Jump to content

இந்திய ரி 20 அணி - அரையிறுதி தோல்விக்கு பின்னர் பல மாற்றங்கள் இடம்பெறலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ரி 20 அணி - அரையிறுதி தோல்விக்கு பின்னர் பல மாற்றங்கள் இடம்பெறலாம்

By RAJEEBAN

11 NOV, 2022 | 12:36 PM
image

இந்திய ரி20 அணி அடுத்த இரண்டு வருடங்களில் பாரிய மாற்றங்களை சந்திக்கும் ரோகித் சர்மா விராட்கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் ஓய்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோகித் சர்மா விராட்கோலி அஸ்வின் போன்றவர்கள் மெல்ல மெல்ல அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்களை மேற்கோள்காட் டிதகவல்கள் வெளியாகியுள்ளன.

தினேஸ் கார்த்திக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினும் ரி20 போட்டிகளில் தங்களின் இறுதி போட்டிகளை விளையாடியுள்ளனர் பி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்கள் தெரிவி;த்துள்ளன.

எனினும் விராட்கோலி ரோகித்சர்மாவை பொறுத்தவரை தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களிடமே வழங்கப்படும் என  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

india_t20-south-africa.jpg

அடுத்த ரி20 உலக கிண்ணப்போட்டிகளிற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் உள்ள சூழ்நிலையில் புதிய ரி20 அணியொன்று காணப்படும் ஹர்டிக் பண்ட்யா அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எவரையும ஓய்வு பெறுமாறு ஒருபோதும் கேட்காது அது தனிப்பட்ட தீர்மானம் 2023 இல் மிகவும் குறைந்தளவு ஒருநாள் போட்டிகளே விளையாடப்படவுள்ள நிலையி;ல் சிரேஸ்ட வீரர்கள் ஒருநாள் டெஸ்ட்போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள் என  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உங்களிற்கு விருப்பம் இ;;ல்லாவிட்டால் நீங்கள் ஒய்வு பெறத்தேவையில்லை,அடுத்த வருடம் அனேகமான சிரேஸ்ட வீரர்கள் ரி20 போட்டிகளில் விளையாடுவதை பார்க்கமாட்டீர்கள் என  விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/139727

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபது20 குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க பிசிசிஐ ஆராய்கிறது

By DIGITAL DESK 3

15 NOV, 2022 | 03:56 PM
image

 

இருபது20 போட்டிகளுக்கான இந்திய குழாமில் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனிக்கு முக்கிய பதவியொன்றை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்களால் தோல்வியடைந்து வெளியேறியது.

இதையடுத்து. இந்திய அணியை மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆராயந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இருபது20 போட்டிகளுக்கான குழாமில் மஹேந்திர சிங் தோனிக்கு முக்கிய பதவியை வழங்கி அவரை குழாமில் வைத்துக்கொள்வவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளிhயகியுள்ளது.

மற்றொரு முன்னாள் அணித்தலைவர் ராகுல் திராவிட் 3 வகைப் போட்டிகளுக்கும் இந்திய அணியின் பயிற்றுநராக உள்ளமை அவருக்கு பணிச்சுமையை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

இதனால், இருபது20 போட்டிகளுக்கான குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/140124

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோகித் சர்மா ஓர‌ம் க‌ட்ட‌ப் ப‌ட‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

கோலி இன்னும் இந்திய‌ அணிக்காக‌ குறைந்த‌து ஜ‌ந்து ஆண்டு த‌ன்னும் விளையாவார்

 

ர‌ன் மிசின் ப‌ழைய‌ ப‌டி வேலை செய்ய‌ தொட‌ங்கிட்டு

 

அஸ்வின் கார்த்திக்கு இது தான் க‌ட‌சி உல‌க‌ கோப்பை

 

அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இவ‌ர்க‌ள் விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம்

 

என்ன‌ தான் வீர‌ர்க‌ளை மாற்றி விளையாடினாலும் இந்தியாவுக்கும் உல‌க‌ கோப்பைக்கும் தூர‌த்து பொருத்த‌ம் 😏

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

இந்தியா ஐ பில் உடன் நிற்பது நல்லது.

கிரிக்கெட்டால் இந்திய‌ நாட்டுக்கு பெருத்த‌ அவ‌மான‌ம் அண்ணா

கோடி கோடியா காசை கொட்டி ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌த்தி க‌ட‌சியில் ஒவ்வொரு உல‌க‌ கோப்பையிலும் கோப்பை தூக்காம‌ வெளி ஏறுவ‌து

சில‌ உல‌க‌ கோப்பையில் சிமி பின‌லுக்கு கூட‌ வ‌ராம‌ல் போய் இருக்கின‌ம் நான் சொல்ல‌ வ‌ருவ‌து ஜ‌பிஎல் தொட‌ங்கின‌ பிற‌க்கு

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இல‌ங்கை மூன்று முறை பின‌லுக்கு வ‌ந்து இருக்கு அதில் ஒரு முறை கொப்பையை தூக்கினார்க‌ள்

இந்தியா இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்து ஒரு முறை தான் கோப்பை அவ‌ர்க‌ள் கைக்கு போன‌து..........

இந்தியா அணியில் க‌ப்ட‌னை மாற்றி ஒன்றும் பெரிசா ந‌ட‌க்க‌ப் போவ‌து கிடையாது...........டோனியிம் திற‌மையும் அதிஷ்ட‌மும் இருந்த‌ ப‌டியால் இந்தியாவுக்கு ப‌ல‌ கோப்பைக‌ளை வென்று கொடுத்தார் 

இந்திய‌ கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ள் ஜ‌பிஎல்ல‌ தான் பெருமையா நினைக்குதுக‌ள்..........17வ‌ருட‌மாகியும் மீண்டும் உல‌க‌ கோப்பைய‌ தூக்க‌ வில்லை என்ர‌ க‌வ‌லை அவ‌ர்க‌ள் ம‌த்தியில் இருப்ப‌தா தெரிய‌ வில்லை 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'தலைவன்' தோனி வந்தால் இந்திய அணி கோப்பைகளைக் கைப்பற்றிவிடுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியதும், சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிய பெயர்களுள் ஒன்று மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக அதிகமாகப் பெற்றுத் தந்தவர் என்பது அவரது சிறப்பு.

ஆனால் இந்திய அணி இன்னொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரால் உதவ முடியுமா? இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அவரை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்? இந்திய அணிக்கு தோனியின் தேவை இருக்கிறதா?

“கிரிக்கெட்டில் முடிவெடுக்கும் திறன் என்பது மிகவும் முக்கியமானது. தோனி மற்ற எல்லா கேப்டன்களையும் விட அதில் சிறந்தவர்” என்கிறார் இந்திய மகளிர் அணியில் ஆடி வரும் ஹேமலதா.

மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது டி20 உலகக் கோப்பையையும், 50 ஓவர் உலகக் கோப்பையைும் இந்திய அணி கைப்பற்றியது. கூடவே சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி தொடர்கள் எதிலும் கோப்பையைக் கைப்பற்றவில்லை. 

 

2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, இப்போது மீண்டும் ஒரு டி20 உலகக் கோப்பை என தொடர்ச்சியான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது. 

தோனிக்கு பிறகு நீண்ட கால கேப்டன்களாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இருந்திருக்கிறார்கள். ஆயினும் கோப்பைகள் கிடைக்கவில்லை. தோனி போன்ற கேப்டன் இல்லாததே இந்திய அணி கோப்பைகளை வெல்ல முடியாமல் போவதற்குக் காரணம் என்ற விவாதங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. 

இப்படியொரு சூழலில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணிக்காக புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தோனி ஏற்கெனவே அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். மீண்டும் அவர் அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் செயல்பட்டது போன்றே ஆலோசகர் என்கிற அளவிலான பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது?

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை  தொடரைப் போல அல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று சிறப்பான தொடக்கத்தை தந்தது. ரன்கள் எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் அதிரடியாக மீண்டு வந்தார். குரூப் -2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி அந்தப் பிரிவிலேயே முதலாவதாக வந்தது. 

உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 12 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனாலும் கோப்பையை வெல்வதற்கு இது போதுமானதாக இல்லை.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது.

“இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சாடினார். 

 

இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.

“கிரிக்கெட்டில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி பழைய வகையில் இருந்து வெளியே வர மறுக்கிறது” என்று குறிப்பிடுகிறார் விளையாட்டு விமர்சகர் தினேஷ் அகிரா.

"திறமையான வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது. அணுகுமுறையில்தான் தவறு இருக்கிறது. டி20 கிரிக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட்டின் நீட்சியாகத்தான் இந்திய அணி பார்க்கிறது.

இங்கிலாந்து போன்ற அணிகள் வீரர்களை வரிசையை மாற்றி களமிறக்குகின்றன. எதிர் தரப்பில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து ரன்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டார்கள் என்றால், அதற்கு ஏற்ற பேட்ஸ்மேனை கொண்டு வரிசையை மாற்றுகின்றன. ஆனால் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களையோ, மிடில் ஆர்டரையோ மாற்றத் தயங்குகிறது. ” என்கிறார் தினேஷ் அகிரா.

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் குறைபாடா?

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததுடன், ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட திறன்களும் விமர்சிக்கப்படுகின்றன. கேப்டனாக இருப்பது தனிப்பட்ட வகையிலும், தனிப்பட்ட முறையில் ரன் குவிக்கத் திணறுவது கேட்டன்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

“நிறைய தருணங்களில் ரோஹித் சர்மா கோபப்படுவதை பார்க்க முடிந்தது. தொடர் முழுக்கவே அவர் அழுத்தத்துடன் இருப்பது போலவே தோன்றியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்த ரோஹித் சர்மாவை சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியவில்லை” என்கிறார் தினேஷ் அகிரா.

ஆயினும் கேப்டன்சியை காட்டிலும் ஒட்டுமொத்த அணுகுமுறையே உடனடியாக மாற்றப்பட வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். “ஒருவர் மீது மட்டும் குறையைக் கூறி தப்பிக்க முடியாது” என்கிறார் அவர்.

அணித் தேர்வில் இருந்து சரி செய்யப்பட வேண்டியது என்கிறார் அவர்.

தோனியின் தனித்தன்மை என்ன?

தோனி இந்திய அணிக்கு கேப்டனாக வந்தது ஒரு நெருக்கடியான காலகட்டம். தனிப்பட்ட முறையும் தோனிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சோதனைகள் ஏற்பட்டிருந்தன. 2007-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இலங்கையிடமும், வங்கதேசத்திடமும் எதிர்பாராத வகையில் தோல்விகளைச் சந்தித்து வெளியேறியிருந்தது. இந்த இரு போட்டிகளிலும் பூஜ்ஜியம் ரன்களை எடுத்த தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவரது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் சுமார் ஆறு மாத இடைவெளியில் இந்திய கிரிக்கெட் மீதும் தன்மீது இருந்த விமர்சனங்களை தோனியால் துடைத்தெறிய முடிந்தது.

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட தோனி இறுதிப் போட்டியில்  பாகிஸ்தானை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்கப் பிறகு இந்தியாவுக்கு ஓர் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் திறன் தோனியிடம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

“தோனி ஒரு கற்பனை வளம் மிக்க கேப்டன்” என்கிறார் தினேஷ் அகிரா. மிகக் குறைந்த அளவு திறமை கொண்ட வீரர்களை வைத்தே, பெரிய அளவு சாதிப்பதற்கு இந்தக் கற்பனை வளம் உதவுகிறது என்கிறார் அவர்.

“2015 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரைக்கும் இந்திய அணி சென்றதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்தத் தொடருக்கு முன்பு இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே இருந்தது. எதிர்பார்ப்பே இல்லாமல்தான் உலகக் கோப்பைக்குச் சென்றது. அத்தகைய அணியை அரையிறுதி வரைக்கும் அழைத்துச் சென்றார் தோனி. இருக்கும் வீரர்களைக் கொண்டு அணியை தோனியால் வெற்றிபெற வைக்க முடியும். அது ஒரு மேதையின் திறன். அந்தத் திறமை அடுத்த வந்த கேப்டன்களிடம் இல்லை” என்கிறார் தினேஷ்.

மைதானத்தில் பதற்றமில்லாமல் இருந்தபடியே சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடிய திறனைப் பற்றி ஹேமலதா குறிப்பிடுகிறார்.

“கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் இவரை பந்துவீச அழைக்க வேண்டும். அடுத்த போட்டியில் இந்த வீரரை களமிறக்க வேண்டும் என்பதையெல்லாம் தோனி அற்புதமாகத் தீர்மானிக்கக்கூடியவர்” என்கிறார் ஹேமலதா. இவர் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் ஆடி வருபவர்.

 

தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணிக்கு மீண்டும் தோனி வந்தால் என்னவாகும்?

இந்திய அணியின் தொடர் தோல்விகளால், வெற்றிகரமான கேப்டன் என்ற முறையில் தோனியின் பெயர் இப்போது விவாதத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் அணியை அப்படியே வைத்துக் கொண்டு தோனியை வரவழைத்து எதுவும் செய்ய முடியாது என்கிறார் தினேஷ் அகிரா.

இந்த அணியில் ஏற்கெனவே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார். பெரிய அளவு அடையாளம் இல்லாதவர்கள் பயிற்சியாளர்களாக இருக்கும் அணிகளுக்கு ஆலோசகர் போன்ற பொறுப்புகளில் புகழ்பெற்ற ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் ஏற்கெனவே புகழ்பெற்ற வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டால் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.

“அணியைக் கலைத்துப் போட்டு, இளைஞர்களைக் கொண்டு வந்துவிட்டு, தோனியை ஆலோசகராக நியமித்தால் சரியாக இருக்கும்” என்கிறார் தினேஷ் அகிரா.

தோனி இன்னும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்து அறிவித்திருக்கிறது. 

"தலைவன் (எம்.எஸ். தோனி) தான் அணியை வழிநடத்தப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் சிறப்பானதைச் செய்வார், அணி சிறப்பாகச் செயல்படும்" என்று அறிவித்தார் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி விஸ்வநாதன். 

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தோனி மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பது அதன் அடுத்தகட்ட அறிவிப்புகளில்தான் அறிய முடியும்.

https://www.bbc.com/tamil/articles/cp65e40jpjxo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட வேண்டுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விதான்ஷு குமார்
  • பதவி,பிபிசி இந்திக்காக
  • 17 நவம்பர் 2022, 12:33 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுவாக இதுபோன்ற படங்கள் அரிதாகவே காணப்படுகின்றன - கேமரா உங்கள் மீது ஃபோக்கஸ் செய்கிறது, நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள்.

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியபோது ரோஹித் சர்மாவின் நிலை இதுதான்.

ரோஷித் சர்மா, ஒயிட் பால் கிரிக்கெட்டில் அழியாத முத்திரையை பதித்தவர். ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர்.

ஹிட்மேன் என்று உலகம் போற்றும் அவர், ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனும் ஆவார். அவரது உணர்ச்சிப் பெருக்கு, சக வீரர்களை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் கோடிக்கணக்கான ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தது.

 

ஆனால், டி20யில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமையேற்று ஒரு வருடம்தான் ஆகிறது.

இந்திய டி20யின் எதிர்காலம் 35 வயதான ரோஹித் சர்மாவின் கேப்டன்சியைத்தான் நம்பியிருக்கிறதா என்ற குரல்கள் உலகக் கோப்பையின் இந்தத் தோல்விக்குப் பிறகு  எழுந்துள்ளன.

ரோஹித்தின் கேப்டன்சியில் அணியின் செயல்பாடு

2021 டி 20 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலே இந்தியா வெளியேறியது.அதன் பிறகு கேப்டன்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா அணியின் புதிய கேப்டனானார்.

புதிய கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணி இருதரப்பு தொடர்களில் சிறப்பாக விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றது.

இதில் சில தொடர்களில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும்  முடிவு இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது.

இதன் போது நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளை 3-0 என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்தது. அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இந்தியா வெற்றிவாகை சூடியது.

 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சொந்த மண்ணில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இந்த முடிவுகளைப் பார்க்கும்போது இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது, எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது என்பது போலவே தோன்றும்.

ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் மிகப்பெரிய ஐசிசி போட்டியில் இந்தியா வெற்றி பெறத் தவறிவிட்டது.

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எங்கே தவறு நடந்தது?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு முதல் பெரிய சவால் ஏற்பட்டது.

குழு நிலையிலான முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, பின்னர் பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியடைந்து இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

ரோஹித் ஷர்மாவின் அணிக்கு இரண்டாவது பெரிய சவாலாக இருந்தது T20 உலகக் கோப்பை 2022. இதிலும் இந்திய அணி ரசிகர்களை ஏமாற்றியது.

கடைசி சில பந்துகளில் பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகளுக்கு எதிரான கடினமான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் இரண்டு பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் மோதிய போது பந்தயத்தின் முடிவு இந்தியாவுக்கு எதிராக அமைந்தது.

 பேட்டிங் பவர்பிளேயை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியாமல் போனதுதான், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம்

ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியை டாப் ஆர்டராகக்கொண்ட இந்திய அணியின் பவர்ப்ளே சராசரி  ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட  மட்டுமே அதிகமாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்திய அணியின் தோல்விக்கு,  பயத்தால் வெலவெலத்த அதன்  பேட்டிங் தான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் உசேன் தெரிவித்துள்ளார்.

மேலும்  இந்திய அணி  மிகவும் பழைய பாணியில் டி20 கிரிக்கெட்டை விளையாடி வருவதாகவும், அதன் காலம் கடந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

தொடக்கத்தில் விக்கெட்டுகளை காப்பாற்றி பின்னர் அடித்து நொறுக்குவது இந்திய அணியின் உத்தியாக இருந்தது. ஆனால் இந்த உத்தி தோல்வியடைந்தது, இதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பொறுப்பேற்க வேண்டும்.

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கு முன்பும் மாற்றங்கள் நடந்தன

எந்த  ஒரு அணிக்கும் உலகக் கோப்பை  ஒரு பெரிய இலக்காக உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாட அணிகள் விரும்புகின்றன. அதற்கென நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பை தொடங்குகின்றன.

உலகக் கோப்பையில் ஒரு அணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், அணியில் பெரிய மாற்றங்களும் நிகழ்கின்றன.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமே கேளுங்கள்! 1979 உலகக் கோப்பைக்குப் பிறகு 2007 ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது.

1979 இல் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 2007 இல் இந்தியா வங்கதேசம் மற்றும் இலங்கையிடம் தோற்றது.  பெர்முடாஸுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அணி வெற்றி பெற்றது.

போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது.

அந்த ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளராக கிரெக் சேப்பல் இருந்தனர்.இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு ராகுல் டிராவிட்டும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

புதிய கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஆக்கப்பட்டார். அவர் இந்திய அணிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2011 இல் உலகக் கோப்பை நம் கைக்கு வந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும், அணியில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக குரல் கொடுத்துள்ளனர். தோல்வி அடைந்த  அணியின் கேப்டன்கள் இதற்கு முன்பும் நீக்கப்பட்டுள்ளனர், இப்போது அதைச்செய்ய என்ன தயக்கம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதாகிவிடும். அப்போதும் அவர் கேப்டனாக இருப்பாரா, அணியில் இடம் பெறுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால், அதை எவ்வளவு சீக்கிரம் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வது நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர்.

 

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021 இல் தோல்வியடைந்த அதே அணி தான் 2022 உலகக் கோப்பையில் விளையாடியது

கவனமாகப் பார்த்தால் இந்திய டி20 அணியில் பெரிய மாற்றங்களுக்கான நேரம் சென்ற ஆண்டே வந்துவிட்டது.

2021 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியைப் பார்த்தால், அப்போது அணியில் இடம்பெற்ற எல்லா வீரர்களும் 2022 இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடியதை பார்க்கமுடிகிறது.

ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விளையாடாததால், அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

2021ல் மிக மோசமாக விளையாடிய அதே அணி அடுத்த ஆண்டு உலக சாம்பியன் ஆக முடியுமா? அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு  வயதாகிவிட்டது. அணிக்கு ' டேடீஸ் ஆர்மி’ என்ற பட்டப்பெயரும் அளிக்கப்பட்டு வருகிறது.

அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் - அனைவரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்களில் பலரும் 34-35 வயதை நெருங்கியவர்கள்.

அணியின் சராசரி வயது அதிகரித்து வருவதும் உடனடி மாற்றத்திற்கான அறைகூவலாக உள்ளது.

 

எதிர்பார்த்ததை விட குறைவான வெற்றி

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, அணியின் செயல்பாடு எல்லா இடங்களிலும் கண்டிக்கப்பட்டது, இதில் மைக்கேல் வார்ன் முன்னிலையில் உள்ளார்.

உலக கிரிக்கெட்டில் எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த வெற்றி பெற்ற அணிகளில் இந்திய அணியும் ஒன்று என்று வார்ன் கூறினார்.

இவ்வளவு திறமைகள் நிறைந்த அணி டி20 கிரிக்கெட்டில் விளையாடும் விதம் வியப்பளிப்பதாக அவர் கூறினார்.

இந்திய அணியிடம் வீரர்கள் இருக்கின்றனர்,ஆனால் விளையாடும் முறை சரியில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வார்ன், கூறினார். முதல் 5 ஓவர்களில் எதிரணி பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதற்கு எப்படி வாய்ப்பு தருகிறீர்கள் என்று அவர் வினவியுள்ளார்.

வார்ன் இந்திய அணியின் உத்தியை கண்டித்தார். பவர்பிளேயில் அதிக ரன்களை எடுக்காதது  பலவீனம். இது திறமையுடன் தொடர்புடையது அல்ல, மனநலம் சம்பந்தப்பட்டது  என்றும் அவர் கூறினார்.

கேப்டன் ரோஹித் ஷர்மா அணியின் உத்திகளை திட்டமிடுவதில் தவறு செய்து வருகிறார். அதன் காரணமாகவே அணி இதுபோன்ற தோல்விகளை சந்தித்து வருகிறது.

பவர்பிளேயில் பலவீனமான பேட்டிங்கைத் தவிர, லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்படாத காரணமாகவும் அணி பெரிய விலையை கொடுக்கவேண்டி வந்தது. இந்த உலகக் கோப்பையில் அதில் ரஷீத் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் லெக் ஸ்பின் பந்துவீச்சில் அசத்தினர்.

அரையிறுதி போட்டியிலும்கூட  லெக் ஸ்பின்னர் இல்லாத குறையை இந்திய அணி உணர்ந்தது. இந்தியாவிடம் சிறந்த லெக் ஸ்பின்னர் இருக்கிறார், அவர் களத்தில் இல்ல, டக்-அவுட்டில் இருக்கிறார் என்று  போட்டியின் நேர் வர்ணனையின் போது ரவி சாஸ்திரி ஏமாற்றத்துடன் கூறினார். 

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன் மாற்றப்படவேண்டுமா அல்லது விளையாடும் விதமா?

கேப்டன் பதவி மற்றும் மாற்றம் குறித்த இந்த விவாதத்தில், இர்ஃபான் பதானும் ட்வீட் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மூன்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் வேகமாக விளையாட வேண்டும், அணியில் ஒரு லெக் ஸ்பின்னர் இருக்க வேண்டும், அதிவேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இர்ஃபானின் பரிந்துரைகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 2024 வரை இந்த அணி இதே கேப்டன்சியின் கீழ் தொடருமா என்பது சந்தேகமே.

இந்தியாவின் வெவ்வேறு அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெவ்வேறு கேப்டன்கள் இருக்கவேண்டும் என்று  கருதப்படுகிறது.

ஹார்திக் பாண்டியா தலைமையில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் மாற்றம் தொடங்கியுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

புதிய கேப்டன் நியமனம் ஓரளவு உறுதியான ஒன்றுதான்.அது நடக்குமா நடக்காதா என்பது கேள்வி அல்ல.ஆனால் அது எப்போது நடக்கும் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/c7214rrxereo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MS Dhoni Entry கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா? இந்தியா கோப்பைகளை கோட்டைவிட காரணம் என்ன?

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியதும், சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிய பெயர்களுள் ஒன்று மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக அதிகமாகப் பெற்றுத் தந்தவர் என்பது அவரது சிறப்பு. ஆனால் இந்திய அணி இன்னொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரால் உதவ முடியுமா? இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அவரை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்? இந்திய அணிக்கு தோனியின் தேவை இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 கிரிக்கெட் உலக கோப்பை வீழ்ச்சி: சேத்தன் சர்மா தலைமையிலான மொத்த குழுவையும் கலைத்தது பிசிசிஐ

 

டி20 கிரிக்கெட் உலக கோப்பை

பட மூலாதாரம்,CHETAN SHARMA

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

18 நவம்பர் 2022

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய நிலையில், வீரர்களைத் தேர்வு செய்யும் சேத்தன் சர்மா தலைமையிலான ஒட்டுமொத்த தேர்வுக் குழுவை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கலைத்திருக்கிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான இந்தக் குழுவில் மொத்தம் 4 பேர் அங்கம் வகித்தனர். சேத்தன் சர்மா தவிர ஹர்விந்தர் சிங் சுனில் ஜோஷி, தேபாசிஷ் மொஹந்தி ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.

புதிய தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ தனது இணையதளத்தில் அறிவித்திருக்கிறது. இதில் மொத்தம் 5 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள், அல்லது 30 முதல் தர போட்டிகள், அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் ஆடிய அனுபவம் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படுவோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு உருவாக்கப்பட்டது. வழக்கமாக ஒரு தலைவர், நான்கு மண்டலங்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் இது இயங்கும். ஆனால் கலைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தேர்வாளர் யாரும் இல்லை.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது?

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரைப் போல அல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று சிறப்பான தொடக்கத்தை தந்தது. ரன்கள் எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் அதிரடியாக மீண்டு வந்தார். குரூப் -2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி அந்தப் பிரிவிலேயே முதலாவதாக வந்தது.

உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 12 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனாலும் கோப்பையை வெல்வதற்கு இது போதுமானதாக இல்லை.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,CHETAN SHARMA

டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது.

“இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சாடினார்.

முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததுடன், ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட திறன்களும் விமர்சிக்கப்படுகின்றன. கேப்டனாக இருப்பது தனிப்பட்ட வகையிலும், தனிப்பட்ட முறையில் ரன் குவிக்கத் திணறுவது கேட்டன்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/czv0rj80wq2o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.