Jump to content

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

நேற்று இரவு யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று யாழ் இந்திய துணை தூதுவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது யாழ். பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1309907

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது போத்தல் தாக்குதல்

By VISHNU

10 NOV, 2022 | 05:22 PM
image

யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது 9 ஆம் திகதி புதன்கிழமை இனம் தெரியாத நபர்களினால் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IMG-20221110-WA0071-1-696x522.jpg

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (10) காலை யாழ். இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண பொலிசாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

20221110_160515-696x313.jpg

இந்நிலையில் யாழ்ப்பாண பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139665

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிரிப்பு வருது எனக்கு மட்டும்தானா🤗🤗🤭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசாங்க உயர் மட்ட அதிகாரிகள் அண்மையில் தமிழ் ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும்  இன்னோரன்ன புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு வரவழைத்து ஈழத் தமிழருக்கான  தீர்வுத்திட்டம் குறித்து பேசியதாக அண்மையில் ஒரு செய்தி வந்ததே. அந்த செய்தி உண்மையானால் தமிழ் தரப்புக்கு எதிரான தீய சக்திகளின் தூதரகம் மீதான இதுபோன்ற தாக்குதலால் இந்திய அரசை சீண்டி விடவும்  இந்திய அரசுக்கும் தமிழ் தரப்புக்கும் இடையிலான நல்லுறவை பாதிக்கும்  வகையிலும் யாரோ சில விசமிகள் செய்த திட்டமிட்ட சதியாகவும் இதைக்கருதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vanangaamudi said:

ஈழத் தமிழருக்கான  தீர்வுத்திட்டம் குறித்து பேசியதாக அண்மையில் ஒரு செய்தி வந்ததே.

சூடம் கொழுத்தி, அதன்மேல் அடித்துச் சத்தியம் செய்யுங்கோ, இந்தியா இப்படிச் செய்யும் என்று உண்மையாக நீங்கள் நம்புகின்றீர்களா ? 

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சிரிப்பு வருது எனக்கு மட்டும்தானா🤗🤗🤭

சிரிப்பு எங்கோயிருந்து வருகிறது. முன்பக்கத்தில் இருந்தா அல்லது...

எனக்கு ......

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் தேட, இவங்களே தங்களுக்கு… வெறும் போத்தலை எடுத்து அடிச்சிருப்பாங்கள். 😂
அப்படிப் பட்ட,  யம காதகன்கள்.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

முதலாவது படத்தில் 2 பேர் மதிலின் அகலத்தை அளப்பதைப் பார்த்தால் பலத்த சந்தேகமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு அடிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே. ஆனால் தற்போது அடித்திருப்பது இலங்கை இராணுவமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவுக்கு 1987 இலேயே போதிய அளவு பாடம் கற்பித்துவிட்டார்கள் தமிழர்கள். இந்தப் போத்தல் எல்லாம் அடிக்க வேண்டிய தேவையில்லை. இது யாரோ ஏதோ தேவைக்காக அடித்திருக்கிறார்கள். மாவீரர் நாளை குழப்ப ஒரு சேதி தேவையாக இருக்குது போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை எமது மக்கள் செய்திருக்கமாட்டார்கள் என்பதில் எனக்கு துளியலவில் கூட சந்தேகமில்லை, இதனை இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம்.

விடுதலை புலிகள் காலத்திலேயே பல இந்திய உளவாளிகள் மன்னார்ரினை மையமாக கொண்டு செயற்பட்டிருந்ததாக கேள்விபட்டிருந்தேன், அவர்களது தொடர்பாடல் சங்கேத கடித பரிமாற்றம் மூலம் தபால் சேவையின்றி நேரடியாக மேற்கொள்ளப்பட்டதாக கேள்விபட்டுள்ளேன்.

இப்போது இந்திய துணை தூதரகம் யாழ்குடாநாட்டில் இருப்பதன் முக்கியமான நோக்கம் இந்தியாவின் உளவு நடவடிக்க்கைக்காகவே என கருதுகிறேன், இலங்கை அரசியலில் தொடர்ந்து கும்மியடிக்கும் இந்தியாவினை தட்டி வைக்க கால காலமாக இலங்கை அரசு பல செயல்களை செய்துள்ளது, அதன் தொடர்ச்சியாக இது இருந்திருக்கலாம், ஆனால் சாதாரணமாக போத்தல்களையா எறியவேண்டும்? எனும் விடயம்தான் விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு, இலங்கையிலிருக்கும் சீனாக்காரர் மேற்தான் சந்தேகமாம்!

3 hours ago, vasee said:

எமது மக்கள் செய்திருக்கமாட்டார்கள் என்பதில் எனக்கு துளியலவில் கூட சந்தேகமில்லை, இதனை இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம்.

பயத்தில கனவிலே எழும்பி இவர்களே அடிச்சிருப்பார்கள். பொறுங்கோ கேலிச்சித்திரம் வரும், உடைந்த போத்தலை வைச்சு இண்டைக்கே ஆளை கண்டுபிடிச்சிடும் இலங்கை காவற்துறை!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் மீதான போத்தல் தாக்குதல் ; 3 பேர் கைது

By T. SARANYA

11 NOV, 2022 | 12:14 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்ணாடி போத்தலினால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக, இந்திய துணை தூதரக அதிகாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ். பொலிஸார், 3 பேரை  கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் பயணித்த காரினையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வாகனம் ஒன்றில் பயணித்த ஒருவர் மது போதையில்  கண்ணாடி க்ளாஸ் ஒன்றை தவறுதலாக வீசியமை விசாரணையில் தெரியவந்ததாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/139722

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் மீதான போத்தல் தாக்குதல் ; 3 பேர் கைது

By T. SARANYA

11 NOV, 2022 | 12:14 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்ணாடி போத்தலினால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக, இந்திய துணை தூதரக அதிகாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ். பொலிஸார், 3 பேரை  கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் பயணித்த காரினையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வாகனம் ஒன்றில் பயணித்த ஒருவர் மது போதையில்  கண்ணாடி க்ளாஸ் ஒன்றை தவறுதலாக வீசியமை விசாரணையில் தெரியவந்ததாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/139722

அட…. வெறிக் குட்டிகள் செய்த வேலை.
நானும் ஏதோ… சீனாக்காரன், இந்திய தூதரகத்துக்குள் தாக்குதல் நடத்தியுள்ளான் என சந்தோசப் பட்டேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

அட…. வெறிக் குட்டிகள் செய்த வேலை.
நானும் ஏதோ… சீனாக்காரன், இந்திய தூதரகத்துக்குள் தாக்குதல் நடத்தியுள்ளான் என சந்தோசப் பட்டேன். 😂

சீனா என்று கேட்டாலே வெலவெலக்குது இந்தியாவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்னத்துக்கோ நூல் விட்டு பாக்குது எண்டு நான் நினைக்கிறன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இந்தியா என்னத்துக்கோ நூல் விட்டு பாக்குது எண்டு நான் நினைக்கிறன்.😁

புலிப்பல்லவி பாடி மாவீரர் நாளை குழப்ப தன்பங்குக்கு அடியெடுத்து கொடுக்குது சிங்களத்துக்கு. செய்தவினை குத்திக்கொண்டே இருக்குதெல்லே. மாவீரரின் ஆன்மாக்கள்  அவர்களை நிம்மதியாக தூங்க விடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம்!

யாழ். இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம்!

யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவகம் மீது நேற்று இரவு காரில் வந்த இனம் தெரியாத நபர் கண்ணாடி போத்தலினால் தாக்கி விட்டு சென்றதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த சம்பவம் சிறிய சம்பவமாக காணப்பட்டாலும் இதன் பின்புலம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

எங்களை பொறுத்த வரையில் இந்திய தூதுரகம் யாழ்ப்பாண மக்களுடன் மிகவும் அன்னியோன்னியமாக பழகிவரும் வரும் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் .

https://athavannews.com/2022/1310011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

எங்களை பொறுத்த வரையில் இந்திய தூதுரகம் யாழ்ப்பாண மக்களுடன் மிகவும் அன்னியோன்னியமாக பழகிவரும் வரும் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் .

 

4 hours ago, ஏராளன் said:

வாகனம் ஒன்றில் பயணித்த ஒருவர் மது போதையில்  கண்ணாடி க்ளாஸ் ஒன்றை தவறுதலாக வீசியமை விசாரணையில் தெரியவந்ததாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்

அதுதான் மிக தெளிவாக குடிபோதையில் வந்தவர்கள் தவறுதலாக கண்ணாடி குவளையை இந்திய தூதரகம் பக்கமாக வீசிவிட்டனர் என்று சிங்கள நிர்வாகமே சொன்ன பின்னரும், 

என்னமோ இந்திய தூதரகம்மீது யாழ்ப்பாண தமிழர்கள்  திட்டமிட்டு பெற்றோல் குண்டு  வீசிவிட்டனர்  என்பது போன்ற தோற்றப்பாட்டை கொடுக்கும் தமிழர் நிர்வாக பகுதி சிவஞானம் சிங்களவனைவிட தமிழர்கள் கெட்டவர்கள் என்று இந்தியாவுக்கு காட்ட முனைகிறாரா? 

இலங்கை வரலாற்றில் தமிழர்களின் எதிரிகள் எப்போதுமே எமக்கு வெளியில் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

 

அதுதான் மிக தெளிவாக குடிபோதையில் வந்தவர்கள் தவறுதலாக கண்ணாடி குவளையை இந்திய தூதரகம் பக்கமாக வீசிவிட்டனர் என்று சிங்கள நிர்வாகமே சொன்ன பின்னரும், 

என்னமோ இந்திய தூதரகம்மீது யாழ்ப்பாண தமிழர்கள்  திட்டமிட்டு பெற்றோல் குண்டு  வீசிவிட்டனர்  என்பது போன்ற தோற்றப்பாட்டை கொடுக்கும் தமிழர் நிர்வாக பகுதி சிவஞானம் சிங்களவனைவிட தமிழர்கள் கெட்டவர்கள் என்று இந்தியாவுக்கு காட்ட முனைகிறாரா? 

இலங்கை வரலாற்றில் தமிழர்களின் எதிரிகள் எப்போதுமே எமக்கு வெளியில் இல்லை.

ஐயாவுக்கு முதலமைச்சர் பதவியில் ஒரு கண்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

 

அதுதான் மிக தெளிவாக குடிபோதையில் வந்தவர்கள் தவறுதலாக கண்ணாடி குவளையை இந்திய தூதரகம் பக்கமாக வீசிவிட்டனர் என்று சிங்கள நிர்வாகமே சொன்ன பின்னரும், 

என்னமோ இந்திய தூதரகம்மீது யாழ்ப்பாண தமிழர்கள்  திட்டமிட்டு பெற்றோல் குண்டு  வீசிவிட்டனர்  என்பது போன்ற தோற்றப்பாட்டை கொடுக்கும் தமிழர் நிர்வாக பகுதி சிவஞானம் சிங்களவனைவிட தமிழர்கள் கெட்டவர்கள் என்று இந்தியாவுக்கு காட்ட முனைகிறாரா? 

இலங்கை வரலாற்றில் தமிழர்களின் எதிரிகள் எப்போதுமே எமக்கு வெளியில் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களுக்கு அரசியல் அறிவு, சுத்தமாக இல்லை.
எந்த இடத்தில், எதை கதைக்க வேண்டும் என்ற விவஸ்தை அற்றவர்கள். 
எல்லாம்... முழு முட்டாள் பயலுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேன் அங்க அடிக்க இங்க வலிக்குது? தனது இனம் கொத்து கொத்தாக விழும்போதுகூட இப்படி துடிக்கவில்லை இவர்? இனம் இனத்தைச்சாரும்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.