Jump to content

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்கு அனுப்பிய மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை அரையிறுதியில் வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இந்த அரையிறுதி ஆட்டத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக, 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நடந்த ஒன்றை நினைவுகூற விரும்புகிறேன். 2018ஆம் ஆண்டில், குரூப் ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினா குரோஷியாவை எதிர்கொண்டது.

இப்போது போலவே, அப்போதும் இரு அணிகளிலும் இரண்டு ஜாம்பவான்கள் இருந்தனர். அர்ஜென்டினாவிடம் லியோனெல் மெஸ்ஸி. குரோஷியாவிடம் லூகா மோட்ரிச். ரஷ்யாவின் நிஷ்னி நோவ்கோரோட் மைதானத்தில் போட்டி நடந்தது.

அதற்கு முந்தைய ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்திடம் டிரா செய்திருந்ததால், இந்த வெற்றி அர்ஜென்டினாவுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஆனால், குரோஷியா, 0-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியை அவர்களுக்குப் பரிசளித்தது.

 

இப்போது இந்த அரையிறுதிச் சுற்றுக்கு வருவோம். அதேபோல் குரோஷியாவும் அர்ஜென்டினாவும் மோதின. முடிவு அதேபோல் மூன்று கோல்களுடன் முடிந்தன. ஆனால் அடித்தது அர்ஜென்டினா. 3-0 என்ற கோல் கணக்கில், லியோனெல் மெஸ்ஸியும் ஹூலியன் ஆல்வாரெஸும் அர்ஜென்டினா அணியை அபார வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

லியோனெல் மெஸ்ஸியும் லூகா மோட்ரிச்சும் முதல்முறையாக 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மோதினார்கள். அந்தப் போட்டியில் தான், சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸி தன்னுடைய முதல் கோலை அடித்தார். மோட்ரிச்சுக்கு சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதுதான் முதல் ஆட்டம்.

அது முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இருவரும் இன்னமும் அதே அளவு வேகத்துடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்போடு களத்தில் போரிட்டனர். இரண்டு அணிகளிலும் இருந்த எல்.எம்10 (LM10) ஜெர்சிகளில் எது வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய கால்பந்து ரசிகர்களிடையே இருந்தது.

ஆல்வாரெஸின் அதிரடி ஆட்டம்

குரோஷியா அணியில் கோவாசிச், ப்ரோசோவிச், லூகா மோட்ரிச் என்று அபாரமான மிட் ஃபீல்டர்கள் இருந்தனர். அவர்களை மீறி, குரோஷியாவின் கோல் போஸ்டுக்கு பந்தை எடுத்துச் செல்வது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால், அர்ஜென்டினா இந்த முறை ஒவ்வோர் ஆட்டத்திலுமே லைன்-அப்களை எதிரணிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டிருந்தனர்.

இந்தமுறையும் அதேபோல், டி பால், பரேடெஸ், ஃபெர்னாண்டெஸ், மெக் ஆலிஸ்டர் என்று எதிரணியின் பலம் மிக்க மூன்று மிட்ஃபீல்டர்களை சமாளிக்க நான்கு மிட் ஃபீல்டர்களை களமிறக்கினார், லியோனெல் ஸ்கலோனி. அது நல்ல பலனையும் தந்தது.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குரோஷியா கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிச், ஆல்வாரெஸ் கோல் அடிக்க முயன்றபோது செய்த தவறைத் தொடர்ந்து 34வது நிமிடத்தில் பெனால்டி கிடைத்தது. அவர் எடுத்துக் கொடுத்த அந்த பெனால்டியில் இருந்துதான், அர்ஜென்டினா தனது வெற்றிக்கான முதல் கோலை அடித்தது. அதை அடித்தவர், மெஸ்ஸி.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸி அடித்த ஐந்து கோல்களில் நான்கு கோல்களை, அரையிறுதிப் போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தில் அடித்திருந்தார். இந்தப் போட்டியிலும் அவர் கோல் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை 34வது நிமிடத்திலேயே ஹூலியன் ஆல்வாரெஸ் வாங்கிக் கொடுத்த ஒரு பெனால்டி ஷாட் மூலம் அடித்துக் காட்டினார்.

அந்த பெனால்டி ஷாட் அவ்வளவு துல்லியமாக இருந்தது. கோல் போஸ்டுக்குள் வலது புறத்தின் மேற்புற முனையை நோக்கி அடித்தார். கோல்கீப்பர் எதிர்பார்க்க முடியாத ஷாட் அது. ஆனால், சற்று அபாயகரமானதும்கூட. கொஞ்சம் தவறினாலும், கம்பத்திற்கு வெளியே சென்றுவிடக்கூடும். ஆனால், பெனால்டி ஷாட்களில் வல்லுநரான மெஸ்ஸியின் துல்லியம் தவறாகவில்லை.

அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே ஆல்வாரெஸும் ஒரு கோலை அடித்தார். மைதானத்தின் நடுவே, மெஸ்ஸி பாஸ் செய்த பந்தை டிரிப்பிள் செய்துகொண்டே சென்ற ஆல்வாரெஸ், அவரைத் தடுத்த ஜோசிப் ஜூரனோவிச்சை தாண்டி பந்தை குரோஷிய எல்லைக்குள் கொண்டு சென்றார்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோல் போஸ்டுக்கு அருகே சென்றபோது, போரா சோசாவின் தற்காப்பு ஆட்டத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலிருந்தும் அவர் பந்தை லாகவமாக தட்டிச் சென்று கோல் அடித்தபோது, கிட்டத்தட்ட கோல் கீப்பர் லிவாகோவிச்சுடன் மோதிக் கீழே விழும் அளவுக்குச் சென்றுவிட்டர். அந்த நிமிடத்தில் விழுந்தது அர்ஜென்டினாவின் இரண்டாவது கோல்.

இந்தத் தருணத்தில் தான் அவர் அர்ஜென்டினா அணி தேடிக் கொண்டிருந்த ஸ்டிரைக்கராக இருப்பாரோ என்ற ஆச்சர்யம் எழுந்தது.

மெஸ்ஸியின் மேஜிக்

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்புக்காக ஆடும் 22 வயதான ஹூலியன் ஆல்வாரெஸ் என்ற ஸ்டிரைக்கர் இந்தப் போட்டியின் மூலம், அர்ஜென்டினா நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ஒரு தரமான ஸ்டிரைக்கராக தன்னை நிரூபித்துள்ளார்.

மெஸ்ஸி பாஸ் செய்த பந்தில் இரண்டாவது கோலையும் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளின் கோல் ஸ்கோரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கூடவே, மெஸ்ஸி அடித்த பெனால்டி ஷாட் கிடைக்கவும் ஆல்வாரெஸ் காரணமாக இருந்துள்ளார்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹூலியன் ஆல்வாரெஸ்

ஆட்டத்தின் 40வது நிமிடத்திலேயே ஏறக்குறைய தன்னுடைய வெற்றியை அர்ஜென்டினா உறுதி செய்திருந்தது.

அதைத் தொடர்ந்து மூன்றாவதாக விழுந்த கோல், ஏதோ தற்செயலானது என்றோ அதிர்ஷ்டவசமானது என்றோ புறந்தள்ளிவிட முடியாத அளவுக்கு அபாரமானது. மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றால், அவருடைய இடது காலின் மேஜிக்குக்கு நடுவில், பந்தை மீண்டும் திரும்பப் பெறுவது எளிதான காரியமல்ல எனச் சொல்லப்படுவதுண்டு.

அந்த மேஜிக்கை பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் கால்பந்து மைதானத்தில் ஒவ்வொரு போட்டியிலும் காத்துக் கிடப்பார்கள். இதிலும், அவர்களுடைய எதிர்பார்ப்பை மூன்றாவது கோலின்போது பூர்த்தி செய்தார் மெஸ்ஸி.

குரோஷியாவின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான யோஷ்கோ கவார்டியோலின் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி, மெஸ்ஸி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சென்றார். தனது 20 வயதில், துள்ளிக் குதித்து, முழு ஆற்றலுடன் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கவார்டியலோலிடம், 35 வயதான மெஸ்ஸி பந்தை நழுவவிட்டு விடுவாரா என்ற அச்சமும் எழாமல் இல்லை.

ஆனால், 35 வயது ஆனாலும் தான் இன்னமும் அதே மெஸ்ஸி தான் என்பதை அந்தத் தருணத்தில் அவர் ரசிகர்களுக்குக் காட்டினார் எனக் கூறினால் அது மிகையில்லை. அப்படிப்பட்ட வசீகரிக்கக்கூடிய விளையாட்டைக் காட்டி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சேர்த்தார். அதிலிருந்து 69வது நிமிடத்தில் விழுந்தது மூன்றாவது கோல்.

குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினாவின் வியூகம்

இரண்டாவது பாதி தொடங்கியதில் இருந்தே குரோஷியாவிடம் பதற்றமும் வேகமும் அதிகமாக இருந்தது. ஆனால், அர்ஜென்டினா அணியைப் பொறுத்தவரை மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாக, தங்கள் வியூகத்தைத் திறம்பட வகுத்திருந்தனர்.

அர்ஜென்டினா வீரர்களின் கால்களுக்கு பந்து வந்தால், அதை குரோஷியா மீட்பதற்கு ஆன நேரம் சராசரியாக 15 விநாடிகள். அதுவே, குரோஷியாவிடம் இருந்து அர்ஜென்டினா பந்தை மீட்பதற்கு சராசரியாக 22 விநாடிகள் ஆனது. ஆகையால், பந்தை குரோஷியா கால்களுக்குச் செல்வதை இயன்ற அளவுக்குத் தடுத்துக் கொண்டேயிருந்தனர்.

பந்து அதிக நேரம் தங்களிடம் இருந்திருந்தால், எதிரணிக்கு நம்பிக்கை வளர்ந்திருக்கும். அந்த நம்பிக்கை ஆட்டத்திலும் பிரதிபலித்திருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல் அர்ஜென்டினா தடுத்துக் கொண்டேயிருந்தது. இத்தகைய அனுபவமிக்க ஆட்டத்தைக் காட்டியதோடு மட்டுமின்றி, மூன்று கோல்களை அடித்துவிட்டோம், இனி கவலையில்லை என்று அணியினர் கவலையின்றி நின்றுவிடவில்லை.

பிரேசில் செய்த அந்தத் தவறை அவர்கள் செய்யவில்லை. ஆட்டத்தின் இறுதி வரை, யார் பந்தை எதிரணியிடம் தவற விடுகிறார்களோ அவர்களே அதைப் பின்தொடர்ந்து சென்று பந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1978, 1986 உலகக் கோப்பை வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்றுத் தருவதற்காக, தங்கள் ரசிகர்களின் 36 ஆண்டுகால கனவை நனவாக்குவதற்காக, இறுதிச் சுற்றுக்குள் சாவகாசமாக அர்ஜென்டினா நுழைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்த உலகக் கோப்பை முதல் போட்டியில் ஆடுவதற்கு முன்பாக, “நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பதற்றத்தோடு விளையாடப் போவதில்லை. ஆட்டங்களை நன்கு அனுபவித்து, மகிழ்ச்சியோடு ஆடப் போகிறோம்,” என்று தெரிவித்திருந்தார் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் ஸ்கலோனி. அது எந்தளவுக்கு உண்மை என்பதை நேற்றைய ஆட்டத்தில் அவருடைய வீரர்கள் காட்டினர்.

1990இல் அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் கேமரூனுடனும், இப்போதைய உலகக் கோப்பையில் சௌதி அரேபியாவிடம் தோல்வியடைந்து திகைப்பை ஏற்படுத்தியபதைப் போலவே நிகழ்ந்தது. பிறகு அதிலும் இதேபோல் இறுதிப் போட்டிக்குள் சென்று 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இப்போது, உலகக் கோப்பை போட்டிகளில் தங்கள் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால், அப்போதைய ஆட்டத்தைவிடச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், உலகக் கோப்பை என்னும் கிரீடத்தைச் சுமக்க மெஸ்ஸிக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு இது என்பதால், அவரோடு மனதளவில் ஒத்துப்போயிருக்கும், அவரைக் காதலிக்கும் அணியினர் இந்த ஆட்டத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோற்றாலும் இதயங்களை வென்ற குரோஷியா

அரையிறுதியில் மிகுந்த நம்பிக்கையுடன் தங்கள் ஆட்டத்தை குரோஷியா தொடங்கியிருந்தாலும், மெஸ்ஸியும் அவருக்குப் பக்கபலமாக நின்ற ஆல்வாரெஸும் வெளிப்படுத்திய புத்திசாலித்தனமான ஆட்டத்திற்கு வீழ்ந்துள்ளது.

அர்ஜென்டினாவின் முதல் இரண்டு கோல்களின் மூலம், அவர்களுடைய தற்காப்பு நுணுக்கமாக விலக்கப்பட்டது. அவர்களுடைய சிறந்த இளம் தற்காப்பு ஆட்டக்காரர் கவார்டியோல் கூட, மெஸ்ஸியின் ட்விஸ்டிங் ஓட்டத்தில் எதையும் செய்ய முடியாமல் போனது.

எப்படியிருப்பினும், குரோஷியா மீண்டுமொரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், 40 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் ஒரு நாடு 2018இல் ரஷ்யாவில் நடந்த இறுதிப் போட்டி வரை சென்றது, இப்போது கத்தாரில் அரையிறுதி வரை வந்து, முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடிக்கப் போகிறது.

அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸி என்றால், குரோஷியாவுக்கு லூகா மோட்ரிச் என்ற ஜாம்பவான் இருக்கிறார். ஒன்பது நிமிடங்கள் மீதமிருந்த நிலையில், தனது ஆட்டத்திற்காக லுசைல் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அன்பு நிறைந்த கைத்தட்டல்களைப் பெற்றார்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த முறை தோல்வியின் வலியை எதிர்கொண்ட பிறகு, மெஸ்ஸியை போலவே அவரும் உலகக் கோப்பை மீது கண் வைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.

குரோஷியா, தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இறுதிவரை மேற்கொண்ட முயற்சியை நினைத்துப் பெருமை கொள்ள வேண்டும். 20 வயதான ஆர்.பி லைப்சிக், டிஃபெண்டர் கவார்டியோல் போன்ற நட்சத்திரங்களை அவர்களுக்கு இந்த உலகக் கோப்பை வெளிக்காட்டியுள்ளது.

அடுத்ததாக, பிரான்ஸ் அல்லது மொராக்கோவை அர்ஜென்டினா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருவரில் எவர் இறுதிச்சுற்றுக்கு வந்தாலும் அது மிகக் கடினமான ஆட்டமாகவே இருக்கும்.

கடந்த முறை கோப்பையை வென்ற பிரான்ஸ், சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துக்கொள்ள முழு வேகத்துடன் ஆடி வருகிறது. இன்னொருபுறம், மொராக்கோ அனைவரின் யூகங்களையும் உடைத்து, தொடர்ந்து முன்னேறி வந்துள்ளது.

பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற பெரிய அணிகளிடம் எதிர்பாராத ஆட்டத்தைக் காட்டியுள்ளது மொராக்கோ. ஆகவே, இறுதிச்சுற்றுக்குள் இரண்டில் எந்த அணி வந்தாலும், கோப்பைக்கான இறுதி ஆட்டம் அர்ஜென்டினாவுக்கு எளிதானதாக இருந்துவிடாது.

https://www.bbc.com/tamil/articles/clj3xpglww7o

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மெஸியின் அற்புத ஆற்றல்களால் குரோஷியாவை வீழ்த்திய ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண இறுதிக்கு முன்னேறியது

14 DEC, 2022 | 07:05 AM
image

(நெவில் அன்தனி)

குரோஷியாவுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (13) இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் அணித் தலைவர் லயனல்  மெஸியின் அற்புத ஆட்டத் திறனின் உதவியுடன் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்ற ஆர்ஜன்டீனா, 6 ஆவது தடவையாக பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

1312_argentina_vs_croatia.jpg

போட்டியின் முதலாவது பகுதியில் 5 நிமிட இடைவெளியில் 2 கோல்களையும் இடைவெளையின் பின்னர் ஒரு கோலையும் ஆர்ஜன்டீனா புகுத்தியது.

இந்த வெற்றியை அடுத்து உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கான கடைசி வாய்ப்பு மெஸிக்கு கிட்டியுள்ளது.

1312_argentina_vs_croatia__messi_and_alv

அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் பிரான்ஸுக்கும் மொரோக்கோவுக்கும் இடையிலான 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா எதிர்த்தாடவுள்ளது.

1312_argentina_messi_in_action.jpg

போட்டியின் ஆரம்பத்தில் தசைப்பிடிப்பினால் அவதிக்கு மத்தியில் விளையாடிய லயனல் மெஸி, பின்னர் எவ்வித பிரச்சினையும் இன்றி திறமையாக விளையாடி 35 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.

1312_arg_vs_croatia__2_.jpg

ஜுலியன் அல்வாரெஸை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து குரோஷிய கோல்காப்பாளர் டொமினிக் லிவாகோவிச் முரணான வகையில் வீழ்த்தியதால் ஆர்ஜன்டீனாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை லயனல் மெசி கோலாக்கி தனது அணியை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

1312_arg_vs_croatia__1_.jpg

5 நிமிடங்கள் கழித்து பந்தை வேகமாக நகர்த்திச் சென்ற அல்வாரெஸ், ஆர்ஜன்டீனா சார்பாக 2 ஆவது கோலலைப் புகுத்தினார்.

அதன் பின்னர் ஆர்ஜன்டீனாவின் இரண்டு முயற்சிகளும் குரோஷியாவின்  இரண்டு முயற்சிகளும் தடுக்கப்பட்டது.

1312_argentinianas_celebrate_in_buenors_

இடைவேளையின் போது ஆர்ஜன்டீனா 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு கடும் பிரயத்தனம எடுத்துக்கொண்டன. ஆனால் அந்த பிரயத்தனங்களை இரண்டு அணிகளினதும் கோல்காப்பாளர்கள் தடுத்த வண்ணம் இருந்தனர்.

1312_croatia_supprters_dejected.jpg

எவ்வாறாயினும் போட்டியின் 69 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸி பரிமாறிய பந்தை மிக வேகமாக அல்வாரெஸ் கோலினுள் புகுத்த, ஆர்ஜன்டீனாவின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

croatia_semi_final__2_.jpg

எனினும் தளராமல் விளையாடிய குரோஷியா கோல் போடுவதற்கு பல தடவைகள் முயற்சித்தது. ஆனால், குரோஷியாவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.

argentina_semi_final___2_.jpg

இந்தத் தோல்வியுடன் குரோஷிய அணித் தலைவர் லூக்கா மொட்றிச்சின் உலகக் கிண்ண கனவு கலைந்துபோனதுடன் அவரது 16 வருட சர்வதேச கால்பந்தாட்ட வாழ்க்கை பெரும்பாலும் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் இறுதிச் சுற்றுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

https://www.virakesari.lk/article/143029

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு அணிகளின் விளையாட்டும் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது........!  👏

நன்றி ஏராளன் ......!  

Link to comment
Share on other sites

 
2022 ஃபிஃபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 6வது முறையாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. 

தன்னுடைய 35 வயதில் , ஒரு முறையாவது ஃபிஃபா உலககோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் அவர் விளையாடி வருகிறார். 

மேலும், ஆட்டம் முழுவதும் வாய்ப்புகளை உருவாக்கிய மெஸ்ஸி, 2 முறை சிறப்பாக பந்தை சக வீரர் அல்வாரெசிடம் பாஸ் செய்து கோல் போட முடிவு எடுத்தார். 

இதன் மூலம் அர்ஜென்டினா அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். 

என்னுடைய உலகக்கிண்ண பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலகக்கிண்ணம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அது வரை என்னால் விளையாட முடியுமா என தெரியாது. விளையாடினாலும், இப்படி சிறப்பாக செயல்பட்டு, அணியை பைனலுக்கு வரை கொண்டு செல்வேனா என்றும் தெரியாது. 

வரும் 18ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலகக்கிண்ணத்தை வென்று தருவேன் என நம்புகிறேன். உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக 11 முறை கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார். 

தனது சாதனை குறித்து பேசிய மெஸ்ஸி, சாதனைகள் படைத்தது மகிழ்ச்சி தான். ஆனால், உலகக்கிண்ணத்தை வெல்வதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். 

அது தான் அனைத்தையும் விட மிகவும் அழகானது. இன்னும் நாங்கள் ஒரு அடி அருகே தான் இருக்கிறோம். இறுதிப் போட்டியில் இன்னும் ஒரு முறை கடுமையாக போராடுவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இம்முறை கனவை நினைவாக்க பாடுபடுவோம் என்று மெஸ்ஸி கூறினார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன் இணைப்பிற்க்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவலாக பார்த்த அளவில் ஆர்ஜென்ரினா உலக உதைபந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டுவதை ஐரோப்பிய நாடுகள்  விரும்பவில்லை போல் தெரிகின்றது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோவால் அரையிறுதியில் பிரான்சை வீழ்த்தி கோப்பையை நெருங்க முடியுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
மொராக்கோவால் அரையிறுதியில் பிரான்ஸ் அணியை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிலியன் எம்பாப்பே (இடது), அஷ்ரஃப் ஹக்கிமி

கத்தாரில் நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலக கோப்பையின் முதல் அரையிறுதி முடிந்து அர்ஜென்டினா இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது. அடுத்த அரையிறுதி ஆட்டம் நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மோதப்போகும் பிரான்ஸ், மொராக்கோ ஆகிய இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள்?

பிரான்ஸ், மொராக்கோவுக்கு இடையிலான ஆட்டம், இரண்டு சிறந்த தற்காப்பு அணிகளுக்கு இடையிலான போராட்டமாக இருக்கக்கூடும்.

நாக் அவுட் ஆட்டங்களில் ஒரு கோலைக்கூட விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் பிரான்ஸ் ஆடியது. போலந்து, இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் பெனால்டி ஷாட் கோல்களை மட்டுமே கொடுத்தது.

இந்த உலக கோப்பையின் மொத்த போட்டிகளிலும் மொராக்கோ அணிக்கு எதிராக கனடாவுக்கு கிடைத்த ஒரு கோலை தவிர வேறு எந்த அணியாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

 

அந்த ஒரு கோலும் கூட, மொராக்கோ அணியைச் சேர்ந்த நயெஃப் அகேர்ட் தவறுதலாக அடித்ததால் கனடாவுக்குக் கிடைத்தது.

கத்தாரில் அதிக கோல் அடித்த கிலியன் எம்பாப்பே (5 கோல்கள்) மற்றும் ஒலிவியே கிரூட்(4 கோல்கள்) ஆகிய இருவரும் பிரெஞ்சு அணியில் உள்ளனர்.

கிலியன் எம்பாப்பே, தனக்குப் பழக்கமான அஷ்ரஃப் ஹக்கிமியுடன் மோதவிருக்கிறார். இருவரும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் ஒன்றாக விளையாடுபவர்கள். ஹக்கிமியும் இந்த உலகக் கோப்பையின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக தனிக்கவனம் பெற்று நிற்கிறார்.

இவர்களின் வேகத்தைக் குறைப்பது, மொராக்கோவின் டிஃபண்டர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கும். மொராக்கோ அணியின் ஸ்டிரைக்கர்களில் ஒருவரான வலீத் செத்தீரா, போர்ச்சுகலுடனான காலிறுதி ஆட்டத்தில் ரெட் கார்ட் வாங்கியதால், அவர் அரையிறுதியில் ஆட முடியாது.

பிரான்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களில் சிலருக்கு ஏற்பட்ட காயங்களால், இளம் வீரர்கள் அவர்களுடைய இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கிலியன் எம்பாப்பே

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக, ஊஹெலியான் சூவெய்மென்னி. அவர் சென்ட்ரல் மிட்ஃபீல்டரான என்கோலோ கான்டேவுடைய இடத்தில் பங்கெடுத்து, ஒரு தற்காப்பு மிட்ஃபீல்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் அவர் அருமையான ஒரு கோலை அடித்தார்.

பிரான்ஸிலுள்ள மற்றொரு முக்கிய வீரர் அன்டோய்ன் க்ரீஸ்மேன். இந்த உலகக் கோப்பையில் பிரான்சின் சிறந்த வீரராக, ஐந்து கோல்களை அடிப்பதற்கான வாய்ப்புகளை ஒரு ரைட் மிட்ஃபீல்டராக ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அதை ரசிகர்களும் கவனித்து வருகின்றனர். காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், பிரெஞ்சு அணியின் ரசிகர்கள் அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டி வருகின்றனர்.

இதுவரையிலான ஆட்டங்களில் செய்ததைப் போலவே, மொராக்கோ பொறுத்திருந்து ஆடி, எதிர்த்தாக்குதலைப் பயன்படுத்தி வாய்ப்புகளை உருவாக்க முயலக்கூடும்.

ஆனால், அவர்கள் இதுவரை செய்ததைப் போல், பிரெஞ்சு அணியின் தாக்குதல் ஆட்டம் அவ்வளவு எளிதில் உடைக்கக்கூடியதாகவோ எதிர்த்தாக்குதல் நடத்த ஏற்புடையதாகவோ இல்லாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சோஃபியான் பூஃபால் காலிறுதிப் போட்டியில் கிடைத்த வெற்றிக்கான கொண்டாட்டத்தின்போது...

இருப்பினும், மொராக்கோவின் தற்காப்பு ஆட்டம் இதுவரை இந்த உலகக் கோப்பையில் சிறந்த தற்காப்பு ஆட்டமாக இருந்து வருகிறது.

அட்லஸ் லயன்ஸ் எனப் பெயர் பெற்ற அவர்களுடைய அந்தத் தற்காப்பு ஆட்டமே, குரோஷியா, ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுகல் என்று எந்த அணியையும் கோல் அடிக்க விடாமல் தடுத்துள்ளது.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயினுக்கு எதிராக மொராக்கோ பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றபோது, அதன் கோல் கீப்பர் யசின் பூனோ இரண்டு ஸ்பாட் கிக்குகளை தடுத்துக் காப்பாற்றினார்.

அவர்களுடைய தற்காப்பு யுக்தியையும் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் பேக் ஃபோரில் ஆடிய நயெஃப் அகேர்டும் நுசேர் மஸ்ரவி இருவரும் போர்ச்சுகலுடனான போட்டியில் காயம் காரணமாக பங்கு பெறவில்லை.

சென்டர்-பேக் ரொமைன் சைஸ், அந்தப் போட்டியின்போது காயமடைந்தார். இவர்கள் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் பங்கெடுப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

அதேவேளையில், மொராக்கோவை பொறுத்தவரை, வீரர்கள் மாறினாலும் ஆட்டம் மாறுவதில்லை. அவர்களுடைய தற்காப்பு ஆட்டத்தை உடைப்பது மிகவும் கடினமானது என்ற பெயரைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்கள்.

பிரான்ஸிலுள்ள மற்றொரு முக்கிய வீரர் அன்டோய்ன் க்ரீஸ்மேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரான்ஸிலுள்ள மற்றொரு முக்கிய வீரர் அன்டோய்ன் க்ரீஸ்மேன்

1958, 1962 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பைகளை பிரேசில் வென்றது. அதைப் போன்ற சாதனையை நடப்பு சாம்பியனான பிரான்ஸ் செய்ய வேண்டுமென்ற இலக்கோடு ஆடி வருகிறது.

கால்பந்து உலக கோப்பையில் ஏழாவது முறையாக பிரான்ஸ் முதல் நான்கு இடங்களுக்குள் வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு குரோஷியாவை இறுதிச்சுற்றில் எதிர்கொண்டது. அரையிறுதியில் வென்றால், இந்த முறை அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும்.

ஃபிஃபா 2022 தொடங்கிய நேரத்தில், தரவரிசைக்கு வெளியே மொராக்கோ இருந்தது. இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பிரான்சும் மொராக்கோவும் இதுவரை, உலகக் கோப்பை போட்டிகளில் மோதியதில்லை. இதற்கு முன்பு 1963ஆம் ஆண்டில் மட்டுமே மொராக்கோ பிரான்ஸை தோற்கடித்துள்ளது.

பிரான்ஸ் அணி, எதிரணியிடம் அதிமான நேரம் பந்து இருக்க விட்டாலும்கூட, எதிரணியைத் தாக்குவதற்கான தருணத்திற்குக் காத்திருப்பதே அதன் யுக்தியாக இதுவரை இருந்துள்ளது.

அஷ்ரஃப் ஹக்கிமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது இங்கிலாந்துக்கு எதிராக பயனுள்ள உத்தியாக இருந்தது. இதே அணுகுமுறை கடந்த உலக கோப்பையிலும் அவர்களுக்குப் பலனளித்தது.

ஆனால் மொராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில், பந்தை தன் வசம் அதிகமாக வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதுகூட, பிரான்ஸில் உள்ள அட்டாக்கிங் வீரர்களுக்குக் கடினமாக இருக்காது.

ஆனால், மொராக்கோவின் யுக்தியாக இன்னமும் கடுமையான தற்காப்பு ஆட்டமே உள்ளது. அது கடந்த ஐந்து போட்டிகளிலும் சராசரியாக 32 சதவீதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.

இது எந்த அணியிடமும் இல்லாத அளவுக்குக் குறைவான நேரம். அதிலும் காலிறுதியில் போர்ச்சுகலை வெளியேற்றிய ஆட்டத்தில், வெறும் 26 சதவீதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.

இதில் மொராக்கோ வீரர்களின் ஊடுருவ முடியாத தற்காப்பு ஆட்டமும் சோஃபியான் பூஃபால் போன்றோரின் வேகமான எதிர்த்தாக்குதல் திறனைச் சார்ந்திருக்கும் யுக்தி வேலை செய்ததே வெற்றி பெறக் காரணம்.

இரண்டு அணிகளுமே சிறப்பான எதிர்த்தாக்குதலையும் தற்காப்பையும் கொண்டிருக்கும் சூழலில், இந்த அரையிறுதிப் போட்டி ஒருவேளை அர்ஜென்டினா-குரோஷியா போட்டியை விடவும் சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/c51qzee3v3wo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலவான்களை வீழ்த்திய மொரோக்கோவிடம் பிரான்ஸ் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம்

By DIGITAL DESK 5

14 DEC, 2022 | 04:13 PM
image

(நெவில் அன்தனி)

பலவான்களை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய முதலாவது ஆபிரக்க நாடான மொரோக்கோவிடமிருந்து பீபா உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் பிரான்ஸ்  கடும்  சவாலை எதிர்கொள்ளலாம் என கருதப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதிப் போட்டி கத்தார் அல் பெய்த் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று புதன்கிழமை (14) நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் வெற்றிகொண்ட பிரான்ஸ், 60 வருடங்களின் பின்னர் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இத்தாலி (1934, 1938), பிரேஸில் (1958, 1962) ஆகிய இரண்டு நாடுகளே உலகக் கிண்ணத்தை அடுத்தடுத்த இரண்டு அத்தியாயங்களில் வென்றிருந்தன.

ஒரு காலத்தில் பிரான்ஸின் காலனித்துவ ஆட்சியியின்கீழ் மொரோக்கோ இருந்தது. தற்போது நூறாயிரக்கணக்கான மொரோக்கோ வம்சாவழிகள் பிரான்ஸில் வாழ்ந்து வருவகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வரலாறுகளைக் கொண்ட இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இன்றைய உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி மற்றைய போட்டிகளை விட வியத்தகு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகம், விவேகம், சிறந்த பந்துபரிமாற்றம் ஆகியவை கலந்த வியூகங்களுடன் பிரான்ஸ் அணியினர் விளையாடிவரும் அதேவேளை, மொரோக்கோ அணியினர் ஆக்ரோஷ குணாம்சத்துடன் கடுமையாக விளையாடிவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.. எனவே, பிரான்ஸின் விவேகத்திற்கும் மொரோக்கோவின் ஆக்ரோஷத்திற்கும் இடையிலான போட்டியாக இன்றைய அரை இறுதி அமையவுள்ளது.

பிரான்ஸும் மொரோக்கோவும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த இரண்டு நாடுகளும் இதற்கு முன்னர் விளையாடிய 5 சர்வதேச சிநேகபூர்வ போட்டிகளில் பிரான்ஸ் 3 போட்டிகளில் வெற்றிபெற்றதுடன் மற்றைய 2 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

மேலும், உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆபிரிக்க நாடுகளுடன் விளையாடிய 6 போட்டிகளில் பிரான்ஸ் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2002 உலகக் கிண்ணப் போட்டியில் செனகலிடம் 0 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பிரான்ஸ், இந்த வருடம் டியூனிசியாவிடம் 0 - 1 என தோல்வி அடைந்தது.

ஆனால், உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே அத்தியாயத்தில் இரண்டு ஆபிரிக்க நாடுகளிடம் எந்தவொரு நாடும் தோல்வி அடைந்ததில்லை. அந்த வரலாற்றை மொரோக்கோ மாற்றி அமைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதியில் 7ஆவது தடவையாக விளையாடும் பிரான்ஸ், தனது முதல் 3 முயற்சிகளில் (1958, 1982, 1986) தோல்வி அடைந்தது. கடைசியாக விளையாடிய 3 சந்தர்ப்பங்களில் (1998, 2006, 2018) பிரான்ஸ் வெற்றிபெற்றதுடன் 1998இலும், 2018இலும் உலக சம்பியனாகியிருந்தது.

மொரோக்கோவைப் பொறுத்த மட்டில் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாடும் முதலாவது ஆபிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளதுடன் முதலாவது ஆபிரிக்க நாடாக இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கு முயற்சிக்கவுள்ளது.

2022 உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை மொரோக்கோ மாத்திரமே தோல்வி அடையாத அணியாக இருக்கிறது. அத்துடன் அவ்வணிக்கு எதிராக 5 போட்டிகளில் எந்த ஒரு அணியும் கோல் போடவில்லை. கனடாவுக்கான கோலை மொரோக்கோ வீரர் நயெவ் அகுவர்ட் சொந்த கோலாக போட்டுக்கொடுத்திருந்தார்.

அரை இறுதிக்கு கடந்த வந்த பாதை

டி குழுவில் இடம்பெற்ற பிரான்ஸ் தனது முதலிரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியாவையும் (4 - 1), டென்மார்க்கையும் (2 - 1) வெற்றிகொண்டு 2ஆம் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துகொண்டிருந்தது. ஆனால் கடைசிப் போட்டியில் டியூனிசியாவிடம் (0 - 1) தோல்வி அடைந்தது.

16 அணிகள் சுற்றில் போலந்தை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற  கோல்கள்   வித்தியாசத்திலும் வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட பிரான்ஸ் தகுதிபெற்றது.

எவ் குழுவில் குரோஏஷியாவுடனான தனது ஆரம்பப் போட்டியை வெற்றிதோல்வியின்றி  (0 - 0)  முடித்துக்கொண்ட மொரோக்கோ, அடுத்த இரண்டு போட்டிகளில் பெல்ஜியத்தையும் (2 - 0) கனடாவையும் (2 - 1) வெற்றிகொண்டு 2ஆம் சுற்றுக்கு முன்னேறியது.

2ஆம் சுற்றில் மேலதிக நேரம்வரை நீடித்த ஸ்பெய்னுடான போட்டியை வெற்றிதோல்வியின்றி (0 - 0) முடித்துக்கொண்ட மொரோக்கோ, 3 - 0 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

கால் இறுதியில் போர்த்துக்கலை 1 - 0 என வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அணிகள் (பெரும்பாலும் முதல் 11 வீரர்கள்)

france_...jpg

பிரான்ஸ்: ஹியூகோ லோரிஸ், ஜூல்ஸ் கௌண்டே, ரபாயல் வரேன், டெயோட் உப்பாமெக்கானோ, தியோ ஹெர்னாண்டெஸ், ஒரேலியன் டிச்சவாமெனி, ஏட்றியன் ரேபியட், உஸ்மான் டெம்பேல், அன்டொய்ன் கிறீஸ்மான் (தலைவர), கிலியான் எம்பாப்பே, ஒலிவர் கிரூட்.

2311_morocco_squad.jpg

மொரோக்கோ: யாசின் பூனூ, அஷ்ரப் ஹக்கிமி, ஜவ்வாத் எல் யாமிக், ரொமெய்ன் சாய்ஸ் (தலைவர்), நவ்செய்ர் மஸ்ராவூய், அஸேதின் ஒளனாஹி, சொபியான் அம்ராபத், சலிம் அமல்லா, ஹக்கிம் ஸியெச், என்-நெசிரி, பவ்பல்.

https://www.virakesari.lk/article/143096

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோவின் சிங்கம் போன்ற ஆட்டம் – தோற்றாலும் வரலாறு படைத்த வீரர்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரான்ஸ் வெற்றியைத் தொடர்ந்து, மொராக்கோ வீரரும் கிலியன் எம்பாப்பேவுடன் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்புக்காக விளையாடியவருமான அஷ்ரஃப் ஹக்கிமியை அரவணைக்கும் எம்பாப்பே

பிரான்ஸ் அணி, மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழையவிருக்கிறது. இறுதிச்சுற்றில் பிரான்ஸ், அர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது.

மொராக்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டின் கால்பந்து அணிக்கு அட்லஸ் லயன்ஸ் என்று பெயர். அவர்களுடைய பெயருக்கு ஏற்றாற்போலவே, பிரான்ஸ் உடனான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் செயல்பட்டார்கள்.

இந்த ஆண்டின் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே, தனக்கு எதிராக ஆடிய எந்த அணிக்கும் ஒரு கோலை கூட விட்டுக்கொடுக்காமல் ஆடிய மொராக்கோ அணியின் எல்லைக்குள் புகுந்த தியோ ஹெர்னாண்டெஸ், அரையிறுதி ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே பிரான்ஸ் அணிக்காக ஒரு கோலை அடித்தார்.

யசின் பூனோவின் தற்காப்பைக் கடந்து அதைச் சாத்தியமாக்கியதன் மூலம் கத்தாரில் மொராக்கோவுக்கு எதிராக முதல் கோலை அடித்த பெருமையை அவர் பெற்றார்.

 

ஆறு மொராக்கோ  வீரர்கள் எம்பாப்பே அடிக்க முயன்ற கோலை தடுத்து கோல் பாக்ஸ் எல்லைக்குள் இருந்து வெளியே தள்ளினார்கள். ஆனால், அந்த நேரம் பார்த்து அந்த இடத்திற்கு அருகில் வந்த தியோ ஹெர்னாண்டெஸ் சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தினார்.

கோல் கீப்பர் யசின் பூனோ, தற்காப்பு ஆட்டக்காரர்களான அஷ்ரஃப் தாரி, ரொமைன் சைஸ் ஆகியோர் அதைத் தடுக்க முயன்றபோதும், அவர்களுக்கு நடுவில் புகுந்து சென்ற பந்து மொராக்கோவுக்கு முதல் இடியாக இறங்கியது.

ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில், ஒரு கோல் முயற்சியைத் தடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத தருணத்தில் விழுந்த அந்த கோல், பிரான்ஸ் ரசிகர்களுக்கு அபாரமான நம்பிக்கையையும் மொராக்கோ ரசிகர்களின் முகத்தில் என்ன நடந்தது என்ற அதிர்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியது.

ஆரம்பத்திலேயே நிகழ்ந்த அந்தப் பின்னடைவை நிவர்த்தி செய்ய, கடுமையான எதிராட்டத்தை மொராக்கோ நிகழ்த்தியது. வழக்கமாக குறைந்த நேரமே பந்தை தங்கள் ஆளுமையில் வைத்திருக்கும் அவர்கள், இந்தப் போட்டியில் அதிக நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆட்டத்தை ஆடினர்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மொராக்கோவுக்கு எதிரான முதல் கோலை அடித்த பெருமையைப் பெற்றார், பிரெஞ்சு வீரர் தியோ ஹெர்னாண்டெஸ்

முதல் பாதி முடிந்தபோது, இரு அணிகளுக்குமே அழுத்தம் அதிகமாக இருந்தது. மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோலை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியாது என்ற அழுத்தத்தில் பிரான்ஸ். ஒரு கோல்கூட எடுக்காமல் இருந்ததால், எப்படியாவது ஒரு கோல் அடித்து சமன் செய்து, வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் மொராக்கோ.

பிரான்ஸ் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தபோதிலும், ராண்டால் கோலோ முவானி, 79வது நிமிடத்தில் களமிறங்கி கோல் அடிக்கும் வரை அவர்களால் மொராக்கோவுக்கு எதிராக இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை.

அந்த கோலின் மூலம், 1962ஆம் ஆண்டில் பிரேசில் செய்த சாதனைக்குப் பிறகு, உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாகத் தக்க வைக்கும் வாய்ப்பு பிரான்சுக்கு கிடைத்துள்ளது.

உலகக்கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்ற மொராக்கோ, சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு குரோஷியாவுடன் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்காக மோதுகிறது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிர்ச்சியில் உறைய வைத்த முதல் கோல்

முதல் கோலுக்காக, ஹெர்னாண்டெஸ் தனது இடது பாதத்தை உயரமாக உயர்த்தி, மொராக்கோ வீரர்கள் தட்டிவிட்டுப் பறந்து வந்த பந்தை உதைத்தார். அன்டோய்ன் கிரேஸ்மேன் தொடங்கி வைத்து, அவரிடமிருந்து பந்தைப் பெற்று கிலியன் எம்பாப்பே அடிக்க முயன்ற கோலை, அவர் அந்த நகர்வின் மூலம் முடித்து வைத்தார்.

அந்த நிமிடம், உலகக்கோப்பையில் அவர்களுக்கு எதிராக விழுந்த அந்த கோல், மொராக்கோ அணியை வலுவிழக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து கேப்டன் ரொமைன் சைஸ் 20வது நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அதோடு, கடைசி நிமிடத்தில் நயீஃப் அகேர்டை அஷ்ரஃப் தாரிக்கு பதிலாகக் களமிறக்கியது, முந்தைய போட்டியில் இருந்த டிஃபண்டர் வரிசையைக் கொஞ்சம் குலைத்தது.

அகேர்டுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய செயல்பாடு குறித்து கவலைகள் இருந்தன. அப்படியிருந்தும் அவர் அணியின் முதல் வரிசையில் கொண்டுவரப்பட்டார்.

இந்த இடையூறுகளை பிரான்ஸ் ஸ்டிரைக்கர் ஒலிவியே கிரூட் நன்கு பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து மொராக்கோவின் கோல் போஸ்டை  தாக்கினார். மிட்ஃபீல்டர் ஊஹெலியான் சூவெய்மென்னியிடம் பெற்ற பந்தை தெளிவான கோல் ஷாட்டில் அடிக்க முயன்றார். ஆனால், அது தவறியது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்படியாக, பிரெஞ்சு அணி எதிரணியிடம் இருந்த சின்னச்சின்ன சறுக்கல்களைக்கூட விடாமல் நன்கு பயன்படுத்தியது.

இருப்பினும், இதற்கெல்லாம் அஞ்சாமல் மொராக்கோ எதிர்த்தாக்குதல் ஆட்டத்தையும் கடுமையான தற்காப்பு ஆட்டத்தையும் ஆடியது. அஸெடின் ஒனாஹியின் இரண்டு அருமையான கோல் ஷாட்கள், பிரெஞ்சு கேப்டன் ஹுயூகோ லோரிஸின் முயற்சியால் தடுக்கப்பட்டது. அவருடைய தடுப்பு ஊகத்தினால் நடந்திருந்தாலும், அது பிரெஞ்சு அணிக்கு அதிர்ஷ்டமாகவும் மொராக்கோவுக்கு துரதிர்ஷ்டமாகவும் அமைந்துவிட்டது.

பிரெஞ்சு வெற்றி பெற்றிருந்தாலும், போட்டி முழுவதுமே மொராக்கோவின் ஆட்டம் அவர்களை அச்சுறுத்தியது. நடப்பு சாம்பியன், மிகவும் விரும்பப்படும் அணி. ஆனால், அதை அசைத்துப் பார்த்துவிட்டது, அட்லஸ் லயன்ஸ் சிங்கங்களின் வேகம். இபாஹிமா கொனாடே, ரஃபேல் வரானே ஆகியோர், என்-நெசிரி, பூஃபால் ஆகியோர் பற்ற வைத்த நெருப்பை அணைக்க முயன்றன.

நேரம் போகப் போக, பிரெஞ்சு அணி மொராக்கோவின் தாக்குதலைத் தடுப்பதற்கு அவர்களுடைய கணிப்புகளையும் முடிவுகளையும் விட அதிர்ஷ்டத்தைப் பெரிதும் நம்பும் அளவுக்கு, எதிரணியின் ஆட்டம் எதிர்பார்க்க முடியாத வகையில் இருந்தது. ஆம், அந்த சிங்கங்களின் கர்ஜணை அவர்களை அந்த அளவுக்கு அச்சுறுத்தியது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோற்றாலும் வரலாறு படைத்த சிங்கங்கள்

மொராக்கோ தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், உலக கால்பந்து ரசிகர்களிடையே ஒரு நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது. கால்பந்து உலகில் மரியாதையைப் பெற ஒரு அணிக்கு இருப்பது வெறும் 90 நிமிடங்களே. அந்தத் தொன்னூறு நிமிடங்களில் இருக்கும் மரியாதை போகலாம் அல்லது வானளாவிய மரியாதை கிடைக்கலாம்.

அப்படிப்பட்ட அந்த 90 நிமிடங்களுக்குள் தோற்றிருந்தாலும், வரலாற்றுக் கவனம் பெற்றுள்ளது மொராக்கோ. தாங்கள் வரலாறு படைத்துள்ளதாக மொராக்கோ ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சாதாரண வரலாறல்ல. கால்பந்து ஜாம்பவான் அணிகளில் ஒன்றான பிரான்ஸை மிரள வைத்து, வரலாறு படைத்திருக்கிறார்கள்.

தங்கள் அணியினர் நாடு திரும்பும்போது, அவர்களைக் கைநீட்டி, அன்பைப் பொழிந்து வரவேற்க அவர்கள் காத்திருக்கின்றனர். கால்பந்து உலகில் தங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கிவிட்டு வீடு திரும்பும் அவர்களைக் கொண்டாட மொராக்கோ மக்கள் காத்திருக்கின்றனர்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மொராக்கோ ரசிகர்களை நோக்கியவாறு தரையில் தலை தாழ்த்தி மரியாதை செலுத்தும் மொராக்கோ அணியினர்

ஸ்பெயின், போர்ச்சுகல் என்று தோற்கடிக்க முடிந்த மொராக்கோ, பிரான்ஸ் போன்ற அணியைத் தோற்கடிக்க இன்னும் மேம்பட வேண்டும். ஆனால், அதற்காக அவர்களைச் சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது என்பதை நிரூபித்துள்ளார்கள்.

அணியின் மேனேஜர் வலித் ரெக்ரகீ, வீரர்களிடம் “மொராக்கோ அரசர் உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறார். மொராக்கோ மக்கள் பெருமைப்படுகிறார்கள். மொத்த உலகமும் இந்த அணியைப் பார்த்து பெருமைப்படுகிறது” எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, மொராக்கோ வீரர்கள் அனைவரும் இணைந்து கட்டிப்பிடித்துக் கொண்டனர். முன்னால் நகர்ந்து வந்து, ரசிகர்களை நோக்கியவாறு மண்டியிட்டு, தரையில் தலையைத் தாழ்த்தி, ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். ரசிகர்களின் கொண்டாட்ட கோஷங்கள் மைதானம் முழுக்க எதிரொலித்தன.

https://www.bbc.com/tamil/articles/ckdr45kd881o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸியின் மெர்சல் ஆட்டம் இறுதிப்போட்டியை வெல்லக் கைகொடுக்குமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போ, அப்போ என இந்த ஆண்டு முழுக்கக் காத்துக் கொண்டிருந்தோம். பிறகு இப்போதுதான் தொடங்கியதைப் போலிருந்தது.

ஆனால், ஆட்டம் எப்படி 90 நிமிடங்களுக்குள் விறுவிறுப்பாகச் செல்லுமோ அதேபோல் உலகக்கோப்பை போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, 32 அணிகளில் அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதப்போகும் இறுதிப்போட்டியும் வந்துவிட்டது.

கத்தாரில் நடைபெறும் இந்த ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பை ஏராளமான தோல்விகளைச் சந்தித்தது, வெற்றிகளை ருசித்தது. அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு, கால்பந்து உலகில் பாரம்பரியமாக முன்னணியில் இருந்து வரும் இரண்டு பெரிய அணிகள் மோதவிருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பிரான்ஸ், தொடர் வெற்றியோடு சாதனை படைக்க வேண்டுமென்று, கிட்டத்தட்ட ஒரு டன் அளவுக்குக் கனமான அழுத்தம் அவர்கள் தலையில் உள்ளது. அதைவிட அதிகமான அழுத்தம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது. ஆம், 36 ஆண்டுகால கனவாயிற்றே!

 

ஆக, இந்தப் போட்டி, மறுக்க முடியாத ஒன்றாக, கவர்ச்சிகரமானதாக இருக்கப் போகிறது.

பிரான்ஸ் தரப்பில் கிலியன் எம்பாப்பே சிறந்த வீரராக, இந்தத் தொடரில் ஐந்து கோல்களுடன் இருக்கிறார். அர்ஜென்டினா தரப்பில், கால்பந்து வரலாற்றிலேயே சிறந்த வீரராகக் கூறப்படும் லியோனெல் மெஸ்ஸியும் இந்தத் தொடரில் ஐந்து கோல்களுடன் இருக்கிறார்.

மெஸ்ஸி உலகக்கோப்பைக்கு முன்பாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்புக்காக விளையாடியபோது, இருவரும் ஒன்றாக விளையாடினார்கள்.

கால்பந்து இறுதிப்போட்டி எங்கு நடக்கிறது?

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடக்கவுள்ளது. உள்ளூர் நேரப்படி, டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெறும்.

இரண்டு அணிகளும் இந்தத் தொடரில் இதுவரை எப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன, எவ்வளவு கோல்களை அடித்துள்ளன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிலியன் எம்பாப்பே

அர்ஜென்டினா அணியைப் பொறுத்தவரை, இந்தப் போட்டிகளில் மெக்சிகோ(2-0), போலாந்து(2-0), ஆஸ்திரேலியா(2-1), காலிறுதியில் நெதர்லாந்து(2-2, 4-3 பெனால்டிகள்), அரையிறுதியில் குரோஷியா(3-0) ஆகிய அணிகளைத் தோற்கடித்துள்ளது. குரூப் சுற்றில் ஆடிய முதல் போட்டியில் மட்டும் சௌதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தத் தொடரில் இதுவரை அர்ஜென்டினா அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 12. அர்ஜென்டினாவுக்கு எதிராக இதுவரை அடிக்கப்பட்ட கோல்களின் எண்ணிக்கை, 5.

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியா(4-1), டென்மார்க்(2-1), போலாந்து(3-1), காலிறுதியில் இங்கிலாந்து(2-1), அரையிறுதியில் மொராக்கோ(2-0) ஆகிய அணிகளைத் தோற்கடித்துள்ளனர். குரூப் சுற்றின் மூன்றாவது போட்டியில், துனிசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை தொடர் முழுவதும் பிரான்ஸ் இதுவரை 13 கோல்களை அடித்துள்ளது. அதற்கு எதிராக இதுவரை 5 கோல்கள் அடிக்கப்பட்டன.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெஸ்ஸியை எதிர்கொள்ளப் போகும் எம்பாப்பே

கால்பந்து உலகின் இந்த இரண்டு முக்கியமான சக்திகள் மோதும் போட்டி ஒரு காவியமாக இருக்கலாம். கடந்த உலகக்கோப்பையில் பிரான்சும் அர்ஜென்டினாவும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதியது ஒரு மறக்கமுடியாத போட்டியாக அமைந்தது.

பிரான்ஸ் அணி, எதிரணியிடம் அதிக நேரம் பந்தை இருக்க விட்டாலும்கூடஅந்த முறையும் எதிரணியைத் தாக்குவதற்குச் சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்து, கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளையும் துல்லியமாகப் பயன்படுத்தும். அவர்களுடைய இந்த யுக்தியை வைத்து தான், கடந்த உலகக் கோப்பையில் வெற்றியடைந்தார்கள், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தினார்கள்.

அப்போது, ஆட்டம் முழுவதும் 39% தான் பந்து பிரான்ஸ் வசமிருந்தது, மீதி 61% நேரத்திற்கு அர்ஜென்டினாவின் கால்களில் தான் பந்து இருந்தது. இரண்டு அணிகளுமே கோல் போஸ்டை நோக்கி துல்லியமான 4 ஷாட்களை அடித்தன. அதில், அர்ஜென்டினாவால் மூன்று முறை கோலாக்க முடிந்தது. ஆனால், பிரான்ஸ் இலக்கைக் குறி வைத்து அடித்த நான்கு ஷாட்களையுமே கோலாக்கியது.

2018ஆம் ஆண்டில் தன்னை வீழ்த்திய குரோஷியாவை அதேபோல 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது. இப்போது இறுதிப்போட்டியிலும் அதேபோல், 2018ஆம் ஆண்டில் தங்களைத் தோற்கடித்து, நாக் அவுட் செய்த பிரான்ஸ் அணியையும் வீழ்த்துவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. அது சாத்தியமா?

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹுலியன் ஆல்வாரெஸ்

இரண்டு பக்கமும் பெரும் நட்சத்திரங்கள் உள்ளன. எம்பாப்பேவால் சுயமாக கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றாலும், பிரான்ஸ் சமநிலையான தாக்குதல் யுக்தியைக் கொண்டுள்ளது.

அர்ஜென்டினா அணி முற்றிலும் மெஸ்ஸியை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணமும் உண்டு. அவர் இந்தத் தொடரில் நிறைய பங்களிப்புகளைக் கொடுத்துள்ளார்.

அணிகளாக மட்டுமின்றி, மெஸ்ஸியும் எம்பாப்பேவும் இந்தத் தொடரின் அதிக கோல் ஸ்கோரர் ஆவதற்காகவும் மோதுகின்றனர். அவர்கள் இருவருமே ஐந்து கோல்களுடன், இந்தத் தொடரின் முன்னிலையைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போலவே, பிரான்ஸ் அணியின் ஒலிவியே கிரூடும் அர்ஜென்டினாவின் ஹூலியன் ஆல்வாரெஸும் நான்கு கோல்களுடன் இருக்கின்றனர்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரான்ஸ் அணியின் ஒலிவியே கிரூட்

அர்ஜென்டினாவின் 36 ஆண்டுகால கனவு

1934, 1938 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு முறை இத்தாலி உலகக்கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 1958, 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பிரேசில் உலகக்கோப்பையை வென்றது. இப்போது மூன்றாவது முறையாக பிரான்சுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த முறையும் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினால், பிரான்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை உயர்த்தும். கடந்த ஏழு உலகக்கோப்பை தொடர்களில், 1998, 2018 ஆகியவற்றில் பிரெஞ்சு அணி வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டு இறுதிச்சுற்று வரை வந்து தோல்வியடைந்தது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜென்டினா, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 1930, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை வந்துள்ளது. இறுதிச்சுற்றுக்குள் அர்ஜென்டினா ஆறாவது முறையாக வருகிறது.

அர்ஜென்டினாவில் ஒட்டமெண்டி, டி பால், ஸ்டிரைக்கர் ஆல்வாரெஸ், கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ், பரேடெஸ், மெக் ஆலிஸ்டர் என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் உள்ளனர். அவர்கள் கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற துடிப்போடும் இருக்கின்றனர்.

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை தியோ ஹெர்னாண்டெஸ், கிரேஸ்மேன், கிரூட், கொனாடே, வரானே, சூயிமென்னி என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் உள்ளனர். இவர்களும் இரண்டாவது முறை சாம்பியனாகவும் வேண்டுமென்ற வெறியோடு ஆடி வருகின்றனர்.

அர்ஜென்டினாவை பொறுத்தவரை, தாக்குதல் ஆட்டம் நன்றாக இருக்கும் என்றாலும் தற்காப்பு ஆட்டம் பிரான்சிடம் சிறப்பாக உள்ளது. அர்ஜென்டினாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களான மொலினா, ஒட்டமெண்டி, ரொமேரோ போன்றோர் அதற்கு ஈடுகொடுக்க கூடுதலாக மெனக்கெட வேண்டியிருக்கும்.

அதேவேளையில், பிரான்சின் எதிர்த்தாக்குதல் நன்றாக இருந்தாலும், அர்ஜென்டினாவின் தாக்குதல் ஆட்டம் அபாரமானது. ஆட்டத்தின் எந்த நேரத்திலும் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் மேஜிக்கை மெஸ்ஸி, ஆல்வாரெஸ் நிகழ்த்தி வருகின்றனர். ஆகவே பிரான்சுக்கும் சவால்களில் குறை ஏதுமில்லை.

https://www.bbc.com/tamil/articles/cldnq7zxrvno

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் 2022: கொதிக்கும் மைதானம், சூட்டை தணிக்க பணத்தை தண்ணீராக செலவழிப்பது ஏன்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பீட்டர் பால்
  • பதவி,பிபிசி உலக சேவை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
கத்தார் உலக கோப்பை 2022

பட மூலாதாரம்,REUTERS

உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி மைதானத்துக்கு 300 டன் அளவுக்கு மிகவும் தாராளமாக தண்ணீர் உபயோகிக்கப்பட உள்ளது.

பாலைவன பிரதேசமாக அறியப்படும் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. அங்கு இப்போது குளிர்காலம். ஆனாலும் சராசரியாக 25 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே நிலவுகிறது. இந்த வெப்பத்தை கூட அங்கு தாங்க முடியவில்லை என்று சொல்கின்றனர்.

எனவே மைதானத்தையும், மைதானத்தில் உள்ள பிட்சுகளையும் குளிர்விக்க லிட்டர், லிட்டராக தண்ணீர் செலவிடுகிறது போட்டிக்கான அமைப்புக்குழு.

கத்தார் முழுவதும் பரந்து விரிந்துள்ள போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான 10க்கும் மேற்பட்ட மைதானங்களில் பிட்ச்களின் புல்வெளியை அழகாக வைத்திருக்க, கத்தாரின் சமாளிக்க முடியாத வறண்ட வானிலையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் தண்ணீரை, மைதானத்தின் ஊழியர்கள் தெளித்தனர்.

 

சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும் முயற்சி, தங்களின் சொந்த வளர்ச்சி, முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்துவதை எதிர்கொள்ளல் ஆகியவற்றுக்கு இடையே உலகிலேயே மிகவும் அதிக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கத்தாரில் இது போன்று அதிக அளவிலான தண்ணீரை உபயோகிப்பது முக்கியத்துவம் வாய்ந்த சவாலாக கருதப்படுகிறது.

பாலவன தேசம்

முதலில் திட்டமிட்டபடி கோடையில் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தால், 136 பயிற்சி ஆடுகளங்களுடன் ஒரு நாளைக்கு 50,000 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டிருக்கும்.

இதர நாடுகளில் இதுபோன்ற விளையாட்டு மைதானங்களை தயாரிப்பதை விடவும் கத்தாரின் முதல்தரமான விளையாட்டு மைதானத்தை தயாரிப்பது பல்வேறு கட்ட சவால்களை கொண்டிருந்ததாக மைதானத்தின் ஊழியர்கள் சொல்கின்றனர்.

போட்டிகளின் போது அவசர தேவைக்கு என 40 பிட்ச்களுக்காக தாகாவுக்கு வடக்கே புல்வெளி பராமரிக்கப்பட்டது. 4,25,000 சதுர மீட்டரில் வளர்க்கப்பட்ட புற்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் உபயோகிக்கப்பட்டது.

போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான பிட்ச்களுக்கு கடல் நீர் செயற்கைமுறையில் நல்ல நீராக மாற்றப்பட்டு பயன்படுத்ததப்பட்டது.

"இயற்கையிலேயே கிடைக்கக் கூடியதாக உள்ள தண்ணீர் வளத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தால், கத்தாரில் 14000 பேர் மட்டுமே வசிக்க முடியும்," என கத்தார் பல்கலைக்கழகத்தில் கடல்சார் அறிவியல் இணைப் பேராசிரியர் ரதுவான் பென்-ஹமடோ கூறினார்.

"கொஞ்சம் தண்ணீரை மட்டும் சார்ந்திருந்தால் உலகக் கோப்பைக்கு என அமைக்கப்பட்ட மைதானங்களில் கால் பங்கைக்கூட தயார் செய்திருக்க முடியாது, கத்தாரில் ஆறுகள் இல்லை. ஆண்டுக்கு 10 செ.மீ அளவுக்கு குறைவாகவே மழை பெய்கிறது," என்றும் அவர் கூறினார்.

கத்தார் உலக கோப்பை 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகரிக்கும் பிரச்னைகள்

இந்த பாலவன தேசத்தில் 29 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இயற்கையாகவே கிடைக்கக் கூடிய கத்தாரின் நீர் ஆதாரங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மற்றும் உண்மையான மக்கள் தொகை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தில் கூடுதலாகத் தேவைப்படும் தண்ணீரை எங்காவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொருளாக இருக்கிறது.

"அதிக அளவிலான தண்ணீர், சுத்திகரிக்கப்படுவதன் மூலமே கிடைக்கிறது. ஏறக்குறைய 100 சதவிகித தண்ணீர் தனிப்பட்ட வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படுகிறது," என்கிறார் சுற்றுச்சூழல், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு அறிவியலுக்கான இங்கிலாந்து மையத்தின் மத்திய கிழக்கு திட்ட இயக்குநர் டாக்டர் வில் லீ கியூஸ்னே.

சுத்திகரிப்பு முறையில் கடலில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, அதில் இருந்து உப்பு மற்றும் இதர அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன‍. அதன் பின்னர் இந்த தண்ணீர் குடிப்பதற்கு அல்லது கழுவுதற்கு உகந்ததாக மாற்றப்படுகிறது. இந்த வழியில்தான் கத்தார் அதிக அளவுக்கு தண்ணீரை உற்பத்தி செய்கிறது.

ஆனால், உலக கோப்பை போன்ற விளையாட்டு நிகழ்வுகள் திட்டமிடும்போது தொடர்ந்து தேவை அதிகரிக்கிறது. எனவே மேலும் அதிக அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.

கத்தாருக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் போட்டிகளை காண வருகை தந்ததால் தண்ணீர் உபயோகம் 10 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்தது.

 

2050 ஆம் ஆண்டில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 80 பில்லியன் லிட்டராக நான்கு மடங்கு அதிகரிக்கும். ஆனால், கத்தாரில் வரம்பற்ற கடல் நீர் விநியோகம் உள்ளது. மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பை கொண்டுள்ளது. இதே போல பெரிய அளவிலான தண்ணீரை உற்பத்தி செய்யத் தேவையான பெரும் அளவு நிதி ஆதாரங்கள் தேவை.

இந்த செயல்முறைக்கு பெரும் அளவுக்கு எரிசக்தி தேவைப்படும் என்பது ஒரு பெரிய குறைபாடாக உள்ளது.

உப்புநீக்கும் சுத்திகரிப்பு முறைக்கு வளைகுடா பிராந்தியம் முழுவதும் 99.9% எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. மிகக்குறைவாகவே ஹைட்ரோகார்பன் எரிபொருட்கள் கிடைக்கின்றன," என்றும் அவர் தெரிவித்தார்.

எண்ணெய், எரிவாயு போன்ற ஹைட்ரோகார்பன் எரிபொருட்கள் மிகவும் மாசுபடுத்துகின்றன. ஆனால், அதே நேரத்தில் கத்தார் தங்கள் நாட்டுக்கென சுற்றுச்சூழல் இலக்குகளை நிர்ணயித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை 25 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறது.

உலக கோப்பை போட்டி அமைப்புக் குழு, போட்டிகளின் போது கார்பன் சமநிலையாக இருக்கும் என்று கூறியது.

கார்பன் மார்க்கெட் வாட்ச் போன்ற சுற்றுச்சூழல் குழுக்களால் அந்தக் கூற்று பரவலாக மறுக்கப்பட்டது.

ஆனால் இதில் மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், கத்தார் தனது கார்பன் தடயத்தைக் குறைக்க மிகவும் உண்மையான மாற்றங்களைச் செய்து வருகிறது, அதில் நீர் உற்பத்தியும் அடங்கும்.

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம்,REUTERS

பசுமை இலக்குகள்

"பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்கிறார் டாக்டர் வில் லீ கியூஸ்னே.

"அவர்கள் கடல்நீரை குடிநீராக மாற்ற சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான வழியை தேடுகிறார்கள். இதற்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை உருவாக்கி, அதை எதிர்சவ்வூடு பரவலுக்கு அவர்கள் பயன்படுத்தலாம். அல்லது நீரை ஆவியாக்க சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்தலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

 

எதிர்சவ்வூடு பரவல் செயல்முறையில் கடல்நீர் ஒரு சவ்வு வழியாக கொண்டு செல்லப்பட்டு அசுத்தங்கள் திறம்பட நீக்கப்படுகிறது. அதே சமயம் ஆவியாதல் முறையில் நீரை ஆவியாகும் வரை சூடாக்கி, பின்னர் அதை ஒடுக்கி, அதில் இருந்து அசுத்தங்கள் நீக்கப்படுகிறது.

 

சூரிய சக்தி, அத்துடன் புதிய, அதிக ஆற்றல் திறன் கொண்ட உப்புநீக்கும் ஆலைகள் கட்டமைப்பை கொண்டு வருவது, கத்தார் நாட்டின் வளர்ந்து வரும் தாகத்தைத் தணிக்கும் என நம்பப்படுகிறது, இது ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்னையாகவும் பார்க்கப்படுகிறது.

 

அரசியல் சர்ச்சை காரணமாக தனது அண்டை வளைகுடா நாடுகளால் அண்மையில் பொருளாதாரத்தடை விதிப்புக்கு உள்ளானபோது கத்தார் கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது.

 

இதன் விளைவாக அது இப்போது தனது வறண்ட நிலப்பரப்பில் பால் மற்றும் விவசாயப் பண்ணையின் அளவை வேகமாக விரிவுபடுத்துகிறது. ஆனால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களை மட்டுமே கொண்டுள்ள நிலையில் இது தேவையை மட்டுமே அதிகரிக்கும்.

"கத்தாரில் உள்ள நீர் ஆதாரங்களில் மூன்றில் ஒரு பகுதி விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%, கிட்டத்தட்ட 0.1% -க்கும் குறைவாகவே பங்களிக்கிறது" என்கிறார் டாக்டர் பென்-ஹமடூ.

பெரும்பாலான நாடுகளைப் போல அல்லாமல், உணவு உற்பத்திக்காக அதன் இயற்கை வளங்களில் கத்தார் அதிக அளவு முதலீடு செய்துவருகிறது. இது அந்த நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கவோ அல்லது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவோ அல்ல.

ஆனால் அவசரகாலத்தில் தனது மக்களுக்கு உணவளிக்க முடியும் என்று கத்தார் அறிந்திருக்கிறது.

கத்தார் உலக கோப்பை 2022

பட மூலாதாரம்,REUTERS

கத்தாரின் எரிசக்திக்கான தீவிரமான திட்டங்கள் பிற நாட்டினருக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், பல நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை விட சில வழிகளில் இது சற்று வித்தியாசமானது என்று டாக்டர் லு கியூஸ்னே கூறுகிறார்.

கத்தார் மற்றொரு பெரிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வான 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு இன்னும் பல சவால்கள் வரக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/c1ve1k45x4ro

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல்வரேஸ்: மெஸ்ஸியை நாயகனாக பற்றிக்கொண்ட சிறுவனின் கனவு மெய்ப்பட்ட தருணம்

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

16 டிசம்பர் 2022, 07:50 GMT
புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்

அந்தக் காணொளியில் வரும் சிறுவனிடம் கேட்கிறார்கள்.

 

“கால்பந்தில் உனது கனவு என்ன?”

 

 

“உலகக் கோப்பையில் ஆட வேண்டும்”

 

“உனது லட்சிய நாயகன் யார்?”

 

“மெஸ்ஸி”

 

பத்தாண்டுகளுக்கு முன்பு படம்பிடிக்கப்பட்ட இந்தக் காணொளியில் வரும் சிறுவன் ஜூலியன் ஆல்வரேஸ். இப்போது கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக ஆடிக் கொண்டிருப்பவர். 

 

“சிறுவனாக இருந்தபோது எனக்கு மெஸ்ஸிதான் லட்சிய நாயகர்.அவருடன் தேசிய அணியில் ஆட வேண்டும் என்பது என கனவு” என்று பேட்டி ஒன்றில் ஆல்வரேஸ் கூறியிருக்கிறார்.

 

இளம் வயதில் ஆல்வரேஸுக்கு இரண்டு கனவுகள்தான் இருந்திருக்கின்றன. ஒன்று உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஆட வேண்டும். மற்றொன்று தனது லட்சிய நாயகன் மெஸ்ஸியைப் போல ஆக வேண்டும். இந்த இரண்டில் முதலாவது வெற்றிகரமாகவே நிறைவேறிவிட்டது. 

 

உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார். மெஸ்ஸியைப் போல ஆக வேண்டும் என்ற மற்றொரு கனவும் நிறைவேறிக் கொண்டிருப்பதையே அவரது ஆட்டம் காட்டுகிறது.

 

தனது கனவு மாத்திரமல்ல, தனது லட்சிய நாயகனான மெஸ்ஸியின் கனவை நனவாக்குவதற்கும் இப்போது ஆல்வரேஸ் உதவிக் கொண்டிருக்கிறார். குரேஷியா அணியுடன் அவர் அடித்த இரண்டு கோல்களும் மெஸ்ஸியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதை நேரலையிலேயே பார்த்திருக்க முடியும்.

 

பெனால்ட்டி முறையில் முதல் கோலை மெஸ்ஸி அடித்து முன்னிலை கொடுத்தாலும், தன்னந்தனியாக நெடுந்தொலைவுக்குப் பந்தைக் கடத்திவந்து இரண்டாவது கோலை ஆல்வரேஸ் அடித்ததுதான் அர்ஜென்டினாவுக்கு கூடுதலான நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.

 

10 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் சிறுவனாக இருந்த ஆல்வரேஸ் இன்று அவரே முத்தமிட்டுப் பாராட்டும் வகையில் உயர்ந்திருக்கிறார். கனவு மெய்ப்படுவது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அர்ஜென்டினா ரசிகர்கள் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிக்கெட், தடகளம், கால்பந்து, நீச்சல் என பல விளையாட்டுகளிலும் தனது ஆதர்ச நாயகர்களைப் போல ஆக முயன்றவர்கள் பிற்காலத்தில் அவர்களுக்கு நிகராகவே வளர்ந்த உதாரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்திருக்கிறார் ஆல்வரேஸ்.

 

ஆல்வரேஸுக்கும் மெஸ்ஸிக்கும் இடையிலான் ஆடுகளப் புரிதலை, குரோஷியா அணிக்கு எதிரான அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

 

ஒரு த்ரோ மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்த பந்தை, உலகின் முன்னணி தடுப்பரண் வீரர்களைத் தாண்டி மிகவும் லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கொண்டு வந்தார் மெஸ்ஸி. அப்போதை அது “அற்புதமானது” என்று தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் மெச்சிக் கொண்டிருந்தார்கள். 

 

சில நொடிகளில் கோல் லைன் எனப்படும் கடைசி எல்லைக் கோடு வரை பந்தைக் கொண்டு சென்ற மெஸ்ஸி, தடுப்பரண் வீரர்கள் யாரும் எதிர்பாராத வகையில் ஆல்வரேஸை நோக்கி பந்தைத் தட்டி விட்டார். இமைக்கும் நேரத்தில் அதைக் கோலுக்குள் தள்ளினார் ஆல்வரேஸ். 

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

“நம்ப முடியாத கோல்” என்று அப்போது வர்ணணையாளர்கள் மீண்டும் ஒருமுறை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். “அபாயகரமான” ஆட்டத்தை மெஸ்ஸி வெளிப்படுத்தியதாக எதிரணியான குரோஷியாவின் மேலாளர் லாட்கோ டேலிக் வியந்து கூறினார். இப்படி மெஸ்ஸியின் உச்சநிலைப் போட்டி ஒன்றில் அவருக்கு பெருந்துணையாக இருந்திருக்கிறார் ஆல்வரேஸ்.

 

ஜூலியன் ஆல்வரேஸுக்கு இப்போது 22 வயதாகிறது. பண்பாட்டு ரீதியாக கால்பந்துடன் பிணைந்திருக்கும் பகுதியில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர், மிக இளம் வயதிலிலேயே கால்பந்தில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டார். 16-வயதாக இருக்கும்போது அர்ஜென்டினாவின் கிளப் ஒன்றுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது அற்புதமான ஆட்டத்தால், கோப்பா அமெரிக்கா தொடருக்காக கடந்த ஆண்டில்தான் அர்ஜென்டினா தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பந்தை மிக வேகமாகக் கடத்திச் செல்வதற்குப் பெயர்பெற்ற ஆல்வரேஸ், குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டாவது கோலை அடித்தபோது இதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். 

 

கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினாவின் முதல் இரு போட்டிகளில் ஆட்டத்தைத் தொடங்கும் 11 பேரில் ஆல்வரேஸ் இடம்பெறவில்லை. ஆனால் போலந்துக்கு எதிராக களமிறங்கி போட்டியிலேயே கோல் அடித்தார். அதன் பிறகு மூன்று கோல்களை அடித்திருக்கிறார். இறுதிப் போட்டியிலும் கோல்களை அடித்து அர்ஜென்டினாவுக்கு வெற்றி தேடித் தந்தால் அது தன்னைக் கவர்ந்த லட்சிய நாயகனுக்கு அவர் செய்யும் மிகப்பெரிய நன்றியாக அமையும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸியின் 'மந்திரக் கால்கள்' நிகழ்த்திய 5 மாயாஜாலங்கள்

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தார் உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் வெளியேறிவிட்ட நிலையில், தனது வாழ்நாள் கனவின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறார் லியோனல் மெஸ்ஸி.

 

கத்தார் உலகக் கோப்பை போட்டி அவருக்குக் கசப்பாகத் தொடங்கினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிவரை அர்ஜென்டினாவைக் கொண்டுவருவதில் அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

 

 

பெனால்ட்டி கோல்கள் முதல் பல அற்புதமான பாஸ்கள் வரையிலும் மெஸ்ஸியின் கால்வண்ணம் இல்லாத போட்டிகளே இல்லை என்று சொல்லலாம். பெரும்பாலான போட்டிகளில் அவர் அதிகமான தரப் புள்ளிகளைப் பெற்ற வீரராகவும் இருந்திருக்கிறார். 

 

கத்தாரில் அர்ஜென்டினா ஆடிய ஆறு போட்டிகளில் அவர் நிகழ்த்திய 5 மாயாஜாலங்களை இங்கே பட்டியலிடுகிறோம். 

 

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆல்வரேஸுக்கு அற்புத பாஸ்

குரோஷியாவுடனான அரையிறுதிப் போட்டியில் 40வது நிமிடத்திலேயே 2 கோல்களை அடித்து ஏறக்குறைய தன்னுடைய வெற்றியை அர்ஜென்டினா உறுதி செய்திருந்தது. 

எனினும் அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் அற்புதமானது. மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றால், அவருடைய இடது காலின் மேஜிக்குக்கு நடுவில், பந்தை மீண்டும் திரும்பப் பெறுவது எளிதான காரியமல்ல எனச் சொல்லப்படுவதுண்டு.

அந்த மேஜிக்கை பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் கால்பந்து மைதானத்தில் ஒவ்வொரு போட்டியிலும் காத்துக் கிடப்பார்கள். இதிலும், அவர்களுடைய எதிர்பார்ப்பை மூன்றாவது கோலின்போது பூர்த்தி செய்தார் மெஸ்ஸி.

குரோஷியாவின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான யோஷ்கோ கவார்டியோலின் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி, மெஸ்ஸி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சென்றார். தனது 20 வயதில், துள்ளிக் குதித்து, முழு ஆற்றலுடன் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கவார்டியலோலிடம், 35 வயதான மெஸ்ஸி பந்தை நழுவவிட்டு விடுவாரா என்ற அச்சமும் எழாமல் இல்லை.

ஆனால், 35 வயது ஆனாலும் தான் இன்னமும் அதே மெஸ்ஸி தான் என்பதை அந்தத் தருணத்தில் அவர் ரசிகர்களுக்குக் காட்டினார். 

த்ரோ மூலமாகக் கிடைத்த பந்தை லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கொண்டு சென்று, கோல் லைன் பகுதியில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில்  பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சேர்த்தார். அதன் மூலம் 69வது நிமிடத்தில் விழுந்தது அந்த அற்புதமான கோல்

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முகத்தை திருப்பாமல் கடத்திய தருணம்

நெதர்லாந்துடனான காலிறுதிப் போட்டியில் மெஸ்ஸியால் ஆட்ட நேரத்தில் கள கோல் எதையும் அடிக்க முடியவில்லை. பெனால்ட்டியில் ஒரு கோலும், பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஒன்றும்தான் அவரால் அடிக்க முடிந்தது. ஆனாலும் அவர்தான் அர்ஜென்டினா வீரர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற வீரர்.

அதற்கும் காரணம் உண்டு. போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அற்புதமாக பந்தைக் கடத்தி மொலினா கோல் அடிக்க உதவினார். பந்தை முன்புறமாக கோலை நோக்கி கடத்திக் கொண்டு வந்து பின்னர் முகத்தைத் திருப்பாமலேயே வலது புறமாக சற்றுத் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த மொலினாவை நோக்கி பந்தைத் தட்டி விட்டார். 

அது நெதர்லாந்து வீரர்கள் பலரைக் கடந்து சரியாக மொலினாவைச் சென்றடைந்தது. இதனை அற்புதமான பாஸ் என்று சமூக வலைத்தளங்களில் கால்பந்து நிபுணர்கள் பாராட்டினார்கள்.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிரணியை வியக்க வைத்த தருணம்

‘அவர் வியக்கத்தக்கவர், தலைசிறந்த ஆட்டக்காரர்’ என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியைப் புகழ்ந்தவர் அவரது ரசிகரோ, அவரது அணி வீரரோ அல்ல. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவுடன் மோதித் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட்.

“அவர் தலைசிறந்த ஆட்டக்காரர் என்பதால் அவரைக் கட்டுப்படுத்துவதில் எங்களது வீரர்கள் சிறப்பாகச் செல்பட்டார்கள். ஆனால் முடியவில்லை. அவர் அற்புதமானவர் ” என்று கூறினார் கிரஹாம். 

பந்தைக் காலால் கடத்தியபடி மெஸ்ஸி தொலைக்காட்சித் திரைகளில் தோன்றும்போது அவரை ‘மந்திரக்காரர்’ என்று வர்ணணையாளர்கள் கூறுவதைக் கேட்க முடிந்தது. 

“ஒரு அங்குல இடைவெளி கிடைத்தாலும் அதன் வழியாகப் பந்தைக் கோலுக்குள் கொண்டு செல்லும் திறன் படைத்தவர் மெஸ்ஸி” என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று கூறியது.

“நான் மாரடோனா ஆடியபோது அவருக்கு எதிராக ஆடும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது மெஸ்ஸி ஆடும் அணிக்கு எதிராக பயிற்சியளிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இருவரும் அற்புதமான ஆட்டக்காரர்கள். அவர்களைப் பெற்றதற்காக அர்ஜென்டினா பெருமைப்பட வேண்டும்” என்று கூறினார் கிரஹாம் அர்னால்ட்.

இந்தப் போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் ப்ரீகிக் மூலம் கிடைத்த பந்து ஆஸ்திரேலிய கோலுக்கு அருகே சென்று மீண்டும் மெஸ்ஸியிடமே திரும்பி வந்தது. அதை லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கடத்திச் சென்ற மெஸ்ஸி, பல ஆஸ்திரேலிய வீரர்கள் சூழ்ந்து நிற்கும்போதே கோலுக்குள் அடித்தார்.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தரையோடு தரையாக அடித்த கோல்

மெக்சிகோ அணியுடனான லீக் போட்டியின் முதல் பாதி வரை மெஸ்ஸி எங்கே என்று கேட்கும் அளவுக்குத்தான் அவரிடம் பந்து இருந்தது. ஆனால் பிற்பகுதியில் உண்மையிலேயே வாழ்வா சாவா என்ற கட்டத்தை அர்ஜென்டினா அணி எட்டிவிட்டது.

முதல் பாதியில் பல முறை அர்ஜென்டினாவின் கோலுக்கு அருகே மெக்சிகோ வீரர்கள் பந்தைக் கடத்திக் கொண்டு சென்றார்கள். அப்போதெல்லாம் அரங்கில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் பதற்றத்தில் தவித்ததை அவர்கள் எழுப்பிய சத்தத்திலேயே உணர முடிந்தது.

அதுவும் 45-ஆவது நிமிடத்தில் மெக்சிகோ அடித்த ஒரு ப்ரீ கிக் நேராக கோலை நோக்கிச் சென்றபோது பலருக்கு இதயமே நின்று போயிருக்கக்கூடும். ஆனால் அர்ஜென்டினா கோல்கீப்பர் அதை துல்லியமாகக் கைகளால் பிடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நிம்மதி தந்தார்.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

64-ஆவது நிமிடத்தில் டி மரியா கடத்தித் தந்த பந்தை சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்து தரையை ஒட்டி, பல மெக்சிகோ வீரர்களின் கால்களை ஒட்டியபடி பந்தை கோலுக்குள் அடித்தார் மெஸ்ஸி. 

அது கோல் அடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லாத ஒரு தருணம் என்றுதான் கருதப்பட்டது. பல மெக்சிகோ வீரர்கள் சுற்றியிருந்தார்கள். கோலுக்கான தூரமும் அதிகமாக இருந்தது. ஆனால் மரியா கொடுத்த பந்தை அமைதியாக வாங்கிய மெஸ்ஸி, 4  மெக்சிகோ வீரர்களை போக்குக் காட்டி கோல் கீப்பருக்கு இடது புறமாக தரையோடு தரையாக பந்தை அடித்துக் கோலாக்கினார்.

அந்த நேரத்திலேயே ட்விட்டரில் அந்த கோலைப் பற்றிய விவாதம் ட்ரெண்டானது. பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் அடித்த கோலைப் போல மெஸ்ஸியின் கோலையும் வியந்து பேசினர்.

 மெஸ்ஸி கோல் அடித்ததும் சுமார் 90 ஆயிரம் பேர் இருந்த அரங்கில் அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடினர்.  களத்துக்குள்ளும் அரங்கிலும் எழுந்த ஆராவாரம் அடங்குவதற்கு சில நிமிடங்கள் ஆகின.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மின்னல் வேக பெனால்ட்டி கிக்

கத்தார் உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸி நான்கு முறை பெனால்ட்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். அதில் போலாந்து அணியுடனான போட்டியில் அவருக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது. 

37-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தலையால் கோல் அடிக்க முயன்றபோது போலாந்து கோல் கீப்பரின் கை மெஸ்ஸியின் தலையில் பட்டதால் காணொளி நடுவரின் ஆய்வுக்குப் பிறகு  அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வழங்கப்பட்டது.

பெனால்ட்டியை கோலாக்குவதில் வல்லவரான மெஸ்ஸியே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். வலுவாகவும் துல்லியமாகவும் மெஸ்ஸி பந்தை அடித்தார். ஆனால் போலாந்து கோல்கீப்பர் செசஸ்னி அதைப் பாய்ந்து சென்று ஒரு கையால் தடுத்துவிட்டார். அந்த நேரத்தில் மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். 

சமூக வலைத்தளங்களில் மெஸ்ஸியை கேலி செய்யும் பெஸ்ஸி என்று ஒரு ஹேஷ்டேக் வேகமாகப் பரவியது. மெஸ்ஸியின் தவறு பற்றி ஏராளமானோர் விமர்சித்தார்கள்.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டவர் என்ற மோசமான பெயரை அவர் பெற்றார். கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி அடித்த பெனால்ட்டியை அந்நாட்டு கோல்கீப்பர் ஹேல்டோர்சன் கோல் ஆகாமல் தடுத்துவிட்டார்.

இத்தகைய மோசமான அனுபவத்தைப் பெற்ற மெஸ்ஸி அதன் பிறகு இரண்டு பெனால்ட்டி வாய்ப்புகளையும் கோலாக மாற்றினார். அதிலும் குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் அடித்த அதிவேக பெனால்ட்டி மிகவும் அபாயகரமானது என்று கால்பந்து நிபுணர்கள் கூறுகிறார்கள். சற்று தவறினாலும் கோல்வலைக்கு மேலே பந்து பறந்து சென்றுவிடும் வாய்ப்பு உண்டு.  கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டி ஒன்றில் அவர் இப்படியொரு அதிவேக உதையால் பெனால்ட்டியை தவறவிட்ட தருணம் உண்டு.

ஆனால் குரோஷியாவுடனான போட்டியில் அதே வேகத்தில் கோல்கீப்பரின் இடதுபுறமாக கோல்வலையின் மேற்பகுதியில் துல்லியமாக அடித்தார் மெஸ்ஸி. கோல்கீப்பரால் அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை. 

https://www.bbc.com/tamil/articles/ckm4vlm5kkmo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு இன்னொரு வெற்றியைத் தருமா?

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு  தாயின் அன்பு தந்த வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான மொரக்கோவின் வெற்றியின் ஒவ்வொரு தருணத்துக்குப் பின்னரும் அக்ரஃப் ஹக்கிமி அவரது தாயை அன்புடன் கட்டித்தழுவும் புகைப்படங்கள் வைரல் ஆகின.

கத்தாரில் மொரோக்கோ அணிக்கான  மறக்கமுடியாத வரலாற்று சிறப்பு மிக்க போட்டியின்போது சிறப்பான பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில மட்டும் வைரல் ஆகின.  மொரோக்கோவுக்கு இன்னும் ஒரு கடைசியான ஆட்டம் மிச்சம் இருக்கிறது.

மொரோக்கா அணியும் ஹக்கிமியும் குரோஷியாவை சனிக்கிழமை எதிர்கொள்வது, வீடு திரும்பும் ஆப்ரிக்க தரப்பின் ரசிகர்களை பொறுத்தவரை இது இன்னொரு கொண்டாட்ட மாலைவேளையாக இருக்கும் வாய்ப்பாக கருதப்படுகிறது.

மொரோக்கோ அணியின் மையமாக ஹக்கிமி திகழ்வதற்கான பின்னணியில் பாரீசின் செயின்ட்-ஜெர்மைன் கிளப் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டுடனான அரையிறுதிப் போட்டியில் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஒட்டு மொத்த நாடு, அணியின் கனவு முடிவுக்கு வந்து விட்டது என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி வரை சென்ற முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையை ஏற்கனவே பெற்று விட்ட மொரோக்கோவுக்கு இன்னும்  ஒரு சிறப்பான இரவு வருமா?

'தியாகங்கள் தந்த வெற்றி'

மொரோக்கோவின் மிகவும் வெற்றிகரமான கால்பந்து வீரர் என்ற அந்தஸ்தை ஹக்கிமி ஏற்கனவே பெற்று விட்டார். ஸ்பெயினுக்கு எதிரான அவர்களின் வரலாற்று வெற்றியை அவர் உறுதி செய்தார்.

120 நிமிட விளையாட்டுக்குப் பின்னர் வெற்றியா, தோல்வியா என்று கணிக்க முடியாத பரபரப்பான நிலையில் பதற்றமான பெனால்டி ஷூட்அவுட்டுக்கு மத்தியில் ஹிக்கிமி, தேசத்தின் நிறைய எதிர்பார்ப்புகளை தமது தோளில் சுமந்தபடி  வெற்றியை நோக்கி கோலை அடித்தார்.

3-0 ஷூட்அவுட் வெற்றியை தனது தாயுடன் உணர்வுபூர்வமாக கொண்டாடும் முன், பந்தை ஒரு டிராப் ஷாட் மூலம் உதைத்தார். அவரது இந்த வெற்றிக்கான உதை ரசிகர்களிடையே உற்சாக ஆரவாரத்தை தூண்டியது.

பெல்ஜியத்துக்கு எதிரான வெற்றிக்கு முன்பும் பின்பும், ஐ லவ் யூ மாம் என்ற வாசகத்துடன் தனது தாய் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை  தமது சமூக வலைதளத்தில் ஹக்கிமி பகிர்ந்து கொண்டார்.

ஹக்கிமியின் கால்பந்து பயணத்தில் அவரது குடும்பத்தின் பாரம்பரியம் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. மொராக்கோ மீது அவர் ஏன் அதிக அன்பு வைத்திருக்கிறார்?

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு  தாயின் அன்பு தந்த வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாட்ரிட்டின் புறநகர்ப் பகுதியான கெடாஃபே பகுதியில் வளர்ந்த போதிலும் - ஹக்கிமி ஸ்பெயின் அணிக்கு விளையாடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை நிராகரித்தார். அவரது தாயார் ஸ்பெயினின் தலைநகரில் வீடுகளை சுத்தம் செய்யும் பணியாளாராக இருந்தார். அவரது தந்தை ஒரு தெரு வியாபாரியாக உள்ளார்.

"நாங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறோம்," என்று ஹக்கிமி 2018ஆம் ஆண்டு கூறினார். "இன்று நான் அவர்களுக்காக ஒவ்வொரு நாளும் போராடுகிறேன்,"  என்றும் அவர் குறிப்பிட்டார்.

"என் பெற்றோர் எனக்காகத் தியாகம் செய்தார்கள். நான் வெற்றிபெறுவதற்காக என் சகோதரர்களுக்குப் பல விஷயங்கள் கிடைக்கவில்லை," என்றும் கூறினார்.

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு  தாயின் அன்பு தந்த வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹக்கிமியின் தந்தை, "அக்ராஃப் மாட்ரிட் வந்தடைந்தபோது, நான் அவரை தினமும் 16:30 மணிக்கு பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, நான் 21:30 மணிக்கு வீட்டிற்கு வருவேன். பயிற்சி முகாமிற்கு அவரை அழைத்துச் சென்று விட்டு வீட்டிற்கு 50 கிமீ பயணித்து திரும்புவது வழக்கம்," என்று கூறியுள்ளார்.

"பெற்றோர்களுக்கு எனது செய்தி என்னவென்றால்,  தங்கள் குழந்தைகள் வெற்றிபெற விரும்பினால் பெற்றோர் தியாகங்கள் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் நான் செய்த தியாகங்கள் நல்ல முடிவுக்கு வழிவகுத்தன," என்றார்.

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு  தாயின் அன்பு தந்த வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"குறிப்பாக அரேபியர்களுக்கும் மொராக்கோ மக்களுக்கும் ஹக்கிமி முன்மாதிரி என்று சொல்லும் நபர்களை நான் சந்திக்கும் போது. அக்ராஃபின் வெற்றி என்னைப் பெருமைப்படுத்துகிறது," என்றார் அவரது தந்தை.

தாய்வழி அன்பு சனிக்கிழமை இரவில் மீண்டும் வெளிப்படலாம்.  ஏனெனில் மூன்றாவது இடத்துக்கான பதக்கத்தைப் பெற்று, சிறந்த ஆப்பிரிக்க அணிகளில் ஒன்றாகத் தங்கள் நிலையை கத்தாரில் உறுதிப்படுத்தி விட்டு செல்ல வேண்டும் என்று மொரோக்கோ அணி நினைக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cer4w7d34vlo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“எங்களது அணியில் பல வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை , ஆனால்...” - வெற்றிக்கு பிறகு பேசிய குரேஷியா பயற்சியாளர்

croatia

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

“குரேஷியா அணிக்கு எதிர்காலம் குறித்த எந்தப் பயமும் இல்லை. இதை சகாப்தத்தின் முடிவாக நான் நினைக்கவிக்லை. 2024ஆம் ஆண்டு தேசிய லீக், யூரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடர்கள் உள்ளன. குரேஷியா அணிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்”.

மொராக்கோ அணியுடனான போட்டிக்குப் பிறகு குரேஷிய அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் இவ்வாறு கூறினார்.

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டி நேற்று இரவு கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்தது. அரையிறுதியில் தோல்வியடைந்த குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகள் இப்போட்டியில் மோதின.

10 நிமிடத்திற்குள்ளாகவே இரு அணிகளும் முதல் கோல்

குரோஷியா மற்றும் மொராக்கோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டியின் 7ஆவது நிமிடத்திலேயே ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ க்வார்டியோல் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து போட்டியின் 9ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணி வீரர் அச்ரஃப் டாரி ஒரு கோல் அடிக்க போட்டி சமன் ஆனது.

 

போட்டியின் முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி விறுவிறுப்படைந்தது.

பின்னர், 42ஆவது நிமிடத்தில் குரேஷியா வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியின் முடிவில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக முயற்சித்த நிலையில், இருவரது தடுப்பரண்களும் வலுவாக இருந்ததால் எந்தக் கோலும் அடிக்கவில்லை.

கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முடிவில் 2-1 என்ற கணக்கில் குரேஷியா அணி போட்டியை வென்றது.

பேரழிவாக இருந்திருக்கும்

போட்டியின் பிறகு பேசிய குரேஷியா அணியின் மேலாளர் ஸ்லாட்கோ டாலிக், "நாங்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றோம், அதில் தங்க அடுக்கு உள்ளது. இது நாங்கள் தங்கப் பதக்கம் வென்றதை போன்றது. மூன்றாம் இடத்துக்கான ப்ளே-ஆஃப் போட்டியில் தோல்வி கண்டிருந்தால் பேரழிவாக இருந்திருக்கும்” என்றார்.

4 மில்லியனுகும் குறைவான மக்கள் தொகை கொண்ட குரேஷியா இதுவரை 6 முறை ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியுடன் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதுவே உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் சிறந்த நிலையாகும்.

குரேஷியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

37 வயதான குரேஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிக் உட்பட பல மூத்த வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்க வாய்ய்புள்ளதால் இந்தத் தொடரில் கோப்பை வெல்ல முடியாதது அவர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.

மூத்த வீரர்கள் குறித்து பேசிய குரேஷிய அணியின் பயிற்சியாளர் டாலிக், “வயது காரணமாக எங்களது சில வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடர். ஆனால், எங்கள் அணியில் இளம் வீரர்கள் உள்ளனர். எனவே குரேஷியாவிற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்” என்றார்.

ஒரு நாள் உலகக் கோப்பை வெல்வோம்

கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டி வரை சென்ற முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையை இந்தத் தொடரில் மொராக்கோ பெற்றது.

அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியிடம் தழுவிய தோல்வியையடுத்து, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் குரேஷியாவை சந்தித்தது மொரோக்கோ. இந்தப் போட்டியில் அடைந்த தோல்வி அந்த அணியினருக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், எதிர்காலத்தில் நாங்கள் உலகக் கோப்பையை வெல்வோம் என அந்த பணியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மொரோக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெகுராகி போட்டிக்குப் பிறகு பேசுகையில், “இந்த போட்டிக்கு முன்பு அனைவரிடமும் சந்தேகம் இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட முன்னேறிவிட்டோம். இது போதாது. எதிர்காலத்திற்கு இது முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாங்கள் அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளோம். ஆனால் மீண்டும் அதை செய்ய விரும்புகிறோம். தொடர்ந்து அரையிறுதி அல்லது காலிறுதியை எட்ட முடிந்தால் ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வோம்” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c720pdy34z5o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸி அதிர்ந்தது முதல் ரொனால்டோ அழுதது வரை கத்தார் உலகக் கோப்பையில் ‘ஷாக்’ கொடுத்த 7 சம்பவம்

fifa worldcup final

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அனல்பறந்த ஆட்டங்கள்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. எதிர்பாராத திருப்பங்கள்.. சொல்லில் அடங்காத உணர்வுகள் என நாளுக்கு நாள் பல சுவாரஸ்யங்களையும் ஆச்சரியங்களையும் தந்து கொண்டிருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களிலேயே இதுதான் ஆகச் சிறந்தது என வர்ணிக்கின்றனர் கால்பந்து பிரியர்கள். அதற்கு மிக முக்கிய காரணம். 90 நிமிடங்களில் நடந்த அதிரடி திருப்பங்கள்தான். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டங்கள் மட்டுமே விறுவிறுப்பாக இருக்கும் என்கிற நிலைப்பாட்டை மாற்றி எழுதியிருக்கிறது இந்த தொடர்.

பலம் வாய்ந்த முன்னணி அணிகளை பெரிய அனுபவம் ஏதுமில்லாத சிறிய அணிகள் வீழ்த்தியிருக்கின்றன. அந்த வகையில் நடப்பு தொடரில் நிகழ்ந்த 7 சுவாரஸ்யமான திருப்பங்களை இங்கே காணலாம்.

1. அர்ஜென்டினாவை அதிர வைத்த செளதி

அர்ஜென்டினா - செளதி அரேபியா போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதி கோல் கணக்கு எப்படியிருக்கும் என்று கேட்டபோது, தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்த போர்ச்சுகலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார். உடனிருந்த இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் இன்னொருபடி மேலே போய் 5-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார். அவர்கள் மாத்திரமல்ல போட்டிக்கு முன்பு யாருமே அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி வெற்றி பெறும் என்று கருதியிருக்க மாட்டார்கள். காரணம், சௌதி அரேபியா தரவரிசையில் 51-ஆவது இடத்தில் இருக்கிறது.

அர்ஜென்டினா தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த ஒரு புள்ளி விவரமே கணிப்புகள் எப்படியிருக்கும் என்று கூறிவிடும். ஆனால் மெஸ்ஸியின் அணிக்கு 1 - 2 கோல் கணக்கில் அதிர்ச்சியளித்தது சௌதி அரேபியா. அது செளதியின் கால்பந்து வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது. எந்த அளவுக்கு எனில், தேசிய விடுமுறை அறிவித்து கொண்டாடும் அளவுக்கு ஆனந்தத்தில் திளைத்தது செளதி அரேபியா.

 

2. ஜப்பானிடம் ஏமாந்த ஜெர்மனி

டுகுமா அசானோ ஜப்பான் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தபோது, மைதானம் முழுவதும் சில நொடிகளுக்குச் சட்டென அமைதியானது. தன்னுடைய முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகக் களமிறங்கிய ஜப்பான், ஜெர்மன் ரசிகர்களை அந்த கோலின் மூலமாகத் திகைக்க வைத்திருந்தது. ஆனால், ஜப்பானிய மக்களிடையே அந்த கோல் ஆஃப்சைட் இல்லை என்று உறுதியானவுடன் கரகோஷங்கள் பறந்தன.

ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தத் தொடங்கினார்கள். கலீஃபா மைதானமே ஜப்பானிய ரசிகர்களின் உற்சாகக் கூச்சல்களால் நிறைந்திருந்தது. சௌதி அரேபியாவின் ஆச்சர்யமளிக்கக்கூடிய வெற்றியைத் தொடர்ந்து, 1 - 2 கோல் கணக்கில் ஜப்பானும் ஜெர்மனியை வீழ்த்தி உலக கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

3. பிரான்சுக்கு கசப்பு மருந்து கொடுத்த துனீசியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 92 ஆண்டுகால வரலாற்றில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை துனிசீயா அணி வீழ்த்தியதை யாருமே துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரான்ஸ் அணி முன்னணி வீரர்களை பெஞ்சில் அமரவைத்துவிட்டு குரூப் சுற்றின் கடந்த இரு போட்டிகளிலும் களமிறங்காத வீரர்களைக் கொண்டே விளையாடியது. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை போட்டியின் முடிவில் அந்த அணி உணர்ந்திருக்கும்.

58வது நிமிடத்தில் கோல் அடித்து, 1 - 0 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது துனீசியா. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் துனீசியாவால் அடுத்த சுற்றுக்கு நுழைய முடியவில்லை. அரங்கில் இருந்த துனிசிய ரசிகர்கள் பலர் கண்ணீர் வடித்து அழுததை தொலைக்காட்சித் திரைகளில் காண முடிந்தது.

4. ஸ்பெயின் தோல்வியும் 4 முறை சாம்பியனுக்கு நேர்ந்த கதியும்

fifa football world cup final

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு புல்லின் நுனி அளவிலான கால்பந்தின் வளைவு கத்தார் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஜெர்மனிக்கு அதிரவைக்கும் முடிவுகளைத் தந்தது.

எல்லைக் கோட்டை தாண்டிய பிறகு கிடைத்த பாஸில் ஜப்பான் கோல் அடித்ததாக கருதப்பட்டது. ஆனால் நடுவர் VAR உதவியுடன் அதனை கோலாக அறிவிக்க ஸ்பெயினுக்கு 2 - 1 கோல் கணக்கில் தோல்வியைத் தந்து அதிர்ச்சியளித்த கையோடு 4 முறை சாம்பியனான ஜெர்மனியையும் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய விடாமல் செய்தது ஜப்பான்.

5. உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்திய கேமரூன்

யாருமே எதிர்பார்த்திராத மற்றொரு திருப்பம் பிரேசில் - கேமரூன் குரூப் ஆட்டத்தில் நடைபெற்றது. 90 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் பிரேசிலால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. கூடுதலாக கிடைத்த 2 நிமிடத்தில் கேமரூன் வீரர் வின்செண்ட் அபுபக்கர் அடித்த கோல் கால்பந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

உலகின் நம்பர் 1 அணியான பிரேசில் கேமரூனிடம் வீழ்ந்தது. இருந்தபோதிலும் அது நாக் அவுட் வாய்ப்புக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கோல் அடித்த மகிழ்ச்சியில் கேமரூன் வீரர் வின்செண்ட் அபுபக்கர் தனது சட்டையை கழற்றி கொண்டாடினார்.

ஏற்கனவே மஞ்சள் அட்டை வாங்கியிருந்த அவருக்கு 2வது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டையையும் கள நடுவர் காட்டினார்.

fifa football world cup final

பட மூலாதாரம்,GETTY IMAGES

வின்செண்ட் அபுபக்கருக்கு கைக்கொடுத்து கள நடுவர் வழியனுப்பி வைத்த காட்சி பலரையும் கவனிக்க வைத்தது. சமூக ஊடகங்களிலும் வைரலானது.

6. போர்ச்சுகலை புரட்டியெடுத்த தென் கொரியா

போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில், தென்கொரிய வீரர் தங்களது கோல் பகுதியில் இருந்து எதிரணியின் கோல் பகுதி வரைக்கும் பந்தைக் கடத்திக் கொண்டு வந்து கோலடிக்க உதவியது அந்நாட்டு ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கடித்தது.

இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணி வெற்றி பெற்றது. தென் கொரிய அணியினரை கோல் அடிக்க விடாமல் தடுக்க முயன்ற ரொனால்டோ தவறுதலாக கோலை நோக்கியே பந்தைத் திருப்பியதால், அந்த வாய்ப்பை தென்கொரியா பயன்படுத்திக்கொண்டது.

ரொனால்டோவின் தவறைத் தொடர்ந்து அவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் எளிமையாக வெல்லும் எனக் கருதப்பட்ட போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் தென் கொரிய கேப்டன் சன் களத்தில் அழுத காட்சி பலரையும் நெகிழ வைத்தது.

7. ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோவும் கண்ணீரும்

ronaldo crying

பட மூலாதாரம்,GETTY IMAGES

போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் பார்த்திராத கடுமையான நெருக்கடியைச் உலகக் கோப்பையில் சந்தித்தார். உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுவிட்சர்லாந்துடனான நாக் அவுட் போட்டியில் முதல் 11 வீரர்களில் அவர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட கோன்கலோ ராமோஸை களமிறக்கினார் போர்சுகல் அணியின் மேலாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ். அந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 6 கோல்களை அடித்தது. அதில் மூன்று கோல்களை ரொனால்டோவுக்குப் பதிலாகக் களமிறங்கிய ராமோஸ் அடித்ததுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

இதுமட்டுமின்றி மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 11 வீரர்களில் ரொனால்டோ இடம்பெறவில்லை. மாற்று வீரராக களமிறக்கப்பட்டாலும் குறைவான அளவிலேயே அவருக்கு பந்தை தொடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டத்தில் மொராக்கோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் களத்தைவிட்டு கண்ணீருடன் வெளியேறினார் ரொனால்டோ.

வரலாறு படைத்த மொராக்கோ

நடப்பு உலகக் கோப்பை தொடரில் யாருமே எதிர்பார்த்திராத ஓர் அணி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின் என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறியது என்றால் அந்த பெருமை மொராக்கோவையே சாரும்.

சிறப்பான தடுப்பாட்டம், எதிர்பாராத தருணங்களில் கோல் ஸ்கோர் செய்வது, கொண்டாட்டத்தின்போது தங்களது தாய் மற்றும் குடும்பத்தினருடன் நடனமாடுவது, களத்திலேயே மண்டியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவது என பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது மொராக்கோ.

morocco

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாக் அவுட் சுற்றில் முதலில் ஸ்பெயினை வீழ்த்தி அதிர்ச்சி தந்தது. பிறகு காலிறுதியில் போர்ச்சுகலையும் வென்றது. உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்கிற பெருமையை படைத்தது. இணையத்தில் பலரது மனங்களையும் வென்றிருக்கிறது மொராக்கோ அணி.

https://www.bbc.com/tamil/articles/cl4g038mjplo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பையை வெல்லப்போவது மெஸ்ஸியின் அர்ஜென்டினாவா அல்லது எம்பாப்பேவின் ஃபிரான்ஸா?

கத்தார் கால்பந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தாரின் லுசைல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30க்கு நடக்கவிருக்கும் அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையேயான இறுதி போட்டியை உலக கால்பந்து ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதி போட்டியில் களம் காண்பதால் போட்டி தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருக்கப்போவது உறுதி.

அர்ஜென்டினாவின் கால்பந்து கதாநாயகர் மெஸ்சி தனது 35ஆவது வயதில் இருக்கிறார். இதுவரை அவர் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான பலோன் டி'ஓர் விருதினை ஏழுமுறை வென்றுள்ளார். எனினும் ஒருமுறை கூட உலகக் கோப்பை போட்டியில் மிகப்பெரிய அணிக்கான பரிசை அவர் வென்றதில்லை.

"ஃபிரான்ஸ் அணியே தங்களுக்கு விருப்பமான அணி என சிலர் சொல்லலாம். ஆனால், எங்களிடம்தான் ஆகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இது எங்களுக்கு சாதகமான ஒன்று," என்கிறார் அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்.

 

"ஏனென்றால் நாங்கள் யாரையும் விட உயர்ந்தவராகவோ தாழ்வாகவோ உணரவில்லை. ஆகவே, எதிரணிதான் விருப்பமான அணி என்று கேட்பதையே நாங்கள் எப்போதும் விரும்புகின்றோம்," என்றும் கூறினார்.

" ஆனால், நான் எப்போதுமே நாங்கள்தான் ஆக சிறந்த அணி என்று சொல்வேன்," என்று உறுதிபடக் கூறும் எமிலியானோ மார்டினெஸ், "சிறந்த தடுப்பாட்டத்துடன், எங்கள் இலக்கை அடைவதற்கு எங்களுக்கு சாதகமாக பல வாய்ப்புகள் உள்ளன," என்றும் தெரிவித்தார்.

மெஸ்ஸி

பட மூலாதாரம்,PA MEDIA

1998ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போது அணியின் கேப்டனாக டிடியர் டெஷாம்ப்ஸ் இருந்தார். இப்போது அவர்தான் பிரான்ஸ் அணியின் மேலாளராக இருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலில்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் பிரான்ஸ் மேலும் ஒரு வெற்றியைப் பெற்றது.

"அர்ஜென்டினா அணியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் மட்டுமின்றி சில பிரான்ஸ் நாட்டு மக்களும் கூட லியோனல் மெஸ்ஸிதான் உலகக் கோப்பையை வெல்வார் என்கின்றனர். ஆனால், எங்களுடைய நோக்கத்தை அடைய முழு மூச்சுடன் செயல்படுவோம்," என்றார் பிரான்ஸ் மேலாளர்.

உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மெஸ்ஸி உதவுவாரா?

இந்த தொடரில் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்வேயும் தலா 5 கோல்கள் அடித்து சமநிலையில் உள்ளனர். எனவே இந்த இறுதிப் போட்டியில் அதிக கோல்களை எடுத்த வீரர் யார்? என்ற கேள்விக்கான விடையும் தெரிந்துவிடும்.

 

ஃபிரான்சின் ஒலிவியர் ஜிரோட் மற்றும் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்து தங்களின் அணிகளுக்கு பக்கபலமாக உள்ளனர்.

மெஸ்ஸி இதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது அர்ஜென்டினா அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். ஜெர்மனியின் மரியோ கோட்ஸே ஒரே ஒரு கோலைப் போட்டாலும், கூடுதல் நேரத்திற்குப் பிறகு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் அர்ஜென்டினா கடந்து வந்த பாதை

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தாரில் நடைபெற்று வரும் தற்போதைய உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார் மெஸ்ஸி.

செளதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியடைந்து, பின்னர் மெக்சிகோவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து அர்ஜென்டினா, 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தைத் தோற்கடித்தது, குழு C பிரிவில் முதலிடம் கண்டது, அதன்பின் ரவுண்ட் 16 நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது.

காலிறுதியில் நெதர்லாந்து உடனான போட்டி அர்ஜென்டினாவுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. போட்டியில் 82 நிமிடங்களுக்குப் பிறகு 2-0 என முன்னிலையில் அர்ஜென்டினா இருந்தது. ஆனால் நெதர்லாந்தின் வூட் வெகோர்ஸ்ட் இரண்டு முறை கோல் அடித்தார். சம நிலையில் பெனால்டியில் 4-3 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றது.

அரையிறுதியில் குரோஷியா அணியுடனான போட்டியில் மெஸ்ஸியின் ஒரு கோல், அல்வாரெஸின் இரண்டு கோல்கள் உதவியுடன் 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றிப் பெற்றது. அர்ஜென்டினா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1978ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியிலும், 1986 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடந்த போட்டியிலும் கோப்பையை வென்றுள்ளது. இன்றைய போட்டியில் மூன்றாவது வெற்றியை எதிர்பார்த்து அர்ஜென்டினா காத்திருக்கிறது. "நாங்கள் வெல்வோம் என்று நம்புகின்றோம், அது முடியாவிட்டாலும் அணி வீரர்கள் பெருமையடைய வேண்டும். ஏனென்றால் இது அனுபவிப்பதற்கான ஒரு தருணம்," என நடைமுறையை புரிந்து கொண்டவராக சொல்கிறார் அணியின் மேலாளர் லியோனல் ஸ்கலோனி.

ஃபிரான்ஸின் முன்னெடுப்புகளைத் தடுக்கிறதா நோய்தொற்று?

ஃபிரான்ஸை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ள 23 வயதான எம்பாப்பே, தனது இரண்டாவது உலகக் கோப்பை வெற்றியை சுவைக்க இன்று போராடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-1 வெற்றியில் ஒரு முறையும், டென்மார்க்கிற்கு எதிரான 2-1 என்ற போட்டியில் இரண்டு முறையும் அவர் கோல் அடித்தார்.

காலிறுதியில் இங்கிலாந்தின் வலுவான கரேத் சவுத்கேட்டினை எதிர்கொண்டனர் ஃபிரான்ஸ் அணியினர். எனினும் ஆரேலியன் டிச்சௌமேனி அணியை முன்னணியில் நிறுத்தினார். ஆனால் ஹாரி கேன் பெனால்டி மூலம் போட்டியை சமன் செய்தார். கேன் இரண்டாவது ஸ்பாட்-கிக்கை தவறவிட்டாலும் ஆலிவியர் கிராட், பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற வழிசெய்தார்.

அரையிறுதியில் ஃபிரான்ஸ், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது

1998ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டு என இரண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் ஃபிரான்ஸ் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால், 2006 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஃபிரான்ஸ் தோல்வியடைந்தது. இப்போது நான்காவது முறையாக இறுதி போட்டிக்குள் ஃபிரான்ஸ் நுழைந்திருக்கிறது.

ஃபிரான்ஸ் அணியின் பக்கபலமாக திகழும் அட்ரியன் ராபியோட், டேயோட் உபமேகானோ மற்றும் கிங்ஸ்லி கோமன் ஆகியோருக்கு ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அணியின் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

"நாங்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம், அது பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்," என அணியின் மேலாளர் டெஷாம்ப்ஸ் தெரிவித்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில்

இரு அணிகளும் இதற்கு முன் மூன்று முறை உலகக் கோப்பையில் சந்தித்துள்ளனர். அர்ஜென்டினா 1930 மற்றும் 1978 இல் இரண்டு குழு போட்டிகளிலும் வென்றது. ஆனால் 2018ஆம் ஆண்டு 4-3 என்ற கணக்கில் பிரான்ஸ் தனது ஒரே நாக் அவுட் போட்டியில் வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

அர்ஜென்டினா அணி சார்பில் இதற்கு முன்பு 1930 இல் கில்லர்மோ ஸ்டேபில் மற்றும் 1978 இல் மரியோ கெம்பஸ் ஆகியோர் கோப்பையை கைப்பற்றினர். இப்போது உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வென்றால் ‘கோல்டன் பூட்’ வென்ற மூன்றாவது அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெறுவார்.

பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c51gnxl22kvo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ண இறுதிப்போட்டி: 52 இலட்சம் ரூபா வரையான விலையில் கறுப்புச் சந்தையில் ரிக்கெட் விற்பனை; பிரான்ஸ் வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள்;

By SETHU

18 DEC, 2022 | 01:38 PM
image

உலககக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரான்ஸ் அணி வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளைஇ கறுப்புச் சந்தையில்  52 லட்சம் இலங்கை ரூபா (12 லட்சம் இந்திய ரூபா) வரையான விலையில் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் இறுதிப் போட்­டியில் நடப்புச் சம்­பியன் பிரான்ஸும் முன்னாள் சம்­பியன் ஆர்­ஜென்­டீ­னாவும் இன்று மோது­கின்­றன. கத்­தாரின் தலை­நகர் தோஹா­வி­லி­ருந்து 23 கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள, அந்­நாட்டின் 2 ஆவது மிகப் பெரிய நக­ரான லூசெய்லின், லூசெய்ல் அரங்கில் உள்ளூர் நேரப்­படி இன்று மாலை 6.00 மணிக்கு (இலங்கை நேரப்­படி இரவு 8.30 மணிக்கு இப்­போட்டி ஆரம்­ப­மாகும்.

பீபா­வினால் 22 தட­வை­யாக நடத்­தப்­படும் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி இது. இந்­நி­லையில், ஆர்­ஜென்­டீனா, பிரான்ஸ் ஆகிய இரு அணி­களும் 3 தட­வை­யாக உல­கக் கிண்­ணத்தை வெல்ல முயற்­சிக்­கின்­­றன.  

ஆர்­ஜென்­டீனா 1978 மற்றும் 1986 ஆம் ஆண்­டு­களில் உலக சம்­பி­ய­னா­கி­யது. 1930, 1990, 2014 ஆம் ஆண்­டு­களின் இறு­திப்­போட்­டி­களில் ஆர்­ஜென்­டீனா தோல்­வி­யுற்­றது.

பிரான்ஸ் 1998, 2018 ஆம் ஆண்­டு­களில் உலக சம்­பி­ய­னா­கி­யது. 2006 ஆம் ஆண்டு இறு­திப்­போட்­டியில் பிரான்ஸ் தோல்­வி­யுற்­றி­ருந்­தது.
இச்­சுற்­றுப்­போட்­டியில் சம்­பி­ய­னாகும் அணிக்கு வெற்­றிக்­கிண்­ணத்­துடன் 42 மில்­லியன் டொலர்கள் (சுமார் 1,558 கோடி இலங்கை ரூபா) பணப்­ப­ரிசு   வழங்­கப்­படும். 2 ஆம் இடம் பெறும் அணிக்கு 30 மில்­லியன் டொலர்கள் (1,113 இலங்கை கோடி ரூபா) வழங்­கப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


நேருக்கு நேர்

ஆர்­ஜென்­டீ­னாவும் பிரான்ஸும் 1930 முதல் இது­வரை 12 தட­வைக‍ேள சர்­வ­தேச போட்­டி­களில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டி­யுள்­ளன. இவற்றில் ஆர்­ஜென்­டீனா 6 தட­வை­களும் பிரான்ஸ் 3 தட­வை­களும்  வென்­றுள்­ளன.

உல­கக்­ கிண்­ண வரலாற்றில் 3 தட­வைகள் இவ்வணிகள் மோதி­யதில் 2 தட­வைகள் ஆர்­ஜென்­டீ­னாவும், ஒரு தடவை பிரான்ஸும் வென்­றன.

எனினும், இவ்­விரு அணி­களும் இறு­தி­யாக 2018 உலகக்கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் 2 ஆவது சுற்றில் மோதின. அப்­போட்­டியில் 4:3 கோல் விகி­தத்தில் பிரான்ஸ் வென்றது.

1958, 1962 ஆம் ஆண்­டு­களில் தொடர்ச்­சி­யாக 2 தட­வைகள் உலகக் கிண்­ணத்தை வென்ற பின்னர் இது­வரை எந்த நடப்புச் சம்­பி­யனும் கிண்­ணத்தை தக்­க­வைத்துக் கொள்­ள­வில்லை.

1990 இல் அப்­போ­தைய நடப்புச் சம்­பியன் ஆர்­ஜென்­டீ­னாவும் 1998 இல் நடப்புச் சம்பியன் பிரே­ஸிலும் இறுதிப் போட்­டியில் தோல்­வி­யுற்­றன.

FIFA-world-cup-final---Argentina--vs-Fra

கால்­பந்­தாட்­டத்­து­றையில் பெரும் சாத­னை­களைப் படைத்த, ஆர்­ஜென்­டீன அணித்­த­லைவர் லயனல் மெஸி இது­வரை உலகக் கிண்­ணத்தை வெல்­ல­வில்லை. 2014 ஆம் ஆண்டின் இறு­திப்­போட்­டியில் மெஸி தலை­மை­யி­லான ஆர்­ஜென்­டீனா, ஜேர்­ம­னி­யிடம் தோல்­வி­யுற்­றி­ருந்­தது.

இது தனது கடைசி உல­கக்­கிண்ணப் போட்டி என லியோ மெஸி அறி­வித்­துள்ள நிலையில், உலக சம்­பி­ய­னாக, உலகக் கிண்­ணத்­தி­லி­ருந்து விடை­பெற மெஸியும் அவரின் ரசி­கர்­களும் விரும்­பு­கின்­றனர்.
35 வய­தான மெஸி இச்­சுற்­றுப்­போட்­டியில் 5 கோல்­களைப் புகுத்தி, இது­வரை அதிக கோல்­களைப் புகுத்­திய 2 வீரர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்­கிறார்.

மறு­புறம் நடப்புச் சம்­பியன் பிரான்ஸும் மிகப் பலம் வாய்ந்த அணி­யாக திகழ்­கி­றது.

அவ்­வ­ணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் எதிர்­வரும் 26 ஆம் திகதி தனது 36 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டு­கிறார். இம்­முறை பிரான்ஸ் சம்­பி­ய­னானால் 2 தட­வைகள் பீபா உலகக் கிண்­ணத்தை வென்ற முதல் அணித்­த­லை­வ­ராக ஹியூகோ லோறிஸ் சாதனை படைப்பார். பிரெஞ்சு அணியின் கோல்  காப்­பாளர் அவர்.

தங்கப் பாத­ணியை நோக்கி...

பிரான்ஸின் கோல் மெஷி­னாக கரு­தப்­ப­டுவர் கிலியன் எம்­பாப்பே, நாளை மறு­தினம் (20) தனது 24 ஆவது பிறந்த  தினத்தைக் கொண்­டா­ட­வுள்ள எம்­பாப்பே, இந்த உலகக் கிண்­ணத்தில் 5 கோல்­களைப் புகுத்­தி­யுள்ளார். இச்­சுற்­றுப்­போட்­டியில் இது­வரை அதிக கோல்­களைப் புகுத்­தி­ய­வர்­களில் மெஸி­யுடன் முதல் இடத்தை பகிர்ந்து­கொண்­டுள்ளார்.

இச்­சுற்­றுப்­போட்­டியில் அதிக கோல்­களைப் புகுத்­தி­யர்­களில் 2 ஆம் இடத்தில் உள்­ள­வர்கள் ஆர்­ஜென்­டி­னாவின் ஜூலியன் அல்­வா­ரெஸும் பிரான்ஸின் ஒலிவர் கிரூட்டும். இவர்கள் தலா 4 கோல்­களைப் புகுத்­தி­யுள்­ளனர். இச்­சுற்­றுப்­போட்­டியில் அதிக கோல்­களை புகுத்­திய பட்­டி­ய­லி­லுள்ள முதல் 4 வீரர்­களும் இறு­திப்­போட்­டியில் விளை­யாட வாய்ப்­புள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நால்­வரின் ஒருவர் தங்­கப்­பா­தணி விருதை வெல்ல அதிக வாய்ப்­புள்­ளது.

 

மத்­தி­யஸ்தர்

இறுதிப் போட்­டியின் மத்­தி­யஸ்­த­ராக போலந்தைச் சேர்ந்த சிமோன் மர்­சி­னியாக் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
முதல் சுற்றில் பிரான்ஸ் வெற்­றி­பெற்ற டென்­மார்­க்குக்கு எதி­ரான போட்டி, 2 ஆவது சுற்றில் ஆர்­ஜென்­டீனா வென்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான போட்டி ஆகி­ய­வற்­றிலும் மத்­தி­யஸ்­தராக, 41 வய­தான மர்­சியாக் பணி­யாற்­றி­யி­ருந்தார்.
அவரின் சக நாட்­ட­வர்­க­ளான பவெல் சோகோல்­னிக்கி, தோமஸ் லிஸ்­தி­கீவிக்ஸ் ஆகியோர் உதவி மத்­தி­யஸ்­தர்­க­ளாக பணி­யாற்­ற­வுள்­ளனர்.

Szymon-Marciniak-world-cup-final-referee

 

52 இலட்சம் ரூபா ரிக்கெட்

இறு­திப்­போட்­டியை பார்­வை­யிட விரும்பும் ஆர்­ஜென்­டீன ரசி­கர்­க­ளில் பெரும் எண்­ணிக்­கை­யா­னோர் ரிக்கெட் கிடைக்­கா­ததால் அதி­ருப்­தி­யுற்­றுள்­ளனர். ரிக்கெட் பெற உத­வு­மாறு

ஆர்­ஜென்­டீன கால்­பந்­தாட்டச் சம்­மே­ள­னத்தை வலி­யு­றுத்­து­வ­தற்­காக, தோஹாவில் ஆர்­ஜென்­டீன குழாத்­தினர் தங்­கி­யுள்ள ஹோட்­ட­லுக்கு வெளியே  2 நாட்­க­ளாக ஆர்­ஜென்­டீன ரசி­கர்கள் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இறு­திப்­போட்­டிக்­கு­ரிய மலி­வான ரிக்­கெட்­க­ளுக்கு பீபா 750 டொலர்கள்  (278,000 இலங்கை ரூபா) விலை நிர்­ண­யித்­துள்­ளது. ஆனால் அவை 4,000 டொலர்­க­ளுக்கு (சுமார் 15 லட்சம்  இலங்கை ரூபா) கறுப்புச் சந்­தையில் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக ரசி­கர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

மிக அதிக விலை­யுள்ள 5,850 டொலர்கள் (சுமார் 21 லட்சம் ரூபா) பெறு­ம­தி­யான ரிக்­கெட்கள், கறுப்புச் சந்­தையில் 14,000 டொலர்­க­ளுக்கு (சுமார் 5,200,000 லட்சம் இலங்கை  ரூபா, 12 லட்சம் இந்திய ரூபா) விற்­கப்­ப­டு­வ­தாக ரசி­கர்கள் கூறு­கின்­றனர்.

லூசெய்ல் அரங்கில் 88,900 பேருக்­கான இட­வ­சதி உள்­ளது. தற்போது 30 ஆயி­ரத்­துக்கு அதி­க­மான ஆர்­ஜென்­டீ­னி­யர்கள் கத்­தாரில் உள்­ளனர் எனவும், பலர் கடன் வாங்கிக் கொண்டு, கத்­தா­ருக்கு வந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.


ஆரோக்­கியப் பாதிப்­புகள்

பிரான்ஸின் சில வீரர்­க­ளுக்கு மர்ம வைரஸ் பாதிப் ­பொன்று ஏற்­பட்­டுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.
நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற பிரெஞ்சு குழாம் பயிற்­சியில் ரபாயெல் வ­ரேன், இப்­ரா­ஹிமா கொனாட்டே, கிங்ஸ்லி கோமன் ஆகிய மூவரும் பங்­கு­பற்­ற­வில்லை.

இவ்­வீ­ரர்­க­ளுக்கு தடிமன் போன்ற அறி­கு­றிகள் தென்­பட்­ட­மையே இதற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஏற்­கெ­னவே, மொரோக்­கோ­வு­ட­னான அரை இறுதி அட்­ரியென் ரபி­யொட், டெயோட் உபா­மெ­கானோ ஆகியோர் விலகி­யிருந்த­னர். எனினும் இவ்விருவரும் பின்னர் பயிற்சிகளுக்குத் திரும்பியமை குறிப்­பிடத்­­ தக்கது.

ஆர்ஜென்டீன அணித்­தலைவர் மெஸியும் நேற்று­முன்தினம் பயிற்சியில் பங்குபற்றவில்லை. அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என செய்தி வெளி­யாகி­யிருந்தது. எனினும், மெஸிக்கு பாதிப்பு இல்லை எனவும் அவர் இறுதிப் போட்டியில் விளை­யாடுவார் எனவும் ஆர்ஜென்டீன ஊடகமான கிளேரின் தெரி­வித்துள்ளது. (-சேது)

https://www.virakesari.lk/article/143430

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: முதல் கோலை அடித்த அர்ஜென்டினாவின் மெஸ்ஸி

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 டிசம்பர் 2022, 14:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் இறுதிப்போட்டியில் இன்று அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 8:30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

22வது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி போட்ட மெஸ்ஸி கோல் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸைவிட முன்னிலை பெற்றுள்ளது.

இறுதிப்போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே லியோனெல் மெஸ்ஸி, ஹூலியன் ஆல்வாரெஸ், டி மரியா மூவரும் உருவாக்கிய கோல் வாய்ப்பு, அர்ஜென்டினா ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், அவர்களுடைய ஆட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதையும் காட்டியது. அதுமட்டுமின்றி, ஆல்வாரெஸின் பணி தாக்குதல் மட்டுமில்லை, பந்தை அர்ஜென்டினாவின் எல்லைக்குள் செல்லவிடாமல் பிரான்ஸின் பக்கமே தக்கவைக்க வேண்டிய பணியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்தது. மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் ஐந்து கோல்களை அடித்துள்ளதோடு, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மெஸ்ஸி, ஆல்வாரெஸ் இருவரும், ஒருவித தீவிர தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கோல் முயற்சியில், கிறிஸ்டியன் ரொமேரோவால் எதிரணியின் கோல் கீப்பரும் கேப்டனுமான ஹ்யூகோ லோரிஸ் சற்றுத் தடுமாறினார். பிறகு, முதலுதவிக்குப் பிறகு மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆல்வாரெஸ் செய்த கோல் முயற்சிகளை தியோ ஹெர்னான்டெஸ் தடுத்துக் கொண்டிருந்தார். மொலினாவும் எம்பாப்பே செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் நிழல் போலத் தொடர்ந்தார். பிரான்சின் தடுப்பாட்டத்தில் இருந்த ஒரு பலவீனம் என்னவென்றால், அவர்களுடைய இடதுபுறத்தில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். அதை அர்ஜென்டினா கண்டுகொண்டுவிட்டதைப் போல் தோன்றுகிறது. ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினாவின் வசமே 38 சதவீதத்திற்கும் மேல் பந்து இருந்தது. பிரான்ஸ் மிகக் குறைவாகவே பந்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், பிரான்ஸை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது. அவர்களுடைய யுக்தியே எதிரணியை ஆடவிட்டு இறங்கி அடிப்பதுதான்.

 

 
அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே

ஆட்டம் தொடங்கியதிலிருந்து முதல் 20 நிமிடங்களில் எம்பாப்பே தடுப்பாட்டத்திலும் சரி தாக்குதல் ஆட்டத்திலும் சரி அவ்வளவு வீரியமாகக் களமிறங்காமலே இருந்தார். அந்த நேரத்தில் 21வது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்கு டி மரியா மூலமாக பெனால்டி கிடைத்தது. டி மரியா களத்தில் இறங்கியது முதல் இடதுபுறத்திலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் அனைத்தும் இதை நோக்கியே இருந்ததைப் போல் இருந்தது. டி மரியா ஏற்படுத்திக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை, மெஸ்ஸி தவறவிடாமல் கோலாக்கினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அவர் 6 கோல்களை அடித்துள்ளார். கோல் கீப்பரை வேறுபுறம் திசை திருப்பி, மிகவும் கூலாக தனது மெஸ்ஸி ஸ்பெஷல் ஷாட்டை அடித்தார். அந்த நேரத்தில், ஒருவேளை மைதானத்திற்குள் மாரடோனா இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்பது தான் முதலில் தோன்றியது. 2018ஆம் ஆண்டில் அவர் பெனால்டி ஷாட்டை மிஸ் செய்தபோது மாரடோனாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்திருக்கும் இந்த கோலை, மெஸ்ஸியை பொறுத்தவரை அவர் வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அர்ஜென்டினாவுக்கு இரண்டாவது கோல். மெஸ்ஸி இடது காலில் அழகாக அடித்த ஒன் டச் பாஸை, மெக் ஆலிஸ்டர் பிரான்சின் எல்லைக்குள் கொண்டு சென்று, டி மரியாவுக்கு பாஸ் செய்தார். டி மரியா அந்த வாய்ப்பை கோலாக்கினார். கோபா அமெரிக்காவின் இறுதிப் போட்டியில் இதேபோல் டி மரியா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முறையும் அதேபோல், அர்ஜென்டினாவுக்காக இறுதிப் போட்டியில் அவரை இறக்கியதற்கு அவர் மிகப்பெரிய ஒன்றைச் சாத்தியமாக்கினார் மிகவும் திட்டமிடப்பட்ட கச்சிதமான கோல். ஒரு தோல்வியில் தொடங்கிய அர்ஜென்டினாவின் ஆட்டம், இறுதிப்போட்டியில் டி மரியாவின் இரண்டாவது கோல் வரை வந்து நிற்கிறது.

அர்ஜென்டினாவின் தாக்குதலும் சரி மிட் ஃபீல்டும் சரி மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தது. ஆனால், வழக்கமாக மிகுந்த ஒருங்கிணைப்போடு இருக்கும் பிரான்ஸ் அணியின் திறமையான வெளிப்பாடு எங்கே சென்றது என்பதைப் போல் உள்ளது. டி மரியாவின் ஆட்டம் இன்று அணிக்கு மிகவும் உதவுகிறது.

அர்ஜென்டினா வீரர்களைப் பார்த்தால், இறுதிப்போட்டி என்ற அழுத்தம் இருப்பதைப் போலவே தெரியவில்லை. அந்தளவுக்கு மிகவும் கூலாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உப்பமெக்கானோ, மெஸ்ஸியை நிழல் போல் தொடர்ந்து அவர் காலுக்கு பந்து கிடைக்காமல் தடுக்கப் பலமுறை முயன்றாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எம்பாப்பே ஒருபுறம் பெரியளவில் தடுக்கப்பட்டார். அர்ஜென்டினா அவரைக் கட்டம் கட்டி தடுத்திருந்தது. பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பெ செய்ய வேண்டியதை, அர்ஜென்டினா அணிக்காக டி மரியா செய்துகொண்டிருந்தார்.

இந்த இரு அணிகளுமே இதற்கு முன்பு தலா இரண்டு முறை ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றுள்ளன. அர்ஜென்டினா கடைசியாக 1986இல் உலகக்கோப்பையை வென்றது. அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கும் லியோனல் மெஸ்ஸி 1987இல் பிறந்தவர். 35 வயதுள்ள அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டி. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

fifa worldcup final
 
படக்குறிப்பு,

அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் கத்தார் உலகக்கோப்பை 2022ல் கடந்துவந்த பாதை

இறுதிப்போட்டிக்கு முன்னர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கத்தாரில் நடக்கும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களிலேயே மிகவும் அதிகமான பொருட்செலவில் நடத்தப்படும் தொடர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. பிரான்ஸ் 2006, 1998, 2018 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடியுள்ளது. இதில் 1998 மற்றும் 2018இல் வென்றுள்ளது.

இதுவரை இரு அணிகள் மட்டுமே அடுத்தடுத்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளன. 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதற்கு முன் 1934 மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை இத்தாலி வென்றது. இம்முறை பிரான்ஸ் வென்றால் இந்த சாதனையைச் செய்த மூன்றாம் அணி என்ற பெருமையை பெறும்.

https://www.bbc.com/tamil/articles/c0drerg3p4yo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆம் இடத்துக்கான போட்டியில் மொரோக்கோவை வென்றது குரோஷியா

By SETHU

17 DEC, 2022 | 10:42 PM
image

(நெவில் அன்தனி)

குரோஏஷியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையில் தோஹா, கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (17) இரவு நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் 2:1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற குரோஏஷியா,  கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

1998இல் தனது முதலாவது உலகக் கிண்ண பிரவேசத்தில் 3ஆம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா இப்போது மீண்டும் இடத்தைப் பெற்றுள்ளது.

 இந்த வெற்றியுடன் குரோஏஷிய அணித் தலைவர் லூக்கா  மொட்ரிச்   உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து விடைபெற்றார்.  

ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இன்றைய போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு அணிகளும் 2 நிமிட இடைவெளியில் கோல் போட்டு அரங்கில் குழுமியிருந்து இரசிகர்களையும் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் கண்டுகளித்த இரசிகர்களையும் பரபரப்பில் ஆழத்தின.

போட்டி ஆரம்பித்தது முதல் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் விளையாடிய வண்ணம் இருந்தன. 

Croatia-vs-Morocco---FIFA-2022-AFP-Photo

போட்டியின் 3ஆவது நிமிடத்தில் மொரோக்கோ கோல்காப்பாளர் யாசின் பூனூ பந்தை தனது வீரர் ஒருவரை நோக்கி உதைக்க அப் பந்து வலது கோல் கம்பத்துக்கு அருகாமையால் வெளியே சென்றது.

7ஆவது நிமிடத்தில் குரோஏஷியாவுக்கு கிடைத்த பிறீ கிக்கை எதிரணி கோல் எல்லையை நோக்கி அணித் தலைவர் லூக்கா மொட்ரிச் உதைக்க, ஐவன் பெரிசிச் தனது தலையால் முட்டி ஜோஸ்கோ ஜிவார்டியலை நோக்கி பந்தை பரிமாற அவர் தலையால் முட்டி இலகுவாக கோல் போட்டார். உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அவர் போட்ட முதலாவது கோல் இதுவாகும்.

ஆனால், 2 நிமிடங்கள் கழித்து கிட்டத்தட்ட அதே பாணியில் மொரோக்கோ கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தியது.

Morocco-vs-Croatial-FIFA-2022-AFP-Photo.

மைதானத்தின் வலது புறத்திலிருந்து அணித் தலைவர் ஸியெச் பீறி கிக்கை எடுக்க குரோஷிய வீரர் ஒருவரின் தலையில் பட்டு பந்து மேலெழுந்தவாறு அவரது கோலை நோக்கிச் சென்றது. அப்பந்தை அஷ்ரப் தாரி தலையால் முட்டி கோலினுள் புகுத்தி மொரோக்கோ சார்பாக கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

போட்டியின்  25ஆவது நிமிடத்தில் மொரோக்கோ எல்லையில் ஏற்பட்ட சிறு தடுமாற்றத்தைப் பயன்படுத்தி லூக்கா மொட்றிச் தாழ்வாக உதைத்த பந்தை பூனூ தடுக்க அது முன்னோக்கிச் சென்றது. அவர் மின்னல் வேகத்தில் செயற்பட்டு எதிரணி வீரர் பந்தை நோக்கி வருவதற்கு முன்னர் மீண்டும் கையால் தட்டிவிட கோல் போடப்படுவது தடுக்கப்பட்டது.

இவ்வாறாக முதல் 30 நிமிடங்களில் குரோஏஷயா கோல் போடுவதற்கு 6 முயற்சிகளை எடுக்க, மொரோக்கோவினால் ஒரு முயற்சியே எடுக்க முடிந்தது.

33ஆவது நிமிடத்தில் மொரோக்கோவின் சொபியான் பவ்பாலும் பிலால் எல் கன்னூசும் இரட்டைப் பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டு குரோஏஷியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்த போதிலும் பவ்பாலின் காலில் பட்ட பந்து வெளியே சென்றது.

Croatia-2022.jpg

இரண்டு நிமிடங்கள் கழித்து ஹக்கிம் ஸியெச்சின் கோர்ணர் கிக் பந்தை யூசெவ் எல் நெஸி கோலை நோக்கி செலுத்த அது வெளியே செல்ல மொரோக்கோவின் மற்றொரு வாய்ப்பு நழுவிப்போனது.

உபதையீடு நேரம் உட்பட இடைவேளைக்கு 4 நிமிடங்கள் இருந்தபோது தனது பெனல்டி எல்லையில் மொரோக்கோ தவறவிட்ட பந்தை மிஸ்லாவ் ஓர்சிச் இடது புறத்திலிருந்து மேலாக உதைக்க பந்து வலது கம்பத்தில் பட்டு கோலினுள் புக, குரோஏஷியா 2 - 1 என இடைவேளையின் போது முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மொரோக்கோ கோல் எல்லையை ஆக்கிரமித்த குரோஏஷியா, 51ஆம், 53ஆம், 54ஆம் நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

மொரோக்கோவுக்கு 59ஆவது நிமிடத்தில் கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்பை மொரோக்கோ வீரர் சொபியான் பவ்பால் முறையாகப் பயன்படுத்த தவறினார்.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இருந்த ஆக்ரோஷமும் விறுவிறுப்பும் இரண்டாவது பகுதியில் 70ஆவது நிமிடம்வரை சற்று குறைந்து காணப்பட்டது. இரண்டு அணியினரும் எவ்வளதுதான் பந்தை முன்னோக்கி நகர்த்தினாலும் பின்கள வீரர்களது சாமர்த்தியத்தால் அவை தடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும் அதன் பின்னர் ஆட்டத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியதுடன் இரண்டு அணியினரும் எதிரணிகளின் கோல் எல்லைகளை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர்.

போட்டியின் 74ஆவது நிமிடத்தில் குரோஏஷியா எழுப்பிய பெனல்டி கேள்வி மத்தியஸ்தரினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஆனால் சலன அசைவுகளில் ஜிவார்டியோலை அப்ராபத்தினால் வீழ்த்தப்படுவது நன்கு தெரிந்தது. எனினும் அது குரோஏஷியாவுக்கு சாதகமாக அமையவில்லை.

மூன்று நிமிடங்கள் கழித்து கோல் நிலையை சமப்படுத்த மொரோக்கோவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு ஒன்றை யூசெவ் என் நெசிரி கோட்டைவிட்டார். 

 போட்டி முழு நேரத்தைத் தொடுவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது குரோஏஷியாவுக்கு கோல் போட கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது.    

கடைசி நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்த மொரோக்கோ வீரர் யூசெவ் அல் நெசிரி எடுத்த முயற்சி நூலிழையில் தவற குரோஷியா 3ஆம் இடத்தை உறுதிசெய்துகொண்டது.

https://www.virakesari.lk/article/143390

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 18 டிசம்பர் 2022
    புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்
முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி

36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா.

எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள்.

அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது.

ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே உள்ளது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது.

 

உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான்.

2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார்.

முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே.

எமிலியானோ மார்ட்டினெஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எமிலியானோ மார்ட்டினெஸ்

அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது.

எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது.

ஒரேயொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.

எம்பாப்பே ஏழாவது கோலுடன், கோல்டன் பூட் பெறுவதற்கான போட்டியில் முன்னிலைக்கு வந்துள்ளார்.

ஓர் அணி முதல் பாதியில் இருந்த அதே ஆக்ரோஷத்துடன் ஆடுவது சிரமம் தான். ஆனால், அர்ஜென்டினா இந்த முறை அதைச் செய்தது.

அர்ஜென்டினா செய்த சிறு தவறால், எம்பாப்பே பந்தை அவர்களுடைய எல்லைக்குள் கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார்.

 

டி மரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார்.

அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது.

ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார்.

பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார்.

அர்ஜென்டினாவின் முதல் கோல்

23வது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி போட்ட மெஸ்ஸி கோல் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸைவிட முன்னிலை பெற்றது.

இறுதிப்போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே லியோனெல் மெஸ்ஸி, ஹூலியன் ஆல்வாரெஸ், டி மரியா மூவரும் உருவாக்கிய கோல் வாய்ப்பு, அர்ஜென்டினா ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், அவர்களுடைய ஆட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதையும் காட்டியது. அதுமட்டுமின்றி, ஆல்வாரெஸின் பணி தாக்குதல் மட்டுமில்லை, பந்தை அர்ஜென்டினாவின் எல்லைக்குள் செல்லவிடாமல் பிரான்ஸின் பக்கமே தக்கவைக்க வேண்டிய பணியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்தது.

மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் ஐந்து கோல்களை அடித்துள்ளதோடு, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மெஸ்ஸி, ஆல்வாரெஸ் இருவரும், ஒருவித தீவிர தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கோல் முயற்சியில், கிறிஸ்டியன் ரொமேரோவால் எதிரணியின் கோல் கீப்பரும் கேப்டனுமான ஹ்யூகோ லோரிஸ் சற்று தடுமாறினார். முதலுதவிக்குப் பிறகு மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆல்வாரெஸ் செய்த கோல் முயற்சிகளை தியோ ஹெர்னான்டெஸ் தடுத்துக் கொண்டிருந்தார். மொலினாவும் எம்பாப்பே செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் நிழல் போலத் தொடர்ந்தார்.

ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினாவின் வசமே 38 சதவீதத்திற்கும் மேல் பந்து இருந்தது. பிரான்ஸ் மிகக் குறைவாகவே பந்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது.

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே

ஆட்டம் தொடங்கியதிலிருந்து முதல் 20 நிமிடங்களில் எம்பாப்பே தடுப்பாட்டத்திலும் சரி தாக்குதல் ஆட்டத்திலும் சரி அவ்வளவு வீரியமாகக் களமிறங்காமலே இருந்தார். அந்த நேரத்தில் 21வது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்கு டி மரியா மூலமாக பெனால்டி கிடைத்தது. டி மரியா களத்தில் இறங்கியது முதல் இடதுபுறத்திலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் அனைத்தும் இதை நோக்கியே இருந்ததைப் போல் இருந்தது.

டி மரியா ஏற்படுத்திக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை, மெஸ்ஸி தவறவிடாமல் கோலாக்கினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அவர் 6 கோல்களை அடித்துள்ளார். கோல் கீப்பரை வேறுபுறம் திசை திருப்பி, மிகவும் கூலாக தனது மெஸ்ஸி ஸ்பெஷல் ஷாட்டை அடித்தார்.

அந்த நேரத்தில், ஒருவேளை மைதானத்திற்குள் மாரடோனா இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்பது தான் முதலில் தோன்றியது. 2018ஆம் ஆண்டில் அவர் பெனால்டி ஷாட்டை மிஸ் செய்தபோது மாரடோனாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்திருக்கும் இந்த கோலை, மெஸ்ஸியை பொறுத்தவரை அவர் வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

டி மரியா அடித்த 2ஆம் கோல்

அர்ஜென்டினாவுக்கு இரண்டாவது கோல் 36வது நிமிடத்தில் கிடைத்தது. மெஸ்ஸி இடது காலில் அழகாக அடித்த ஒன் டச் பாஸை, மெக் ஆலிஸ்டர் பிரான்சின் எல்லைக்குள் கொண்டு சென்று, டி மரியாவுக்கு பாஸ் செய்தார். டி மரியா அந்த வாய்ப்பை கோலாக்கினார். கோபா அமெரிக்காவின் இறுதிப் போட்டியில் இதேபோல் டி மரியா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முறையும் அதேபோல், அர்ஜென்டினாவுக்காக இறுதிப் போட்டியில் அவரை இறக்கியதற்கு அவர் மிகப்பெரிய ஒன்றைச் சாத்தியமாக்கினார்.

மிகவும் திட்டமிடப்பட்ட கச்சிதமான கோல். ஒரு தோல்வியில் தொடங்கிய அர்ஜென்டினாவின் ஆட்டம், இறுதிப்போட்டியில் டி மரியாவின் இரண்டாவது கோல் வரை வந்து நின்றது.

அர்ஜென்டினாவின் தாக்குதலும் சரி மிட் ஃபீல்டும் சரி மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தது. ஆனால், வழக்கமாக மிகுந்த ஒருங்கிணைப்போடு இருக்கும் பிரான்ஸ் அணியின் திறமையான வெளிப்பாடு எங்கே சென்றது என்பதைப் போல் உள்ளது. டி மரியாவின் ஆட்டம் இன்று அணிக்கு மிகவும் உதவியது.

அர்ஜென்டினா வீரர்களைப் பார்த்தால், இறுதிப்போட்டி என்ற அழுத்தம் இருப்பதைப் போலவே தெரியவில்லை. அந்தளவுக்கு மிகவும் கூலாக விளையாடினார்கள்.

உப்பமெக்கானோ, மெஸ்ஸியை நிழல் போல் தொடர்ந்து அவர் காலுக்கு பந்து கிடைக்காமல் தடுக்கப் பலமுறை முயன்றாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எம்பாப்பே ஒருபுறம் பெரியளவில் தடுக்கப்பட்டார். அர்ஜென்டினா அவரைக் கட்டம் கட்டி தடுத்திருந்தது. பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பெ செய்ய வேண்டியதை, அர்ஜென்டினா அணிக்காக டி மரியா செய்துகொண்டிருந்தார்.

பிரான்ஸ் அணி பந்தைத் தங்கள் வசம் கொண்டு வந்து, கிலியன் எம்பாப்பே கொண்டு செல்லும்போது, அவரிடமிருந்து, மெஸ்ஸி, டிபால், ஃபெர்னாண்டெஸ் மூவரும் மிகச் சாதாரணமாகப் பறித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து எம்பாப்பே ஒரு ஃபௌலும் செய்தார். அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் டி மரியா கொண்டு சென்ற பந்தைப் பெற்று ஆல்வாரெஸ் கோல் வாய்ப்பை உருவாக்கிவிட்டார். முன்னிலையில் தாக்குதல் இடத்தில் மெஸ்ஸி, ஆல்வாரெஸ், டி மடியா மூவரையும் நிலைநிறுத்தியது, மிகச் சரியான முடிவாகவே தெரிந்தது.

இந்த இரு அணிகளுமே இதற்கு முன்பு தலா இரண்டு முறை ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றுள்ளன. அர்ஜென்டினா கடைசியாக 1986இல் உலகக்கோப்பையை வென்றது. அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கும் லியோனல் மெஸ்ஸி 1987இல் பிறந்தவர். 35 வயதுள்ள அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டி. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

fifa worldcup final
 
படக்குறிப்பு,

அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் கத்தார் உலகக்கோப்பை 2022ல் கடந்துவந்த பாதை

இறுதிப்போட்டிக்கு முன்னர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கத்தாரில் நடக்கும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களிலேயே மிகவும் அதிகமான பொருட்செலவில் நடத்தப்படும் தொடர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. பிரான்ஸ் 2006, 1998, 2018 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடியுள்ளது. இதில் 1998 மற்றும் 2018இல் வென்றுள்ளது.

இதுவரை இரு அணிகள் மட்டுமே அடுத்தடுத்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளன. 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதற்கு முன் 1934 மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை இத்தாலி வென்றது. இம்முறை பிரான்ஸ் வென்றால் இந்த சாதனையைச் செய்த மூன்றாம் அணி என்ற பெருமையை பெற்றிருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c0drerg3p4yo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸிக்கு பெனால்ட்டி வாய்ப்பளித்த டெம்பாலே இணையத்தில் தூற்றப்பட்டது ஏன்?

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 டிசம்பர் 2022, 19:26 GMT
புதுப்பிக்கப்பட்டது 18 டிசம்பர் 2022, 19:29 GMT

மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களின் கன்னங்கள் நிச்சயம் கண்ணீரால் நனைந்திருக்கும். அவ்வளவு சிறப்பாக தொடங்கிவிட்டு கோப்பையோடு முடிக்காவிட்டால் அர்ஜென்டினாவுக்கு அதைவிட சோகம் வேறு ஏதும் இல்லை. ஆனால் அப்படி நடக்கவிடவில்லை மெஸ்ஸியின் படை.

என்ன ஒரு இறுதிப்போட்டி என காண்போரை ஆச்சரியக் கடலில் மூழகடித்துவிட்டது நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்தின் இறுதி யுத்தம். 3 - 3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்த ஆட்டத்தை 4 - 2 கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை உச்சி முகர்ந்திருக்கிறது அர்ஜென்டினா.

தனது கடைசி உலகக்கோப்பை தொடருக்கு 'உலகக்கோப்பை'யுடன் முடிவுரை எழுதியிருக்கிறார் நட்சத்திர நாயகன் மெஸ்ஸி.

மெஸ்ஸிக்கு பெனால்டி வாய்ப்பளித்த பிரான்ஸ் வீரர்

டி பாக்ஸுக்குள் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பாலே செய்த மிகப்பெரிய தவறில் இருந்துதான் அர்ஜென்டினாவின் கை ஓங்கத் தொடங்கியது. 23வது நிமிடத்தில் டெம்பாலேவின் தவறால் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது.

 

 

அதை அற்புதமாக கோலாக மாற்றினார் மெஸ்ஸி. அர்ஜெண்டினா ஒரு கோல் முன்னிலை வகித்தபோதும் பிரான்ஸிடம் பெரிய எதிர்வினை ஒன்றும் தென்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பிரான்ஸ் மேலாளர் முதல் பாதி முடிவதற்குள்ளாகவே தவறிழைத்த டெல்பாலேவையும் கிரைவுடையும் வெளியேற்றி மாற்று வீரர்களை களத்திற்குள் அனுப்பினார்.

சமூக ஊடகங்களில் தூற்றப்பட்ட டெம்பாலே யார்?

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

80வது நிமிடம் வரை பிரான்ஸ் 2 கோல்கள் பின் தங்கியிருந்தது. ஏறத்தாழ அர்ஜென்டினாவின் வெற்றி உறுதி என்று நம்பிய ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடத் துவங்கிவிட்டனர். அதே சமயம், பிரான்ஸ் ரசிகர்கள் டெம்பாலேவை கடுமையாக விமர்சித்தனர்.

25 வயதான டெம்பாலே மெஸ்ஸியுடன் இணைந்து பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார். தற்போதும் அவர் அந்த அணிக்காக விங்கராக செயல்பட்டு வருகிறார். மெஸ்ஸி பல முறை தனக்கு நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் என டெம்பாலேவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் டெம்பாலே மெஸ்ஸி இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பிரான்ஸ் ரசிகர்கள் கடுமையாக அவரை சாடினர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அடுத்த GOAT எம்பாப்வேவா?

எம்பாப்பே

பட மூலாதாரம்,GETTY IMAGES

முடியாது என்பதை முடித்துக் காட்டுவதில் கில்லியாகவே செயல்பட்டிருக்கிறார் எம்பாப்வே. 2 நிமிடங்களில் அடுத்தடுத்த கோல்களை பதிவு செய்து அர்ஜெண்டினாவுக்கு மெகா ஷாக் கொடுத்த எம்பாப்வே அத்தோடு நில்லாது கூடுதல் நேரத்தில் 1 கோல், பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோல் என இறுதி ஆட்டத்தில் மொத்தம் 4 கோல்களை அடித்து ஆச்சரியப்படுத்தினார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் மூலம் கோல்டன் பூட் விருதையும் தட்டிச் சென்றார். பிரான்ஸ் தோல்வியைத் தழுவியிருந்தாலும் எம்பாப்வேவின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வரலாறு படைத்து விடைபெறுகிறார் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்தில் இறுதிப்போட்டியே எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என மெஸ்ஸி தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த வரலாற்று வெற்றி அவரது ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைத்திருக்கும்.

பெனால்டி ஷூட் அவுட் உள்பட இன்றைய ஆட்டத்தில் 3 கோல்களை அடித்து அர்ஜென்டினாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய பெருமை மெஸ்ஸியை சாரும். இன்னும் எத்தனை உலகக் கோப்பை தொடர்கள் வந்தாலும் பிரான்ஸ் - அர்ஜெண்டினா; மெஸ்ஸி - எம்பாப்வே இடையிலான இந்த இறுதியுத்தம் கால்பந்து வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

https://www.bbc.com/tamil/articles/c1dg4x0p3d0o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் கால்பந்து மோகம்: பிரான்ஸ், அர்ஜென்டினா ஜெர்சியில் கேரள மணமக்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மெரில் செபஸ்டியன்
  • பதவி,பிபிசி செய்திகளுக்காக
  • இருந்துகேரள மாநிலம் கொச்சியில் இருந்து…
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கேரள மணமக்கள், கால்பந்து ஜெர்சி, உலகக்கோப்பை
 
படக்குறிப்பு,

கேரளாவில் மணமேடையில் பிரான்ஸ், அர்ஜென்டினா கால்பந்து அணிகளின் ஜெர்சி அணிந்த மணமக்கள்

கிரிக்கெட் மோகம் நிறைந்த இந்தியாவில் கால்பந்து மீது கொண்ட காதலால் கேரளாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுகின்றனர். 

 

அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற ஞாயிற்றுக் கிழமையன்று கேரளாவில்  எங்கு நோக்கினும் போட்டியை நேரலையில் காண்பதற்கான முனைப்பே தென்பட்டது. 

 

 

கேரளாவில் ஆங்காங்கே பெரிய திரையில் இறுதிப்போட்டி நேரலை செய்யப்பட்டது. வீதிகளில் அர்ஜென்டினா, பிரான்ஸ் தேசியக் கொடிகள் கம்பீரமாக பறக்க, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெரிய திரைகளின் முன் போட்டியைக் காண திரண்டனர். 

ஆனால், கால்பந்து மீது கொண்ட காதலால் ஒரு திருமண ஜோடி செய்த காரியம் அவர்களை தனித்து அடையாளம் காட்டுவதாக அமைந்தது. சச்சின் – ஆதிரா ஜோடியின் திருமண நாள் சரியாக இறுதிப்போட்டி நடந்த ஞாயிறன்று அமைந்தது. பெரும்பாலான விஷயங்களில் ஒத்துப் போய்விட்ட அவர்கள், இறுதிப் போட்டியில் யாருக்கு ஆதரவு என்பதிலும் சமரசம் செய்ய விரும்பவில்லை. 

 

அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகராக சச்சின் இருக்க, மணமகள் ஆதிராவோ பிரான்ஸ் அணியின் தீவிர ரசிகையாக திகழ்ந்தார். 

 

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கத்தாரின் லுசைல் மைதானத்தில் மோதிய ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக கொச்சியில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். 

 

மணமக்களுக்கான பாரம்பரிய உடை மற்றும் ஆபரணங்களுக்கு மேலே இருவருமே தங்களது மனம் கவர்ந்த கால்பந்து நாயகர்களின் பத்தாம் நம்பர் பொறித்த ஜெர்சிக்களை அணிந்து கொண்டனர். பிரான்சின் இளம் நட்சத்திரம் கிலியான் எம்பாப்பே பெயர், எண் பொறித்த ஜெர்சியை ஆதிராவும், அர்ஜென்டினா வீரர் ஜெர்சியின் பெயர், எண் பொறித்த ஜெர்சியை சச்சினும் அணிந்திருந்தனர். 

 

மண விழாவுக்குப் பிறகு வரவேற்பு, மண விருந்தை முடித்துக் கொண்டு, உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண 206 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரத்தில் உள்ள சச்சினின் வீட்டிற்கு இருவரும் விரைந்ததாக மலையாள மனோரமா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

கேரள மணமக்கள், கால்பந்து ஜெர்சி, உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உலகக்கோப்பையை வென்ற களிப்பில் மெஸ்ஸி

பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்று, உலகக்கோப்பையை தன் கைகளில் ஏந்த வேண்டும் என்ற 35 வயது கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் கனவை நனவாக்கியது. 

மெஸ்ஸி ரசிகர்களை பெருமளவில் கொண்ட கேரளாவில் அர்ஜென்டினாவின் வெற்றியை ஞாயிற்றுக் கிழமை இரவு முதலே பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றதால், திருச்சூரில் ஓட்டல் உரிமையாளர் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இலவசமாக பிரியாணி வழங்கினார். 

கேரள ஜோடி

கால்பந்து மீது கேரளா கொண்டுள்ள காதல் கடந்த மாதம் பிஃபா வரையிலும் எட்டியது. கேரளாவில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த கால்பந்து ஜாம்பவான்களின் பிரமாண்ட கட் அவுட்களின் புகைப்படங்களை பிஃபா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மர் தனக்கு வைக்கப்பட்டிருந்த கட் அவுட்களைப் பார்த்து, அதற்காக கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c3g8e5m86zro

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை தொடர்: அரேபியர்கள், முஸ்லிம்கள் பெற்ற பலன் என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஜ்னீஷ் குமார்
  • பதவி,பிபிசி இந்திக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி அர்ஜென்டினாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. அர்ஜென்டினா மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது. இதில் லியோனெல் மெஸ்ஸி மிகப்பெரிய பங்கை வகித்தார். அர்ஜென்டினா இதற்கு முன்பு 1978 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் FIFA உலகக் கோப்பையை வென்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பைத் தொடர் நடந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு முஸ்லிம் நாட்டில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வுக்கு அரபு மற்றும் இஸ்லாமியத் தொடர்பைக் கொடுக்க கத்தார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.

ஃபிஃபா போட்டியை நடத்துவதற்காக கத்தார் 220 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனெல் மெஸ்ஸி உலக கோப்பையை பெற சென்றபோது, கத்தார் ஆட்சியாளர் ஷேக் தாமின் பின் ஹமாத் அல்தானி அவரது தோளில் ஒரு கருப்பு அங்கியை அணிவித்தார். இது அரபு ஆண்களின் பாரம்பரிய உடை. மெஸ்ஸியின் சட்டை இந்த உடையால் மூடப்பட்டிருந்தது. அவரது தேசிய பேட்ஜ் கூட மறைக்கப்பட்டிருந்தது. இதன் போது, ஃபிஃபா தலைவர் சிரித்தபடி காணப்பட்டார்.

பாரம்பரிய முறையிலான இந்த மரியாதையை அரேபியர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் மேற்கத்திய ட்விட்டர் பயனர்கள் அதை விமர்சித்து வருகின்றனர்.

அர்ஜென்டீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் பாப்லோ ஃஜாப்லேட்டா, "ஏன் இந்த அங்கி, அதற்கான தேவை இருக்கவில்லை,”என்று குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் ஃபிஃபா உலக கோப்பை போட்டியின் துவக்க விழாவில் ஒரு பாடகி பாரம்பரிய புர்கா அணிந்திருந்தார். பல ஐரோப்பிய நாடுகளில் இந்த வகையாக முகத்தை மூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தொடர்பு

இது தவிர குர்ஆன் வசனமும் படிக்கப்பட்டது. கத்தாரில் உள்ள சில ஹோட்டல்களில் பார்வையாளர்களுக்கு இஸ்லாம் பற்றிய புரிதலை அதிகரிக்க QR குறியீடுகள் வழங்கப்பட்டன என்று சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது தவிர இஸ்லாமிய தன்னார்வலர்கள் இஸ்லாமிய நாகரிகத்தைப் பற்றி பார்வையாளர்களுக்கு எடுத்துரைப்பதை பார்க்க முடிந்தது.

அமெரிக்க கேபிள் செய்தி சேனல் சி.என்.என், கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை நிகழ்வு மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்புகளை மேற்பார்வையிடும் FIFA உயர் குழுவிடம் இஸ்லாமிய 'டச்' வழங்குவது குறித்து கேள்விகள் கேட்டது. ஆனால் பதில் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த கேள்விக்கு கேட்கப்படுவதற்கு முன்பாக கத்தாரின் சுப்ரீம் கமிட்டி, சி.என்.என்-க்கு ஓர் அறிக்கையை வழங்கியது.

"உள்ளடக்கிய மற்றும் பாகுபாடு இல்லாத உலக கோப்பை போட்டியை நடத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கத்தாரில் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு பழமைவாத நாடாக இருப்பதால் இங்கு பொதுவில் காதல் தொடர்பான செயல்களைச் செய்ய முடியாது. எங்கள் கலாசாரத்தை மதிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஃபிஃபா உலக கோப்பை செய்திகளை சேகரிக்க கத்தாருக்கு வந்த மேற்கத்திய ஊடகவியலாளர்கள், அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்து தவறான எண்ணத்தை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. கத்தார் மக்கள் மேற்கத்திய உடையில் பெண்களைப் பார்க்கும் பழக்கமில்லாதவர்கள் என்று டைம்ஸ் ஆஃப் லண்டன் ஒரு புகைப்படத்தின் தலைப்பில் எழுதியது. சமூக ஊடகங்களில் இது குறித்து சர்ச்சை எழுந்ததால், இந்த தலைப்பை நீக்க வேண்டியிருந்தது. கத்தாரின் 29 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 87 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர் மற்றும் இவர்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். கத்தாரில் நடத்தப்பட்ட FIFA உலகக் கோப்பை குறித்த மேற்கத்திய ஊடகங்களில் வரும் விமர்சனங்களை நிராகரித்த FIFA தலைவர் ஜியானி இன்ஃபைடினோ, கத்தாருக்கு அனுதாபம் தெரிவித்தார்.

வெற்றிக் கொண்டாட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அர்ஜென்டினாவில் வெற்றிக் கொண்டாட்டம்

ஃபிஃபா தலைவர் என்ன சொன்னார்?

கத்தாரில் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு ஃபிஃபா தலைவர்,“இன்று நான் கத்தாரைச் சேர்ந்தவன் போல உணர்கிறேன். இன்று நான் என்னை ஓர் அரேபியனாகக் காண்கிறேன். இன்று நான் என்னை ஓர் ஆப்பிரிக்கனாக பார்க்கிறேன். இன்று நான் ஒரு மாற்றுத்திறனாளியாக உணர்கிறேன். இன்று நான் என்னை புலம்பெயர்ந்த தொழிலாளியாக பார்க்கிறேன். மேற்குலகம் தனது பாசாங்குகளால் சூழப்பட்டு மற்றவர்களுக்கு ஒழுக்கம் பற்றிய செய்திகளை வழங்கி வருகிறது,” என்றார். உலக கோப்பையின் போது, வெளியில் இருந்து வரும் கால்பந்து பிரியர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி கூற கத்தார் ஆர்வமாக இருந்தது என்று ஏபி செய்தி முகமை தெரிவித்தது. உலகக் கோப்பை விருந்தினர்களுக்காக இஸ்லாமிய விவகார அமைச்சகம், கட்டாரா கலாசார கிராம மசூதியில் முழு பெவிலியனை அமைத்திருந்தது. இந்த பெவிலியனில் இஸ்லாமிய சின்னங்கள் 30 மொழிகளில் இருந்தன. இது தவிர விருந்தினர்களுக்கு சிறு புத்தகங்கள் மற்றும் குர்ஆன்களும் விநியோகிக்கப்பட்டன. உலக கோப்பை மைதானங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் க்யூஆர் குறியீடுகள் இருந்தன. அவற்றை ஸ்கேன் செய்தால் குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றி படிக்க முடியும். கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கட்டாரா கலாசார கிராம மசூதி அனைவரையும், குறிப்பாக இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களை ஈர்க்கும் மையமாக இருந்தது என்று துருக்கிய செய்தி நிறுவனம் அனாதோலு எழுதியுள்ளது.

இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மைமிக்க மதம் என்று பல மொழிகள் தெரிந்த ஆண்களும் பெண்களும் சுற்றுலாப் பயணிகளிடம் விளக்கியதாக அனாதோலு மேலும் தெரிவித்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இஸ்ரேல் பற்றிய சர்ச்சை

2022 உலகக் கோப்பையின் போது இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து தோஹாவுக்கு நேரடி விமானங்கள் இருக்கும் என்று ஃபிஃபா சென்ற மாதம் அறிவித்தது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ரசிகர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. கத்தாருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதாண்மை உறவுகள் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவை இருந்ததில்லை. இந்த உலகக் கோப்பையின் போது தோஹா மற்றும் டெல் அவிவ் இடையே விமான சேவை தொடங்குவதைப் பற்றி இஸ்ரேல் மிகவும் உற்சாகமாக இருந்தது. இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று கூறியது. அரபு உலகம் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளும் திசையில் நகரும் செயலாக பலர் இதைப்பார்த்தனர். ஆனால் அரேபிய கால்பந்து பிரியர்கள் இஸ்ரேலின் இந்த உற்சாகத்தை நீண்ட காலம் நிலைத்திருக்க விடவில்லை. இந்தப் போட்டியின் செய்திகளை சேகரிக்க வந்த இஸ்ரேலிய ஊடகங்களை, அரபு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் புறக்கணிக்கத் தொடங்கினர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

பாலத்தீனத்திற்கு ஆதரவு

மறுபுறம் கத்தாரில் பொது இடங்களில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மைதானத்திற்கு வெளியே இஸ்ரேலிய ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாலத்தீன ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பாலத்தீன அதிகார சபையின் கொடிகளும் அசைக்கப்பட்டன.

இராக் மற்றும் அரபு நாடுகள் பற்றிய செய்தி வழங்கும் அம்வாஸ் மீடியா, "ஃபிஃபா உலக கோப்பையில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக காட்டப்படும் உணர்வு பார்வையாளர்களை வியக்க வைக்கிறது. இது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஆச்சரியமாக இருந்தது,”என்று எழுதியது.

”அரபு- இஸ்ரேல் தாவாவுக்கு தீர்வுகாணும் நோக்கிலான ஆபிரகாம் உடன்படிக்கைகளின் வரம்புகளை புரிந்து கொள்ள பலர் தவறி விட்டனர். அரபு நாடுகளில் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் FIFA உலகக் கோப்பையின்போது அரபு நாடுகளின் சாமானியர்கள் மத்தியில் இதற்கு முற்றிலும் மாறான சூழல் நிலவியது,”என்று அது குறிப்பிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியுடன், பஹ்ரைன், மொராக்கோ, சூடான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் முறையான உறவுகளை ஏற்படுத்த இஸ்ரேல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த நான்கு நாடுகளும் இஸ்ரேலுடன் அரசு மட்டத்தில் முறையான உறவை ஏற்படுத்திக் கொண்டபோதிலும், அங்குள்ள பொதுமக்களின் எதிர்வினை வேறுவிதமாக இருப்பதாக அம்வாஸ் மீடியா எழுதியுள்ளது. மற்ற அரபு நாடுகளிலும் இஸ்ரேல் மீதான வெறுப்பு குறையவில்லை.

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரபு மக்களின் கோபம்

"இஸ்ரேல் அரபு அரசுகளுடன் சமாதானம் செய்து கொள்கிறது. அது வேறு விஷயம். ஆனால் அரபு நாட்டு மக்கள் மத்தியில் இஸ்ரேல் குறித்த கருத்து என்ன என்பது வேறு விஷயம். இஸ்ரேலுடனான உறவை சீராக்கிய அரபு நாடுகளின் சாமானிய மக்கள் இதை ஏற்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது,” என்று அம்வாஸ் மீடியா குறிப்பிட்டது. " அரபு அரசுகளுக்கும் அங்குள்ள பொது மக்களும் இடையே இஸ்ரேல் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்பதை அரபு மக்கள் மற்றும் உலகக் கோப்பை வீரர்களிடையே காணப்பட்ட பாலத்தீனர்கள் மீதான அனுதாபம் சுட்டிக்காட்டுகிறது,” என்று அன்வாஸ் மீடியாவிடம் பேசிய டென்வர் பல்கலைக் கழகத்தின் மத்திய கிழக்கு ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் நாதேர் ஹாஷ்மி தெரிவித்தார். ”ஆபிரகாம் உடன்படிக்கைகள் சாமானிய மக்கள் மத்தியில் மிகவும் விரும்பத்தகாததாகி வருகிறது. அரபு நாடுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து ஜனநாயகம் வரும்போது, ஆபிரகாம் உடன்படிக்கைகள் மேலும் வலுவிழக்கும். அரேபிய பொது மக்கள் பாலத்தீனியர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.”

அரபு மக்களின் கோபம்

பட மூலாதாரம்,@ARABNEWS

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, இஸ்ரேலுடனான உறவை சீர்படுத்தும் விஷயம் தொடர்பாக அரேபிய ரசிகர்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று மத்திய கிழக்கு ஊடகங்களில் கூறப்படுகிறது. இஸ்ரேலியர்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உலக கோப்பை போட்டி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இப்படிச் செய்தால் உலக ஊடகங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை உலகம் முழுக்கச் சொல்ல முடியும் என்பதும் அரபு நாட்டுப் பொது மக்களின் மனதில் இருந்தது. இஸ்ரேலிய ஊடகங்களுக்கு சாமானிய அரபு மக்கள் அளித்த பதில் வைரலாகி வருகிறது என்று அரபு நியூஸ் எழுதியுள்ளது. நவம்பர் 18ஆம் தேதி ஒரு வீடியோ வைரலானது. அதில் கத்தாரைச் சேர்ந்த ஒருவர் இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனலின் செய்தியாளரிடம் பேச மறுத்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப்பிறகு மற்றொரு வீடியோ பற்றியும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதில் லெபனான் மக்கள் இஸ்ரேலிய பத்திரிகையாளர்களுடன் பேச மறுத்தனர். "இஸ்ரேலுக்கு இங்கு இடமில்லை. முழுதும் பாலத்தீனம் தான்,” என்று சேனல் 12 செய்தியாளரிடம் ஒருவர் கூறினார்.

கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலியர்கள் மீது வெறுப்பா?

கத்தாரில் அரபு ரசிகர்களின் இஸ்ரேல் புறக்கணிப்பு, செய்திகளில் பெரிதாக அடிபடுகிறது. இதற்கு இஸ்ரேலிய பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேலிய பத்திரிகையாளர் ராஸ் ஷெச்சிங்க் நவம்பர் 26 அன்று ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அரபு மக்கள் பாலத்தீன கொடியை ஏந்தி இஸ்ரேல் பத்திரிகையாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். இஸ்ரேல் எங்கும் இல்லை, முழுப் பகுதியும் பாலத்தீனம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தையும் இந்தக்காணொளியில் பார்க்க முடிகிறது. இந்தக் காணொளியில் ஓர் இளைஞர் செய்தியாளரிடம் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்கிறார்.

இஸ்ரேலில் இருந்து என்று செய்தியாளர் கூறினார். இதைக் கேட்டதும் அந்த இளைஞர் பாலத்தீன கொடியுடன் முன்னால் சென்று நான் இஸ்ரேலை ஒரு நாடாகக் கருதவில்லை, பாலத்தீனம் மட்டுமே உள்ளது என்று கூறுகிறார். இதற்கிடையில் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் வருகிறார்கள், அவர்களும் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பின்னர் மொராக்கோ ரசிகர்கள் வருகிறார்கள். அவர்களும் இஸ்ரேலிய செய்தியாளரிடம் பேச மறுக்கிறார்கள். மொராக்கோ ரசிகரிடம் உங்கள் நாடு இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று இஸ்ரேலிய செய்தியாளர் சொல்கிறார். அதற்கு மொராக்கோ ரசிகர்கள் ’இஸ்ரேல் எதுவும் இல்லை. பாலஸ்தீனம் மட்டுமே உள்ளது.’ என்று சொல்கிறார்கள். இதன் போது இஸ்ரேலிய செய்தியாளர் ஓர் இஸ்ரேலிய குடிமகனிடம் பேசுகிறார். அப்போது மக்கள் பின்னால் வந்து பாலத்தீன கோஷங்களை எழுப்பத் தொடங்குகிறார்கள்,” இஸ்ரேல் இல்லை. பாலத்தீனம் மட்டுமே உள்ளது,” என்று அவர்கள் கோஷமிடுகின்றனர். இஸ்ரேலிய செய்தியாளர் ராஸ் ஷெச்சிங்க் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, "நான் எதையும் எழுத விரும்பவில்லை. நீங்களே கேளுங்கள். நாங்கள் எப்போதும் செய்தியாளராக இருக்கிறோம். இது ஒரு விளையாட்டு நிகழ்வு. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் பகிர முடியாது. இங்கு எங்கள் மீது நிறைய வெறுப்பு உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலக கோப்பையில் மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறியது, அரபு மற்றும் இஸ்லாத்தின் பெருமையுடன் இணைக்கப்பட்டது.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு OIC மொராக்கோவை வாழ்த்துவதற்காக ஒரு தனி அறிக்கையை வெளியிட்டது, அதே நேரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், மொராக்கோ அணியை முஸ்லிம் அணி என்று அழைத்தார். செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் மொராக்கோ மன்னரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்

போட்டியின் சிறப்பம்சங்கள்

இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா 2022 கால்பந்து உலக கோப்பையை வென்றது. அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளிலும் அர்ஜென்டினா அணி சாம்பியன் ஆனது. இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயமானது. 4-2 கோல் கணக்கு அர்ஜென்டினாவுக்கு சாதகமாக அமைந்தது. இரு அணிகளும் இரண்டாவது பாதிக்குப்பிறகு 2-2 மற்றும் கூடுதல் நேரத்திற்குப் பிறகு 3-3 கோல்கள் என சமநிலையில் இருந்தன. அர்ஜென்டினா அணிக்காக லியோனெல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் மாரியா ஒரு கோலையும் அடித்தனர். பிரான்ஸ் அணிக்காக கிலியன் எம்பாப்பே மூன்று கோல்களையும் அடித்தார். போட்டியில் எட்டு கோல்கள் அடித்த எம்பாப்பே, 'கோல்டன் பூட்' விருது பெற்றார். ஏழு கோல்கள் அடித்த லியோனெல் மெஸ்ஸி போட்டியின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cw0j7yr829xo

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.