Jump to content

உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

1) உங்களுக்கு எல்லாமே மாறித்தான் விளங்கும் என்பது வழமைதானே.

2) மக்களின் அழிவுகளைப் பார்த்து கிஞ்சித்தும் இரக்கம் காட்டாமல் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முண்டுகொடுப்பதுதான் உங்கள் வாடிக்கை. 

 

கிருபன்,

1) புத்தகங்களின் அட்டையை மட்டுமே வாசித்தால் இப்படித்தான் புரிந்துகொள்வீர்கள். புத்தகத்திற்கு உள்ளேயும் வாசித்துக் கிரகித்துக்கொள்ள வேண்டும். 

உலகம் தட்டையானது என நம்புபவர்கள் பலர்  இப்போதும் இருக்கிறார்கள் எனக் கூறியது உங்களுக்குத்தான். 

2) மக்களின் அழிவைவிட NATO வெல்ல வேண்டும் என விரும்பியது நீங்களே. 

தொப்பியை பிரட்டிப் பழகினால் அது வாழ்நாள் பழக்கமாகிவிடும். ஜாக்கிறதை. 

🤣

20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உக்ரைனின் பிரதேசங்களை புரின் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து கொண்டாடிய இந்த விடியோவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து இரசித்தேன்.
Russia! Russia! Russia!  🤣

எப்பவுமே late தானா 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

1990 இல் இந்திய ஆக்கிரமிப்பு படையினர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிய பின் புலிகள் படிப்படியாக யாழ்ப்பாணத்தை மீண்டும் தமது ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போது நான் உட்பட தமிழ் மக்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவ

goshan_che

உலக தரப்படுத்தல் வரிசையிலேயே வராத பல்கலைகழகத்தில், அதுவும் இளமானி படிப்பை முடித்து விட்டு, சர்வதேச கீர்த்தி பெற்ற பல்கலைகளில் முதுமாணி, முனைவர், மற்றும் ஒரு சில பேராசிரியர்கள் கூட உலாவரும் யாழ் களத்தி

ரஞ்சித்

உக்ரேனிய மக்களின் பொருளாதார, சிவிலியன் கட்டுமானங்களை ரஸ்ஸியா  திட்டமிட்டு அழித்துவருவது கண்கூடு. உக்ரேனின் ராணுவ பலத்தையும், நேட்டொ விரிவாக்கத்தையும் அழிப்பதே ரஸ்ஸியாவின் நோக்கம் என்றால் வைத்தியசாலைகள

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

உலகம் தட்டையானது என நம்புபவர்கள் பலர்  இப்போதும் இருக்கிறார்கள் எனக் கூறியது உங்களுக்குத்தான். 

ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பினால் வரும் மக்களின் அழிவுகளை யார் ரசித்துக்கொண்டிருக்கின்றார்கள் இந்த யாழ் களத்தில் வாசகர்களாக இருப்பவர்களுக்குத் தெரியும். 

ரஷ்யாவின் மூளைச் சலவைக்குள் உள்ளானவர்களும், அவர்களின் சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு பிரச்சாரம் செய்பவர்களும் உலகம் உருண்டை என்றுதான் நம்புகின்றார்கள். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நெடுக்கர் வேறு இன்னோர் திரியில் பிரான்ஸின் இருந்து யாழில் போய் 15 வயதுச் சிறுமியை திருமணம் முடிக்க முயன்றவர் பிரான்ஸில் மலிஞ்சிருக்கும் உக்கிரேன் பெட்டையளைப் போயிருக்கலாம் என்று வகுப்பெடுத்தவர். இப்படித்தான் மனிதாபிமானம் பொங்குபவர்கள் இருக்கின்றார்கள்!

அடைக்கலம் கொடுத்த இடத்தில்.. வெள்ளையை கூட்டிக்கொண்டு ஓடினதும்.. அதே உக்ரைன் காரிகள் தான்.

எங்கள் மக்கள் மீது கூலி வாங்கிக் கொண்டு குண்டுகளை கொட்டியவனும் இதே உக்ரைன்காரன் தான்.

விழுந்த ஆன்டனோவ் விமானங்களை ஓட்டியது.. எம் ஐ 24 ஓட்டியதும் இதே உக்ரைன்காரன் தான்.

எம் மக்கள் மீதே குண்டு வீசியவன் மீது நீங்கள் காட்டும் மனிதாபிமானம் என்பது..??!

நேட்டோ விரிவாக்கத்திற்கும்.. இராணுவ மேலாதிக்கத்திற்கும் இடமளிப்பதன் மூலம் முழு உலகையே பதட்டத்துக்குள் தள்ள நினைக்கும் உக்ரைனின் சமகால அதிபரும் அவரின் ஆதவாளர்களும் முழு உலக அமைதிக்கும் ஆபத்தானவர்களே. இதில் ரஷ்சியாவின் விசேட இராணுவ நடவடிக்கை என்பது உலகின் இராணுவ சமபல நிலையை நிலை நிறுத்த உதவினால்.. உலக அமைதிக்கு நன்மை உண்டாகும். அதன் மூலம் நீண்ட கால ஒழுங்கில் கூடிய மனித உயிரிகளும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படலாம். 

உக்ரைனில் ரஷ்சியாவின் இந்த யுத்தத்தில் மக்களின் இழப்பு வெறும் 10,000 க்குள் தான். அதிலும் உக்ரைனின் ஏவுகணைகள் தாக்கி இறந்தவர்கள் உள்ளடங்க. ஆனால்.. உக்ரைனால்... டான்பஸ் பிராந்தியத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இதை விட அதிகம். அங்கு எங்கே போனது உங்கள் மனிதாபிமானமும்... மேற்குலகின் பக்கச்சார்ப்பு பச்சாதாபமும். 

விடுங்கண்ணே.. உந்த உக்ரைனுக்கான சப்பைக்கட்டை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா இடத்தில் அமெரிக்கா இருந்திருந்தால் உக்ரேன் இப்ப சாம்பலாகி இருக்கும்.
அமெரிக்கா கால் வைச்ச நாடு எது இப்ப ஒழுங்காய் இருக்கு? எல்லாம் பர நாசம்.
பிஸ்கட் பெட்டிக்குள்ளேயே வெடிகுண்டுகளை வைத்து மக்கள் மீது வீசியவர்கள் இந்த அமெரிக்கர்கள். நிலத்தில் விழுந்த பிஸ்கட் பெட்டியை திறக்க அது வெடிக்குமாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனிய மக்களின் பொருளாதார, சிவிலியன் கட்டுமானங்களை ரஸ்ஸியா  திட்டமிட்டு அழித்துவருவது கண்கூடு. உக்ரேனின் ராணுவ பலத்தையும், நேட்டொ விரிவாக்கத்தையும் அழிப்பதே ரஸ்ஸியாவின் நோக்கம் என்றால் வைத்தியசாலைகளும், பாடசாலைகளும், விவசாயத்திற்கு நீர்வழங்கும் அணைக்கட்டுக்களும், மக்களின் தெருக்களும், பாலங்களும், எரிபொருள் தாங்கிகளும், மின்சார விநியோகக் கட்டுமானங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவது ஏன்? உக்ரேன் தன்னிடம் மண்டியிட வேண்டும் என்ப்தற்காகத்தான் ரஸ்ஸியா இவற்றையெல்லாம் செய்கிறது என்பதைத்தவிர இதற்கு வேறு விளக்கம் இருக்க முடியாது.

இந்தப் போரில் ரஸ்ஸியா தோற்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவிற்கு உக்ரேனில் ரஸ்ஸியா செய்வது ஆக்கிரமிப்பு அழித்தொழிப்பு யுத்தம் என்பதும் உண்மை. எம்மில் பலர் இதனை ரஸ்ஸியா உக்ரேன் மக்களுக்காகச் செய்யும் ஒரு மனிதாபிமான விசேட மீட்பு நடவடிக்கை என்று கூறிக்கொண்டாலும்கூட, அவர்களுக்கே இது எவ்வகையான யுத்தம் என்பது நிச்சயம் தெரிந்தே இருக்கிறது. 

இந்த யுத்தம் தொடர்பான எனது மனநிலை ரஸ்ஸியாவின் நடவடிக்கைகளால் இன்னும் இன்னும் உறுதியடைந்தே வருகிறது. உக்ரேனில் ரஸ்ஸியா செய்துவருவதும் இன்றுவரை ஈழத்தில் இலங்கை செய்துவருவதும் அச்சொட்டான ஆக்கிரமிப்பு, வல்வளைப்பு, அழித்தொழிப்பு நடவடிக்கைகளே! ரஸ்ஸியாவின் இந்த ஆக்கிரமிப்பிற்கெதிரான உக்ரேனிய மக்களின் எதிர்ப்போராட்டத்திற்கு எனது தார்மீக  ஆதரவு என்றும் இருக்கும். என்னால் முடிந்தவரையில் உக்ரேனிய மக்களின் எழுச்சிமிகு போராட்டத்திற்கான நியாயப்பாடுகளை சமூக வலைத்தளங்களில்  எழுதிவருகிறேன், தொடர்ந்தும் எழுதுவேன்.

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவின் இந்த ஆக்கிரமிப்பிற்கெதிரான உக்ரேனிய மக்களின் எதிர்ப்போராட்டத்திற்கு எனது தார்மீக  ஆதரவு என்றும் இருக்கும். என்னால் முடிந்தவரையில் உக்ரேனிய மக்களின் எழுச்சிமிகு போராட்டத்திற்கான நியாயப்பாடுகளை சமூக வலைத்தளங்களில்  எழுதிவருகிறேன், தொடர்ந்தும் எழுதுவேன்.

சிறப்பு  👍
தமிழில் தான் இதன் தேவை அதிகமாக உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஆமாம்🤪

 

இலங்கையில் தமிழரின் பூர்வீக வாழிடங்களை சிங்கள மயமாக்கி சிங்கள மாவட்டங்களுடன் இணைத்துவருவதற்கும், அங்கே வாக்கெடுப்புகளை நடத்தி, பெரும்பான்மையினரின் வாக்குகளை அப்பிரதேச மக்களின் விருப்பாகக் காட்டி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கும், இங்கே உக்ரேனிய மக்களின் பூர்வீக தாயகத்தை ஆக்கிரமித்து நின்று, சோடிக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு முடுவுகளை காரணம் காட்டி ரஸ்ஸியாவுடன் வலுக்கட்டாயமாக புட்டின் இணைத்துக்கொள்வதற்கும் இடையே வேறுபாட்டினை என்னால் காண முடியவில்லையே ? 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

1990 இல் இந்திய ஆக்கிரமிப்பு படையினர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிய பின் புலிகள் படிப்படியாக யாழ்ப்பாணத்தை மீண்டும் தமது ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போது நான் உட்பட தமிழ் மக்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பாலியல் வல்லுறவு, கொலை, சித்திரவதை, ஆட்கடத்தல் என்று மிக மோசமாக இருந்த காலகட்டம் மறைந்தது என்று குதூகளித்தோம்.

பின் கிளிநொச்சியை விடுதலைப்புலிகள் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றி விடுவித்த பின் கிளிநொச்சி மக்கள் அடைந்த சந்தோசமும் அளவில்லாதது.

அதேபோன்று இன்று உக்ரேனிய மக்களும் சந்தோஷத்தில் குதூகலிக்கின்றனர். இந்திய இலங்கை ராணுவங்கள் செய்த பாலியல் வல்லுறவு படுகொலைகள் போற்றவற்றுக்கு சற்றும் மிகை இல்லாமல் ரஷ்ய படைகள் அங்கு செய்த அநியாயம் அளவற்றது. இன்று அந்த கொடூர ராணுவம் அகன்ற பின் யுக்ரேனிய மக்கள் அடையும் மகிழ்ச்சி உடன் நானும் கலந்து கொள்கிறேன்.

  • Like 2
  • Thanks 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய நாடுகளும் ஊடகங்களுமே இன்று உக்ரேனின் ஒரு சிறுபகுதி மக்களின் மகிழ்சியை கொண்டாடுகின்றன. அதனுடன் சேர்ந்து நம்மவர்களும்......

ஆனால் தற்சமயம் உக்ரேன் போர் முடிவுக்கு வந்தால் உடனடியாக மேற்குலக நாடுகள்  பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக அபிவிருத்தி செய்து அந்த மக்களுக்கும் நல்ல வாழ்வாதாரங்களை அளித்து முன்னேற்றி விடுவார்கள்.
 
ஈழத்தின் 2009 பாரிய அழிவுக்கு பின் ....அந்த அழிவிற்கு உதவிய நாடுகள் அனைத்தும் இன்றுவரை ஈழ மக்களுக்கு அவர்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்க்க முனைந்ததா? அல்லது தீர்த்து வைத்தார்களா?

புலம்பெயர்தமிழனுக்கு தேவை கொண்டாட்டம். அதில் உக்ரேனையும் சேர்த்து கொண்டாடுவோம்.கதை கவிதை கட்டுரைகள் எழுதி கொண்டாடுவோம்
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய நாடுகளும் ஊடகங்களுமே இன்று உக்ரேனின் ஒரு சிறுபகுதி மக்களின் மகிழ்சியை கொண்டாடுகின்றன. அதனுடன் சேர்ந்து நம்மவர்களும்......

ஆனால் தற்சமயம் உக்ரேன் போர் முடிவுக்கு வந்தால் உடனடியாக மேற்குலக நாடுகள்  பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக அபிவிருத்தி செய்து அந்த மக்களுக்கும் நல்ல வாழ்வாதாரங்களை அளித்து முன்னேற்றி விடுவார்கள்.
 
ஈழத்தின் 2009 பாரிய அழிவுக்கு பின் ....அந்த அழிவிற்கு உதவிய நாடுகள் அனைத்தும் இன்றுவரை ஈழ மக்களுக்கு அவர்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்க்க முனைந்ததா? அல்லது தீர்த்து வைத்தார்களா?

புலம்பெயர்தமிழனுக்கு தேவை கொண்டாட்டம். அதில் உக்ரேனையும் சேர்த்து கொண்டாடுவோம்.கதை கவிதை கட்டுரைகள் எழுதி கொண்டாடுவோம்
 

 

11 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய நாடுகளும் ஊடகங்களுமே இன்று உக்ரேனின் ஒரு சிறுபகுதி மக்களின் மகிழ்சியை கொண்டாடுகின்றன. அதனுடன் சேர்ந்து நம்மவர்களும்......

ஆனால் தற்சமயம் உக்ரேன் போர் முடிவுக்கு வந்தால் உடனடியாக மேற்குலக நாடுகள்  பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக அபிவிருத்தி செய்து அந்த மக்களுக்கும் நல்ல வாழ்வாதாரங்களை அளித்து முன்னேற்றி விடுவார்கள்.
 
ஈழத்தின் 2009 பாரிய அழிவுக்கு பின் ....அந்த அழிவிற்கு உதவிய நாடுகள் அனைத்தும் இன்றுவரை ஈழ மக்களுக்கு அவர்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்க்க முனைந்ததா? அல்லது தீர்த்து வைத்தார்களா?

புலம்பெயர்தமிழனுக்கு தேவை கொண்டாட்டம். அதில் உக்ரேனையும் சேர்த்து கொண்டாடுவோம்.கதை கவிதை கட்டுரைகள் எழுதி கொண்டாடுவோம்
 

அப்ப, இரஸ்ஸியா தமிழீழம் சார்பு கொள்கையா வைத்திருந்து தமிழரை காப்பாற்ற முயற்சித்தது. ஐநாவில் சிங்களத்தை ukrainஆ veto பாவித்து பகாப்மாற்றியது?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

2 hours ago, ragaa said:

 

அப்ப, இரஸ்ஸியா தமிழீழம் சார்பு கொள்கையா வைத்திருந்து தமிழரை காப்பாற்ற முயற்சித்தது. ஐநாவில் சிங்களத்தை ukrainஆ veto பாவித்து பகாப்மாற்றியது?

நேட்டோ ஆயுதத்தை சிங்களத்துக்கு கொடுத்து தமிழரை கொன்றது. வி. புலிகளை பயங்கரவாதிகளாக இன்றும் வைத்திருப்பவர்கள் நேட்டோ நாடுகளே.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

நேட்டோ ஆயுதத்தை சிங்களத்துக்கு கொடுத்து தமிழரை கொன்றது. வி. புலிகளை பயங்கரவாதிகளாக இன்றும் வைத்திருப்பவர்கள் நேட்டோ நாடுகளே.
 

பேசித்தீர்க்கலாம்  என்றொரு பகுதி
இவர்கள் தீண்டத்தகாதவர்கள்  என்றொரு  பகுதி
இதில் எதை  தமிழர்கள்  தேர்வு  செய்யலாம்  சகோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

நேட்டோ ஆயுதத்தை சிங்களத்துக்கு கொடுத்து தமிழரை கொன்றது. வி. புலிகளை பயங்கரவாதிகளாக இன்றும் வைத்திருப்பவர்கள் நேட்டோ நாடுகளே.

அப்ப ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் (சீனா, இந்தியா, இரான், வடகொரியா) புலிகளை இன்றும் பயங்கரவாதிகளாக வைத்திருக்கவில்லை! நல்லது!😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragaa said:

 

அப்ப, இரஸ்ஸியா தமிழீழம் சார்பு கொள்கையா வைத்திருந்து தமிழரை காப்பாற்ற முயற்சித்தது. ஐநாவில் சிங்களத்தை ukrainஆ veto பாவித்து பகாப்மாற்றியது?

 சர்வதேசத்தை பொறுத்தவரையில் தமிழீழத்தை யாருமே காப்பாற்றவில்லை. இப்படியிருக்க ரஷ்யா மீது மட்டும் இவ்வளவு காண்டு ஏன்?

எம் கண் முன்னே அமெரிக்காவும் ஐரோப்பாவும் வேறு நாடுகளுக்கு செய்யாத அத்து மீறல்களா அடாவடித்தனங்களா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அப்ப ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் (சீனா, இந்தியா, இரான், வடகொரியா) புலிகளை இன்றும் பயங்கரவாதிகளாக வைத்திருக்கவில்லை! நல்லது!😂

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. 

😀

Link to comment
Share on other sites

3 hours ago, வாலி said:

அப்ப ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் (சீனா, இந்தியா, இரான், வடகொரியா) புலிகளை இன்றும் பயங்கரவாதிகளாக வைத்திருக்கவில்லை! நல்லது!😂

எமது மிக்ப்பெரிய எதிரிகளை எப்படி ஆதரிக்க முடிகிறது?

வடகொரியா பேச்சுவார்த்தைக்கு நடுவர் என்று வந்து பயங்கரவாதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்று புலிகளை பார்த்து கூறினர். ஆனால் தலபானுடன் பேசாத நாடு  உண்டோ?

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

பேசித்தீர்க்கலாம்  என்றொரு பகுதி
இவர்கள் தீண்டத்தகாதவர்கள்  என்றொரு  பகுதி
இதில் எதை  தமிழர்கள்  தேர்வு  செய்யலாம்  சகோ...

 

3 hours ago, வாலி said:

அப்ப ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் (சீனா, இந்தியா, இரான், வடகொரியா) புலிகளை இன்றும் பயங்கரவாதிகளாக வைத்திருக்கவில்லை! நல்லது!😂

வடகொரியா , ஈரான் அமெரிக்காவை அல்லவா பயங்கரவாதிகள் என்கிறார்கள்.🤣
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

வடகொரியா , ஈரான் அமெரிக்காவை அல்லவா பயங்கரவாதிகள் என்கிறார்கள்.🤣
 

அவர்களது அரசியல் குடும்பிப்பிடிக்குள் நாம் போகவேண்டியதில்லை. நமக்கு துரும்பாவது கிடைக்கும் இடம் எது??

இது எனது பார்வை மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

அவர்களது அரசியல் குடும்பிப்பிடிக்குள் நாம் போகவேண்டியதில்லை. நமக்கு துரும்பாவது கிடைக்கும் இடம் எது??

இது எனது பார்வை மட்டுமே.

எங்கள் கைகளில் இருந்த துடுப்பைப் பறித்தவர்கள் யார்? 

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

அவர்களது அரசியல் குடும்பிப்பிடிக்குள் நாம் போகவேண்டியதில்லை. நமக்கு துரும்பாவது கிடைக்கும் இடம் எது??

இது எனது பார்வை மட்டுமே.

எரியும் வீட்டில் கொள்ளி  எடுக்க தற்போது சிறிலங்காவுக்கு கும்பலாக வந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

எங்கள் கைகளில் இருந்த துடுப்பைப் பறித்தவர்கள் யார்? 

பறித்தவர்களைத்தான் இப்போது பாராட்டி புகழ்ந்து கொண்டிருக்கின்றோம் 😁

அல்லது  இருக்க விட்டதற்கான நன்றி விசுவாசம் எனலாம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் தனிநாடு ...சுதந்திரமான நாடு.....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும்.  ஒரு சுதந்திரமான நாடு என்று எற்றுக்கொண்டுள்ளன.  ஐக்கிய நாணய சபையில் அங்கம் வகிக்கிறது     உக்ரேனில் வாழ்வோர். உக்கிரேனியர். என அழைக்கப்படுகிறார்கள்.  தமிழ் ஈழம் என்ற நாடு தற்சமயம் இல்ல....தமிழ் ஈழம்.....சுதந்திரமான நாடு இல்லை.....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் ஒரு சுதந்திரமான நாடு என்று எற்றுக்கொள்ளப்படவில்லை....குறிப்பாக ரஷ்யா  உறுதியாக எற்கவில்லை இலங்கையர் என்று மட்டுமே அழக்கப்படுகிறார்கள்.  இந்தநிலையில்.  உக்கிரேனுடன்.  எப்படி ஒப்பிடமுடியும். ?.     ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ஆதரவு வழங்க முடியும்  .....இல்லையா?.  கண்டிப்பாக வழங்க முடியும்    ஆகவே உக்ரேன் என்ற நாட்டுக்கு  ஐரோப்பா நாடுகளும் அமெரிக்காவும்.  பணம்..பொருள்கள் ஆயுதங்கள்.  வழங்குவதில்.  எதுவித தப்புமில்லை.  அது ஒரு மிக சரியான நடவடிக்கை…  ஆனால் சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து பல காலம்  இலங்கை என்ற ஒற்றை ஆட்சியில் இருந்து விட்டு   இடையில்  போராட தொடங்கி   எமக்குள்ளேயோ போராடிய நாங்கள்  ஐரோப்பா அமெரிக்கா  இடமிருந்து உதவி பெற தகுதியற்றவர்கள்.  ஏனெனில் நாங்கள் ஒரு சுதந்திரமான நாட்டவர் இல்லை .....எங்களுக்கு தரும் உதவி எல்லாம் இலங்கை என்ற நாட்டினுடாகத் தான் தர முடியும்    இது எனது விருப்பம் இல்லை.....இது தான்   இன்றைய உலகில் யதார்த்தம்   ....இப்படி தான் நடந்து வருகிறது  .....எவர் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி.  இந்த நடவடிக்கை தொடரும் ஆக்கிரமிப்பை ஆதரித்தால்.  .....எம்மை ஆதரிக்கதாவனை ஆதரித்தால்.  ....எமது எதிரியை ஆதரிப்பவனை ஆதரித்தால்.   மேலே  சொல்லப்பட்ட  விடயங்களை ஆதரித்து ஆக. கருத முடியும்… 😁

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக சொன்னீர்கள் கந்தையா அண்ணா.
இங்கே இப்போ கதை போகும் போக்கை பார்த்தால் ரஷ்யா தான் இலங்கை தமிழர்களை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் முன்னுக்கு நின்று செய்தது போலவும், ஆனால் இந்த தீய மேற்குலக நாடுகளும் உக்ரைனும் சேர்ந்து தான் veto எல்லாம் பாவித்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழர்களை கீழே தள்ளியது போலவும் கதை போகிறது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உக்ரேன் தனிநாடு ...சுதந்திரமான நாடு.....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும்.  ஒரு சுதந்திரமான நாடு என்று எற்றுக்கொண்டுள்ளன.  ஐக்கிய நாணய சபையில் அங்கம் வகிக்கிறது     உக்ரேனில் வாழ்வோர். உக்கிரேனியர். என அழைக்கப்படுகிறார்கள்.  தமிழ் ஈழம் என்ற நாடு தற்சமயம் இல்ல....தமிழ் ஈழம்.....சுதந்திரமான நாடு இல்லை.....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் ஒரு சுதந்திரமான நாடு என்று எற்றுக்கொள்ளப்படவில்லை....குறிப்பாக ரஷ்யா  உறுதியாக எற்கவில்லை இலங்கையர் என்று மட்டுமே அழக்கப்படுகிறார்கள்.  இந்தநிலையில்.  உக்கிரேனுடன்.  எப்படி ஒப்பிடமுடியும். ?.     ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ஆதரவு வழங்க முடியும்  .....இல்லையா?.  கண்டிப்பாக வழங்க முடியும்    ஆகவே உக்ரேன் என்ற நாட்டுக்கு  ஐரோப்பா நாடுகளும் அமெரிக்காவும்.  பணம்..பொருள்கள் ஆயுதங்கள்.  வழங்குவதில்.  எதுவித தப்புமில்லை.  அது ஒரு மிக சரியான நடவடிக்கை…  ஆனால் சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து பல காலம்  இலங்கை என்ற ஒற்றை ஆட்சியில் இருந்து விட்டு   இடையில்  போராட தொடங்கி   எமக்குள்ளேயோ போராடிய நாங்கள்  ஐரோப்பா அமெரிக்கா  இடமிருந்து உதவி பெற தகுதியற்றவர்கள்.  ஏனெனில் நாங்கள் ஒரு சுதந்திரமான நாட்டவர் இல்லை .....எங்களுக்கு தரும் உதவி எல்லாம் இலங்கை என்ற நாட்டினுடாகத் தான் தர முடியும்    இது எனது விருப்பம் இல்லை.....இது தான்   இன்றைய உலகில் யதார்த்தம்   ....இப்படி தான் நடந்து வருகிறது  .....எவர் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி.  இந்த நடவடிக்கை தொடரும் ஆக்கிரமிப்பை ஆதரித்தால்.  .....எம்மை ஆதரிக்கதாவனை ஆதரித்தால்.  ....எமது எதிரியை ஆதரிப்பவனை ஆதரித்தால்.   மேலே  சொல்லப்பட்ட  விடயங்களை ஆதரித்து ஆக. கருத முடியும்… 😁

 

உக்ரேனுக்கு ஆயுதங்களை மேற்கு கொடுப்பது போல் சிறிலங்காவுக்கும்  மேற்கு ஆயுதங்களை கொடுத்து தமிழரை அழி என் சொன்னது, செய்தது.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நன்றாக சொன்னீர்கள் கந்தையா அண்ணா.
இங்கே இப்போ கதை போகும் போக்கை பார்த்தால் ரஷ்யா தான் இலங்கை தமிழர்களை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் முன்னுக்கு நின்று செய்தது போலவும், ஆனால் இந்த தீய மேற்குலக நாடுகளும் உக்ரைனும் சேர்ந்து தான் veto எல்லாம் பாவித்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழர்களை கீழே தள்ளியது போலவும் கதை போகிறது.

 

உங்களின் விளக்க பிழைக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல.🙂

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.