Jump to content

குரு தேக் பகதூர் வரலாறு: ஒளரங்கசீப் முன் தலைவணங்காமல் உயிரை துறந்தவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குரு தேக் பகதூர் வரலாறு: ஒளரங்கசீப் முன் தலைவணங்காமல் உயிரை துறந்தவர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரெஹான் ஃபசல்
  • பதவி,பிபிசி இந்தி
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

குரு டெக் பஹதூர்

1664 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, டெல்லியில் இருந்து ஒரு சீக்கியர்கள் குழு பஞ்சாபில் உள்ள பகாலா கிராமத்தை அடைந்தது. தான் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு எட்டாவது குரு ஹர்கிஷன், தனது வாரிசு பகாலாவில் கண்டுபிடிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

பகாலாவில் சீக்கியர்களின் சிறப்புக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு அதில் தேக் பகதூருக்கு குருவின் சிம்மாசனம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பாரம்பரிய விழாவில், குருதித்தா ரந்தாவா குருவின் நெற்றியில் குங்குமத் திலகம் இட்டு, அவருக்கு ஒரு தேங்காய் மற்றும் ஐந்து பைசாவை பரிசளித்து, குருவின் சிம்மாசனத்தில் அமர வைத்தார்.

தொடக்கத்தில் குரு தேக் பகதூர் வெளிப்படையாக பேசுபவராக இருக்கவில்லை. பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங் தனது 'எ ஹிஸ்டரி ஆஃப் தி சீக்ஸ்' என்ற புத்தகத்தில் "குரு தேக் பகதூர் சாமானியர்களிடையே பிரபலமடைந்ததற்கு பின்னணியில் இந்த இயல்புதான் இருந்தது. தீர்மல் அவரை படுகொலை செய்ய முயன்றார். ஆனால் படுகொலை செய்யும் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வெற்றிபெறவில்லை,” என்று எழுதியுள்ளார்.

"தேக் பகதூர் பகாலாவை விட்டு அமிர்தசரஸ் சென்றார். அங்கு ஹர்மந்திர் சாஹிப்பின் கதவுகள் மூடப்பட்டன. அங்கிருந்து தனது தந்தையால் நிறுவப்பட்ட கீரத்பூர் நகருக்குச் சென்றார். அதன் பிறகு அவர் கீரத்பூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு புதிய கிராமத்தை நிறுவினார். அதற்கு அவர் ஆனந்த்பூர் என்று பெயரிட்டார்,” என்று அவர் மேலும் எழுதுகிறார்,

 

guru nanak

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த இடம் இப்போது ஆனந்த்பூர் சாஹிப் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கேயும் அவரது எதிரிகள் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை.

குரு தேக் பகதூரின் கைது

குரு தேக் பகதூர் 1621ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஆறாவது சீக்கிய குரு ஹர்கோவிந்தின் இளைய மகன். ஆனந்த்பூரில் சில நாட்கள் தங்கியிருந்த குரு தேக் பகதூர் கிழக்கு இந்தியாவுக்கு பயணம்செய்ய முடிவு செய்தார். வழியில் ஆலம் கான் தலைமையிலான முகலாய வீரர்களால் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது பற்றி வரலாற்றாசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை. "இது முகலாய அரசவையில் வாழ்ந்த ராம் ராயின் தூண்டுதலால் செய்யப்பட்டது. அமைதியைக் குலைப்பதாக குரு தேக் பகதூர் மீது குற்றம் சாட்டப்பட்டது," என்று குஷ்வந்த் சிங் எழுதுகிறார்.

வரலாற்றாசிரியர் ஃபோஜா சிங் இதை ஏற்கவில்லை. ராம் ராய், தேக் பகதூரை தனது குருவாகக் கருதத் தொடங்கிவிட்டதாகவும், அவரிடம் எந்த தீய எண்ணமும் இருக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

 

 

புத்தகம்

ஒளவுரங்கசீப்பின் முன்னால் நிறுத்தப்பட்டார்

சரப் ப்ரீத் சிங் தனது 'ஸ்டோரி ஆஃப் தி சீக்ஸ்’ என்ற புத்தகத்தில், "குரு தேக் பகதூர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், 1665ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி குரு தேக் பகதூர் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஔரங்கசீப் முன் ஆஜர்படுத்தப்பட்டார்,” என்று எழுதுகிறார்.

குரு தேக் பகதூர் பேரரசர் ஔரங்கசீப்பிடம், "எனது மதம் இந்துவாக இல்லாமல் இருக்கலாம், வேதங்களின் மேலாதிக்கம், சிலை வழிபாடு மற்றும் பிற பழக்கவழக்கங்களை நான் நம்பாமல் இருக்கலாம், ஆனால் நான் இந்துக்கள் கெளரவமாக வாழவும், அவர்களின் மத நம்பிக்கைகளை பாதுகாக்கவும் தொடர்ந்து போராடுவேன்,” என்றார்.

ஆனால் குரு தேக் பகதூரின் இந்த வார்த்தைகள் ஔரங்கசீப் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஔரங்கசீப்பின் அரசவையில் இருந்த பல முஸ்லிம் அறிஞர்கள், குருவின் செல்வாக்கு அதிகரித்து வருவது இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அவரிடம் கூறினார்கள்.

 

book

பட மூலாதாரம்,PENGUIN VIKING

ஔரங்கசீப் குருவுக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்தார், ஆனால் அவரது ராஜபுத்திர மந்திரிகளில் ஒருவரான ராஜா ராம் சிங் அவரை உயிருடன் விட்டுவிடுமாறு கோரினார். அந்தக் கோரிக்கையை ஒளரங்கசீப் ஏற்றுக்கொண்டார்.

ஒரு மாதம் கழித்து டிசம்பரில், குரு தேக் பகதூர் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் திரும்ப பெறப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்டவுடன் குரு கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார். அவர் மதுரா, ஆக்ரா, கான்பூர், அலகாபாத், வாரணாசி, போத்கயா வழியாக பட்னாவை அடைந்தார்.

குரு தேக் பகதூரின் மனைவி மாதா குஜ்ரி அங்கு தங்க முடிவு செய்தார். ஆனால் குரு தேக் பகதூர் தனது தொண்டர்களை சந்திக்க டாக்கா நோக்கிச் சென்றார். டாக்காவில் வசிக்கும் போது அவருக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாக செய்தி கிடைத்தது. குழந்தைக்கு கோபிந்த் ராய் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அவர் குரு கோபிந்த் சிங் என்று அறியப்பட்டார்.

 

Caption- குரு தேக் பகதூர்

 

படக்குறிப்பு,

குரு தேக் பகதூர்

அசாமில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்

இதற்கிடையில் காம்ரூப் மன்னரின் கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பை ஒளரங்கசீப் ராஜா ராம் சிங்கிடம் ஒப்படைத்தார். அந்த நேரத்தில் காம்ரூப் ஓர் ஆபத்தான இடமாக கருதப்பட்டது. துணிச்சலான போர் வீரர்கள் மற்றும் 'மந்திர தந்திரம்' ஆகியவற்றிற்கு அது பிரபலமாக இருந்தது. ராஜா ராம் சிங், குரு தேக் பகதூரின் ஆன்மிக சக்தியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

காம்ரூப் மீதான நடவடிக்கையில் தன்னுடன் இணையுமாறு ராஜா ராம் சிங், குரு தேக் பகதூரை கேட்டுக் கொண்டார். குருவால் அவரது கோரிக்கையை மறுக்க முடியவில்லை.

"சண்டையின் போது குரு அசாமில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்தார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது மத்தியஸ்தராகவும் செயல்பட்டார். அங்கிருந்து  திரும்பியதும் பட்னாவில் வசிக்கும் தனது மனைவியை அவரால் சந்திக்கமுடியவில்லை. ஏனென்றால் பஞ்சாபில் அவரது இருப்பு அவசியம் என்று அவருக்கு தொடர்ந்து செய்திகள் வந்தன. 1672 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சக் நான்கியில் தனது அரியணைக்கு அவர் திரும்பினார். குருநானக்கைத் தவிர வேறு எந்த சீக்கிய குருவும் செல்லாத இடங்களுக்கு அவரது பயணங்கள் அவரை அழைத்துச் சென்றன,”என்று சர்ப் ப்ரீத் சிங் எழுதியுள்ளார்.

 

photo

காஷ்மீர் பண்டிதர்களின் கோரிக்கை

1675 மே 25ஆம் தேதி குரு தேக் பகதூர் ஆனந்த்பூர் சாஹிப்பில் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது, காஷ்மீரில் இருந்து ஒரு குழு அவரைச் சந்திக்க வந்தது. பண்டிட் கிர்பா ராம் குழுவுக்கு தலைமை வகித்தார். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் தன் முன்னோர்களின் மதம் ஆபத்தில் இருப்பதாக கைகூப்பி அவர் குருவிடம்  தெரிவித்தார். ஒளரங்கசீப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காஷ்மீர் ஆளுநர் இஃப்தேகர் கான், கிர்பா ராம் இஸ்லாத்தை ஏற்க வேண்டும், இல்லையெனில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார்.

குரு தேக் பகதூர் கிர்பா ராமின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் அவரது வேதனையைக் கேட்டு, குருவின் மனம் உருகியது. "குரு தேக் பகதூர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், தாங்களும் மதம் மாறுவதாக பேரரசரின் பிரதிநிதியிடம் கூறுமாறு காஷ்மீரில் இருந்து வந்த பிராமணர்களின் குழுவிடம் குரு சொன்னார்," என்று குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றில் ஹரி ராம் குப்தா எழுதியுளார்.

 'எல்லா சீக்கியர்களும் குருவை 'உண்மையான அரசர்' என்று அழைப்பதை ஒளரங்கசீப் எதிர்த்தார். தான்தான் உண்மையான பேரரசர் என்றும், இந்தியாவின் ஆட்சியாளர் ஒரு போலிச் சக்கரவர்த்தி என்றும் குரு பிரசாரம் செய்கிறார் என்று ஔரங்கசீப் கருதினார். முகலாய அரசவையில் இருக்கும் பிரமுகர்களுக்கு ’ பகதூர்’ என்று பட்டப்பெயர் அளிக்கப்படுவதால், குரு தனது பெயரில்’பகதூர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை ஔரங்கசீப்  விரும்பவில்லை,” என்று ஹரி ராம் குப்தா குறிப்பிடுகிறார்.

குரு தேக் பகதூரை டெல்லியில் தன் முன் ஆஜர்படுத்தி, இஸ்லாத்தை ஏற்க கட்டாயப்படுத்த வேண்டும், இல்லையெனில் அவர் உயிரை இழக்க நேரிடும் என்று ஔரங்கசீப் உத்தரவிட்டார்.

குரு தேக் பகதூரிடம் கேள்வி பதில்

குரு தேக் பகதூர் தனது குடும்பத்தினர் மற்றும் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். தனக்குப்பிறகு அடுத்த குருவாக தனது மகன் கோபிந்த் ராய் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். 1675 ஜூலை 11ஆம் தேதி குரு தேக் பகதூர் தனது ஐந்து சீடர்களான பாய் மதி தாஸ், அவரது இளைய சகோதரர் சதி தாஸ், பாய் தயாலா, பாய் ஜைதா மற்றும் பாய் உதய் ஆகியோருடன் டெல்லிக்கு புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும், மேலதிக செய்திகளைப் பெற பாய் உதய் மற்றும் பாய் ஜைதாவை டெல்லிக்கு அனுப்பினார்.

ஒரு நாள் கழித்து மல்லிக்பூரின் ரங்காரன் கிராமத்தில், ரோபர் காவல் நிலையத்தின் ஹக்கீம் மிர்சா நூர் முகமது கான், குருவை கைது செய்தார். ரோபரில் இருந்து, குருவும் அவரது மூன்று தோழர்களும் பலத்த பாதுகாப்புடன் சிர்ஹிந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு அவர் டெல்லியில் உள்ள சாந்தினி செளக் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். இந்த நான்கு மாத சிறைவாசத்தில் குருவும் அவரது மூன்று தோழர்களும் பல சித்திரவதைகளுக்கு ஆளானார்கள்.

 

chandni chowk

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சாந்தினி சௌக்

குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் சிங் விர்தி தனது 'Guru Tegh Bahadur Savior of Hindus and Hindustan' என்ற புத்தகத்தில், "குரு தனது மூன்று தோழர்களுடன் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு குருவிடம் இந்து மதம் மற்றும் சீக்கிய மதம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. பூணூல் அணிபவர்களுக்காகவும், நெற்றியில் திலகம் வைத்துக்கொள்பவர்களுக்காகவும் ஏன் உயிர் தியாகம் செய்கிறீர்கள் என்று அவரிடம் வினவப்பட்டது.

இந்துக்கள் பலவீனமாகி விட்டதால் நானக்கின் காலடியில் தஞ்சம் அடைந்தனர் என்பதே குருவின் பதில். முஸ்லிம்களும் தன்னிடம் இதுபோன்ற உதவியை கேட்டிருந்தால், அவர்களுக்காகவும்  உயிரை தியாகம் செய்திருப்பேன் என்றும் குரு பதில் சொன்னார்," என்று எழுதியுள்ளார்.

ஒளரங்கசீப்பின் எச்சரிக்கை

டாக்டர் திரிலோச்சன் சிங் தனது 'Guru Tegh Bahadur Prophet and Martyr’ என்ற புத்தகத்தில், ”ஒளவுரங்கசீப் காலை 9 மணிக்கு திவான்-இ-ஆமில் நுழைந்து அதன் பால்கனியை அடைந்தார். அவர் வெள்ளை பட்டு ஆடை அணிந்திருந்தார். பட்டால் ஆன இடுப்புப் பட்டை அணிந்திருந்தார். அதில் ரத்தினங்கள் பதித்த குத்துவாள் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் தலையில் வெண்ணிற தலையலங்காரம் இருந்தது. சக்கரவர்த்தியின் இருபுறமும் நின்றிருந்த நங்கைகள் மயில் இறகுகளால் ஆன விசிறியால்  காற்று வீசினர்.

சீக்கிய மதத்தைப் பற்றி பேரரசருக்கு ஏற்கனவே ஞானம் இருந்தது. முஸ்லிம்களைப் போலவே சீக்கியர்களும் சிலை வழிபாட்டுக்கு எதிரானவர்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இருவருக்குள்ளும் கருத்தியல் ரீதியாக நெருக்கம் அதிகம் இருந்ததால், குருவை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது,” என்று எழுதியுள்ளார்.

ஔரங்கசீப் குரு தேக் பகதூரிடம், உங்களுக்கு சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லை, இந்த பிராமணர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. பிறகு ஏன் அவர்கள் விவகாரத்தை எடுத்துக்கொண்டு என் முன் வந்தீர்கள்?" என்று வினவினார்.

குரு தேக் பகதூர் ஔரங்கசீப்பிற்கு புரியவைப்பதில் தோல்வி அடைந்தார். இறுதியில், அவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் அல்லது இறக்கத் தயாராக வேண்டும் என்று அரசவை தரப்பில் இருந்து அவரிடம் தெளிவாகச் சொல்லப்பட்டது. குரு தேக் பகதூர் இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டார்.

 

aurangazeb

பட மூலாதாரம்,PENGUIN BOOKS

ஔரங்கசீப் குருவிடம் பல தூதர்களை அனுப்பினார். ஆனால் குரு தனது கருத்தில் உறுதியாக இருந்தார். ஒரு நாள் சிறைத் தலைவர் குருவிடம், “நீங்கள் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று பேரரசர் விரும்புகிறார். உங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், நீங்கள் புனித புருஷர் என்று அவர் நம்பும் வகையில் ஓர் அதிசயத்தை நடத்திக்காட்டுங்கள்,” என்றார்.

"நண்பரே, அதிசயம் என்பது கடவுளின் கருணை மற்றும் தயவு. உலகத்திற்கு முன்பு மாயாஜாலம் காட்ட அவர் அனுமதிக்கவில்லை. அவரது அருளை தவறாகப் பயன்படுத்தினால் அவர் கோபம் கொள்வார். நான் அதிசயத்தை  காட்ட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் நம் கண் முன்னால் அற்புதங்கள் நடக்கின்றன. பேரரசர் மற்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கிறார், ஆனால் ஒரு நாள் தானும் இறக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாமல் இருப்பதும் ஓர் அதிசயம்தானே என்று குரு பதிலளித்தார்,” என்று ஹர்பன்ஸ் சிங் விர்தி எழுதுகிறார்.

மூன்று கூட்டாளிகளின் கொலை

குரு தேக் பகதூர் மனம் மாற மாட்டார் என்று தெரிந்ததும் அவரது தோழர்கள் அவருடைய கண்முன்னே சித்திரவதை செய்யப்பட்டனர். "இன்று சாந்தினி சௌக்கில் காவல் நிலையம் இருக்கும் இடத்தில் இருந்த நீரூற்றுக்கு அருகில், பாய் மதி தாஸ் அவர் எதிரில்  ரம்பத்தால் வெட்டப்பட்டார். அவர்  இந்த சித்திரவதையை அமைதியுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டார். சீக்கியர்களால் தினசரி அர்தாஸில் இது குறிப்பிடப்படுகிறது.

இந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்த குருவிடம் கூப்பிய கரங்களுடன் பாய் மதி தாஸ் ஆசிர்வாதத்தைப் பெற்றார். சதி தாஸ் கொதிக்கும்  எண்ணெயில் உயிருடன் தூக்கி எறியப்பட்டார். பின்னர் அவரது  உடலில் பருத்தி துணியை சுற்றி  ஒரு கம்பத்தில் கட்டி தீ வைக்கப்பட்டது.

இதையெல்லாம் ஒரு பெருங்கூட்டம் பார்த்துக் கொண்டிருந்தது. குரு தேக் பகதூரின் கண் முன்னே இவையெல்லாம் நடந்து கொண்டிருந்தன. அவர் தொடர்ந்து வாஹே குரு என்று உச்சரித்துக் கொண்டிருந்தார்.

அங்கு இருந்த குருவின் மற்றொரு சீடர் ஜெய்தா தாஸ், இரவில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அருகில் ஓடும் ஜமுனா ஆற்றில் விட்டார்,” என்று குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றில் ஹரி ராம் குப்தா எழுதுகிறார்,.

தேக் பகதூரின் கடைசி நாள்

மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நாளில் குரு தேக் பகதூர் அதிகாலையில் எழுந்தார். காவல் நிலையத்திற்கு அருகே உள்ள கிணற்றில் குளித்துவிட்டு பிரார்த்தனை செய்தார்.

11 மணியளவில்  மரண தண்டனை வழங்கப்படும்  இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, காஸி அப்துல் வஹாப் போரா அவருக்கு ஃபட்வா (சட்ட உத்தரவு) வாசித்தார். மரண தண்டனை நிறைவேற்றுபவரான ஜலாலுதீன் வாளுடன் அவருக்கு முன்னால் நின்றார். அப்போது வானத்தில் மேகங்கள் சூழ்ந்தன. அங்கிருந்தவர்கள் கதறி அழ ஆரம்பித்தனர்.

 

குரு தேக் பகதூர்: தன் உயிரை துறந்தார், ஆனால் ஔரங்கசீப்பின் முன் தலைவணங்கவில்லை

பட மூலாதாரம்,DSGMC

குரு தேக் பகதூர் இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வதித்தார். குரு தேக் பகதூரின் தலையை ஜலாலுதீன் துண்டித்தவுடன்  கூட்டத்தில் பேரமைதி நிலவியது. குரு தேக் பகதூர் உயிர்தியாகம் செய்த அதே இடத்தில் பின்னர், சீஸ்கஞ்ச் குருத்வாரா கட்டப்பட்டது.

குருவின் சீடர் ஜெய்தா தாஸ், துண்டிக்கப்பட்ட தலையை டெல்லியில் இருந்து 340 கிமீ தொலைவில் உள்ள ஆனந்த்பூருக்கு எடுத்துச் சென்று அவரது ஒன்பது வயது மகன் கோபிந்த் ராயிடம் கொடுத்தார். ஆனந்த்பூர் சாஹிப்பில் குரு தேக் பகதூரின் துண்டிக்கப்பட்ட தலை முழு மரியாதையுடன் புதைக்கப்பட்ட இடத்தில் சீஸ்கஞ்ச் குருத்வாரா  கட்டப்பட்டது.

லக்கி ஷா என்ற மற்றொரு நபர், கோட்வாலியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரகாப் கஞ்சில் குரு தேக் பகதூரின் உடலை தகனம் செய்தார். அவரது நினைவாக அதே இடத்தில் குருத்வாரா ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

முகலாயர்களின் வீழ்ச்சியின் ஆரம்பம்

குரு தேக் பகதூரின் உயிர் தியாகத்திற்குப் பிறகு  பல காஷ்மீரி பண்டிதர்கள் சீக்கிய மதத்தைத் தழுவினர். காஷ்மீரி பிராமணர்களுக்கு தலைமை தாங்கிய கிர்பா ராம் சீக்கியராக மாறினார்.

"குரு தேக் பகதூரின் இந்த தியாகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மாற்றியது. மனிதகுல வரலாற்றில், மனித உரிமைகளுக்காக அளிக்கப்பட்ட உயிர்தியாகத்தின் மிகப்பெரிய உதாரணமாக இது ஆனது. இந்தியாவின் வலிமைமிக்க முகலாயப் பேரரசின் வீழ்ச்சி இங்கிருந்து தொடங்கியது,"என்று சீக்கிய அறிஞர் குர்முக் சிங் தனது 'குரு தேக் பகதூர் தி ட்ரூ ஸ்டோரி' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c2j03m2zydlo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.