Jump to content

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Argentina Fans-ஐ நடுங்க வைத்த France Player Kylian Mbappé - அந்த இரு நிமிட ஆட்டம் பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

'சண்டை செய்வோம்' - இறுதிப்போட்டி இடைவேளையில் எம்பாப்பேவின் உணர்ச்சிமிகு உரை

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிலியன் எம்பாப்பே

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின்போது, ஆட்ட இடைவேளையில் எம்பாப்பே அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசிய காணொளி வெளிவந்துள்ளது.

அந்தப் போட்டியின் 80வது நிமிடத்தில் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில் தொடங்கி பிரான்ஸ் அர்ஜென்டினாவுக்கு பெரும் சவால் விடுத்தது. முதல் பாதி முடிந்தபோது லியோனெல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றியின் விளிம்பில் இருந்தது. அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை விட முன்னிலையில் இருந்தது.

அதுவரை பிரான்ஸால் எதிரணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மெஸ்ஸியின் அணிக்குக் கடும் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிலியன் எம்பாப்பே, அதுவரை பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்தியிருக்கவில்லை.

அந்த நேரத்தில், ஆட்ட இடைவேளையின்போது அவர் தனது அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசினார். அப்போது, அவர்களால் மீண்டும் போட்டியைத் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்பதையும் ஃபிஃபா உலகக்கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்பதையும் நினைவூட்டினார்.

 

மேலும், “இது உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி. நம்முடைய வாழ்நாள் போட்டி,” என்று உடை மாற்றும் அறையில் வீரர்களிடம் எம்பாப்பே கூறினார்.

“எப்படி இருந்தாலும், இதைவிட நாம் மோசமாகிவிட முடியாது. ஆகவே, நாம் மீண்டும் களத்திற்குச் செல்வோம். அவர்களை விளையாட விடுவோம் அல்லது கொஞ்சம் தீவிரம் காட்டி சண்டையில் இறங்கி, வேறு ஏதாவது செய்வோம் நண்பர்களே!

ஏனென்றால், இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி” எம்பாப்பே கூறுவதை அந்தக் காணொளி காட்டுகிறது.

மேலும், “அவர்கள் இரண்டு கோல்களை அடித்துவிட்டார்கள். நாம் இரண்டு கோல்கள் பின் தங்கியுள்ளோம். ஆனால், மீண்டுவரலாம். நண்பர்களே, இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடியது,” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியெர் டெஸ்சாம்ப்ஸ், “உங்களுக்கு ஒரு வித்தியாசத்தைச் சொல்கிறேன். அவர்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை விளையாடுகிறார்கள். ஆனால், நாம் அப்படி விளையாடவில்லை,” என்று கூறுகிறார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டிசம்பர் 18ஆம் தேதியன்று லுசைல் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைத் தொடர்ந்து கோப்பை வழங்கும் விழாவில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான், கிலியன் எம்பாப்பேவுக்கு ஆறுதல் கூறினார்.

இரண்டாம் பாதியில் அணியால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தது என்றால் அதற்குக் காரணம் எம்பாப்பே உடை மாற்றும் அறையில் நிகழ்த்திய அந்த உரையாக இருக்கலாம். அதோடு, அவர் 80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்ததும் அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோல் அடித்ததும் அணிக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.

பிறகு, மெஸ்ஸி மூன்றாவது கோலை அடித்து அர்ஜென்டினாவை முன்னிலைக்குக் கொண்டுவந்தபோது, 97வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டுமொரு கோல் அடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் நட்சத்திர வீரரான அவர், மூன்று கோல்களை அடித்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாதனை செய்தார்.

எம்பாப்பே, 1966ஆம் ஆண்டில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஜெஃப் ஹர்ஸ்டின் செய்ததற்குப் பிறகு, உலககோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது நபர் என்ற சாதனையை எம்பாப்பே சாதித்தார்.

ஆனால், ஆட்டம் இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றபோது 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அர்ஜென்டினா லுசைல் மைதானத்தில் கோப்பையை வென்றது.

எம்பாப்பேயின் சாதனைகள்

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4. 

அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது.

போட்டி தொடங்கியபோது மெஸ்ஸியும், எம்பாப்பேயும் இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தார்கள். மெஸ்ஸி முதல் கோலை பெனால்ட்டி முறையில் அடித்து தங்கக் காலணிக்கான போட்டியில் முந்தினார். ஆனால் 80 மற்றும் 81-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து தனது எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டி அப்போதும் முடியவில்லை கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்து மீண்டும் இருவருக்குமான போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். அப்போது தங்கக் காலணி மெஸ்ஸிக்கே கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மற்றொரு கோலை அடித்து மெஸ்ஸியை முந்தினார். இப்போது தங்கக் காலணி விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.

23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார். 

இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13.

https://www.bbc.com/tamil/articles/c9e19g2m4r4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and suit
 
படத்தில் கெமரூன் வம்சாவளி, பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் கிலியான் எம்பாப்பே தனது தந்தையுடன்.
 
இவரது தந்தை ஆப்ரிக்க கெமரூன் நாட்டவர். தாயோ அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்.
எம்பாப்பே கெமரூன் நாட்டுக்காக விளையாட வேண்டுமென்பது அவரது தந்தையின் விருப்பம்.
ஆனால் தாயின் விருப்பமோ மகன் அல்ஜீரிய அணிக்காக விளையாட வேண்டுமென்பதே.
 
ஆனாலும் குறித்த இருநாட்டு கால்பந்து சம்மேளனங்களும் அவரது திறமையை மதித்து அவரை தத்தமது அணிக்கு தேர்வு செய்யும் விடயத்தில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை.
அதிலும் கெமரூன் கால்பந்து சம்மேளன அதிகாரியொருவர் எம்பாப்பேயின் தந்தையிடம் லஞ்சம் கோரினார் என்ற செய்தியும் உள்ளது.
 
ஆனால் எம்பாப்பே எனும் மிகப்பெரும் நட்சத்திரத்தின் பெயரும், திறமையும் உலகின் நாலாபுறமும் பேசு பொருளாக மாறியதன் பின்னர்தான் குறித்த இரு நாடுகளிலும் பலரது கண்கள் திறந்தன; அவர்களது பார்வை எம்பாப்பேயின் மீது பாய்ந்தன.
ஆனால் என்ன பயன்?
 
பினோய்ட் இகட்டோ என்ற கெமரூன் அணியின் முன்னாள் வீரர் எம்பாப்பே தனது தந்தை வழியான தாய்நாடு கெமரூனுக்காகத்தான் விளையாடியிருக்க வேண்டுமென கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
ஆனால் இனி ஆகப்போவதுதான் என்ன?
இதில் பாரிய படிப்பினை உள்ளது.
இன்று பல நாடுகளிலும் பல துறைகள் எழும்ப முடியாது, வீழ்ச்சி அடைந்ததற்குரிய பிரதான காரணங்களாக:
அரசியல் செல்வாக்கு, லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றமை, திறமைக்கு முன்னுரிமை வழங்காமை போன்றவையே இருக்கின்றன.
 
இது கெமரூன், அல்ஜீரியா ஆகிய இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல.
எமது நாட்டுக்கும், எமது நாட்டிலுள்ள பல ஊர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.
விளையாட்டுக்கு மட்டுமல்ல. ஏனைய துறைகளுக்கும் பொருந்தும்...
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'FIAWORLDCUP Qatar2022 ay 2022 FIFA உலகக் கோப்பைக்காக கத்தாருக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து பஸ் வண்டிகளையும் கத்தார் அரசினால் லெபனன் நாட்டுக்கு அன்பளிப்பாக வழங்குகிறது'

 

May be an image of 2 people and text that says 'ay 2022 FIFA உலகக் கோப்பைக்காக கத்தாருக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து பஸ் வண்டிகளையும் கத்தார் அரசினால் லெபனன் நாட்டுக்கு அன்பளிப்பாக வழங்குகிறது Qatar lank ans இந்த ஏழை உன் கண்ணுக்கு தெரியலையா'

பஸ் எல்லாம் வேண்டாம். கப்பல் இருந்தா அனுப்புங்க,  கனடா போறதுக்கு. 😂
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு தங்கத்தில் ஐ போன் பரிசளித்த மெஸ்ஸி!

LionelMessi.jpg

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, சக ஆர்ஜென்டினா வீரர்களுக்காக 35 கோல்ட் ஐபோன்களை ஓர்டர் செய்துள்ளதாக தகவல். இந்த போனை அவர்களுக்கு அன்பு பரிசாக வழங்க மெஸ்ஸி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருந்தது மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி. கட்டார் நாட்டில் நடைபெற்ற இந்த தொடரில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வாகை சூடி இருந்தது ஆர்ஜென்டினா. இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணியில் இடம் பிடித்திருந்த வீரர்கள் மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கோல்ட் ஐபோனை மெஸ்ஸி வழங்க உள்ளாராம்.

இந்த போன்களில் வீரர்களின் பெயர், ஜெர்சி எண் மற்றும் ஆர்ஜென்டினா அணியின் லோகோ போன்றவை பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல். வீரர்களுக்கு பிரத்யேக சிறப்பு பரிசு கொடுக்க வேண்டும் என்ற யோசனையில் மெஸ்ஸி இருந்துள்ளார்.

உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தங்களை மெஸ்ஸி தொடர்பு கொண்டதாவும். அதன்போது வழக்கமாக பரிசாக கொடுக்கப்படும் கைக்கடிகாரம் போன்றவை வேண்டாம் என அவர் சொன்னதாகவும். அதன்படி கோல்ட் ஐபோன் யோசனையை தங்கள் தரப்பில் கொடுத்தாகவும் ஐடிசைன் கோல்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பென் தெரிவித்துள்ளார்.

ஐபோன் கோல்ட்: ஐடிசைன் கோல்ட் எனும் நிறுவனம் பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட கலைத்துவம் மிக்க கோல்ட் ஐபோன்கள் மற்றும் மொபைல் கேஸ்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. தற்போது மெஸ்ஸி கொடுத்த ஓர்டரின் பேரில் 35 கோல்ட் ஐபோன்களை வடிவமைத்து அவரிடம் வழங்கியுள்ளது. மெஸ்ஸி, ஐபோன் 14 மொடலை ஓர்டர் செய்ததாக தெரிகிறது.

Untitled-1-1.jpg

https://thinakkural.lk/article/243188

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.