Jump to content

ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? – கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? – கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்
  • பதவி,முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஏலியன்கள் இருக்கிறார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ எழுவதுண்டு. தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963ஆம் வெளியான விண்வெளி குறித்த முதல் தமிழ் படம் கலை அரசி. எவ்வளவு காலமாக ஏலியன்கள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கற்பனைகளும் இருந்து வருகின்றன என்பதற்கு அதுவே சாட்சி.

அது சரி ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா?

இதற்கு எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் தான் பதில் சொல்ல வேண்டும். “இருக்காங்க, ஆனா இல்ல...”

ஆம், ஏலியன் விஷயமும் அப்படிக் கொஞ்சம் குழப்பமானது தான். சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக 1,150 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் வாஸ்ப்-96பி (WASP-96B) என்ற புறக்கோளில் நீராவி இருப்பதற்கான தடயத்தைக் கண்டுபிடித்தார்கள்.

 

நீராவி இருக்கிறது என்றால் அங்கு உயிர் வாழும் சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அப்படி உயிர் வாழும் சூழல் இருந்தால் அதில் உயிர்கள் வாழ்கின்றனவா என்று இன்னொரு கேள்வியும் எழுகிறது.

அதற்குள் செல்வதற்கு முன்பாக, நாம் ஒரு கோளில் எப்படி உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

ஏலியன்கள் இருக்கிறார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள்

சூரியன் ஒரு நட்சத்திரம். அதை 8 கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் மூன்றாவதாகச் சுற்றி வரும் பூமியில் மட்டுமே நமக்குத் தெரிந்து இதுவரை உயிர்கள் வாழ்கின்றன.

நம்முடைய பால்வெளி மண்டலத்தில் மட்டும் சுமார் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வெளி மண்டலத்தைப் போலவே 20,000 கோடி கேலக்சிகள் நம் பார்வைக்கு உட்பட்டுள்ள பிரபஞ்சத்தில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நட்சத்திரங்களைச் சுற்றி நம்முடைய சூரிய மண்டலத்திலுள்ள கோள்களைப் போலவே பல்வேறு கோள்கள் சுற்றுகின்றன. சூரியனைத் தவிர மற்ற நட்சத்திரங்களைச் சுற்றும் கோள்களைத்தான் நாம் புறக்கோள்கள் என்று கூறுகிறோம்.

இதுவரைக்கும் நாம் இதுபோன்ற சுமார் 8,000 புறக்கோள்களை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால், இன்னும் கோடிக்கணக்கான கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன.

இயற்கை வேதிம வினைகளின் விளைவாக உருவானது தானே உயிர். ஆகவே, இந்தக் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் வெறும் பூமியில் மட்டும் தான் உயிர் உருவாகியிருக்கும் என்று நினைப்பதை ஒருவித அகங்காரம் என்றுதான் சொல்லவேண்டும். உயிர்கள் வாழக்கூடிய இன்னும் பல கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கலாம், இருக்கும்.

 

ஏலியன்கள் இருக்கிறார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயிர்கள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள்

அனைத்து கோள்களிலுமே உயிர்கள் தோன்ற முடியாது. நட்சத்திரத்திற்கு மிகவும் அருகில் இருந்தால் அதீத வெப்பத்தால் கதிரியக்கம் கூடுதலாக இருக்கும். இதற்கான சான்றாக நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் புதன் கோளைச் சொல்லலாம். அது சூரியனுக்கு மிக அருகில் 5.8 கோடி கிமீ தொலைவில் இருப்பதால் அதீத வெப்பத்தோடும் கதிரியக்கம் மிக்கதாகவும் இருக்கிறது. ஆகவே அதில் உயிர்கள் தோன்ற முடியவில்லை.

அதேபோல், நட்சத்திரத்திடம் இருந்து வெகுதூரத்தில் இருந்தாலும் தேவையான ஆற்றல் கிடைக்காது. இதற்கு சான்றாக சூரிய மண்டலத்தின் இறுதியில் இருக்கும் நெப்டியூனை சொல்லலாம். அது சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கி.மீ தொலைவில் இருப்பதால் சூரிய ஆற்றலே கிடைக்காமல் உறைந்த நிலையில் இருக்கிறது.

இந்த இரண்டு சூழலிலும் உயிர்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இப்படியில்லாமல், சரியான தொலைவில் ஒரு கோள் அமைந்திருந்தால் அங்கு உயிர் தோன்றுவதற்கான வாய்பு ஏற்படும். இதற்கு பூமியை சான்றாகச் சொல்ல முடியும்.

 

ஏலியன்கள் இருக்கிறார்களா?

உயிர்களின் இயக்கம் கோளின் வளிமண்டலத்தை மாற்றி அமைத்துவிடும். பூமி உருவாகும்போது அதன் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இருக்கவில்லை. ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெரும் உயிர்கள் உருவான பிறகு தான் வளிமண்டலத்தில் பெரும்பகுதி ஆக்சிஜன் உருவானது.

வேதியியல் விதிகளின்படி குறைந்த அளவே கார்பன்மோனாக்சைட் உள்ள வளிமண்டலத்தில் கணிசமான மீத்தேன் மற்றும் கார்பன் டையாக்சைட் போன்றவை தானாக உருவாக முடியாது.

எனவே, வேறொரு கோளில் குறைவான கார்பன் ஆக்சைட், ஆனால் கூடுதல் கார்பன் டையாக்சைட், கூடுதல் மீத்தேன் காணப்பட்டால் அதில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு கூடுதலாக இருக்கும். அங்கு உயிர்கள் வாழ்வதாக அனுமானிக்கலாம். 

இத்தகைய பல வேதிம நிலைகள் உயிரி சுட்டிகள் (Biosignature) என்று அழைக்கப்படுகின்றன. புறக்கோள்களின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து அதில் இருக்கும் வேதிமப் பொருள்களை ஆய்வு செய்யும் முனைப்பு உருவாகி வருகிறது.

 

ஏலியன்கள் இருக்கிறார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏலியன்களைக் கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா 

உயிர்கள் தொடர்ந்து வாழ்வதற்கான பல்வேறு சரியான காரணிகளைக் கண்டுபிடித்து, தொகுத்து எவ்வளவு கோள்களில் உயிர் இருக்கும் என்பதைக் கணிப்பதற்கான ஒரு ஃபார்முலாவை 1961ஆம் ஆண்டில் டாக்டர் ஃபிராங்க் டிரேக் முன்வைத்தார். 

இதன் அடிப்படையில் பல கோடி கோள்களில் உயிர்கள் தோன்றலாம், வளரலாம். 

எனவே, நமது பூமியில் மட்டுமே உயிர்கள் தோன்றியுள்ளன என்பது ஏற்புடைய பார்வையில்லை. 

சரி, அதான் ஏலியன்கள் இருப்பதற்காவ வாய்ப்புள்ளதே, பிறகு ஏன் எஸ்.ஜே.சூர்யாவை போல் குழப்ப வேண்டும்?

 

ஏலியன்கள் இருக்கிறார்களா?

பறக்கும் தட்டுகள் உண்மையா? 

இந்த இடத்தில் பலருக்கும் பிரபஞ்சத்தில் வேறு கோள்களில் உயிர் உள்ளது என்றால், பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் வந்துள்ளார்களா? பறக்கும் தட்டு மாதிரியான விஷயங்கள் உண்மையா என்ற கேள்வியும் எழலாம். 

நம்முடைய பொதுப்புத்தியில் ஏலியன் என்றால் பறக்கும் தட்டு மாதிரியான கற்பனைகள் வருவது இயல்பு. அப்படி வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்தத் தடயமும் இதுவரை இல்லை. 

ஒளியின் வேகத்தில் பயணித்தாலும்கூட, நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திர மண்டலமான 'பிராக்சிமா சென்டாரி'-க்கு போக நான்கு ஆண்டுகள் ஆகும். ஆக, பல நூறு ஆண்டுகள் பயணித்தால் மட்டும் தான் இந்த மாதிரியான நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே பயணம் மேற்கொள்ள முடியும். 

 

ஏலியன்கள் இருக்கிறார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவ்வளவு காலம் பயணித்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்தார்கள் என்றால், சில நாட்கள் மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போய்விடுவார்களா? 

மனிதர்கள் நிலவுக்குச் சென்றபோதே அங்கு ஒருநாள் தங்கி ஆய்வு செய்தார்கள். அப்படியிருக்கும் நட்சத்திரங்களுக்கு நடுவே பயணித்து இங்கு ஏலியன்கள் வந்தால் சில காலமாவது தங்கி இந்த பூமியைப் பற்றித் தெரிந்துகொள்ள, சில பத்தாண்டுகளுக்காவது தங்கி ஆய்வு செய்ய மாட்டார்களா?

ஆனால், பறக்கும் தட்டு போன்ற கதைகளில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து சில நொடிகள் அல்லது சில மணிநேரங்களில் திரும்பிவிடுகிறார்கள். இது நம்பும்படியாக இல்லை.

தயாரிப்பு: க. சுபகுணம், பிபிசி தமிழ்

https://www.bbc.com/tamil/articles/cz58gzjmk10o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.