Jump to content

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

 

May be a cartoon

 

May be a cartoon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of text
 
314735504_168399675797486_7911537874135759929_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=egaXbdT0Tu0AX-kF-Rb&_nc_oc=AQnGc7tKjB9O0qm7XTFx631pyH3fPaQ7zfZ5AVYDRTlUDjS4sBxSOgQ8eBbf6CiEgnY&_nc_ht=scontent-frt3-1.xx&oh=00_AfAg8L-TkIg9n0F3-jJhAH6xa3I4MCsraWmD8Kf2_L_xeg&oe=637D1CE6
 
 
இலங்கையின் வரவு செலவு திட்டம் என்பது ஒரு சம்பிரதாய சடங்கு. அதன் மூலம் நாடும் மக்களும் எந்த முன்னேற்றத்தையும் எந்த காலத்திலும் கண்டதில்லை என்பது தான் வரலாறு.
 
இதுவரை இலங்கை 77 வரவு செலவு திட்டங்களை சமர்ப்பித்து விட்டது . அதில் எதுவும் வரவு திட்டம் அல்ல யாவும் செலவு திட்டம் தான். முதன் முதலாக 1949 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடு செய்ய வெளிநாட்டில் 60 ஆயிரம் டொலரை இலங்கை கடன் வாங்கியது.
 
அன்றிலிருந்து இன்று வரை கடன் வாங்கியே தனது அரச செலவீன துண்டுவிழும் தொகையை ஈடு செய்து வருகின்றது. இப்போது 60 பில்லியன் டொலர் வரை நாடு கடன்.
 
76 முறை தோற்றுபோன ஒருவன் 77 ஆவது தடவை வெற்றி பெறுவான் என நம்புவதற்கு மக்கள் அடி முட்டாள்கள் அல்ல.
 
ஆம் கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்
மொத்த அரச செலவீனம் 5.2 ரில்லியன், உத்தேச வருமானம் 2.2 ரில்லியன். துண்டு விழும் தொகை 03 ரில்லியன்.
 
ஆம் இந்த 03 ரில்லியனும் கடன் தான் வாங்கவேண்டும். இதில் 05 பில்லியன் டொலர் வரை வெளிநாட்டு கடனுக்கான வட்டி வருகின்றது. 2022 இந்த வருடம் வெளிநாடுகளில் வாங்கிய கடன் 08 பில்லியன் டொலரை கடந்திருக்கும். இந்தியா மட்டும் இந்தவருடம் 04 பில்லியன் டொலரை கடனாக கொடுத்துள்ளது. சீனாவிடம் 03 பில்லியன் டொலரிற்கு மேல் இந்த வருடம் கடன் வாங்கப்பட்டுள்ளது.
 
இந்த வருடம் அச்சடித்த பணம் 02 ரில்லியனுக்கு அண்மையாக இருக்கும். திரு ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக இருக்கும் போது 01 ரில்லியன் அதாவது ஒரு இலட்சம் கோடி ரூபா அச்சிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
 
அடுத்த வருடம் 2023 இற்கான வரவு செலவு திட்டம் ஐனாதிபதி விக்கிரமசிங்காவால் 14.11.2022 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
 
அதில் 2023 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனாம் 7.8 ரில்லியன். உத்தேச வருமானம் 3.4 ரில்லியன். துண்டு விழும் தொகை 4.4 ரில்லியன். 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு 1.4 ரில்லியன் வரை அதிகமான செலவீனம் ஏற்படுகிறது.
 
இப்போது இந்த துண்டு விழும் தொகையை எப்பாடு பட்டாவது வெளிநாடுகளிடம் கடன் வாங்க வேண்டும். இல்லையேல் அரசிடம் பணம் இருக்காது. அப்படி ஆயின் அரச செலவீனங்களை செய்வதற்கு பணத்தை அச்சடிக்கவேண்டும். 4.9 ரில்லியன் ரூபா என்பது 4.9 இலட்சம் கோடி ரூபா.
 
ஒரு மாதம் நாற்பது ஆயிரத்து எண்நூற்று முப்பத்து மூன்று கோடி ( 40, 833 கோடி ) ரூபா பற்றாக்குறை. அடுத்த வருடம் 2023 ஒரு நாளிற்கான அரச செலவீன பற்றாக்குறை ஆயிரத்தி முன்நூற்று அறுபத்து ஒரு கோடி ( 1361 கோடி ) ரூபா.
 
இப்போது இரண்டு தெரிவுகள் தான் இருக்கிறது. ஒன்று வெளிநாடுகளிடம் கடன் வாங்குவது அல்லது பணத்தை அச்சிடுவது.
 
இவ்வளவு தொகை பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் அதிகரிக்கும் பொருட்கள் விலை பலமடங்கு உயரும். மக்கள் வாழ வழியின்றி போராட்டம் செய்வார்கள் இந்த வருடம் இப்படி தான் ராஐபக்சா சாம்ராட்சியம் கவிழ்ந்தது.
 
அடுத்த வருடம் இலங்கைக்கு கடன் கொடுக்க எந்த நாடும் இல்லை. 74 வருடங்களாக கடனில் மூழ்கி கொண்டிருக்கும் இலங்கை எனும் கப்பலை ஒரே நாளில் தூக்கி நிறுத்த கடவுளாலும் முடியாது.
 
இப்போது தந்தை செல்வா எமக்கு ஞாபகத்திற்கு வருகிறார்.அவர் அன்று தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றார். இன்றோ இலங்கை முழுவதையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனும் நிலை வந்துள்ளது.
 
இங்கு இழப்பதற்கு தமிழ் மக்களிடம் எதுவும் இல்லை. தமிழ் மக்கள் இந்த நாட்டின் இறக்குமதியாளர்களோ , ஏற்றுமதியாளர்களோ அல்ல. சிங்கள மக்களே பெருமளவு இறக்குமதிகளையும் , ஏற்றுமதிகளையும் செய்கின்றனர். அன்று இலங்கைதீவில் ஒரு இனத்தை மோட்டுத்தனமாக பகைத்துக்கொண்டு அவர்களின் பொருளாதார கட்டமைப்புக்கள் மீது தொடர்ச்சியாக இனகலவரத்தை ( 1956, 1983 ) ஏவி விட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழித்ததன் பலனை இன்று சிங்கள தேசமே சுமக்கின்றது.
 
அதற்கு பின் தொடர்ச்சியாக 40 வருடங்களாக தமிழ் மக்களின் அரச செலவீனத்தையும் சிங்கள மக்களே சுமக்கின்றனர். இந்த சுமையை தாங்கும் தகுதி நிலையின் இறுதி இடத்தில் நிற்கும் சிங்கள மக்களும் சிங்கள தேசமும் ஒரு நாள் சினம் கொண்டு எழும் அந்த நாள் தொலைவில் இல்லை. அந்த சினம் இலங்கைதீவை இதுவரை ஆண்ட சிஸ்ரத்தின் மீது சீறி பாயும் என்பது திண்ணம்.
 
முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் கூறியது போல ரணில் விக்கிரமசிங்கா தோல்வியடைவாராக இருந்தால் அது இலங்கை தீவின் அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வி யாக இருக்காது. அது இலங்கை ஒரு தேசமாக இருத்தலின் தோல்வியாகவே அமையும்..
 
ஆம் அதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் இலங்கைதீவின் இன முரண்பாடு தீர்க்கப்பட்டு தமிழ் மக்கள் சமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பவில்லையேல் இலங்கை தீவு இரு தேசங்களாகவோ ஏன் இரு நாடுகளாகவோ சிதறி போவதை யாராலும் தடுக்கமுடியாது.
 
இது 74 வருட வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் ஆகும். அதனால் தான் என்னவோ திருவாளர் விக்கிரமசிங்கா 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன் தமிழ் மக்களின்
இன பிரச்சினைக்கு தீர்வை வழங்குவேன் என பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
 
திரு ரணில் விக்கிரமசிங்கா இலங்கை அரசியல் வாதிகளுடன் ஒப்பிடும்போது சிறந்த அரசியல் இராஐதந்திரி, சிறந்த பொருளாதார நிபுணர் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும் அவர் பௌத்த சிங்கள பேரினவாத சகதிக்குள் இருந்து வெளியே எழுந்து வராதவரை இலங்கை தீவில் எந்த அதிசயமும் நிகழ்ந்து விடப் போவதில்லை.
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.