Jump to content

கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே: தமிழ்நாட்டின் பகுதிகள் பறிபோகும் என எல்லையோரத் தமிழர்கள் அச்சம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே: தமிழ்நாட்டின் பகுதிகள் பறிபோகும் என எல்லையோரத் தமிழர்கள் அச்சம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பி.சுதாகர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கேரள முதல்வர் பினராயி விஜயன்

 

படக்குறிப்பு,

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநில அரசு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்த மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரீ சர்வேவை தொடங்கியது. கேரள மாநில அரசு நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால், தமிழகம் கிட்டத்தட்ட சுமார் 1000 சதுர கிலோமீட்டர் வரையிலான பரப்பை கேரளாவிடம் இழக்கும் அபாயம் உள்ளதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரனை சந்தித்து இதுதொடர்பான ஆவணங்களை அளித்தனர்.

 

கேரளா அரசு 14 மாவட்டங்களிலுள்ள 200 கிராமங்களில் டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் இடங்களை அறிவித்திருந்தது. இந்த சர்வே பணியில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள், 4 வருடங்களில் தொடர்ச்சியாக பணி செய்து முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

 

இதனால் தமிழகத்தை ஒட்டியிருக்கும் கேரளத்தின் 7 மாவட்டங்களிலுள்ள, 15 தாலுக்காக்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேனி மாவட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று தலைமைச்செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தமிழக வருவாய்த்துறை செயலாளர் மற்றும் நில அளவைத் துறை செயலாளர் ஆகியோருடன் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. தமிழக எல்லையோரம் கேரளாவில் உள்ள கட்டக்கடை நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு , புனலூர் கோணி , பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம், பாலக்காடு, மன்னார்காடு, சித்தூர், நிலம்பூர், வைத்திரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய 15 தாலுகாக்களில் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தி வைக்க கேரள மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த உரையாடலில், ஜமீன் பட்டா அடிப்படையிலும், 1956 மொழிவழி பிரிவினை கமிட்டி கொடுத்த நில வரைவியல் அடிப்படையிலும் அளவீடு நடத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழக கேரள எல்லை முறையாக வரையறை செய்யப்பட வேண்டும் என்று சொன்னதையும் வருவாய்த்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர். இரண்டொரு நாட்களில் வருவாய்த் துறை மற்றும் சர்வே துறை சார்ந்த துணை செயலாளர் மட்டத்திலான இரண்டு அதிகாரிகள் தேனிக்கு வரவிருக்கிறார்கள். அவர்களோடு எங்கள் சங்க நிர்வாகிகளையும் இணைத்துக் கொள்ள அமைச்சர் சொல்லியுள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

 

எல்லையோரத் தமிழர்களின் அச்சம் என்ன? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் சொல்வதென்ன?

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருஙகிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசினார்.

தமிழக-கேரள எல்லையையே அளவிட்டு முழுமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மறு அளவீடு முழுமை பெறும். மாநில எல்லையை முறையாக அளவீடு செய்யாமல், எந்த அடிப்படையில் வருவாய் நிலங்களை கேரள மாநில அரசு மறு அளவீடு செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

1956 இல் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக கேரள எல்லைகள் பிரிக்கப்படவில்லை. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாகாணங்களுக்கும், தமிழகத்திற்கும் எந்த முரணும் இல்லை. அதனால் எல்லைகள் பிரிக்கப்படவில்லை என்றார்.

பசல் அலி தலைமையிலான கமிஷன் 1956 மொழிவாரியாக மாநில எல்லைகளை பிரிக்க சொன்னது. ஆனால் முறையாக, கமிட்டி கொடுத்த வரையறையின் அடிப்படையில் 'தமிழக கேரளா எல்லைகள்' பிரிக்கப்படவில்லை எனவும் அன்வர் பாலசிங்கம் சுட்டிகாட்டினார்.

தமிழக கேரள எல்லையிலுள்ள 822 கிலோ மீட்டர் தூர எல்லையில் பாதியைக்கூட இதுவரை இரு மாநில அரசுகளும் அளக்கவில்லை.

கேரளாவின் 15 தாலுக்காக்களில், இந்த டிஜிட்டல் ரீ சர்வே செய்யப்பட்டால், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களிலுள்ள மிகப்பெரிய நிலபரப்புகளை தமிழகம் இழப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

உதாரணமாக 2017ல் உத்தமபாளையம் கோட்டாட்சியர் மற்றும் தேவிகுளம் சப் கலெக்டர் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு சர்வேயில், கம்பம் மெட்டில் உள்ள கேரள போலீஸ் சோதனைச்சாவடி தமிழக எல்லைக்குள் வருகிறது என இரு மாநில அதிகாரிகளும் இணைந்து அளவீடு செய்தனர். ஆனால், இன்று வரைக்கும் கேரளா சோதனைச்சாவடி தமிழகத்திற்குள்தான் இருக்கிறது, அதை நம்மால் எடுக்க முடியவில்லை.

1956 எல்லை பிரிப்பின்போது, கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து, ஏ.கே. கோபாலன் முதல் ஈ எம் எஸ் நம்பூதிரபாட் வரை கூட்டணி அமைத்து, நவீன கேரளாவை உருவாக்கினார்கள். அவர்களுடைய குறிக்கோள் தமிழக எல்லைகளாகத்தான் இருந்து.

இந்த டிஜிட்டல் ரீ சர்வேவால், சுமார் 1000 சதுர கிலோ மீட்டர் வரையுள்ள, தமிழக பகுதிகளை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

1986 ஆம் ஆண்டில் கேரளாவிலுள்ள உடும்பஞ்சோலை, பீர்மேடு பகுதியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான 1240 ஏக்கர் நிலத்தை, தமிழக வனத்துறை அதிகாரிகள் அதிரடி ஆபரேசன் நடத்திதான், மீட்டார்கள். மீட்கவில்லை எனில் இன்றைக்கு அது கேரளாவின் சொத்தாக மாறியிருக்கும் எனவும் அன்வர் பாலசிங்கம் கூறுகிறார்.

 

 

கேரளா டிஜிட்டல் சர்வே

தமிழகத்தில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை கேரளாவின் சொத்தாக இருக்கிறது. குற்றாலத்தில் 64 ஏக்கர் நிலம் கேரளா அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. செங்கோட்டை அருகே 24 ஏக்கர் நிலம் கேரள வனத்துறையினரின் வசம் உள்ளது. மூணாறில் தமிழக அரசின் பேருந்துகள் நிறுத்துவதற்கு கொடுக்கப்பட்ட 5 சென்ட் நிலத்தையும் தற்போது கேரளா அரசு எடுத்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கேரளாவிற்கு சொந்தமான நிலம் தமிழக அரசால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கு கேரளாவில் ஒரு பிட்டு நிலம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

மொழிவாரியாக மாநிலஙகள் பிரிக்கப்பட்ட போது, பழனி மலைக்குன்றில் வரும் காந்தலூர், மறையூர்,கீழாந்தூர், கோவிலூர் ஆகிய ஊர்கள் தமிழக வனப்பகுதிக்குள் வருகிறது. மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள சட்ட மூணாறு வரைதான் கேரளாவுக்கு சொந்தம், எப்படி மற்ற பகுதிகள் கேரளாவிற்குள் சேர்ந்தது என கேள்வி எழுப்பினார்.

தேவிகுளம் தாலுகாவில் டாடா வசம் உள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்டங்களை, மறு அளவீடு செய்ய வேண்டும் என்று கடந்த 2004 ஆம் ஆண்டு, நான் தலைவராக இருந்த கேரள தமிழர் கூட்டமைப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தது.

கோரிக்கை சட்டமன்றத்தில் விவாதமாக எழுந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில், அன்றைக்கு கேரள மாநில முதல்வராக இருந்த வி.எஸ் அச்சுதானந்தன் சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி டாட்டா வசமுள்ள நிலங்களை சர்வே செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடைய மேற்பார்வையில், ஏஜென்சி நியமித்து ஓராண்டுக்குள் மறு அளவீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

 

 

கேரளா டிஜிட்டல் சர்வே

முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டது கேரள மாநில வருவாய்த்துறை. இப்போது விஷயம் மறுபடியும் சூடு பிடித்திருக்கிறது.

1956ல் நடத்தப்பட்ட மொழிவாரி மாநில பிரிவினையின் போது தமிழக, கேரளா எல்லையோர கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை அடித்து விரட்டிய பட்டம் தாணுப்பிள்ளை அரசாங்கம், அதை நாணல் காடுகளாகவும்,அட்டைக் காடுகளாகவும் வகைப்படுத்தி, அதில் மலையாளிகளை வலுக்கட்டாயமாக குடியேற்றியது.

அப்படி குடியேற்றப்பட்ட மலையாளிகள் தான் இன்று தமிழக-கேரள எல்லையில் உள்ள, தமிழகத்திற்கு சொந்தமான வன நிலங்களை வருவாய் நிலங்களாக மாற்றி, கேரளாவில் பட்டாவை முறையாக பெற்று, ஆண்டனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக சர்வே துறையில் தமிழக வனநிலமாக குறிக்கப்பட்டிருக்கும் ஒரு இடம் ,கேரள வருவாய்த் துறையால் ஒரு மலையாளியின் நிலமாக வகைப்படுத்தப்பட்ட கதைதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

எல்லையில் இத்தனை குளறுபடிகளை வைத்துக்கொண்டு, இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களை மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருப்பது உண்மையிலேயே கண்டனத்திற்குரியது.

1905ல் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பதிவேடுகள். 1966இல் நடத்தப்பட்ட மறு அளவீட்டில் எடுக்கப்பட்ட குறிப்புகள் என அத்தனையையும் காற்றில் பறக்க விட்டு, டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறது கேரள மாநில அரசு.

 

 

கேரளா டிஜிட்டல் சர்வே

கேரளா அரசு ஒரு விரிவான தீர்வு சட்டத்தை தயாரித்து வருவதாகவும், அதன் வரைவு வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர், பொது விவாதத்திற்கு வைக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருக்கிறார்.

இடுக்கி மாவட்டத்தில் நிலம் அதிகம் வைத்திருக்கும், தமிழ் விவசாயிகளை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு, இந்த டிஜிட்டல் சர்வேயில் அதிகம் இருப்பதாக கூறினார்.

செப்டம்பர் 15 2020 இல் வழங்கப்பட்ட அரசாணையின் படி,அதாவது மறு அளவீட்டுக்குப் பிறகு ,ஒரு நில உரிமையாளருக்கு கூடுதலாக 5 சதவீத நிலம் இருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், அதிகப்படியான நிலத்தின் உரிமையை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவருக்கு கூடுதலாக இரண்டு சென்ட் அதிகமாக இருந்தால் உரிமை வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 10 சென்ட் நிலம் வைத்திருக்கும் ஒருவருக்கு மறு அளவீட்டில் 16 சென்ட் நிலம் வந்தால் அவருக்கு பிரித்து கொடுப்பதில் பிரச்சனை ஏற்படும்.

2020 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த அரசாணையையும், அதற்கு முன்னால் 1991ல் போடப்பட்ட அரசாணையையும் கவனமாக கேரள மாநில அரசு ரத்து செய்துவிட்டது.

 

இப்போது புதிய மறு அளவீடு. Real Time Kinematic இயந்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக இயங்கும் CORS குறிப்பு நிலையங்களின் நெட்வொர்க் போன்ற சேவைகளின் மூலம் உங்கள் சமீபத்திய நில விவரங்களை உடனடியாக இணையத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

தாசில்தாருக்கும்,மாவட்ட ஆட்சியருக்கும் நில மறு அளவீடு தொடர்பாக கொடுக்கப்பட்ட உரிமைகளை கேரள மாநில அரசு ரத்து செய்திருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.

அதுபோல் பீர்மேடு தாலுகாவில் உள்ள, வாகமன், மஞ்சு மலை, பெருவந்தானம், குமுளி, வண்டிப்பெரியாறு,பீர்மேடு வரை,மறு அளவீடு செய்வதற்கு முன்னால்,140 ஆண்டுகளாக அந்த மலையகத்தில் பணிபுரியும், தமிழக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளுக்கான மனைகளை வழங்காமல் மறு அளவீடு செய்யவும் அனுமதிக்க மாட்டோம்.

அதுபோல இதுவரை எந்த அளவீடும் செய்யப்படாமல், இருக்கும் டாடா நிறுவனத்தின், கண்ணன் தேவன் மலையும் முழுமையாக அளவீடு செய்யப்பட வேண்டும்.

மொத்த டாட்டாவின் நிலத்தில் 20% நிலம்,அங்கு 142 ஆண்டுகளாக பணிபுரியும் தமிழ் மக்களுக்கு வருவாய் நிலங்களாக ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இடுக்கி மாவட்டத்தில் மறு அளவீடு செய்வதற்கு முன்னால், தேனி, திருப்பூர் இடுக்கி, வயநாடு, நீலகிரி, பாலக்காடு, கோவை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.

எங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டால் தமிழக கேரள எல்லையோரங்களில், எந்தப் பிரச்சனையும் எழாது.

இல்லை உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக கேரள எல்லையை அளவீடு செய்யாமல் தேவிகுளம் பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களில், மறு அளவீட்டை கேரள அரசு நடத்துமானால், சட்டப்படி அதை தடுத்து நிறுத்துவோம் என அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் பிபிசி தமிழிடம் பேசினார்.

கேரளா அரசு தமிழக கேரள எல்லையை இன்னமும் அளக்காமல், கிடக்கும் நிலையில், எந்த அடிப்படையில் தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ள இருக்கிறது எனக்கேள்வி எழுப்பினார். கேரள மாநில அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

 

பிரச்னைக்குரிய இடுக்கி, பாலக்காடு, வயநாடு, கொல்லம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், மத்திய பார்வையாளர் இல்லாமல் டிஜிட்டல் சர்வே நடத்துவதை அனுமதிக்க முடியாது.

நீலகிரி மாவட்டத்தோடு நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்ளும் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய மூன்று தாலுகாக்களில் மொத்தமுள்ள 49 வருவாய் கிராமங்களில், டிஜிட்டல் சர்வே நடத்தும் முன் நீலகிரி - வயநாடு மாவட்ட, மாநில எல்லைகள் அளவீடு செய்யப்பட வேண்டும்.

அதேபோல், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர், ஆலத்தூர், மன்னார்காடு உள்ளிட்ட மூன்று தாலுகாக்களும், கோவை மாவட்டத்தோடு நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதிலும் குறிப்பாக மன்னார்க்காடு தாலுகாவில் வரும் அட்டப்பாடி, தமிழ் விவசாயிகள் 8,000 பேருக்கு மேல் வாழும் ஒரு விவசாய பூமி.

இங்கு ஏற்கனவே கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் விவசாயிகளிடம் நிலவரி வசூலிப்பது தொடர்பான பிரச்னை எழுந்தபோது, அன்றைக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சம்சுதீனிடம் முறையிட்டும், அட்டப்பாடி விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் பிரமாண்டமான உண்ணாவிரதத்தை நடத்தினோம்.

 

 

தமிழ்நாடு-கேரளா எல்லை

 

படக்குறிப்பு,

தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதி

ஏற்கனவே அட்டப்பாடி விவசாயிகள் மீது எரிச்சலில் இருக்கும் மன்னார்காடு தாலுகா நிர்வாகம், இப்போது தமிழ் விவசாயிகளை பழிவாங்க வாய்ப்பு நிறையவே இருக்கிறது. எனவே மத்திய பார்வையாளர் இல்லாமல், மன்னார்காடு, ஆலத்தூர், சித்தூர், தாலுக்காக்களில் டிஜிட்டல் ரீசர்வேயை அனுமதிக்க முடியாது.

கேரளா ஒரு முழுமையான மாநிலம் இல்லை என்பதற்கு, அதனுடைய முழுமையடையாத, நில அளவை முறையே முதல் சாட்சியாகும்.

அரசாங்கங்கள் மாறும் போதெல்லாம் நில அளவை குறித்து விவாதம் எழுப்புவதும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நீதிமன்றங்களுக்கு செல்வதும், தொடர் கதையாக இருந்து வருகிறது.

மத்திய பார்வையாளர் இல்லாமல் டிஜிட்டல் ரீ சர்வேயை கேரளா அரசு நடத்தினால், கம்பம் மெட்டு மற்றும் ஆனைகட்டி பகுதியில் இருக்கும் கேரளா எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் வருவாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

 

படக்குறிப்பு,

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் வருவாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

டிஜிட்டல் ரீ சர்வே என்கிற பெயரில், கேரளத்தில் பட்டா நிலம் வைத்திருக்கும் தமிழ் விவசாயிகளை விரட்டியடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் அவர்களை கேரளாவிற்கு அனுப்பி, தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதற்கு முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேவிகுளம்,சுல்தான் பத்தேரி, சித்தூர், ஆலத்தூர், புனலூர், நெய்யாற்றின்கரை உள்ளிட்ட 15 தாலுகாக்களில் மத்திய பார்வையாளர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக் காவலர்களை கொண்டு நிலங்களை மறு அளவீடு செய்ய கேரள அரசு முன்வர வேண்டும். இல்லையென்றால் இந்த டிஜிட்டல் அளவீட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு இந்த 15 தாலுக்காவை ஒட்டி இருக்கும் தமிழக பகுதிகளில் ஒரு குழுவை அமைத்து டிஜிட்டல் ரீ சர்வேவை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

கட்ந்த நவம்பர் 1 ஆம் தேதி கேரளா அரசு டிஜிட்டல் ரீ சர்வேயை தொடங்கியதை கண்டித்து, அதே தினத்தில் கம்பத்தில் இரு விவசாய அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கடந்த 7 ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

கேரளா டிஜிட்டல் சர்வே

 

படக்குறிப்பு,

தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக முறையிட்டனர்.

அதில் கேரள மாநிலத்தின் தொடுபுழா உதவி இயக்குநர் கடந்த 13 ஆம் தேதி தேனி நில அளவை உதவி இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையை பகிரும் கேரளா மாநிலத்தின் , உடும்பன் சோழா வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்கானல், சதுரங்கப்பாறை , கருணாபுரம், சாந்தன்பாறை ஆகிய கிரமங்களில் முதல் கட்டமாக நவீன மறு நில அளவை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நவீன நில அளவை செய்வது தொடர்பாக கேரளாவில் நடைபெறும் கூட்டத்தில், கலந்துகொள்ள தேனி மாவட்ட நில அளவை உதவி இயக்குநருக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தனர்.

உதவி இயக்குநர் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நேரம் மற்றும் தேதி தெரிவிப்பதாக பதில் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக கேரளா எல்லைப்பகுதிகளில் கேரள அரசு நவீன மறு நில அளவை பணியை துவங்கும் முன், இரு மாநில எல்லைகள் தொடர்பான நில அளவை மற்றும் இதர ஆவணங்களுடன், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நில அளவை , வருவாய்த்துறை அலுவலர்களின் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னரே மூல ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, இரண்டு மாநில எல்லைப்பகுதிகளில் கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு, நவீன மறு நில அளவைப்பணி குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கேரளா அரசு டிஜிட்டல் ரீ சர்வேவை நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி விட்டார்கள். கேரளா, தமிழக அரசுக்கு தெரியாமல் எல்லைப்பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வே நடத்த முடியாது. மத்திய அரசின் அதிகாரிகளை வைத்து டிஜிட்டல் சர்வே நடத்தப்படுகிறது.

இரு மாநில அரசுகளும் இணைந்து தான் எல்லைப்பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வே எடுக்க முடியம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் வருவாய் ஆவணங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.

 

 

வயநாடு

இந்த தடவை டிஜிட்டல் ரீ சர்வேவால் 2011 ஆம் ஆண்டைப்போல் தமிழர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இருக்காது. இதில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக இருப்பதாகவும், கேரளா அரசு நம்மை கலந்தாலோசிக்காமல், செய்யக்கூடாது என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதுவரை இரு மாநில அரசுகளும் இணைந்து டிஜிட்டல் ரீ சர்வே எடுக்கவில்லை. கூட்டம் போட்டு பேசிவிட்டுதான் எடுக்க இருக்கிறோம்.

கேரளா அரசின் டிஜிட்டல் ரீ சர்வேவை கண்டித்து போராட்டம் நடத்திய பெரியாறு வைகை பாசன  விவசாயிகள் சங்கத்தினர், தன்னை சந்தித்து, கடந்த 11 ஆம் தேதி இதுகுறித்து மனு அளித்தனர்.

இதனையடுத்து தலைமைச்செயலகத்தில் வருவாய் மற்றும் சர்வே துறை முதன்மைச்செயலாளர்கள் தலைமையில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினரும் கலந்துகொள்ள உள்ள கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழக கேரளா எல்லையை ஒட்டி இருக்கும் 7 மாவட்ட ஆட்சியர்கள், இந்த டிஜிட்டல் ரீ சர்வேவின் போது நேரடியாக களத்தில் இருந்து அளக்க முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக விவசாயிகள் மற்றும் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

கேரளா வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் பிபிசி தமிழுக்கு இதுபற்றி விளக்கம் அளித்தார்.

டிஜிட்டல் ரீ சர்வே குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். கேரளா வருவாய்த்துறை மற்றும் சர்வே துறை அதிகாரிகள் தமிழக அரசின் வருவாய் மற்றும் சர்வே துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். தானும் நேரடியாக தமிழக அரசுடனும், வருவாய்த்துறை அமைச்சருடனும் பேசியுள்ளதாக தெரிவித்தார். தமிழக மக்கள் மற்றும் தமிழக கேரளா விவசாயிகளின் கருத்துகளை முழுமையாக கேட்காமல் சர்வே நடத்தப்படாது. கேரளத்தில் டிஜிட்டல் ரீ சர்வேவை வைத்து தமிழகம் கேரளாவில் பிரச்னையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றார். விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் நிலங்களை முறையாக ஆவணப்படுத்தவே இந்த டிஜிட்டல் ரீ சர்வே எடுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் ஒப்புதலோடுதான் இந்த டிஜிட்டல் ரீ சர்வே எல்லைப்பகுதியில் நடக்க இருக்கிறது என்றார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cql0nlenng4o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.