Jump to content

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் - ரஷ்யாவின் உடனடி பதில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் - ரஷ்யாவின் உடனடி பதில்

இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று ஜி20 மாநாட்டில் மெய்நிகர் வழியில் உரையாற்றிய உக்ரைனின் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமாதானப் பேச்சு

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் - ரஷ்யாவின் உடனடி பதில் | Russia Ukraine Live News Zelenskky Push Peace G20

இன்று ஆரம்பித்த ஜி20 உச்சிமாநாட்டில் தனது அமைதித் திட்டத்தை முன்வைத்த உக்ரைனிய அதிபர் அதில் அணுசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, ரஷ்யாவின் போர்க்குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் மற்றும் ரஷ்யாவுடனான இறுதி சமாதான ஒப்பந்தம் உட்பட்ட 10 அம்சங்களை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

அத்துடன் ரஷ்யாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களை கைவிடச் செய்யவேண்டுமானால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியின் மீதான விலை வரம்பை நடைமுறைப்படுத்த ஜி20 நாடுகள் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் வொலோடிமிர் செலென்ஸ்கியின் முன்மொழிவுகள் குறித்து உடனடியாக பதிலளித்த ரஷ்யா, உண்மையில் உக்ரைனுக்குத் தான் பேச்சுவார்த்தைகளை நடத்த நாட்டமில்லை எனத் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் உடனடி பதில்

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் - ரஷ்யாவின் உடனடி பதில் | Russia Ukraine Live News Zelenskky Push Peace G20

 

உக்ரைன் தரப்பின் நடைமுறைகள் அது உண்மையில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ள ரஷ்ய அதிபரின் பேச்சாளர், ரஷ்யா தனது சிறப்பு இராணுவ நடவடிக்கையின் இலக்குகளை தொடர்ந்து அடையுமென்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே ஜி20 மாநாட்டின் முடிவுரை அறிக்கை நாளை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. 

https://ibctamil.com/article/russia-ukraine-live-news-zelenskky-push-peace-g20-1668525470

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன அவை வருவினமே பெரிய பெரிய கனவிலை எல்லோ புட்டின் மாத்தயா இருக்கிறார்!😂

 

  • Haha 1
Link to comment
Share on other sites

பொருளாதார முடக்கத்தை போட்ட ஆட்கள் தங்களுக்கே வினையாக முடிந்ததை நினைக்கும் போது  போரை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நடாத்த முடியும் என பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் அடி அகோரம் தாங்க ஏலாமல், உக்ரைன் சமாதானத்துக்கு கூப்பிடுகிறார்கள். 😎

Link to comment
Share on other sites

1 minute ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவின் அடி அகோரம் தாங்க ஏலாமல், உக்ரைன் சமாதானத்துக்கு கூப்பிடுகிறார்கள். 😎

8 மாதத்துக்குள் $80 பில்லியனை கொடுத்து விட்டு ஒராள் முழியை பிரட்டியபடி உள்ளார்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

8 மாதத்துக்குள் $80 பில்லியனை கொடுத்து விட்டு ஒராள் முழியை பிரட்டியபடி உள்ளார்.🙂

உக்ரைனை சாம்பல் மேடாக்கினது தான் கண்ட பலன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவின் அடி அகோரம் தாங்க ஏலாமல், உக்ரைன் சமாதானத்துக்கு கூப்பிடுகிறார்கள். 😎

என்ன தகர டப்பா அடிக்கோ!😂

மென்ன பபோ அப்பி எனவா!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

என்ன தகர டப்பா அடிக்கோ!😂

மென்ன பபோ அப்பி எனவா!🤣

உக்ரேனை சாம்பல் மேடாக்குவதில் கண்ணும் கருத்துமக இருக்கிறீர்கள்  போல..😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனை சாம்பல் மேடாக்கினது தான் கண்ட பலன்.

உக்ரேனுக்கு நாங்கள் இன்னும் அடிக்க தொடங்கவில்லை என்றுதானே மாண்புமிகு புட்டின் சொல்கிறார்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.