Jump to content

பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்க விடுதலையானதும் மீண்டும் கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் - எஸ்.பி.திஸாநாயக்க

By DIGITAL DESK 2

10 NOV, 2022 | 10:27 AM
image

(எம்.மனோசித்ரா)

பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்பிட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக விரைவில் விடுதலையாவார்.

அவர் விடுதலையானதன் பின்னர் மீண்டும் கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தினார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் , தனுஷ்க குணதிலக தொடர்பில் கேட்கப்பட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Talks to prove Govt's majority, says SB | Sunday Observer

பாலியல் புகாரில் இலங்கை வீரர் அதிரடி கைது

 

விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது களியாட்ட விடுதிகள் உள்ளிட்டவற்றுக்குச் செல்வது சாதாரணமானதொரு விடயமாகும்.

அவுஸ்திரேலியாவில் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்களைப் போன்று , திட்டமிட்டு இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். அவர்கள் இதனை ஒரு தொழிலாகவே செய்கின்றனர்.

எனவே குறித்த கிரிக்கட் வீரர் மீது மாத்திரம் முழுமையாக குற்றஞ்சாட்டி விட முடியாது. வழக்கு விசாரணைகளின் நிலைமைகளை அவதானிக்கும் போது அவர் விரைவில் விடுதலையாவார் என்பது நிச்சயமாகும்.

அவ்வாறு அவர் விடுதலையானதன் பின்னர் இலங்கை கிரிக்கட் அணியில் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/139590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,டிஃபனி டர்ன்புல்
  • பதவி,பிபிசி நியூஸ், சிட்னி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தனுஷ்க குணதிலக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை கழற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

காவல்துறை விசாரணையில், வன்முறை மற்றும் ஒப்புதல் இல்லாமல் உறவு கொண்டதாக இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு திங்கட்கிழமை ஜாமீன் மறுக்கப்பட்டது.

அவரது ஜாமீனை எதிர்த்து வாதிடுவதற்கு போலீசார் சார்ந்திருந்த ஆவணங்களைப் பற்றி செய்தியிடுவதற்கு இருந்த தடை உத்தரவை புதன்கிழமையன்று நீதிமன்றம் நீக்கியது.

 

நீதிமன்றத்திற்கு போலீஸ் தரப்பில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, குணதிலக்க மற்றும் அவர்மீது குற்றம் சாட்டிய 29 வயதான பெண், அக்டோபர் 29ஆம் தேதியன்று டிண்டரில் அறிமுகமாகினர்.

அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று சிட்னியில் சந்திக்க ஒப்புக்கொண்டனர். புகார் அளித்தவரின் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பாக மது அருந்தவும் இரவு உணவுக்கும் வெளியே செல்லவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அவருடைய வீட்டில், குணதிலக்க அந்தப் பெண்ணுடன் “பலவந்தமாக” பாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று முறை அவருடைய கழுத்தை நெரித்தார். அதில் ஒருமுறை 30 விநாடிகள் வரை நெரித்தார்.

“புகார் அளித்தவர் தனது உயிருக்கு அஞ்சினார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை” என்று நீதிமன்ற ஆவணங்களில் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

குணதிலக்கவிடம் ஆணுறையை அணியுமாறு கூறியபோதிலும், பாலுறவு கொள்ளும்போது தரையில் ஆணுறை இருந்ததை அந்தப் பெண் கவனித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

ஆணுறை இல்லாமல் பாலுறவு கொள்வதற்கோ அல்லது மூச்சுத் திணறலுடன் பாலுறவு கொள்வதற்கோ தான் சம்மதிக்கவில்லை என்று அந்தப் பெண் “தெளிவாக” இருந்ததாக காவல்துறை கூறுகிறது.

அடுத்த நாள், புகார் அளித்தவர் நடந்ததை இரண்டு நண்பர்களிடம் கூறினார், ஒரு மனநல ஆலோசகருடன் பேசினார். அதோடு காவல்துறையைத் தொடர்புகொள்வதற்கு முன்பாகத் தனது மருத்துவரைச் சந்தித்தார்.

பிறகு அவர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர் மூச்சுத் திணறல் காரணமாக ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க மூளை ஸ்கேன் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்.

நீதிமன்ற ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள போலீசாரிடம் பேசிய தனுஷ்க குணதிலக்க, வன்முறை குற்றச்சாட்டை மறுத்து, உடலுறவுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். ஆனால், துப்பறிவாளர்கள் விசாரித்தபோது ஒப்புதல் பற்றி புகார் அளித்தவருடன் உரையாடியதை அவர் நினைவுபடுத்த முடியவில்லை.

 

தனுஷ்க குணதிலக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்கள், “அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது”  பாலியல் வன்கொடுமை குற்றமாக ஆக்கப்பட்டது.

குணதிலக்கவை அனைத்து வகையான விளையாட்டுகளில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதன் சொந்த குழுவையும் நியமித்துள்ளது.

டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்

டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, டேட்டிங் செயலியான டிண்டரில் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் தனுஷ்க குணதிலக்க ஈடுபட்டதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவர் நவம்பர் 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதியன்று தன்னை ரோஸ் பேயிலுள்ள வீடொன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயன்றதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

 

தனுஷ்க குணதிலக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியது. ஆனால், அப்போத் அதில் கைதானவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

"கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சனிக்கிழமை 5 நவம்பர் 2022, 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cg3l9j1e290o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஏராளன் said:

கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,டிஃபனி டர்ன்புல்
  • பதவி,பிபிசி நியூஸ், சிட்னி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தனுஷ்க குணதிலக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை கழற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

காவல்துறை விசாரணையில், வன்முறை மற்றும் ஒப்புதல் இல்லாமல் உறவு கொண்டதாக இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு திங்கட்கிழமை ஜாமீன் மறுக்கப்பட்டது.

அவரது ஜாமீனை எதிர்த்து வாதிடுவதற்கு போலீசார் சார்ந்திருந்த ஆவணங்களைப் பற்றி செய்தியிடுவதற்கு இருந்த தடை உத்தரவை புதன்கிழமையன்று நீதிமன்றம் நீக்கியது.

 

நீதிமன்றத்திற்கு போலீஸ் தரப்பில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, குணதிலக்க மற்றும் அவர்மீது குற்றம் சாட்டிய 29 வயதான பெண், அக்டோபர் 29ஆம் தேதியன்று டிண்டரில் அறிமுகமாகினர்.

அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று சிட்னியில் சந்திக்க ஒப்புக்கொண்டனர். புகார் அளித்தவரின் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பாக மது அருந்தவும் இரவு உணவுக்கும் வெளியே செல்லவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அவருடைய வீட்டில், குணதிலக்க அந்தப் பெண்ணுடன் “பலவந்தமாக” பாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று முறை அவருடைய கழுத்தை நெரித்தார். அதில் ஒருமுறை 30 விநாடிகள் வரை நெரித்தார்.

“புகார் அளித்தவர் தனது உயிருக்கு அஞ்சினார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை” என்று நீதிமன்ற ஆவணங்களில் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

குணதிலக்கவிடம் ஆணுறையை அணியுமாறு கூறியபோதிலும், பாலுறவு கொள்ளும்போது தரையில் ஆணுறை இருந்ததை அந்தப் பெண் கவனித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

ஆணுறை இல்லாமல் பாலுறவு கொள்வதற்கோ அல்லது மூச்சுத் திணறலுடன் பாலுறவு கொள்வதற்கோ தான் சம்மதிக்கவில்லை என்று அந்தப் பெண் “தெளிவாக” இருந்ததாக காவல்துறை கூறுகிறது.

அடுத்த நாள், புகார் அளித்தவர் நடந்ததை இரண்டு நண்பர்களிடம் கூறினார், ஒரு மனநல ஆலோசகருடன் பேசினார். அதோடு காவல்துறையைத் தொடர்புகொள்வதற்கு முன்பாகத் தனது மருத்துவரைச் சந்தித்தார்.

பிறகு அவர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர் மூச்சுத் திணறல் காரணமாக ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க மூளை ஸ்கேன் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்.

நீதிமன்ற ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள போலீசாரிடம் பேசிய தனுஷ்க குணதிலக்க, வன்முறை குற்றச்சாட்டை மறுத்து, உடலுறவுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். ஆனால், துப்பறிவாளர்கள் விசாரித்தபோது ஒப்புதல் பற்றி புகார் அளித்தவருடன் உரையாடியதை அவர் நினைவுபடுத்த முடியவில்லை.

 

தனுஷ்க குணதிலக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்கள், “அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது”  பாலியல் வன்கொடுமை குற்றமாக ஆக்கப்பட்டது.

குணதிலக்கவை அனைத்து வகையான விளையாட்டுகளில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதன் சொந்த குழுவையும் நியமித்துள்ளது.

டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்

டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, டேட்டிங் செயலியான டிண்டரில் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் தனுஷ்க குணதிலக்க ஈடுபட்டதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவர் நவம்பர் 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதியன்று தன்னை ரோஸ் பேயிலுள்ள வீடொன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயன்றதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

 

தனுஷ்க குணதிலக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியது. ஆனால், அப்போத் அதில் கைதானவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

"கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சனிக்கிழமை 5 நவம்பர் 2022, 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cg3l9j1e290o

இலங்கை கிரிக்கெட் வீரர் (காம)திலகவுக்கு என்ன துணிச்சல்?
அவுஸ்திரேலியா...  போய், சிங்கள புத்தியை காட்டி இருக்கிறான்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sex & consent 

தனுஷ்க குணதிலக்கவை அவுஸ்ட்ரேலிய பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள். குற்றம்- பாலியல் வல்லுறவு. 
நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவரது பிணைமனுவை நிராகரித்திருக்கிறார். 

அனுமதி இல்லாமல் செக்ஸ் வைத்துக்கொள்வது கொடுரமானது. திருமண உறவில் கூட கணவனுடையதோ மனைவினுடையதோ அனுமதி இல்லாமல் உறவு கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. அப்படி இருக்கும் போது பெண் 'தோழியின்' அனுமதி இல்லாமல் அவரை வற்புறுத்தி உறவு கொள்வது இன்னும் பாரதுரமானது.

ஆனால்.....
இங்கே 'அனுமதி' என்பதை சட்டவரைவியலில் எங்கனம் வரையறுத்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்விக்குரியதாக இருக்கிறது. 

தனுஷ்கவும் தோழியும் Tinderயில் சந்தித்திருக்கிறார்கள். நிறையப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் நேரில் சென்று சந்தித்திருக்கிறார்கள். குடித்திருக்கிறார்கள். ஒன்றாக ஹோட்டல் அறைக்குப் போயிருக்கிறார்கள். அவர்களுக்குள் உடலுறவு நடந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் நான் வேண்டாம் எனச் சொல்லியும் அவர் 'penetrative sex' வைத்துக்கொண்டார்' எனப் புகார் அளித்ததன் பேரிலேயே தனுஷ்க கைதாகி இருக்கிறார். 

அவுஸ்ரேலியாவில் எதெல்லாம் கற்பழிப்பில் சேரும் என அண்மையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு பெண் வேண்டாம் எனச் சொன்னதற்குப் பின்னரும், பெண்ணுறுப்பில் விரல்களைக் கொண்டோ, அல்லது வேறெந்த வகையிலேயோ (நாக்கு, toys and so on) உள்புக முயல்வதெல்லாமே அனுமதி இல்லாத செக்ஸ் என்கிற பெயரில், பிணைகொடுக்க முடியாத குற்றமாகப் பதியப்படும். இதற்கு முன்னரும் இந்தச் சட்ட வரைவு பலமுறை திருத்தப்பட்டகிருக்கிறது. 

ஒரு நபர் அனுமதியை எவ்வாறு மறுக்கலாம்?
சொல்லிலோ செய்கைமூலமோ அது இருக்கலாம். 

உங்களது அறைக்குள் மற்றவரை அனுமதித்திருக்கிறீர்கள். அல்லது மற்றவரது அறைக்கு நீங்கள் போயிருக்கிறீர்கள். அது தவறில்லை. மற்றவர் முன்னிலையில் ஆடைகளைக் கழைந்திருக்கிறீர்கள். அது தவறில்லை. அவரை உங்களை நிர்வாணமாக பார்க்க, தொட விட்டிருக்கிறீர்கள். இது எதுவுமே தவறில்லை. உணர்ச்சிக் குவியலில் உள்ள ஒருவரை சொல்லைக் கொண்டோ, செயல் மூலமோ வேண்டாம் எனச் சொல்லித்தடுத்து, அவர் டொடர்ந்து இயங்கினால் அது மன்னிக்க முடியாத குற்றமாகிவிடுகிறது. 
Man-made law வில் உள்ள பெரிய ஓட்டைகள் தான் இவை.

தனுஷ்கவின் தோழியின் உடம்பில் வற்புறுத்தலுக்கான காயங்கள் இல்லை எனச் சொல்லப்படுகிறது .

'அவர் என் மேலே ஏறி முயங்குகிற போது, கைகளை காற்றில் ஆட்டி வேண்டாம் என மறுத்தேன். அவர் அதை கண்டுகொள்ளவில்லை' என ஒரு வழக்கு அவுஸ்ரேலியாவில் பதிவாகி இருக்கிறது. அப்படி கைகளை வேண்டாம் என காற்றில் ஆட்டும் போது மற்றவர் அதை கவனித்தாரா என்பது கூட முக்கியமில்லை என சொல்லப்பட்டிருக்கிறது. 

எவ்வளவு பலகீனமானது இந்த வரையறை! 
இந்த இடத்தில் 'so called'  கடவுளின் கட்டளைகள் எனச் சொல்லப்படுகிற மதச் சட்டங்கள் என்ன சொல்கிறது என மதங்களின் நூல்களில் இருந்து ஒரு ஆய்வை மேற்கொள்ளலாம். Menmade law vs God's law என்கிற ஒரு thesis யை உருவாக்க முடியும். நிறைய படிப்பினைகள் அதில் நமக்கு கிடைக்க வாய்ப்புண்டு. 

நல்ல வக்கீல் கிடைத்தால் தனுஷ்க இந்த வழக்கில் இருந்து இலகுவில் விடுவிக்கப்டுவார்.
 

https://www.facebook.com/Umayaal.Peri

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஸ்க விவகாரம் - பிணைக்கான பணத்தை பெறுவதில் நெருக்கடி

12 NOV, 2022 | 03:12 PM
image

தனுஸ்க குணதிலகவின் பிணைக்கான செலுத்தவேண்டிய 20,000 அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அடுத்த வாரம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுக்கும் போது இந்த பணத்தை செலுத்தவேண்டும்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரிகள் ஏற்கனவே சில தனிநபர்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வனிந்து ஹசரங்க ஏற்கனவே பெரும்தொகை பணத்தை வழங்கியுள்ளார்.

பணம் கிடைத்ததும் அதனை பிணைக்காக செலுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139817

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய, வழக்கை ஊடகங்கள் கொண்டு தீர்மானிக்கப்படும் வழக்காக மாற்றிவிட்டது.

இதே முறை வேறு நாட்டில் நடந்து இருந்தால், மேற்கு ஊது குழல்கள் குய்யோ மைய்யோ, சட்டம், அது, இது என்று கூப்பாடு போட்டு இருக்கும்.

இவர் ஏற்கனவே குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தனுஸ்க விவகாரம் - பிணைக்கான பணத்தை பெறுவதில் நெருக்கடி

12 NOV, 2022 | 03:12 PM
image

தனுஸ்க குணதிலகவின் பிணைக்கான செலுத்தவேண்டிய 20,000 அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அடுத்த வாரம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுக்கும் போது இந்த பணத்தை செலுத்தவேண்டும்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரிகள் ஏற்கனவே சில தனிநபர்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வனிந்து ஹசரங்க ஏற்கனவே பெரும்தொகை பணத்தை வழங்கியுள்ளார்.

பணம் கிடைத்ததும் அதனை பிணைக்காக செலுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139817

இவருக்கான பிணைப் பணம், வக்கீல் செலவு ஆகியவற்றை
உலக வங்கியிடம் இருந்து வர இருக்கும் பணத்தில் இருந்து கொடுக்க முடியாதா? 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இவருக்கான பிணைப் பணம், வக்கீல் செலவு ஆகியவற்றை
உலக வங்கியிடம் இருந்து வர இருக்கும் பணத்தில் இருந்து கொடுக்க முடியாதா? 😂 🤣

கொடுக்கலாம், அதுக்கு முதல்ல உலக வங்கி கொடுக்க வேணுமே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கொடுக்கலாம், அதுக்கு முதல்ல உலக வங்கி கொடுக்க வேணுமே?!

இவன் காசு இல்லாமல்… ஏன் பொம்பிளை சோக்கு எடுக்கப் போனவன்.
மச்சான்,  ஓசியிலை.. தோசை சுட்டு  சாப்பிட போயிருக்கிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்க குணதிலக்கவின் 2 ஆவது பிணை மனு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

By DIGITAL DESK 4

14 NOV, 2022 | 10:33 AM
image

அவுஸ்திரேலியாவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பிணையில் வெளிவருவதற்கான இரண்டாவது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தனது சம்மதமின்றி தன்னுடன்  தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த 6 ஆம்  திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். 

அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7 ஆம் திகதி மறுத்தார். 

தனுஷ்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது பிணை தொடர்பாக இரண்டாவது முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.

நியூ சௌத் வேல்ஸ் மாநில உச்ச நீதிமன்றத்தில்  தனுஷ்கவின் புதிய பிணை மனுவை தாக்கல் செய்த சட்டத்தரணிகள் இன்று தாக்கல் செய்தனர்.

இப்பிணை மனு மீதான விசாரணை டிசெம்பர் 8ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/139944

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌னின் இட‌த்துக்கு

விக்கேட் கீப்ப‌ரும்மான‌ ந‌ல்ல‌ வ‌ட்ஸ்ம‌னுமான‌ டிக்வ‌லாஉக்கு அணியில் வாய்ப்பு கொடுக்க‌னும்

இவ‌ன் மீண்டும் இல‌ங்கை அணிக்கு விளையாடினா அணிக்கு தான் கேவ‌ல‌ம்
அனைத்துவித‌மான‌ கிரிக்கேட்டில் இருந்தும் இவ‌னை  நீக்க‌னும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற தனுஷ்கவுக்குத் தடை! இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாடவும் தடை

By DIGITAL DESK 3

17 NOV, 2022 | 11:27 AM
image

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது. 

கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதின்றம் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

150,000 அவஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.

அவர் மீதான வழக்க விசாரணை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  தனுஷ்கவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

தினமும் இரவு  9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவத்றகும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Danushka-Gunathilaka-1200.jpg

 

தனது சம்மதமின்றி தன்னுடன்  தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த 6 ஆம்  திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். 

அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7 ஆம் திகதி மறுத்திருந்தார். 

அதன்பின் தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பாக  இரண்டாவது முயற்சியை அவரின் சட்டதரணிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், சிட்னி டோனிங் சென்ரரிலுள்ள உள்ளூர் நீதிமன்மொன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டது.

https://www.virakesari.lk/article/140294

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் தனுஸ்கவிற்கு உதவுவதற்கு போட்டிபோடும் இலங்கையர்கள்

By RAJEEBAN

18 NOV, 2022 | 10:28 AM
image

அவுஸ்திரேலியாவில் பாலியல்வன்முறை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள தனுஸ்ககுணதிலகவிற்கு  அங்குள்ள இலங்கையை சேர்ந்த செல்வந்தர்கள்  உதவிவழங்கிவருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஸ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் தான் தங்கியிருக்கும் முகவரியொன்றை பொலிஸாருக்கு வழங்கவேண்டும் என்பதால்  அவரை தங்கள் வீட்டில் தங்கவைப்பதற்கு இலங்கையை சேர்ந்த பல செல்வந்தர்கள் முன்வந்துள்ளனர்.

தனுஸ்ககுணதிலகவின் பிணைக்கான 150.000 டொலர்களை  இலங்கையை  சேர்ந்த அடையாளம் தெரியாத பெண்ணொருவர் செலுத்தியுள்ளார்.

தனுஸ்கவிற்கும் குறிப்பிட்ட பெண்ணிற்கும் இடையிலான உறவு குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.

நேற்று தனுஸ்ககுணதிலகவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை சிட்னியில் உள்ள பல செல்வந்தர்கள்  அவருக்கான செலவுகளை பொறுப்பேற்பதற்கு போட்டியிட்டுள்ளனர்.

மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் தனுஸ்ககுணதிலக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரின் செலவுகளை பொறுப்பேற்க முன்வந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/140422

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

அவுஸ்திரேலியாவில் தனுஸ்கவிற்கு உதவுவதற்கு போட்டிபோடும் இலங்கையர்கள்

By RAJEEBAN

18 NOV, 2022 | 10:28 AM
image

அவுஸ்திரேலியாவில் பாலியல்வன்முறை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள தனுஸ்ககுணதிலகவிற்கு  அங்குள்ள இலங்கையை சேர்ந்த செல்வந்தர்கள்  உதவிவழங்கிவருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஸ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் தான் தங்கியிருக்கும் முகவரியொன்றை பொலிஸாருக்கு வழங்கவேண்டும் என்பதால்  அவரை தங்கள் வீட்டில் தங்கவைப்பதற்கு இலங்கையை சேர்ந்த பல செல்வந்தர்கள் முன்வந்துள்ளனர்.

தனுஸ்ககுணதிலகவின் பிணைக்கான 150.000 டொலர்களை  இலங்கையை  சேர்ந்த அடையாளம் தெரியாத பெண்ணொருவர் செலுத்தியுள்ளார்.

தனுஸ்கவிற்கும் குறிப்பிட்ட பெண்ணிற்கும் இடையிலான உறவு குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.

நேற்று தனுஸ்ககுணதிலகவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை சிட்னியில் உள்ள பல செல்வந்தர்கள்  அவருக்கான செலவுகளை பொறுப்பேற்பதற்கு போட்டியிட்டுள்ளனர்.

மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் தனுஸ்ககுணதிலக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரின் செலவுகளை பொறுப்பேற்க முன்வந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/140422

குற்றம் செய்தர்களை காப்பாற்றுவது, சிங்களவர்களின் பிறவிக் குணங்களில் ஒன்று.
🐃  எருமைத் தோலுள்ள  சில தமிழர்களும் உதவி செய்ய முன் வரலாம். 😁
ஏனென்று கேட்டால்… அரசியல் வேறு, இந்த விளையாட்டு வேறு என்று…
எங்களுக்கே… வகுப்பு எடுப்பார்கள். 😂 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2022 at 01:44, Kadancha said:

அவுஸ்திரேலிய, வழக்கை ஊடகங்கள் கொண்டு தீர்மானிக்கப்படும் வழக்காக மாற்றிவிட்டது.

இதே முறை வேறு நாட்டில் நடந்து இருந்தால், மேற்கு ஊது குழல்கள் குய்யோ மைய்யோ, சட்டம், அது, இது என்று கூப்பாடு போட்டு இருக்கும்.

இவர் ஏற்கனவே குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு விட்டார்.

நீங்கள் செல்லும் நாட்டின் சட்டங்களை மீற முடியாது, அதில் அவுஸ்ரேலியர்களுக்கும் விதி விலக்கில்லை. 

 

17 minutes ago, ஏராளன் said:

அவுஸ்திரேலியாவில் தனுஸ்கவிற்கு உதவுவதற்கு போட்டிபோடும் இலங்கையர்கள்

By RAJEEBAN

18 NOV, 2022 | 10:28 AM
image

அவுஸ்திரேலியாவில் பாலியல்வன்முறை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள தனுஸ்ககுணதிலகவிற்கு  அங்குள்ள இலங்கையை சேர்ந்த செல்வந்தர்கள்  உதவிவழங்கிவருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஸ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் தான் தங்கியிருக்கும் முகவரியொன்றை பொலிஸாருக்கு வழங்கவேண்டும் என்பதால்  அவரை தங்கள் வீட்டில் தங்கவைப்பதற்கு இலங்கையை சேர்ந்த பல செல்வந்தர்கள் முன்வந்துள்ளனர்.

தனுஸ்ககுணதிலகவின் பிணைக்கான 150.000 டொலர்களை  இலங்கையை  சேர்ந்த அடையாளம் தெரியாத பெண்ணொருவர் செலுத்தியுள்ளார்.

தனுஸ்கவிற்கும் குறிப்பிட்ட பெண்ணிற்கும் இடையிலான உறவு குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.

நேற்று தனுஸ்ககுணதிலகவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை சிட்னியில் உள்ள பல செல்வந்தர்கள்  அவருக்கான செலவுகளை பொறுப்பேற்பதற்கு போட்டியிட்டுள்ளனர்.

மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் தனுஸ்ககுணதிலக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரின் செலவுகளை பொறுப்பேற்க முன்வந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/140422

ஏன் இலங்கையர்கள் தவறானவர்களை காப்பாற்ற முயல்கிறார்கள், மீண்டும் இதே தவறுகளை திரும்ப திரும்ப செய்வார்கள்.

இவ்வாறான தவறுகளுக்கு மக்கள் தமது தெளிவான செய்தியினை கூற வேணும், தெரியாமல் செய்யப்படும் தவறுகளுக்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கலாம், ஆனால் தெரிந்து செய்யும் தவறுகளுக்கு ஆதரிப்பவர்களும் கேவலமானவர்களே.

இவருக்கு உதவி செய்யும் இலங்கையர்கள் கேவலமானவர்கள் என்பது தெளிவாகிறது.

On 15/11/2022 at 02:45, பையன்26 said:

இவ‌ன் மீண்டும் இல‌ங்கை அணிக்கு விளையாடினா அணிக்கு தான் கேவ‌ல‌ம்
அனைத்துவித‌மான‌ கிரிக்கேட்டில் இருந்தும் இவ‌னை  நீக்க‌னும்

மிக சிறந்த கருத்து,

அத்துடன் நிறுத்தாது நாடு திரும்பியபின் ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும், இவருக்கு ஆதரவு வழங்கும் சிங்கள அமைச்சர் பாதிக்கப்பட்டவர்களை தரம் தாழ்த்தி செய்த  விமர்சனத்திலிருந்து ஒட்டு மொத்த சிங்கள சமூகமும் இப்படிதானோ என நினைக்க தோன்றுகிறது.

ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.

சிங்களவர்கள் பலர் அவுஸ்ரேலியர்களை திருமணம் செய்துள்ளனர் (நல்ல படித்த, சமூகத்தில் உயர்நிலையில் உள்ள அவுஸ்ரேலியர்களை), நான் சந்தித்த இரண்டு அவுஸ்ரேலியர் எனது பெயரினை வைத்து இலங்கையரா என கேட்டனர், ஆம், எப்படி தெரியும் என கேட்ட போது அவர்களது கணவர்கள் சிங்களவர்கள் என்பதினை அறிய முடிந்தது.

இதையொத்த வழக்கில், கொலைகுற்றச்சாட்டுடன் சிங்களவர்கள் கடந்தகாலத்தில் சம்பந்தபட்டுள்ள மாதிரி நினைவில் உள்ளது.

9 minutes ago, தமிழ் சிறி said:

குற்றம் செய்தர்களை காப்பாற்றுவது, சிங்களவர்களின் பிறவிக் குணங்களில் ஒன்று.
🐃  எருமைத் தோலுள்ள  சில தமிழர்களும் உதவி செய்ய முன் வரலாம். 😁
ஏனென்று கேட்டால்… அரசியல் வேறு, இந்த விளையாட்டு வேறு என்று…
எங்களுக்கே… வகுப்பு எடுப்பார்கள். 😂 😂

தமிழர்களை பொறுதவரையில் இப்படியானவர்களை காவாலிகள் என கணக்கிலேயே எடுக்கமாட்டார்கள், அவர்கள் யாராக இருந்தாலும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

தமிழர்களை பொறுதவரையில் இப்படியானவர்களை காவாலிகள் என கணக்கிலேயே எடுக்கமாட்டார்கள், அவர்கள் யாராக இருந்தாலும்.

வசி… ஆக சந்தோசப் படாதேங்கோ,
இப்படியான சிங்களவருக்கு ஆதரவு கொடுக்கும் தமிழர்கள் யாழ்.களத்திலும் இருந்தவர்கள்.
இப்போ… விடுமுறையில் நிற்கிறார்கள். 🤣

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, vasee said:

நீங்கள் செல்லும் நாட்டின் சட்டங்களை மீற முடியாது, அதில் அவுஸ்ரேலியர்களுக்கும் விதி விலக்கில்லை. 

 சட்ட மன்றத்தில்  வழக்கு நடக்காமல், முறைப்பாட்டை, போலீஸ் விசாரணையில் சொல்லப்பட்ட தகவல்களை சட்ட மன்றம் பிரசுரிக்க அனுமதித்து இருப்பது தவறு.

குற்றமோ இல்லையோ, இவரை பற்றி public image உருவாக்கப்பட்டு விட்டது. 

அது trial by media.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

 சட்ட மன்றத்தில்  வழக்கு நடக்காமல், முறைப்பாட்டை, போலீஸ் விசாரணையில் சொல்லப்பட்ட தகவல்களை சட்ட மன்றம் பிரசுரிக்க அனுமதித்து இருப்பது தவறு.

குற்றமோ இல்லையோ, இவரை பற்றி public image உருவாக்கப்பட்டு விட்டது. 

அது trial by media.

அவுஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கூட (துடுப்பாட்டம் அல்ல) இதே மாதிரியான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாகவே ஊடகங்களில் அவர்கள் பெயர் அடிபடுவது வழமையான ஒன்று, இவர் இலங்கை அணி வீரர் என்பதற்காக ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக நடக்கவில்லை.

 

4 hours ago, Kadancha said:

குற்றமோ இல்லையோ, இவரை பற்றி public image உருவாக்கப்பட்டு விட்டது. 

தவறிழைக்காவிட்டால் மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யலாம்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

 சட்ட மன்றத்தில்  வழக்கு நடக்காமல், முறைப்பாட்டை, போலீஸ் விசாரணையில் சொல்லப்பட்ட தகவல்களை சட்ட மன்றம் பிரசுரிக்க அனுமதித்து இருப்பது தவறு.

குற்றமோ இல்லையோ, இவரை பற்றி public image உருவாக்கப்பட்டு விட்டது. 

அது trial by media.

இது நீதிமன்றின் வேலை அல்ல.

பாராளுமன்றின் (சட்ட ஆக்கம்) வேலை.

சட்டப்படி,

பாலியல் வன்கொடுமை வழக்கில் வழக்கு தொடுனருக்கு ஆயுட்கால அடையாள மறைத்தல் (anonymity) உண்டு. 

ஆனால் குற்றம் சாட்டபட்டவருக்கு இல்லை.

குற்றம் சாட்டபட கூட இல்லை, வெறும் போலீஸ் விசாரணைதான் நடந்தது, கிளிவ் ரிச்சர்ட் வீட்டில், அதையே பிபிசி, ஸ்கை நியூஸ் எல்லாம் ஹெலியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்தார்கள்.

இதன் அண்மைய சட்ட ஆக்கல் பிண்ணனி பற்றிய வரலாறை கீழே காணலாம்.

நீங்கள் சொல்வதை போல் குற்றம் சாட்டபட்டவருக்கும் அனோனிமிட்டி கொடுக்கவேண்டும் (தீரும் வரை) - என பலர் வாதாடினாலும். சட்டம் இதுவரைக்கும் அப்படி இல்லை.

இனியும் விரைவில் இது மாறும் என நான் நினைக்கவில்லை.

 

https://www.parliament.uk/business/publications/research/key-issues-parliament-2015/justice/anonymity-for-defendants/

 

54 minutes ago, vasee said:

தவறிழைக்காவிட்டால் மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யலாம்தானே?

உண்மையை சொன்னால் மானநஸ்ட வழக்கு போட முடியாது.

இங்கே பத்திரிகைகள் இவர் “குற்றம் செய்தார்”, என எழுதாது.

இவர் குற்றம் சாட்டபட்டார் என்றே எழுதும். அது உண்மைதானே. ஆகவே மானநஸ்ட வழக்கு நில்லாது.

கொசுறு

இவர் மீதான ஆரம்ப கட்ட பொலிஸ் குற்ற அறிக்கையின் நகல் கிடைத்தது.

மிகவும் பலவீனமான வழக்கு. 75% குற்றம் அற்றவர் என தீரவே வாய்ப்பு உள்ளது.

25% கொடுப்பது கூட அவுஸ் யூரி ஒரு ஆசியர் என இவரை குற்றம் காணலாம் என்பதனாலேயே.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

🐃  எருமைத் தோலுள்ள  சில தமிழர்களும் உதவி செய்ய முன் வரலாம். 😁
ஏனென்று கேட்டால்… அரசியல் வேறு, இந்த விளையாட்டு வேறு என்று…
எங்களுக்கே… வகுப்பு எடுப்பார்கள். 😂 😂

நானறிய யாழில் இப்படி சொல்லி இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணுறது அவ ஒராள்தான்🤣. விடுமுறை முடிந்து வந்து விட்டா வேற😱.

தல ஆனாலும் உங்களுக்கு நெஞ்சில மஞ்சா அதிகம் தல - என்னா தெகிரியம் தல🤣.

6 hours ago, தமிழ் சிறி said:

வசி… ஆக சந்தோசப் படாதேங்கோ,
இப்படியான சிங்களவருக்கு ஆதரவு கொடுக்கும் தமிழர்கள் யாழ்.களத்திலும் இருந்தவர்கள்.
இப்போ… விடுமுறையில் நிற்கிறார்கள். 🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

குற்றம் செய்தர்களை காப்பாற்றுவது, சிங்களவர்களின் பிறவிக் குணங்களில் ஒன்று.
🐃  எருமைத் தோலுள்ள  சில தமிழர்களும் உதவி செய்ய முன் வரலாம். 😁
ஏனென்று கேட்டால்… அரசியல் வேறு, இந்த விளையாட்டு வேறு என்று…
எங்களுக்கே… வகுப்பு எடுப்பார்கள். 😂 😂

அவரின் வக்கீல் தங்கராஜா என்கிற தமிழர் போல இருக்கு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நானறிய யாழில் இப்படி சொல்லி இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணுறது அவ ஒராள்தான்🤣. விடுமுறை முடிந்து வந்து விட்டா வேற😱.

தல ஆனாலும் உங்களுக்கு நெஞ்சில மஞ்சா அதிகம் தல - என்னா தெகிரியம் தல🤣.

 

நான்   பொத்தாம் பொதுவாக, சொன்னேன். 😂
நீங்கள், அவவுடன் என்னை கோத்து விடப் பார்க்கிறீர்கள். 🤣

9 minutes ago, Eppothum Thamizhan said:

அவரின் வக்கீல் தங்கராஜா என்கிற தமிழர் போல இருக்கு??

உண்மையாகவா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நான்   பொத்தாம் பொதுவாக, சொன்னேன். 😂
நீங்கள், அவவுடன் என்னை கோத்து விடப் பார்க்கிறீர்கள். 🤣

1 hour ago, Eppothum Thamizhan said:

யாழை பழைய மாரி ஆக்கவேணும் எண்டு பையன் ஆசைப்பட்டவர் எல்லே? அதான் ஒரு சிறு பங்களிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.