார் வென்றாலும் மக்கள் தொடர்ந்து மூடநம்பிக்கையில் வைத்திருக்கபடுவார்கள்.

எது மூட நம்பிக்கை? சிறு தெய்வ வணக்கமா? அது உங்கள் நம்பிக்கையின் படி பிழை என்பது வேறு மூட நம்பிக்கை என்பது வேறு.. மூட நம்பிக்கை என்று சொல்லும் பொழுது அது ஏன் என்று விளங்கப்படுத்த வேண்டும். அப்படி இல்லமால் போகிற போக்கில் சொல்லக்கூடாது.நீங்கள் எந்த நம்பிக்கை அல்லது மதம் சார்ந்தவராக இருந்தாலும். இன்னொருவரின் நம்பிக்கையை நீங்கள் ஏற்க்காமல் இருக்கலாம் நிராகரிக்கலாம்,ஆனால் அதை மரியாதையீனம் செய்யக்கூடாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பகிடி said:

எது மூட நம்பிக்கை? சிறு தெய்வ வணக்கமா?

முற்காலத்தில் இருந்து சிறு தெய்வ வணக்கம் இருந்து வந்தது என்பதிற்காக அது தான் நல்லது  மூட நம்பிக்கை இல்லாதது, பெரிய கடவுளை வணங்கும் மதங்கள் தான் கெட்டது என்று பொய் சொல்ல மாட்டேன்.
முற்காலத்தில் இருந்து சாதி வேற்றுமைகள் ஏற்ற தாழ்வுகள் பார்த்துவருகின்றது எமது பாரம்பரிய முறை அதனால் சாதி முறை நல்லது என்றும் சொல்லலாம் 😒

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முற்காலத்தில் இருந்து சிறு தெய்வ வணக்கம் இருந்து வந்தது என்பதிற்காக அது தான் நல்லது  மூட நம்பிக்கை இல்லாதது, பெரிய கடவுளை வணங்கும் மதங்கள் தான் கெட்டது என்று பொய் சொல்ல மாட்டேன்.
முற்காலத்தில் இருந்து சாதி வேற்றுமைகள் ஏற்ற தாழ்வுகள் பார்த்துவருகின்றது எமது பாரம்பரிய முறை அதனால் சாதி முறை நல்லது என்றும் சொல்லலாம் 😒

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் எண்டமாதிரிதான்…

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2022 at 15:05, விளங்க நினைப்பவன் said:

முற்காலத்தில் இருந்து சிறு தெய்வ வணக்கம் இருந்து வந்தது என்பதிற்காக அது தான் நல்லது  மூட நம்பிக்கை இல்லாதது, பெரிய கடவுளை வணங்கும் மதங்கள் தான் கெட்டது என்று பொய் சொல்ல மாட்டேன்.
முற்காலத்தில் இருந்து சாதி வேற்றுமைகள் ஏற்ற தாழ்வுகள் பார்த்துவருகின்றது எமது பாரம்பரிய முறை அதனால் சாதி முறை நல்லது என்றும் சொல்லலாம் 😒

எது சரி எது தவறு என்பதை ஆராய்ந்து வரையறை செய்து ஏற்பதை நான் பிழை சொல்லவில்லை.. எதையும் மூடத்தனம் என்று பழிக்காதீர்கள் என்கிறேன். சிறு தெய்வ வழிபாடு எம்மைக் காத்த முன்னோர்கள் வழிபாடு.. அவர்களை மதிக்கலாம் ஆனால் வழிபாடு செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள் ஏற்கிறேன்..ஆனால் அதை போகிற போக்கில் மூடத்தனம் என்று சொல்ல வேண்டாம் என்கிறேன். அது, அது சார்ந்த நபர்களை காயப்படுத்தும். அப்பொழுது உங்கள் தரப்பு நியாயங்களை ஏற்கும் மனநிலையில் நீங்கள் காயப்படுத்தியவர்கள் இருக்க மாட்டினம்.

Edited by பகிடி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

எது சரி எது தவறு என்பதை ஆராய்ந்து வரையறை செய்து ஏற்பதை நான் பிழை சொல்லவில்லை.. எதையும் மூடத்தனம் என்று பழிக்காதீர்கள் என்கிறேன். சிறு தெய்வ வழிபாடு எம்மைக் காத்த முன்னோர்கள் வழிபாடு.. அவர்களை மதிக்கலாம் ஆனால் வழிபாடு செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள் ஏற்கிறேன்..ஆனால் அதை போகிற போக்கில் மூடத்தனம் என்று சொல்ல வேண்டாம் என்கிறேன். அது, அது சார்ந்த நபர்களை காயப்படுத்தும். அப்பொழுது உங்கள் தரப்பு நியாயங்களை ஏற்கும் மனநிலையில் நீங்கள் காயப்படுத்தியவர்கள் இருக்க மாட்டினம்.

உத நாஞ் சொன்னா என்ன பைத்தியக்காறன் என்னுறானுகள்

🤣

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.