Jump to content

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு

13 NOV, 2022 | 08:52 PM
image

எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். 

எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.

எமது கட்சிகளுக்கிடையில் பல்வேறு பேதங்கள் இருந்தாலும் எமது மக்களின் அடிப்படை அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டிய இந்த வேளையில் கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து விட்டு அதனை உரத்துக் கூற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

இதற்காக வருகிற செவ்வாய் கிழமை நவம்பர் 15ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் ஒன்று கூடுமாறு கட்சித் தலைவராகிய உங்களை அன்போடு அழைக்கிறோம். காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு நீங்கள் சமூகம் தருவீர்கள் என்று நம்புகிறோம் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/139932

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

நல்லது நடந்தால் அதுவே இன்றைய தேவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல். இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடுவோமானால் இனிமேல் சகலவற்றையும் நாம் மறக்க வேண்டியதுதான். 

எங்களுக்கு அரிசிதான் தேவை. அது யார் குற்றினாலென்ன, யார் அவித்தாலென்ன? 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல். இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடுவோமானால் இனிமேல் சகலவற்றையும் நாம் மறக்க வேண்டியதுதான். 

எங்களுக்கு அரிசிதான் தேவை. அது யார் குற்றினாலென்ன, யார் அவித்தாலென்ன? 

கபிதன் இரட்டைப் பேச்சு வேண்டாம். 

யார் குற்றினாலும் அரிசி தான் தேவை எனும் நீங்கள் சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது நகைப்பிற்குரியது.

இதுவரை சம்பந்தனின் தலைமையில் தமிழர்களுக்கு பொங்கியது போதும்…

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நல்ல முயற்சி

நல்லது நடந்தால் அதுவே இன்றைய தேவை 

நம்பிக்கை தான் வாழ்க்கை இதுவரையும் 12 வருடங்கள் தாண்டியும் ஒன்றையும் காணோம் அப்படியானவர்களிடம் நம்பி நம்பி ஏமாறுவது சரியா அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

1) கபிதன் இரட்டைப் பேச்சு வேண்டாம். 

2) யார் குற்றினாலும் அரிசி தான் தேவை எனும் நீங்கள் சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது நகைப்பிற்குரியது. இதுவரை சம்பந்தனின் தலைமையில் தமிழர்களுக்கு பொங்கியது போதும்…

1) இரட்டைப் பேச்சு என்பதை நிரூபியுங்கள். சம்பந்தன் மீது எல்லோருக்கும் விமர்சனம் உண்டு என்பது உண்மைதான். அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு  அங்கே யார் இருக்கிறார்கள்? 

2) சம்பந்தன் தவிர்த்து முன்னிலைப்படுத்த ஒருவரைக் கூறுங்கள் பார்க்கலாம் ? CVK சிவஞானம் 🤣

இந்தச் சந்தர்பம் TNA யாலோ அல்லது மற்றைய தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளினால் வந்ததல்ல என்பது முக்கியமான விடயம். இந்தச் சந்தர்பம் மேற்குலகால் கொடுக்கப்படுகிறது. அது சிங்களவர் தமிழர் என எல்லோருக்கும் கொடுக்கப்படும் சந்தர்ப்பம். எனவே வீண் கற்பனைகளில் மூழ்காதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையைhக இருநத கூட்டமைப்பை துண்டுகளாக உடைத்தததே நீங்கள்தான். நீங்களும் .சம்பந்தனும் விலகிநின்றாலே  போதும் எல்லாம் நல்லபடி நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு அமைச்சு பெற்றுத்தருகிறேன்....ரணிலுடன் சேர்வோம் என்பதே இதன் கருத்து...😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சர்வகட்சி மாநாடு நடத்தலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெளியேறினால்; மற்ற எல்லோரும் ஒன்று கூடுவார்கள். இப்போ, வாங்கோ சேருங்கோ என்று அழைப்பார், காரியம் முடிந்தவுடன் விரட்டுவார். விக்கினேஸ்வரன், ஆனோல்ட், சிறிதரன் என்று பட்டியல் நீளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

இவர் வெளியேறினால்; மற்ற எல்லோரும் ஒன்று கூடுவார்கள். இப்போ, வாங்கோ சேருங்கோ என்று அழைப்பார், காரியம் முடிந்தவுடன் விரட்டுவார். விக்கினேஸ்வரன், ஆனோல்ட், சிறிதரன் என்று பட்டியல் நீளும்!

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலிருந்து விலகினால் ஈழத்தமிழருக்கு விமோசனம் உண்டு.

இரண்டும் தேவையில்லாத ஆணிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலிருந்து விலகினால் ஈழத்தமிழருக்கு விமோசனம் உண்டு.

இரண்டும் தேவையில்லாத ஆணிகள்.

உண்மையும் அதுதான்.

 

4 hours ago, Kapithan said:

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல்.

இதுவரை காலமும் ஆரம்பித்தது எல்லாம் இவர் தலைமையிர்த்தானே அப்போ ஆகாதது எல்லாம் இப்போ ஆகிவிடுமோ?

3 hours ago, Kapithan said:

அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு

அவரது அனுபவத்தினால் தமிழருக்கு சாதித்தது என்ன என்பதை ஒருக்கா அடுக்கிவிடுங்கள் நாங்களும் பாப்போம்! சிங்களவன் அவரின் சேவையில் நனைந்து தங்க விருது கொடுக்கிறான், நாங்கள் எதை கொடுக்க? எங்களிடம் இருந்ததெல்லாம் தாரைவார்த்து அவருக்கு தங்கபரிசு  வாங்கிகொடுத்திருக்கிறோம், அதோடு வீடு போய்ச்சேருவதுதான் அவருக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் செய்யும் உதவி. இன்னும் பேராசைப்பட்டு அடம்பிடிக்கப்படாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.

இதைத் தானே குமார் பொன்னம்பலம் 2009 இல் இருந்து தொடர்ந்து சொல்லி வருகிறார்.

அதனாலேயே இந்தியாவின் எரிச்சலுக்கு உள்ளாகி சகல வழிகளிலிலும் அவரது கட்சிக்கு அலுப்பு கொடுக்கிறார்கள்.

13 என்று தானே கொஞ்ச நாளாக இந்தியா சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொண்டிருந்தவை.

இந்த வருடத்துக்குள் தீர்வு என்று ரணில் சொன்னபடியால்

அனேகமாக உள்ள தமிழ்கட்சிகளின் உறவுகளையும் முறித்து விடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

உண்மைதான், ஆனால் பாவம் வயதுபோன நேரத்திலை ஐயாவை இழுத்துக்கொண:டு திரியேக்கை ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமாக இருக்கலாம். சந்திப்பை அவரது இல்லத்தைவிடுத்து ஒரு பொது இடமாக வைத்திருந்தால் ஒருவேளை 90வீதமான வெற்றியை பெற்றிருக்கலாம்.
இந்த ஒன்றிணைப்பு முயற்சியும் இவர்களது சொந்த சிந்தனையாக இருக்க வாய்ப்பில்லை.அண்மைய சந்திப்புக்களின் பெறுபேறாகவே இருக்க வாய்ப்புள்ளது.

அதேவேளை இங்கு கருத்தெழுதிய பலரது வினாக்கள் நியாயமானதே. அவை கடந்த காலப் பட்டறிவின் விளைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களுக்கும் வேறை வேலையில்லை உங்களுக்கும் வேறை வேலை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) இரட்டைப் பேச்சு என்பதை நிரூபியுங்கள். சம்பந்தன் மீது எல்லோருக்கும் விமர்சனம் உண்டு என்பது உண்மைதான். அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு  அங்கே யார் இருக்கிறார்கள்? 

2) சம்பந்தன் தவிர்த்து முன்னிலைப்படுத்த ஒருவரைக் கூறுங்கள் பார்க்கலாம் ? CVK சிவஞானம் 🤣

இந்தச் சந்தர்பம் TNA யாலோ அல்லது மற்றைய தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளினால் வந்ததல்ல என்பது முக்கியமான விடயம். இந்தச் சந்தர்பம் மேற்குலகால் கொடுக்கப்படுகிறது. அது சிங்களவர் தமிழர் என எல்லோருக்கும் கொடுக்கப்படும் சந்தர்ப்பம். எனவே வீண் கற்பனைகளில் மூழ்காதீர்கள். 

நீங்கள் தூக்கிப் பிடிக்கும் சும் ஐ விட CVK க்கு அரசியல் அனுபவமும் நிர்வாக திறமையும் அதிகம் உள்ளது.

இவ்வளவு காலமும் கற்பனையில் இருந்தது தாங்கள், அமெரிக்காவடன் இணைந்து சும் தீர்வு கொண்டுவரப் போகிறார் என்று அவித்து விட்டது தாங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இதுவரை காலமும் சமஷ்டி என்ற சொல்லையே உச்சரிக்காத சும் இன்று  பல்டி அடித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

13 என்று தானே கொஞ்ச நாளாக இந்தியா சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொண்டிருந்தவை

பதின்மூன்றை சும்மா அப்பப்போ அசைத்து வேடிக்கை காட்டுறதும், வெருட்டுறதும் இந்தியாவின் பம்மாத்து வேலை. பதின்மூன்றை கொடுத்தால் நாளடைவில் அதற்கு மேல் போவார்கள் ஆகவே அதை வைத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் திறமை. இல்லையாயின் இத்தனையாண்டுகளாய் தமது திட்டத்தை நிறைவேற்றாமல் அடம்பிடிக்கும் இலங்கைக்கு ஓடியோடி உதவுவதேன்? இலங்கையும் கூச்சமில்லாமல் கையை நீட்டுகிறது.

 அதென்ன ....... ஒருவர் எப்ப பார், அரிசி குத்துறதிலேயே குறியாய் இருக்கிறார்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

1) நீங்கள் தூக்கிப் பிடிக்கும் சும் ஐ விட CVK க்கு அரசியல் அனுபவமும் நிர்வாக திறமையும் அதிகம் உள்ளது.

2) இவ்வளவு காலமும் கற்பனையில் இருந்தது தாங்கள், அமெரிக்காவடன் இணைந்து சும் தீர்வு கொண்டுவரப் போகிறார் என்று அவித்து விட்டது தாங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

3) இதுவரை காலமும் சமஷ்டி என்ற சொல்லையே உச்சரிக்காத சும் இன்று  பல்டி அடித்துள்ளார்.

1) மீராவீட்டுக் கத்தரிக்காய் முத்திவிட்டது..😉. ஆனால் CVK யின் அரசியல் அனுபவம் , நிர்வாகத் திறமை தவிர்ந்த வேறு  முக்கியமான இரு விடயங்களை சோற்றில் மறைத்துவிட்டீர்களே MIர..😉

2) இப்போது  அரசியல் தீர்வை கொண்டுவர அரசாங்கத்திற்கும் தமிழ்த்தரப்பிற்கும் நிற்பந்தந்தத்தைக் கொடுப்பது யாராம்? இந்தியா என நம்புகிறீர்களோ ? 

3) உமது மூக்குப் போனாலும் பரவாயில்லை, சும்மிற்கு சகுனம் பிழைக்கோணு என்கிறீரா? நல்ல ஆளய்யா நீவீர்..😀

9 hours ago, satan said:

உண்மையும் அதுதான்.

 

இதுவரை காலமும் ஆரம்பித்தது எல்லாம் இவர் தலைமையிர்த்தானே அப்போ ஆகாதது எல்லாம் இப்போ ஆகிவிடுமோ?

அவரது அனுபவத்தினால் தமிழருக்கு சாதித்தது என்ன என்பதை ஒருக்கா அடுக்கிவிடுங்கள் நாங்களும் பாப்போம்! சிங்களவன் அவரின் சேவையில் நனைந்து தங்க விருது கொடுக்கிறான், நாங்கள் எதை கொடுக்க? எங்களிடம் இருந்ததெல்லாம் தாரைவார்த்து அவருக்கு தங்கபரிசு  வாங்கிகொடுத்திருக்கிறோம், அதோடு வீடு போய்ச்சேருவதுதான் அவருக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் செய்யும் உதவி. இன்னும் பேராசைப்பட்டு அடம்பிடிக்கப்படாது. 

சம்பந்தன் வேண்டாம் என்றால் இன்னொருவரின் பெயரை முன்மொழிவதுதானே சரியான அணுகுமுறை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

1) மீராவீட்டுக் கத்தரிக்காய் முத்திவிட்டது..😉. ஆனால் CVK யின் அரசியல் அனுபவம் , நிர்வாகத் திறமை தவிர்ந்த வேறு  முக்கியமான இரு விடயங்களை சோற்றில் மறைத்துவிட்டீர்களே MIர..😉

2) இப்போது  அரசியல் தீர்வை கொண்டுவர அரசாங்கத்திற்கும் தமிழ்த்தரப்பிற்கும் நிற்பந்தந்தத்தைக் கொடுப்பது யாராம்? இந்தியா என நம்புகிறீர்களோ ? 

3) உமது மூக்குப் போனாலும் பரவாயில்லை, சும்மிற்கு சகுனம் பிழைக்கோணு என்கிறீரா? நல்ல ஆளய்யா நீவீர்..😀

சம்பந்தன் வேண்டாம் என்றால் இன்னொருவரின் பெயரை முன்மொழிவதுதானே சரியான அணுகுமுறை? 

உங்கள் கூடைக்குள் தான் முத்தின கத்தரிக்காய்கள் உள்ளன.

இங்கு CVK ஐ கொண்டு வந்ததே தாங்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

உங்கள் கூடைக்குள் தான் முத்தின கத்தரிக்காய்கள் உள்ளன.

இங்கு CVK ஐ கொண்டு வந்ததே தாங்கள் தான்.

என்னிடம் கூடையே இல்லாதபோது கத்தரிக்காய் மட்டும் எப்படி வரும் ? 

CVK யை உதாரணமாகத்தான் கூறினேன்.

பொறிக்கு வந்து எலி வடையைச் சாப்ப்ட்டால் பொறி என் செய்யும்? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

என்னிடம் கூடையே இல்லாதபோது கத்தரிக்காய் மட்டும் எப்படி வரும் ? 

CVK யை உதாரணமாகத்தான் கூறினேன்.

பொறிக்கு வந்து எலி வடையைச் சாப்ப்ட்டால் பொறி என் செய்யும்? 

😉

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

தாங்கள் இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு ஆயத்தமோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

நம்பிக்கை தான் வாழ்க்கை இதுவரையும் 12 வருடங்கள் தாண்டியும் ஒன்றையும் காணோம் அப்படியானவர்களிடம் நம்பி நம்பி ஏமாறுவது சரியா அண்ணை?

என்னிடமும்  இதே கேள்விகளும் சந்தேகங்களுமுண்டு
ஆனால் பிரச்சினைகளை வளர்ப்பது  அல்லது அதைப்பற்றி  பேசி அலசிக்கொண்டு நேரத்தை  வீணடிப்பதைவிட
பேசிப்பார்க்கலாமே?
ஒரு முயற்சியையாவது  செய்து  பார்க்கலாமே???
போனாலும்  உரோமம்  தானே போகப்போகிறது

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2022 at 11:14, MEERA said:

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

ஐயோ அதை ஏன் நியாபகப்படுத்துறியள்🤣.

சும் சாணாக்கியன் கனடா வந்த நேரம் கற்ப்ஸ் அவிச்ச, அவியல் - நாகபூசணி அம்மன் அன்னதானத்தில கூட இராது🤣.

நான் கொஞ்சம் டவுட் ஆகி ஒரு கேள்வி கேட்க,

கொஞ்சம் அமெரிக்கன் படை இப்பவே கொழும்பில இறங்கீட்டு எண்டெலே ஒரே போடாய் போட்டவர்🤣.

ஒன்றில் இவர் அதீத கற்பனாவாதி.

அல்லாட்டில் யாரோ ஆளுக்கு நல்லா மொட்டையும் அடிச்சு, சந்தணமும் தடவி, விட அதை இங்க வந்து அவிச்சு இறக்கி இருக்கிறார்.

இந்த இலட்சணத்தில் உலக அரசியல் வியாக்கியானம் வேற.

#சாமி இங்கிலீஷ் எல்லாம் பேசுது 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.