Jump to content

ஆபீஸ் சிண்ட்ரோம்: இளமையில் முதுமையை ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆபீஸ் சிண்ட்ரோம்: இளமையில் முதுமையை ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஆபிஸ் சிண்ட்ரோம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளைஞர்கள் பலர் ஆபீஸ் சிண்ட்ரோம் என்ற நோய் குறியீடால் அவதிப்படுவதாகவும், அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணியாற்றுவதால் இளமை காலத்தில் முதுகெலும்பு தேய்மானம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர் பி.ஆர்.அஸ்வின் விஜய் கூறுகிறார்.

'ஆபீஸ் சிண்ட்ரோம்' பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகக் கூறும் அவர், அலுவலகங்களில் எர்கோனாமிக் நாற்காலி தேவை என்றும் அத்துடன் பணியாளர்களும் எளிய உடற்பயிற்சிகளை செய்தால்தான் ஆபீஸ் சிண்ட்ரோம் பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறுகிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.

ஒரு வாரத்தில் 55 மணி நேரம் வேலை செய்யும் நிலையில் இருப்பவர்கள் அதிக பணிச்சுமையால் இறப்பதற்கான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் தொடக்கப்புள்ளியாக 'ஆபீஸ் சிண்ட்ரோம்' அமைகிறது என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய். பேட்டியில் இருந்து...

ஆபீஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

 

அலுவலக பணிகளில் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, வங்கி அல்லது பிற அலுவலகங்களில் சரியான முறையில் அமராமல் வேலைசெய்வதால் ஏற்படும் அதிகப்படியான வலிகள் ஆபீஸ் சிண்ட்ரோம் எனப்படும்.

ஆபீஸ் சிண்ட்ரோம் என்பது நோய் அல்ல. அது பிற எலும்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு வித்திடும் நோய்குறியீடு. ஆபீஸ் சிண்ட்ரோம் அறிகுறிகளை கவனிக்காமல் போனால், தண்டு வட பாதிப்பு, மூட்டு பாதிப்பு, தசைநார் வலி மற்றும் ஆபீஸ் சிண்ட்ரோம் முதுகு எலும்பு அலர்ஜி என்று சொல்லப்படும் ஸ்பாண்டிலைட்டிஸ் உள்ளிட்டவை ஏற்படும். கவனிக்காமல் போனால், இளமை காலத்தில் ஒரு நபர் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்பதால்தான் இதன் அவசியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆபீஸ் சிண்ட்ரோம் அறிகுறிகள் என்ன?

எட்டு மணி நேரத்திற்கு அப்பால், 14 மணிநேரம் வரை அமர்ந்த நிலையில் வேலை செய்வது போன்றவற்றால் அதிகப்படியான முதுகு, கழுத்து, தோள்பட்டை வலி மற்றும் முழங்கால் வலி, விரல்கள், கைகள் மற்றும் கால்களின் உணர்வின்மை ஏற்படும். தசை வலி, டென்னிஸ் எல்போ போன்ற தசைநார் பகுதியில் வலி, தலைவலி, வறண்ட கண்கள், தலைசுற்றல், மனச்சோர்வு, தூக்கமின்மை, தீராத உடல்சோர்வு உள்ளிட்டவை ஆபீஸ் சிண்ட்ரோமின் அறிகுறிகள்.

ஆபீஸ் சிண்ட்ரோம் வராமல் தடுப்பது எப்படி?

நம் வேலை நேரத்தையும், நம் உடல்நலத்திற்கான நேரத்தையும் நாம் முதலில் முடிவு செய்து விட வேண்டும். அலுவலக வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியாது. ஆனால் நாம் பணிபுரியும் இடத்தில் சரியான முறையில் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

முதலில் நீங்கள் அமரும் நாற்காலி சரியான முறையில் உள்ளதா என்று பாருங்கள். கணினியில் வேலை செய்வது அல்லது அமர்ந்து செய்யும் பணியில் இருப்பவர்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் எழுந்து சில நிமிடம் நிற்பது, சிறிய தூரம் நடப்பது அவசியம்.

 

ஆஃபிஸ் சிண்ட்ரோம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கண்களை மூடி சில நொடிகள் கழித்து விழிப்பது, கை,கால்களை அசைக்கும் எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

நாற்காலியில் அமர்ந்து கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளும் உள்ளன. சில நிமிடங்களில் நீங்கள் புத்துணர்ச்சி அடைய அவை உதவலாம்.

அலுவலகத்தில் எந்த வாய்ப்பும் இல்லை என எண்ணுபவர்கள், வேலைக்கு செல்வதற்கு முன்னர், கட்டாயம் சிறிய உடற்பயிற்சிகளை குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் செய்ய வேண்டும். மிகவும் எளிமையான யோகா பயிற்சிகள் செய்தால் கூட உங்களுக்கு பலன் நிச்சயம். தொடர்ந்து ஒரு மாதம் யோகா பயிற்சிகளை செய்தால் நீங்களே மாற்றங்களை உணர முடியும்.

நாம் பணி செய்வது நமக்கான பொருளாதாரத்தைத் தருகிறது, அதே சமயம், அந்த பணியை தொடர்ந்து செய்வதற்கு, 'நம் உடல்' என்ற இயந்திரம் வேலை செய்ய, உடற்பயிற்சிகள் நாம் செய்ய வேண்டும்.

 

ஆஃபிஸ் சிண்ட்ரோம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோய் குறியீடாக ஆபீஸ் சின்ட்ரோம் மாறியுள்ளது. இதற்கான சிகிச்சைகள் என்ன?

என்னிடம் சமீபத்தில் ஒரு இளைஞர் வந்தார். அவருக்கு வயது வெறும் 24 தான். தினமும் 14 மணி நேரம் வேலை செய்தவர். அவருக்கு முதுகு,கழுத்து பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதுகு எலும்பு தேய்மானம் ஆகியுள்ளது என்பதை எக்ஸ்ரேவில் உறுதி செய்தோம். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 60 வயதில் வரும் நோயாளிகளிடம் தான் இதுபோன்ற தேய்மானத்தை நான் பார்த்திருக்கிறேன்.

 

டாக்டர் அஸ்வின் விஜய்

பட மூலாதாரம்,DR. ASHWIN VIJAY

 

படக்குறிப்பு,

டாக்டர் அஸ்வின் விஜய்

24 வயதில் ஒரு இளைஞருக்கு தேய்மானம் இருந்ததை நம்ப முடியவில்லை. முதலில் ஒரு மாதம் அவர் வேலைக்கு விடுப்பு எடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவரை குணப்படுத்துவதற்கு சில மாதங்கள் தேவை. ஆனால் அவர் தொடர்ந்து கணினி வேலையில் இருந்தால், சிகிச்சை அளிப்பது பலனிக்காது என்பதால் ஓய்வு எடுப்பதை தான் தற்போது அவர் வேலையாக செய்யவேண்டும்.

சிகிச்சை என்றால், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் அல்லது இரத்த பரிசோதனைகள் மூலம் பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பதை பொறுத்துதான் பிற சிகிச்சைகளை முடிவு செய்வோம். முதலில் எளிமையான உடற்பயிற்சிகளை சொல்லித் தருவோம், உணவு பழக்கத்தில், ஊட்டச்சத்து மிகுந்த, பழங்கள், பச்சை காய்கறிகள்,மாமிசம் போன்றவற்றில் எதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வோம்.

ஓய்வும், உடற்பயிற்சியும் ஆபீஸ் சிண்ட்ரோம் பிரச்னையில் இருப்பவர்களுக்கு தீர்வைத் தரும். ஆனால் நீண்ட நாட்கள் கவனிக்காமல் இருப்பவர்களுக்கு ஒருவேளை வாழ்நாள் முழுவதும் சிகிச்சைகள் தேவைப்படலாம், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

https://www.bbc.com/tamil/science-63433014

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.