Jump to content

அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை - கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை - கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைப்பு

By T. Saranya

09 Nov, 2022 | 09:49 AM
image

(நா.தனுஜா)

நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அவ்வர்த்தகப்பிரமுகர்கள் குழுவினர், தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 - 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு தம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்க தம்மால் முடியும் என்றும், அதனூடாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யும் அதேவேளை அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் 17 பேரடங்கிய குழுவொன்று கடந்த வாரம் நாட்டை வந்தடைந்துள்ளது.

அக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளை கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவின் சார்பில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ், கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை, கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் பணிப்பாளர் கணேசன் சுகுமார் மற்றும் கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் இளங்கோ ரட்ணசபாபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கனேடிய வர்த்தகர்கள் குழு இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே பெருமளவிற்கு முதலீடு செய்வது பற்றி அவர்கள் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதாகவும், அதற்கு சாதகமாக ஜனாதிபதி பதிலளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேவேளை தமக்கிடையிலான சந்திப்பின்போது இலங்கையில் இனப்பிரச்சினைக்கு உரியவாறு தீர்வுகாணப்படாமையே தற்போது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்குக் காரணமென இரா.சம்பந்தன் கனேடிய வர்த்தகப்பிரமுகர்களிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், 'நாங்கள் புதிய முதலீடுகளை வரவேற்கின்றோம். இருப்பினும் அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனடா - இலங்கை வர்த்தகக் கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

'நாம் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் எமது பிரதேசங்களில் முதலீடு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கைக்கு வருகைதந்திருக்கின்றோம். அதற்கு தமிழ் அரசியல் தலைவர்களின் ஆலோசனைகளும், உதவிகளும் அவசியமாகின்றன. நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் அதேவேளை, அரசியல் தீர்வை நோக்கிய நகர்வையும் சமாந்தரமாகக் கொண்டுசெல்லவேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. அந்தவகையில் தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 - 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு எம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் எம்மால் கையளிக்கமுடியும். அதனூடாக அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கியவாறு பொருளாதார ரீதியில் எமது மக்கள் முன்னேற்றமடைவதற்கு அவசியமான பங்களிப்பைச் செய்யமுடியும்' என்று தெரிவித்துள்ளார். 
 

 

https://www.virakesari.lk/article/139505

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை ஒருத்தரையும கானவில்லை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயங்கள்

சரியான கோரிக்கைகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நல்லது நடந்தால் சரி........!  

Link to comment
Share on other sites

சம்பந்தர் உருப்படியாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். நல்லது !

சிறு துளிகளாயினும் பல்வேறு அழுத்தங்களால் ஏதாவது நடக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத்தானே ஆரம்பத்தில் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனும் தெரிவித்திருந்தார். அப்போ அவரை ஏளனம் செய்தவர்கள், இப்போ அதையே தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வில்லாத அபிவிருத்தி தேவையில்லை என்ற போது ஏதோவெல்லாம் கூறினார்களே?
சரி .....காலம் கடந்தாவது திருவாய் மலர்ந்துள்ளார்கள்.மிகுதி காத்திருங்கள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அரசியல் தீர்வில்லாத அபிவிருத்தி தேவையில்லை என்ற போது ஏதோவெல்லாம் கூறினார்களே?
சரி .....காலம் கடந்தாவது திருவாய் மலர்ந்துள்ளார்கள்.மிகுதி காத்திருங்கள் 😁

அவர் என்ன சொன்னார் என்பது பெரிதல்ல, அவர் சொன்னபடியால் பிழை, அதையே இவர்கள் சொன்னால் சரி. ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே? அவர்கள் பிள்ளைகளின் கல்வி,  பொருளாதாரம் இதனால் பாதிப்படைவது இல்லையே, பாதிக்கப்படுவது எல்லாம் ஏழைகளின், அவர்களுக்கு வாழ்வு கொடுத்தவர்களின் பிள்ளைகளே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""அதேவேளை கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவின் சார்பில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ், கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை, கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் பணிப்பாளர் கணேசன் சுகுமார் மற்றும் கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் இளங்கோ ரட்ணசபாபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.""

🤣

இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னரும் இப்படியான சுற்றுலா  ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அந்த சுற்றுலாவிற்குப் போனவர்கள் சிங்களத்தின் விருந்தோம்பலில் மூழ்கி திளைத்து வந்தது மட்டும்தான்  மிச்சம். 

அதன் பின்னர் அங்கு எந்தவிதமான முதலீட்டையும் செய்ததாக யான் அறியேன். 

இதுவும் முன்னர் போன்ற சுற்றுலா என்பதுதான் என் யூகம். 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

""அதேவேளை கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவின் சார்பில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ், கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை, கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் பணிப்பாளர் கணேசன் சுகுமார் மற்றும் கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் இளங்கோ ரட்ணசபாபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.""

🤣

இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னரும் இப்படியான சுற்றுலா  ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அந்த சுற்றுலாவிற்குப் போனவர்கள் சிங்களத்தின் விருந்தோம்பலில் மூழ்கி திளைத்து வந்தது மட்டும்தான்  மிச்சம். 

அதன் பின்னர் அங்கு எந்தவிதமான முதலீட்டையும் செய்ததாக யான் அறியேன். 

இதுவும் முன்னர் போன்ற சுற்றுலா என்பதுதான் என் யூகம். 😀

கொத்துக்கடை போட இடம் பார்க்கப் போறவை😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 

இதுவும் முன்னர் போன்ற சுற்றுலா என்பதுதான் என் யூகம். 😀

😂👌

2 hours ago, இணையவன் said:

சம்பந்தர் உருப்படியாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். நல்லது !

சிறு துளிகளாயினும் பல்வேறு அழுத்தங்களால் ஏதாவது நடக்கலாம். 

நடக்கும் ஆனா நடக்காது😄

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.