Jump to content

யாழில், 15 வயதான சிறுமியை திருமணம் செய்து வைக்காததால், வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!

யாழில்,  15 வயதான சிறுமியை  திருமணம் செய்து வைக்காததால்,  வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது.

குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை உட்பட பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞன் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகவும் , அதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில் , இளைஞனின் குழுவால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் , அந்த குழுவினரே வீட்டினுள் நுழைந்து வீட்டுக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1310060

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா, 15 வயது சிறுமியை திருமணம் செய்தால் உள்ள போகவேணும் என்று தெரியாதோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

அடப்பாவிகளா, 15 வயது சிறுமியை திருமணம் செய்தால் உள்ள போகவேணும் என்று தெரியாதோ?!

இவர்கள் செய்த வேலையால்…. அந்தக் குடும்பமே வீட்டை இழந்து விட்டது.
குற்றம்  செய்தவர்களிடம் இருந்தே, பணத்தை அறவிட்டு
அந்தக் குடும்பத்திற்கு,  புது வீட்டை கட்டிக் கொடுக்க வேண்டும்.

இவர்களிடம் பணம் இல்லா விட்டால்… இவர்களின்  உடல் உறுப்புகளான
ஒரு  கிட்னி, ஒரு கண் போன்றவற்றை அகற்றி… வெளி நாட்டுக்கு டாலரில் விற்று,
வரும் பணத்தில் இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள் செய்த வேலையால்…. அந்தக் குடும்பமே வீட்டை இழந்து விட்டது.
குற்றம்  செய்தவர்களிடம் இருந்தே, பணத்தை அறவிட்டு
அந்தக் குடும்பத்திற்கு,  புது வீட்டை கட்டிக் கொடுக்க வேண்டும்.

இவர்களிடம் பணம் இல்லா விட்டால்… இவர்களின்  உடல் உறுப்புகளான
ஒரு  கிட்னி, ஒரு கண் போன்றவற்றை அகற்றி… வெளி நாட்டுக்கு டாலரில் விற்று,
வரும் பணத்தில் இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.

தண்டனைகள் கடுமையாகும் போது குற்றங்கள் குறையும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, ஏராளன் said:

அடப்பாவிகளா, 15 வயது சிறுமியை திருமணம் செய்தால் உள்ள போகவேணும் என்று தெரியாதோ?!

இப்போ யாழ் குடா நாட்டில் ஏழாலைப் பகுதிதான் முண்ணணியில் நின்று செஞ்சரி அடிக்குது. 

இங்கேதான் கசிப்புக்காச்சல் கஞ்சா கடத்தல் பவுடர் மாவா ஐஸ் போன்றவைகளின் கையாள்கையும் பாவனையும் அதிகமாக இருக்குது.

ஏழாலைப்பகுதியில் வெதுப்பகத்தில் வேலை செய்யும் ஒருவர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில்படிக்கும் பதின் நாஙு வயதுச் சிறுமியுடன் பழகி சிறுமி இப்போது கற்பமாகி இருக்குது. தவிர திருமணத்துக்கு வெளியேயான தொடர்புகளும் இப்போது அதிகமாக இப்பகுதியில் காணப்படுகிறது. 

பெண்பிள்ளைகளுக்கோ அல்லது ஆண்களுக்கோ திருமணப்பேச்சுவார்த்தை வந்தால் மிகவும் வன்முறைக்கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேச்சுக்காலின் இறுதியில் எல்லோரும் தலைதெறிக்க ஓடுறாங்கள்.

இப்போ இந்தப்பகுதியில் ஒரு பெண் புதிதாக வழக்குரைஞராக வந்திருக்கிறா அவரது காட்டில் நல்ல மழையாம், அவரது தகப்பனாரிடம் ஒருவர் இதுபற்றி கூறியபோது சட்டத்தில இதுக்கெல்லம் இடமிருக்கு என அவரே சட்டம் கதைக்கிறாராம்.

யாழ் இந்துக்கல்லூரியில் பள்ளிக்கூடத்தில் சேர்க்க கையூட்டு வாங்கிய ஒரு  அதிபர் இப்ப இன்னுமொரு பிரச்சனையில் மாட்டுப்பட்டிருக்கிறார் கல்லுண்டாயில ஒரு காணியை ஒரு பிரக்கிராசியோடு சேர்ந்து வியாபாரி ஒருவருக்கு கள்ளமாக எழுதியதில் சிக்கலில மாட்டுப்பட்டுபோனார்.

இவருக்காகவும் பிரக்கிராசிக்காகவும் வழக்காடியது ரெலோ சிறீகாந்தா அதாவது அனியாயத்தை எதிர்த்து சிறீசபாரத்தினத்துடன் போராடப்போனவர் இப்போ கள்ளருக்கு மல்லுக்கட்டுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Elugnajiru said:

இப்போ யாழ் குடா நாட்டில் ஏழாலைப் பகுதிதான் முண்ணணியில் நின்று செஞ்சரி அடிக்குது. 

இங்கேதான் கசிப்புக்காச்சல் கஞ்சா கடத்தல் பவுடர் மாவா ஐஸ் போன்றவைகளின் கையாள்கையும் பாவனையும் அதிகமாக இருக்குது.

ஏழாலைப்பகுதியில் வெதுப்பகத்தில் வேலை செய்யும் ஒருவர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில்படிக்கும் பதின் நாஙு வயதுச் சிறுமியுடன் பழகி சிறுமி இப்போது கற்பமாகி இருக்குது. தவிர திருமணத்துக்கு வெளியேயான தொடர்புகளும் இப்போது அதிகமாக இப்பகுதியில் காணப்படுகிறது. 

பெண்பிள்ளைகளுக்கோ அல்லது ஆண்களுக்கோ திருமணப்பேச்சுவார்த்தை வந்தால் மிகவும் வன்முறைக்கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேச்சுக்காலின் இறுதியில் எல்லோரும் தலைதெறிக்க ஓடுறாங்கள்.

இப்போ இந்தப்பகுதியில் ஒரு பெண் புதிதாக வழக்குரைஞராக வந்திருக்கிறா அவரது காட்டில் நல்ல மழையாம், அவரது தகப்பனாரிடம் ஒருவர் இதுபற்றி கூறியபோது சட்டத்தில இதுக்கெல்லம் இடமிருக்கு என அவரே சட்டம் கதைக்கிறாராம்.

யாழ் இந்துக்கல்லூரியில் பள்ளிக்கூடத்தில் சேர்க்க கையூட்டு வாங்கிய ஒரு  அதிபர் இப்ப இன்னுமொரு பிரச்சனையில் மாட்டுப்பட்டிருக்கிறார் கல்லுண்டாயில ஒரு காணியை ஒரு பிரக்கிராசியோடு சேர்ந்து வியாபாரி ஒருவருக்கு கள்ளமாக எழுதியதில் சிக்கலில மாட்டுப்பட்டுபோனார்.

இவருக்காகவும் பிரக்கிராசிக்காகவும் வழக்காடியது ரெலோ சிறீகாந்தா அதாவது அனியாயத்தை எதிர்த்து சிறீசபாரத்தினத்துடன் போராடப்போனவர் இப்போ கள்ளருக்கு மல்லுக்கட்டுறார்.

இப்போ யாழ் குடா நாட்டில் ஏழாலைப் பகுதிதான் முண்ணணியில் நின்று செஞ்சரி அடிக்குது. 

இங்கேதான் கசிப்புக்காச்சல் கஞ்சா கடத்தல் பவுடர் மாவா ஐஸ் போன்றவைகளின் கையாள்கையும் பாவனையும் அதிகமாக இருக்குது.

ஏழாலைப்பகுதியில் வெதுப்பகத்தில் வேலை செய்யும் ஒருவர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில்படிக்கும் பதின் நாஙு வயதுச் சிறுமியுடன் பழகி சிறுமி இப்போது கற்பமாகி இருக்குது. தவிர திருமணத்துக்கு வெளியேயான தொடர்புகளும் இப்போது அதிகமாக இப்பகுதியில் காணப்படுகிறது. 

பெண்பிள்ளைகளுக்கோ அல்லது ஆண்களுக்கோ திருமணப்பேச்சுவார்த்தை வந்தால் மிகவும் வன்முறைக்கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேச்சுக்காலின் இறுதியில் எல்லோரும் தலைதெறிக்க ஓடுறாங்கள்.

இப்போ இந்தப்பகுதியில் ஒரு பெண் புதிதாக வழக்குரைஞராக வந்திருக்கிறா அவரது காட்டில் நல்ல மழையாம், அவரது தகப்பனாரிடம் ஒருவர் இதுபற்றி கூறியபோது சட்டத்தில இதுக்கெல்லம் இடமிருக்கு என அவரே சட்டம் கதைக்கிறாராம்.

யாழ் இந்துக்கல்லூரியில் பள்ளிக்கூடத்தில் சேர்க்க கையூட்டு வாங்கிய ஒரு  அதிபர் இப்ப இன்னுமொரு பிரச்சனையில் மாட்டுப்பட்டிருக்கிறார் கல்லுண்டாயில ஒரு காணியை ஒரு பிரக்கிராசியோடு சேர்ந்து வியாபாரி ஒருவருக்கு கள்ளமாக எழுதியதில் சிக்கலில மாட்டுப்பட்டுபோனார்.

இவருக்காகவும் பிரக்கிராசிக்காகவும் வழக்காடியது ரெலோ சிறீகாந்தா அதாவது அனியாயத்தை எதிர்த்து சிறீசபாரத்தினத்துடன் போராடப்போனவர் இப்போ கள்ளருக்கு மல்லுக்கட்டுறார்.

கண்டபடி எழுதினா வெட்டுவிழும் என்று சொல்றீங்க?
யாழ்ப்பாணத்தில கிரிமினல் வழகக்கு பேசி உடைப்பதில் நீங்க சொன்ன பிறக்கிறாசி தானாம் முதல்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கண்டபடி எழுதினா வெட்டுவிழும் என்று சொல்றீங்க?
யாழ்ப்பாணத்தில கிரிமினல் வழகக்கு பேசி உடைப்பதில் நீங்க சொன்ன பிறக்கிறாசி தானாம் முதல்வர்.

முதலில் யாழ் மாநகரசபை அங்கத்தவர் றெமீடிசியஸ், அடுத்தது சிறீகாந்தா, மல்லாகத்தில் கீர்தனா, ஏழாலையில் கீதா, இப்படிப் பல வகையறாக்கள் திரியினம். இதைத் தவிர கனக்கப்பேர் இருக்கினம் எனக்குத் தெரிந்தவகையில் இவர்கள். 

என்ன எனது சட்டைப்பையில் ஒரு ரூபாய்க்காசு இருந்தாலும் அதில் வியர்வை வாசனை வரும் ஆனால் அவர்களிடம் மில்லியஙணக்கில் இருந்தாலும் இரதவாடையும் வன்முறை வாசமுமே. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோட பேரன் ஜி ஜி பொன்னரும் இப்பசிச் சம்பாதிச்சவர்தான் ஆனால் அவருக்கு காரைதீவில கலியானம் முடிச்சவகையில் பெரும்தொகை சொத்து வந்து சேர்ந்தது கஜன் இப்போது வாழும் குயின் ஸ்ரீச் வீடு சேர் பொன் அருணாசலத்தினது ஆகும். பின்பு அவர்கள் விலைக்கு வாங்கிவிட்டார்கள் வீட்டில் பழையகாலத்து பிறாண்டட் கார்கள் அழகுக்காக இப்போதும் நிற்பாடி வைத்திருகினம் அதைவிட கொம்மேர்சல் வங்கியின் பங்குகளில் கணிசமான அளவு கஜனது தாயாருக்குச் சொந்தம். கஜனது தாயால் முன்னர் உதவி அரசாங்க அதிபராக இருந்த முருகேசம்பிள்ளையின் மகளாவார் அவர் ஒரு வைத்தியர் அந்த வழியிலும் பெரும்தொகை சொத்து வந்து சேர்ந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

உண்மையாய் 16,18 வயதிலும் இரவில் தனியாய் பெண்கள் திரிந்தது ஒரு பொற்காலம். அது இப்ப போர்க்காலமாய் தெரியவில்லை .
வாழ்க்கையில் பிரச்சினை இல்லாவிடடாலும் பிரச்சினை தான்.இது எனது கருத்து.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியிருந்த பூமி இப்பிடியாகீட்டுது. வீட்டுக்கு வீடு பிரபாகரன்கள் அவசியம் தேவைப்படுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

அடப்பாவிகளா, 15 வயது சிறுமியை திருமணம் செய்தால் உள்ள போகவேணும் என்று தெரியாதோ?!

அவர் சிறுமியை திருமணம் செய்தால் என்ன, செய்யாவிட்டால் என்ன? அவர் சிறைக்கு போகவேண்டியவரே என்று அவரது தலையெழுத்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகச் சீர்கேடில் இப்போது யாழ் குடாநாடுதான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ சாபம் போல் தெரிகிறது,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வந்தால் தலைநகர் கொழும்பில் சமாளிக்கமுடியாத பிரச்சனைகளோ அன்றேல் அனர்த்தங்களோ நடைபெறுகின்றன. 

எதிர்வரும் சுதந்திர தினத்தை சிங்களம் இவ்வளவு கடஙளுக்கும் மத்தியில் மிக விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிடுகிறது, அ அனால் அவர்கள் நினைப்பதுபோல் நடக்குமா என்பது கேள்விக்குறியே, 

அறத்தோடு வாழ்ந்த ஒருவனது ஆன்மா தப்புச்செய்தவர்களை ஏதோ செய்கிறது என்பதில் எனக்குச் சிறிதளவு நம்பிக்கை ஏற்படுகிறது.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது யாழ் குடாநாட்டில் சொக்கட்டான் பந்தல் போட்டுக் கொண்டாட்டங்கள் செய்ததை யாரும் மறுக்க முடியாது, இதேபோல் விஜை ஆண்டனியையும் விஜையது அம்மாக்கரி சோபா சந்திரசேகரையும் சிங்களம் கூட்டிவந்து அந்த வேளையில் புத்துணர்ச்சி இசைக்கச்சேரி என யாழ் குடாநாடு எங்கும் நடாத்தியது அந்த இசைக்கச்சேரி நடக்கும் அதே நேரத்தில் சில பகுதியில் பல்குழல் ஏவுகணைகள் இசைக்கச்சேரி மேடைக்கு மேலாகவே சென்றதை அவதானித்தவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன் அப்படியிருந்தும் விஜை ஆண்டனியில் நாக்க மூக்க பாடலுக்கு குஞ்சு குருமானிலிருந்து கிழடுகட்டைகள் வரைக்கும் வைலா ஆடியதக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போது சோபா சந்திரசேகரன் பெத்த மகனாலேயே கலைக்கப்பட்டு புத்திர சோகத்துடன் வேறு வீட்டில் வாழ்கிறார்.

மிருதங்க வித்துவான் கண்ணதாசனுக்கு எதிராக ஒரு தாயார் தனது பிள்ளையை கட்டாயப்படுத்தி அடிபாட்டுக்குக் கூட்டிச்சென்றார் எனச் சாட்சி சொல்லி (அந்தத் தாயாரில் வேதனையை நான் மலினப்படுத்தவில்லை மன்னிக்கவும்) கண்ணதாசனுக்குச் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தார். ஆனால் சுண்ணாகத்தில் இரண்டு தாய்மார் தங்கள் பிள்ளைகளை சிங்களக் காவல் துறையில் ஒப்படைத்து இந்தபிள்ளை திருந்தாவிட்டால் இனிமேல் எனக்கு வேண்டாம் எனக்கூறியதை யாராலும் மறுக்க முடியாது.

தவிர வன்முறையையும் சீர்கேட்டையும் கட்டுப்படுத்த எந்தத் தரப்புக்கும் சுமார் நாற்பத்தி எட்டு மணி நேரம் போதுமானது ஆனால் அப்படிச்செய்யக்கூடியவர்களே இதுவரை ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது அனுபவியுங்கோடா எனப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.

புலம்பெயர் தேசத்தில் பெயர் சொல்ல விரும்பாத ஒருபகுதி எந்த எந்த இடங்களில் யார் யார் போதவஸ்து வினியோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லீம்களுக்கும் என்ன தொடர்பு எனப் பல புள்ளிவிபரங்களை அடுக்குகிறார்கள் அவர்களிடம் கேட்டால் எங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன எனக் கூறுகிறார்கள்.

அவர்களை மீறி ஒரு நாட்டிலுள்ள பொறுப்பாளர் ஒருவர் செயற்படப்போய் அதன் காரணமாக ஒரு வைத்தியர் உட்பட கொஞ்சப்பேர் உள்ளுக்குள்ள போயிருக்கினம் காரணம் இந்தியாவும் காங்காங்கிலிருந்து செயற்படும் சீன உளவு நிறுவனமுமாகும்.

ஆனால்

"அறம் நின்று கொல்லும்"

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Elugnajiru said:

"அறம் நின்று கொல்லும்"

👌👍

வார்த்தை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

சமூகச் சீர்கேடில் இப்போது யாழ் குடாநாடுதான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ சாபம் போல் தெரிகிறது,

ஆனால்

"அறம் நின்று கொல்லும்"

மீராவுக்குக் கெட்ட கோபம் வரப்போகிறது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

சமூகச் சீர்கேடில் இப்போது யாழ் குடாநாடுதான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ சாபம் போல் தெரிகிறது,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வந்தால் தலைநகர் கொழும்பில் சமாளிக்கமுடியாத பிரச்சனைகளோ அன்றேல் அனர்த்தங்களோ நடைபெறுகின்றன. 

எதிர்வரும் சுதந்திர தினத்தை சிங்களம் இவ்வளவு கடஙளுக்கும் மத்தியில் மிக விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிடுகிறது, அ அனால் அவர்கள் நினைப்பதுபோல் நடக்குமா என்பது கேள்விக்குறியே, 

அறத்தோடு வாழ்ந்த ஒருவனது ஆன்மா தப்புச்செய்தவர்களை ஏதோ செய்கிறது என்பதில் எனக்குச் சிறிதளவு நம்பிக்கை ஏற்படுகிறது.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது யாழ் குடாநாட்டில் சொக்கட்டான் பந்தல் போட்டுக் கொண்டாட்டங்கள் செய்ததை யாரும் மறுக்க முடியாது, இதேபோல் விஜை ஆண்டனியையும் விஜையது அம்மாக்கரி சோபா சந்திரசேகரையும் சிங்களம் கூட்டிவந்து அந்த வேளையில் புத்துணர்ச்சி இசைக்கச்சேரி என யாழ் குடாநாடு எங்கும் நடாத்தியது அந்த இசைக்கச்சேரி நடக்கும் அதே நேரத்தில் சில பகுதியில் பல்குழல் ஏவுகணைகள் இசைக்கச்சேரி மேடைக்கு மேலாகவே சென்றதை அவதானித்தவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன் அப்படியிருந்தும் விஜை ஆண்டனியில் நாக்க மூக்க பாடலுக்கு குஞ்சு குருமானிலிருந்து கிழடுகட்டைகள் வரைக்கும் வைலா ஆடியதக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போது சோபா சந்திரசேகரன் பெத்த மகனாலேயே கலைக்கப்பட்டு புத்திர சோகத்துடன் வேறு வீட்டில் வாழ்கிறார்.

மிருதங்க வித்துவான் கண்ணதாசனுக்கு எதிராக ஒரு தாயார் தனது பிள்ளையை கட்டாயப்படுத்தி அடிபாட்டுக்குக் கூட்டிச்சென்றார் எனச் சாட்சி சொல்லி (அந்தத் தாயாரில் வேதனையை நான் மலினப்படுத்தவில்லை மன்னிக்கவும்) கண்ணதாசனுக்குச் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தார். ஆனால் சுண்ணாகத்தில் இரண்டு தாய்மார் தங்கள் பிள்ளைகளை சிங்களக் காவல் துறையில் ஒப்படைத்து இந்தபிள்ளை திருந்தாவிட்டால் இனிமேல் எனக்கு வேண்டாம் எனக்கூறியதை யாராலும் மறுக்க முடியாது.

தவிர வன்முறையையும் சீர்கேட்டையும் கட்டுப்படுத்த எந்தத் தரப்புக்கும் சுமார் நாற்பத்தி எட்டு மணி நேரம் போதுமானது ஆனால் அப்படிச்செய்யக்கூடியவர்களே இதுவரை ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது அனுபவியுங்கோடா எனப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.

புலம்பெயர் தேசத்தில் பெயர் சொல்ல விரும்பாத ஒருபகுதி எந்த எந்த இடங்களில் யார் யார் போதவஸ்து வினியோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லீம்களுக்கும் என்ன தொடர்பு எனப் பல புள்ளிவிபரங்களை அடுக்குகிறார்கள் அவர்களிடம் கேட்டால் எங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன எனக் கூறுகிறார்கள்.

அவர்களை மீறி ஒரு நாட்டிலுள்ள பொறுப்பாளர் ஒருவர் செயற்படப்போய் அதன் காரணமாக ஒரு வைத்தியர் உட்பட கொஞ்சப்பேர் உள்ளுக்குள்ள போயிருக்கினம் காரணம் இந்தியாவும் காங்காங்கிலிருந்து செயற்படும் சீன உளவு நிறுவனமுமாகும்.

ஆனால்

"அறம் நின்று கொல்லும்"

அதோட இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! நாம் எல்லாம் சொந்த இடங்களை விட்டோடி வன்னியில் தஞ்சம் அடைந்தபோதும், கிளிநொச்சியில் சமர் நடந்தபோதும், இழப்புகளை கொடுமைகளை திசை திருப்ப சிங்களம் பயன்படுத்தியது கிரிக்கெற், மக்களை அதிலே திளைக்க விட்டு அந்த வெற்றிக்கொண்டாட்டங்களில் எங்கள் துயர் அடிபட்டுப்போனது. ஏன் இந்தப்பொருளாதார நெருக்கடியில் கூட விளையாட்டு வெற்றிகளால் தன்னை மறைத்துக்கொண்டது சிங்களம்? வெற்றியாளரை கவுரவிப்பதை நான் தவறு சொல்லவில்லை ஆனால் தனது குறைகளை மறைக்க இவற்றைப்பயன்படுத்தி தன்னை  உயர்த்தி காட்டியது சிங்களம். இன்று அந்தகிரிக்கெற்றின் லட்ஷணத்தை உலகமே அறியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

அதோட இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! நாம் எல்லாம் சொந்த இடங்களை விட்டோடி வன்னியில் தஞ்சம் அடைந்தபோதும், கிளிநொச்சியில் சமர் நடந்தபோதும், இழப்புகளை கொடுமைகளை திசை திருப்ப சிங்களம் பயன்படுத்தியது கிரிக்கெற், மக்களை அதிலே திளைக்க விட்டு அந்த வெற்றிக்கொண்டாட்டங்களில் எங்கள் துயர் அடிபட்டுப்போனது. ஏன் இந்தப்பொருளாதார நெருக்கடியில் கூட விளையாட்டு வெற்றிகளால் தன்னை மறைத்துக்கொண்டது சிங்களம்? வெற்றியாளரை கவுரவிப்பதை நான் தவறு சொல்லவில்லை ஆனால் தனது குறைகளை மறைக்க இவற்றைப்பயன்படுத்தி தன்னை  உயர்த்தி காட்டியது சிங்களம். இன்று அந்தகிரிக்கெற்றின் லட்ஷணத்தை உலகமே அறியும்!

மேலதிகமாக இறுதிப்போரின்போது கருனாநிதியினது மகள் கனிமொழியைக் கைது செய்து அவரது வாய அத்கியது மட்டுமல்லாது 

இந்தியன் பிரீமியர் லீக்கின் துடுப்பாட்டப்போட்டிகளை சென்னையில் ஒழுங்குசெய்து தமிழ்நாட்டு மக்களை ரீ வி பெட்டியைவிட்டு நகரமுடியால் செய்தவிடையமும் இருக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.