Jump to content

Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்!

jeyamohan1.jpg

Furniture-ன் பெயரால் சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபர்னிச்சர்கள் உடைபட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளம் இப்போது யுத்த களமாக உருமாறி நிற்பதற்கு காரணம் எழுத்தாளர் ஜெயமோகனின் அந்த ஒற்றை அறிவிப்புதான்.

புளிச்ச மாவு

2020-6-aqdep22uoan-fb.jpg

எழுத்தாளர் ஜெயமோகன், தீவிர வலதுசாரி எழுத்தாளர். இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக முன்வைப்பவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளின் மையமாகவும் இருப்பவர் ஜெயமோகன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் மளிகை கடைகாரர் ஒருவர் புளிச்சமாவு கொடுத்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருந்தார் ஜெயமோகன்.

அறைகலனும் ஜெயமோகனும்

இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது ஃபர்னிச்சர் விவகாரம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், Furnitureக்கு அர்த்தம் அறைகலன் என்பதை வெண்முரசுவில் பயன்படுத்தினேன். அதில் விக்சனரியில் பயன்படுத்தப்பட்டது. அந்த சொல்லை நான்தான் கண்டுபிடித்தேன் என்றார். அதாவது அறைகலன் என்ற சொல்லை தமிழுக்கு நன்கொடையாக கண்டுபிடித்து வழங்கியவர் ஜெயமோகன் என்பது அவரது கருத்து.

மனுஷ்யபுத்திரன்

manushyaputhiran-165500085616x9.jpg

அவ்வளவுதான்.. சமூக வலைதளங்களில் அமளி துமளிதான்.. திரும்பிய பக்கம் எல்லாம் இந்த ஃபர்னிச்சர் விவகாரம்தான். திமுகவை சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஜெயமோகனுக்கு பதிலடி தரும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், Furniture க்கு ' அறை கலன்' என்ற சொல் 1994 ல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆட்சிச் சொல்லகராதி ஆறாம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. 1994 ல் வெண்முரசு எழுதப்படவில்லை. அறைகலன் ஜெயமோகனின் சொல்லும் அல்ல.

என் வேண்டுகோளுக்கிணங்க இதைக் கண்டுபிடித்துத் தந்த பெருமாள் முருகனுக்கு நன்றிகள். நாங்கள் இவ்வளவு அலர்ட்டா இருக்குற காலத்திலேயே இவ்வளவு துணிச்சலா கதை விட்டால் எப்படி? என சீறியிருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் மனுஷ்யபுத்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1974-ம் ஆண்டு நூலில்..

IMG-20221116-213330.jpg

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை தளபதிராஜ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், அறைகலன் என்ற சொல்லை உருவாக்கியது ஜெயமோகனா?

ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ. இராமலிங்கனார் 1974 -ஆம் ஆண்டு எழுதிய 'ஆட்சித் துறைத் தமிழ்' என்னும் நூலின் மூலம் 'அறைகலன்' என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் ! (படம்: கீ.இராமலிங்கனார் எழுதிய தமிழில் எழுதுவோம் நால். வெளியான ஆண்டு 1978. பக்கம் 94) என பதிவு செய்துள்ளார்.

கவிஞர் மகுடேசுவரன்

கவிஞர் மகுடேசுவரன், அறைக்குள் மட்டுமே வைத்துப் பயன்படுத்தத் தக்க பொருள் அறைகலன் எனப்படும். அறைகலன் (அறையினது கலன்), அறைக்கலன் (அறையின்கண் வைக்கும் கலன்) என இருவாறும் எழுதலாம். உள்ளிருக்கும் பயன்பொருள். இச்சொல்லினைத் தமிழாய்ந்த பெருமக்கள் பலர் நெடுங்காலமாகவே பயன்படுத்தியுள்ளனர்.

மணவை முஸ்தபா வெளியிட்ட 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்' என்ற நூலில் 'அறைகலன்' என்ற சொல் பதினெட்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இந்நூலின் முதற்பதிப்பு செப்டம்பர் 1993ஆம் ஆண்டு வெளிவந்தது என எழுதியுள்ளார். இப்படியான விவாதங்களால் சமூக வலைதள பக்கங்கள் ரத்த பூமியாகி கிடக்கிறது!

https://tamil.oneindia.com/news/chennai/a-new-controversy-erupts-over-rightwing-writer-jeyamohan/articlecontent-pf807095-485596.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைச்சொல் - ஜெயமோகன்

MeenaNovember 17, 2022

Mudhalavin-001.jpeg

அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.

இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன. அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.

நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.

அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
 

 

https://www.jeyamohan.in/175825/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2022 at 19:49, கிருபன் said:

கலைச்சொல் - ஜெயமோகன்

MeenaNovember 17, 2022

Mudhalavin-001.jpeg

அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.

இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன. அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.

நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.

அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
 

 

https://www.jeyamohan.in/175825/

 

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தான். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தான். 

நக்கலாக கூறுகிறீர்கள் என்பது புரிகிறது ஆனால் யாரை என்பதை கண்டு பிடிப்பதற்கு எனக்கு புலமை இல்லை,

ஜெய மோகன் என்பவர் யார்?

முன்பு எதோ புளித்த மா விவகாரத்தில் அவரை பற்றி முதலில் கேள்விப்பட்டேன், இப்போது அரைத்த மாவையே அரைக்கின்ற (வழக்கில் உள்ள ஒரு கலை சொல்லுக்கு உரிமை கோரும்) விவகாரத்தில் கேள்விப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

நக்கலாக கூறுகிறீர்கள் என்பது புரிகிறது ஆனால் யாரை என்பதை கண்டு பிடிப்பதற்கு எனக்கு புலமை இல்லை,

ஜெய மோகன் என்பவர் யார்?

முன்பு எதோ புளித்த மா விவகாரத்தில் அவரை பற்றி முதலில் கேள்விப்பட்டேன், இப்போது அரைத்த மாவையே அரைக்கின்ற (வழக்கில் உள்ள ஒரு கலை சொல்லுக்கு உரிமை கோரும்) விவகாரத்தில் கேள்விப்படுகிறேன்.

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

🤣

முடியாதுதான். அதுதான் பாவம் எண்டு “சுமாரான” எழுத்தாளர் என்றேன்🤣.

சரி நல்ல எழுத்தாளர்தான். கருத்தாளர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

ஜெய மோகன் என்பவர் யார்?

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

3 hours ago, goshan_che said:

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

வெண்முரசை எழுதிய போதும் சரி, கோவிட் பெருந்தொற்றின் போது ஒரு நாளுக்கு ஒரு சிறுகதை என்ற வேகத்தில் எழுதிய போதும் சரி, ஜெயமோகனின் சலிக்காத எழுத்துழைப்பு வியக்க வைத்தது. இதே போல ஆங்கிலத்தில் எழுதும் பெயர் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதும் சந்தேகமே! ஒரு prolific எழுத்தாளராக அறியப் பட்ட ஹருகி முறகாமி என்கிற ஜப்பானிய எழுத்தாளர் கூட, வருடத்தில் சில மாதங்கள் தான் தினசரி உட்கார்ந்து எழுதி முடிப்பாராம் என்று அறிந்திருக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

அதுதானே பார்த்தேன் நந்தினியை குடும்பிக் கூட்டத்தின் வளர்ப்பு மகளாக்கி.. குடும்பிகளின் ஆதிக்கத்தையும் படத்திற்குள் திணித்ததை. நந்தினி கல்கி உருவாக்கிய செருகல் பாத்திரத்திற்கு இவர்... கூடக் குடும்பிச் சாயம் பூசி விட்டிருக்கிறார்.

அதேபோல்.. பல்லவர்களை சிங்களவர்களின் காலடியில் கெஞ்சுவது போலக் காட்டி இருப்பதும் இவரின் சித்துவிளையாட்டாகத்தான் இருக்கும். ஏனெனில்.. இவர் தமிழீழ எதிர்ப்பு ஆள். சிங்களத் தீவு விசுவாசி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தா

இதில டபிள் மீனிங்க் எதுவுமில்லையே?😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

 

 

 

 

 நன்றி

16 minutes ago, வாலி said:

இதில டபிள் மீனிங்க் எதுவுமில்லையே?😂

அது உங்க பார்வையில இருக்கு வாலி🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

 

 

நன்றி கோசான்.

4 hours ago, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

நன்றி கிருபன், நான் பன்னாடை மாதிரி, நல்லவற்றை விட்டு விட்டு குப்பைகளை எடுப்பது, கதைகள் வாசிப்பதை 5 அல்லது 6 வருடங்களாக பெரும்பாலும் நிறுத்திவிட்டேன், யாழ்கள உறவுகள் கதைகள் சில சமயம் வாசிப்பதுண்டு, சிலவேளை ஜெயமோகனின் கதையினை எங்காவது வாசித்திருப்பேன்.

ஆனால் பொதுவெளியில் இந்த பெயர்களை அதிகம் கேள்விப்பட்டுள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறைக்கலன் -அவதூறு

MeenaNovember 17, 2022

 

கலைச்சொல்

பேட்டியில் மறைந்து போன சொற்களை மீண்டும் கொண்டு வந்தேன் என சொன்ன பின்தான் அறைகலன் பற்றிக்கூறி இருக்கிறீர்கள். இந்த சொல்லை நீங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை. இது நினைவுப் பிழை அல்ல ஒப்புக் கொள்ளல் பிழை. மிதமிஞ்சிய சமூக ஊடக உலாவிகளின் காய்ச்சல் உங்களுக்கும் தொற்றி விட்டது.

கிருஷ்ணன் ஈரோடு

*

நண்பர் கிருஷ்ணன் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார் நான் இப்போது பின்லாந்தில் Rovaniemi என்ற ஊரில் உறைநிலைக்கு கீழே 11 பாகை குளிர் சூழ இருக்கிறேன். மின்னஞ்சல்களைப் பார்க்க நேரமில்லை. அருஞ்சொல் பேட்டியை முழுசாக பார்க்க முடியவில்லை. அது நேர் உரையாடலாக தன்னியல்பாக நடந்தது. பேசிய விஷயங்கள் எனக்கு சரியாக நினைவிலும் இல்லை. ஆகவே வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலுமாக நான் அறைக்கலன் என்ற வார்த்தையை உருவாக்கியதாக அப்பேட்டியில் நானே சொல்லியிருப்பதாக பலர் சொன்னபோது இருக்கலாம் என்று நானும் நினைத்தேன்.

கிருஷ்ணன் சொல்வது போல அது நினைவுப்பிழை அல்ல, ஏற்பு பிழை. இப்போது அந்தப் பேட்டியைப் பார்த்தால் அதில் நான் அச்சொல்லை உருவாக்கியதாக எங்குமே சொல்லவில்லை. மாறாக சீவகசிந்தாமணியிலிருந்து ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் பழைய மரபிலிருந்து ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் எடுத்து பயன்படுத்தியிருப்பதாகத்தான் அந்தப்பேட்டியில் சொல்லியிருக்கிறேன். மரபிலிருந்த சொல்லை மறுபடியும் புழக்கத்திற்கு கொண்டுவந்ததற்கு உதாரணமாக அச்சொற்களை சொல்லியிருக்கிறேனே ஒழிய அதை நான் உருவாக்கியதாக கூறவில்லை.

அப்படி என்றால் ஏன் முந்தைய குறிப்பில் அதை சொன்னேன். உண்மையில் சமூக வலைதளங்களில் உலவும் நாலைந்து நண்பர்கள், அதாவது என்மேல் நல்லெண்ணம் கொண்டவர்கள், எனக்கு மின்னஞ்சல் வழியாக அதை தெரிவித்தார்கள். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று கேட்டார்கள். ஆகவே ஒரு அவசர விளக்கமாக அதை எழுதினேன். இப்போது அந்த நண்பர்களை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு “நான் அப்படி சொல்லவே இல்லையே நீங்கள் எதை நம்பி என்னிடம் அப்படி கேட்டீர்கள்? நீங்கள் அந்தப்பேட்டியை முழுக்க பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்களும் அந்தப்பேட்டியை முழுக்க பார்க்கவில்லை என்றார்கள். அவர்கள் அனைவருமே பெருமாள் முருகன் என்ற ஒரு நபர் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டவர், அவர் சொன்னதனால் நான் சொல்லியிருப்பேன் என்று நம்பியிருக்கிறார்கள். மற்ற திமுக அல்லக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

நான் சொன்னேன்…

“அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான் இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நபர் கூறியதை ஒட்டி எப்படி நீங்கள் இதை என்னிடம் கேட்கலாம்? ஓராண்டுக்கு இனிமேல் நாம் நண்பர்களாக இல்லாமல் இருப்போம். உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தபின் நாம் நண்பர்களாக இருப்போம்” என்றேன். அதன்பின் அவர்கள் மீண்டும் வருந்தி கடிதமிட்டார்கள். எப்போதுமே முதல்கட்ட சீற்றத்திற்கு பிறகு நண்பர்களிடம் இசைந்துவிடுவது எனது வழக்கம். சரிதான் விட்டுவிடுவோம். யாரோ எதையுமே படிக்கவோ எழுதவோ சிந்திக்கவோ தெரியாத ஒரு வெற்று அரசியல் கூட்டம் உருவாக்கும் ஓசைகள். அதற்காக நாம் நட்பை இழக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

சமூக ஊடக வெளியில் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் இந்த கும்பல் தன்னிச்சையாக கூடியதல்ல. இது ஓர் அரசியல் இயக்கத்தின் ஊடக அணி. எழுத்தாளர்களின் மேல் கட்சிகளின் ஊடக அணிகள் நடத்தும் இந்த அவதூறுத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் அதைப்பற்றி சற்று விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.

எண்ணிப்பாருங்கள், வெண்முரசு போன்று ஒரு பிரம்ம்மாண்டமான ஒரு படைப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. அது நிறைவுற்றபோது தமிழில் எந்த சமூக வலைதளம், எந்த இணைய ஊடகம் அதைப்பற்றி ஒரு வரி செய்தியாவது போட்டது? ஆனால் இவர்கள் உருவாக்கும் இந்த முற்றிலும் அடிப்படைகள் அற்ற அவதூறுக்கு பத்துக்கும் மேற்பட்ட இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தினமலர் நாளிதழ் உட்பட இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. எங்கு வரை கொண்டு சேர்க்க இவர்களால் இயல்கிறது! இந்த அவதூறை அவர்கள் சில லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்திருப்பார்கள். அவர்களிடம் பதில் சொல்ல நமக்கு ஊடகம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நாமாவது இதை தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். நமக்கு நாமேயாவது நிதானத்துடனும் தெளிவுடனும் இருந்தாகவேண்டும்.

 

https://www.jeyamohan.in/175839/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அருஞ்சொல்லுக்கு வழங்கிய           பேட்டியில்(https://youtu.be/lMgQ9QVIjdQ)  ஜெயமோகன் மிகத்தெளிவாகவே அறைக்கலன் என்ற சொல்லை தானே உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார். பேட்டியின் 13.28 க்கும் 13.45 க்கும் இடையில் அவர் சொன்னதன் எழுத்து வடிவம் கீழே

"உதாரணமாக Furniture க்கு அறைக்கலன் என்கிற வார்த்தை வெண்முரசில இருக்கு.  பிறகு அது டிக்சனரிக்கு போகிறது. பிறகு தினத்தந்தி விளம்பரத்தில் வருகிறது. என் கண்முன்னாலேயே தினத்தந்தியில் அறைக்கலன்கள் விற்பனை அப்படீன்னு. அது நான் உருவாக்கிய வார்த்தை"

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தமிழில் வழக்கில் உள்ள "தளபாடம்" எனும் சொல் தமிழ் சொல் இல்லையா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2022 at 02:11, Justin said:

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

நான் ஒரு பன்னாடை மாதிரி நல்ல விடயங்களை விட்டு விட்டு குப்பை கூழங்களை எடுத்து கொண்டுள்ளேன், அவரது தமிழ் சேவை தெரியவில்லை ஆனால் ஒரு புளித்த மா விவகாரத்தினை மட்டும் பார்த்து விட்டு எனது மனதில் நினைத்துக்கொண்டது

என்ன ஒரு மனிதர் இவர் புளித்தமாவினை தூக்கி போட்டுவிட்டு போயிருந்தால் ஒரு சாமானிய கடைக்காரரிற்கு இலாபம் தற்போது அந்த கடைக்காரரிற்கு மேல் வழக்கு போட உதவுவதற்காக வைத்தியசாலைக்கெல்லாம் போய் அதற்கு மேல் செலவழித்து மன உளச்சலுக்கு ஆளாகி, மன உளச்சலுக்கு உள்ளாக்கி என நினைத்தேன்.

ஆனால் உங்களது கருத்துகளை பார்க்கும் போதுதான் புரிகிறது.

On 19/11/2022 at 05:02, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

 

 

கிருபன் இவரது கதைகளை இணைத்தால் நேரம் கிடைக்கும் போது வாசிக்க தற்போது ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

கிருபன் இவரது கதைகளை இணைத்தால் நேரம் கிடைக்கும் போது வாசிக்க தற்போது ஆவலாக உள்ளது.

ஆசான் ஜெயமோகனின் தளத்தில் பல நூறு கதைகள் உள்ளன. படித்தவற்றில் சிலவற்றை இடைக்கிடை யாழில் இணைப்பதுண்டு.

 

யாழில் கடைசியாக இணைத்த கதை!

 

இன்னொரு சுவாரசியமான நெடுங்கதை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆசான் ஜெயமோகனின் தளத்தில் பல நூறு கதைகள் உள்ளன. படித்தவற்றில் சிலவற்றை இடைக்கிடை யாழில் இணைப்பதுண்டு.

 

யாழில் கடைசியாக இணைத்த கதை!

 

இன்னொரு சுவாரசியமான நெடுங்கதை!

 

நன்றி கிருபன், கதைகளை சும்மா ஒரு பொழுதுபோக்காகவே முன்பு வாசிப்பதுண்டு அதனால் அதன் காத்திரங்களை கவனத்தில் எடுப்பதில்லை, தற்போது உங்களது கருத்துகளை பார்க்கும் போதுதான் தேர்வு செய்து வாசிக்கவேண்டும் எனும் எண்ணம் உருவாகியுள்ளது.

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.