Jump to content

முன்னாள் ராணுவ மேஜர் ஹசித சிறிவர்தனவின் வாக்குமூலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ராணுவ மேஜர் ஹசித சிறிவர்தனவின் வாக்குமூலம்

 

இறுதி யுத்த காலம் அடங்கலாக பல வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்த மேஜரான ஹசித சிறிவர்த்தன கடந்த சில வருடங்களாக மகிந்த, கோத்தா, கமால் குணரட்ண ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். உயிரச்சம் காரணமாக அமெரிக்காவில் மறைந்து வாழும் இவர் அவ்வப்போது காணொளிகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகிறார். 

அண்மையில், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி செவ்வியாளரான சமுதித்தவுடனான இவரது நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளிவந்திருக்கிறது.

வெள்ளைக்கொடி சரணாளிகளைப் படுகொலை செய்தது, மதிவதனி அக்காவின் படுகொலை, பெர்ணான்டோபுள்ளேயின் படுகொலை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இக்காணொளியில் இவர் பேசுகிறார்.

அடிப்படையில் சிங்கள பெளத்தரான இவரது கருத்துக்கள் தமிழருக்கு எதிரானவை. ஆனால் தனது எதிரிகளான மகிந்த கோத்தா போன்றோருக்கு எதிரான இவரது குற்றச்சாட்டுக்களில் எமக்கு நடந்த அவலங்களும் வெளிக்கொணரப்படுவதால் இதனை இணைக்கிறேன்.

சிங்களம் தெரிந்தவர்கள் கேட்டுப்பாருங்கள்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, ரஞ்சித்.

இந்த காணொளியினை உங்களுக்கு நேரம் இருக்கும் போது மொழி பெயர்த்து பதிவிடமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

நன்றி, ரஞ்சித்.

இந்த காணொளியினை உங்களுக்கு நேரம் இருக்கும் போது மொழி பெயர்த்து பதிவிடமுடியுமா?

முடியும், பலரை வருத்தக்கூடிய தகவல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் . அதனால் யோசிக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

முடியும், பலரை வருத்தக்கூடிய தகவல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் . அதனால் யோசிக்கிறேன்.

வேண்டாம், உங்கள் முடிவு சரியாகத்தானிருக்கும் என கருதுகிறேன், இறுதியுத்தம் கொடுமையானது (அனைத்து யுத்தமும் கொடுமையானதுதான்) அதன் வலிகளை தொடர்வதில் அர்த்தம் இல்லைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமுதித்த :  உயிரச்சம் காரணமாக அமெரிக்காவில் அடைக்கலம் கோரியிருக்கிறீர்களா?

ஹசித : இல்லை. ஆனால், நாட்டு மக்களுக்கு நண்மை பயக்கவேண்டும் என்பதற்காக சில காரியங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால், பாதுகாப்பான நாடொன்றில் இருந்து பணியாற்றுகிறேன்.

சமுதித்த :   யுத்தம் முடிவடைந்த பின்னர் சுமார் 19 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டீர்கள், ஏன் இது நடந்தது?

ஹசித : ராணுவத்தில் பலவருடங்கள் பணியாற்றியவன். இதுவரை மக்கள் பார்த்திராத கோணத்திலிருந்து பல உண்மைகளை கொண்டுவருபவன். முன்னால் தளபதி பொன்சேக்காவுக்கெதிரான படுகொலை முயற்சி பற்றி பின்னாள் ராணுவத் தளபதிக்கு தகவல் வழங்கியவன்.

சமுதித்த : சற்றுப் பொறுங்கள், பொன்சேக்காவைக் கொல்ல முயற்சித்தது யார்?

ஹசித : வேறு யாருமல்ல, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராகபக்சதான். ஜப்பானில் பதுங்கியிருந்த முன்னாள் கடற்படை அதிகாரியொருவரை இதற்காக வரவழைத்து சிறையில் வைத்து பொன்சேக்காவைக் கொல்ல கோத்தா திட்டமிட்டார். நான் ஹெயிட்டியில் ஐ நா பாதுகாப்புப் படையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு இந்த தகவல் கிடைத்தது.

சமுதித்த : நீங்கள் ராணுவத்தில் கீழ்நிலை அதிகாரி. உங்களுக்கு இவ்வளவு முக்கியமான தகவல் கிடைத்தது என்று நீங்கள் கூறுவதை நாம் ஏன் நம்ப வேண்டும்?

ஹசித : நான் சொல்வது நம்பகத்தன்மையற்றது என்றால், என்னை எதற்காக ராஜபக்சேக்கள் 19 மாதம் சிறையிலடைத்துவைத்து சித்திரவதை செய்ய வேண்டும்? எதற்காக ஐந்து தடவைகள் என்னை கொல்ல முயற்சிக்க வேண்டும்? யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் புகைப்படத்தை சர்வதேச ஊடகங்களுக்குக் கொண்டுவந்தது நான் தான். யுத்தம் நடந்த அனைத்து இடங்களிலும் நான் இருந்திருக்கிறேன். அங்கு நடந்தவைபற்றிய பூரண அறிவைக் கொண்டிருக்கிறேன். கடைசி 160 கிலோமீட்டர் யுத்தத்தை நான் வந்தே முடித்து வைத்தேன். 

சமுதித்த : நீங்கள்தான் ஏதோ யுத்தத்தை வென்று முடித்த மாதிரி பேசுகிறீர்கள்? ராணுவம் என்று வந்தால், உங்கள் அதிகாரிகளான கமல் குணரட்ண, சவேந்திர சில்வா, கால்லகே, ஜகத் டயஸ் போன்றவர்களின் கட்டளையின்கீழ்த்தான் நீங்கள் யுத்தம் செய்தீர்கள், அதனால்த்தான் யுத்தம் முடிவிற்கு வந்தது. வெறுமனே 160 கிலோமீட்டர் பிடித்தேன், அதைச் செய்தேன் , அதனால்த்தான் யுத்தம் முடிந்தது என்று நீங்கள் எப்படிக் கூறலாம்? தேவையற்ற கதைகளை பேசுவதை விட்டு, உங்களுக்கு பொன்சேக்காவின் கொலை முயற்சிபற்றி எப்படித்தெரியும் என்று கூறுங்கள்?

ஹசித : எனக்கு ராணுவ புலநாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இந்த யுத்தம் சாதாரண முறையில் வெல்லப்பட முடியாதது என்பதை நான் உணர்ந்துகொண்டிருந்தேன். அதற்கான காரணம் இந்த யுத்தத்தின் பின்னால் அரசியல் சூழ்ச்சியொன்று இருந்ததையும், அதனைச் செய்பவர்கள் யாரென்பதனையும் நன்கு தெரிந்திருந்தேன். உங்களுக்கு பிரபாகரனின் மனைவிக்கு நடந்த கதி தெரியுமா? அவரது இறந்த உடலின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியான தகவல்களை நான் வெளியில் கொண்டுவரமுடியும் என்றால், யுத்தம் நடந்த முறை தொடர்பாக எனக்கு தகவல்கள் தெரிந்திருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் அமெரிக்காவில் வைத்து 2010, மார்கழி 25 இல் சவேந்திர சில்வாவிடம் பேசும்போது பொன்சேக்காவைக் கொல்லச் சதி நடக்கிறது என்று கூறினேன். அதைக் கேட்ட அவர், "சும்மாயிரு, அதற்குள் நீ தலையைப் போடாதே" என்று என்னை எச்சரித்தார். நான் அதன் பிறகு இலங்கைக்கு வந்து அன்றைய தளபதி ஜகத் ஜயசூரியவிடம் நான் அறிந்த உண்மைகளைக் கூறும்போது அவர் அச்சப்பட்டார். "உன்னால் எனது வேலைக்கு உலைவைக்கப்போகிறார்கள், உன்னையும் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார். அவர் தளபதியாக வந்த காலத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்புகளை அவர் கொண்டிருந்தார்.  

சமுதித்த : உங்களை யார் கொல்லப்போகிறார்கள் என்று அவர் கூறினாரா? 

ஹசித : வேறு யார், கோத்தாதான். அதுமட்டுமல்லாமல் இன்னும் ஐந்து பேரைக் கொல்லத் திட்டமிருந்தது. சரத் பொன்சேக்கா, சவேந்திர சில்வா, மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன ஆகியோரையும் கொல்லத் திட்டம் தீட்டியிருந்தார்கள். ஜப்பானில் பாதாள உலகக் கோஷ்ட்டிகளுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் கடற்படை அதிகாரியொருவரை கோத்தா நாட்டிற்கு வரவழைத்து இக்கொலைகள் பற்றித் திட்டமிட்டபோது இதனை நான் அறிந்துகொண்டேன். மைத்திரிபால, நிமால், ஜோன் செனிவிரத்ன ஆகிய மூவரும் மகிந்த பிரதமராவதை எதிர்த்தவர்கள். சந்திரிக்கா கட்சியின் தலைவராக இருந்தபொழுது மகிந்த அவரிடமிருந்து பிரதமர் பதவி தனக்கு வேண்டுமென்று பலாத்காரமாக பெற்றுக்கொண்டவர். இதனை சந்திரிக்க பலமுறை சொல்லி அழுதிருக்கிறார். நான் இலங்கையில் இருந்த காலத்தில் ராஜபக்ஷேக்களின் அட்டூழியங்கள் குறித்து புத்தகம் ஒன்றினை வெளியிட்டேன். 

  • Like 5
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதித்த : நீங்கள் தளபதியிடம் இக்கொலைத் திட்டங்கள் பற்றிப் பேசும்போது அவர் என்ன சொன்னா?

ஹசித : இதுபற்றி யாரிடம் பேசவேண்டாம், உன்னுடைய வேலையை மட்டும் நீ பார் என்று கூறினார். ஆனால், நானோ, வேலையைப் பார்க்கமுடியாது, இந்த சூழ்ச்சிகளை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறினேன். உடனே அவர் என்னை ராணுவ பட்டப்படிப்பு முகாமான மின்னேரியாவுக்கு அனுப்பப்போவதாக கூறினார். நானோ, என்னை விலக்கி விடுங்கள், ஆனால் எனது விலகல் கடிதத்தில் ராஜபஷேக்களின் அட்டூழியங்கள் பற்றி நிச்சயம் குறிப்பிடுவேன், எனது விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளும்போது எனது கடிதத்தையும் அவர் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

முடித : சாதாரண கீழ்நிலை அதிகாரியான நீங்கள் உயர் அதிகாரிகளை சந்தித்தீர்கள் என்பதையும், அவர்களுக்கு அறிவுரை கூறீனீர்கள் என்பதையும் எங்களை நம்பச் சொல்கிறீர்களா?

ஹசித : அதுதான் எனது சாமர்த்தியம். எனக்கு எந்த உயரதிகாரியையும் சந்திக்கும் திறமை இருந்தது 59 ஆம் படைப்பிரிவின் தளபதி நந்தன உடவத்த முல்லைத்தீவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த கடுஞ்சமர் ராணுவத்திற்குச் சவாலாக மாறுகிறதே, என்ன செய்யலாம் என்று கேட்டபோது, "சேர், இச்சண்டையினை கஞ்சாவை புகைத்துக்கொண்டு செய்யமுடியாது, நான் சொல்வதுபோல மூன்று பிரிகேட்டுக்களை தனித்தனியாக இறக்கி, கனரக ஆயுதங்களை அனுப்பி அடியுங்கள்" என்று அவரிடம் கூறினேன். நான் சொன்னதுபோல அவர் செய்ததால் 48 கிலோமீட்டர் நீளமான பகுதியை நான் கடுமையான சண்டையின் பிடித்துக்கொண்டோம். அதன் பின்னர் நான் 58 ஆம் படைப்பிரிவிற்குச் சென்றுவிட்டேன். வன்னியின் கடுமையான சண்டைக் களத்திற்கு நான் போக எத்தனித்தபோது பல தளபதிகள் என்னைத் தடுத்தார்கள். போகாதே, போனால் கொல்லப்பட்டுவிடுவாய் என்று கூட என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் பிடிவாதமாகப் போனேன். போய், சவேந்திர சில்வாவின் படையணியுடன் இணைந்துகொண்டே. மன்னாரிலிருந்து முழங்காவில் வரையான வெறும் 40 கிலோமீட்டர்  தூரத்தையே ஒருவருடம், இரு மாத காலம் சண்டையிட்டு பிடித்து வைத்திருந்தார். ஆனால், நான் சென்ற பின்னர், 59 ஆம் படையணியினர் செய்த அதேவகையான தாக்குதல் வியூகங்களை வகுத்து வெறும் இரு வாரங்களில் 120 கிலோமீட்டர்கள் முன்னேறி முல்லைத்தீவைக் கைப்பற்றினோம். 

சமுதித்த : அப்படியானால், உங்களின் திறமையினால் மட்டுமே 120 கிலோமீட்டர்களை வெறும் இரு வாரங்களில் கைப்பற்றினீர்கள் என்று கூறுகிறீர்களா?

ஹசித : ஆம். நிச்சயமாக. எமக்கு முப்படையினர், பொலீஸார், பொதுமக்கள் ஆகிய அனைவரிடமிருந்தும் ஆதரவும், ஆசீரும் இருந்தது. புத்த பெருமானின் நல்லாசியுடன் நாம் அதனைச் செய்துமுடித்தோம்.

சமுத்தித்த : அப்படியானால், யுத்தத்தின் இறுதிக் கணங்களில் நீங்கள் யுத்த களத்தின் இதயப் பகுதியில் இருந்திருக்கிறீர்கள். அங்கே நடந்த அனைத்துச் சம்பவங்களையும் பார்த்திருக்கிறீர்கள். அப்படியானால் அங்கே நடந்ததாகச் சர்வதேசத்தில் எம்மீது முன்வைக்கப்படும் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்களைக் கொன்றது போன்றவற்றை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லவா? 

ஹசித : யுத்தத்தின் இறுதிநாட்களில் அங்கே நடந்த பாரிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேசம் நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. நாட்டு மக்களுக்கும் நடந்தவைபற்றி நன்கு தெரியும். ஆனால், அவர்களை வாய்மூடி, மெளனிகளாக வைத்திருப்பதால் யாரும் பேசுவதில்லை. வெள்ளைக்கொடி சரணடைதல் தொடர்பாக  நாமிருக்கும் முன்னரங்கிற்கு சிலர் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைய வருகிறார்கள் என்று பிரிகேட் மேஜரான எனக்கே தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அதனை எனது பிரிகேட் தளபதிக்கும், பின்னர் 58 ஆவது படையணியின் உயர் தளபதி சவேந்திர சில்வாவுக்கும் தெரியப்படுத்தினேன். நான் தெரியப்படுத்தி சில நிமிடங்களின் பின்னர் எமது முன்னரங்கில் காவலில் இருந்த ராணுவ வீரர்கள் தம்மிடம் சரண்டைந்த பல புலித் தலைவர்கள் உட்பட்ட பலரின் வீடியோக்களை எம்மிடம் வந்து காண்பித்தார்கள். 

சமுதித்த : அப்படி அங்கு சரணடைய வந்திருந்தவர்கள் யார்?

ஹசித்த : நடேசன், புலித்தேவன் ஆகிய தலைவர்களுடன் ஒரு பெரும் அணியே வந்திருந்தது. அவர்களை மட்டுமே என்னால் சரியாக அடையாளம் காண முடிந்தது, ஏனையோரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இவர்களைக் கண்டவுடன், ராணுவத்தை அரசியலுக்காகப் பாவிக்கும் நபரான சவேந்திர சில்வா உடனேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷேக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். அவருடன் மறுமுனையில் பேசிய கோத்தபாய, அவர்கள் அனைவரையும் உடனேயே கொன்றுவிடுங்கள், ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று கூறினார்.

சமுதித்த : கொஞ்சம் பொறுங்கள், வெள்ளைக்கொடியுடன் பல புலிகளின் தலைவர்கள் சரணடைய வந்திருக்கிறார்கள் என்று சவேந்திர சில்வா பாதுகாப்புச் செயலாளர் கொத்தாபயவுடன் கூறியபோது, அவர்களை அனைவரையும் கொல்லுங்கள் என்று அவர் கூறினார், அப்படித்தானே?

ஹசித : ஆம், நிச்சயமாக. கோத்தாதான் அவர்களைக் கொல்லும்படி சவேந்திரவிடம் கூறினார்.  அங்கிருந்த ஏனைய படை உயரதிகாரிகள் மெளனித்திருக்க, நடக்கப்போவதை அறிந்துகொண்ட நான் உடனேயே சவேந்திர சில்வாவிடம், " சேர், வென்றுவரும் யுத்தத்தை எதிர்த்திசையில் திருப்ப வேண்டாம். இறைச்சிக்காகக் கொல்லக் கொண்டுபோகும் மாட்டையே விடுவிக்கும் நாட்டில் வசிக்கும் நாம், எம்மிடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களைக் கொல்ல முடியாது. அது தர்மம் அல்ல" என்று அவருடன் வாதித்தேன் . கடும் சினங்கொண்ட அவர், "அப்பாலே போடா" என்று என்னை விரட்டினார். பின்னர் இரு மணித்தியாலங்கள் கழித்து, "அவர்களை இங்கே இழுத்து வா " என்னிடம் கூறினார். நான் உடனடியாக அவர்களை அழைத்துவர முன்னரங்கிற்குப் போனேன், ஆனால் அங்கே அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். இந்த தகவல்களையெல்லாம் நான் திரட்டிவைக்கத் தொடங்கினேன். 

46 நிமிட நேர காணொளியில் வெறும் 18 நிமிடங்களையே இதுவரை மொழிபெயர்த்திருக்கிறேன். சிறு வேலையாக வெளியில் போகிறேன், மாலை தொடரலாம்.  இந்த அதிகாரி சிங்கள பெளத்தத்தின் காவலனாக தன்னைப் பார்ப்பவன். ஆதலால் இவன் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று இல்லை.

Edited by ரஞ்சித்
  • Like 4
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

46 நிமிட நேர காணொளியில் வெறும் 18 நிமிடங்களையே இதுவரை மொழிபெயர்த்திருக்கிறேன். சிறு வேலையாக வெளியில் போகிறேன், மாலை தொடரலாம்.  இந்த அதிகாரி சிங்கள பெளத்தத்தின் காவலனாக தன்னைப் பார்ப்பவன். ஆதலால் இவன் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று இல்லை.

எங்கோ சில புள்ளிகளை இணைத்து யாரையோ பலிக்கடாவாக்கிவிட்டு நகருவதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். போர்க்குற்றம் நடைபெற்றது. அதற்கான தண்டனை கொடுத்தாயிற்று. நீங்கள் சேர்ந்து வாழலாம் என்ற இலக்குக்கான பரப்புரைக்கான முன் ஆயத்தம். தமிழினத்தினது இன அழிப்பை ஏற்க மறுக்கும் உலக வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்படியே பொருந்திப்போகும் செயற்பாடாக இருக்கிறது இந்தப்போட்டியின் இதுவரையான மொழிபெயர்ப்பு. மிகுதியையும் பார்ப்போம். ரஞ்சித் அவர்களே, உங்கள் நேரத்திற்கும் முயற்ச்சிக்கும் நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரத்தை ஒதுக்கி, மொழி பெயர்ப்பு செய்தமைக்கு நன்றி ரஞ்சித். 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மொழிபெயர்ப்பிற்கு மிக்க நன்றி ரஞ்சித் ஐயனே... தொடர்ந்து இணையுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹசித்த : எமது ராணுவத்திற்கெதிரான போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்தில் வெளிவந்தபோது, நான் சிலருடன் இதுதொடர்பாகப் பேசியிருந்தேன். எம்மீது மிகப்பலமான அழுத்தத்துடனான குறச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சமுடித்த : சரத் பொன்சேக்கா ஒரு முறை ராணுவத்தினர் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களைக் கொன்றது உண்மைதான் என்று பேசியது குறித்து உங்கள் கருத்தென்ன?

ஹசித : அவர் கூறியது உண்மைதான். முதலில் அப்படி நடந்ததை ஏற்றுக்கொண்ட அவர், பின்னர் அரசியல் அழுத்தங்க்களால் அப்படி நடக்கவில்லையென்று கூறியிருந்தார். பிரெட்ரிக்கா ஜான்ஸிடம் ராணுவத்தினர் சரணடைந்தவர்களைக் கொன்றதாகக் கூறியபோது, ஜே வி பி யினர், ராணுவத்தை பொன்சேக்கா காட்டிக்கொடுத்துவிட்டார், நாட்டிற்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று போராடவும், பொன்சேக்கா பயந்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் தான் கூறியதையே இல்லையென்று சொல்லவேண்டியதாயிற்று. எமது ராணுவத்தினர் இறுதி சில நாட்களில் குறைந்தது 40,000 பொதுமக்களைக் கொன்றதாக பாரிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. ஆனால், அதுபற்றி விசாரித்த நான் , அது நடந்ததா இல்லையா என்பதை தீர்க்கமாகக் கண்டறிந்தேன். இறுதி நாளில் வெள்ள முள்ளிவாய்க்காலில் பாரிய தீயொன்று உருவாக்கப்பட்டிருந்தது. செய்மதியூடாகக் கூட அதை நாம் பார்த்தோம். ராணுவத்தினர் மக்களைக் கொன்று எரிக்கிறார்கள் என்று பிரச்சாரமும் செய்யப்பட்டது. ஆனால், நடந்தது என்னவெனில் பயங்கரவாதிகள் தம்மிடமிருந்த ஆயுதங்கள், குண்டுகள், எரிபொருட்கள் நிரம்பிய வாகனங்கள் எம்மிடம் அகப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அவற்றைத் தாங்களே தீயிட்டார்கள். நான் வெறும் 30 வயோதிபர்களின் உடல்களை மட்டுமே அங்கு கண்டேன். என்னால் இவற்றையெல்லாம் நிழற்படமாகவும் ஒளிப்படமாகவும் எடுக்க முடிந்தது. ஆகவேதான் 40,000 பேரைக் கொன்றோம் என்கிற குற்றச்சாட்டிலிருந்து ராணுவத்தை என்னால் காப்பாற்ற முடிந்தது.

சமுடித்த : அப்படியானால் சரத் பொன்சேக்கா கூறியதுபோல வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்களை ராணுவம் சுட்டுக் கொன்றது என்பது சரிதானே?

ஹசித்த : இல்லை, அவர்களைச் சுட்டுக் கொல்லவில்லை. அவர்களைக் கொல்லுங்கள் என்கிற உத்தரவு வந்தவுடன், அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினரும் அதிகாரிகளும் இருந்தார்கள். ஆகவே, ராணுவத்தினர் சரணடைந்த புலிகளை அடித்தே கொன்றார்கள். சிலர் உடனேயே மரணிக்க, இன்னும் சில ரெண்டு மூன்று மணித்தியாலங்கள் வரை அனுங்கியவாறே கிடந்து இறந்தார்கள். இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கையர்களாகிய நாம் கூர்ந்து அவதானிப்பது தேவையானது. முதலில் உண்மையை ஒப்புக்கொண்ட பொன்சேக்கா பின்னர் அச்சத்தில் இல்லையென்று கூறினாலும்கூட, மீண்டும் தேர்தல் வந்தபோது அப்படி நடந்தது உண்மைதான் என்று கூறினாரே? ஆகவே, அவருக்கும் நடந்த இந்தப் படுகொலைகள் பற்றி யாரோ முழுதுமாக அறியத்தந்திருக்கிறார்கள். 

சமுடித்த : அப்படியானால் பிரபாகரனுக்கும் அவரது பாரியாருக்கும் என்ன நடந்தது? 

ஹசித்த : பிரபாகரனின் மனைவியின் உயிரற்ற உடலை நானே புகைப்படமாக அன்று பதிந்து வைத்திருந்தேன். அதனையே 13 வருடங்கள் கழிந்து தற்போது சர்வதேசத்திற்கு வெளியிட்டிருக்கிறேன். உண்மைகளை வெளியிட வேண்டிய காலம் வந்துவிட்டது. யுத்தத்தை யார் சரியாகச் செய்தது என்பது குறித்து மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிரபாகரனின் மனைவி இறந்துகிடந்த இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட பின், அதனை எனது மடிக் கண்ணியில் சேமித்து வைக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, கொல்லப்பட்டது அவர்தான் என்பதனை உறுதிப்படுத்தினேன். அவரது உடல் 57 ஆம் படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள்ளேயே கிடந்தது. ஆகவே இதுகுறித்து சவேந்திர சில்வாவிடம் நான் தெரிவித்தபோது, மறுநாள் காலைவரை இதனை வெளியிடவேண்டாம் அன்று கட்டளையிட்டார். ஆகவே, எனது உயர் அதிகாரியின் கட்டளையினைத் தட்டமுடியாமல், மறுநாள் காலையிலேயே கமல் குணரட்ணவிடம் பிரபாகரனின் மனைவியின் உடல் கண்டெடுக்கப்பட்டதுபற்றிக் கூறினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமுடித : அப்போ பிரபாகரனுக்கு என்ன நடந்தது ?

ஹசித்த : உங்களுக்கு அவரது மரணம் பற்றித் தெரிந்திருக்காவிட்டாலும்கூட, உலகிற்கு நன்றாகவே தெரியும். பிரபாகரனின் இளைய மகனும் இன்னும் சிலரும் 12 வி அர் எனும் இடத்திற்குச் சரணடைய வந்திருந்தார்கள். 57 ஆம் படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பிரபாகரனின் இளைய மகன் தனது அப்பா இறந்துவிட்டார் என்று அங்கிருந்த ராணுவத்தினரிடம் கூறினார். அவர் உயிருடன் இருந்த புகைப்படங்களையும், சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் எடுத்த புகைப்படங்களையும் ராணுவத்தினரே எடுத்தனர். பிரபாகரனையும் கொன்று அவரது மகனையும் கொன்றது ராணுவத்தினரே. ஆனால், இன்று இன அரசியல் பேசும் ஜே வி பி யினர் ரோகண விஜேவீர கொல்லப்பட்டதைக் கண்டிக்கிறார்கள், ஆனால் அவரது மகனோ இன்று வெளிப்படையாகவே அரசியலில் ஈடுபட்டு வருகிறார்

சமுடித : நான் கேட்கும் கேள்விக்கு நேரடியான பதிலைக் கூறுங்கள். ராணுவத்தினரிடம் சரணடைய வந்த பிரபாகரனின் இளைய மகனை உங்களின் பங்கர் ஒன்றிற்குள் வைத்திருந்துவிட்டுச் சுட்டுக் கொன்றீர்கள், அப்படித்தானே?

ஹசித்த : நான் கொல்லவில்லை. ஆனால் கொன்றது 57 ஆவது படைப்பிரிவினர். நான் வெளிநாட்டில் இருக்கும்போது தம்மிடம் இருந்த புகைப்படங்களைக் காட்டி பாலச்சந்திரனைக் கொன்றதில் உங்கள் பங்கு என்ன என்று கேட்டார்கள், நான் அவர்களிடம் தெளிவாகக் கூறினேன், இது எனது படைப்பிரிவல்ல, கமால் குணரட்ணவின் 57 ஆவது படைப்பிரிவே அவரைக் கொன்றது என்று. ஆனால், பிரபாகரன் கொல்லப்பட்ட விடயம் பாலச்சந்திரன் மூலமே எமக்குத் தெரியவந்தது. ஆகவே, அச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட களப்புப் பகுதிக்குச் சென்றபோது அவரது உடலை ராணுவத்தினர் வெளியே கொண்டுவந்துகொண்டிருந்தனர். எம்மிடமிருந்த பிரபாகரனின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கொல்லப்பட்டுக் கிடந்தது அவர்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். அவர் காலை 1 அல்லது 2 மணிக்கு கொல்லப்பட்டிருக்கலாம். அவரை நாம் கண்டெடுத்தது காலை 5 மணி அள்வில்த்தான். அவரது ஒரு கை நீரில் கிடந்து வெண்ணிறமாக உப்பியிருந்தது. தலையில் சூடு பட்டு மூளை சிதறியிருந்தது. சிங்களத்தில் அடிக்கடி பாவிக்கப்படும் "தலை ஏழு எட்டுத் துண்டுகளாகச் சிதறி கொல்வோம்" என்று நாம் கூறுவதில்லையா? அவ்வாறே அவர் இறந்து கிடந்தார். அவரைக் கொன்றது யாரென்று தெரியாது, அவர் கொல்லப்பட்டதைப் பார்த்தது ஒருவருமில்லை, ஆனால் தலை மட்டும் சிதறிக் கிடந்தது

சமுடித்த : சரி, அப்படியானால் பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது என்பதுபற்றிய தகவல்களை நீங்களை வைத்திருக்கிறீர்களா?  ஏனென்றால் இன்றுவரை பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி ராணுவத்தினரிடம் எந்தத் தகவலும் இல்லையென்று சொல்கிறார்கள்

ஹசித்த : பொட்டு அம்மான் கொழும்பில்த்தானே தனது விளையாட்டைக் காட்டிக்கொண்டிருந்தார். மிக விரைவில் பொட்டு அம்மான் யாரென்பதை நான் மக்களுக்குக் காட்டுவேன்

சமுடித்த : என்ன சொல்கிறீர்கள்? பொட்டு அம்மான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று கூறுகிறீர்களா

ஹசித்த : பொட்டு அம்மான் என்பவர் நிழல் போன்ற ஒருவர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் தொடர்பாக என்னிடம் நிறையவே தகவல்கள் இருக்கின்றன. அதனால்த்தான் என்னை நெடுங்காலம் சிறையில் அடைத்துவைக்க ராஜபக்ஷேக்களால் முடியாமல்ப் போனது. மகிந்த ராஜபக்ஷவின் வாகனத்தில் புலிகள் கொழும்பிற்குக் குண்டுகளை எடுத்து வந்த தகவல்கள் என்னிடம் இருக்கின்றன

சமுடித்த : என்னது, மகிந்தவின் வாகனத்தில் புலிகள் குண்டுகளை கொழும்பிற்குக் கொண்டுவந்தார்களா

ஹசித்த : மகிந்த ராஜபக்ஷேக்கள் 1987 இலிருந்து புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருபவர்கள். 2005 தேர்தல்களுக்கு முன்னர் 200 மில்லியன்களையும், தேர்தலின் பின் பில்லியன்களையும் புலிகளுக்கு மகிந்த வழங்கினார் என்று டிரான் அலஸ் மற்றும் சிறிப்பதி சூரியராச்சி ஆகியோர் பாராளுமன்றத்திலேயே வெளிப்படையாகவே கூறியிருந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா? 2005 தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் நான் காங்கேசன்துறையில் கடமையில் இருந்தேன். ஒரு நாள் அதிகாலை 1 மணியளவில் யாழ்ப்பாணத்திற்குப் போகலாம் என்று எண்ணி நான் சென்றபோது கொழும்பிலிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்ட பல சிங்களவர்கள் யாழ்ப்பாண நகரில் தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்ததைக் கண்டேன். அதில் சிலர் எனது வீட்டின் அருகில் குடியிருந்த சுதந்திரக் கட்சி இளைஞர் அணியின் செயலாளர் மற்றும் அவரது நண்பர்கள். ஆகவே, இது ஒரு அரசியல் சூழ்ச்சி என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? உண்மையாகவே 1978 இல்த்தான் புலிகள் தோற்றம் பெற்றார்கள். சிறிமாவும் இந்திரா காந்தியும் செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கை ஒன்றின் மூலம் 10,000 தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சி வழங்கியது. அதே காலத்திலேயே நாமும் இந்தியாவில் பயிற்சிக்காகப் போயிருந்தோம். சில இந்திய அதிகாரிகள் என்னிடம் வந்து நீங்கள் தமிழா அல்லது சிங்களமா என்று கூடக் கேட்டார்கள்

சமுடித்த : உங்களது சரித்திரக் கதையினைப் பேசிக்கொண்டிருக்க எம்மிடம் நேரம் இல்லை. நான் கேட்ட கேள்விக்கு பதில் தாருங்கள், மகிந்தவின் வாகனத்தில் புலிகள் கொழும்பிற்கு ஆயுதம் கொண்டுவந்தது உண்மையா இல்லையா?

ஹசித்த : ஆயுதங்கள் இல்லை, குண்டுகள். கொழும்பில் வெடித்த அனைத்துக் குண்டுகளின் பின்னாலும் மகிந்தவே இருந்தார்

சமுடித : என்னது, கொழும்பில் நடந்த அனைத்துக் குண்டுவெடிப்புகளையும் செய்தது மகிந்தவா? அப்படியானால் மத்தியவங்கிக் குண்டுத்தாக்குதல், ரயில், பஸ் குண்டுத்தாக்குதல், கோத்தா மீதான குண்டுத்தாக்குதல், இவையெல்லாவற்றையும் செய்தது மகிந்தவா?

ஹசித்த : அவரேதான். இல்லாவிட்டால், கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் சரத் பொன்சேக்கா மீது புலிகளால் எப்படித் தாக்குதல் நடத்த முடிந்தது? ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அண்மைய காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தினூடாக கோத்தாவையும் மகிந்தவையும் மக்கள் கலைத்தபோது, புலம்பெயர் தமிழர் தாமே அவர்களைக் கலைத்ததாக உரிமை கோரியிருந்தனர். இதற்கான காரணம் மகிந்தவைக் காப்பாற்ற, இலங்கையில் மீண்டும் இனவாத சிக்கலை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். ராஜபக்ஷேக்கள் தடுமாறும் ஒவ்வொரு தருணத்திலும் புலிகளே அவர்களைக் காப்பற்றி வருகின்றனர்

சமுடித : அப்படியானால், மத்திய வங்கி, கொலொண்ணாவை, கோத்தா மீதான தாக்குதல், விமான நிலையத்தின் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு எல்லாமே புலிகளால் அன்றி, ராஜபக்ஷேக்களினால் நடத்தப்பட்டவை  என்று கூறுகிறீர்களா?

ஹசித்த : ராஜபக்ஷேக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டவை என்று கூறுகிறேன்

சமுடித : அப்படியானால், ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே யின் மீதான குண்டுத்தாக்குதலை யார் செய்தது?

ஹசித்த : ஜெயராஜ் மீதான தாக்குதல் மட்டுமல்ல, சந்திரிக்காவைச் சுற்றியிருந்த அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக மகிந்த கொன்றார். சந்திரிக்காவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மகிந்த விஜேசேகர, தாமு தசநாயக்க, லக்ஷ்மன் கதிர்காமர்  ஆகியோர் உட்பட பலரை புலிகளின் உதவியுடன் மகிந்த கொன்றுதள்ளினார்

சமுடித்த : பல அரசியல்ப் படுகொலைகளை புலிகள் நடத்தியிருந்தாலும்கூட, அவற்றின் பின்னால் மகிந்தவே இருந்தார் என்று நீங்கள் கூற வருகிறீர்களா?

ஹசித்த : நிச்சயமாக. அதனால்த்தானே 2005 இல் அவர் புலிகளுக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்கியிருந்தார்

சமுடித்த : நீங்கள் கூறுவதை என்னால் சிறிதும் நம்ப முடியவில்லையே? புலிகளுக்கும் மகிந்தவுக்கும் கொடுக்கல் வாங்கள் இருந்ததென்றால், 2009 இல் பிரபாகரனையும், அவரது பாரியாரையும், மகன்களையும், இன்னும் பலரையும் கொன்று யுத்தத்தை முடித்துவைக்க வேண்டிய தேவை மகிந்தவுக்கு ஏன் வந்தது

ஹசித்த : நீங்கள் மகிந்த யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தார் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. என்னிடம் இவை எல்லாவற்றிற்குமான தகவல்கள் இருக்கின்றன. புரபாகரனின் மனைவியின் உடலை 13 வருடங்களின் பின்னால் என்னால் வெளியிட முடிந்ததென்றால், இன்னும் பல விடயங்களையும் நான் மிக விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமுடித : சரி, அப்படியானால் லசந்த விக்கிரமதுங்க, பிரகதீத் எக்னெலிகொட ஆகியோரைக் கொன்றது யாரென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?

ஹசித்த : நிச்சயமாகத் தெரியும். அவரைக் கொன்றது ஒரு ஓய்வுபெற்ற பொலீஸ் அதிகாரியும் அவரது உதவியாளர்களான இரு ராணுவத்தினரும் தான். கோத்தாவின் உத்தரவின் பேரிலேயே இதனைச் செய்தார்கள். அவர்களின் கொமேர்ஷல் வங்கிக் கணக்கிற்கு 20 லட்சம் ரூபாய்களை கோத்தா வைப்பிலிட்டார் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே? இவரின் தலைமையிலேயே வெள்ளைவானில் பல ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்று கொன்றார்கள். மகிந்தவின் மிக நெருக்கமான உறவினரான பெண்ணை அந்த பொலீஸ் அதிகாரி மணம் முடித்திருந்தார். 

சமுடித்த : சரி, லசந்தவைக் கொன்றவர்கள இப்போது எங்கே? அல்லது எக்னெலிகொடவை என்ன செய்தார்கள் என்றாவது தெரியுமா?

ஹசித்த : லசந்தவைக் கொன்றவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று கூறுவதற்கு நான் மந்திரவாதியல்ல. அதுபோல எக்னெலிகொடவைக் கொன்றது யாரென்று தனக்குத் தெரியும் என்று மகிந்தவே பாராளுமன்றத்தில் கூறியிருந்தாரே? அவரிடமே அதனைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு : இந்த அதிகாரியின் தகவல்கள் குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கின்றன. இந்தப் பேட்டியின் பிற்பகுதியில் பெளத்த மதம் இலங்கையில் தோன்றியதற்கான சாட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும், புத்தபிரான் இந்தியாவில் இல்லாமல் இங்கேயே பிறந்தார் என்பதற்குத் தகவல் உள்ளதாகவும் கூறுகிறான். ஆகவே, இவன் சொல்வதை முழுதுமாக நம்பமுடியாது. ஆனால், பலருக்கும் தெரிந்த சில விடயங்களை நாம் கேள்விப்பட்டவாறே கூறுகிறான். இதனை நம்புவதும், விடுவதும் உங்களின் விருப்பம். இவனது பேட்டியை முழுதுமாகக் கேட்ட பின்னர் எனக்கே இவனை நம்புவது கடிணமாக இருக்கிறது.

நன்றி

  • Like 2
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அரசியல்வாதி ஆக ஏதோ எத்தனிக்கிறார் போலத் தெரிகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில எதுவுமே புதுக்கதை இல்லை.

சகலமும், முன்னரே தெரிந்த தகவல்கள். சில வேலை சிங்களவருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டருக்கலாம்.

யூரியூப்பில வீயுவைக் கூட்டி காசு பார்க்க அவிச்சு இறக்கிறார் போல தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 14/11/2022 at 02:11, ரஞ்சித் said:

சமுடித்த : அப்படியானால் பிரபாகரனுக்கும் அவரது பாரியாருக்கும் என்ன நடந்தது? 

ஹசித்த : பிரபாகரனின் மனைவியின் உயிரற்ற உடலை நானே புகைப்படமாக அன்று பதிந்து வைத்திருந்தேன். அதனையே 13 வருடங்கள் கழிந்து தற்போது சர்வதேசத்திற்கு வெளியிட்டிருக்கிறேன். 

இவர் வெளியிட்ட படிமம் எங்கே கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2022 at 00:41, நன்னிச் சோழன் said:

இவர் வெளியிட்ட படிமம் எங்கே கிடைக்கும்?

ஹசித்தவின் மடிக்கணிணியில்தான்!

இவர் பல புருடாக்களை விட்டு பேய்காட்டப் பார்க்கின்றார்.

ரஞ்சித், மினக்கெட்டு மொழிபெயர்ப்பு செய்தமைக்கு நன்றிகள். 🙏🏽

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, கிருபன் said:

ஹசித்தவின் மடிக்கணிணியில்தான்!

இவர் பல புருடாக்களை விட்டு பேய்காட்டப் பார்க்கின்றார்.

😂🤣🤣

நன்றி.

இவனிட்டை படிமங்கள் எல்லாம் இருக்குமென்டு நான் நம்பேலை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.