Jump to content

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு

13 NOV, 2022 | 08:52 PM
image

எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். 

எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.

எமது கட்சிகளுக்கிடையில் பல்வேறு பேதங்கள் இருந்தாலும் எமது மக்களின் அடிப்படை அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டிய இந்த வேளையில் கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து விட்டு அதனை உரத்துக் கூற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

இதற்காக வருகிற செவ்வாய் கிழமை நவம்பர் 15ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் ஒன்று கூடுமாறு கட்சித் தலைவராகிய உங்களை அன்போடு அழைக்கிறோம். காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு நீங்கள் சமூகம் தருவீர்கள் என்று நம்புகிறோம் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/139932

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

நல்லது நடந்தால் அதுவே இன்றைய தேவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல். இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடுவோமானால் இனிமேல் சகலவற்றையும் நாம் மறக்க வேண்டியதுதான். 

எங்களுக்கு அரிசிதான் தேவை. அது யார் குற்றினாலென்ன, யார் அவித்தாலென்ன? 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல். இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடுவோமானால் இனிமேல் சகலவற்றையும் நாம் மறக்க வேண்டியதுதான். 

எங்களுக்கு அரிசிதான் தேவை. அது யார் குற்றினாலென்ன, யார் அவித்தாலென்ன? 

கபிதன் இரட்டைப் பேச்சு வேண்டாம். 

யார் குற்றினாலும் அரிசி தான் தேவை எனும் நீங்கள் சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது நகைப்பிற்குரியது.

இதுவரை சம்பந்தனின் தலைமையில் தமிழர்களுக்கு பொங்கியது போதும்…

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நல்ல முயற்சி

நல்லது நடந்தால் அதுவே இன்றைய தேவை 

நம்பிக்கை தான் வாழ்க்கை இதுவரையும் 12 வருடங்கள் தாண்டியும் ஒன்றையும் காணோம் அப்படியானவர்களிடம் நம்பி நம்பி ஏமாறுவது சரியா அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

1) கபிதன் இரட்டைப் பேச்சு வேண்டாம். 

2) யார் குற்றினாலும் அரிசி தான் தேவை எனும் நீங்கள் சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது நகைப்பிற்குரியது. இதுவரை சம்பந்தனின் தலைமையில் தமிழர்களுக்கு பொங்கியது போதும்…

1) இரட்டைப் பேச்சு என்பதை நிரூபியுங்கள். சம்பந்தன் மீது எல்லோருக்கும் விமர்சனம் உண்டு என்பது உண்மைதான். அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு  அங்கே யார் இருக்கிறார்கள்? 

2) சம்பந்தன் தவிர்த்து முன்னிலைப்படுத்த ஒருவரைக் கூறுங்கள் பார்க்கலாம் ? CVK சிவஞானம் 🤣

இந்தச் சந்தர்பம் TNA யாலோ அல்லது மற்றைய தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளினால் வந்ததல்ல என்பது முக்கியமான விடயம். இந்தச் சந்தர்பம் மேற்குலகால் கொடுக்கப்படுகிறது. அது சிங்களவர் தமிழர் என எல்லோருக்கும் கொடுக்கப்படும் சந்தர்ப்பம். எனவே வீண் கற்பனைகளில் மூழ்காதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையைhக இருநத கூட்டமைப்பை துண்டுகளாக உடைத்தததே நீங்கள்தான். நீங்களும் .சம்பந்தனும் விலகிநின்றாலே  போதும் எல்லாம் நல்லபடி நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு அமைச்சு பெற்றுத்தருகிறேன்....ரணிலுடன் சேர்வோம் என்பதே இதன் கருத்து...😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சர்வகட்சி மாநாடு நடத்தலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெளியேறினால்; மற்ற எல்லோரும் ஒன்று கூடுவார்கள். இப்போ, வாங்கோ சேருங்கோ என்று அழைப்பார், காரியம் முடிந்தவுடன் விரட்டுவார். விக்கினேஸ்வரன், ஆனோல்ட், சிறிதரன் என்று பட்டியல் நீளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

இவர் வெளியேறினால்; மற்ற எல்லோரும் ஒன்று கூடுவார்கள். இப்போ, வாங்கோ சேருங்கோ என்று அழைப்பார், காரியம் முடிந்தவுடன் விரட்டுவார். விக்கினேஸ்வரன், ஆனோல்ட், சிறிதரன் என்று பட்டியல் நீளும்!

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலிருந்து விலகினால் ஈழத்தமிழருக்கு விமோசனம் உண்டு.

இரண்டும் தேவையில்லாத ஆணிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலிருந்து விலகினால் ஈழத்தமிழருக்கு விமோசனம் உண்டு.

இரண்டும் தேவையில்லாத ஆணிகள்.

உண்மையும் அதுதான்.

 

4 hours ago, Kapithan said:

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல்.

இதுவரை காலமும் ஆரம்பித்தது எல்லாம் இவர் தலைமையிர்த்தானே அப்போ ஆகாதது எல்லாம் இப்போ ஆகிவிடுமோ?

3 hours ago, Kapithan said:

அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு

அவரது அனுபவத்தினால் தமிழருக்கு சாதித்தது என்ன என்பதை ஒருக்கா அடுக்கிவிடுங்கள் நாங்களும் பாப்போம்! சிங்களவன் அவரின் சேவையில் நனைந்து தங்க விருது கொடுக்கிறான், நாங்கள் எதை கொடுக்க? எங்களிடம் இருந்ததெல்லாம் தாரைவார்த்து அவருக்கு தங்கபரிசு  வாங்கிகொடுத்திருக்கிறோம், அதோடு வீடு போய்ச்சேருவதுதான் அவருக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் செய்யும் உதவி. இன்னும் பேராசைப்பட்டு அடம்பிடிக்கப்படாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.

இதைத் தானே குமார் பொன்னம்பலம் 2009 இல் இருந்து தொடர்ந்து சொல்லி வருகிறார்.

அதனாலேயே இந்தியாவின் எரிச்சலுக்கு உள்ளாகி சகல வழிகளிலிலும் அவரது கட்சிக்கு அலுப்பு கொடுக்கிறார்கள்.

13 என்று தானே கொஞ்ச நாளாக இந்தியா சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொண்டிருந்தவை.

இந்த வருடத்துக்குள் தீர்வு என்று ரணில் சொன்னபடியால்

அனேகமாக உள்ள தமிழ்கட்சிகளின் உறவுகளையும் முறித்து விடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

உண்மைதான், ஆனால் பாவம் வயதுபோன நேரத்திலை ஐயாவை இழுத்துக்கொண:டு திரியேக்கை ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமாக இருக்கலாம். சந்திப்பை அவரது இல்லத்தைவிடுத்து ஒரு பொது இடமாக வைத்திருந்தால் ஒருவேளை 90வீதமான வெற்றியை பெற்றிருக்கலாம்.
இந்த ஒன்றிணைப்பு முயற்சியும் இவர்களது சொந்த சிந்தனையாக இருக்க வாய்ப்பில்லை.அண்மைய சந்திப்புக்களின் பெறுபேறாகவே இருக்க வாய்ப்புள்ளது.

அதேவேளை இங்கு கருத்தெழுதிய பலரது வினாக்கள் நியாயமானதே. அவை கடந்த காலப் பட்டறிவின் விளைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களுக்கும் வேறை வேலையில்லை உங்களுக்கும் வேறை வேலை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) இரட்டைப் பேச்சு என்பதை நிரூபியுங்கள். சம்பந்தன் மீது எல்லோருக்கும் விமர்சனம் உண்டு என்பது உண்மைதான். அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு  அங்கே யார் இருக்கிறார்கள்? 

2) சம்பந்தன் தவிர்த்து முன்னிலைப்படுத்த ஒருவரைக் கூறுங்கள் பார்க்கலாம் ? CVK சிவஞானம் 🤣

இந்தச் சந்தர்பம் TNA யாலோ அல்லது மற்றைய தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளினால் வந்ததல்ல என்பது முக்கியமான விடயம். இந்தச் சந்தர்பம் மேற்குலகால் கொடுக்கப்படுகிறது. அது சிங்களவர் தமிழர் என எல்லோருக்கும் கொடுக்கப்படும் சந்தர்ப்பம். எனவே வீண் கற்பனைகளில் மூழ்காதீர்கள். 

நீங்கள் தூக்கிப் பிடிக்கும் சும் ஐ விட CVK க்கு அரசியல் அனுபவமும் நிர்வாக திறமையும் அதிகம் உள்ளது.

இவ்வளவு காலமும் கற்பனையில் இருந்தது தாங்கள், அமெரிக்காவடன் இணைந்து சும் தீர்வு கொண்டுவரப் போகிறார் என்று அவித்து விட்டது தாங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இதுவரை காலமும் சமஷ்டி என்ற சொல்லையே உச்சரிக்காத சும் இன்று  பல்டி அடித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

13 என்று தானே கொஞ்ச நாளாக இந்தியா சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொண்டிருந்தவை

பதின்மூன்றை சும்மா அப்பப்போ அசைத்து வேடிக்கை காட்டுறதும், வெருட்டுறதும் இந்தியாவின் பம்மாத்து வேலை. பதின்மூன்றை கொடுத்தால் நாளடைவில் அதற்கு மேல் போவார்கள் ஆகவே அதை வைத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் திறமை. இல்லையாயின் இத்தனையாண்டுகளாய் தமது திட்டத்தை நிறைவேற்றாமல் அடம்பிடிக்கும் இலங்கைக்கு ஓடியோடி உதவுவதேன்? இலங்கையும் கூச்சமில்லாமல் கையை நீட்டுகிறது.

 அதென்ன ....... ஒருவர் எப்ப பார், அரிசி குத்துறதிலேயே குறியாய் இருக்கிறார்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

1) நீங்கள் தூக்கிப் பிடிக்கும் சும் ஐ விட CVK க்கு அரசியல் அனுபவமும் நிர்வாக திறமையும் அதிகம் உள்ளது.

2) இவ்வளவு காலமும் கற்பனையில் இருந்தது தாங்கள், அமெரிக்காவடன் இணைந்து சும் தீர்வு கொண்டுவரப் போகிறார் என்று அவித்து விட்டது தாங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

3) இதுவரை காலமும் சமஷ்டி என்ற சொல்லையே உச்சரிக்காத சும் இன்று  பல்டி அடித்துள்ளார்.

1) மீராவீட்டுக் கத்தரிக்காய் முத்திவிட்டது..😉. ஆனால் CVK யின் அரசியல் அனுபவம் , நிர்வாகத் திறமை தவிர்ந்த வேறு  முக்கியமான இரு விடயங்களை சோற்றில் மறைத்துவிட்டீர்களே MIர..😉

2) இப்போது  அரசியல் தீர்வை கொண்டுவர அரசாங்கத்திற்கும் தமிழ்த்தரப்பிற்கும் நிற்பந்தந்தத்தைக் கொடுப்பது யாராம்? இந்தியா என நம்புகிறீர்களோ ? 

3) உமது மூக்குப் போனாலும் பரவாயில்லை, சும்மிற்கு சகுனம் பிழைக்கோணு என்கிறீரா? நல்ல ஆளய்யா நீவீர்..😀

9 hours ago, satan said:

உண்மையும் அதுதான்.

 

இதுவரை காலமும் ஆரம்பித்தது எல்லாம் இவர் தலைமையிர்த்தானே அப்போ ஆகாதது எல்லாம் இப்போ ஆகிவிடுமோ?

அவரது அனுபவத்தினால் தமிழருக்கு சாதித்தது என்ன என்பதை ஒருக்கா அடுக்கிவிடுங்கள் நாங்களும் பாப்போம்! சிங்களவன் அவரின் சேவையில் நனைந்து தங்க விருது கொடுக்கிறான், நாங்கள் எதை கொடுக்க? எங்களிடம் இருந்ததெல்லாம் தாரைவார்த்து அவருக்கு தங்கபரிசு  வாங்கிகொடுத்திருக்கிறோம், அதோடு வீடு போய்ச்சேருவதுதான் அவருக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் செய்யும் உதவி. இன்னும் பேராசைப்பட்டு அடம்பிடிக்கப்படாது. 

சம்பந்தன் வேண்டாம் என்றால் இன்னொருவரின் பெயரை முன்மொழிவதுதானே சரியான அணுகுமுறை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

1) மீராவீட்டுக் கத்தரிக்காய் முத்திவிட்டது..😉. ஆனால் CVK யின் அரசியல் அனுபவம் , நிர்வாகத் திறமை தவிர்ந்த வேறு  முக்கியமான இரு விடயங்களை சோற்றில் மறைத்துவிட்டீர்களே MIர..😉

2) இப்போது  அரசியல் தீர்வை கொண்டுவர அரசாங்கத்திற்கும் தமிழ்த்தரப்பிற்கும் நிற்பந்தந்தத்தைக் கொடுப்பது யாராம்? இந்தியா என நம்புகிறீர்களோ ? 

3) உமது மூக்குப் போனாலும் பரவாயில்லை, சும்மிற்கு சகுனம் பிழைக்கோணு என்கிறீரா? நல்ல ஆளய்யா நீவீர்..😀

சம்பந்தன் வேண்டாம் என்றால் இன்னொருவரின் பெயரை முன்மொழிவதுதானே சரியான அணுகுமுறை? 

உங்கள் கூடைக்குள் தான் முத்தின கத்தரிக்காய்கள் உள்ளன.

இங்கு CVK ஐ கொண்டு வந்ததே தாங்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

உங்கள் கூடைக்குள் தான் முத்தின கத்தரிக்காய்கள் உள்ளன.

இங்கு CVK ஐ கொண்டு வந்ததே தாங்கள் தான்.

என்னிடம் கூடையே இல்லாதபோது கத்தரிக்காய் மட்டும் எப்படி வரும் ? 

CVK யை உதாரணமாகத்தான் கூறினேன்.

பொறிக்கு வந்து எலி வடையைச் சாப்ப்ட்டால் பொறி என் செய்யும்? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

என்னிடம் கூடையே இல்லாதபோது கத்தரிக்காய் மட்டும் எப்படி வரும் ? 

CVK யை உதாரணமாகத்தான் கூறினேன்.

பொறிக்கு வந்து எலி வடையைச் சாப்ப்ட்டால் பொறி என் செய்யும்? 

😉

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

தாங்கள் இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு ஆயத்தமோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

நம்பிக்கை தான் வாழ்க்கை இதுவரையும் 12 வருடங்கள் தாண்டியும் ஒன்றையும் காணோம் அப்படியானவர்களிடம் நம்பி நம்பி ஏமாறுவது சரியா அண்ணை?

என்னிடமும்  இதே கேள்விகளும் சந்தேகங்களுமுண்டு
ஆனால் பிரச்சினைகளை வளர்ப்பது  அல்லது அதைப்பற்றி  பேசி அலசிக்கொண்டு நேரத்தை  வீணடிப்பதைவிட
பேசிப்பார்க்கலாமே?
ஒரு முயற்சியையாவது  செய்து  பார்க்கலாமே???
போனாலும்  உரோமம்  தானே போகப்போகிறது

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2022 at 11:14, MEERA said:

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

ஐயோ அதை ஏன் நியாபகப்படுத்துறியள்🤣.

சும் சாணாக்கியன் கனடா வந்த நேரம் கற்ப்ஸ் அவிச்ச, அவியல் - நாகபூசணி அம்மன் அன்னதானத்தில கூட இராது🤣.

நான் கொஞ்சம் டவுட் ஆகி ஒரு கேள்வி கேட்க,

கொஞ்சம் அமெரிக்கன் படை இப்பவே கொழும்பில இறங்கீட்டு எண்டெலே ஒரே போடாய் போட்டவர்🤣.

ஒன்றில் இவர் அதீத கற்பனாவாதி.

அல்லாட்டில் யாரோ ஆளுக்கு நல்லா மொட்டையும் அடிச்சு, சந்தணமும் தடவி, விட அதை இங்க வந்து அவிச்சு இறக்கி இருக்கிறார்.

இந்த இலட்சணத்தில் உலக அரசியல் வியாக்கியானம் வேற.

#சாமி இங்கிலீஷ் எல்லாம் பேசுது 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.