Jump to content

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்


Recommended Posts

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கத்தலைவரின் இந்த துணிகரமான முடிவை யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம், மற்றும் யாழ் காதல் வளர்ப்பு சங்கத்தின் தலைவர் என்ற வகையில் வரவேற்று எமது சங்கம் சார்பாக நன்றிகளையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கலைஞனின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்! மிக்க நன்றிகள்!

யா.சு.க.சங்கத்தில் பதவி நிலைகள் கிடையாது என்பது தாங்கள் அறிந்ததே! அது எங்கள் தனிமனித கருத்துச் சுதந்திர கொள்கைக்கு விரோதமானது. நான் ஏனையவர்கள் போல் ஒரு உறுப்பினர் மட்டுமே.

படிப்படியாக வளர்ந்து வரும் சுதந்திர கருத்தாளர் சங்கத்துடன் ஒத்திசைவான பல கருத்துகளை கொண்ட உங்களையும் எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வேண்டுகிறேன்.

சாணக்கியன் அண்ணாவின் இந்த முடிவை நான் இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் smile.gif சங்கத்திற்கு கலங்கம் வரகூடாது என்று சவாலாக எடுத்து கொண்டதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன்!! உங்கள் காலகண்ணாடி பிராசிக்க ஜம்மு பேபியின் வாழ்த்துகள் உரித்தாகட்டும்!! smile.gif

அப்ப நான் வரட்டா!!

சாணக்கியன் அண்ணா சங்கத்தின் மானத்தை காப்பாற்ற களத்தில் இறங்கி சாதித்துவிட்டீர்கள் வாழ்த்துகள் அண்ணா!! wub.gif

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை!!

குறுகிய காலத்தில் அழகான விம்பத்துடனான காலகண்ணாடி சிறப்பு வாழ்த்துகள் அண்ணா!! smile.gif

அப்ப நான் வரட்டா!!

சும்மாவா பின்னே? சங்கத்திற்கு ஒரு இழுக்கென்றால் பொங்கி எழுவமில்லே!

இருந்தாலும் எழுதத் தொடங்கி கைவலிக்கும் போது தான் நினைத்தேன் யமுனா எப்படித்தான் பக்கம் பக்கமாக எழுதுகிறார் என்று!

ஆஹா .... சாணக்கியன் அண்ணா.... ஸாரி.... உண்மையா உங்களையோ சங்கத்தையோ குறை சொல்லி சாவால் விடயில்லை அண்ணா...! huh.gif ஆனால் யாழில் சங்கம் எண்டு இருந்தால் சின்ன விசயமோ பெரிய விசயமோ அதில் கள உறவுகள் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தால? நீங்கள் முன்னிண்டு அதை தீர்த்து வைக்க வேணாமா ? தனிய கருத்து வெட்டுப்பட்டால் மட்டும் நியாயம் கேட்பதோடு நிற்காமல் இப்படியான விசயங்களையும் உங்கள் சங்கம் எடுத்து செய்ய வேணும்.

அடுத்ததாக நீங்களே காலக்கண்ணாடி செய்யப்போறீங்கள் எண்டு எழுதியிருந்தீர்கள் சந்தோசமாயிருந்தது. உங்களின் துணிச்சலான இந்த முடிவைப் பார்த்து நானும் உங்கள் சு.க.சங்கத்தில் உறுப்பினராக சேர முடிவெடுத்துள்ளேன். smile.gif

யா.சு.க.சங்கத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஏற்கனவே சங்கத்தின்டை பெயரை சொல்லி உசுப்பி காலக்கண்ணாடி எழுத வச்சீங்க, இப்ப நான் சும்மா இருக்கிறது பிடிக்காம தகறாரில வேற மாட்டிவிட்டு தர்ம அடி வாங்கித்தரத் திட்டமா?

கொஞ்சம் பொறுங்க, இப்பத்தான் தொடங்கி இருக்கோம், படிப்படியா களத்தில இறங்குவோம்!

சாணக்கியன்..

காலக்கண்ணாடியை காலத்துக்கு இணைத்தமை...

எல்லாளன்.. மீண்டும் எல்லோரையும் யாழுக்குள்ளும்.. நம்பிக்கை;குள்ளும் இழுத்து வந்திருக்கிறார்..

அழகாக செய்திருக்கும் உங்கள் காலக்கண்ணாடிக்கு பாராட்டுகள்..

காலக்கண்ணாடியை இணைத்து விட்டு இந்தப்பக்கம் திரும்புறத்துக்கிடையில உங்கட பாராட்டுகளை தெரிவித்திருந்தீர்கள், நன்றிகள்!

மிகவும் தெளிவான முறையில் இவ்வாரக் காலக் கண்ணாடி பிரதிபலிக்கிறது. பதிவுகளை நேர்த்தியான முறையில் தொகுப்பதில் தனது திறமையை வெளிப்படுத்திய சாணக்கியனுக்குப் பாராட்டுக்கள்.

நன்றி இணையவன், ஆனால் எல்லாப்பகுதிகளுக்கும் போகமுடியவில்லை என்பது ஒரு குறை, முக்கியமா கவிதை, அறிவியல் பகுதிகளுக்கு போகக்கிடைக்கவில்லை. அடுத்த வாரம் அசத்துவதற்கு வாழ்த்துகள்.

கொஞ்ச நாட்களுக்குள் ஒருவாரத்தில் நடந்தவற்றை அபப்டியே சொல்லி இருக்கிறீங்க. பாராட்டுக்கள் சாணாக்கியன்.

அந்த பிறேம்க்குள்ளேயே அழகாக எழுதி இருக்கலாமோ என தோணுது. இன்னும் வழிவாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி வெண்ணிலா, அப்படி செய்தத்தான் ஆசைப்பட்டேன், அதற்கு இரண்டு வழிகள் தான் உள்ளது, ஒன்று முழுவதும் ஒரு உருவமாக இணைப்பது (இப்படிச் செய்தால் தரவிறக்க நீண்ட நேரம் எடுக்கும்), மற்றையது HTML இல் உள்ள பின்னனி உருவ வசதியை உபயோகிப்பது. ஆனால் இங்கு கருத்துச் சாளரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட HTML வசதிகளே தரப்பட்டுள்ளதால் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

அன்புடன்,

Link to comment
Share on other sites

  • Replies 912
  • Created
  • Last Reply

அண்மைய எல்லாளன் நடவடிக்கையை சூழ்ந்து கருத்தக்கள நிகழ்வுகளை தொகுத்து வந்த காலக் கண்ணாடி நன்றாகவே இருக்கிறது சாணக்கியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் நீங்கள் சாணக்கியன் என்பதை நிறுவி விட்டு போயிருக்கிறீர்கள். வெளிப்படையாகவே உங்களுக்கு ஒத்துவராத விடயங்கள் என்று சிலவற்றைத் தவிர்த்து உங்க தலைத் தொப்பியைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சாணக்கியன் உங்கள் காலக்கண்ணாடியை சாணக்கியமாக அமைத்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணாக்கியன் உங்கள் காலக்கண்ணாடி நன்றாக இருக்கிறது. முக்கிய கருத்துக்களின் தலைப்புகளை தெரிவு செய்து அவற்றின் இணைப்புக்களை இணைத்தன் மூலம், நேரம் கிடைக்காமல் பார்க்காமல் விட்ட அத்தலைப்புக்களின், இணைப்பினூடாக அப்பதிவுகள், கருத்துக்கள் பார்க்க வழி செய்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் காலக்கண்ணாடி எளிமையோடு மின்னி மிளிர்ந்தது. பாராட்டுக்கள். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து காலக்கண்ணாடி செய்பவர் இணையவன் என்று கலைஞர் சொல்லி இருக்கிறார். ஆனால் சாணாக்கியன் சொல்பவர் தான் செய்வது முறையாகும். காலக்கண்ணாடி செய்பவர் தான் அடுத்து செய்பவரை தெரிவு செய்வது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வாரம் நிகழ்வுகள் பற்றிய உங்க காலக்கண்ணாடி அழகு. வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

சாணக்கியன் அண்ணா, காலக்கண்ணாடி தெளிவாக நன்றாக தொகுத்திருக்குறீங்க ! காலக்கண்ணாடி எண்டு எழுதின படமும் சூப்பர்...! பாராட்டுக்கள் ! :wub:

Link to comment
Share on other sites

சாணக்கியன் உங்கள் கண்ணாடி நல்லா இருக்கு. அதில் முக்கியமாக நான் எழுதிய ஒரு கருத்தாடல் சம்மந்தமாக மற்றவர்கள் போல வியாக்கியானம் கூறாது நடுநிலையுடன் கருத்து கூறி, எனது உள்ளக்கிடக்கையை புரிந்து மதிப்பு அளித்தமைக்கு மிகவும் நன்றி!

மற்றது இந்த சங்கங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும், நான் இரண்டு சங்கங்களின் பெயரில் சிலவேளைகளில் கருத்தாடல் செய்வதில் எதுவித நோக்கமும் இல்லை. நான் யாழுக்கு இன்னும் எவ்வளவு காலம் வருவேன் என்று தெரியாதபோது சங்கம் எல்லாம் அமைத்து விளையாடுவது எவ்வளவு தூரம் பயன் உள்ளது என்று தெரியவில்லை.

மற்றது, அப்பு - கந்தப்பு, ஒருவரும் காலக்கண்ணாடியை செய்ய முன்வராதபோது இணையவன் தானாக முன்வந்து அதை செய்வதாக கூறினார். நான் இணையவனை செய்யுமாறு உத்தரவு போடவில்லை.

வசதி, நேரம் உள்ளவர்கள் தாமாக கண்ணாடியை செய்வதே கூப்பிட்டு அழைப்பதை விட சிறந்தது என நான் நினைக்கின்றேன். யாழ் நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட தூயாவின் கூப்பிட்டு அழைக்கும் ஒரு கருத்தாடல் (Tag) தோல்வியில் முடிந்ததற்கும் இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக கூப்பிட்டு அழைப்பதே காரணம் என நான் நினைக்கின்றேன். வசதி உள்ளவர்கள் தாமாக விரும்பி காலக்கண்ணாடியை படைப்பதே வரவேற்கத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனின் காலக்கண்ணாடி அழகு.

முக்கிய நிகழ்வுக்கு சிறப்பு கொடுத்து, தொடுப்பும் கொடுத்தது அதைவிட சிறப்பு.

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

இணையவன், காலக்கண்ணாடியை காலத்துக்கேற்ப தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இணையவன் கருத்தும் தொகுப்பும் அருமை எளிமை...

முகப்பில் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நிழல்படம் ஒளிவிளக்கு நேர்த்தி..

பாராட்டுகள்..

Link to comment
Share on other sites

இணையவனின் கண்ணாடி சுருக்கமாகவும், இணைப்புகளுடனும், காலப்பொருத்தமான தலைப்புப் படத்துடனும் கடந்தவார யாழ்களத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது.

வாழ்த்துகள்!

மேலும் கடந்தவார காலக்கண்ணாடிக்கு கருத்துக்கூறிய இளைஞன், வல்வைசகாரா, வல்வைமைந்தன், கந்தப்பு, நெடுக்காலபோவான், கறுப்பி, அனித்தா, கலைஞன் ஆகிய அனைவருக்கும் நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனின் காலக்கண்ணாடி தமிழ்செல்வன் அண்ணாவின் இழப்பால் உருவான பெருந்துயர் சூழ்ந்துள்ள நிலையை எழுத்துரைத்து... தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து நிற்கிறது. சிறப்பான செய்தித் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

கடந்தவாரம் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை காலகண்ணாடியில் விம்பமாக கொண்டு வந்தமை சிறப்பு இணையவன் அண்ணா பாராட்டுகள்!! :icon_mrgreen:

ஜம்மு பேபி கால கண்ணாடி பற்றிய பார்வை!!

முக்கியமான நிகழ்வுகளுடனும் பிரிகேடியர் தமிழ் செல்வன் அண்ணாவிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்து செய்தி சுருக்கத்தை கண்ணாடியில் காட்டி சென்ற விதம் அருமை வாழ்த்துகள் இணையவன் அண்ணா!! :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா...

Link to comment
Share on other sites

வணக்கம்,

இணையவன் சுருக்கமாகவும், தெளிவாகவும், அழகிய முறையிலும் கடந்தவார காலக்கண்ணாடியை தொகுத்து இருக்கிறீங்கள்.

சாணக்கியனும், இணையவனும் சுருக்கமான முறையில் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்கி இருப்பது மற்றவர்களும் காலக்கண்ணாடியை செய்ய ஊக்குவிக்கும் என நினைக்கின்றேன்.

நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுருக்கமாகவும், எளிமையாகவும் தொகுத்து இருக்கிறீங்கள். நல்லா இருக்கு இணையவன்.!

Link to comment
Share on other sites

இணையவனின் காலக்கண்ணாடி சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கு நன்றி வல்லை மைந்தன்.

இணையவனின் காலக்கண்ணாடி அழகு. முக்கிய நிகழ்வுக்கு சிறப்பு கொடுத்து, தொடுப்பும் கொடுத்தது அதைவிட சிறப்பு.

வாழ்த்துகள்.

நன்றி கறுப்பி. தொடுப்புக்களை விபரங்களுடன் கொடுப்பதால் அந்த ஆக்கங்களை வாசிக்க்காதவர்கள் நேரடியாகச் சென்று வாசிக்கலாம்.

இணையவன், காலக்கண்ணாடியை காலத்துக்கேற்ப தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்.

நன்றி வலைஞன். முதலில் பொதுவான ஒரு படத்துடன் தொடங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் துக்கச் செய்தியைக் கேட்டதும் முடிவை மாற்றிக் கொண்டேன்.

இணையவன் கருத்தும் தொகுப்பும் அருமை எளிமை...

முகப்பில் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நிழல்படம் ஒளிவிளக்கு நேர்த்தி..

பாராட்டுகள்..

நன்றி விகடகவி. எளிமை தானே அழகு.

இணையவனின் கண்ணாடி சுருக்கமாகவும், இணைப்புகளுடனும், காலப்பொருத்தமான தலைப்புப் படத்துடனும் கடந்தவார யாழ்களத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது.

வாழ்த்துகள்!

நன்றி சாணக்கியன். அதிமான படங்களுடன் வித்தியாசமாகச் செய்ய வேண்டுமென்று முயற்சித்தேன். ஆனால் ஒரே பதிவில் பத்துக்கு குறைவான படங்களையே இணைக்க முடியும். இதிலேயே 7 படங்கள் உள்ளன.

இணையவனின் காலக்கண்ணாடி தமிழ்செல்வன் அண்ணாவின் இழப்பால் உருவான பெருந்துயர் சூழ்ந்துள்ள நிலையை எழுத்துரைத்து... தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து நிற்கிறது. சிறப்பான செய்தித் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்.

நன்றி நெடுக்காலபோவான். எழுத்தாற்றல் அதிகமாக இல்லாதபடியால் செய்தித் தொகுப்பு சிறியதாக இருந்தாலும் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது.

கடந்தவாரம் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை காலகண்ணாடியில் விம்பமாக கொண்டு வந்தமை சிறப்பு இணையவன் அண்ணா பாராட்டுகள்!! :lol:

ஜம்மு பேபி கால கண்ணாடி பற்றிய பார்வை!!

முக்கியமான நிகழ்வுகளுடனும் பிரிகேடியர் தமிழ் செல்வன் அண்ணாவிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்து செய்தி சுருக்கத்தை கண்ணாடியில் காட்டி சென்ற விதம் அருமை வாழ்த்துகள் இணையவன் அண்ணா!! :lol:

நன்றி ஜமுனா. காலக் கண்ணாடி மூலம் தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கு எனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.

வணக்கம்,

இணையவன் சுருக்கமாகவும், தெளிவாகவும், அழகிய முறையிலும் கடந்தவார காலக்கண்ணாடியை தொகுத்து இருக்கிறீங்கள்.

சாணக்கியனும், இணையவனும் சுருக்கமான முறையில் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்கி இருப்பது மற்றவர்களும் காலக்கண்ணாடியை செய்ய ஊக்குவிக்கும் என நினைக்கின்றேன்.

நன்றிகள்!

நன்றி கலைஞன். நீங்கள் கூறியதுபோல் ஒவ்வொரு காலக்கண்ணாடியும் ஒன்றைவிட இன்னொன்று சிறப்பாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. எம்மால் முடிந்தால் ஏதாவது ஒரு வகையில் திறமைகளை வெளிக்காட்டலாம்.

சுருக்கமாகவும், எளிமையாகவும் தொகுத்து இருக்கிறீங்கள். நல்லா இருக்கு இணையவன்.!

நன்றி ஜெனனி. சுருக்கமாகவும் எளிமையாகவும் செய்ய முயற்சித்ததால்தான் சுலபமாக குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கக் கூடியதாக இருந்தது.

காலக்கண்ணாடி வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

அடுத்த வாரக் காலக் கண்ணாடியை (05-11-2007 முதல் 12-11-2007 வரையிலான) நுணாவிலான் செய்வதாக் கூறியுள்ளார். அவரின் காலக் கண்ணாடி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சாணக்கியன் மற்றும் இணையவன் ஆகியோரின் காலக்கண்ணாடிகள் எளிமையாகவும் சுருக்கமாகவும்அழகாகவும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை அழகாச் சொல்லி இருக்கிறது இணையவனின் காலக்கண்ணாடி. சில காலக்கண்ணாடியினைப்(இணைக்கப்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.