Senior White House Official Involved in Undisclosed Talks With Top Putin Aides
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nunavilan · பதியப்பட்டது
சிக்கலில் தள்ளும் சீனாவின் அவகாசம்? சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பரிந்துரைத்த கடன் செலுத்துவதற்கான 10 வருட அவகாசத்துக்கு பதிலாக, சீனாவின் எக்ஸிம் (ஏற்றுமதி-இறக்குமதி) வங்கி இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் கடனை 15 வருட காலத்துக்கு மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் பரிந்துரைத்துள்ளதாகவும் நிலையில் சீன எக்ஸிம் வங்கியின் அவகாசம் இலங்கையின் பொருளாதார வலிகள் மேலும் நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு இணங்க, இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணம் வழங்குவதாக இந்தியா ஏற்கெனவே எழுத்து மூலம் தெரிவித்துள்ளது. 10 வருட கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் 15 வருட கடன் மறுசீரமைப்பு கால அவகாசம் வழங்குவதன் மூலம் இலங்கையின் கடன் நிலைத்தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வுக்கு இந்தியா ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://www.tamilmirror.lk/செய்திகள்/சககலல-தளளம-சனவன-அவகசம/175-311500 -
By தமிழ் சிறி · Posted
இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் என்ற படியால்.... விபத்தான விமானங்களையிட்டு மிக்க மகிழ்ச்சி. 🙂 -
By nunavilan · பதியப்பட்டது
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை: யாழ். வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலை தரம் ஐந்து புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தொகை -329,668 இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257ஆகும். வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%. வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை – 17,622 வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை – 2749 அதன் சதவீதம் – 15.6%. தேசிய மட்டத்தில் நிலை – 6 வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர் களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்ட நிலை யாழ். கல்வி வலயம் – (25.37%) – 1 பொலநறுவை வலயம் – (21.71%) – 2 தங்காலை வலயம் – (21.51%) – 3 கம்பஹா கல்வி வலயம் – (21.44%) – 4 வலஸ்முல்ல வலயம் – (20.80%) – 5 பதுளை கல்வி வலயம் – (20.41%) – 6 நிக்கரவெட்டிய வலயம் – (20.03%) – 7 https://thinakkural.lk/article/236305 -
பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி 25 ஆம் திகதி, திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ததுடன், அவரது இராஜிநாமா கடிதமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/236332
-
By nunavilan · பதியப்பட்டது
இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான சுகோய் மற்றும் மிராஜ் இரண்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் போர் விமானங்கள். மிராஜ் விமானமானது ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தும், சுகோய் விமானமானது ரஷ்யாவிடமிருந்தும் வாங்கப்பட்டவை. இரண்டுமே நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விமானங்களிலுள்ள கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களை வைத்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டதா? பறந்த உயரம், வேகம் போன்றவற்றை கொண்டு விபத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்று கூறப்படுகிறது. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடங்களில் மீட்புப்பணிகளை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=170201
-
Recommended Posts