Jump to content

கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் தெரிந்து கொண்டவரை உக்கிரேன் மக்கள் ஐரோப்பாவில் உள்ள ஒரு மேற்குலக நாடாகவே தங்களை அடையாளபடுத்த விரும்புகின்றனர்.ரஷ்யாவை வெறுக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் இந்தியாவை வெறுப்பது போன்று . நீங்கள் சொல்கின்ற படி அவர்கள்  மேற்குலகிடம் தான் மாட்டி கொள்ளவே  விரும்புகிறார்கள் என்றே வைத்து கொள்வோம். உக்கிரேன் மக்களுக்கு முழுமையான உரிமை உள்ளது தாங்கள் யாரிடம் மாட்டி கொள்ள வேண்டும் என்பது. ரஷ்ய சர்வாதிகாரி வெள்ளைத் தோல் புதினை தங்களுடைய தலைவாராக ஏற்று ரஷ்யாவுக்காக பிரசாரம் செய்கின்ற இலங்கை தமிழர்களே ரஷ்யாவுக்கு செல்ல விரும்பாமல் மேற்குலநாடுகளிலேயே மாட்டி கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து ரஷ்யாவுக்காக பிரசாரம் செய்து திரிகின்ற போது  உக்கிரேன் மக்களும் மேற்குலகிடம் தானே மாட்டி கொள்ள  விரும்புவார்கள்.

யுத்தம் ஆரம்பிக்க முதல் உக்ரேன் மேற்குலகுடன் நல்ல நட்புறவுடன் இருந்த நாடுதானே?
வியாபார முதலீடுகள் தொடக்கம்  அனைத்து அரசியல் தொடர்புகளும்  மேலைத்தேய நாடுகளுடன்  இருந்த உக்ரேனுக்கு என்ன குறை இருந்தது?

ஈழத்தமிழருக்கு சொந்த நாடுமில்லை.அரசியல் உரிமைகளும் இல்லை. ஆனால் உக்ரேன் மக்களுக்கு சொந்த நாடும் சகல உரிமையும் இருக்கின்றது அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

யுத்தம் ஆரம்பிக்க முதல் உக்ரேன் மேற்குலகுடன் நல்ல நட்புறவுடன் இருந்த நாடுதானே?
வியாபார முதலீடுகள் தொடக்கம்  அனைத்து அரசியல் தொடர்புகளும்  மேலைத்தேய நாடுகளுடன்  இருந்த உக்ரேனுக்கு என்ன குறை இருந்தது?

இந்திய இராணுவம் யாழ்பாணத்தில் வந்து இறங்கிய பின் எல்லாம் பார்த்த பின்பு கேட்டதாம் இந்தியாவில் மக்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் ஆனால் நீங்கள் இங்கே வீடு வசதிகளுடன் நன்றாக வாழ்கிறீர்கள் எதற்கு ஆயுதம் எடுத்து போர் செய்கிறீர்கள் என்று கேட்டனராம் என்று சொன்னார்கள் அது தான் நினைவுக்கு வந்தது.

ஈழத்தமிழருக்கு சொந்த நாடுமில்லை.அரசியல் உரிமைகளும் இல்லை. ஆனால் உக்ரேன் மக்களுக்கு சொந்த நாடும் சகல உரிமையும் இருக்கின்றது அல்லவா?

உண்மை
தமிழீழம் என்ற நாடு  இருந்து அங்கே இந்தியா வந்து அதில் ஒரு பிரதேசத்தை பிடித்து வைத்துகொண்டு  இன்று தொடக்கம் இது இந்தியாவின் பிரதேசமாக இருக்கும் என்றால் அதை ஏற்று கொள்ளமாட்டீர்கள் தானே

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:
On 13/11/2022 at 23:08, பெருமாள் said:

கனபேர் உங்களை தேட துவங்க போறாங்கள் .😀

நான் கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயே பதிவிட்டிருந்தேன், எனக்கு வேறு எதுவும் தெரியாது.

யார் எல்லாம் உங்களை தேடுவார்கள் என்று சிந்திக்கிறேள் 🤣
அமெரிக்க உளவுத்துறை
ரஷ்ய KGB
இந்திய றோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2022 at 09:21, விளங்க நினைப்பவன் said:

யார் எல்லாம் உங்களை தேடுவார்கள் என்று சிந்திக்கிறேள் 🤣
அமெரிக்க உளவுத்துறை
ரஷ்ய KGB
இந்திய றோ

நான் நினைக்கிறேன் பெருமாள் கூறியது யாழ்களத்தில் உள்ளவர்கள் தேடப்போவதாக கூறினார் என கருதுகிறேன், நீங்கள் அதுக்கு மேலேயே போய்விட்டீர்கள்.

எல்லோருமாக சேர்ந்து எங்கேயாவது என்னை கோர்த்து விட முயற்சிக்கிறீர்கள் என்பது புரிகிறது, இருந்தாலும் இவ்வளவு ஆசை கூடாது.

No photo description available.

ஆனால் அது நடக்காது, எனென்றால் அவர்களுக்கு வேலை வெட்டி இருக்கிறது, என்னை தேட அவர்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா?

2012 செப்டெம்பர் மாதம் 18 திகதி என நினைக்கிறேன் மாலை 6 ம்ணியளவில் எனது குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

வானில் சூரியன் அஸ்தமிக்கும் தருணம் ( சாய்வு வெய்யில் என்பார்கள்), உண்மை வடக்கிலிருந்து ஒரு நேர்கோட்டில் தெற்கு நோக்கி ஒரு விண்கலம் சத்தமின்றி அதிவேகமாக பயணித்து கொண்டிருந்தது.

அதன் அமைப்பு ஒரு பாதி தேய்பிறை போல இருந்தது, சூரிய ஒளியில் வெள்ளியில் மின்னியது அதனை காணொளியாக பதிவு செய்து கொண்டேன், அதனை உள்ளூர் தொலைகாட்சி ஒன்றிற்கு அதன் இணையத்தளத்தில் காணொளியினை தரவேற்ற முடியாமையினால், VLC player  இல் அந்த விண்கலத்தினை பெரிதாக்கி ( பழைய தொலைபேசி என்பதால வெற்று கண்ணால் பார்ப்பதைவிட ஒளிப்பதிவில் அந்த விண்கலம் மிக சிறியதாக காணப்பட்டது) நிழற்படம் எடுது அனுப்பிவைத்தேன்.

அவர்கள் ஆதாரத்துடன் அனுப்பிய விடயத்தினையே கண்டு கொள்ளவில்லை.

இந்த விடயம் நான் கேள்விப்பட்ட, பழைய சம்பவத்துக்கெல்லாம் என்னை ஏன் தேடப்போகிறார்கள்?

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமாக கருத்து எழுதியோர், பாராட்டியோருக்கும், (உள்)நோக்கபூர்வமாக கருத்து கூறியோருக்கும் நன்றிகள்.

பலர் என்னை போலவே உணர்ந்துள்ளீர்கள் என்பதை காணும் போது மகிழ்சியாக இருக்கிறது.

கெசோனில் இருந்து வந்த மக்களின் மகிழ்சி வீடியோக்கள் என்னை அப்படியே 87-90 காலப்பகுதிக்கு எடுத்து போய் விட்டிருந்தது.

ஆனால் சில வேற்றுமையையும் கண்டேன்.

நாங்கள் (பெரும்பாலோர்) சாத்தானின் படைகளின் தாங்கிகள் பலாலியில் இருந்து சுதுமலைக்கு வந்த போது பூத்தூவினோம் (புலிகளின் சந்தேகத்தையும் மீறி). பின்னர் இந்திய வல்லூறுகளின் கப்பல் திருமலையை விட்டு நீங்கும் போது இதே போல் மகிழ்ந்தோம்.

ஆனால் சாத்தானின் படைகள் கெசோனில் உள்ளிட்ட போது அந்த மக்கள் முடிந்தளவு தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் சில போராட்டங்கள் கூட நடக்க தலைப்பட்டது. பின்னர் ரஸ்ய படைகள், குறிப்பாக எம்மை கொடுமைக்கு ஆளாக்கிய ஈ என் டி எல் எப், திரி ஸ்டார், ஈபி, டெலோ, புலொட் போல, கெசோனில் ரம்சான் காடிரோவின் காவாலிகளும், வாக்னர் கூலிப்படை கிரிமினல்களும் அந்த மக்களை அடக்கி அடி பணிய வைத்தார்கள்.

ரஸ்ய ஆதரவு டெலிகிராம் சானல்களில், காடிரோவ் படையினர் கைதாகிய ஒரு போராட்டகாரரை வேணும் என்றே கண்ணி வெடி இருக்கும் வளவுக்குள் அனுப்பி வெடிக்க வைத்து, சிரித்து ரசித்த கொடுமைகள் எல்லாம் பரிமாறப்பட்டன (ரஸ்ய ஆதரவு தளங்களில்) - இங்கே எழுதும் RT முகவர்கள் இதெல்லாம் செட்டப், பொய் என்பார்கள். 

ஆகாசவாணி இந்திய இராணுவம் செய்த கொடுமைகளை பொய் என்றதை கேட்டு வளர்ந்த நாம் உண்மையை ஊகிக்க வல்லோம்.

அப்படி இருந்தும் முடிவில் எப்படி யுத்தம் இல்லாமல் யாழை, திருமலையை விட்டு இந்திய கூலிகள் ஓடினார்களோ அப்படியே ரஸ்ய காவாலிகளும் ஓடும் படியாயிற்று.

எம்மை போல இந்திய பூச்சாண்டிக்கு அதிகம் மயங்காமல் ஆரம்பம் முதலே ரஸ்ய ஆக்கிரமிப்பு படைகளின் நோக்கத்தை இனம் கண்டுகொண்டு எதிர்ப்பாய் இருந்த கெசோன் மக்கள், அவர்கள் விடுதலை உணர்வு போற்றலுக்குரியதே.

இங்கே ஒப்பீடு கெசோன் மக்களின் உணர்வையும், எம்மக்களின் 90ம் ஆண்டு மனநிலையையும் மட்டுமே.

புலிகளையோ, போராட்டத்தையோ உக்ரேனுடன் ஒப்பிட கூடிய அளவுக்கு நானோ, என்னை போல் உணர்ந்த யாருமோ இல்லை.

தெரிந்திருந்துந்தும் - சிலர் குய்யோ, முறையோ என இங்கே கதறிய காரணம் - பின்னக நெருப்புத்தான்🤣.

அந்த உறவுகளின் தீக்காயத்தை ஆற்றும் பொருட்டு இதோ அவர்களுக்காக இன்னொரு பிரத்தியேக கவிதை.

முன்னம் இட்ட தீ முப்புரத்திலே,

பின்னர் இட்ட தீ தென்னிலங்கையிலே,

அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே,

”கோமாளி” செலன்ஸ்கி இட்ட தீ

பிற்புறத்திலே….

மூழ்க, மூழ்கவே…..🤣.

கீழே ஒரு டொப்பான வீடியோ இணைக்கிறேன். 

சில உறவுகள் பார்க்க முன்னம் வசிலீன் குடுவையை கைகாவலாக வைத்து கொள்ளவும்🤣

 

https://twitter.com/therecount/status/1592120700319723521?s=20&t=zTMCw8aRbhwLo_L4toLrFg
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

கீழே ஒரு டொப்பான வீடியோ இணைக்கிறேன். 

சில உறவுகள் பார்க்க முன்னம் வசிலீன் குடுவையை கைகாவலாக வைத்து கொள்ளவும்🤣

 

https://twitter.com/therecount/status/1592120700319723521?s=20&t=zTMCw8aRbhwLo_L4toLrFg
 

உந்த இடத்துக்கு ரஷ்யனுக்கு பதிலாய் அமெரிக்கன் வந்து போய் இருந்தால் சாம்பலுக்கு மேல தான் நிண்டுதான் செலென்ஸ்கி தேசிய கீதம் பாடியிருப்பார்....

ரஷ்யா விட்டுச்சென்ற இடங்களில் ஒரு கீறல் கூட விழவிவில்லை. செய்திகளில் காட்டும் போது பார்த்தால் தெரியும்.

மனிதநேயமிக்க மாண்புமிகு புட்டின் வாழ்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

நான் நினைக்கிறேன் பெருமாள் கூறியது யாழ்களத்தில் உள்ளவர்கள் தேடப்போவதாக கூறினார் என கருதுகிறேன், நீங்கள் அதுக்கு மேலேயே போய்விட்டீர்கள்

நான் நகைசுவைக்கு சொன்னது😀
எனக்கு ஒரு தெரிந்தவர் ஒருவர் சொன்னார் இந்திய இராணுவம் இலங்கை வந்த போது இனி அமெரிக்கா புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்க போவதாக தனக்கு ஆட்கள் சொன்னார்களாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2022 at 19:32, விளங்க நினைப்பவன் said:

நான் நகைசுவைக்கு சொன்னது😀
எனக்கு ஒரு தெரிந்தவர் ஒருவர் சொன்னார் இந்திய இராணுவம் இலங்கை வந்த போது இனி அமெரிக்கா புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்க போவதாக தனக்கு ஆட்கள் சொன்னார்களாம்

இது இந்திய இராணுவம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், அப்போது அமெரிக்கர்களை முதலில் அணுகியது புலிகள்தான் என கேள்விப்பட்டேன், ஆனால் வேறு ஒரு நாடு (சர்வாதிகாரி என அழைக்கப்பட்டவர் தற்போது உயிருடன் இல்லை) தானாக உதவியிருந்ததாக கேள்விபட்டேன், மேற்கொண்டு இது தொடர்பாக கேள்விப்பட்டதன் அடிப்படையில் பேசுவது நன்றாக இருக்காது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

மேற்கொண்டு இது தொடர்பாக கேள்விப்பட்டதன் அடிப்படையில் பேசுவது நன்றாக இருக்காது என நினைக்கிறேன்.

 

நீங்கள் சொன்னது சரி தான். ஏராளமான கதைகள் உலாவுகின்றன, பெரும்பாலும் கற்பனை கதைகள் தான்.😂
நேற்று யாழ்களத்தில் ஒரு தகவல் படித்தேன் முன்னைய கூட்டமைப்பின் தலைவரின் மகன் லிபியாவுக்கு சென்று கடாபியிடம் தமிழீழத்திற்கு ஆயுத உதவ கேட்டதாக.
2.எனக்கு சொன்னவர்கள் முற்கால கிழக்கு யேர்மனியில் இருந்து கனடா வந்த தமிழர்கள் பலர் கடலில் தத்தளித்ததாக கனடா அரசு அவர்களைகாப்பாற்றி அடைக்கலம் கொடுத்தது ஆனால் வீரகேசரியில் மேற்கு யேர்மனியில் இருந்து வெளிகிட்ட அகதிகள் என்று உள்ளது

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.