Jump to content

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை - டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை - டக்ளஸ்

By Vishnu

06 Nov, 2022 | 01:02 PM
image

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 05 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்கு நிலையில் இல்லாதமை குறித்து கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்ளது. ஆனாலும் அங்கு விமானங்கள் வர தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயார் இல்லை. அதனாலயே விமான நிலையம் இயங்காத நிலையில் காணப்படுகிறது என்றார்,

அதன் போது, பலாலி விமான நிலையத்தில் இருந்த தொழிநுட்ப உபகரணங்கள் உள்ளிட்டவை தெற்கில் உள்ள விமான நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன என கேட்ட போது,

அது முற்றிலும் தவறான தகவல். நான் பொய் சொல்ல வேண்டிய தேவை இல்லை. பலாலி விமான நிலையத்தில் இருந்து எதுவும் எங்கும் கொண்டு செல்லப்படவில்லை.

இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை பலாலியில் தரை இறக்க தயார் எனில் ஒரு இரவில் பலாலி விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/139255

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை பலாலியில் தரை இறக்க தயார் எனில் ஒரு இரவில் பலாலி விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் என்றார்.

என்ன இவர் ஒரு இரவு எண்டதிலையே குறியாய் நிக்கிறார்? 😁

12 minutes ago, கிருபன் said:

பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்ளது. ஆனாலும் அங்கு விமானங்கள் வர தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயார் இல்லை. அதனாலயே விமான நிலையம் இயங்காத நிலையில் காணப்படுகிறது என்றார்,

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

1) விமான எரிபொருள் இல்லாமல்... கொழும்பு விமான நிலையத்திற்கு வந்த விமானங்களே, 
இந்தியாவிற்குப் போய் எரி  பொருள் நிரப்பிக் கொண்டு வந்துள்ளது.

2) மழை பெய்தால்.... விமான ஓடு  பாதையில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.

3) "டியூட்டி ஃபிரீ"  கடைகள் இல்லாமை.

இவை வெளிப்படையாக தெரிந்த காரணங்கள்.
உள்ளுக்கு... சிங்களம் எவ்வளவு கெடு பிடிகள்,  கமிஷன்களை எதிர் பார்க்கின்றதோ தெரியாது.

சுற்றுலா பயணிகளை கொண்டு வரும் விமான நிறுவனங்களும், 
பயணிகளும் இவற்றில் அதிக அக்கறை எடுப்பார்கள்.

யாழ்/கொழும்பு... ரயில், சாலை போக்குவரத்தே தினமும் விபத்தும், 
உயிரிழப்பும் நடந்து கொண்டு இருக்கும் போது...
பெரும் பணம் செலவழித்து விமானத்தில்  வருபர்கள்  அச்சம் கொள்வது இயல்பானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொன்னதில் எதனை செய்து காட்டி இருக்கிறார். வாயால் நல்லா வடை சுடுவார்.

ஏலவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானம் இயக்கிய விமான சேவை நிறுவனம்.. சேவையை தொடர முன்வந்த போதும்.. சரியான ஏற்பாடுகளை இலங்கை தரப்பு செய்தி கொடுக்காத நிலையில்.. அது தனது நிலைப்பாட்டில் இருந்து மாறிக் கொண்டது.

இதற்கு மகிந்த - கோத்தா தரப்பின் தமிழர் பிரதேச பலாலி விமான நிலைய வெறுப்பே காரணமாக இருந்தது. அதனை இந்த குத்தியர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.. காரணம்.. எஜமான விசுவாசம். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

என்ன இவர் ஒரு இரவு எண்டதிலையே குறியாய் நிக்கிறார்? 

அவரது தொழில் யாவும் இரவோடு சம்பந்தப்பட்டது!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொரு தடவை யாழில் வேறொரு இடத்தில் தரையிறங்கி மானபங்கப் பட்டதும் ஒரு காரணமா இருக்குமோ.

கம் ஒன் பாய்ஸ், இப்பவெல்லாம் வடக்கு தனியவா அல்லது கிழக்கோட சேர்ந்தா உங்கட ஒரு மாநிலமா வாறதெண்டு சிலபேருடைய எண்ணப்பாடுகள் போய்க்கொண்டிருக்கு.

டேக் இட் ஸ்போர்ட்டிவ்.....

பிளீஸ் கம் அண்ட் லாண்ட் ஒன் அஸ் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஹிந்திக் கல்லூரி வாத்திமாரிட்ட கேட்டா , சிலவேளை டவுட்டை கிளியர் பண்ணி விடுவினம் 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடி அமைச்சர் எதற்கு போக்குவரத்து அமைச்சரின் வேலையை பாக்கணும்.
தனக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் தலையை ஓட்டி காசு பாக்கிறது இவருக்கு வாடிக்கையா போயிட்டுது.

இல்லை தெரியாமல் தான் கேக்கிறன் யாழில் இருப்பது சர்வதேச விமான நிலையமா அல்லது இந்தியனின் தனிப்பட்ட விமான நிலையமா?. சர்வதேச விமான நிலையம் என்றால் இந்தியனின் விமானம் மட்டும் தான் அங்கே தரையிறங்கணும்  என்று எப்படி இவர் எதிபார்க்கலாம்?. இந்தியா விமானம் விடேல்ல என்றால் நாமதான் மற்ற நாடுகளை வரும்படி அழைப்பு விடணும்.

இந்த குத்தியருக்கு கோழி மூளை, இது புரியாது. உங்கடை சப்பை மூக்கு நண்பர்களை அழையுங்கள் உடனே வருவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

மீன்பிடி அமைச்சர் எதற்கு போக்குவரத்து அமைச்சரின் வேலையை பாக்கணும்.
தனக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் தலையை ஓட்டி காசு பாக்கிறது இவருக்கு வாடிக்கையா போயிட்டுது.

சிங்களம் பெயருக்கு  ஒரு அமைச்சுப்பதவியை கொடுத்து, தமிழரை அழிக்க இவரை வைச்சிருக்கு. உண்மையில் இவர்  எந்த  அமைச்சுப்பதவிக்கும் பொருத்தமானவர் கிடையாது. அதனால சுற்றிஅடிச்சு  கருத்து தெரிவிச்சுக்கொண்டு திரியிறார். அவர் கடற்தொழில் அமைச்சர் என்றால்  அதன்  பிரச்சனைகளை  ஆராயவும், அவற்றை  தீர்க்கும் வழிமுறைகளை கண்டறியவுமே நேரங்காணாது, இது வம்பளப்பதும், மற்றவர்களை வசை பாடுவதும், தன்னைப் புகழ்வதுமாய் காலத்தை கடத்திக்கொண்டு அலையிறார்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.