Jump to content

Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்!

jeyamohan1.jpg

Furniture-ன் பெயரால் சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபர்னிச்சர்கள் உடைபட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளம் இப்போது யுத்த களமாக உருமாறி நிற்பதற்கு காரணம் எழுத்தாளர் ஜெயமோகனின் அந்த ஒற்றை அறிவிப்புதான்.

புளிச்ச மாவு

2020-6-aqdep22uoan-fb.jpg

எழுத்தாளர் ஜெயமோகன், தீவிர வலதுசாரி எழுத்தாளர். இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக முன்வைப்பவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளின் மையமாகவும் இருப்பவர் ஜெயமோகன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் மளிகை கடைகாரர் ஒருவர் புளிச்சமாவு கொடுத்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருந்தார் ஜெயமோகன்.

அறைகலனும் ஜெயமோகனும்

இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது ஃபர்னிச்சர் விவகாரம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், Furnitureக்கு அர்த்தம் அறைகலன் என்பதை வெண்முரசுவில் பயன்படுத்தினேன். அதில் விக்சனரியில் பயன்படுத்தப்பட்டது. அந்த சொல்லை நான்தான் கண்டுபிடித்தேன் என்றார். அதாவது அறைகலன் என்ற சொல்லை தமிழுக்கு நன்கொடையாக கண்டுபிடித்து வழங்கியவர் ஜெயமோகன் என்பது அவரது கருத்து.

மனுஷ்யபுத்திரன்

manushyaputhiran-165500085616x9.jpg

அவ்வளவுதான்.. சமூக வலைதளங்களில் அமளி துமளிதான்.. திரும்பிய பக்கம் எல்லாம் இந்த ஃபர்னிச்சர் விவகாரம்தான். திமுகவை சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஜெயமோகனுக்கு பதிலடி தரும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், Furniture க்கு ' அறை கலன்' என்ற சொல் 1994 ல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆட்சிச் சொல்லகராதி ஆறாம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. 1994 ல் வெண்முரசு எழுதப்படவில்லை. அறைகலன் ஜெயமோகனின் சொல்லும் அல்ல.

என் வேண்டுகோளுக்கிணங்க இதைக் கண்டுபிடித்துத் தந்த பெருமாள் முருகனுக்கு நன்றிகள். நாங்கள் இவ்வளவு அலர்ட்டா இருக்குற காலத்திலேயே இவ்வளவு துணிச்சலா கதை விட்டால் எப்படி? என சீறியிருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் மனுஷ்யபுத்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1974-ம் ஆண்டு நூலில்..

IMG-20221116-213330.jpg

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை தளபதிராஜ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், அறைகலன் என்ற சொல்லை உருவாக்கியது ஜெயமோகனா?

ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ. இராமலிங்கனார் 1974 -ஆம் ஆண்டு எழுதிய 'ஆட்சித் துறைத் தமிழ்' என்னும் நூலின் மூலம் 'அறைகலன்' என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் ! (படம்: கீ.இராமலிங்கனார் எழுதிய தமிழில் எழுதுவோம் நால். வெளியான ஆண்டு 1978. பக்கம் 94) என பதிவு செய்துள்ளார்.

கவிஞர் மகுடேசுவரன்

கவிஞர் மகுடேசுவரன், அறைக்குள் மட்டுமே வைத்துப் பயன்படுத்தத் தக்க பொருள் அறைகலன் எனப்படும். அறைகலன் (அறையினது கலன்), அறைக்கலன் (அறையின்கண் வைக்கும் கலன்) என இருவாறும் எழுதலாம். உள்ளிருக்கும் பயன்பொருள். இச்சொல்லினைத் தமிழாய்ந்த பெருமக்கள் பலர் நெடுங்காலமாகவே பயன்படுத்தியுள்ளனர்.

மணவை முஸ்தபா வெளியிட்ட 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்' என்ற நூலில் 'அறைகலன்' என்ற சொல் பதினெட்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இந்நூலின் முதற்பதிப்பு செப்டம்பர் 1993ஆம் ஆண்டு வெளிவந்தது என எழுதியுள்ளார். இப்படியான விவாதங்களால் சமூக வலைதள பக்கங்கள் ரத்த பூமியாகி கிடக்கிறது!

https://tamil.oneindia.com/news/chennai/a-new-controversy-erupts-over-rightwing-writer-jeyamohan/articlecontent-pf807095-485596.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைச்சொல் - ஜெயமோகன்

MeenaNovember 17, 2022

Mudhalavin-001.jpeg

அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.

இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன. அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.

நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.

அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
 

 

https://www.jeyamohan.in/175825/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2022 at 19:49, கிருபன் said:

கலைச்சொல் - ஜெயமோகன்

MeenaNovember 17, 2022

Mudhalavin-001.jpeg

அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.

இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன. அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.

நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.

அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
 

 

https://www.jeyamohan.in/175825/

 

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தான். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தான். 

நக்கலாக கூறுகிறீர்கள் என்பது புரிகிறது ஆனால் யாரை என்பதை கண்டு பிடிப்பதற்கு எனக்கு புலமை இல்லை,

ஜெய மோகன் என்பவர் யார்?

முன்பு எதோ புளித்த மா விவகாரத்தில் அவரை பற்றி முதலில் கேள்விப்பட்டேன், இப்போது அரைத்த மாவையே அரைக்கின்ற (வழக்கில் உள்ள ஒரு கலை சொல்லுக்கு உரிமை கோரும்) விவகாரத்தில் கேள்விப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

நக்கலாக கூறுகிறீர்கள் என்பது புரிகிறது ஆனால் யாரை என்பதை கண்டு பிடிப்பதற்கு எனக்கு புலமை இல்லை,

ஜெய மோகன் என்பவர் யார்?

முன்பு எதோ புளித்த மா விவகாரத்தில் அவரை பற்றி முதலில் கேள்விப்பட்டேன், இப்போது அரைத்த மாவையே அரைக்கின்ற (வழக்கில் உள்ள ஒரு கலை சொல்லுக்கு உரிமை கோரும்) விவகாரத்தில் கேள்விப்படுகிறேன்.

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

🤣

முடியாதுதான். அதுதான் பாவம் எண்டு “சுமாரான” எழுத்தாளர் என்றேன்🤣.

சரி நல்ல எழுத்தாளர்தான். கருத்தாளர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

ஜெய மோகன் என்பவர் யார்?

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

3 hours ago, goshan_che said:

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

வெண்முரசை எழுதிய போதும் சரி, கோவிட் பெருந்தொற்றின் போது ஒரு நாளுக்கு ஒரு சிறுகதை என்ற வேகத்தில் எழுதிய போதும் சரி, ஜெயமோகனின் சலிக்காத எழுத்துழைப்பு வியக்க வைத்தது. இதே போல ஆங்கிலத்தில் எழுதும் பெயர் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதும் சந்தேகமே! ஒரு prolific எழுத்தாளராக அறியப் பட்ட ஹருகி முறகாமி என்கிற ஜப்பானிய எழுத்தாளர் கூட, வருடத்தில் சில மாதங்கள் தான் தினசரி உட்கார்ந்து எழுதி முடிப்பாராம் என்று அறிந்திருக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

அதுதானே பார்த்தேன் நந்தினியை குடும்பிக் கூட்டத்தின் வளர்ப்பு மகளாக்கி.. குடும்பிகளின் ஆதிக்கத்தையும் படத்திற்குள் திணித்ததை. நந்தினி கல்கி உருவாக்கிய செருகல் பாத்திரத்திற்கு இவர்... கூடக் குடும்பிச் சாயம் பூசி விட்டிருக்கிறார்.

அதேபோல்.. பல்லவர்களை சிங்களவர்களின் காலடியில் கெஞ்சுவது போலக் காட்டி இருப்பதும் இவரின் சித்துவிளையாட்டாகத்தான் இருக்கும். ஏனெனில்.. இவர் தமிழீழ எதிர்ப்பு ஆள். சிங்களத் தீவு விசுவாசி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தா

இதில டபிள் மீனிங்க் எதுவுமில்லையே?😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

 

 

 

 

 நன்றி

16 minutes ago, வாலி said:

இதில டபிள் மீனிங்க் எதுவுமில்லையே?😂

அது உங்க பார்வையில இருக்கு வாலி🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

நன்றி கோசான்.

4 hours ago, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

நன்றி கிருபன், நான் பன்னாடை மாதிரி, நல்லவற்றை விட்டு விட்டு குப்பைகளை எடுப்பது, கதைகள் வாசிப்பதை 5 அல்லது 6 வருடங்களாக பெரும்பாலும் நிறுத்திவிட்டேன், யாழ்கள உறவுகள் கதைகள் சில சமயம் வாசிப்பதுண்டு, சிலவேளை ஜெயமோகனின் கதையினை எங்காவது வாசித்திருப்பேன்.

ஆனால் பொதுவெளியில் இந்த பெயர்களை அதிகம் கேள்விப்பட்டுள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறைக்கலன் -அவதூறு

MeenaNovember 17, 2022

 

கலைச்சொல்

பேட்டியில் மறைந்து போன சொற்களை மீண்டும் கொண்டு வந்தேன் என சொன்ன பின்தான் அறைகலன் பற்றிக்கூறி இருக்கிறீர்கள். இந்த சொல்லை நீங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை. இது நினைவுப் பிழை அல்ல ஒப்புக் கொள்ளல் பிழை. மிதமிஞ்சிய சமூக ஊடக உலாவிகளின் காய்ச்சல் உங்களுக்கும் தொற்றி விட்டது.

கிருஷ்ணன் ஈரோடு

*

நண்பர் கிருஷ்ணன் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார் நான் இப்போது பின்லாந்தில் Rovaniemi என்ற ஊரில் உறைநிலைக்கு கீழே 11 பாகை குளிர் சூழ இருக்கிறேன். மின்னஞ்சல்களைப் பார்க்க நேரமில்லை. அருஞ்சொல் பேட்டியை முழுசாக பார்க்க முடியவில்லை. அது நேர் உரையாடலாக தன்னியல்பாக நடந்தது. பேசிய விஷயங்கள் எனக்கு சரியாக நினைவிலும் இல்லை. ஆகவே வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலுமாக நான் அறைக்கலன் என்ற வார்த்தையை உருவாக்கியதாக அப்பேட்டியில் நானே சொல்லியிருப்பதாக பலர் சொன்னபோது இருக்கலாம் என்று நானும் நினைத்தேன்.

கிருஷ்ணன் சொல்வது போல அது நினைவுப்பிழை அல்ல, ஏற்பு பிழை. இப்போது அந்தப் பேட்டியைப் பார்த்தால் அதில் நான் அச்சொல்லை உருவாக்கியதாக எங்குமே சொல்லவில்லை. மாறாக சீவகசிந்தாமணியிலிருந்து ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் பழைய மரபிலிருந்து ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் எடுத்து பயன்படுத்தியிருப்பதாகத்தான் அந்தப்பேட்டியில் சொல்லியிருக்கிறேன். மரபிலிருந்த சொல்லை மறுபடியும் புழக்கத்திற்கு கொண்டுவந்ததற்கு உதாரணமாக அச்சொற்களை சொல்லியிருக்கிறேனே ஒழிய அதை நான் உருவாக்கியதாக கூறவில்லை.

அப்படி என்றால் ஏன் முந்தைய குறிப்பில் அதை சொன்னேன். உண்மையில் சமூக வலைதளங்களில் உலவும் நாலைந்து நண்பர்கள், அதாவது என்மேல் நல்லெண்ணம் கொண்டவர்கள், எனக்கு மின்னஞ்சல் வழியாக அதை தெரிவித்தார்கள். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று கேட்டார்கள். ஆகவே ஒரு அவசர விளக்கமாக அதை எழுதினேன். இப்போது அந்த நண்பர்களை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு “நான் அப்படி சொல்லவே இல்லையே நீங்கள் எதை நம்பி என்னிடம் அப்படி கேட்டீர்கள்? நீங்கள் அந்தப்பேட்டியை முழுக்க பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்களும் அந்தப்பேட்டியை முழுக்க பார்க்கவில்லை என்றார்கள். அவர்கள் அனைவருமே பெருமாள் முருகன் என்ற ஒரு நபர் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டவர், அவர் சொன்னதனால் நான் சொல்லியிருப்பேன் என்று நம்பியிருக்கிறார்கள். மற்ற திமுக அல்லக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

நான் சொன்னேன்…

“அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான் இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நபர் கூறியதை ஒட்டி எப்படி நீங்கள் இதை என்னிடம் கேட்கலாம்? ஓராண்டுக்கு இனிமேல் நாம் நண்பர்களாக இல்லாமல் இருப்போம். உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தபின் நாம் நண்பர்களாக இருப்போம்” என்றேன். அதன்பின் அவர்கள் மீண்டும் வருந்தி கடிதமிட்டார்கள். எப்போதுமே முதல்கட்ட சீற்றத்திற்கு பிறகு நண்பர்களிடம் இசைந்துவிடுவது எனது வழக்கம். சரிதான் விட்டுவிடுவோம். யாரோ எதையுமே படிக்கவோ எழுதவோ சிந்திக்கவோ தெரியாத ஒரு வெற்று அரசியல் கூட்டம் உருவாக்கும் ஓசைகள். அதற்காக நாம் நட்பை இழக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

சமூக ஊடக வெளியில் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் இந்த கும்பல் தன்னிச்சையாக கூடியதல்ல. இது ஓர் அரசியல் இயக்கத்தின் ஊடக அணி. எழுத்தாளர்களின் மேல் கட்சிகளின் ஊடக அணிகள் நடத்தும் இந்த அவதூறுத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் அதைப்பற்றி சற்று விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.

எண்ணிப்பாருங்கள், வெண்முரசு போன்று ஒரு பிரம்ம்மாண்டமான ஒரு படைப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. அது நிறைவுற்றபோது தமிழில் எந்த சமூக வலைதளம், எந்த இணைய ஊடகம் அதைப்பற்றி ஒரு வரி செய்தியாவது போட்டது? ஆனால் இவர்கள் உருவாக்கும் இந்த முற்றிலும் அடிப்படைகள் அற்ற அவதூறுக்கு பத்துக்கும் மேற்பட்ட இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தினமலர் நாளிதழ் உட்பட இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. எங்கு வரை கொண்டு சேர்க்க இவர்களால் இயல்கிறது! இந்த அவதூறை அவர்கள் சில லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்திருப்பார்கள். அவர்களிடம் பதில் சொல்ல நமக்கு ஊடகம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நாமாவது இதை தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். நமக்கு நாமேயாவது நிதானத்துடனும் தெளிவுடனும் இருந்தாகவேண்டும்.

 

https://www.jeyamohan.in/175839/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அருஞ்சொல்லுக்கு வழங்கிய           பேட்டியில்(https://youtu.be/lMgQ9QVIjdQ)  ஜெயமோகன் மிகத்தெளிவாகவே அறைக்கலன் என்ற சொல்லை தானே உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார். பேட்டியின் 13.28 க்கும் 13.45 க்கும் இடையில் அவர் சொன்னதன் எழுத்து வடிவம் கீழே

"உதாரணமாக Furniture க்கு அறைக்கலன் என்கிற வார்த்தை வெண்முரசில இருக்கு.  பிறகு அது டிக்சனரிக்கு போகிறது. பிறகு தினத்தந்தி விளம்பரத்தில் வருகிறது. என் கண்முன்னாலேயே தினத்தந்தியில் அறைக்கலன்கள் விற்பனை அப்படீன்னு. அது நான் உருவாக்கிய வார்த்தை"

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தமிழில் வழக்கில் உள்ள "தளபாடம்" எனும் சொல் தமிழ் சொல் இல்லையா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2022 at 02:11, Justin said:

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

நான் ஒரு பன்னாடை மாதிரி நல்ல விடயங்களை விட்டு விட்டு குப்பை கூழங்களை எடுத்து கொண்டுள்ளேன், அவரது தமிழ் சேவை தெரியவில்லை ஆனால் ஒரு புளித்த மா விவகாரத்தினை மட்டும் பார்த்து விட்டு எனது மனதில் நினைத்துக்கொண்டது

என்ன ஒரு மனிதர் இவர் புளித்தமாவினை தூக்கி போட்டுவிட்டு போயிருந்தால் ஒரு சாமானிய கடைக்காரரிற்கு இலாபம் தற்போது அந்த கடைக்காரரிற்கு மேல் வழக்கு போட உதவுவதற்காக வைத்தியசாலைக்கெல்லாம் போய் அதற்கு மேல் செலவழித்து மன உளச்சலுக்கு ஆளாகி, மன உளச்சலுக்கு உள்ளாக்கி என நினைத்தேன்.

ஆனால் உங்களது கருத்துகளை பார்க்கும் போதுதான் புரிகிறது.

On 19/11/2022 at 05:02, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

கிருபன் இவரது கதைகளை இணைத்தால் நேரம் கிடைக்கும் போது வாசிக்க தற்போது ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

கிருபன் இவரது கதைகளை இணைத்தால் நேரம் கிடைக்கும் போது வாசிக்க தற்போது ஆவலாக உள்ளது.

ஆசான் ஜெயமோகனின் தளத்தில் பல நூறு கதைகள் உள்ளன. படித்தவற்றில் சிலவற்றை இடைக்கிடை யாழில் இணைப்பதுண்டு.

 

யாழில் கடைசியாக இணைத்த கதை!

 

இன்னொரு சுவாரசியமான நெடுங்கதை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆசான் ஜெயமோகனின் தளத்தில் பல நூறு கதைகள் உள்ளன. படித்தவற்றில் சிலவற்றை இடைக்கிடை யாழில் இணைப்பதுண்டு.

 

யாழில் கடைசியாக இணைத்த கதை!

 

இன்னொரு சுவாரசியமான நெடுங்கதை!

 

நன்றி கிருபன், கதைகளை சும்மா ஒரு பொழுதுபோக்காகவே முன்பு வாசிப்பதுண்டு அதனால் அதன் காத்திரங்களை கவனத்தில் எடுப்பதில்லை, தற்போது உங்களது கருத்துகளை பார்க்கும் போதுதான் தேர்வு செய்து வாசிக்கவேண்டும் எனும் எண்ணம் உருவாகியுள்ளது.

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.